ஞானக்கூத்தன்/பட்டாம்பூச்சி

மஞ்சள் நிறமுடைய பட்டாம் பூச்சிதோட்டத்தில் நுழைந்ததுசமையலறையில் நுழையும் மாட்டுப்பெண் போலவெண்டை பூத்திருந்ததுகத்தரி பூத்திருந்ததுஅவரை பூத்திருந்ததுகட்டிவிடப்பட்ட கயிறுடன்புடலை தொங்கிக் கொண்டிருந்ததுபட்டாம் பூச்சி ஒவ்வொரு பூவின் மேலும்பறந்தது, உட்கார்ந்ததுஅடுத்த பூவை நாடிற்றுஉதவி செய்யவா என்றேன்சிறகை வேகமாய் வீசி பறந்து போயிற்று.

>>

ஞானக்கூத்தன்/கணுக்காலில் கொஞ்சம் வீக்கம்

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்நாற்பது வயதுக்காரர்ஊழல் ராமசாமித் தெருவில் சற்றுபெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார்ஒரு மின்விசிறிஇரண்டு பெஞ்ச்சுகள்இரண்டு வரிசைகள்டோக்கன் கொடுக்க ஒரு மடந்தைஅவர் சொன்னார்நோயாளிகள் சிலபேர் அவரைத்தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்வலது கணுக்காலில் வீக்கம் …

>>

செ.புனிதஜோதி/ நீயே என் உலகம்

கச்சிதமாய்பொருந்தியிருந்தநீலவர்ணச் சேலையைதன் விரல் விலக்கிவானத்திடம்காட்டிக் கொண்டிருந்ததுஅந்த மேகம். தொட்டிச் செடியுறைநீல மலர்மற்றொரு மலரிடம் பேசுவதைப் போல்என்னிடம் தலையசைந்துபேசிக் கொண்டிருந்தது. என்னைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறாய்சலனமேதுமில்லாதஇந்தநான்கு கால் பிராணியைப்போல். உன்னை பகடையாய்அதன் பிடிக்குள்இந்தக் காலம் வைத்திருப்பதுபுரிந்தாலும்.. உன் லாகிரி தோய்ந்தஅந்தஒற்றைச் சொல்லுக்காய்சுற்றுகிறதுஎன் உலகம்.

>>

ஞானக்கூத்தன்/எனது கனவுகள்

குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்டகனாக்களை நான் கண்டேன் என்பதுமுற்றிலும் மறந்துவிட்டது.எனது குழந்தை நண்பர்கள் என்னிடம்எந்தக் கனவையும் சொன்னதில்லைஏதோ ஒரு முறை ஒரு கனவைவிளக்கு வைக்கும் நேரம்அம்மாவிடம் சொன்னேன். என் வாயைஒற்றை விரலால் அம்மா மூடினாள்பல கனவுகள் நைந்து கிழிசலாகிமறதிக் காற்றில் பறந்து விட்டன.அப்புறம் …

>>

ஞானக்கூத்தன்/கேள்வி

தோண்டினார்கள் நாலடி ஆழம்.குடிநீர்க் குழாய்களும் சாக்கடைக் குழாய்களும்அருகில் அருகில் இருந்தன.கம்பிக் குழாய்களும் கண்ணில் பட்டன. வெள்ளைக் காரர்களின் ஆட்சிக் காலத்தில்போட்ட குழாய்கள் என்கிறார்கள்.நாலடி ஆழப் பள்ளத்துக்குப் பக்கத்தில்குவிந்து கிடக்கும் அரை ஈர மண்ணில்மண்புழு ஒன்றைக் கூடக் காணோம்.சென்னைமா நகரத்தை விட்டுஎன்றைக்கு நீங்கின …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/ ஓவியன்

போக்குவரத்துநெரிசல் அதிகம் இல்லாத அகலச்சாலைஅவனுக்கு வசதியாகத் தான் இருந்தது. தொளத்தொளச் சட்டைக்கால்புறம் மடிக்கப்பட்டப் பேண்டுக்குள்ஓர் அழுக்கு மனிதன்.முகமெல்லாம் வாழ்க்கை அனுபவத் தழும்புகள். கையிலும் சட்டைப் பையிலும்வண்ண வண்ண சாக்பீஸ்துண்டுகள். அழுக்குத் துணியும் தூக்கிஎறியப்பட்ட வாழை இலையும்சாலையைச் சுத்தம் செய்தன. அடுத்தஒரு மணிநேர …

>>

விஞ்ஞானி/ அமெரிக்கா பொங்கல்

நெற்றியில் புரளும் முடியைஇழுத்து கட்டு என்றாள்அம்மா சென்னையிலிருந்துடீ வி திரையில் என்னைபார்த்தபடி இயக்கிக்கொண்டுஇருந்தாள் அவள் அமெரிக்காவில் நான்பொங்கல் செய்து கொண்டுஇருந்தேன் தொழில்நுட்பத்தின்உதவியுடன்அம்மா சொல்ல சொல்லசெய்ததில் சுவையானபொங்கல் தயாரானது. குடும்பத்தின் ஆரவாரசந்தோஷத்தை திரையில்கண்டு ரசித்தாள் அம்மா. ஆனால் ஒரு விஷயத்தில்தொழில்நுட்பம் தோற்றுபோனது அந்த …

