மதுவந்தி/யானை

காடு விட்டுநதி துறந்துதூய வளிஇழந்துவிரி வானம்இன்றிசுவர்கள் சூழ்ந்துசங்கிலி பிணைத்துநிற்க நேர்ந்தசோகம் விழிகளில்நிரந்தரமாய்…. ( பூபாளம் கீதம் 34 டிசம்பர்24) (மீள் பதிவு.)

>>

நாகேந்திர பாரதி/தலைமுறைகள்

வாழ்க்கையைஅதன் போக்கில் வாழ்ந்து விட்டுபோய்ச் சேர்ந்ததுஒரு தலைமுறை தன் போக்கில் வரவழைக்கமுயற்சி செய்ததுஒரு தலைமுறை யார் போக்கிலோ விட்டு விட்டுகுழம்பி நிற்கிறதுஒரு தலைமுறை

>>

குமரித்துறைவன்/விமர்சனம்-விமர்சகன்

வேலைக்காரியைக் குறைசொல்லிமாமியார் அவல் இடிக்கஉமி ஊதி ருசி பார்த்துருசி பார்க்க உமி ஊதிஎஞ்சியதுஉரலும் உலக்கையுமே (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

>>

செ.புனிதஜோதி

பெயர்தெரியாத ஒருத்திஅவள் தலையில்செவ்வரளி சூடிச்செல்கிறாள் அவளுக்குப் பிடித்த அம்மனும்எனக்கு பிடித்த அம்மனும்செவ்வரளிக்குள்சேர்ந்து பயணிக்கின்றனர் இப்போதுஎன் கண்களுக்குள்அம்மனைச் சுமக்கும்பொன்னூஞ்சலாய்.ஆடிக்கொண்டிருக்கிறதுஅந்தச் செவ்வரளி

>>

முனைவர் ந.பாஸ்கரன் /உலகளக்கும் மர அவதாரம்

மேலுலகை அளந்தபெருமை பேருடலின்ஊடுருவும் ஆணிவேர்ப் பாதம்கீழுலகைநோக்கி … தளிர்களை உச்சந்தலையாகஅரும்பும் பூவரும்புகளைக் கண்களாகப்பரிணமித்து பரிணமித்துவானோக்கி ஓங்கி உயரும்நுனிவேரே. கரங்களாய் விரல்களாய்கிளைகளை விரித்து விரித்துஅண்டத்தை அணைத்துச்செல்லும் வேரின்வினோதங்களே. வளரும் பூரிப்பில்உடம்பின் சிலிர்ப்புகளால்எங்கெங்கு நோக்கினும்பொங்கி கிசுகிசுக்கும் பூக்கள்ஆணிவேரின் பேச்சுக்கள். ஆணிவேர் நீரிலும்அழகிய ப்பூக்கள் தேனிலும்ததும்பி …

>>

காசியபன் கவிதை

அப்பொழுதுஎன்னுடன் நீவரவில்லை அல்லவா?அப்பெர்ழுதுஇவ்விடமே இருந்து கொள்காலம் கழுவியவழுக்குப் படிகள் மேல்கரு நாய் நினைவு ஊளையிடவான் நுழைந்த குடிசையில்தூண்கள் நிற்கும்மணல் வெளிக் காற்றுகுதிரையை ஓட்டும்அலைகள் படம் விரித்துஓவென்று இரைந்துநடமா யெழுந்துதண்டனிடும்சிதையின் புகைச் சுருள்கள்தேடி என்னை தெரிவித்துக் கொள்ளும்காலன் இறந்திடுவான்கழியும்நீண்ட வழியும் பலங்களும்துணையுண்டுசெல்கின்றேன் (நாற்றங்கால் …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/அம்மா கூலி

பொள பொளன்னு பொழுது விடிஞ்ச பொழுதுல . உளுத்தஞ்செடி புடுங்க மேற்கு வயலுல எறங்கிபுடுங்குன செடிகளப்பத்துக்கூறாப்பிரிச்சுவச்சுக் காத்திருப்பா. காவக்காரசின்னமுத்துதன்ஒசர கம்பாலஒவ்வொருக் கூறையும்ஓங்கி ஓங்கி அடிச்சுகூறுஒசரம் சோதிச்சுஅதிலிருந்து ஒதுக்கித்தள்ளியஒத்தக்கூறக்கூலியக்கட்டாக்கட்டிவீட்டுக்குத் தூக்கிவரநடுப்பகலாயிடும் . டீத் தண்ணி மட்டும் குடிச்சிட்டுஉளுந்து புடுங்கபோன அம்மாவீட்டுக்கு வந்து காலநீட்டிப் …

>>

வளவ, துரையன்/அதுவே போதும்

என் தோழனே! நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை. என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை. நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு. உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு. அதுவே போதும்

>>

தேனம்மைலெக்ஷ்மணன்/நிழல்

சாலை விளக்குகள்மஞ்சள் மழை பொழிகின்றன.,நண்பர்களைக் கடப்பதுபோல்நனையாமல் கடக்கிறான் அவன்.,என்னையும் இழுத்து. இருட்டு மரங்களைஅலுவலக வேலைகளைப்போலஅங்குலம் அங்குலமாகக்கடக்கிறான்.,அவனுள் புதையுண்டுநானும் கடக்கிறேன். உச்சியில் முத்தமிட்டுநிலவு தழுவுகிறது அவனைநெகிழ்ந்த காதலியைப் போல்.பின்தொடரும் என்னைத் தழுவாததால்கோரைப்பல்லும் கொம்பும்முளைக்கிறது எனக்கு

>>

விஞ்ஞானி/டீத்தண்ணி

இந்த குளிருக்கு சூடாடீத்தண்ணி குடிச்சாஎன்று இழுத்த குரலுக்குஉடனே எழுந்து ஓடி போய்அடுப்பை பற்ற வைத்தாள் கன மழையை தன்னால்முடிந்தவரை தாங்கிக் கொண்டிருந்தது குடிசை பழகி போனதால் குடும்பம்பாதுகாப்பான இடம் செல்லதயாராகவே இருந்தது. அடுப்பில்கொதிக்கும் தண்ணீரில்டீத்தூளை போட்டுவிட்டுகட்டி வைத்த மூட்டையில்சர்க்கரையை தேடும் போது …

>>

நாகேந்திர பாரதி/புகைப்படம்

வீட்டுக்கு வெள்ளையடிக்கக்கழற்றியதும் தெரிந்தது மாலையோடு மாட்டியிருந்தபுகைப்படத்தில் தூசி சிந்திய கண்ணீரைச்சேர்த்துத் துடைக்கையிலே தண்ணீர் தேவையில்லைதுண்டை ஈரமாக்க தூசி தொலைந்ததுசிரித்தபடி அப்பா

>>

க.சோமசுந்தரி கவிதை

மார்கழி திங்கள்வைகறைப் பொழுதில்துளசி மாடத்துஅகல் விளக்கின்சுடரொளியில்…கண்ணனின்குழலோசையைஎதிர்பார்த்து …முற்றத்து கோலத்தின்நடுவில் …மஞ்சள் பூசணி பூவாய்….பூத்திருக்கிறதுகாத்திருக்கும்ஆண்டாளின் மனது!

>>

ரவி அல்லது/வீடு பேறடையாதவீழ்தல்

கனியாகும்கனவோடுகரிசனத்துடன்காவந்து செய்தாலும்பூக்கள் தான்தீர்மானிக்கிறதுமறுமலர்ச்சியெனும்மாற்றுப் பாதையைவீழ்தலிலும்சுகமுண்டெனபறத்தலைப் பற்றியஅக்கரையற்று.*

>>

விஞ்ஞானி/தாயாவோம்

ஒரு மலர் மறு மலரைபார்த்து கேட்டது நீயும்ஏன் விழுந்தாய் என்று. உன்னை போலதான்காய்ப்புக்கு உதவாதெனஉதிர்க்க பட்டேன் என்றதுமறு மலர் கவலை படாதேமீண்டும்உரமாகிமரம் ஏறிமொட்டாகிபூவாகிகாயாகிகனியாகிவிதையாகிஇதை போலொரு மரத்துக்குதாயாகிமகிழ்ந்திடுவோம்என்றது முதல் மலர்

>>

புஷ்பா விஸ்வநாதன் கவிதை

குதிரையில் வருவான் ராஜகுமாரன்எனைக் கொத்திக்கொண்டு போகவெனகனவு காணும் பெண்ணே!விண்மீன்களும் பிறைநிலவும்கனவில்தான் கண் சிமிட்டும் நிஜத்திலோஉனைக் கொண்டுபோகநீளுகிறது பார் ஒரு பாம்புக்கரம்உனைக் குத்திக் கிழிக்கும்கூர் நகங்களோடே.உன் வாழ்க்கையோமுட்கள் நிறைந்த பாதைதான் உறங்கியது போதும்விழித்தெழு.துணிந்து நில்போராடுவாழ்வை வாழ்ந்து காட்டு.

