எஸ் வி வேணுகோபாலன்/என் இனிய பொன் நிலாவே!

மைதிலி சிவராமன் எனும் மகத்தான தலைவர் என்னை ஒரு திருமண வரவேற்பில் பார்த்தவர், “ஏய் வேணு…வா இங்கே” என்று அழைத்து, அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதிரே என்னையும் அமர்த்தி, “என்ன சும்மா இப்படியே டபாய்ச்சுட்டுப் போகலாம்னு எண்ணமா ….. கம் …

>>

பாலசாண்டில்யன்/ வயதை வெல்லும் வாலிபர்கள்

வித்தியாசமான புதிய தொடர் விளையாட்டாக சிலர் சிறுவயதில் தொடங்குகிற விஷயங்கள் அவர்களை வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து அந்த விஷயத்தில் பெரிய இடத்தில் அமர வைக்கும். இது சந்திரமௌலி எனும் நவீன விருட்சம் அழகியசிங்கருக்கு மிகவும் பொருந்தும்.1978 நான் (மேற்கு மாம்பலத்தில் …

>>

அழகியசிங்க/கவிதையும் ரசனையும் – 24

பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் …

>>

க. நா. சுப்ரமணியம்/காதலும் காமமும்

(க.நா.சு பிறந்த நாள் இன்று) காதல், காதல் என்று இருப்பவருக்குஒரு வினாடிக் காலம் என்பதுஒரு நாழிகையே ஆகிவிடுகிறதுஒரு நாழிகையே என்றால்ஒரு நாளாகப்போகிறதுகாதலில் கடிகாரத்தின் போக்குஒரு தினுசானது தான்காமத்தின் போக்கில் ஒரு மணிஒரு விநாடியாகப் போகிறது.

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது (31.01.2025)

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதை இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதை அனுப்புபவர்கள் கவனத்திற்கு: கவிதை வந்து சேர வேண்டிய கடைசித் தேதி …

>>

க. நா. சுப்ரமணியம்/புதுக் கவிதையின் எல்லைகள்

க.நா.சு பிறந்த நாள் இன்று. அவர் நினைவாக அவர் எழுதிய ‘/புதுக் கவிதையின் எல்லைகள் என்ற கட்டுரையை இங்குப் பதிவு செய்கிறேன். (31 January 1912 – 18 December 1988) கவிதையிலிருந்து புதுக்கவிதையை மட்டும் தனிப்படுத்திப் பேச வேண்டிய காலம் …

>>

க.நா.சு/ஊருக்கு நல்லது

“தனக்கு நல்லது செய்து கொள்ளத் தெரியாதவனுக்கு ஊருக்கு நல்லது செய்யத் தெரியவா போகிறது?” என்றார் நண்பர் சிவராமன்.“மனசிலாவது தனக்கு நல்லது தேடித்தான் மனிதன் வாழ்கிறான். ஊருக்கு நல்லது தேடி முன் வருபவர்கள் குறைவு தானே?” என்றார் ஷண்முகம் செட்டியார்.“முதலில் நல்லது, கெட்டது …

>>

ஞானக்கூத்தன்/பிரிவு

பிரிந்து போகிறார்கள். மக்கள்கூட்டம் கூட்டமாய்ப் பிரிந்து போகிறார்கள்,பேருந்துகளில், அகலமானநடைமேடைகளும் மஞ்சள் கண்ணுடையதொங்கும் கடிகாரங்கள் உள்ளரெயில் நிலையங்களில்சிற்றூர்களில் நகரங்களில்பிரிந்து போகிறார்கள். பெற்றோர்கள், பிள்ளைகள்,காதல – காதலியர்கள், தம்பதிகள், துறவிகள்ஏழைகள், பணக்காரர்கள் பிரிந்து போகிறார்கள்.கப்பலில் போகிறார்கள். மாலைஆறு மணிக்கு வடமேற்கில் போகும் விமானத்தில்பிரிகிறார்கள்பிரிந்து போகிறவர்கள் …

>>

அழகியசிங்கர்/குள்ளம்

ராகவன் நல்ல உயரம்.  ஆறடி. ஆனால் அவன் மனைவி கஸ்தூரி ஐந்தடிதான்.  எப்போதும் கஸ்தூரி அவனுடன் வெளியே வரத் தயங்குவாள். அவன் எங்காவது கூப்பிட்டால் மறுத்து விடுவாள். ராகவனுக்கு அவள் மீது கோபம் கோபமாக வரும்.  ஏன் நான் கூப்பிட்டால் எங்கும் …

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

ஞானக்கூத்தன்/கடுகளவு இருள்

நான்கு சக்கர வண்டி ஒன்றும்இரண்டு சக்கர வண்டி ஒன்றும்தெருவில் மோதிக் கொண்டன.அப்போது இரவு மணி ஒன்பது.நான்கு சக்கர வண்டிக்காரர்வண்டியை விட்டு வெளியே வந்துஇரண்டு சக்கர வண்டியைத் திட்டினார்.அவரும் பதிலுக்குத் திட்டினார்.தனக்குப் பெரிய பெரிய ஆளைத் தெரியும் என்றுநான்கும் இரண்டும் சொல்லிக் கொண்டன.நான்கு …