>>

வளவ. துரையன்/பாழ் வீடு

அதனால் பயனில்லைஎன்கிறார்கள் பார்ப்பவர்கள். தெரியாமல் பலன் கொடுக்கும்கற்பகதரு அது. சுவர்கள் எல்லையாகவும்ஓடுகள் வானமாகவும்வாசற்கதவின்றிவாவென்றழைக்கும். ஆடுமாடுகள் ஏன்கழுதைகளுக்கும்அது காப்பகம். காசுவைத்துச் சூதாடக்கச்சிதமான இடம். முதன்முதல் சிறுவர்கள்சிகரெட் பற்றவைக்கஅரிச்சுவடி கற்றுத்தரும்ஆரம்பப் பள்ளி. கல்லூரி மாணவர்பிறர் தொல்லையின்றித்தேர்வுக்குப் படிக்கும்தேவலோகம் கூட. கருப்பு நிறக் கமலாஅங்கேதான் அருமையாகஇளைஞர்களுக்குஇரவு …

>>

ஞானக்கூத்தன்/களத்திரம்

சொன்னார். சொன்னார். மூச்சுவிடாமல்சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்.உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்எவ்வளவு கஷ்டம் கேட்பதுபோலநீண்ட நேரம் பாவனை செய்வது?கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்சொன்னார். மூன்றாம் மனிதன்ஒருவன் வந்தென்னை மீட்கமாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்அவரே ஓய்ந்துபோய் …

>>

அழகியசிங்கர்/பொங்கல்

இன்று பொங்கல் தினம்மனைவி வாசலில்ரசனையுடன் கோலம் போட்டாள்நன்றாக இருக்கிறது என்றேன்அவள் மனதில் கரைபுரண்டோடியது உற்சாகம். எப்போதும் இப்படிநீடித்திருக்க வேண்டும்

>>

பி.ஆர்.கிரிஜா/தைத்திங்கள் முதல்நாள்!

மங்களம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!மனம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!பொங்கல் பொங்கிடும் தைத்திங்கள் முதல்நாள்!புத்தாடை உடுத்திடும்தைத்திங்கள் முதல்நாள்!இந்நன்னாளில் உங்கள் இல்லங்களில்அன்பு பொங்கிடஆர்வம் பொங்கிடஇன்பம் பொங்கிடஈகை பொங்கிடஉறவு பொங்கிடஊக்கம் பொங்கிடஎழுத்து பொங்கிடஏற்றம் பொங்கிடவாழ்த்துகிறேன்இனிய பொங்கல்நல்வாழ்த்துகள்

>>

ஞானக்கூத்தன்/பேப்பர் பையன்

இருளில் எழுகிறான் பேப்பர் பையன்.கைகால் கழுவிப் பல்தேய்த்துவெளியே போகிறான் பேப்பர் பையன். கடைத்தெருப் பக்கம் நடைபாதையில்பேப்பர் கட்டைப் பிரிக்கிறார்கள்.அங்கே வருகிறான் பேப்பர் பையன். குமுதம் விகடன் ஹிந்து எக்ஸ்பிரஸ்தினமலர் இந்தியா டுடே அப்புறம்ஈநாடு, ப்ரபா, மாத்ரூ பூமி என்றுதனித்தனியாகப் பிரிக்கிறார்கள். இரண்டு …

>>

அழகியசிங்கர்/அவ்வளவு சுலபமில்லை

புத்தகம் தயாரிப்பதுஅவ்வளவு சுலபமில்லை புத்தகம் விற்பதும்இன்னும் சுலபமில்லை விற்றப் புத்தகத்தைவாசகர்படிப்பதென்பதுநடக்காத காரியம் அதனால் என்னஎழுதுபவர்கள் சும்மாஇருப்பதுமில்லை

>>

அழகியசிங்கர்/நாய்க் குட்டி

துள்ளி ஓடிற்றுபுத்தகக் காட்சிநடைப் பாதையில்ஒரு நாய்க்குட்டி அதுக்குபுத்தகங்கள் பற்றிஎன்ன தெரியும்? வேடிக்கைப்பார்த்த எங்களுக்குஎன்ன தெரியும்அதைப் பற்றி விற்கப்படாமல்இங்கே வீற்றிருக்கும்புத்தகங்களுக்கும்எதுவும் தெரியாது 2.1.2025 – 4.52

>>

கவிதை திறந்தது கவிதை/அழகியசிங்கர்

கதவைத் திறந்தேன்உள்ளேகவிதை எட்டிப் பார்த்ததுகவிதைதிறந்ததா ஆர்கேதிறந்தாராஒன்றும் புரியவில்லைஆர்கே திறந்தார்கவிதையும் திறந்ததுகவிதை திறந்தாலும்ஆர்கே திறந்தாலும்உங்கள் மனம்திறக்க வேண்டும்கவிதை வாசிக்க

>>

எஸ் வி வேணுகோபாலன்/அன்னாசியின் காத்திருப்பு

ராஜன் காய்கறி கடையில்காத்திருக்கிறதுஅந்த அன்னாசிப் பழம் பைன் ஆப்பிள்பைன் ஆப்பிள்…வாங்கலாம்பைன் ஆப்பிள்…என்ற குழந்தையின் குரல் ஈர்த்ததுகாலையில் குழந்தையின் தந்தைகாய்கள் ஏதேதோதேர்வு செய்துதட்டுகளில் நிரப்பிநகர்த்துகிறார்எடை போட குழந்தைக்குச் சொல்கிறார்வாங்கிக்கலாம்வாங்கிக்கலாம்என்று வெற்று சமாதானம் வாங்கிய ஆப்பிள் ஆரஞ்சு தீரட்டும் என்று தாழ்த்திய குரலில் சொன்னபடி! …

>>

விஞ்ஞானி/இது மாறாது

இருவர் நடந்து போனோம் இருவர் எதிரில் வந்தனர் அதிலொருவர் தெரிந்தவர்போல தெரிந்தார் கடந்து போகும் அந்தநொடியில் அவர் என்னை நோக்கிபுன்னகைத்தார்நானும் புன்னகைத்தேன் சின்ன முறுவலுடன்எங்களை பார்த்தபடிகடந்து போயினர். மனைவி கேட்டாள்யார் அது என்று தெரியவில்லைஆனால்பார்த்த முகம் என்றேன். இருவர் மனங்கள் இதைநம்பவில்லை …

>>

சிறகு இரவி கவிதை

அரங்கம் அமைப்பதும்அடுக்கி வைப்பதும்வருடம் வரும் வாடிக்கைவருவோர் போவோரில்ஒருவராவது வாங்கினால்மனதில் நிகழும்வாண வேடிக்கை!