>>

ஞானக்கூத்தன்/தமிழை எங்கே நிறுத்தலாம்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டு போய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். …

>>

காசியபன் கவிதை

குடும்ப வேலிக்குள்யாகப் பசு பரிதவிக்கும்வாழ்க்கை அழிகளுக்குள்பண்டெலாம் அலறும் சிங்கம்இன்று தலையைச் சொறிந்து நிற்கும்சிறகடித்து சிட்டுக் குருவிவானத்தில் மிதக்ககுயிலின் சுருதியில்வானம்பாடி ஆகிரி இசைக்கும்மஞ்சை மூங்கில்கள்தலை விரித்து ஆடபச்சிலைகள் உதிர்க்கும்கண்ணீர்த் துளிகள் (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு …

>>

வளவ.துரையன்/சுரப்பு

ஒட்டக்கறந்த பிறகுகட்ட இடமில்லாததால்விரட்டிவிடப்பட்டவள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்போய்த் தேடுகிறாள்நேற்று மிஞ்சிய சோறும்அழுகிய காய் பழங்களும்இன்றும் கிடைக்குமா ஐந்து மணிக்குள்ளாக அவசரமாகத்தின்றுவிட்டுஅசை போட வேண்டும். அப்புறம் வந்திடுவார் மாலைகறக்க ஓட்டிச் செல்ல சுவரொட்டியின் ரசாயனம்சுள்ளெனக்குத்தினாலும்பாழ்பசியில் தெரியாது. பாலையே குடித்தறியாபசும்புல்லும் கடிக்க முடியாபரிதாபக் கன்றதனின்கண்ணீர் …

>>

வளவ. துரையன்/அறிதல்

அந்த முச்சந்திக்குவேறு வேலையில்லை.எல்லாரையும்முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததைஎடுத்து வருவார்களா எனஎல்லாக்கால்களையும்பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடைபோணியாகி விற்றுவிடாதாஎன்றேங்கும்பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியைஇழுக்க முடியாமல்அடிகள் வாங்கிஇழுக்கும் காளையை அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டுஅடம்பிடிக்கும்அறியாச்சிறுவனை அனைத்தையும்பார்த்துப் பார்த்துஅதுவும் வாழ்வினைக்கற்றுக் கொள்கிறது.

>>

எல்.ரகோத்தமன்/ இதுவும் ஒரு கூத்து

 அவள்நீங்கள் எங்கே போகிறீர்கள்என்று கேட்டாள்! என் வயதுஇருபத்தெட்டு என்றேன்! அவன்நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்என்று கேட்டான்! அவள்நாளை ஊருக்குப்போவதாகச் சொன்னாள்! அவன்அந்த பூங்காவில்சந்நிக்கலாமா என்றான்! அவள்தன் தந்தை வெளீயூர்சென்றிருப்பதாகச் சொன்னாள்! அவன்எனக்கு ரஜினி படம்மிகவும் பிடிக்கும் என்றான்! அவள்எனக்கு ஊர் சுற்றுவதில்அலாதி ஆசை என்றாள்! அவன்நான் முதல் வகுப்பில்தேர்ச்சி பெற்றவன் என்றான்! அவனும் அவளும்இப்படி சொதப்பலாகவேகாதலித்த …

>>

அதிரன்/டிசம்பர் 12

அலுவலகம் விட்டுவீடு திரும்பியதும்ஒரு பிரளயம் நடக்கும்என்று எதிர்பார்த்தான்ஆனால் அமைதிபேரமைதி துவைப்பதற்காககாலையில்எடுத்துப் போட்டசட்டையும்பேண்ட்டும் துவைத்துஇஸ்திரி செய்துசோபாவின் மேல் அமர்ந்திருந்தின அவன் கண்கள்அவற்றைப் பார்ப்பதைஅவளும் கவனிக்கிறாள் ஏன் ஒரு மாதிரியாய்இருக்கிறாய் என்றுவினவுகிறாள்….. பதில் எதுவும் சொல்லாமல்தன் அறைக்கு சென்றான். அங்கு மேசையின் மேல்அவன் மறந்து …

>>

விஞ்ஞானி/சிறப்பு விருந்தினர்

அந்த காக்கா தினமும்சன்னலின் வழியேகுரல் கொடுக்கும். வைக்கும் உணவைதின்று விட்டு செல்லும் அன்று அது வரவில்லைவராது என்பது தெரியும்அது அன்றைய தினத்தின்சிறப்பு விருந்தினர் பல வீட்டு மாடிகளில்மனிதர்கள் கா கா என்றுகத்திக்கொண்டிருந்தனர்.

>>

நாகேந்திர பாரதி/நம்பிக்கை

கோயில் கிடையாதுகோபுரம் கிடையாது உண்டியல் கிடையாதுஊரும் கிடையாது ஒதுக்குப் புறத்திலேஒத்தை வேப்பமரம் குத்திவச்ச வேல் கம்புகுதிரையிலே முனுசாமி கும்பிட்டுப் போனாலேகூடுறதாம் நெனைச்சதெல்லாம் பத்துத் தலைமுறையாய்ப்பத்து ஊரு சனத்திற்கும்

>>

கலாப்ரியா/பிற்பகல்

பாண்டி விளையாட்டின்முதல் உப்பை நான்கடவுளுக்குக் கொடுத்ததுகிடையாது முதல் பல் விழுந்த போதுசாணியில் பொதிந்துசொர்க்கம் நோக்கிஎறிந்தது கிடையாது ஒரே ஒரு தடவைதான்விட்டில் பூச்சிகளைப்பக்கத்துக் கொன்றாய்நூலில் கட்டிப் பரிதவிக்கவிட்டிருக்கிறேன் மருத மர நிழலில் மீட்டாதத ண்டவாளச் சோகங்களைஎனக்கேன் நிரந்தரித்தாய்சசி (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – …

>>

ஆர்.கந்தசாமி/அழகு

ஓடும் மேகங்கள் அழகுஆடும் அலைகள் அழகுவட்ட நிலவும் அழகுகொட்டும் மழையும் அழகு விண்ணில் மீன்கள் அழகுமண்ணில் மலர்கள் அழகுவான வில்லோ அழகுவானத்து மின்னல் அழகு மலைகள் என்றும் அழகுசிலைகள் கோயிலில் அழகுபச்சை வயல்கள் அழகுபச்சைக் கிளிகளும் அழகு அருவிகள் குதித்தல் அழகுகுருவிகள் …

>>

மா. காளிதாஸ்/மீச்சிறிய நம் தோட்டத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?

ஓய்வுநேரம் அல்லது விடுமுறை நாளில் காலார உலா வருவீர்களெனஅடர்நிழல் பரப்பிக் காத்திருக்கிறது தோட்டம். நீங்கள் வந்தால்போக்குக் காட்டுவதற்கெனவே சிறகசைக்காமல் இருக்கிறதுஅந்த வண்ணத்துப்பூச்சி. முழந்தாளிட்டு உங்கள் இணையிடம் தன்னை ஒப்புக் கொடுப்பீர்களெனஈரம் உலராமல் இதழ்கள் உதிர்க்காமல் எத்தனை நாளாய்த் தவமிருக்கிறது தெரியுமா அந்த …

>>

எஸ். சண்முகம் கவிதை

கண்சிமிட்டியவர் யாரென்று ஞாபகமில்லைஆனால் நிரம்பியிருக்கும் பேருந்தில்தான்பின்பக்கம் திரும்பி பயணச் சீட்டு எடுக்கையில்நான்கு வரிசைக்கு பின்னிருந்தவர்தான்அதைச் செய்திருக்கக் கூடும் அல்லது சாலையில் சென்றஇருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில்வீற்றிருந்தவர் ஹெல்மெட்டை சற்று விலக்கியயவராகஇருக்கலாம்நெடுநாள் என்னுடன் பின்னிருக்கையில்அமர்ந்திருந்தவரின் புருவங்கள் மின்னின வீட்டு உபயோக பொருளொன்றைவாங்கச் சென்ற பெரும் …

>>

வி.வி. கலைச்செல்வி/விட்டுவைத்தலும் கடனே

நேற்று வழக்கத்தை விடவும் காற்று அதிகம் .நிறையப் பொருட்கள்அதனதன் இடம் மாறி போய்விட்டது. இடம் மாறுதல்சில நேரம் சங்கடம்சில நேரம் சந்தோசம். ஏனித்தனை வேகம் காற்றே என்றேன்.? ஒன்றும் சொல்லாத காற்றுஒரு பறவையின் இறகுஒரு உதிர்ந்த இலைஒரு பழைய கவிதைப் புத்தகத்தின் …