>>

அதிரன்/நான்காம் நாள்

கடக்கும் பொழுதெல்லாம்கவனிக்கத் தவறியதில்லைஎப்பொழுதும் எதையோஎதிர் பர்த்தப்படிஜன்னல்ஓரம் உட்கர்ந்துதெருவையே வெறித்துபார்த்துக் கொண்டிருக்கும்அந்த பெரியவரை. புதிதாக குடி வந்திருப்பவர்கள் போலும்.முந்தநாள்தான் அவனைப் பார்ததுமுதல் முறையாக மெலிதாகச் சிரித்தார் இரண்டு நாளாய் காணவில்லைஜன்னலும் சாத்தியே இருந்தது நோட்டமிட்ட அவனைமுறைத்தன பெரியவரின்முகஜாடையில் ஒரு ஜோடி கண்கள் நான்காம் …

>>

பி. ஆர். கிரிஜா/ஜன்னல்

மனித வாழ்க்கையில்ஆயிரம் ஜன்னல்மனக் கதவில்மூடிய ஜன்னல்குடிசை வாழ் ஏழையின்அறையிலும் ஜன்னல்உடையிலும் ஜன்னல்மாட மாளிகையில்அழகூட்டும் ஜன்னல்இறைவன் சந்நிதியில் மணி கோர்த்த ஜன்னல்காதலியின் கடைக்கண் பார்வை தரும் ஜன்னல்கள்ளனும் அடைபடும்சிறைவாச ஜன்னல்பள்ளிச் சிறாருக்கும்அடைக்கலம் ஜன்னல்பேதை பெண்ணுக்குவடிகால் ஜன்னல்இன்ப துன்பம்பகிர்ந்திடும் ஜன்னல்அன்பெனும் அகஜன்னலை நீஅகலத் திறந்திடுவாழ்க்கையேபேரானந்தம் …

>>

தங்கேஸ்/கதை சொல்லி

மரம் ஒரு கதை சொல்லிகதை கேட்டால் தான் உறங்கும்அடைந்திருக்கும் பறவைகள் ஒரு கிளையில் பிறக்கிறதுபுதிய இலைகருவிலிருந்து முளைக்கிறதுஒரு சிசு இலைக்கு தேவை ஊஞ்சலாட்டும் காற்றுத்தான் ஆதி அந்தம் இல்லாத அநாதியாய்ஆடும் பேரின்பம் லயத்தில் மனிதனுக்குள் ஒரு உலகம்எப்படியும் முளைத்து விடுகிறது அதை …

>>

ஹபீஸ் கவிதை

மொழி பெயர்ப்பு : க.மோகனரங்கன் கேளுங்கள்: இந்த உலகம் பித்துப்பிடித்ததொரு கோளம்;இது உண்மையானது என ஒருபோதும் ஒப்புக்கொள்ளாதீர்கள்! இதன் மீது என் கால்கள்அழுந்தப் பதிந்திருந்தாலும்என் வீட்டை நன்கறிந்த தபால்காரர் இங்கிருந்த போதிலும்என் முகவரி வேறெங்கோ! –

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 90

23.01.2025 ஆசிரியர் பக்கம் அழகியசிங்கர் : அது உண்மைதான்.மோகினி : இராய செல்லப்பா நடத்திய கூட்டத்தைப் பற்றி ஒன்றும் கொல்ல வில்லையே.அழகியசிங்கர் : புத்தகக் காட்சி முடிந்தவுடன் இராய செல்லப்பா கூட்டம். அவருடைய தாயார் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்தி, 35 …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

ஆதவன்/ நிழல்கள் ஆதவன்: கல்லிடைக்குறிச்சியில் பிறந்த(21-3-1942) இவருடைய இயற் பெயர் கே.எஸ்.சுந்தரம்.முப்ப‌தாண்டு களுக்கு மேலாக டில்லிவாசி.இவருடைய படைப்புகள் இன் றைய தலைமுறையின் மிக நுண்ணிய உணர்வுகளைப் பல கோணங்களிலிருந்து பிரதிபலிப்பவை.நூலுருவில் வெளி வந்தவை:’காகித மலர்கள்'(நாவல்,1976),’என் பெயர் ராமசேஷன்'(நாவல்,1980),’இரவுக்கு முன்பு வருவது மாலை'(குரு* …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் பற்றி சில குறிப்புகள் 2

27.07.2016 அன்று காலையில் எழுந்தவுடன் பொழுது சரியாக இல்லை என்று தோன்றியது. ஞானக்கூத்தன் வீட்டிலிருந்து தொலைப்பேசி வந்தது. நான் திகைத்துப் போய் தொலைப்பேசியை எடுத்தேன். காலை ஐந்தரை மணிக்கு ஒரு தொலைப்பேசி வந்தால் அது சற்று திகைப்பாகத்தான் இருக்கும் ஞானக்கூத்தன் நேற்று …

