நெகிழ்ச்சியுடன் கென்ய நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவ்லி குடும்பம்! /அம்ரா பாண்டியன்

வங்கிகளில் கோடிகளில் கடன் வாங்கி வெளிநாடுகளில் அலையும் இந்தியத் தொழிலதிபர்கள்…30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரூ.200 கடனை அடைக்க இந்தியாவில் கடைக்காரரைத் தேடி அலைந்து கண்டுபிடித்த கென்யா எம்.பி! கோடிகளில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பும் நம்ம ஊரு தொழிலதிபர்கள் …

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 59வது நிகழ்ச்சி/அழகியசிங்கர்

14.07. 2023 – நாளை – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் நடை பெற உள்ளது.

>>

பால் செலானின் கவிதைகள்- மொழி, கவிதை, அழித்தொழிப்பு-1/எம்.டி.முத்துக்குமாரசாமி

கவி பால் செலான் ஏப்ரல் 19, 1970 அன்று பாரிஸ் நகரில் ஓடும் சீன் நதியில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டார். பால் செலானின் வீட்டில் பிறகு அவர் தத்துவ அறிஞர் ஹைடெக்கருக்கு எழுதிய முடிக்கப்படாத கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பால் செலான் …

>>

நா.முத்துக்குமார் – வெட்டியெறிந்த வலி.

சி .மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது எங்களுக்கு சி.மோகனின் அறை,நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறை எல்லாம் நேசிப்பிற்குரிய போக்குவரத்துப் பாதைகள் .நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் …

>>

சொல்/சிறகா

சுழலும் சொற்கள்சுழன்று சுழன்றுசொல் விளையாட்டில் ஈடுபட சுழஙற்சியின் வேகத்தில்காணாது போனது நிஜம்அர்த்தங்கள் அற்று போன வார்த்தைகள்போல போலவென உதிர்ந்துஏதாகிப் போனதோ அறிதல் அற்றுசதிராடி திளைக்கும்மனம்

>>

படிக்கலாம் வாங்க…/அழகியசிங்கர்

நான் புத்தகக் காட்சியை ஒட்டி 7 புத்தகங்கள் கொண்டு வந்தேன். 7 புத்தகங்களில் 5 புத்தகங்கள் ‘படிக்கலாம் வாங்க’ பகுதியில் தினமலரில் டி.எஸ்.ராயன். அவருக்கு என் நன்றி.கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் வராது என்று நினைத்தேன். என் ஆசசரியம் கவிதைப் புத்தகம் …

>>

என்பா 144/அழகியசிங்கர்

சொல்லாமல் கொள்ளாமல்ஏறிவிட்டது விலைவாசி காலையில் கடைக்குச்சென்றேன் தக்காளி வாங்க. விலையைக்கேட்டவுடன் மயங்கிவிழுந்தேன். விழுந்தேன்.விழுந்தேன்

>>

கிளெமென்டைன் வான் ராடிக்ஸ் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் நீ நேசித்த முதல் பெண்நான் அல்ல.திறந்த வாய் மூடாமல்வியப்புடன் நான் பார்த்தமுதல் ஆணும் நீ இல்லை.ஒரு கத்தியின் கூரிய முனைகள் போலநாமிருவரும் இழப்புகளைஅறிவோம்;நாம் இருவருமே தோலை விடவும்திசுக்களில் அதிக வடு கொண்ட உதடுகளோடு வாழ்ந்தோம்.நமது காதல் முன்னறிவிப்பு …

>>

சில துளிகள்……./அழகியசிங்கர்

படுக்கையிலேயே படுத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று எழுந்து உட்கார்ந்து கைகளை அசைத்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார். நான் எடுத்துப் படிக்க நினைத்த புத்தகங்களின் ஒன்றின் பெயர் கானகன். என் கம்பூயூட்டர் டேபிள் பக்கத்தில் வீற்றிருக்கிறது. கடந்த நாலைந்து நாட்களாக நான் சளி, இருமலால் …

>>

அழகியசிங்கரின் என்பாக்கள்/நாகேந்திர பாரதி

1. எலியைக் பிடிக்கப் பூனை வளர்த்தோம்பாலைக் குடித்துப் படுத்த பூனைஎலியார் வந்தும் எழும்பக் காணோம்பூனை நல்ல பூனைதான் 2. தேசம் எங்கும் ஊழல் நிரம்பும்ஊழல் தடுக்க வன்முறை கிளம்பும்வன்முறை முடிவில் மிஞ்சிய மனிதர்வாழ்க வாழ்க வாழியவே 3. சாப்பிட்டுப் படுத்துத் தூங்குதல் …