>>

விஞ்ஞானி/ பெரும் ஆசை

கையளவு உள்ளத்திலே கடலளவு ஆசையென்றான் ஊரறிந்த கவிஞன் நானோகடலளவு ஆசைக்கிங்கேகையளவு வாய்ப்புமின்றிகரையோரம் அலைகிறேன்கவிஞனாய் ஆக பிறக்கும் மன கற்பனைக்குஆயிரம் சிறகுகள் முளைக்கபறக்க இடமின்றி ஆகாயம் கூட சுருங்கி போவதைகண்டு மயங்கி போகிறேன் காணும் கனவினில் நூறுநதிகள் பிறக்கையில்ஓட தடமின்றி பூமியும் இங்கே சிறுத்து போவதைகண்டு வெறுத்து போகிறேன் …

>>

வினோத் பரமானந்தன்/இப்படித்தான்தினமும்…

எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறேன்… ஒரு அன்பை..ஒரு பிரிவை.. ஒரு நெகிழ்வை, ஒரு நிராகரிப்பை சின்னதொரு தோல்வியை,பெரிய வெற்றியை.. கையாட்டி கடக்கும்குழந்தையை, அதிகமாகப் போனவத்தல் குழம்பின் காரத்தை, இந்த அரசியலை.. ஆறிக் கொண்டிருக்கும்காபியை.. என்னை நம்பி விடியும்விடியலை… கவிதையைத் தவிர்த்துவேறெப்படி கொண்டாடுவது…

>>

அதிரன்/காட்சி

பூங்காவில் அவனுக்குஎதிரே தோன்றியவரைகண்டதும் மனம்பதற ஆரம்பித்ததுஅவர் தானே? எனகேள்வியும் கேட்கிறது. அவரேதான்இரண்டு முறைதிரும்பியும் பார்த்துக்கொண்டது. யார்?ஏன்? எதற்கு?அவரைப்பற்றி அப்படிச்சொன்னார்கள்? அவர் ஒரு வகையில்அவனுக்குதூரத்துச் சொந்தமும் கூட இரண்டாம் முறைஎதிரில் வந்த பொழுது“எப்படியிருக்கிறீர்கள்?நலமா ?”“நீண்ட நாளாயிற்றேஉங்களைப் பார்த்து “என்கிறான் அவர் முன்பை விடஇளைத்திருந்தார்உடல் …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/உண்டியல்

சேமித்து வைத்தஉண்டியலின்அடிக்காசுகளில்ஒட்டியுள்ளஉலோகத் தூசிகளுடன்உலா வருகின்றனசில ஞாபகங்கள். சேமித்தக் காசுகளில்சில செல்லாக்காசுகளாகிசிரிக்கின்றன. ஒவ்வொரு காசுகளிலும்கொடுத்த மூஞ்சிகள்பல்லிளிக்கின்றன. இருப்பினும்அடுத்தக்காசு வாங்கமானங்கெட்ட மனம்கையேந்தி நிற்கிறது.

>>

வளவ.துரையன்/வெளிச்சம்

இருளைக் கண்டுதான்இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள் ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம்தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிடவெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன்உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும் தெரிய வரும் வெளிச்சம் என்பது நமக்கு …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/வீட்டுக்குள் வீடு

காய்ந்த சுல்லி களையும்உலர்ந்த புல்லிதழ்களையும்ஒவ்வொன்றாகஎடுத்துவந்து வீட்டுள்சிறுகூட்டில்லத்தைக்கட்டிமுடித்தசின்னக்குருவியே … என் வீட்டு இளைய மகள்கருவுற்றநேரத்தில்நடக்கும் நல்நிகழ்வாய்மகிழ்ந்தார்கள். சில நாட்களில்குருவியின்ஒற்றையொலிகுஞ்சுகளின்கூட்டொலியானது. உன் உறவுகள்ஒவ்வொன்றாய்மேலே பறந்தன. ஒருநாள் உன்கூடும்மின்விசிறி காற்றில் பறந்து கீழே விழுந்தது. பறவையின்ஒலியிடத்தைப்பேச்சொலிகள் பிடித்தன.

>>

வளவ. துரையன் /கிளறுதல்

கோழிக்கு இரைகிடைக்கிறது. அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவன சிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும். அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும் அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ? இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா? அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன. நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதை நாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.T

>>

ஆர்.வி.சுப்பிரமணியன்/ஆசைகளை மன்னிக்கலாம்

கைத்தடிக்குப் பாதுகாப்பாய்வாழும் வயதுகாலாற நடந்திருந்தேன்மாலைக் கதிரொளியில்மாறிப் பொன்னா யொளிர்ந்தநரை தலையில் படிந்தனகிளை விட்டிறங்கும் சில மலர்கள்மன்னிக்கலாம்! வேனிலின்வெட்கப்படாத இந்த ஆசைகளை (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

>>

மதுவந்தி/யானை

காடு விட்டுநதி துறந்துதூய வளிஇழந்துவிரி வானம்இன்றிசுவர்கள் சூழ்ந்துசங்கிலி பிணைத்துநிற்க நேர்ந்தசோகம் விழிகளில்நிரந்தரமாய்…. ( பூபாளம் கீதம் 34 டிசம்பர்24) (மீள் பதிவு.)

