ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 90/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம் அதில் என் பங்கு சிறு பத்திரிகைகளிலிருந்து பல எழுத்தாளர்களின் கதைகளை எடுக்க உதவி செய்தேன்.மோகினி : இலக்கியச் சிந்தனை கதைகளில் கூட பெரும்பாலான கதைகள் வெகுஜன பத்திரிகைகளிலிருந்துதான் எடுப்பார்கள்.அழகியசிங்கர் : எப்போதும் எனக்குப் பெரிய குறை உண்டு. இலக்கியச் …

>>

நாகேந்திர பாரதி/கோலம்

அவள் போட்டகோலத்தின் நடுவேபூசணிப்பூ வைக்கும்பொறுப்பு அவனது அந்த ஊருணித் தோட்டத்தில்பூத்த பூவெல்லாம்காயாகிப் பழுத்தகாலமும் ஆனது அவன் கனவுத் தோட்டத்தில்பூத்த பூவெல்லாம்சருகாய் ஆனதுகோலமும் போனது

>>

சாய்ரேணு சங்கர்/கோலம்

வாசலில் இடுவது மாக்கோலம்வார்த்தையில் இடுவது பாக்கோலம்பரம்பொருள் தந்தது ஒளிக்கோலம்பாரிது கொண்டது களிக்கோலம் பாவையர் இடுவது இழைக்கோலம்பாவியர் இடுவது பிழைக்கோலம்வானகம் கொண்டது மழைக்கோலம்கானகம் பெற்றது தழைக்கோலம் மேகங்கள் சேர்ந்தால் கார்க்கோலம் – அவைமேனி சிலிர்த்தால் நீர்க்கோலம்வீரன் கொள்வான் போர்க்கோலம் – அவன்வெற்றியில் காண்பான் …

>>

ப.மதியழகன்/கோலம்

எனக்கு கிறுக்கல்களாகத்தான்தோன்றும் அம்மாவின் கோலங்கள்அம்மாவுக்கு எல்லா மாதமும்மார்கழி தான்அடுக்களை வேலை முடிந்தவுடன்கோலப்புத்தகத்தோடு தபஸ் பண்ணஆரம்பித்துவிடுவாள்அம்மாவால் முன்பு போல்விடியற்காலையில் கண்விழிக்கமுடிவில்லைதர்மபத்தினியின் உபயத்தால்கிழக்கு வெளுத்த பிறகுதான்இப்போது கோலமெல்லாம்ஆனாலும் அம்மாவின் கைகள்சும்மா இல்லை காகிதத்தில்கோலங்களை வரைந்துகொண்டுதான் இருந்ததுஒருமுறை அவள் சுகவீனமாகஇருக்கும்போதுநோட்டுப் புத்தகத்தைபுரட்டிப் பார்த்தேன்முன்பு கிறுக்கல்களாகத்தெரிந்ததுஇப்போது தான் …

>>

ஆர் வத்ஸலா/கோலம்

இயந்திரத்தில் அரைத்தஅரிசி மாவில்புள்ளி வைத்தஇதய கமலகோலம்,கால் படாதசாமி சன்னிதியில் – ஊற வைத்த அரிசியைஅம்மியில்‘நைஸ்’ஸாக அரைத்து அளவாக நீர் சேர்த்துசிறு துண்டு துணி தோய்த்துபிரித்த இரண்டு விரல்களின்மேல் கட்டை விரல்அழுத்திவழியும் ஈர மாவில்புள்ளி கணக்கில்லாஇரட்டை இழைஓவியமாய்படிக்கோலம்,சிவப்பு சிமென்ட் திண்ணையில் – தெருவை …

>>

சசிகலா விஸ்வநாதன்/அலங்கோலமாகிய கோலம்

தரைத் தளத்தில் அழகான வீடு. ஆசையாய் தேர்ந்தெடுத்தகிழக்கு பார்த்த வீடு. தினமும் அரிசி மாகோலம். தாமரைப்பூவும் கிளியும் மயிலும் மானுமாக… நன்றாகவே நடந்ததுகுடி புகும் விழாக்கள். பின்னே வந்ததுபெரும் தலைவலி. முதல் தளத்திற்குஎன் வீட்டு வாசல் குப்பைத் தொட்டியாகியது கோலங்கள் அலங்கோலம் …

>>

மதுவந்தி/கோலம்

ஏ 703 பிளாட் அக்காபேப்பர் பில் பணம்வாங்கப் போகையில்கேட்டார்கள்,நீ இரண்டு நாள் முன்னாடி பேப்பர்போட வரலியா? ஆமாம், எனக்கு வேறவேலை , தம்பியபோடச் சொன்னேன்.ஏன் என்ன ஆச்சு? வாசல் கோலம்அழியாம பேப்பர்போட்டுப் போவ நீ. அன்னிக்கு கோலம்மேலேயே பேப்பரப் போட்டுஅலங்கோலம் ஆயிடுச்சு.

>>

சசிகலா விஸ்வநாதன்/கோலம்

புள்ளி வைத்தவுடன்,மனத்தில் விரியும்ஒரு கோலம் அல்ல;ஒன்பது கோலங்கள்.ஒரு மயில்,ஒரு குயில்,ஒரு மலர்,ஒரு மனத்தில்உருவாகி;வளைந்தும், நெளிந்தும்மேலெழும்பியும்கீழெறங்கியும்புள்ளிகளை லாவகமாய் இணைக்கும் கரங்கள்அனிச்சையாய்;மனதின் இச்சையாய்.

>>

இசை புதிது நிகழ்வு 20 – 26 – 01 – 2025

அழகியசிங்கரின் ‘ இசை புதிது ‘ குழுவின் ஜனவரி மாத இந்த நிகழ்வு ‘ இசை புதிது ‘ குழுவின் ‘ அபிநயப் பாடகி ‘ பானு மேடம் அவர்களால் நடத்தப் பட்டது .அவர்களின் அபிநயச் சைகைகளை வைத்து திரைப் பாடல்களைக் …

>>