>>

ஞானக்கூத்தன்/பால் பல ஊறுக

எங்கே போகிறாய் பசுவே? எங்கள் தலைவர் எங்களை மீட்டார்ஊருக்குப் போகிறேன் பையா. ஊருக்குள் போகும் மார்க்கம்நினைவில் உள்ளதா பசுவே?கழனியில் எத்தனை நடவுகள்எத்தனை அறுப்புகள் நடந்ததென்றாலும்வளர்த்தவர் மார்க்கம் மறக்குமோ பையா? உன்னைத் திருடிச் சென்றவர் உனக்குக்காலம் தவறாமல் பசும்புல் தந்துகழுநீர் காட்டிக் காத்தாரோ …

>>

ஞானக்கூத்தன்/சுசீலாவும் பிறரும்

மௌனியும் சுசீலாவும்தெருவில் நடந்தால்மக்கள் எல்லோரும்சுசீலாவைப் பார்ப்பார்கள்.நகுலனும் சுசீலாவும்தெருவில் நடந்தால்மக்கள் எல்லோரும்சுசீலாவைப் பார்ப்பார்கள்மௌனியும் நகுலனும்தெருவில் நடந்தால்சுசீலா ஏன் வரவில்லை என்றுமக்கள் தெருவில் தேடுவார்கள்சுசீலாவும் தோழியும்தெருவில் நடந்தால்மௌனியும் நகுலனும்வரவில்லை என்றுமக்கள் மகிழ்வார்கள்நானும் சுசீலாவும்தெருவில் நடந்தால் மக்கள்என்னையே பார்ப்பார்கள்எப்படி இவளை இவன்பிடித்தான் என்று.

>>

வைதேகி‌ கவிதை

எதைச் செய்ய வேண்டுமென்றபடிப்பினைஎதையெல்லாமோ செய்து முடித்த பின்கிடைக்கிறது.தொலைத்து விட்டதாய்நினைத்த வாழ்க்கையோதேடி எடுத்துவாழ்ந்து விடுவேனென்றபெருநம்பிக்கையுடன்மௌனமாய் காத்திருக்கிறது.

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

ரேவதி பாலு/குழந்தை வித்வான்!

அனுவின் ஒரே மகன் பத்து வயது அருண். சிறு வயதிலிருந்தே கையில் கிடைக்கும் எல்லாவற்றிலும் தட்டித் தட்டி ஒலி வரவழைப்பது அவனுக்கு பிடித்தமான விஷயம். அவனுக்கு தாள வாத்தியத்தில் ஆர்வம் இருந்தது புரிய வர, அவனைத் தகுந்த குருவிடம் சேர்த்து மிருதங்கம் …

>>

ஜெயராமன் ரகுநாதன்/இன்று எழுந்தது முதல் என்னமோ சுஜாதா நினைவாகவே இருக்கிறது

90 களின் தொடக்கத்தில் சுஜாதா சென்னைக்குடி பெயர்ந்து விட்டார். ஆழ்வார்ப்பேட்டையில் வீடு. ஒரு தெரு தள்ளி கணையாழி கி கஸ்தூரிரங்கனின் இல்லம், மற்றும் கணையாழியின் ஆபீஸ். கிட்டத்தட்ட கௌரவ ஆசிரியர் போல கணையாழி இதழை சுஜாதா மேற்பார்வையிட்டார். அவ்வப்போது இபாவும் வருவார். …

>>

அ. முத்துலிங்கம்/வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு)

அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் …

>>

வங்கச் சிறுகதைகள்/தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய்

வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி பனபூல் ஓட்டர் சாவித்திரிபாலா அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் — ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம், அவர்களில் எவராலும் எதையும் நாசம் செய்ய முடியவில்லை; அவர்களேதான் நாசமானார்கள். தமோஷ்நாஷ் என்றால் இருளை …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்மாந்தருக்குள் ஒரு தெய்வம்

ஆத்ம தரிசனம் ரவுலட் கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டு வந்தது. அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்துவற்காகக் காந்திமகான் தான் மேற்கொண்டிருந்த பாலருந்தா விரதத்தை ஓரளவு தளர்த்தி உடம்பைக் குணப்படுத்திக்கொண்டு வந்தார். அதே சமயத்தில் ரவுலட் கமிட்டி சிபார்சுகளை …

>>

வளவ. துரையன் /அனுபவம்

மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு. இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன. தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டது ஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோ என்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும். அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது. அதை அனுபவிப்போம்

>>

பி. ஆர்.கிரிஜா/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் !