>>

நாகேந்திர பாரதி/தலைமுறைகள்

வாழ்க்கையைஅதன் போக்கில் வாழ்ந்து விட்டுபோய்ச் சேர்ந்ததுஒரு தலைமுறை தன் போக்கில் வரவழைக்கமுயற்சி செய்ததுஒரு தலைமுறை யார் போக்கிலோ விட்டு விட்டுகுழம்பி நிற்கிறதுஒரு தலைமுறை

>>

குமரித்துறைவன்/விமர்சனம்-விமர்சகன்

வேலைக்காரியைக் குறைசொல்லிமாமியார் அவல் இடிக்கஉமி ஊதி ருசி பார்த்துருசி பார்க்க உமி ஊதிஎஞ்சியதுஉரலும் உலக்கையுமே (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

>>

செ.புனிதஜோதி

பெயர்தெரியாத ஒருத்திஅவள் தலையில்செவ்வரளி சூடிச்செல்கிறாள் அவளுக்குப் பிடித்த அம்மனும்எனக்கு பிடித்த அம்மனும்செவ்வரளிக்குள்சேர்ந்து பயணிக்கின்றனர் இப்போதுஎன் கண்களுக்குள்அம்மனைச் சுமக்கும்பொன்னூஞ்சலாய்.ஆடிக்கொண்டிருக்கிறதுஅந்தச் செவ்வரளி

>>

முனைவர் ந.பாஸ்கரன் /உலகளக்கும் மர அவதாரம்

மேலுலகை அளந்தபெருமை பேருடலின்ஊடுருவும் ஆணிவேர்ப் பாதம்கீழுலகைநோக்கி … தளிர்களை உச்சந்தலையாகஅரும்பும் பூவரும்புகளைக் கண்களாகப்பரிணமித்து பரிணமித்துவானோக்கி ஓங்கி உயரும்நுனிவேரே. கரங்களாய் விரல்களாய்கிளைகளை விரித்து விரித்துஅண்டத்தை அணைத்துச்செல்லும் வேரின்வினோதங்களே. வளரும் பூரிப்பில்உடம்பின் சிலிர்ப்புகளால்எங்கெங்கு நோக்கினும்பொங்கி கிசுகிசுக்கும் பூக்கள்ஆணிவேரின் பேச்சுக்கள். ஆணிவேர் நீரிலும்அழகிய ப்பூக்கள் தேனிலும்ததும்பி …

>>

காசியபன் கவிதை

அப்பொழுதுஎன்னுடன் நீவரவில்லை அல்லவா?அப்பெர்ழுதுஇவ்விடமே இருந்து கொள்காலம் கழுவியவழுக்குப் படிகள் மேல்கரு நாய் நினைவு ஊளையிடவான் நுழைந்த குடிசையில்தூண்கள் நிற்கும்மணல் வெளிக் காற்றுகுதிரையை ஓட்டும்அலைகள் படம் விரித்துஓவென்று இரைந்துநடமா யெழுந்துதண்டனிடும்சிதையின் புகைச் சுருள்கள்தேடி என்னை தெரிவித்துக் கொள்ளும்காலன் இறந்திடுவான்கழியும்நீண்ட வழியும் பலங்களும்துணையுண்டுசெல்கின்றேன் (நாற்றங்கால் …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/அம்மா கூலி

பொள பொளன்னு பொழுது விடிஞ்ச பொழுதுல . உளுத்தஞ்செடி புடுங்க மேற்கு வயலுல எறங்கிபுடுங்குன செடிகளப்பத்துக்கூறாப்பிரிச்சுவச்சுக் காத்திருப்பா. காவக்காரசின்னமுத்துதன்ஒசர கம்பாலஒவ்வொருக் கூறையும்ஓங்கி ஓங்கி அடிச்சுகூறுஒசரம் சோதிச்சுஅதிலிருந்து ஒதுக்கித்தள்ளியஒத்தக்கூறக்கூலியக்கட்டாக்கட்டிவீட்டுக்குத் தூக்கிவரநடுப்பகலாயிடும் . டீத் தண்ணி மட்டும் குடிச்சிட்டுஉளுந்து புடுங்கபோன அம்மாவீட்டுக்கு வந்து காலநீட்டிப் …

>>

வளவ, துரையன்/அதுவே போதும்

என் தோழனே! நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை. என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை. நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு. உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு. அதுவே போதும்

>>

தேனம்மைலெக்ஷ்மணன்/நிழல்

சாலை விளக்குகள்மஞ்சள் மழை பொழிகின்றன.,நண்பர்களைக் கடப்பதுபோல்நனையாமல் கடக்கிறான் அவன்.,என்னையும் இழுத்து. இருட்டு மரங்களைஅலுவலக வேலைகளைப்போலஅங்குலம் அங்குலமாகக்கடக்கிறான்.,அவனுள் புதையுண்டுநானும் கடக்கிறேன். உச்சியில் முத்தமிட்டுநிலவு தழுவுகிறது அவனைநெகிழ்ந்த காதலியைப் போல்.பின்தொடரும் என்னைத் தழுவாததால்கோரைப்பல்லும் கொம்பும்முளைக்கிறது எனக்கு

