கூஃபி/க. நா. சு.

பிறந்தவுடன் அவனுக்கு ஷேக்ஸ்பியர் என்று
பெயர் வைத்து வில் என்று கூப்பிட்டேன்.
டாலி என்கிற அவன் தாய் மூத்தவனான
அவனைக் கவனியாமல் நோஞ்சானாக

>>

நீதிக்கிளி/க.நா.சு

என் நெஞ்சுக்குள் உட்கார்ந்து கொண்டு
நான் எதையும் செய்து முடித்தவுடன்
இது தப்பு, இது சரி. இது ஏன் தப்பு. இது
ஏன் சரி என்று ஒலிக்கும் அருவமாக

>>

தோழன்/ அனங்கன்

நானோபலர் மிதிக்கமிதிக்க
உழண்டுபோன சேறாய் அலைகிறேன்…
உன்னோடு பேசிக்கொண்டு
செல்கையில் பிறர் என்னை
பார்க்கும் பார்வையின்

>>

தடங்கள்/ இராஜா மணி

மனைவியின் நினைவா, மகனின் படிப்பா மகளின் திருமணமா அடுத்த வேளை உணவா வாழ்வின் மீது காதலா..எதோ ஒன்று உந்திந்தள்ள சுவடுகள் அற்ற பாதையில்அவர் மிதித்துச் சென்ற சைக்கிளின் தடங்கள் பாதையாகிபின்சாலையானது. ஆனாலும் பயணங்கள் எளிதாக இல்லை.

>>

எஸ்.சண்முகம் கவிதை

வெளிப்பக்கமுள்ள மாடிப்படியின் கீழுள்ள
குறுகலான இடத்தில் மரஸ்டூலில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து மூன்று நாட்களாகிவிட்டன
அவ்வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
தென்படவில்லை
அவர் அமர்ந்திருந்த ஸ்டூல் வாசலோரமாக வைக்கப்பட்டுள்ளது

வயோதிகரென எண்ணத் தகுந்தவரல்ல
மூக்கின் கீழ்வளைவில் பொருந்திய கண்ணாடி
கொஞ்சம் கீழ்வெட்டுப் பார்வை
தன்னைக் கடப்பவர்களுக்கெல்லாம்
ஒரு விஷமச் சிரிப்பு
அவர் எழுந்து நின்றதை பார்த்ததில்லை
ஆனால் யாரையும் மிரட்டாத வாளிப்பு

அந்த மாடியின் கீழுள்ள இடுக்கு
ஏழு அடி நீளமும் நான்கடி அகலம் இருக்கலாம்
அங்கு காலை பத்துமுதல் மாலை ஆறு மணிவரை
வாரத்தின் ஆறுநாளும் அமர்ந்திருப்பார்
எதையோ செய்து கொண்டிருந்தார்

அவரிருந்த மாடிப்படியின் இடப்பக்கம்
ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்பு பகுதியின்
முன்கதவு திறந்திருந்தது
தெருவிலிருந்து இரண்டு படிகள் ஏறிச்சென்று
ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தவரை
மாடியின் கீழிருந்தவர் இல்லையா என்றேன்
அவர் இடத்தை காலிசெய்துவிட்டார் என்றவர்
ஏன் அவரது புதிய முகவரி வேண்டுமா
உங்களுக்கு ஏதாவது தரவேண்டுமா எனக் கேட்டார்
ஒன்றுமில்லை என்றேன்

பலர் அவர் எங்கே எனக் கேட்கின்றனர்
நீங்கள் எதையாவது அவரிடம் தந்தீர்களா என்றதும்
அப்படியெல்லாம் இல்லை
சரி உங்கள் பெயர் பெயர் என்றவரிடம்
தயங்கியபடியே கண்சிமிட்டிவிட்டு விடைபெறுகையில்
அந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தவரின் பெயரைக் கேட்காமல் மீண்டேன் .

-எஸ்.சண்முகம் –
(எண்: 055)

>>

காதல் – நேற்று இன்று நாளை/ ஆர் வத்ஸலா

அன்று
ஏனடீ
அவன் பக்கமே பேசுகிறாயே
நீ என் தோழிதானா?
போர் வெற்றிகரமாக
முடிந்து
அவன் ஊர் திரும்பி
மூன்றாவது நாள்
இன்று
ஊருக்கு வந்த அன்று

>>

காதல்- நேற்று-இன்று-நாளை/ மதுவந்தி

காதலில் உயிர்த்தேன்.
நேற்று அப்பா.
இன்று நீ.
நாளை நம் மகன்.
இட்டு நிரப்பி வைக்கும்
கலங்கள் கூடியபடியே.
பொங்கிப் பிரவகிக்கிறது
காதல்த் தேனமுது.

>>

நகைமுரண்/வவேசு

வெயிலின் சாட்டையடி
முதுகில் பட்டாலும்
நன்றியெதையும் கேளாமல்
வெட்டப்படுவோம் என உணர்ந்தாலும்
நிழலைக் கீழே இறைத்துவிட்டுப்

>>

மழையாகப் பட்டவள் /எஸ் வி வேணுகோபாலன்

பின்னும் பெருமழைக்கான தோரணையில்
இடியும் மின்னலும்
சடசடவெனத் தூறலும் சிதற
வேக வேகமாகப் போய்
வாசல் கொடியில் இருந்து
சுருட்டி எடுத்து வந்து

>>

ஜனனத்தின் பின்னம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

அடைகிறது என இந்திய இறையியல் தத்துவங்கள் பேசுகின்றன. இந்தத் தத்துவங்கள் நம்பிக்கைகளாகவும் தினசரி புழக்கத்திலுள்ள பேச்சு வழக்கங்களாகவும் பல பரிமாணங்கள்

>>