>>

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்../அழகியசிங்கர்

16.06.2020 அழகியசிங்கர் : வணக்கம். ஜெகனும் மோகினியும் வணக்கம் தெரிவிக்கிறார்கள். காணொளி மூலம் ஒன்றாக சந்திக்கிறார்கள். அழகியசிங்கர் : எப்படி உள்ளீர்கள்? ஜெகன் : நன்றாக உள்ளோம். ஆனால் வீட்டிலேயே இருக்கிறோம். மோகினி : நீங்கள் சொன்ன பா ராகவனின் யதியைப் …

>>

தீர்வு/ஆர். வத்ஸலா

(09.06.2023 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற கூட்டத்தில் வாசித்த கவிதை)– ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை அண்ணா சொல்வார்‘தாங்க முடிலெ இவ பட்டுப் பொடவெ மோகம்சம்பாதிப்பதெல்லாம் அதுக்கே போறது’ தோழி சொல்வாள்‘எம்பையன் எல்லாத்திலெயும் நல்லவந்தான்ஆனா படிக்கறதே இல்லெ’ என் மருமகள் அலுத்துக் …

>>

கவிதை வாfசிக்கலாம்வாங்க.. 6/அழகியசிங்கர்

நாளை – வெள்ளிக்கிழமை – (09.06.2023) மாலை 6.30 மணிக்கு நாம் சூமில் கூடி கவிதை வாசிக்கப் போகிறோம். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை …

>>

பறவைகள்/சிறகா

ஒப்பனைகள் அற்ற முகங்கள்ஓராயிரம் கனவுகளை நனவாக்கும் பார்வைதெளிந்த குரலில் இசைக்கும் தெய்வீக பாடல்புரிந்தும் புரியாமலும் பாவனை செய்யும் மானுடம்பறவைகளின் இனிய மொழி கலப்படமற்ற அன்பின் கானம்வாழி நீவிர் பறவைகளேநீடூழிநிம்மதியின் சாரலை கீத மழையாய் பூமியில் பொழிந்தபடி. 5-6-2023.

>>

ஞானக்கூத்தன் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்?/அழகியசிங்கர்

ஞானக்கூத்தன் சூரியனுக்குப் பின்பக்கம் என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதை யாராவது படித்திருக்கிறார்களா என்று தெரியாது. அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரியாது. இந்தக் கவிதை தீபம் இதழில் 1974 ஆம் ஆண்டு பிரசுரமானது. இதைப் பற்றி ஒரு கதை உண்டு. ‘சூரியனுக்குப் பின் …

>>

அஞ்சலட்டைக் கதைகள் 13/அழகியசிங்கர்

இது என் 13வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமஙூருக்க முடியாது. எதிர்பாராத தகவல்? நாங்கள் இருவரும் முடிவு …

>>

மனம் ஒரு வீடு/விஜயலட்சுமி கண்ணன்

ரம்யாவும் ரகுவும் சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை வருகிறார்கள் என்று தகவல் தெரிந்தது முதல் சிவகாமிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனம் துள்ளிக் குதித்தது, சொல்ல முடியாத எண்ணங்கள் அலை அலையாக வந்து போயின. இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு …

>>

ஜோசியர் வீடு/அன்னபூரணி

“இந்த வீடா?” சந்தேகமாகக் கேட்டாள் வனஜா. பழைய அபார்ட்மென்ட் என்று பார்த்த உடனேயே தெரிந்தது. வாசலில் வேப்பமரம் தலை சாய்த்து வரவேற்றது அழகாக இருந்தது. கட்டிட முகப்பில் கண்திருஷ்ட்டி விநாயர் படம் போட்ட டைல்ஸ் பதித்திருந்தது. போதாதற்கு திருஷ்ட்டி பொம்மையின் படமும் …

>>

அம்மா/அழகியசிங்கர்

அந்த நாள்ஞாபகம் வருகிறது அம்மாஎங்களை விட்டுப்பிரிந்த நாள் அப்போது அம்மாவின்வயதுஇப்போதுஎன் பெண் வயதைவிடசிறியவளாகஇருந்திருப்பாள் அந்த வருடம்தீபாவளிக்குஅடுத்த நாள்முடிந்தது தீபாவளி அன்றுதீபாவளியை அங்குக்கொண்டாடினோம் உற்சாகமான கொண்டாட்டமில்லை ஒவ்வொரு வருடமும்தீபாவளிக்கு அடுத்தநாள்புகைப்படத்தில் அம்மாஎன் வீட்டில்சிரித்துக் கொண்டிருப்பாள்