>>

விஞ்ஞானி/டீத்தண்ணி

இந்த குளிருக்கு சூடாடீத்தண்ணி குடிச்சாஎன்று இழுத்த குரலுக்குஉடனே எழுந்து ஓடி போய்அடுப்பை பற்ற வைத்தாள் கன மழையை தன்னால்முடிந்தவரை தாங்கிக் கொண்டிருந்தது குடிசை பழகி போனதால் குடும்பம்பாதுகாப்பான இடம் செல்லதயாராகவே இருந்தது. அடுப்பில்கொதிக்கும் தண்ணீரில்டீத்தூளை போட்டுவிட்டுகட்டி வைத்த மூட்டையில்சர்க்கரையை தேடும் போது …

>>

நாகேந்திர பாரதி/புகைப்படம்

வீட்டுக்கு வெள்ளையடிக்கக்கழற்றியதும் தெரிந்தது மாலையோடு மாட்டியிருந்தபுகைப்படத்தில் தூசி சிந்திய கண்ணீரைச்சேர்த்துத் துடைக்கையிலே தண்ணீர் தேவையில்லைதுண்டை ஈரமாக்க தூசி தொலைந்ததுசிரித்தபடி அப்பா

>>

க.சோமசுந்தரி கவிதை

மார்கழி திங்கள்வைகறைப் பொழுதில்துளசி மாடத்துஅகல் விளக்கின்சுடரொளியில்…கண்ணனின்குழலோசையைஎதிர்பார்த்து …முற்றத்து கோலத்தின்நடுவில் …மஞ்சள் பூசணி பூவாய்….பூத்திருக்கிறதுகாத்திருக்கும்ஆண்டாளின் மனது!

>>

ரவி அல்லது/வீடு பேறடையாதவீழ்தல்

கனியாகும்கனவோடுகரிசனத்துடன்காவந்து செய்தாலும்பூக்கள் தான்தீர்மானிக்கிறதுமறுமலர்ச்சியெனும்மாற்றுப் பாதையைவீழ்தலிலும்சுகமுண்டெனபறத்தலைப் பற்றியஅக்கரையற்று.*

>>

விஞ்ஞானி/தாயாவோம்

ஒரு மலர் மறு மலரைபார்த்து கேட்டது நீயும்ஏன் விழுந்தாய் என்று. உன்னை போலதான்காய்ப்புக்கு உதவாதெனஉதிர்க்க பட்டேன் என்றதுமறு மலர் கவலை படாதேமீண்டும்உரமாகிமரம் ஏறிமொட்டாகிபூவாகிகாயாகிகனியாகிவிதையாகிஇதை போலொரு மரத்துக்குதாயாகிமகிழ்ந்திடுவோம்என்றது முதல் மலர்

>>

புஷ்பா விஸ்வநாதன் கவிதை

குதிரையில் வருவான் ராஜகுமாரன்எனைக் கொத்திக்கொண்டு போகவெனகனவு காணும் பெண்ணே!விண்மீன்களும் பிறைநிலவும்கனவில்தான் கண் சிமிட்டும் நிஜத்திலோஉனைக் கொண்டுபோகநீளுகிறது பார் ஒரு பாம்புக்கரம்உனைக் குத்திக் கிழிக்கும்கூர் நகங்களோடே.உன் வாழ்க்கையோமுட்கள் நிறைந்த பாதைதான் உறங்கியது போதும்விழித்தெழு.துணிந்து நில்போராடுவாழ்வை வாழ்ந்து காட்டு.

>>

ஞானக்கூத்தன்/தமிழை எங்கே நிறுத்தலாம்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டு போய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். …

>>

காசியபன் கவிதை

குடும்ப வேலிக்குள்யாகப் பசு பரிதவிக்கும்வாழ்க்கை அழிகளுக்குள்பண்டெலாம் அலறும் சிங்கம்இன்று தலையைச் சொறிந்து நிற்கும்சிறகடித்து சிட்டுக் குருவிவானத்தில் மிதக்ககுயிலின் சுருதியில்வானம்பாடி ஆகிரி இசைக்கும்மஞ்சை மூங்கில்கள்தலை விரித்து ஆடபச்சிலைகள் உதிர்க்கும்கண்ணீர்த் துளிகள் (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு …

>>

வளவ.துரையன்/சுரப்பு

ஒட்டக்கறந்த பிறகுகட்ட இடமில்லாததால்விரட்டிவிடப்பட்டவள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்போய்த் தேடுகிறாள்நேற்று மிஞ்சிய சோறும்அழுகிய காய் பழங்களும்இன்றும் கிடைக்குமா ஐந்து மணிக்குள்ளாக அவசரமாகத்தின்றுவிட்டுஅசை போட வேண்டும். அப்புறம் வந்திடுவார் மாலைகறக்க ஓட்டிச் செல்ல சுவரொட்டியின் ரசாயனம்சுள்ளெனக்குத்தினாலும்பாழ்பசியில் தெரியாது. பாலையே குடித்தறியாபசும்புல்லும் கடிக்க முடியாபரிதாபக் கன்றதனின்கண்ணீர் …

>>

வளவ. துரையன்/அறிதல்

அந்த முச்சந்திக்குவேறு வேலையில்லை.எல்லாரையும்முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததைஎடுத்து வருவார்களா எனஎல்லாக்கால்களையும்பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடைபோணியாகி விற்றுவிடாதாஎன்றேங்கும்பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியைஇழுக்க முடியாமல்அடிகள் வாங்கிஇழுக்கும் காளையை அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டுஅடம்பிடிக்கும்அறியாச்சிறுவனை அனைத்தையும்பார்த்துப் பார்த்துஅதுவும் வாழ்வினைக்கற்றுக் கொள்கிறது.