>>

அதிரன்/சுவடுகள்

கடலை நோக்கிச்சென்றிருந்த சில கால் தடங்களைக்காண்கிறான்அதுஒரு ஆணின் அல்லதுபெண்ணினுடையதாகஇருக்கலாம்அதன் ஒழுங்கற்ற வடிவம்ஒரு அவசரத் தன்மையைவெளிப்படுத்தியது. சற்றுத் தொலைவில்கரையை நோக்கிச் சென்றிருந்தசில கால் தடங்களைக்காண்கிறான்அதன் ஆழமான பதிவுஒரு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. இன்று ஏனோ கடல்மிக அமைதியாகஅலை பாய்ந்து கொண்டிருந்தது கடலை வெகு நேரம் …

>>

விஞ்ஞானி/வானிலை அறிக்கை

: வானில் ஒரு வெண்மேகம்வேடிக்கை பார்க்க சூரியனோடு சேர்த்துபனித்துளியை பருகிபறந்ததொரு தேன்சிட்டு. மகரந்தத்தை சுமக்ககூலியாய் தேனைபெற்றுச்சென்றது வண்டு உச்சி மரக்கிளை அமர்ந்துஎண் திசையும் வான் நோக்கி பார்த்திருந்தது காக்கை மீண்டும் உணவை சுமந்தபடிதம் புற்றுக்கு சாரிசாரியாகதிரும்பி போயின எறும்புகள். தெருவில் அங்கும் …

>>

விஞ்ஞானி/ரௌடியிசம்

:. வற்றிய கிணற்றில்இறைக்க சொற்கள்இல்லை வரண்ட ஆற்றில்ஓட வரிகள்இல்லை முதிர்ந்த பறவைக்குபறக்க கற்பனைகள்இல்லை கலையும் மேகத்தில்பொழிய கவிதைகள்இல்லை பழைய பேனாவில்எழுத எழுத்துக்கள்இல்லை என்றாலும் நான்எழுதாது விடுவதாய்இல்லை ()

>>

நாகேந்திர பாரதி/நிழலும் நிஜமும்

நிழல்கள்சில சமயம்முன்னால் போகின்றனசில சமயம்பின்னால் வருகின்றனசில சமயம்பதுங்கிக் கொள்கின்றனநிஜங்களும் கூடஅப்படித்தானோஎல்லாம்நேரத்தைப் பொறுத்தது

>>

கல்யாண்ஜி/நடை

பிள்ளைநடக்கவே படிக்காமல் போச்சாநடை வண்டி இல்லாதவீட்டில் அம்மா விரல்முந்தானை மூட்டை ரத்தம்புரட்டி வைத்தகை நாட்டுச் சுவர்மரப் பெஞ்சு பீரோஉண்டு சுற்றிவரமுட்டியிலே தழும்பும்காலிருக்கும் பிள்ளை யெல்லாம்நடந்து தீரும்நடை வண்டிக்காகநடைகாத்திருக்கா (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : …

>>

ப.கங்கைகொண்டான்/நினைவுகள்

எனக்கான மனிதர்கள்ஒரு குடைக் கீழ்ஒளிந்து கொள்ளஓடிவந்த போதுஒதுக்கித் தள்ளினார்கள்பனி நீரை மழையாக்கிப்பயிர் வளர்த்தார்கள்முளைப் பாலிப் பயிர்களைமூழ்கடித்தார்கள்கண்ணில் நீர் பெருக்கிக்காலில் விழுந்தாலும்கானல் நீர்ப் பாசத்தைக்காட்டிச் சிரித்தார்கள்எல்லாமாயிருந்துஇல்லாத தாக்கி விடவேஎங்கேயும் தொடர்ந்தார்கள்எனக்கான மனிதர்கள் (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் …

>>

ம.சக்திவேலாயுதம்

ஒரு உரத்த வெயிலில்உடல்.. சூடு தாங்காமல்மர நிழலைதேடி நிற்கிறது.. ஒரு கனத்த மழையில்உடல்..குளிரில் நடுங்கிகட்டிட அடியில்ஒதுங்கி நிற்கிறது! இந்த இயற்கையைஎளிதாய் புரிந்து விட்ட உடம்புவெயிலையும் மழையையும்இயல்பாகவே பார்க்கிறது! இரண்டுக்குமேவானம் தான் பொறுப்பு..இரண்டையுமேஉடல்தான் ஏற்பு! அது ஏனோ தெரியவில்லை..இந்த மனசு மட்டும்..வெயிலோடு பேசுவதைப் …

>>

நட்பு இயல்!/ஆர்க்கே!

கைகூப்பி வணக்கம்சொல்லவில்லை.ஆரத்தழுவி அன்புபரிமாறவில்லைபொன்னாடை பூங்கொத்து கைகுலுக்கல்எதுவுமே இல்லை.இலைதனைத் துளிர்க்கவைத்துஅதையே என்முன் நீட்டிநட்பு தழைக்கஎன்னுடன் பேசியதுஒரு மரம் .

>>

ஷண்முக சுப்பையா/கேள்விகள்

திருடனைப் பிடித்துசிறையினில் அடைத்தால்குறைந்திடுமா திருட்டு? கொலைஞனைப் பிடித்துகழுவினில் ஏற்றினால்ஒழிந்திடுமா கொலை? விபசாரியைப் பிடித்துசீர்திருத்தினால்தீர்ந்திடுமா விபசாரம்?

>>

நவீன விருட்சம் 98வது இதழில் வெளி வந்த கவிதை ஜான்னவியின் காலக் கணக்கு

ஜான்னவி / காலக் கணக்கு ஒரு சொற்ப காலம்நாம் குழந்தைகளாய் இருந்தோம்ஒரு சொற்ப காலம்நாம் இளமையோடிருந்தோம்ஒரு சொற்ப காலம்நாம் மகிழ்ச்சியில் நினைத்தோம்.ஒரு சொற்ப காலம்நாம் நேசித்த செல்லப் பிராணிகள்நம்முடனிருந்து பின்காணாமற் போயினஅல்லதுமடிந்து போயின.சொற்ப காலமே ஆனதுநானறிந்தஅல்லதுமடிந்து போயினசொற்ப காலமே ஆனதுநானறிந்தஅல்லது அறிந்திருந்ததாக …

>>

ஐராவதம்/மே 5, 1974(முப்பது வயதின் துவக்கத்தில்)

நான் இன்னமும்நம்பிக்கை இழக்கவில்லைஆயின் நம்மைச் சுற்றிநச்சுப்புகை அதிகமாகி விட்டதுநம்முடைய குறிக்கோள்கள்சிதைந்து போவதை நாம் உணர்கிறோம்வெற்று நம்பிக்கை ஞானம் அல்லவெவ்வேறு வேஷங்களின் வெறுமைதுல்லியமாகவே புலனாகிறதுஉயர்ந்த மலையும், பரந்த கடலும்மனித ஜாதியின் நிலையாமையைசுட்டிக் காட்டுகின்றனஒரு மகா மனிதனின் வருகையைஎதிர் நோக்கி நிற்பவையும் அவையேஅந்த மகர் …

>>

ஆத்மாநாம்/இன்னும்

புறாக்கள் பறந்து போகும்கழுத்திலே வைரத்தோடுகிளிகள் விரட்டிச் செல்லும்காதலின் மோகத்தோடு காக்கைகள் கரைந்து செல்லும்தானியம் தேடிக்கொண்டுகுருவிகள் கிளுகிளுப் பூட்டும்கிளைகளில் தவழ்ந்து கொண்டு பாசிக்கரை படர்ந்ததாமரைக் குளத்து நீரில்நீளக்கால் மெல்ல அளையும்கரைநிழல் கீழமர்ந்து பழங்களைக் கடித்துத் தின்றஅணில்களும் அவ்வப்போதுகேள்வியைக் கேட்டாற்போலத்தலைகளைத் தூக்கிக் காட்டும் சிவனருள் …

>>

ஆத்மாநாம்/மறுபக்கம்

தரையில் நான்சுவற்றில் பல்லி தொங்கும் விளக்கால்ஆடும் நிழல்கள் மங்கும் ஒலிகள்மாலை இருளில் தொலைவில் கேட்கும்குழந்தையின் அழுகை அருகில் கேட்கும்குழாயின் ஒழுகல் அறைக்குள் காற்றில்வண்ணப் பூச்சிகள் குறுக்கே பறக்கும்வினாடிப் பிளவில் அணைக்கும் இருளில்சிரித்துக் கொண்டு வானில் மிதக்கும்கோலப் புள்ளிகள் இடப் பெயர்ச்சிசுழற்சியின் நடுவே …