>>

துணிப் பை/மதுவந்தி

(இன்று 12-05-23 விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை) தூரத்துச் சொந்தமாயும்,மனசுக்கு நெருக்கமாயும் ஆன உறவினரின் இல்லவிழா, ஊருக்கு வெளியே. பட்டுப்புடைவையணிந்துபஸ்ஸில் போக முடியாதென,ஆட்டோவில் பயணம்.விழா முடிந்து, உடைமாற்றி,பட்டுப்புடவை, பட்டுவேட்டி, மகளின் உடையைல்லாம் மடித்துதுணிப் பையில் வைத்துமறுபடியும் ஆட்டோ பயணம்.உறவினர் …

>>

ஒத்தையடிப் பாதை/நாகேந்திர பாரதி

( இன்று (12/5/23) நவீன விருட்சம் கவியரங்கில் வாசித்த கவிதை ) ஆரம்பத்தில் கிளைகளாகப் பிரிந்தாலும்அடுத்தடுத்த அடிகளினால் அமைந்த பாதை வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதைகண்மாயின் மேட்டினிலே ஒரு பாதை காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலேகுறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை புல்லும் …

>>

இனிக்கும் தமிழ் – 178/டி வி ராதாகிருஷ்ணன்

அவை அடக்கம் –வில்லி பாரதம் – அவை அடக்கம் பெரிய இலக்கியங்களை செய்தவர்கள்,சபையோர் முன் பேசும்போது..தன்னை மிகவும் தாழ்த்தி, தனக்கு எதுவும் தெரியாது, ஏதோ சொல்லவந்திருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பது போல பேசுவார்கள்இதற்கு அவை அடக்கம் என்று பெயர். எதற்கு …

>>

கசடதபற’ வில் மௌனி கதை/அழகியசிங்கர்

‘ ‘கசடதபற’ என்ற சிற்றேடு அக்டோபர் 1970ல் வெளிவந்து கொடிகட்டிப் பறந்தது. 3 வருடங்கள் அதன் பங்கு முக்கியமானது. அந்தப் பத்திரிகை வந்த மாதிரியே நின்றும் போய்விட்டது. ‘கசடதபற’வின் நான்காவது இதழில் (ஜனவரி 1971) மௌனியின் ‘தவறு’ என்ற கதை பிரசுரமானது. …

>>

நிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும்/அழகியசிங்கர்

அழகியசிங்கர் : வணக்கம். மோகினியும், ஜெகனும் : வணக்கம். அழகியசிங்கர் : நாம் இப்போது நிஜந்தன் நாவலான புதிய வெயிலும் நீலக் கடலும் என்பதைப் பற்றிப் பேசப் போகிறோம். மோகினி : அந்த நாவல் 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அழகியசிங்கர் ; …

>>

சத்யஜித்ராயின் திரைக்கதை../அழகியசிங்கர்

27.04.2021 துளி – 192 சத்யஜித்ராயின் நூற்றாண்டு இன்று. சில ஆண்டுகளுக்கு முன்னால் அபுர் சன்ஸôர் என்ற அவருடைய திரைக்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தேன். ‘ஒரு மேதையின் ஆளுமை’ என்ற தலைப்பில் சத்யஜித்ராயைப் பற்றி பொன் விஜயன் அவர்கள் ஒரு …

>>

கோடை/வேலாயுத  முத்துக்குமார் 

இந்தக் கோடையானது   நிலத்தின் வறட்சிமழைக்கான ஏக்கம்துவர்ப்பின் வாசம் கொன்றைகளின் பருவம் பருகமுடியாத வெயிலமுது  மாம்பழத்தின் சுவை நிராகரிக்கப்பட்ட காதலின் மனப்புழுக்கம் இந்தக் கோடையானது  கோடை எனும் ஒற்றைச்சொல்லில் அடங்காது வியாபித்திருக்கின்றஇன்னொரு கோடை 

>>

எல்லே இளங்கிளியே/தங்கேஸ்

இன்னும் உறங்குதியோ ! உறங்கும் என் பூனைக்குட்டியைஅப்படியே இரு கைகளாலும் எடுத்துஅனைத்துக்கொள்ளலாம்ஒரு மென் முத்தமிட்டுஉச்சி முகர்ந்து நீவி விடலாம்ஆனாலும் ஒரு தூக்கம் தரும்பரவசத்தை நான் தரமுடியுமா?வேண்டுமானால் உன் கனவுக்குள்நான் ஒரு பூனையாக நுழையலாம்ஆனால் என் நகங்களின் நீளம் கண்டுநீ பயமுறக்கூடும் சொற்கள்  அணு …

