மருத்துவ மனையில் ஒரு நோயாளியாக நான் தங்கியதில்லை. கொரோனா வைரஸ் அந்த அனுபவத்தைத் தந்தது!
கொஞ்சம் கண்ணெரிச்சல், ஜலதோஷம், 99 டிகிரி ஜுரம், பசியின்மை, உடல்வலி – வைரஸ் ஜுரத்திற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. மூக்கடைப்பு – எந்த ஜலதோஷத்திலும் வரக்கூடியதுதான் – தும்மல், அவ்வப்போது இறுமல். தக்காளி ரஸம், காப்பி வாசனை சுமாராகத் தெரிந்தது. வாயில் சுவை தெரியவில்லை (மூக்குக்கும், நாக்குக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கவேண்டும் – மூக்கு அடைத்தால் வாசனையுடன் டேஸ்டும் தெரியாது என்பது இன்றுவரை ஏனென்று புரியாத புதிர்!). வெளியே மாறி மாறி வரும் வெப்பநிலை, மழை, ஐஸ் வாட்டர் குடித்தது, மாஸ்க் அணிந்துகொள்வது என மனம் காரணங்களைத் தேடியது! எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், (மாஸ்க், முகத்திற்கு ஷீல்டு, கையுறைகள் என மாறுவேஷத்தில் பேஷண்டுகளைப் பார்த்தாலும்!), நம் மூக்கை வந்தடையும் கொரோனாவைத் தடுக்க வழியில்லையென்றே தோன்றுகிறது.
>>