அழகிய சிங்கரின் என்பா! நண்பரின் வருகை தருமே ஆனந்தம்இனிய கானமதை ரசிப்பது ஆனந்தம்காதலன் காதலியை சந்திப்பது ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! ரயில் பயணம் என்றும் ஆனந்தம்ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிப்பது ஆனந்தம்அம்மாவின் உணவு தந்திடும் ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! 20/01/2025

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/தெய்வம் வேறு, கடவுள் வேறு

(ஸ்ரீ சிவன் சாரின் ஏணிப்படிகளில் மாந்தர்கள் நூலிலிருந்து)பாபங்களுக்கு நிவர்த்தி கிடையாது. மாசு, தப்பு, தவறு, அறியாத் தவறு, தோஷம் போன்றவைகளுக்கு பரிகாரங்கள் உண்டு. ஒரு பெரியாருக்கு உன்னால் புரியப்பட்ட உதவிக்கு அவர் நன்றி செலுத்தாமலிருந்து அவர் நன்றி செலுத்தவில்லையே என்று நீயும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகிய சிங்கரின் என்பா விடியலுக்கு முன் விழிக்கும் நேரம்பழம் என முதிர்ந்த முதுகிழவிபதனி குடுவை ஒன்று நீட்டஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் கண் விழிக்கும் அதிகாலை நேரம்கண் முன் நின்றாள் கற்பகாம்பாள்என் எண்ணத்தில் நிறைந்த காமேசுரிஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் அலைபேசி சிணுங்கி என்னை …

>>

புஷ்பா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா படிப்புக்கு ஏற்ற பதவி கிடைத்துமனதுக்கு இனிய மனையாள் கிடைத்துபாசம் மாறாப் பிள்ளை கிடைத்தால்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

பொசுக்கும் வெயிலுக்கு மழை ஆனந்தம்பச்சிளம் குழந்தைக்கு உறக்கம் ஆனந்தம்பக்தனுக்கு இறை சேவை ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.

>>

ஹரணி/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா.. பசியென்று கேட்டோர்க்குச் சுடச்சுடச் சோறுபால்வடியும் மழலைக்குப் பாசமாய் முத்தம்படித்த நூல் எதுவாயினும் பாராட்டுஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம். (2) எந்த வாசலிலோ அழகுக் கோலம்எந்தக் கோயிலிலோ கையேந்திப் பிரசாதம்வேப்ப மரத்தடியில் அயர்ந்த உறக்கம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம். (3) சட்டென்று எழுதும் …

>>

ரவி அல்லது/ஆனந்தம் ஆனந்தம்பரமானந்தம்

அழகிய சிங்கரின்என்பா: நாசி சூழும் மருந்து வாடையில்பணம் கரைந்த நோவின் விடுதலையில்வெளிக்காற்று சுவாசித்துவீட்டுக்கு வருவதுஆனந்தம் ஆனந்தம்பரமானந்தம்.* 20/01/25.01:11ம.

>>

தீபா ஜானகிராமன் /இயக்குநர் டேவிட் லின்சுக்கு அஞ்சலி

சரியான ஞானக் கிறுக்கன். தன் உள்ளுணர்வின் உந்துதலில் மட்டுமே படமெடுக்கக் கூடிய வாய்ப்பு பெற்றவர்கள் மிக அரிதானவர்கள். ஒரு படம் வெற்றியடைந்தால், பேசப்பட்டால் வரும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதவர்களும் அரிதானவர்கள்.ERASERHEAD படத்துக்குப் பிறகு இவருக்கு வந்த …

>>

ஆதவன்/முதலில் இரவு வரும்

பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்மாந்தருக்குள் ஒரு தெய்வம்

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக அந்த நாட்களில் பலவித முயற்சிகள் நடைபெற்று வந்தன. மிதவாதிகள் சட்டத்துக்கு உட்பட்ட முறைகளில் கிளர்ச்சி செய்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட சுயாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்தார்கள். தீவிர வாதிகள் பலாபலன்களைக் கவனியாமல் பொது ஜன உணர்ச்சியை எழுப்பிப் …

>>

ஞானக்கூத்தன்/பட்டாம்பூச்சி

மஞ்சள் நிறமுடைய பட்டாம் பூச்சிதோட்டத்தில் நுழைந்ததுசமையலறையில் நுழையும் மாட்டுப்பெண் போலவெண்டை பூத்திருந்ததுகத்தரி பூத்திருந்ததுஅவரை பூத்திருந்ததுகட்டிவிடப்பட்ட கயிறுடன்புடலை தொங்கிக் கொண்டிருந்ததுபட்டாம் பூச்சி ஒவ்வொரு பூவின் மேலும்பறந்தது, உட்கார்ந்ததுஅடுத்த பூவை நாடிற்றுஉதவி செய்யவா என்றேன்சிறகை வேகமாய் வீசி பறந்து போயிற்று.