>>

இந்தியா – பாகிஸ்தான். போரும் விளைவும்/ஜெ.பாஸ்கரன்

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், தனது எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சியில், திருமதி ஸரோஜா சகாதேவன் எழுதிய ‘இந்தியா-பாகிஸ்தான், போரும் விளைவும்’ புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டு, நாட்டுக்கும், இந்திய ராணுவத்துக்கும், எழுத்துக்கும் உண்மையிலேயே மரியாதை செய்துள்ளது! வீடு, சொந்தங்கள், பந்தங்கள், சொத்து, …

>>

நேற்று நடைபயிற்சியின் போது/ஆர்.கந்தசாமி

நேற்று நடைபயிற்சியின் போது காவிரி ஆற்றில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்தார். நான்“புகைப்படம் எடுக்கிறேன்” என்றேன். “இல்லை, உங்களை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கிறது” என்றார். “அப்படியா!” என்றேன். “நாட்டாம்பாளையம், அத்திகாடு” என்று …

>>

ம் / ஆர். வத்ஸலா

ம்.. என வீட்டுள் நுழைவார் அப்பாஅலுவலகத்திலிருந்துஅம்மா, அண்ணன், நான்இல்லாதவராய் ஆகிவிடுவோம்அப்பா அநாதையாய் அரசாளுவார்இன்னமும் அப்படியே ம்.. என கம்பீரமாய் கோபம் கொள்வார்பாட்டு வாத்தியார்சுருதி சற்றே விலகினால்மாணவர் குழாம் சங்கீதம் வெறுக்கவருமானமும் முகமும் சுருங்கஇன்று அவர் குரல்சுருதி குறைந்தொலிக்கிறது ம்.. ‘வாடி கண்ணா’ …

>>

ராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம்…/அழகியசிங்கர்

கோவிந்தன் தெரு வந்தால் எங்கள் தெரு தெரிந்து விடும். மேற்கு மாம்பலத்தில் ஆதி கேசவ பெருமாள் கோயில் என்ற ஒன்று உண்டு. அதன் எதிரில்தான் ராகவன் காலனி. ஆனால்

>>

ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழா வெளியீடுகள்!/ஜெ.பாஸ்கரன்.

இராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி, எனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. விழாவில் உரையாற்றியதற்காக, ஓரடி உயரமுள்ள நின்ற கோலத்தில் விவேகானந்தர் சிலை, சான்றிதழ், பத்துக்கும் மேற்பட்ட பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்களும், …

>>

அணியறை/ஷண்முக சுப்பையா

அணியறையில் ஒருங்கிவிட்டால்அரங்கில் வந்தே தீரவேண்டும்;அரங்கில் வந்து விட்டால்ஆடியே தீரவேண்டும்ஆட்டம் நன்றாய் அமைந்து விட்டால்அணியறையில் நடந்ததென்னஎன்றுயார்தான் கவலைப்பட வேண்டும்.

>>

வணக்கம் அன்பர்களே../எஸ்.எல்.நாணு

வணக்கம் அன்பர்களே.. காசி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது.. கோவில்.. கங்கை.. பித்ரு கார்யம்.. பனாரஸ் ஹிந்து பல்கலைகழகம்.. மீசைக் கவி சுப்ரமணியபாரதி.. சமீபத்தில் காசி விஜயத்தின் போது சுப்ரமணிய பாரதி காசியில் வாழ்ந்த வீட்டை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.. (”காசிக்கு …

>>

நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?/அழகியசிங்கர்

எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்கள் . பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார். கூடவே தபால் தலைகளையும் …

>>

நாடகத்திற்கான குறிப்புகள்/ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஆசிரியர்; எம். டி. முத்துக்குமாரசாமி நூல்: மைத்ரேயி மற்றும் பல கதைகள். கதை அறிமுகம்: அலெக்ஸ் எனும் நண்பனுக்கு எழுதும் கடிதமாகத் துவங்குகிறது. திரைகள் எனும் நாடகத்தை இயக்குவதற்கு சம்மதித்ததற்கு நன்றி சொல்கிறார் கதாசிரியர். இரண்டு வாரங்களாக நடந்து வரும் நாடக …

>>

மதுராந்தகத்திலிருந்து…/கால சுப்ரமணியம்

மதுராந்தகத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமப்புற பண்ணைவீட்டில் நான்கு நாட்களாக தங்கல். விரும்பும் தனிமைச் சிறை. பிரமாதமான கிராமச் சமையல். கதையில்

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு எழுதிய இரண்டு என்பாக்கள்

என்பா 1 மரபுவழி இலக்கண வெண்பா இருக்க,மரபைச் சிதைக்கின்ற என்பா எதற்கு?சிறகை முறித்துவிட்டு பறக்க இயலுமா?செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு! என்பா 2 வேட்டியைத் தலையிலும் துண்டை இடுப்பிலும்மாற்றிக் கட்டும் புதுமை எளிதுதான்!மடமை என்றிதை உலகம் பழிக்கும்!செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு.

