பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்/ப.மதியழகன்

பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
உடுத்திக் கொள்ளலாம் கந்தல் ஆடைகளை
குளித்துக் கொள்ளலாம் குளமோ குட்டையோ
பசியாறாது வயிறெனும் சுடுகாடு!

>>

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை/ப.மதியழகன்

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிஞர்கள் பாடு பெரும்பாடு தான்
எழுதிக் குவித்ததை என்ன செய்வது
எடைக்குப் போடுவதைத் தவிர!

>>

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை (6) /கோ.முத்துசுவாமி

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
கவிதைகளை கவிஞர்களே வாசிப்பதும் இல்லை;
அவரவர் கவிதைகளை அவரவரே வாசிக்கட்டும்;
என்னதான் செய்து தொலைக்க?!

>>

கண்ணுக்குள் பூத்த கனல்
என்ற ஈற்றடியில் என்பாக்கள்…

எண்ணங்கள் எல்லாம் சொற்களாய் மொட்டவிழ்த்தால்
இதயங்கள் சுருங்கும்; உறவுகள் விலகும்;
சொல்லின்றியும் சிலநேரம் மனசுக்குள் பொத்துவிடும்
கண்ணுக்குள் பூத்த கனல்.

>>

கு.மா.பா.திருநாவுக்கரசுவின் இரு
என்பாக்கள்

மற்றவிரல் நான்கும் சமமாக கைகுலுக்க,
கட்டைவிரல் ஒன்றுதான் உயரம் காட்டும்!
வெற்றியினை விரலுயர்த்தி குறிக்கும் உலகில்,
மேலான தெல்லாமே மேல்.-

>>