>>

ஞானக்கூத்தன்/கணுக்காலில் கொஞ்சம் வீக்கம்

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்நாற்பது வயதுக்காரர்ஊழல் ராமசாமித் தெருவில் சற்றுபெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார்ஒரு மின்விசிறிஇரண்டு பெஞ்ச்சுகள்இரண்டு வரிசைகள்டோக்கன் கொடுக்க ஒரு மடந்தைஅவர் சொன்னார்நோயாளிகள் சிலபேர் அவரைத்தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்வலது கணுக்காலில் வீக்கம் …

>>

செ.புனிதஜோதி/ நீயே என் உலகம்

கச்சிதமாய்பொருந்தியிருந்தநீலவர்ணச் சேலையைதன் விரல் விலக்கிவானத்திடம்காட்டிக் கொண்டிருந்ததுஅந்த மேகம். தொட்டிச் செடியுறைநீல மலர்மற்றொரு மலரிடம் பேசுவதைப் போல்என்னிடம் தலையசைந்துபேசிக் கொண்டிருந்தது. என்னைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறாய்சலனமேதுமில்லாதஇந்தநான்கு கால் பிராணியைப்போல். உன்னை பகடையாய்அதன் பிடிக்குள்இந்தக் காலம் வைத்திருப்பதுபுரிந்தாலும்.. உன் லாகிரி தோய்ந்தஅந்தஒற்றைச் சொல்லுக்காய்சுற்றுகிறதுஎன் உலகம்.

>>

சாந்தி மாரியப்பன்/விடுதலை

கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டு கை கால்களை நீட்டி சோம்பல்முறித்தான். புரண்டு தலையணைக்கருகில் வைத்திருந்த மொபைலைஎடுத்து லேசாகக் கண்களைச்சுருக்கி, மணி என்னவென்று பார்த்தான். ஆறுமணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விடிந்து விட்டிருந்தாலும்மழைக்காலம் என்பதால் குளிருடன் லேசான இருளும் இன்னும்மிச்சமிருந்தது. இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை …

>>

ஞானக்கூத்தன்/எனது கனவுகள்

குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்டகனாக்களை நான் கண்டேன் என்பதுமுற்றிலும் மறந்துவிட்டது.எனது குழந்தை நண்பர்கள் என்னிடம்எந்தக் கனவையும் சொன்னதில்லைஏதோ ஒரு முறை ஒரு கனவைவிளக்கு வைக்கும் நேரம்அம்மாவிடம் சொன்னேன். என் வாயைஒற்றை விரலால் அம்மா மூடினாள்பல கனவுகள் நைந்து கிழிசலாகிமறதிக் காற்றில் பறந்து விட்டன.அப்புறம் …

>>

ஞானக்கூத்தன்/கேள்வி

தோண்டினார்கள் நாலடி ஆழம்.குடிநீர்க் குழாய்களும் சாக்கடைக் குழாய்களும்அருகில் அருகில் இருந்தன.கம்பிக் குழாய்களும் கண்ணில் பட்டன. வெள்ளைக் காரர்களின் ஆட்சிக் காலத்தில்போட்ட குழாய்கள் என்கிறார்கள்.நாலடி ஆழப் பள்ளத்துக்குப் பக்கத்தில்குவிந்து கிடக்கும் அரை ஈர மண்ணில்மண்புழு ஒன்றைக் கூடக் காணோம்.சென்னைமா நகரத்தை விட்டுஎன்றைக்கு நீங்கின …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/ ஓவியன்

போக்குவரத்துநெரிசல் அதிகம் இல்லாத அகலச்சாலைஅவனுக்கு வசதியாகத் தான் இருந்தது. தொளத்தொளச் சட்டைக்கால்புறம் மடிக்கப்பட்டப் பேண்டுக்குள்ஓர் அழுக்கு மனிதன்.முகமெல்லாம் வாழ்க்கை அனுபவத் தழும்புகள். கையிலும் சட்டைப் பையிலும்வண்ண வண்ண சாக்பீஸ்துண்டுகள். அழுக்குத் துணியும் தூக்கிஎறியப்பட்ட வாழை இலையும்சாலையைச் சுத்தம் செய்தன. அடுத்தஒரு மணிநேர …

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

விஞ்ஞானி/ அமெரிக்கா பொங்கல்

நெற்றியில் புரளும் முடியைஇழுத்து கட்டு என்றாள்அம்மா சென்னையிலிருந்துடீ வி திரையில் என்னைபார்த்தபடி இயக்கிக்கொண்டுஇருந்தாள் அவள் அமெரிக்காவில் நான்பொங்கல் செய்து கொண்டுஇருந்தேன் தொழில்நுட்பத்தின்உதவியுடன்அம்மா சொல்ல சொல்லசெய்ததில் சுவையானபொங்கல் தயாரானது. குடும்பத்தின் ஆரவாரசந்தோஷத்தை திரையில்கண்டு ரசித்தாள் அம்மா. ஆனால் ஒரு விஷயத்தில்தொழில்நுட்பம் தோற்றுபோனது அந்த …