>>

டாக்டர் கொடுத்த டைரி/அழகியசிங்கர்

துளி – 174 வெள்ளிக்கிழமை அன்று டாக்டர் ஜெ.பாஸ்கரன் எனக்கு ஒரு டைரி கொடுத்தார். அந்த டைரியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. அதில் எதாவது எழுதி அதன் புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டாமென்று தோன்றுகிறது. நான் பல ஆண்டுகளாக டைரி …

>>

என் கதைப்புத்தகமும் சுஜாதாவும்/அழகியசிங்கர்

27.02.2021 துளி – 173 சுஜாதாவிடம் ஒரு நல்ல குணம் உண்டு. கவிதையைப் படித்தாலும் சரி, சிறுகதையைப் படித்தாலும் சரி ஒரு வரி எழுதி விடுவார். மனதார வாழ்த்துவார். ‘406 சதுர அடிகள்’ என்ற என் சிறுகதைத் தொகுப்பை சுஜாதாவிடம் கொடுத்தேன். …

>>

குமுதா ஸ்ரீநிவாசனின் துணை/மீனாட்சி

– . நூல்; மூன்று முகங்கள். கதைச்சுருக்கம்:   ஜானகியும் வெங்கட்ராமனும் தனியாக வாழும் முதியவர்கள். தினமும் நடைப்பயிற்சி செய்பவர்கள். அறிமுகமாகிறார்கள் பார்க்கில். நல்ல நட்பு வளர்கிறது.  ஒருநாள் வெங்கடராமன் நடைப்பயிற்சிக்கு வரத் தாமதமாகிறது. அதற்கான காரணத்தை ஜானகி வினவுதலாக கதை துவங்குகிறது,  …

>>

இலக்கிய இன்பம் 70/கோவை எழிலன்

எள்ளுக்குள் எண்ணெய் தனிப்பாடல் திரட்டில் கிடைக்கும் ஓர் அம்மானைப் பாடல் மயிலாடுதுறை வாழும் வள்ளலார் கோயிலைப் பற்றியது. முதல் பெண் : எள்ளுக்குள் எண்ணெய் போல் எவ்வுயிரிலும் இருக்கும் சிவபெருமானின் முடியில் ஒரு வாழும் பாம்பு உள்ளது என்கிறாள். இரண்டாம் பெண் …

>>

திமிரி சிறுகதைத் தொகுப்பு/
நெய்வேலி பாரதிக்குமார்

எழுத்தாளர் ஐ..கிருத்திகா அவர்களுடைய ‘திமிரி’ சிறுகதை நூலை வாசிக்க வேண்டும் என்று கேட்டபொழுது பெருமழையையும் பொருட்படுத்தாமல்

>>

டொரண்டோவில் ஒரு இலக்கியச் சுரங்கம்!/ஜெ.பாஸ்கரன்

முகநூல் எனக்குப் பல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது – பல்வேறு துறைகளில் விற்பன்னர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் என ஒரு அரிய சத்சங்கம் அது! ஆர்பாட்டமில்லாமல், மிகச் சிறந்த இலக்கியப் பணியாற்றிவரும் பேராசிரியர் சு.பசுபதி அவர்களை முகநூல் மூலமாகவும், குவிகம் இலக்கிய வாசல் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ இரண்டு சிறிய கவிதைகள்

கவிதை ஒன்று அனுபவ விளைச்சலில் அறுவடை ஆகுகிறதுபெரும்பான்மை பதர்களுக்கு நடுவேசிறிதளவு நெல்லும்… கவிதை இரண்டு உதிர்ந்த சருகுகளின்நொறுங்கல் ஓசையில்மறைந்து உள்ளதுகிளைகளின் உரசல்! அன்புச்செல்வி சுப்புராஜூ

>>

கானக்குயில் வாணிஜெயராம் – இரங்கல் என்பா – 10/ஹரணி

என்பா (1)கலைவாணி என்பது இயற்பெயராம் கானத்தில்தலைவாணி சுரங்களின் எழில் வாணிஉலகில் யாவருக்கும் காற்றே உயிர்மூச்சாம்வாணிக்கு இசையே மூச்சு. என்பா (2) என்பா (3) என்பா (4) என்பா (5) என்பா (6) என்பா (7) என்பா (8) என்பா (9) என்பா …

