எஸ். சண்முகம் கவிதை
பழைய மின்மாற்றியின் அருகிலுள்ள விளக்குகம்பத்தின் கீழ் நெடுநேரமாக
இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி
எதிரிலுள்ள வீட்டின் வெளிப்புறச் சுவரையே
பார்த்துக் கொண்டிருப்பவரின் தோற்றம்
ஏற்கனவே அறிமுகமுள்ளவரை ஞாபகமுறச் செய்ய
அவர் இதுபோல் சுவரை வெறிப்பவர் அல்ல