>>

வளவ. துரையன்/பாழ் வீடு

அதனால் பயனில்லைஎன்கிறார்கள் பார்ப்பவர்கள். தெரியாமல் பலன் கொடுக்கும்கற்பகதரு அது. சுவர்கள் எல்லையாகவும்ஓடுகள் வானமாகவும்வாசற்கதவின்றிவாவென்றழைக்கும். ஆடுமாடுகள் ஏன்கழுதைகளுக்கும்அது காப்பகம். காசுவைத்துச் சூதாடக்கச்சிதமான இடம். முதன்முதல் சிறுவர்கள்சிகரெட் பற்றவைக்கஅரிச்சுவடி கற்றுத்தரும்ஆரம்பப் பள்ளி. கல்லூரி மாணவர்பிறர் தொல்லையின்றித்தேர்வுக்குப் படிக்கும்தேவலோகம் கூட. கருப்பு நிறக் கமலாஅங்கேதான் அருமையாகஇளைஞர்களுக்குஇரவு …

>>

ஞானக்கூத்தன்/களத்திரம்

சொன்னார். சொன்னார். மூச்சுவிடாமல்சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்.உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்எவ்வளவு கஷ்டம் கேட்பதுபோலநீண்ட நேரம் பாவனை செய்வது?கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்சொன்னார். மூன்றாம் மனிதன்ஒருவன் வந்தென்னை மீட்கமாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்அவரே ஓய்ந்துபோய் …

>>

அழகியசிங்கர்/பொங்கல்

இன்று பொங்கல் தினம்மனைவி வாசலில்ரசனையுடன் கோலம் போட்டாள்நன்றாக இருக்கிறது என்றேன்அவள் மனதில் கரைபுரண்டோடியது உற்சாகம். எப்போதும் இப்படிநீடித்திருக்க வேண்டும்

>>

பி.ஆர்.கிரிஜா/தைத்திங்கள் முதல்நாள்!

மங்களம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!மனம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!பொங்கல் பொங்கிடும் தைத்திங்கள் முதல்நாள்!புத்தாடை உடுத்திடும்தைத்திங்கள் முதல்நாள்!இந்நன்னாளில் உங்கள் இல்லங்களில்அன்பு பொங்கிடஆர்வம் பொங்கிடஇன்பம் பொங்கிடஈகை பொங்கிடஉறவு பொங்கிடஊக்கம் பொங்கிடஎழுத்து பொங்கிடஏற்றம் பொங்கிடவாழ்த்துகிறேன்இனிய பொங்கல்நல்வாழ்த்துகள்

>>

ஞானக்கூத்தன்/பேப்பர் பையன்

இருளில் எழுகிறான் பேப்பர் பையன்.கைகால் கழுவிப் பல்தேய்த்துவெளியே போகிறான் பேப்பர் பையன். கடைத்தெருப் பக்கம் நடைபாதையில்பேப்பர் கட்டைப் பிரிக்கிறார்கள்.அங்கே வருகிறான் பேப்பர் பையன். குமுதம் விகடன் ஹிந்து எக்ஸ்பிரஸ்தினமலர் இந்தியா டுடே அப்புறம்ஈநாடு, ப்ரபா, மாத்ரூ பூமி என்றுதனித்தனியாகப் பிரிக்கிறார்கள். இரண்டு …

>>

அ. முத்துலிங்கம்/வம்ச விருத்தி

நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்திருந்தேன். அந்த இலையுதிர் பருவத்தின் மௌனமான மாலை வேளையில் மின்கணப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. துரி என் காலடியில் படுத்திருந்தது. அன்று முழுக்க அது சாப்பிடவில்லை. சாப்பாட்டை போய் முகர்வதும், மறுபடியும் வந்து படுப்பதுமாக இருந்தது. …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்மாந்தருக்குள் ஒரு தெய்வம்

முதலாவது உலக மகாயுத்தம் 1918-ஆம் வருஷத்தில் பயங்கரமான கட்டத்தை அடைந்திருந்தது. பிரிட்டன் முதலிய நேச தேசங்களின் நிலைமை மிக நெருக்கடியாகியிருந்தது. இந்த நிலைமையில் இந்தியாவின் இராஜப் பிரதிநிதி லார்ட் செம்ஸ்போர்ட் டில்லியில் ஒரு யுத்த மகாநாடு கூட்டினார். அதற்கு வரும்படி இந்தியாவின் …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 5: கோபாலய்யங்காருக்கு விவாகம் மறுநாட் காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளுனுப்பி வேங்கடாசல நாயுடுவைத் தமது வீட்டுக்கு வரவழைத்தார். நாயுடு, பந்துலு, அய்யங்கார் மூவருமிருந்து பரியாலோசனை செய்யத் தொடங்கினார்கள். நாயுடுவும் பந்துலுவும், பணிப்பெண்ணாகிய மீனாட்சியை அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது …

>>

அழகியசிங்கர்/துளி 227

11.01.2025 நேற்று என் நெடுநாளைய நண்பர் ப்ரியம் அழைத்ததால் இரண்டு மூன்று நூல்கள் வெளியீடு கூட்டங்களில் கலந்து கொண்டேன்.மாலை 4 மணிக்குக் கிளம்பி என் ஸ்டாலுக்குத்7 மணிக்குத் திரும்பினேன். முதலில் வேரல் புக்ஸ் வெளியிட்ட இரண்டு நூல்கள் வெளியீடு.செந்தில் பாலாவின் கோடுகளில் …

>>

அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 6

மதுவந்தியின் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘கேட்கும் செவிக்கு எங்கும் இசை’ சமீபத்தில் வந்த கவிதைத் தொகுதி.கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.இன்னும் வாசித்து இவர் கவிதைகளைப் பற்றி எழுதுகிறேன்.130 பக்கங்கள் கொண்டஇப்புத்தகத்தின் விலை ₹ 100.குவிகம் பதிப்பகம் மூலமாக வந்துள்ளது.