>>

விஞ்ஞானி/கருணை

கையில் ஒரு சிற்றெரும்புஓடியதுகருணையுடன் விரட்டி விடநினைத்தேன்அதற்குள் கடித்துவிட்டது அடிக்காது தட்டி விட்டு விட்டுகடிவாய் கடுகடுக்க அதுஓடி மறைவதை பார்த்துக்கொண்டு இருந்தேன் என்ன என்ற நண்பனிடம்நடந்ததை சொன்னேன். அவன் பதிலுக்குஅது இந்நேரம் தனதுகுடியிருப்புக்கு போய்ஒரு ஆள் சிக்கியிருக்கான்நமக்கு சேதாரமில்லாமசேமிக்கலாம் வாங்கன்னுபடை திரட்டிக்கொண்டுஇருக்கும் என்றுசொல்லி …

>>

வைதேகி/யோசிப்பு

மஞ்சள் கொன்றை அதுவைத்த சீக்கிரத்தில் வளர்ந்து விட்டதுபூத்தலும் உதிர்தலுமே வேலையாகி விடமெத்தை விரித்தாற் போல் பூக்கள்அடி மறைத்துக் கிடக்கும்பார்வைக்கு ரம்யமாய்…கோலமிடச் செல்லும் போதுமிதந்து வந்துசில சமயம் விரல்சில சமயம் தோள்சில சமயம் முதுகு தொட்டுசிலிர்க்க வைக்கும்.விடியல் ஆசிர்வதிக்கப்பட்டதாய் தோன்றும்சில நாட்களாய் இனம் …

>>

மா. காளிதாஸ் ஒரு ஊதப்பட்ட பலூன்

கையில் ஒரு ஊதப்பட்ட பலூன்வண்ணங்கள் பற்றிய அக்கறைஒருபோதும் இல்லைஆனாலும் கறுப்பைத் தேடுகிறது. மிச்சமிருக்கும் பலூன்களையும்ஊதி மிதக்கவிட வேண்டும் காற்றில். எந்தவொரு கூர்நுனியும்சுள்ளென்ற ஒளியும் படாமல்மேலே மேலே பறத்தலைப் பார்த்தல்மிகப் பெரிய ஆசுவாசம்,பித்தநிலையும் கூட. கட்டவிழ்க்கப்படாமலேயேஊதப்பட்ட பலூன் சுருங்கிச் சுருங்கிமீண்டும் பழையநிலைக்குத் திரும்புதல்ஒரு …

>>

செ.புனிதஜோதி

அவ்வப்போதுதன்னிச்சையாய்வந்துவிடுகின்றனகவிதை போலும் வரிகள். ஏன் வந்தது?எதற்குச் சென்றது?என்பதுஏனோ புலப்படவில்லை. ஆனாலும் சிலமௌனம் பூசியதாகவும்…இன்னும் சிலசிக்கிமுக்கி கல்லைப் போன்றும். பூ பூத்தலைப்போன்றும்ஏதோவொன்றைநிகழ்த்திவிட்டுச்செல்கின்றன. நானோசுவரில் வரையும்சிறு குழந்தையின்பிஞ்சு விரலின்நெளிவு,சுளிவிற்கு ஏற்பதன்னை ஒப்படைத்தஓவியமாகிறேன்.

>>

வைதேகி/கவலை

பக்கத்து வீட்டு மதில் சுவரில்நினைத்துக் கொண்டாற்போல்கண்ணாடிச் சில்லுகள்முளைத்திருந்தனஎன் கவலையெல்லாம்அவ்வப்போது….எதையாவது தின்று விட்டுஒய்யாரமாய் வந்தமர்ந்துஅலகு தீட்டிக் கொண்டிருக்கும்தவிட்டுக்குருவி எங்கு செல்லும்?

>>

ஷண்முக சுப்பையா/அமரன்

எழுதுகோலை எடுத்தேன்ஏனோ அதுவாருகோலாய் மாறியது.செய்வதறியாதுஒரு கணம் திகைத்தேன்.மறுகணம்வருவது வரட்டு மென்றதனால்பழங்குப்பையைவாரி வாரி இறைத்தேன்.புதுக் குப்பையைக்கூட்டிக் குவித்தேன்.கண்டு நின்றஇலக்கியக் காவலர்கூட்டமொன்றுஓடோடி வந்தெனக்குபட்டாடை போர்த்திபரிசில் அளித்துஇலக்கிய மேதை உன் போல்உலகிலுண்டோ”என்றென்னைவாயார வாழ்த்திவானளாவப் புகழ்ந்து,அமரர் உலகில் புகுத்திஅதற்கு மேல்செய்யும் வகை அறியாதுதவித்தது.அமரன் நான்அவர்க் கென்னகைமாறு செய்யஎன்று …

>>

அழகியசிங்கர்/குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் இன்றுபிரேயர் வகுப்பில்நிற்கவில்லைஎன்று ஓடிவந்துவகுப்பில் பதுங்கி இருந்தஎன்னைஅடிக்க வந்தார்தலைமை ஆசிரியர் நான் அன்று கலந்துகொள்ளவில்லைதான் என்னை அடிக்கவேண்டுமென்றஅவர் வன்மத்தைநினைத்து வியந்தேன் கையில் பிரம்படியின்வலியைப் பொறுத்துக்கொண்டு..

>>

விஞ்ஞானி செல்லக்குட்டி

கண்மணி என் கண்மணிகண்மணி என் கண்மணி கண்ணில் காணும்மின்னல் உனதுபுன்னகை தானே கன்னம் தீண்டும்ஈர விரல்கள்பனித்துளி தானே மெல்ல தழுவும்தென்றல் உனதுதொடுதல்கள் தானே நான் கவலை மறந்துசிரிப்பதும் உன்அருகினில் தானே கண்மணி என் கண்மணி என்னிதயம் வருடும்கீதம் உனதுமழலைகள் தானே நான் …

>>

பி. ஆர். கிரிஜா/குழந்தைகள் தினம் !

தத்தித் தத்தி தவழ்ந்து வா !தாவித் தாவிஆடி வா !குண்டு கண்கள்சிமிட்டியேகுதூகலமாய்குதித்து வா !பொக்கை வாய்சிரிப்போடுஉலகை மயக்கஓடி வா !உன் கன்னக் குழியின் அழகினைகண்டு களிக்கஅசைந்து வா !குழந்தையும் தெய்வமும்ஒன்றெனவே உலகிற்குஉணர்த்த வா !உன்னுள் இருக்கும்குழந்தைமைஉயிர்ப்போடுஇருக்கட்டும் ! 14/11/2024

>>

ரவி அல்லது/சுயம் மறந்த சுழற்சி

தத்தித் தவழ்ந்துஎழுந்து நடப்பதாகத்தான்இருந்ததுபால்யத்தின்தொடக்கம்குழந்தைத்தனமாகயாவரையும்ஈர்த்து.இப்பொழுதும்தத்தித் தவழ்ந்து தான்எழுந்து நடக்க முடிகின்றது.அந்தக் கல்லமின்மையைகைவரப் பெறாதமுதிர்ந்த குழந்தையாகஇயலாமையின்இறுதியில்.யாவருக்கும்பாரமெனஅழுத்தி.* .

>>

ஆர்க்கே/ விழிச்சுடரழகி!

புருவ மத்தியில்என்னைநிற்க வைக்கிறாய். இமைகளின் மஞ்சத்துள்என்னைஇருக்கச் சொல்கிறாய். மூக்குத்திக் கதிர்வீச்சில்என்னைமூச்சுவிடச் சொல்கிறாய். விழியிரண்டின் கரையோரம்என்னைநடைபயிலச் சொல்கிறாய். மெல்லிதழ்களின் பெருஞ்சுழிப்பில்என்னைகவிதை குவிக்கச் சொல்கிறாய். அத்தனைக்கும் நீயே கதி.என்ஆயுளுக்கும்நீயே என் சகி. நேற்று இன்று நாளைஅன்று இன்று என்றென்றும்இப்பிறவிமுப்பிறவிஏழேழு ஜென்மமெனஎத்தனை எத்தனைபிறப்பெடுத்துநான்புறப்பாடானாலும்அத்தனைக்கும்எனக்காய்கிருஷ்ண துலாபாரஒற்றைத் துளசியாய்தோன்றிமகத்துவப் …

>>

ரா.ஸ்ரீனிவாஸன்/கணத் தோற்றம்

கணத் தோற்றத்தைக் கைப்பிடித்துநனவெனும் நூலிற் கோர்த்தெடுத்துமனனம் செய்து உருவேற்றுகிறேன் கனவாகி ஜனனமாகும் ஓருலகுநுரைத்து நுரைத்துஊதிப்பெருத்து உருவாகி உருவாகிவிரிவடைந்து வேறாகித் ததும்ப அங்கேபார்த்துக் கொண்டிருக்கிறேன்கணப்பொழுதுக் குமிழிகள்… கணத்துக்குள் கணமாகிநழுவும் கணத்தைக் கணக்கிடுகிறேன்அதுவென் வசப்படவில்லை தோன்றித் தோன்றி மறையும்இடைவெளிகளுக்கிடையேஅதனைக் கைப்பற்றுகிறேன்மறுகாட்சியாக்கி மீட்டுக் கொள்கிறேன் முதற்காட்சி …

>>

அழகியசிங்கர்/கடவுள் பக்தி

காலையில் எழுந்தவுடன்குளித்துவிட்டுவிபூதி இட்டுக்கொள்கிறேன் இட்டுக்கொள்ளவில்லைஎன்றால்மனைவி சாப்பாடு போட மாட்டாள் எனக்குக் கடவுள் பக்தியைஇப்படித்தான்புகட்டுகிறாள்.