>>

எங்கும் கேட்கும் இசையின் இரங்கல்../தஞ்சாவூர் ஹரணி

இசையெனும் பேரண்டப் பறவையின்இறகொன்று பிரிந்துவிட்டது இசையெனும் பேரண்ட மரத்தின்இலையொன்று உதிர்ந்துவிட்டது இசையெனும் பேரண்டக் கருவியின்இழையொன்று இற்று விட்டது இசையெனும் பேரண்டப் பாடலின்சுரமொன்று தொலைந்து விட்டது. இசையெனும் பேரண்ட நதியின்துளியொன்று உலர்ந்து விட்டது இசையெனும் பேரண்ட மலரின்மணமொன்று மறைந்து விட்டது. இசையெனும் பேரண்ட …

>>

இனிக்கும் தமிழ்- 172/டி வி ராதாகிருஷ்ணன்

அறிவானும் அறிவிப்பானும் அறிவதும், அறியப் படுவதும் , அறிகின்ற அறிவும் எல்லாம் தானே என்கிறார்காரைக்கால் அம்மையார். பாடல் அறிவானுந் தானே அறிவிப்பான் தானேஅறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்றமெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்அப்பொருளுந் தானே அவன். பொருள் அறிவானுந் தானே – …

>>

சென்னை புத்தகக் கண்காட்சி 2023/ஜெய மோகன்

இந்த சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பலவகையிலும் எனக்கு முக்கியமானது. என் நூல்களுக்கான தனி புத்தகக்கடை இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இருந்தது. முன்பு என் நூல்களுக்காக புத்தகக் கடைகளில் தேடி கண்டடைய முடியாமல் தடுமாறியதாக என் வாசகர்கள் ஒவ்வொரு …

>>

பனி நதி/லியு சோங்யுவான்

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் ஓராயிரம் குன்றுகள், ஆனால் யாதொரு பறவையும் வட்டமிடவில்லை;பத்தாயிரம் பாதைகள் , எவரொருவரின் காலடித்தடமும் கிடையாது;தனித்து மிதக்கும் படகிலிருந்தபடிவைக்கோல் தொப்பியணிந்த கிழவர்ஏகாந்தமாய் தூண்டிலிடுகிறார்குளிர் பனி நதியில்.

>>

அசை போடுகிற…/ க.நா.சு.

அசை போடுகிற இந்த மாடு என்னிடம்எதையோ சொல்ல விரும்புவது போல எனக்குத்தோன்றுகிறது. கேட்காத குரல்கள்எல்லாம் என்னோடு ஏதேதோ பேசுகின்றன.போகாத ஊர்களுக்கெல்லாம் வழிகள்எனக்குத் தெரியும். படிக்காத புஸ்தகங்களைஎல்லாம் பற்றி நான் நிறையவே பேசுவேன்படாத அனுபவங்களும் நெருப்பாக எரிகின்றனகையில் அகப்படாத ஒன்றைப் பிடிக்க முயலுகிறேன்.காதுகளில் …

>>

அந்நியர்கள் /ஆர். சூடாமணி

“ஹலோ ஸவி, என்ன ப்ளெசண்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷனுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே” r-sudamaniஎன்று முகமலர்ச்சியுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.

>>

ஒருவர் உளரேல்                         -எஸ்ஸார்சி

அவன் ஏறிவரும்  ரதத்திற்கும் இந்த பூஜைக்கும்  யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது ருத்ர சிவனுடைய அம்சங்களில் ஒன்றைக்குறிப்பது. அந்த

>>

சென்னை புத்தகக் காட்சி 2023/அழகியசிங்கர்

துளி 262 சென்னை புத்தகக் காட்சி 2023 முன்னிட்டு நான் ஏழுப் புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்.எல்லாப் புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளன. ஸ்டால் எண்கள் 395, 396ற்கு வந்திருந்து புத்தகங்களை வாங்க வரவும்.ஏழு புத்தகங்களில் என் புத்தகங்கள் மட்டும் 5. மற்ற எழுத்தாளர்கள் …

>>

கம்மாய்க் கரை /நாகேந்திர பாரதி

‘கம்மாய் உடையப் போகுது, கரையை ஏத்திக் கட்ட வீட்டுக்கு ஒரு ஆள் வாங்க’ என்று தண்டோரா சத்தம் கேட்டது. எதிர்பார்த்ததுதான். ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்யும் மழை. வீட்டுக் கல்லுத் தட்டோடே கசிஞ்சு அங்கங்கே ஒழுக ஆரம்பித்து விட்டது. அதைப் பிடிக்க …