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

அத்தியாயம் 1 புதன் கிழமைக்கும் வெள்ளிக் கிழமைக்கும் நடுவில் சங்கரமங்கலம் விசுவேசுவர சர்மாவின் அந்தக் குடும்பத்தில் அப்படி என்னதான் நடந்து விட்டது? ரவி பாரிஸிலிருந்து எழுதி வியாழக்கிழமை காலையில், இங்கே கிடைத்திருக்கிற அந்த விமானத் தபால் – கடிதம்தான் இந்த மாறுதல்களை …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கதைகள்

வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான்.அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு.”உனக்கு எந்த ஊர்?” என்று கேட்டேன்.”நடுப்பட்டி” என்று அந்தப் பண்டாரம் சொன்னான்.”நீ எந்த மதம்?” என்று கேட்டேன்.”வைச்சாக்தம்” …

>>

அழகியசிங்கர்/துளி 226

07.01.2025 அப்பாவின் நினைவு தினம்… இன்று அப்பாவின் நினைவுதினம். இதே நாளில் அப்பா இறந்து போனார். அவர் நினைவுகளில் சுழன்று அப்பாவின் அறை என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறேன். நீண்ட வயதுடன் (95 வயது) இருந்தார். அரசாங்க உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். …

>>

கயல்/மரணத்தைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது

இப்படி அநியாயம் செய்கிறதேஇதை யார் கேட்பதுஅழகழகாய்ப் புடவைகள் பொருத்தமாய்க் கழுத்தணிகள்பொங்கி வரும் சிரிப்புடன்புதுப் புனல் போலிருந்தவளைபட்டென்று பிரித்துப் போனாயேஊரெல்லாம் கொள்ளையிட்டுஉலை பொங்கி உண்போர்கள்எத்தனையோ உல்லாசமாய்பலகாலம்வாழ்ந்திருக்கஅன்பு தவிர ஏதுமறியாஓருள்ளத்தைஅவசரமாக ஏனழைத்தாய்?ஓடி ஓடிக்களைத்த கால்கள்ஓய்வை நெருங்குகையில்மொத்தமாகச் சிறகறுத்தாய்உன்னுடைய தராசில்நியாயமென்ற ஒன்று இல்லையாஇல்லைஉன்னிடம் தராசே இல்லையாஎல்லார் …

>>

சென்று வாருங்கள் உமா/அமிர்தம் சூர்யா

எப்போதும் யாருக்கும் நான் கண்ணீர் அஞ்சலி, ஆழ்ந்த வருத்தம், RIP போடுவது இல்லை . மரணம் குறித்து என் நிலைப்பாடு அது. கவிஞரும் என் தோழியுமான உமா மோகன் சற்றும் எதிர்பாராத விதமாய் ஒரு பூ உதிர்வதை போல காலத்தில் இன்று …

>>

உமா மோகன் நேற்றிரவு காலமானார்/மஞ்சுநாத்

கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட இலக்கிய ஆளுமை என் இனிய நண்பர் உமா மோகன் நேற்றிரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலன் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். நேற்று முன்தினம் அம்பை நேரில் சென்று பார்த்துவிட்டு வரும்படி …

>>

அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 5

எல்.ரகோத்தமனின் ஊஞ்சலின் தனிமை என்ற நான்காவது கவிதைத்தொகுதி , உள்முகத் தன்மை கொண்ட கவிதைத் தொகுதி.கவிதைகளை எழுதுவதில் வல்லவர் ரகோத்தமன்.இவர் கவிதைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன.112 பக்கங்கள் கொண்டஇப்புத்தகத்தின் விலை ₹ 140உதயகண்ணன் வெளியீடாக வந்துள்ளது.