>>

அழகியசிங்கர்/பேருந்து நிறுத்தம்

18 கே பேருந்து நிறுத்தத்தில்நின்று கொண்டிருந்தேன் பேருந்து இன்னும் வரவில்லை அங்கேநின்றிருந்த பெண்ணைப் பார்த்தேன் எங்கோ பார்த்திருக்கிறேன்என்று மனம் சொல்லியதுஅவளையேஉற்றுப் பார்த்தேன். அவள் திடீரென்றுஎன் பக்கத்தில்வந்து நின்று‘ஐ லவ் யூ’ என்றாள்.

>>

ஒளவையார் பாடல்கள்

பொன்மழை பெய்யுமாறு வருணனை வேண்டுதல் கருணையால் இந்தக் கடல்உலகம் காக்கும்வருணனே, மாமலையன் கோவல் – திருமணத்தில்முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்பொன்மாரி யாகப் பொழி. கடல் சூழ்ந்த இந்த உலகத்தைக் கருணையுடன் காக்கும் வருணனே!. மலையமான் திருமுடிக்காரியினது திருக்கோவலூரில் நடைபெறும் திருமணத்தின் போது, …

>>

மோகன் ஜி/தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்

தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்… ஐயர் ஹோட்டல் தேநீர்நாயர் ஸ்டால் காபிமயில் பாடின சங்கீதம்மாமியார் தந்த உற்சாகம்மலிவில் கிடைத்த பதார்த்தம்புரோகிதர் வீட்டு சிரார்த்தம்லாக்டவுன் கால மேக்அப்புபழைய வண்டியின் பிக்கப்புஇரவல் தந்த புத்தகம்இரவில் கண்ட சொப்பனம்படித்தே பண்ணிய பாயசம்கவிஞன் எழுதிய ஹாஸ்யம்சர்க்கார் போடும் கமிஷன்ஆதார் …

>>

நாகேந்திரபாரதி/ இடை வெளி

அடுத்த ஊரேஅப்போது தூரம் அங்கிருந்த உறவுகளோஅப்போது பக்கம் அடுத்த நாடேஇப்போது பக்கம் இங்கிருக்கும் உறவுகளோஇப்போது தூரம் பக்கமோ தூரமோஇடை வெளியில் இல்லை

>>

ப.மதியழகன்/எனக்கு காதல் பிறந்திருக்கிறது

விடியலிலேயே எழுந்துவிடுகிறேன்தினமும் ஷேவ் செய்கிறேன்மடிப்பு கலையாமல் உடை உடுத்துகிறேன்அவசர அவசரமாக சாப்பிடுகிறேன்கண்ணாடி முன்பு அதிகநேரம் நிற்கிறேன்ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்கிறேன்விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்உறக்கமில்லாமல் புரண்டு படுக்கிறேன்தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறேன்புத்தகத்தின் நடுவே மயிலிறகு வளர்க்கிறேன்அடிக்கடி மணி பார்க்கிறேன்கந்தசஷ்டி கவசம் படிக்கிறேன்நெற்றியில் விபூதி …

>>

கோசின்ரா கவிதை

சாதிக்கெதிரான ஒரு கவிதையை காதலித்தேன்அந்த கவிதையிலிருந்தஒரு பெண்ணையும் காதலித்தேன்ஒரு நாள் கவிதையோடு பேசிக்கொண்டிருந்த போதுஅந்தப்பெண்ணும் வந்தாள்கவிதையின் குலம் கோத்திரம் பற்றி சொன்னேன்அவள் என்னுடைய குலம் கோத்திரம் கேட்டாள்நான் சொன்னேன்அப்புறம் அவள் விடை பெற்று சென்று விட்டாள்பிறகு அவளுடைய கவிதையும்ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் …

>>

வானவில் கே.ரவி /பொம்மலாட்டம்

கோடிக் கணக்கில் நீயே பிரிந்துபொம்மலாட்டம் ஆடுகிறாய்ஒவ்வொரு பொம்மைக்கும் ஒருவிரல் என்றால்எத்தனை விரல்கள், எத்தனை கைகள்!எத்தனை கோடி நட்சத்திரங்கள்!எத்தனை கோடி அணுத்துகள்கள்அத்தனையும் ஒரே புள்ளியில்போட்டடைத்து வைத்தாய்!கொஞ்சம் சிலுப்பிக் கொண்ட போதுபுள்ளியைப்போட்டுடைத்து விட்டாய்!அடைப்பதும் உடைப்பதும் உன்விளையாட்டுஅகப்பட்டுக் கொண்டேன் என்றுநான்அங்கலாய்ப்பது கேட்டுநீசிந்தும் புன்னகைக்குத் தானிந்தப் பாட்டு …

>>

நாகேந்திர பாரதி/வாழ்க்கை இனிது

எடுப்பதில் இல்லைஎன்றுமே இன்பம் கொடுப்பதில் இருப்பதேகுறைவில்லா இன்பம் எத்தனை காலம்என்பது தெரியாது எத்தனை மனிதர்கள்என்பது தெரியாது மனிதரும் காலமும்மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்துமகிழ்வது இனிது

>>

செந்தில் பிரசாத்/ முதுமை

சேகரித்து வைத்தகவிதைகளைசெலவழிக்க துணிந்தகாலம்.பதுக்கி வைத்தநினைவுகளைஅசைபோட பணிந்தஞானம்.கடந்து வந்தபாதையைபின்னோக்கி இழுத்தநேரம்.எப்படி எல்லாமோ வாழ்ந்துகடந்த பின்எப்படியாவது இருக்க முடிந்தஉண்மை நிலைமைஉணர்த்திய உயரிய பருவம்.

>>

சாய்ரேணு சங்கர் கவிதை

எந்த முகம் கண்டதாலேஎழுவினைகள் நீங்கிடுமோஅந்த முகம் முன்புவந்துஇப்போது தோன்றிடுமோஇன்று காணும் எந்தன்முகம்எழில்வடிவாய் வந்தமுகம்இணையிலாத ஆறுமுகம்இன்பமினி ஏறுமுகம் ஈசன்விழி யாத்தமுகம்எனதன்னை பூத்தமுகம்பாசமுடன் இவரிருவர்பாலருக்குத் தந்தமுகம்கதிரின்முகம் அக்னிமுகம்காப்பதிலோ மாலின்முகம்விதிஞானம் அனைத்துமாகும்வித்தகனார் வேலின்முகம் அஜமுகியைத் தண்டித்தஐயனார்க்கு அண்ணன்முகம்கஜமுகனை க்ரௌஞ்சத்தைக்கதறவைத்த கந்தன்முகம்கஜமுகனார் மூத்தவராம்கடவுளுக்குத் தம்பிமுகம்த்வஜமெனவே பகைவனையும்செய்தகருணை நம்பிமுகம் …

>>

தங்கேஸ்/தலைக்கு மேல் உரசிச்செல்லும் பறவையின் நிழல்

தலைக்கு மேல் உரசிச்செல்லும்பறவையின் நிழலொன்றுஞாபகமுற்ற நெஞ்சை சிறகு விரிக்கசொல்கின்றது முகில்யானை கூட்டங்களின்காலடியில் விம்மி மிதிபடச் சொல்கிறது உருத்தெரியாமல் மழையாய் பொழிந்துபின்புமறைந்து போ என்கிறது தூக்கனாங்குருவி கூட்டுக்குள் உருளும்வெண்முட்டைகளுக்குஇரவெல்லாம் காவல் இரு என்கிறது ஒரு கோடையில் தண்ணீரற்ற துளசி செடியாய்பட்டுப்போ என்கிறது உறங்கவிடாத …

>>

வைத்தியநாதன்/தொலை தூரம்

தொலைந்து போனவர்கள்என்றார் கந்தசாமி –மெய்தான்-என்றாலும்சமூக ஊடகங்கள்இருந்தாலும்-தடை விதிக்கிறோம் ரத்து செய்கிறோம்தொலைக்கிறோம்மீட்கிறோம்தொலைந்து போகிறோம்மீட்கப் படுகிறோம் –என்றாலும்இருந்தாலும்மெய்தான்கந்தசாமி –ஆதூரம்தொலைதூரம்தான்.