>>

எல்.ரகோத்தமன்/ இதுவும் ஒரு கூத்து

 அவள்நீங்கள் எங்கே போகிறீர்கள்என்று கேட்டாள்! என் வயதுஇருபத்தெட்டு என்றேன்! அவன்நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்என்று கேட்டான்! அவள்நாளை ஊருக்குப்போவதாகச் சொன்னாள்! அவன்அந்த பூங்காவில்சந்நிக்கலாமா என்றான்! அவள்தன் தந்தை வெளீயூர்சென்றிருப்பதாகச் சொன்னாள்! அவன்எனக்கு ரஜினி படம்மிகவும் பிடிக்கும் என்றான்! அவள்எனக்கு ஊர் சுற்றுவதில்அலாதி ஆசை என்றாள்! அவன்நான் முதல் வகுப்பில்தேர்ச்சி பெற்றவன் என்றான்! அவனும் அவளும்இப்படி சொதப்பலாகவேகாதலித்த …

>>

அதிரன்/டிசம்பர் 12

அலுவலகம் விட்டுவீடு திரும்பியதும்ஒரு பிரளயம் நடக்கும்என்று எதிர்பார்த்தான்ஆனால் அமைதிபேரமைதி துவைப்பதற்காககாலையில்எடுத்துப் போட்டசட்டையும்பேண்ட்டும் துவைத்துஇஸ்திரி செய்துசோபாவின் மேல் அமர்ந்திருந்தின அவன் கண்கள்அவற்றைப் பார்ப்பதைஅவளும் கவனிக்கிறாள் ஏன் ஒரு மாதிரியாய்இருக்கிறாய் என்றுவினவுகிறாள்….. பதில் எதுவும் சொல்லாமல்தன் அறைக்கு சென்றான். அங்கு மேசையின் மேல்அவன் மறந்து …

>>

விஞ்ஞானி/சிறப்பு விருந்தினர்

அந்த காக்கா தினமும்சன்னலின் வழியேகுரல் கொடுக்கும். வைக்கும் உணவைதின்று விட்டு செல்லும் அன்று அது வரவில்லைவராது என்பது தெரியும்அது அன்றைய தினத்தின்சிறப்பு விருந்தினர் பல வீட்டு மாடிகளில்மனிதர்கள் கா கா என்றுகத்திக்கொண்டிருந்தனர்.

>>

நாகேந்திர பாரதி/நம்பிக்கை

கோயில் கிடையாதுகோபுரம் கிடையாது உண்டியல் கிடையாதுஊரும் கிடையாது ஒதுக்குப் புறத்திலேஒத்தை வேப்பமரம் குத்திவச்ச வேல் கம்புகுதிரையிலே முனுசாமி கும்பிட்டுப் போனாலேகூடுறதாம் நெனைச்சதெல்லாம் பத்துத் தலைமுறையாய்ப்பத்து ஊரு சனத்திற்கும்

>>

கலாப்ரியா/பிற்பகல்

பாண்டி விளையாட்டின்முதல் உப்பை நான்கடவுளுக்குக் கொடுத்ததுகிடையாது முதல் பல் விழுந்த போதுசாணியில் பொதிந்துசொர்க்கம் நோக்கிஎறிந்தது கிடையாது ஒரே ஒரு தடவைதான்விட்டில் பூச்சிகளைப்பக்கத்துக் கொன்றாய்நூலில் கட்டிப் பரிதவிக்கவிட்டிருக்கிறேன் மருத மர நிழலில் மீட்டாதத ண்டவாளச் சோகங்களைஎனக்கேன் நிரந்தரித்தாய்சசி (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – …

>>

ஆர்.கந்தசாமி/அழகு

ஓடும் மேகங்கள் அழகுஆடும் அலைகள் அழகுவட்ட நிலவும் அழகுகொட்டும் மழையும் அழகு விண்ணில் மீன்கள் அழகுமண்ணில் மலர்கள் அழகுவான வில்லோ அழகுவானத்து மின்னல் அழகு மலைகள் என்றும் அழகுசிலைகள் கோயிலில் அழகுபச்சை வயல்கள் அழகுபச்சைக் கிளிகளும் அழகு அருவிகள் குதித்தல் அழகுகுருவிகள் …

>>

மா. காளிதாஸ்/மீச்சிறிய நம் தோட்டத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?

ஓய்வுநேரம் அல்லது விடுமுறை நாளில் காலார உலா வருவீர்களெனஅடர்நிழல் பரப்பிக் காத்திருக்கிறது தோட்டம். நீங்கள் வந்தால்போக்குக் காட்டுவதற்கெனவே சிறகசைக்காமல் இருக்கிறதுஅந்த வண்ணத்துப்பூச்சி. முழந்தாளிட்டு உங்கள் இணையிடம் தன்னை ஒப்புக் கொடுப்பீர்களெனஈரம் உலராமல் இதழ்கள் உதிர்க்காமல் எத்தனை நாளாய்த் தவமிருக்கிறது தெரியுமா அந்த …

>>

எஸ். சண்முகம் கவிதை

கண்சிமிட்டியவர் யாரென்று ஞாபகமில்லைஆனால் நிரம்பியிருக்கும் பேருந்தில்தான்பின்பக்கம் திரும்பி பயணச் சீட்டு எடுக்கையில்நான்கு வரிசைக்கு பின்னிருந்தவர்தான்அதைச் செய்திருக்கக் கூடும் அல்லது சாலையில் சென்றஇருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில்வீற்றிருந்தவர் ஹெல்மெட்டை சற்று விலக்கியயவராகஇருக்கலாம்நெடுநாள் என்னுடன் பின்னிருக்கையில்அமர்ந்திருந்தவரின் புருவங்கள் மின்னின வீட்டு உபயோக பொருளொன்றைவாங்கச் சென்ற பெரும் …