>>

அன்புள்ள ஜெ/ஜெயலட்சுமி சங்கர்

பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு அனுபவம். என் இடதுகையும் காலும் விளங்காமல் போயிவிட்டது. அப்போது அனுராதா ரமணன் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அந்த மாதிரி ஒரு நோய்க்கு ஆளானதைப்பற்றிச் சொன்னார். அவர் தன் காலுடன் அன்பாக நெருக்கமாகப் பேசிப்பேசி …

>>

டாக்டர் ருத்ரன்/ராகி.ரங்கராஜன்/முக நூலில் : ஆர்.கந்தசாமி

‘காதல் கல்யாணங்கள் பல சமயங்களில் தோல்வியாக முடிகின்றனவே, ஏன்?’ என்று புகழ்பெற்ற மனஇயல் நிபுணரான டாக்டர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டேன்.‘இரண்டு காரணங்கள்தான். பணம், ஜாதி’ என்றார் சுருக்கமாக. ‘பணம் என்பது புரிகிறது. பட்டண வாழ்கையில் இவனுடைய சம்பளம், அவளுடைய சம்பளம், இவனுடைய நட்புக்கள், …

>>

நள்ளென் யாமம்/க.மோகனரங்கன்

தலைகொள்ளாதுதறிகெடச் சுழலும்எண்ணங்களின் வேகத்தைமட்டுறுத்தும் பித்தான்இங்கெங்கோதான்இருக்கிறது ,இருளில்கைக்குத் தட்டுப்படவில்லை .இருப்பு கொள்ளாமல்படபடக்கும் நினைவின்பழைய பக்கங்கள்பறந்து கிழிந்துவிடாதிருக்க ,கனக்கும்கண்ணீரின் துளியொன்றைஎடுத்து வைக்கிறேன்எடைக் கல்லென .

>>

ஒரு நிமிடம் 3/அழகியசிங்கர்

காலையில்பெங்களூர் குளிர்ரம்மியமாக இருந்தது உயர உயரக் கட்டிடங்கள்கம்பீரமாக வீற்றிருக்கஉலகமே பெட்டிகளின்இருப்பிடமாகமாறி விட்டது 12வது மாடியில்ஒரு பெட்டியில்எல்லோரும் கூடியிருக்க பேசிக் கொண்டிருந்தோம்பேசிக்கொண்டிருந்தோம் இன்றுஎன்ன செய்யப் போகிறாய் என்றகேள்வி என் முன்சுழன்றவண்ணம்…

>>

ஒரு நிமிடம் 2/அழகியசிங்கர்

கண்ணைமூடிக்கொண்டிருந்தேன்மூடிக்கொண்டிருந்தேன்மூடிக்கொண்டிருந்தேன் பின்கண்ணைத்திறந்து கொண்டிருந்தேன்திறந்துகொண்டிருந்தேன்திறந்துகொண்டிருந்தேன் ஆனால்உலகம் என்னவோபுரியவில்லை

>>

விருட்சம் நடத்தும் கதைகள் நிகழ்ச்சி

நாளை (11.11.2022) – வெள்ளிக்கிழமை மாலை 6.30 விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிகழ்ச்சி எண் – 44 சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்சிறு கதைகளைக் குறித்து எழுத்தாளர் ஆனந்த் ராகவ் சிறு கதைகளைக் குறித்து. அனைவரும் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ கவிதை

தலைச்சன் பெண் குழந்தைதாளாத பெருமை அப்பாவுக்கு…மகளின் அதிகாரத்தில்பொங்கிச் சிரிப்பார் மை வரைந்து, பொட்டிட்டுமுழம் பூ சூட்டிமுக்கனிச் சாறெனக் கொஞ்சிமுத்தமிடும் அம்மா வீட்டின் இளவரசிக்குப்பெயர் சூட்டு விழாஊர் கூடி வாழ்த்திடகூடை நாற்காலி சிம்மாசனத்தில்பாந்தமாய் அமர வைத்துஆரவாரமாய் எடுக்கப்பட்ட புகைப்படம் அத்தைக்கு ஒன்று, ஆச்சிக்கு …

>>

செ.புனிதஜோதி கவிதை

நேற்றுப் பார்த்தமனிதர்களைஇன்று பார்கின்றேன்நேற்றையப் போலில்லைஆனாலும்நேற்றையப் பக்கங்களைத்தான்புரட்டிப் பார்கின்றனஎன் மனக்கண்கள்

>>

வெண்ணிற சால்வை வந்த கதை/ஜெயதேவன்

வேணுகோபால் சர்மாதான் வள்ளுவர் படத்தை வரைந்தவர்.40 ஆண்டுகள் வள்ளுவத்தை ஆய்ந்து ஆய்ந்து அதிலிருந்து உருவான படமே இது….படம் வரைந்த ஆண்டு 1960 ….தமிழக சட்டமன்றத்தில் இந்தப் படம் திறக்கப்பட்டது 1964. பக்தவத்சலம் அவர்கள் ஆட்சி. இதற்கு முன்பே 1960 லியே மத்திய …