>>

இராஜாமணி/காலச்சக்கரம்

சிறுவயதில்அப்பாவோடு பயணிக்கும் பொழுதுபெரிய ட்ரங்க் பெட்டி நான் பயணிக்கும் போதுஆடம்பர சூட்கேஸ் இப்போ குடும்பமாய் பயணிக்கிற வேளைஅவரவர் உருட்டிச்செல்லசக்கரம் வைத்த பெட்டி காலம் மாறிபெட்டி மாறியதிலரயில் நிலையத்தில்சிவப்புச்சட்டை போர்ட்டர்குந்த வைத்து வெறுமே உட்கார்ந்து பெட்டியோடுஓட்டிய சக்கரத்தையேவெறித்துக் கொண்டிருந்தார்.

>>

‘ ஜி.பி.சதுர்புஜன்’/திருவல்லிக்கேணி பார்த்தசாரதி!

அல்லிக்கேணி அழகனே! ஆண்மகனே!நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையனே!அமரத்துவம் பாரதிக்கு அளித்தவனே! என்வாழ்விற்குத் துணையாக வந்தோனே! மீசை வைத்துப் பாரதியைச் சாய்த்தோனே! என்ஆசையெல்லாம் அறிந்து அடக்கி ஆள்வோனே!சிவனே மட்டும் என்று சிந்தை வைத்திருந்தவனைசில கணம் என்னைப் பார் என்றே சொன்னவனே! வரிசையிலே …

>>

விஞ்ஞானி/கவியரங்கம்

கவியரங்கத்தில் நான்ஒலிபெருக்கி முன்ஆவேசமாக கடவுளை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரும் அதை மதித்ததாகதெரியவில்லை காதலை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரையும் அது பாதித்ததாகதெரியவில்லை துன்பங்களை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரும் அதை கவனித்ததாகதெரியவில்லை இன்பங்களை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யார் காதிலும் விழுந்ததாய்தெரியவில்லை உண்மையை பற்றி எழுதமாட்டேன் …

>>

செ.புனிதஜோதி கவிதை

அவனின் ஒவ்வொரு பெயரையும்அரோகரா கோஷத்தோடுமெய் உருகபெண்கள்விளம்பிக்கொண்டிருந்தனர். மலரிடம் தேன் அருந்தும் வண்ணத்துப்பூச்சியின் சிறகாய்திறந்தும்,மூடியும்தன் சொரூப விளையாட்டைக்காட்டினஒவ்வொரு இதழும். அவனின்ஒவ்வொரு பெயரிலும்தேன் குழைந்த தித்திப்பைகவிதை உணரத்தொடங்கியதைஅவன் உணந்தானோஎன்னவோ? எம் தமிழ் புலவர்கள்உணர்ந்திருந்தனர்அந்த ஆன்மாஎங்கிருந்தோஎனக்குள்ளும்எழுதத் தொடங்கியிருந்தது இப்போதுமழை விழுந்தநிலமெனமாறிகொண்டிருந்தேன். அந்தக்கந்தன்,கடம்பன்இன்னும்,இன்னும்அழகாய் தெரிந்தான்எம் தமிழால்.

>>

அழகியசிங்கர்/நீண்ட கவிதை

நீண்டகவிதை எழுதும்நோக்கமில்லைஎனக்கு ஒரு நீண்ட கவிதையைப்படிக்கும்போதுஎன் மனம்சஞ்சலம் அடைந்து விடும் பாதியில்நிறுத்தி விடுவேன் படித்தவரைஎந்த அர்த்தமும்கூடாமல்திரும்பவும் ஆரம்பத்திலிருந்துபடிக்க ஆரம்பிப்பேன் திரும்பவும்கவிதையை விட்டுஎங்கோபோய் விடுவேன் உங்களுக்குஒரு வேண்டுகோள்நீண்ட கவிதையைஎழுதாதீர்நிச்சயமாக நம்புங்கள்நான்படிக்க மாட்டேன் என்று

>>

ஆர் வத்ஸலா/பின் புத்தி

தபாலில் வந்தஇலக்கிய பத்திரிகையின் பக்கங்களைச் சேர்த்துகுத்தப்பட்ட ‘ஸ்டேப்ளர் பின்’ னைதன் கையில் படாமல் லாவகமாக எடுத்துகுப்பைத் தொட்டியில் போடப் போனவனை தடுத்து, அதை பழைய காகிதத்தில்சுற்றிப் போட்டாள் அவள், பின்னால்அது குப்பை அள்ளுபவரின்கையைக் குத்தாமலிருக்க 2/11/2024

>>

ஜெயமோகன்/பன்றிகளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

மேலும் சில விபரங்கள் இதோ… ஒன்று: பன்றிகள்சேற்றில் திளைக்கவில்லைஏனெனில் சேறென்றுஅவற்றிற்குத் தெரியாது. இரண்டு: பன்றிகள் அழகானவைஏனெனில்அவை ஒப்பனை செய்து கொள்வதில்லை. மூன்று: பன்றிகள் ஈனமிருகங்களல்லஏனெனில் அவைதம்மைவிட தாழ்ந்ததாய்எதைப் பற்றியும் கருதுவதில்லை. கடைசியாய்பன்றிகள் மனிதர்களின் அடிமைகளல்லஏனெனில்அவை மனிதனைச் சார்ந்திருக்கவில்லை. (நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது …

>>

கடற்கரய் மத்த விலாச அங்கதம்/ஆடி 2

என் சகல ஆட்டங்களையும்ஆடியில் இருந்தே கற்றேன்.எனக்குப் பல புதிர்முடிச்சுகளைக்கற்றுத் தந்தது இந்த ஆடிபல வித்தைகளை சொல்லித் தந்ததும் அதுதான்ஒரு கண்ணாடிச் சில்லுவைதெருவில் வைத்தபடிசூரிய ஒளிக்காக காத்திருந்த நாட்களில்என் கனவின் முதல் ஆட்டம் தொங்கியதுபல ரசாயன மாற்றங்களை அதைக் கொண்டு செய்தேன்அதுதான் என்னை …

>>

ப.மதியழகன்/பட்டாசு கனவு

எனக்கு புத்தாடைகளில்விருப்பமில்லைபட்சணங்கள் கூடஇரண்டாம்பட்சம் தான்எனக்கு தீபாவளியென்றால்வானத்தில் வெடித்துச் சிதறும்ராக்கெட்டுகள் தான்ஞாபகத்திற்கு வரும்திரும்பும் திசையெங்கும்ஒளி வெள்ளம்நட்சத்திரங்கள் மின்னிமறைவதைப் போலஊரெங்கும் கேட்கும்சற்றும் இடைவெளிவிடாதவெடிச் சத்தம்தலைக்கு எண்ணெய்வைத்த பின்புசாமி படத்தின் முன்புஅம்மா பலகாரங்கள்எடுத்து வைப்பாள்அப்பா புத்தாடைகள்எடுத்து வைப்பார்நான் பட்டாசுகளைஎடுத்து வைப்பேன்பால்யத்தில் தீபாவளியென்றால்விதவிதமாக வெடித்துச் சிதறும்பட்டாசுகள் தான்கனவில் …

>>

பி.ஆர். கிரிஜா/தீபாவளி!