>>

வி.வி. கலைச்செல்வி/விட்டுவைத்தலும் கடனே

நேற்று வழக்கத்தை விடவும் காற்று அதிகம் .நிறையப் பொருட்கள்அதனதன் இடம் மாறி போய்விட்டது. இடம் மாறுதல்சில நேரம் சங்கடம்சில நேரம் சந்தோசம். ஏனித்தனை வேகம் காற்றே என்றேன்.? ஒன்றும் சொல்லாத காற்றுஒரு பறவையின் இறகுஒரு உதிர்ந்த இலைஒரு பழைய கவிதைப் புத்தகத்தின் …

>>

அதிரன்/சுவடுகள்

கடலை நோக்கிச்சென்றிருந்த சில கால் தடங்களைக்காண்கிறான்அதுஒரு ஆணின் அல்லதுபெண்ணினுடையதாகஇருக்கலாம்அதன் ஒழுங்கற்ற வடிவம்ஒரு அவசரத் தன்மையைவெளிப்படுத்தியது. சற்றுத் தொலைவில்கரையை நோக்கிச் சென்றிருந்தசில கால் தடங்களைக்காண்கிறான்அதன் ஆழமான பதிவுஒரு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. இன்று ஏனோ கடல்மிக அமைதியாகஅலை பாய்ந்து கொண்டிருந்தது கடலை வெகு நேரம் …

>>

விஞ்ஞானி/வானிலை அறிக்கை

: வானில் ஒரு வெண்மேகம்வேடிக்கை பார்க்க சூரியனோடு சேர்த்துபனித்துளியை பருகிபறந்ததொரு தேன்சிட்டு. மகரந்தத்தை சுமக்ககூலியாய் தேனைபெற்றுச்சென்றது வண்டு உச்சி மரக்கிளை அமர்ந்துஎண் திசையும் வான் நோக்கி பார்த்திருந்தது காக்கை மீண்டும் உணவை சுமந்தபடிதம் புற்றுக்கு சாரிசாரியாகதிரும்பி போயின எறும்புகள். தெருவில் அங்கும் …

>>

விஞ்ஞானி/ரௌடியிசம்

:. வற்றிய கிணற்றில்இறைக்க சொற்கள்இல்லை வரண்ட ஆற்றில்ஓட வரிகள்இல்லை முதிர்ந்த பறவைக்குபறக்க கற்பனைகள்இல்லை கலையும் மேகத்தில்பொழிய கவிதைகள்இல்லை பழைய பேனாவில்எழுத எழுத்துக்கள்இல்லை என்றாலும் நான்எழுதாது விடுவதாய்இல்லை ()

>>

நாகேந்திர பாரதி/நிழலும் நிஜமும்

நிழல்கள்சில சமயம்முன்னால் போகின்றனசில சமயம்பின்னால் வருகின்றனசில சமயம்பதுங்கிக் கொள்கின்றனநிஜங்களும் கூடஅப்படித்தானோஎல்லாம்நேரத்தைப் பொறுத்தது

>>

கல்யாண்ஜி/நடை

பிள்ளைநடக்கவே படிக்காமல் போச்சாநடை வண்டி இல்லாதவீட்டில் அம்மா விரல்முந்தானை மூட்டை ரத்தம்புரட்டி வைத்தகை நாட்டுச் சுவர்மரப் பெஞ்சு பீரோஉண்டு சுற்றிவரமுட்டியிலே தழும்பும்காலிருக்கும் பிள்ளை யெல்லாம்நடந்து தீரும்நடை வண்டிக்காகநடைகாத்திருக்கா (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : …

>>

ப.கங்கைகொண்டான்/நினைவுகள்

எனக்கான மனிதர்கள்ஒரு குடைக் கீழ்ஒளிந்து கொள்ளஓடிவந்த போதுஒதுக்கித் தள்ளினார்கள்பனி நீரை மழையாக்கிப்பயிர் வளர்த்தார்கள்முளைப் பாலிப் பயிர்களைமூழ்கடித்தார்கள்கண்ணில் நீர் பெருக்கிக்காலில் விழுந்தாலும்கானல் நீர்ப் பாசத்தைக்காட்டிச் சிரித்தார்கள்எல்லாமாயிருந்துஇல்லாத தாக்கி விடவேஎங்கேயும் தொடர்ந்தார்கள்எனக்கான மனிதர்கள் (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் …

>>

ம.சக்திவேலாயுதம்

ஒரு உரத்த வெயிலில்உடல்.. சூடு தாங்காமல்மர நிழலைதேடி நிற்கிறது.. ஒரு கனத்த மழையில்உடல்..குளிரில் நடுங்கிகட்டிட அடியில்ஒதுங்கி நிற்கிறது! இந்த இயற்கையைஎளிதாய் புரிந்து விட்ட உடம்புவெயிலையும் மழையையும்இயல்பாகவே பார்க்கிறது! இரண்டுக்குமேவானம் தான் பொறுப்பு..இரண்டையுமேஉடல்தான் ஏற்பு! அது ஏனோ தெரியவில்லை..இந்த மனசு மட்டும்..வெயிலோடு பேசுவதைப் …

>>

நட்பு இயல்!/ஆர்க்கே!

கைகூப்பி வணக்கம்சொல்லவில்லை.ஆரத்தழுவி அன்புபரிமாறவில்லைபொன்னாடை பூங்கொத்து கைகுலுக்கல்எதுவுமே இல்லை.இலைதனைத் துளிர்க்கவைத்துஅதையே என்முன் நீட்டிநட்பு தழைக்கஎன்னுடன் பேசியதுஒரு மரம் .

