நடமாடும் தையற்காரர்

சிறுகதை: கு. மா. பா. திருநாவுக்கரசு தாகீர் பாய் ஒரு ராசியில்லாத நடமாடும் தையற்காரர். தெருவோர மரத்தடி நிழலில் தினமும் கடை போடுவார். காலால் மிதித்து ஓட்டும் பழைய தையல் இயந்திரத்திற்கு, பற்றவைத்துப் பொருத்திய நான்கு சக்கரங்கள் தேய்ந்த நிலையில் இருக்கும். …

>>

காட்சிப்பிழை

உதயசங்கர் அம்மா அவனைக் கூப்பிட்டாள். நூறாவது முறையாகச் சொன்னாள், “ யாரும் கேட்டா என்ன சொல்லுவே.. கோபால் மாமா ஸ்டூலைப் போட்டு ஏறி மேலே இருந்த டிரங்கு பெட்டியைத் திறந்தான்.. அதிலேர்ந்து சங்கிலியை எடுத்து பையில் போட்டுகிட்டான்.. சரியாச் சொல்லணும்.. இன்ன..” …

>>

இசை

முபீன் சாதிகா அந்தக் கிரகம் பழமையான இனத்தைச் சார்ந்தது. அவர்கள் ஓரளவுதான் பேசக் கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இசைக் கருவிகளை உருவாக்கி அவற்றை வாசித்து தங்களின் பேச்சை வெளிப்படுத்தினார்கள். இது அந்த இனம் முழுக்கப் பரவ எல்லோரும் ஏதோ ஓர் …

>>

காணாமல் போன கவிதை

(யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம் , மிகைப்படுத்தி எழுதப்பட்ட கதை இது ) நாகேந்திர பாரதி கொலுவைப் பற்றிக் கவிதை எழுதிப் பார்த்தேன் .‘ போன வருடம் போலவே போதிய இடைவெளியில்பொம்மைகள் ‘ . படித்தவர் கேட்டார் . ‘பொம்மைகளுக்கு எதற்கு …

>>

புழு

முபீன் சாதிகா அவள் குழந்தையாக இருக்கும் போது தன் வீட்டுக்கு எதிரில் மண்ணிலிருந்து வெளிக் கிளம்பும் புழு ஒன்றைத் தினமும் பார்ப்பாள். அதில் என்ன அதிசயம் என்றால் அந்தப் புழு தினமும் ஒரு நிறத்தில் வெளிவரும். அதன் நிறத்திலிருந்துதான் அவளால் வண்ணங்களில் …

>>

பொய்

முபீன் சாதிகா பெரும் செல்வங்களும் சொத்தும் கொண்டிருந்த ஒருவன் தன் அனைத்துச் சொத்துகளையும் யாரொருவர் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாத பொய்யைக் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தான். ஒவ்வொருவரும் வந்து விதவிதமான பொய்களைச் சொன்னார்கள். ஒருவன் வந்து அவனுக்கு உறவுமுறை என்கிறான். …

>>

சாகசம்

முபீன் சாதிகா அந்தச் சிறுவன் ஓர் அழகான மாயக் குதிரையை வளர்த்து வந்தான். அதில் பயணம் செய்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்பி அதைக் கிளப்பினான். குதிரை சிறுவனிடம் அந்தப் பயணம் மிகவும் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றது. அப்போது …

>>

வால் நட்சத்திரம்

முபீன் சாதிகா அந்தச் சிவப்பு வால் நட்சத்திரத்தின் வால் அவன் வாழும் கிரகத்தை உரசப் போகிறது. அதனால் அந்தக் கிரகத்தில் பனிப் பொழிவு தொடங்கிவிடும். கிரகத்திலுள்ள பனி உருகி முழு கிரகத்திலும் நிறைந்துவிடும். அது பல நாள் நீடிக்கும். மீண்டும் பனி …

>>

எலிப்பொறி

உதயசங்கர் எப்படியும் இன்று அந்த எலியைப் பிடித்து விடவேண்டும். அயத்து மறந்து எந்தப் பொருளையும் வைப்பதற்கு நீதமில்லை என்று நினைத்தாள் கோமு. இதுவரை அவள் எலியைப் பார்க்கவில்லை. ஆனால் எலி இருக்கிறதென்று நம்பினாள் கோமு. நேற்று இரவில் அவளுடைய பித்தவெடிப்பு விழுந்த …