தீபத் திருநாளாம் தீபாவளி!மகிழ்ச்சியாய்க் கொண்டாடும்நன்னாளாம் தீபாவளி!மகாலெட்சுமியின் அருள் வேண்டிவரிசையாய் நீயும் விளக்கேற்று!அக இருள் அகன்று புறமதில்இன்பம் என்றும் நாம் பெறுவோமே!புத்தாடை அணிந்து இனிப்பைச் சுவைத்துகூடியாடி மகிழ்வோமே!பெரியோர் சிறியோர் உ ற்றார் உறவினர் நண்பர்அனைவரும் ஒன்றாய்க்கூடிகண்ணனை வணங்கித் துதிப்போமே!நல்லதை நினைத்து தீயவை களைந்துநற்பணிகள் …

>>

விஞ்ஞானி/இன்னொரு ‘இருந்தாலும்’

இதுவரை தீபாவளியைஎட்ட நின்னு பாத்துதான்பழக்கம்.அதுலயும் சௌகரியங்கள்உண்டுபட்டு புடவை விலைக்கும்பருத்தி புடவை விலைக்கும்உள்ள வித்தியாசத்த பற்றிகவலை பட தேவையில்லை பட்டாசு கொளுத்தறபசங்களோட கூடவே ஓடதேவையில்லை பலகாரம் எப்படியும் நம்மளதேடி வந்திடும் பயப்படதேவையில்லை வாழ்த்துக்களையும்நன்றிகளையும் மாறி மாறிவரிசையா அனுப்பிகைப்பேசியில் மூழ்கி கிடக்கதேவையில்லை அந்நாள் முதல் …

>>

ரவி அல்லது /அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின்என்பா. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அசைந்தாடும் கிளைகள் உதிர்க்கிறது பூக்கள்.உள்ளத்தில் புகைகிறதுஉதிராத மனம்.மௌனத்தால்தான் சிறக்கிறதுநடுக்கடல்.*அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பகைவருக்கு இனிதாக மாறட்டும் வாழ்க்கை.பாதகருக்கு புரிதல் தோதாக சிறக்கட்டும்.விநாயகருக்கும் தும்பிக்கையற்ற முகம் கிடைக்கட்டும்.விளக்கத்தீபம் ஒளிரட்டும் யாவருக்குள்ளும். *

>>

ஏர்வாடி இராதகிருஷ்ணன் கவிதை

வந்து போகக் கூடாதாஎன்றாள்.போவதற்காக ஏன் வருவதுஎன்றேன். வந்து போய் இருக்கலாமேஎன்றாள்.வந்து போய் விட்டால் எங்கிருப்பதுஎன்றேன். நீ வரவே வேண்டாம் போஎன்று போய் விட்டாள்.

>>

அழகியசிங்கர்/இருந்தாலும்…

இப்போதுஎழுதிக் கொண்டிருக்கும்கவிதை95 வது கவிதைஇத்துடன் கவிதை எழுதுவதைநிறுத்தி விடுவேனாநிச்சயமாக இல்லைஎன் குறிக்கோள்1000 கவிதைகள் எழுதவேண்டும்ஏற்கனவே 500 கவிதைகளைப்புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன்இன்னொரு புத்தம்கொண்டுவரஇன்னும் 100 கவிதைகள்வேண்டும்நூறு கவிதைகள் எட்ட5 கவிதைகள்தேவைதேவைதேவைதேவை

>>

வினோத் பரமானந்தன்/தீபாவளி

நரகாசூரனைகொன்னதுக்குகொண்டாடுறோம்தீபாவளி ன்ணுபாட்டி சொல்ல… “கொன்னதுக்கு” என்னகொண்டாட்டம்என்ற குழப்பதுடனேகொண்டாடத் தொடங்கினேன்பால்யத்தின் தீபாவளியை … மூணு மீட்டர் துணி எடுத்துமுக்கு கடை டெய்லர் கிட்டகொடுத்துஅடுத்த சில தீபாவளிக்கும்போடுறாப்புலஅளவு குடுத்து…அதுக்காககாத்திருந்ததுஅம்புட்டு சொகம்… தைச்சு வந்த சட்டையைதினம், தினம்வச்ச கண்ணு வாங்காமஅலமாரியிலவச்சு..வச்சு..பார்த்தேனேஅதுவொரு சொகம்… சேர்த்து வச்ச காசுல..விளக்கு …

>>

விஞ்ஞானி/ மாற்றம்

அந்தஆடு மேய்க்கும் சிறுமியைஆடுகள் மலைக்காட்டுக்குள்அழைத்துக்கொண்டு போய்ஒரு மரத்தடி பாறையருகேவிட்டு விட்டு மேய செல்வதுவழக்கம்மாலை ஆடுகள் அவளைஅழைத்துக்கொண்டு வீடுதிரும்பும் வரைஅவளுக்கு அந்த பாறையில்இருக்கும் பெயர் தெரியாதஒரு சாமி சிலையே துணை இடத்தை சுத்தம் செய்துசிலையை குளிப்பாட்டிகாட்டுப் பூக்களால்அலங்கரித்து வீட்டிலிருந்துகொண்டு வந்த விபூதிகுங்குமத்தை பூசிதன் …

>>

அழகியசிங்கர்/ தீபாவளியும் அம்மாவும்

ஐம்பது ஆண்டுகள் முன்ஒரு சம்பவம் நடந்ததுஅம்மாஇறந்து விட்டாள்அப்போது தீபாவளி முடிந்திருந்ததுமழை கொட்டு கொட்டென்றுகொட்டியதுஅன்றிலிருந்துஒவ்வொரு ஆண்டும்அம்மா வருகிறாளென்றால்மழையோடுதான்வருவாள்ஆசி வழங்குவாள்அப்போதுமழை பேசும்அம்மாவும் பேசுவாள்புரியாத மொழியில்

>>

அனங்கன்/எத்தனை இல்லை

கதவைத் திறந்துவைத்தேன்காற்றுவரவில்லை….நேற்றுவந்த பறவைஇன்று காணவில்லை. அன்பைத்தேக்கி வைத்தேன்யாரும் கொள்ளவில்லை….எதிரில்வாலாட்டிய அன்பை நான்உணரவில்லை. புனிதமென்று சொல்லஎப்பரப்பு எல்லை….?புனிதர்கள் பகர்ந்த சொல்லைஒழுகிடுவார் இல்லை. தேடிவைத்த செல்வம் அமைதிதருவதில்லை….அமைதி என்றசெல்வம்வெளியில் கிடைப்பதில்லை. நிலைக்குமென்று எதுவும்நின்றுகொடுப்பதில்லை…நின்றுகொடுக்கும் தெய்வம்எந்தன் திசையில் இல்லை.♦

>>

மோகன் ஜி/தீபாவளி வானம்

வானவெளி கொண்டாடும் தீபாவளி!நரகாசுரன் வதத்தைக் கண்ட நாள்தொட்டுதீபாவளிதனைக் கொண்டாட வானம்தவறுவதேயில்லை. இங்கே நடக்கும் சகலத்துக்கும்சாட்சி பூதம் இந்த வானவெளி!இலட்சம் இலட்சமாய் அதற்குநட்சத்திர விழிகள்.எதுவுமதன் பார்வையினின்றுதப்புவதில்லை. மேகங்களைத் திரட்டியே மழையாய்தன் மகிழ்ச்சிதனைப் பொழிகிறது.சோகம் வெளிப்படுவதும் அவ்வாறே!தந்தையின் கோபத்தை தடுத்தாளும்தாய்போல்விரிவானமும் மேகக் குடைகள் விரித்தேசூரியனின் …

>>

விஞ்ஞானி/பட்டாசு

ஓடி ஓடி பட்டாசுக்களைவெடித்து மகிழும் சிறுவர்களைரசித்தபடி நின்ற நண்பர்களில் ஒருவர் சொன்னார்நாமளும் இத போல்தானசந்தோஷம் வர வரைக்கும் காத்திருக்கோம் கிடைத்ததும்அடுத்தத தேடி ஓடறோம் என்று. அடுத்தவரோநம்ம வாழ்க்கையேபட்டாசு போலத்தானேஎங்கேயோ தயாராகிஎப்படியெல்லாமோ மாறிகடைசியில் கரியா போவுதுஎன்றார் மூன்றாவது நண்பர்அமைதியாய் இருந்தார்.அவரிடம்எங்க உங்க நெனப்புஎன்று …

>>

ஹரணி/ஏனிப்படி…•••

கண்விழித்துக்காலையிலெழுந்துமாலையில் மயங்கிஇரவினில் உறங்கும்வரை காண்பவரிடம்பேசுபவரிடம்படிப்பனவற்றில்சொல்வனவற்றில்உரையாடும் சூழலில்செய்யும் தொழிலில்எனக் கண்கொத்திப்பாம்பெனக்குற்றங்களையேபொறுக்கும்ஒருசிலரைப்பார்க்கையில்கோபமோவருத்தமோபதில் கூறவோஎதுவும்தோனுவதில்லை.. ஏனிப்படி

>>

ராஜ மார்த்தாண்டன்/விமர்சனம்

எழுது எழுது என்றாய்எழுதினேன். உன் மீசையின் கம்பிரத்தைப்போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்மீசையின் வரலாறு தெரியுமா?அதன் வகைகள் அறிவாயா?மீசையைப் பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன்எழுதியசர்ரியலிசக் கள்தை படித்திருக்கிறாயா?கேள்விகளை அடுக்குகிறாய். நண்பனே!உன் கற்பனை மீசையைத் திருகிநீ கொள்ளும் பரவசம்எவ்விதம் நானறிவேன்எங்ஙனம் அதுகுறித்து எழுதுவேன். கொல்லிப்பாவை: …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/எஞ்சியவை

