நாகேந்திர பாரதி/அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 126

36 ஆண்டுகளாக வெளிவரும் அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 126 இதழில் வெளிவந்துள்ள வித்தியாசமான கதை, கவிதை கட்டுரைகளில் , தமிழவன் அவர்களின்’ இலக்கியம், சினிமா – இன்றைய நிலைமை’ யில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் மிகவும் சிந்திக்க வைத்தன.உலகமே …

>>

ராஜ மார்த்தாண்டன்/விமர்சனம்

எழுது எழுது என்றாய்எழுதினேன். உன் மீசையின் கம்பிரத்தைப்போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்மீசையின் வரலாறு தெரியுமா?அதன் வகைகள் அறிவாயா?மீசையைப் பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன்எழுதியசர்ரியலிசக் கள்தை படித்திருக்கிறாயா?கேள்விகளை அடுக்குகிறாய். நண்பனே!உன் கற்பனை மீசையைத் திருகிநீ கொள்ளும் பரவசம்எவ்விதம் நானறிவேன்எங்ஙனம் அதுகுறித்து எழுதுவேன். கொல்லிப்பாவை: …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

தவலை போட்ட குட்டி! ஒரு சமயம் ஒரு பெரியவர் ஒரு கருமானிடமிருந்து ஒரு தவலையைக் கடனாக வாங்கினார். பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும்போது ஒரு தட்டை அதோடு வைத்துக் கொடுத்தார்.“தட்டு ஏது?” என்று கேட்டான் கருமான்.“தவலை குட்டி போட்டது?”கருமான் மிக்க மகிழ்ச்சியுடன் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருட்கடல் பகவான்

சித்தூர் நாகையா பகவான் ரமணரின் பக்தர் . அவர் தன் மனைவி இறந்து தனிமையில் வாடினார். கால் போன போக்கில் நடந்து ரமணாஸ்ரமம் வந்தார். அங்கே பால் ப்ரன்டனின் நட்பு கிடைத்தது . தாம் இழந்த மகிழ்ச்சியை திரும்பப் பெற்றார் . …

>>

ரஸவாதி/பெற்றவள்

தெருமுனையில் திடீரெனக் கூச்சல்.”ஆனை வரதுடோய்!” திண்ணையிலிருந்தபடியே எட்டிப்பார்தேன். சர்க்கஸ் யானைதான். கம்பீரமாக, மகாராஜாபோல, பாகன் அதன்மீது உட்கார்ந்திருந்தான். பின்னாலும் பக்கவாட்டிலும் ஊர்ப் பொடியன்கள் கூட்டம்.உள்ளேயிருந்து ஓடிவந்து எட்டிப் பார்த்தான் அம்பி. மடிந்திருந்த வலது புறங்கையிலிருந்து என்னவோ வழிந்து கொண்டிருந்தது. பாதிச் சாப்பாட்டில் …

>>

சாருநிவேதிதா/ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார்

இதேபோல் ஒரு தீபாவளி நேரம். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னால். 2014. அக்டோபர் கடைசி. அவர் கதைகள் எனக்குப் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார். எங்கே இருக்கிறீர்கள் என்று பதில் கடிதம் போட்டேன். திருவான்மியூர் என்றார். நேரில் போய் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/எஞ்சியவை

1ஒழுகும் பேனாதன் சித்திரத்தைத்தானே எழுதிக்கொள்கிறது—-2துக்கத்தின்சாம்பல்நீறு—-3ஆத்மாவின்காயங்கள்உன் சொற்கள்—4கடைசியில் எஞ்சியிருப்பதுஎதிரியின் சொற்களல்லநண்பர்களின் மௌனம்—-5மெல்லிய ஆம்பல்தண்டின் நாருறித்தகீற்றாகஒரு அல்குல்—6இரவில் கிசுகிசுக்காதேசொற்கள்நம்பிக்கையளித்துவிடும்—7ஓவியத்தூரிகைதீட்டாமலிருப்பதுபரிநிர்வாணம்—8மாயையைப் பற்றியார் பேசினாலும்நீ ஏன் புன்னகைக்கிறாய்?—-9கண்ணீர்த்துளிகளால்சில பக்கங்களைநிரப்பலாம்ஆனால் எல்லா பக்கங்களையும்நிரப்புவதுதகாது—-10இறந்த கவிஞர்களோடுபேசுதல் எல்லோருக்கும்வழமைஇறந்த பிறகே புகழ்தல்நம்மிடம் நிலைபெற்றுவிட்டமரபு—-11மிருகங்களையும் பறவைகளையும்உன் கவிதைகளுக்குள்வரவிட்டுவிடாதேஅவை நீ மனிதனல்லஎன்பதைச் சொல்லிவிடும்——12‘இதயபூர்வமாக’என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?அகராதியில் …

>>

அழகியசிங்கர்/வினோத செய்தி – 6

அர்ச்சகர்களின் தட்டு பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை பூம்பாறை கோவிலில் அலுவலர்கள் அடாவடி கொடைக்கானல், அக். 29- கொடைக்கானல் பூம் பாறை குழந்தை வேலப்பர் கோவிலில், அர்ச்சகர்களின் தட்டு பணத்தைப் பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்களின் செயலால் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.பழனி முருகன் …

>>

சித்தரஞ்சன் தாஸ்

1923-24இலேயே அவர் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆகிவிட்டார். 1921ஆம் ஆண்டு பம்பாயில் முதல் ‘டிரேட் யூனியன் காங்கிரஸ்’ (தொழிலாளர் சங்க மாநாடு) நடந்தது; அடுத்த ஆண்டு ஜரியாவில் நடந்தது. மேற்கத்திய பாணியில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதற்காகச் செய்யப்பட்ட முதல் முயற்சி இது. 1923இல் …

>>

பசப்பல் ராஜகோபால்/வேர்க்கும் ஜமுக்காளம்

அடிப்பதும் அணைப்பதும்கொடுப்பதும் எடுப்பதும்முடிப்பதும் தொடுப்பதும்நடிப்புனக் கென்றால்,ஜமுக்காளமா நான்?மேடை சமைத்த நாள்என்னைக் கேட்டாயா?நான் இல்லையென்றால்மேடை யாருக்குமேடைக்கு நானா?“என்னிஷ்டம்” என்றால்என்னிஷ்டம் ஏன்?கண்மூடிச் செவிபொத்திக்கட்டையாய்க் கிடப்பதற்கா?கட்டையாய்க் கிடந்தாலும்போகஸ்லைட் புழுக்கத்தில்உணர்வலை உருகிப்போய்வேர்வையாய் வழிகிறதேமூக்கைப் பொத்திக்கொள்.

>>