>>

அழகியசிங்கர்/வெள்ளைப் பூனை

வெளியே குதிக்க விரும்பவில்லை? ஏன் என்று கேட்டேன்? உன்னை விட்டுப்போக விரும்பவில்லைநான் போய்விட்டால்உனக்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றது உண்மைதான். துன்பம் வரும்போது உன்னைப்பார்த்தால்நிம்மதி அடைவேன்என்றேன் (விருட்சம் 128வது அட்டைப் படத்தைப் பார்த்து எழுதியது)

>>

அழகியசிங்கர்/அவ்வளவு சுலபமில்லை

புத்தகம் தயாரிப்பதுஅவ்வளவு சுலபமில்லை புத்தகம் விற்பதும்இன்னும் சுலபமில்லை விற்றப் புத்தகத்தைவாசகர்படிப்பதென்பதுநடக்காத காரியம் அதனால் என்னஎழுதுபவர்கள் சும்மாஇருப்பதுமில்லை

>>

எல்,ரகோத்தமன்/அக்னி

  – கையில் தீச்சட்டிஇடுப்பில்வேப்பிலைச் சாமிவேகம் வந்துஆடுகையில் உன் மேல்வந்த சாமி எச்சாமியோ! நேர்த்திக்கடன் கேட்டுகீழ்கருப்பன் வந்தானோ! வரண்ட வயக்காட்டின்துயர் காட்டபச்சைக்குதிரை மேல்வாவென்று அழைத்தாயோபச்சையப்பனை! விண் மேல்வீற்றிருக்கும்கருப்பண்ண சாமியிடம்மழைநீரைஏன் தடுத்துவைத்தாயெனபொங்கியெழுந்தாயோ! காவல் மறந்தஊர் காவல் வீரனைவாள் வீச்சிற்கழைந்நாயோ! ஊர் கன்னி பெண்களைகாத்து நிற்கும்கருத்தம்மாள்காக்க தவறியதேன்எனும் கோபத்தில்கண் நிவந்து  போனாயோ உருட்டு மீசை …

>>

அழகியசிங்கர்/துளி 225

03.01.2025 இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு 6 கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்து மாட்டிக்கொண்டிருக்கிறேன். இரண்டு தொகுதிகள் எழுத்து காலத்தில் எழுதிய தி சோ வேணுகோபாலன் கவிதைகள், சி.சு செல்லப்பா தொடங்கிய எழுத்து பத்திரிகைதான் முதன் முதலாக புதுக்கவிதைகளைப் பிரசுரம் …

>>

அழகியசிங்கர்/நாய்க் குட்டி

துள்ளி ஓடிற்றுபுத்தகக் காட்சிநடைப் பாதையில்ஒரு நாய்க்குட்டி அதுக்குபுத்தகங்கள் பற்றிஎன்ன தெரியும்? வேடிக்கைப்பார்த்த எங்களுக்குஎன்ன தெரியும்அதைப் பற்றி விற்கப்படாமல்இங்கே வீற்றிருக்கும்புத்தகங்களுக்கும்எதுவும் தெரியாது 2.1.2025 – 4.52

>>

கவிதை திறந்தது கவிதை/அழகியசிங்கர்

கதவைத் திறந்தேன்உள்ளேகவிதை எட்டிப் பார்த்ததுகவிதைதிறந்ததா ஆர்கேதிறந்தாராஒன்றும் புரியவில்லைஆர்கே திறந்தார்கவிதையும் திறந்ததுகவிதை திறந்தாலும்ஆர்கே திறந்தாலும்உங்கள் மனம்திறக்க வேண்டும்கவிதை வாசிக்க

>>

புத்தகம் அறிமுகம் 4/அழகியசிங்கர்

குறைந்தபட்சம் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதுதான் என் நோக்கம்.என்னை மதித்துப் புத்தகம் அளிப்வருக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.இரா.ம.சௌந்தர் புத்தகமான வேலிகள் தாண்டுவதற்கு அல்ல..என்ற புத்தகம் எப்படிக் கிடைத்தது என்று சொல்கிறேன்.புத்தகக் காட்சியில் 675 வது ஸ்டாலில் உட்கார்ந்திருக்கும் போது என் நண்பர் சந்தியா …

>>

அழகியசிங்கர்/ஒரு வேண்டுகோள்

கடந்த 34 ஆண்டுகளாக வரும் இலக்கியச் சிற்றிதழ் நவீன விருட்சம்.தனி இதழ் ₹ 50. ஆண்டுச் சந்தா ₹ 200.புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் ஆண்டுச் சந்தா வைப் புதுப்பிக்கவும்.முதல் வரிசையில் நாலு அரங்கங்கள் தாண்டியவுடன் (பாரதி வழி)விருட்சம் அரங்கம் (675) வருகிறது.சந்தா …

>>

ப.மதியழகன்/புத்தாண்டே வருக…

தோல்விகள் தொலையட்டும்வெற்றிகள் குவியட்டும்முயற்சிகள் ஓங்கட்டும்புதியநம்பிக்கை பிறக்கட்டும்பாதைகள் திறக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்உறவுகள் சிரிக்கட்டும்மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும்வீழ்ச்சி கனவாகட்டும்புதிய எழுச்சி நனவாகட்டும்வறுமை ஓடட்டும்புதிய வலிமை பிறக்கட்டும்எண்ணம் சிறக்கட்டும்வாழ்த்துகள் குவியட்டும்கொண்டாட்டடும் குதூகலமுமாகஒவ்வொரு நாளும்ஒளிமயமாய் விளங்கட்டும்இந்த புத்தாண்டுஒவ்வொரு தமிழர்களின்உள்ளத்திலும்புது இரத்தம் பாய்ச்சட்டும்!

>>