1ஒழுகும் பேனாதன் சித்திரத்தைத்தானே எழுதிக்கொள்கிறது—-2துக்கத்தின்சாம்பல்நீறு—-3ஆத்மாவின்காயங்கள்உன் சொற்கள்—4கடைசியில் எஞ்சியிருப்பதுஎதிரியின் சொற்களல்லநண்பர்களின் மௌனம்—-5மெல்லிய ஆம்பல்தண்டின் நாருறித்தகீற்றாகஒரு அல்குல்—6இரவில் கிசுகிசுக்காதேசொற்கள்நம்பிக்கையளித்துவிடும்—7ஓவியத்தூரிகைதீட்டாமலிருப்பதுபரிநிர்வாணம்—8மாயையைப் பற்றியார் பேசினாலும்நீ ஏன் புன்னகைக்கிறாய்?—-9கண்ணீர்த்துளிகளால்சில பக்கங்களைநிரப்பலாம்ஆனால் எல்லா பக்கங்களையும்நிரப்புவதுதகாது—-10இறந்த கவிஞர்களோடுபேசுதல் எல்லோருக்கும்வழமைஇறந்த பிறகே புகழ்தல்நம்மிடம் நிலைபெற்றுவிட்டமரபு—-11மிருகங்களையும் பறவைகளையும்உன் கவிதைகளுக்குள்வரவிட்டுவிடாதேஅவை நீ மனிதனல்லஎன்பதைச் சொல்லிவிடும்——12‘இதயபூர்வமாக’என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?அகராதியில் …

>>

பசப்பல் ராஜகோபால்/வேர்க்கும் ஜமுக்காளம்

அடிப்பதும் அணைப்பதும்கொடுப்பதும் எடுப்பதும்முடிப்பதும் தொடுப்பதும்நடிப்புனக் கென்றால்,ஜமுக்காளமா நான்?மேடை சமைத்த நாள்என்னைக் கேட்டாயா?நான் இல்லையென்றால்மேடை யாருக்குமேடைக்கு நானா?“என்னிஷ்டம்” என்றால்என்னிஷ்டம் ஏன்?கண்மூடிச் செவிபொத்திக்கட்டையாய்க் கிடப்பதற்கா?கட்டையாய்க் கிடந்தாலும்போகஸ்லைட் புழுக்கத்தில்உணர்வலை உருகிப்போய்வேர்வையாய் வழிகிறதேமூக்கைப் பொத்திக்கொள்.

>>

வே.கல்யாண்குமார்/எலியார்.!

எலியாரே.. எலியாரே..சௌக்கியமா.?எளியோரைப் போலிருப்பீர்..சௌக்கியமா.? வீட்டுக்குள்ளே பானையினைஉருட்டுவீரே..ஓடியாடி பரணிமேலேவிளையாடுவீரே.! சந்துக்குள்ளே பொந்துக்குள்ளே உருளுவீரே.!சாந்துநிறம் மின்னும் மேனி நிறத்தவரே.! ஊரையடிச்சு உலையில் போடும் பெருச்சாலிகள்உலவுகின்ற நாட்டில் பிறந்த சுண்டலியாரே! சுறண்டி பிழைத்து..நக்கித் தின்னும் கருப்புயெலிகள்சுதந்திரமாய் உலவுகின்ற நாட்டினிலே.. சுண்டலியாய் எங்கள் வீட்டின் கொள்ளைப்புறம் பிறந்தவரே.!முன்டியடித்து …

>>

ஆர்க்கே/காலத்திசையறிதல்

திரைகடல் திரிகிறேன்.தரைநிலம் அளக்கிறேன்.நிலமளித்தபூக்களனைத்தையும்வானளித்தநட்சத்திர மலர்களையும்என்எண்ணத்தின்படகில் இட்டு நிரப்பிஎன்உள்ளத்து ரோஜாவையும்உள்ளே மலர்த்தி வைத்துகாலச் சமுத்திரத்தில்கவிதையெனும்துடுப்புப்போட்டுநீ இருக்கும் இடம் நோக்கிநிறைய நிறையகுவித்து வாரேன்.நித்ய கண்மணியே!அத்தனையும் சூடிக்கொள்.ஆட்கொள்அத்தனைபூக்களையும்அதனோடுஎன்னையும்!

>>

புஷ்பா விஸ்வநாதன்/மூட்டு புதிது

நிமிர்ந்த நன்னடையும்நேர் கொண்ட பார்வையும்வளைந்த மென்னடையும்வலிகொண்ட பார்வையுமாய்மாறிப்போனபின்வயதாகிப் போனவலது முழங்கால் மூட்டை“மூட்டு புதி”தெனமாற்றி வைத்திடமூட்டறுவை சிகிச்சைக்குமதுரை வந்தேன்.அழகர், மீனாட்சிஅருளாசிகளுடன்சுற்றமும் நட்பும்வாழ்த்தொலி முழங்கிடஅறுவை சிகிச்சைஅறைக்குள் நுழைந்தேன்மயக்கம் தெளிந்துகண்விழித்து பார்த்தால்வலி வலி வலி வலிவலி வலி வலி வலிமுதுகில் ஒரு‌குழாய்மூத்திரத்துக்கொரு குழாய்ஊசி மருந்துக்கெனகையில் ஒரு …

>>

வி.வி.கலைச்செல்வி/ஈயம் பித்தளைக்கும் இல்லாத ஒன்று

பழைய பொருட்கள் வாங்குபவர்இரண்டு நாட்களாய்மூன்று முறைக்குமேல்இந்தப்பக்கமாகவந்துவிட்டு போகிறார்பாப்பூவின் அப்பா கொஞ்சம்பழைய பொருட்களைஎடுத்து பட்டியலிடுகிறார்எழுதி எழுதி பக்கம்தீர்ந்து போன நோட்டுகளைபாப்பூ பக்குவமாய்பையிலிட்டு வைத்துள்ளாள்அம்மாவும் அவளுக்குவேண்டாததை ஓரமாய்அடுக்கியிருக்கிறாள்மீதமிருப்பதுஎன் முறை தான்எல்லாப் பழையதிலிருந்தும்ஏதாவது புதியதைகண்டுகொள்கிற என்னிடம்எடுத்து வைப்பதற்கும்போடுவதற்கும் எதுவுமில்லைஎன்பது கசக்கிற உண்மை தாராபுரம்

>>

சுரேஷ் ராஜகோபால்/மழை காலம்

காலையில் ஒரு கோப்பைநல்ல தேனீர்இரவுவரை கதகதப்பானகுளிர் காக்கும் போர்வையுடன்நல்ல சங்கீதம்மின்சாரம் இருக்கும் பட்சத்தில்இல்லாத போதுமனைவி குழந்தைகளோடுசிரிப்புடன் அரட்டை.மறுபடி தேநீர்மெதுவாக பெய்யும் மழையைவேடிக்கை பார்த்தால்நலமாக நேரம் போய்விடும்

>>

மனுஷ்ய புத்திரன்/நாம் நிறைய உண்டுவிட்டோம்

பேய் மழையில்தெருவில் யாருமில்லைபூனைகள், பறவைகள்எங்கோ பதுங்கிக் கொண்டனஅவ்வளவு மழையில்ஸ்விகி ஆள் ஒருவரும்ஸொமோட்டோ ஆள் ஒருவரும்சரியான அட்ரஸ் கேட்டுபோன் செய்துகொண்டிருக்கிறார்கள்மறுமுனையில் ஆர்டர் செய்தவர்கள்போனை எடுக்க மறுக்கிறார்கள்மின்னல் அவர்கள் தலைக்குமேல் வெட்டுகிறதுஇடி அவர்கள் தலைக்குமேல் முழங்குறதுஅவர்கள் பெட்டியில் இருப்பதுஒரு வறுத்த கோழியாக இருக்கலாம்ஒரு மினி …

>>

விஞ்ஞானி/பனிப்பாறை

அவன்மனைவி மக்கள் ஒதுங்கிடஅக்கம் பக்கம் ஒதுக்கிடதனியாகி போனதனியறை வாசி. இருக்கையில சாய்ந்து இருந்தவனை நிமிரசெய்ததுதொலைவில் கேட்டவெடிகுண்டு சத்தம் இரண்டாவது சத்தமும்மக்களின் ஓலமும்அவனை எழ வைத்தது கதவை ஒருக்களித்துதிறந்து கூட்டமாய் ஒடும்ஊராரை பார்க்கையில்மீண்டும் கேட்டதுகுண்டு வெடிக்கும் ஓசை. சாவுக்கு பயந்த ஓட்டம்தனக்கும் அதற்கும்எந்த …

>>