>>

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன்/சுரேஷ் கண்ணன்

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் தூங்குவது போல் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘ஹெஹெ..’ என்று சிரிப்பொலிகள் சில நாட்களுக்கு முன்பு எழுந்ததை உள்ளூற ஒரு புன்னகையுடன் கவனித்துக் கொண்டேன்.பேச்சாளரை மனம் குவித்து கவனிப்பதற்கு கூட சிலர் கண்களை மூடிக் கொள்வதுண்டு. …

>>

அழகிய கிராமம் முழுவதும் பைத்தியக்காரத்தனம்/ராஜேஷ்குமார்

அழகிய கிராமம் முழுவதும் பைத்தியக்காரர்கள்: எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவிழ்த்த மர்மம் புத்தக வெளியீட்டில் பங்ககேற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார், தனது வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது கேள்வி கேட்ட வாசகர்கள் பொரும்பாலும், ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்டனர். அந்த கேள்வி, …

>>

அது தீபாவளி, இது தீபாவலி / எழுத்தாளர் ராஜேஷ்குமார்

1960களில் தீபாவளி மறக்கமுடியாதது. அப்போது எனக்கு 14 வயது இருக்கும். எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பத்தை விட சாதாரண குடும்பம். அப்பா

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 158/அழகியசிங்கர்

மீசைகள் பலவிதம் டி.வி.ராதாகிருஷ்ணன் பரங்கியனுக்கு அடிபணியாவீரபாண்டியன் மீசைகப்பலோட்டிய தமிழனின்தொங்கு மீசைமீசையிலும் வெள்ளையனைஅணுகவிடா பாரதி மீசைஅவரது தாசனின்அடர்த்தி மீசைபகுத்தறிவுப் பகலவன்பெரியாரின் தாடி மீசைகர்மவீரன் காமராஜனின்களையான மீசைதிருத்தணி மீட்டம.பொ.சி.யின் முறுக்கு மீசைடி.கே.சி.யின் இலக்கிய மீசைகலைஞரின் தமிழ் மீசைப்கருமீசை தெரியாவைரமுத்துவின் மீசைவாலியின் தாகூர் மீசை தாடிதமிழனின் …

>>

91வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 91வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வெள்ளி அன்று – (21.10. 2022) – மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை …

>>

பேயோன் பேட்டி.

முக நூலில் : ஆர்.கந்தசாமி கே: ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்? பேயோன்: சட்டைப்பையில் பேனா இல்லாமல் நான் வெளியே போவதில்லை. திடீரென யாராவது ‘வாசகர்’ – ரசிகர் – எதிரில் வந்து புத்தகத்திலோ துண்டுச் சீட்டிலோ ஆட்டோகிராப் …

>>

சினம்கொண்ட கடவுள்/ ஸ்டீபன் க்ரேன்

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் சினம் கொண்ட கடவுள்அப்பாவி மனிதனொருவனைஅடித்து உதைக்கிறார் ,இடிபோலும் குத்துகளால்வலுவாகத் தாக்குகிறார் .அவ்வோசை உலகெங்கும்உருண்டோட ,ஒடிவருகின்றனர் மக்களெல்லோரும் .வலி பொருத்திடாமல்அலறிய அம்மனிதன் ,தடுமாறிபடிகடவுளின் காலடியில்மடங்கி விழுகிறான் .“ஆ! எவ்வளவு இழிவான மனிதன்?”கூறிய கூட்டம் மேலும் கூவியது“ஆ! எவ்வளவு வலிமையான …

>>

மலையில் ஒரு விருந்து /லீ போ

தமிழில் : க. மோகனரங்கன் எமது ஆன்மாவைஅவற்றினுடைய நாட்பட்டபழைய துயரங்களினின்றும்கழுவிப் பிழியவெனநூறு ஜாடி மதுவைநாங்கள் காலி செய்தோம்.அது அற்புதமானதொரு இரவு…நிலவு பிரகாசமாக ஒளிரும்போதுபடுக்கைக்கு செல்ல எங்களுக்கு மனமில்லை,ஆயினும் கடைசியில் குடிமயக்கம் எம்மை ஆட்கொண்டது ;மலையில் வெட்டவெளியில்நாங்கள் சாய்ந்தோம்,பூமி தலையணையாக,விரிந்த வானமோஎமக்கு போர்வையாயிற்று.

>>