>>

களவு

முபீன் சாதிகா அவன் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளைச் செய்யக்கூடியவன். ஆனால் அவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கவே முடியாத பல களவு வேலைகளைச் செய்திருக்கிறான். ஒரு வங்கியின் பணக்கிடங்கு இருக்கும் அறைக்குள் அவனால் நுழைய முடியவில்லை. அந்தக் கதவு திறக்கச் சிலருடைய விழித்திரையைப் பதிவு …

>>

கணக்கு வாத்தியார்

நான் சிறு வயசில் இரட்டை வாலு. படிப்பிலும் படு சுட்டி . அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பில் மொத்தம் 40 பேர் படித்தோம்.அதில் மாணவர் மாணவியர் சரி பாதி. எங்களுக்குக் கணக்கு பாடம் சொல்லித்தர …

>>

இரவின் மடியில்.

பெஷாரா க தைக்கும் கதை…. அவனுக்கு தூக்கம் வந்தது. மின் விளக்கை அணைத்து விட்டு மெல்ல படுக்கையில் ஒருகளித்து படுத்தான்.சற்று நேரத்தில் காதருகில் “நொய்ங்” என்று கொசு ரீங்க்காரமிட்டது. அடடா மின் விசிறி ஆன் செய்ய மறந்து விட்டோமே என்ற எண்ணம் …

>>

அஞ்சலட்டைக் கதை

அழகியசிங்கர் அப்பாவுக்கு ஒரு கடிதம்.. இன்று அஞ்சலட்டை தினமாம். சில மாதங்களுக்கு முன்னால் என்னிடமுள்ள அஞ்சலட்டைகளை யாருக்கும் அனுப்பாமல் கதைகளை எழுதிக் கொண்டிருப்பேன். கிட்டத்தட்ட 40 கதைகளை எழுதி விட்டேன். புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன். அந்த அஞ்சலட்டைக் கதைதான் இது. …

>>

தள்ளுபடி

சுரேஷ் ராஜகோபால் தீபாவளி மறு நாள் ஒரு நகைக் கடைக்குள், என் மனைவியுடன், போனேன் அதுவுமில்லாமல் மாதக்கடைசியை நோக்கி நாட்கள் நகர்வதால் பணம் தட்டுப்பாடு இருக்குமென்று நினைத்து என் நண்பனின் மகளின் திருமண பரிசாகக் கொடுக்க, ஒரு சிறு தங்க நகை, …

>>

சரியான கில்லாடி

சுரேஷ் ராஜகோபாலன்  மத்தியான வேளை, தெருவில் எதோ ஒன்றிரண்டு வண்டிகள் போய் வந்தன. வெயில் அடித்தது. வீட்டுக்குள்ளே போய் பெரிய, மிகப் பெரிய அடுக்கு ஒன்றைக் கொடுத்துக் கலாய் பூசச்சொல்லி, “எவ்வளவு பணம்?” என்று கேட்டாள் ஒருவன் “பத்தணா” என்றான். இவள், …

>>

அற்புத நீரூற்று –

உதயசங்கர் அற்புத நீரூற்றுக்கு அற்புத நீரூற்று என்றே பெயர். அது குருமலையின் மீது அடர்ந்த வேப்பமரத்தின் வேரடியிலிருந்து ஊறி வந்து கொண்டிருந்தது. மழைக்காலத்தில் ஊற்றில் தண்ணீர் பெருகி ஓடையாய் ஓடி கீழே அம்புலிக்குளத்தில் நிறைந்து விடும். கோடையாக இருந்தாலும் ஊற்றில் நீர் …

>>

தேடுதல் வேட்டை

சுரேஷ் ராஜகோபாலன்   வேகமாக வந்தவன் வண்டியை நிறுத்தினான் வீட்டு வாசலில். உள்ளே ஓடினான். தன் பெட்டியில் எதோ துழாவினான். கிடைக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. மனைவியைக் கூப்பிட்டான். “என்ன” “நான் பார்க்கவில்லையே?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.“குழந்தைக் கூடையில் இருக்கிறதான்னு பார்க்கிறேன்” என்றாள்.இருவரும் ஓடினார்கள்.அங்கும்  …

>>

மௌனம்

ஆர் வத்ஸலா மனைவிமார்களை கிண்டல் செய்வதை ஒரு சில ஆண்கள் எரிச்சலூட்டும் அளவுக்கு ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு தாங்கள் மிகவும் பயப்படுவது போல பேசுவது. இதற்கு பட்டிமன்ற பேச்சாளர்கள் ஒரு பெரிய கிங் சைஸ் உதாரணம் என்றால் எழுத்தாளர்களும் …

>>