>>

ஷண்முக சுப்பையா/கேள்விகள்

திருடனைப் பிடித்துசிறையினில் அடைத்தால்குறைந்திடுமா திருட்டு? கொலைஞனைப் பிடித்துகழுவினில் ஏற்றினால்ஒழிந்திடுமா கொலை? விபசாரியைப் பிடித்துசீர்திருத்தினால்தீர்ந்திடுமா விபசாரம்?

>>

நவீன விருட்சம் 98வது இதழில் வெளி வந்த கவிதை ஜான்னவியின் காலக் கணக்கு

ஜான்னவி / காலக் கணக்கு ஒரு சொற்ப காலம்நாம் குழந்தைகளாய் இருந்தோம்ஒரு சொற்ப காலம்நாம் இளமையோடிருந்தோம்ஒரு சொற்ப காலம்நாம் மகிழ்ச்சியில் நினைத்தோம்.ஒரு சொற்ப காலம்நாம் நேசித்த செல்லப் பிராணிகள்நம்முடனிருந்து பின்காணாமற் போயினஅல்லதுமடிந்து போயின.சொற்ப காலமே ஆனதுநானறிந்தஅல்லதுமடிந்து போயினசொற்ப காலமே ஆனதுநானறிந்தஅல்லது அறிந்திருந்ததாக …

>>

ஐராவதம்/மே 5, 1974(முப்பது வயதின் துவக்கத்தில்)

நான் இன்னமும்நம்பிக்கை இழக்கவில்லைஆயின் நம்மைச் சுற்றிநச்சுப்புகை அதிகமாகி விட்டதுநம்முடைய குறிக்கோள்கள்சிதைந்து போவதை நாம் உணர்கிறோம்வெற்று நம்பிக்கை ஞானம் அல்லவெவ்வேறு வேஷங்களின் வெறுமைதுல்லியமாகவே புலனாகிறதுஉயர்ந்த மலையும், பரந்த கடலும்மனித ஜாதியின் நிலையாமையைசுட்டிக் காட்டுகின்றனஒரு மகா மனிதனின் வருகையைஎதிர் நோக்கி நிற்பவையும் அவையேஅந்த மகர் …

>>

ஆத்மாநாம்/இன்னும்

புறாக்கள் பறந்து போகும்கழுத்திலே வைரத்தோடுகிளிகள் விரட்டிச் செல்லும்காதலின் மோகத்தோடு காக்கைகள் கரைந்து செல்லும்தானியம் தேடிக்கொண்டுகுருவிகள் கிளுகிளுப் பூட்டும்கிளைகளில் தவழ்ந்து கொண்டு பாசிக்கரை படர்ந்ததாமரைக் குளத்து நீரில்நீளக்கால் மெல்ல அளையும்கரைநிழல் கீழமர்ந்து பழங்களைக் கடித்துத் தின்றஅணில்களும் அவ்வப்போதுகேள்வியைக் கேட்டாற்போலத்தலைகளைத் தூக்கிக் காட்டும் சிவனருள் …

>>

ஆத்மாநாம்/மறுபக்கம்

தரையில் நான்சுவற்றில் பல்லி தொங்கும் விளக்கால்ஆடும் நிழல்கள் மங்கும் ஒலிகள்மாலை இருளில் தொலைவில் கேட்கும்குழந்தையின் அழுகை அருகில் கேட்கும்குழாயின் ஒழுகல் அறைக்குள் காற்றில்வண்ணப் பூச்சிகள் குறுக்கே பறக்கும்வினாடிப் பிளவில் அணைக்கும் இருளில்சிரித்துக் கொண்டு வானில் மிதக்கும்கோலப் புள்ளிகள் இடப் பெயர்ச்சிசுழற்சியின் நடுவே …

>>

விஞ்ஞானி/கருணை

கையில் ஒரு சிற்றெரும்புஓடியதுகருணையுடன் விரட்டி விடநினைத்தேன்அதற்குள் கடித்துவிட்டது அடிக்காது தட்டி விட்டு விட்டுகடிவாய் கடுகடுக்க அதுஓடி மறைவதை பார்த்துக்கொண்டு இருந்தேன் என்ன என்ற நண்பனிடம்நடந்ததை சொன்னேன். அவன் பதிலுக்குஅது இந்நேரம் தனதுகுடியிருப்புக்கு போய்ஒரு ஆள் சிக்கியிருக்கான்நமக்கு சேதாரமில்லாமசேமிக்கலாம் வாங்கன்னுபடை திரட்டிக்கொண்டுஇருக்கும் என்றுசொல்லி …

>>

வைதேகி/யோசிப்பு

மஞ்சள் கொன்றை அதுவைத்த சீக்கிரத்தில் வளர்ந்து விட்டதுபூத்தலும் உதிர்தலுமே வேலையாகி விடமெத்தை விரித்தாற் போல் பூக்கள்அடி மறைத்துக் கிடக்கும்பார்வைக்கு ரம்யமாய்…கோலமிடச் செல்லும் போதுமிதந்து வந்துசில சமயம் விரல்சில சமயம் தோள்சில சமயம் முதுகு தொட்டுசிலிர்க்க வைக்கும்.விடியல் ஆசிர்வதிக்கப்பட்டதாய் தோன்றும்சில நாட்களாய் இனம் …

>>

மா. காளிதாஸ் ஒரு ஊதப்பட்ட பலூன்

கையில் ஒரு ஊதப்பட்ட பலூன்வண்ணங்கள் பற்றிய அக்கறைஒருபோதும் இல்லைஆனாலும் கறுப்பைத் தேடுகிறது. மிச்சமிருக்கும் பலூன்களையும்ஊதி மிதக்கவிட வேண்டும் காற்றில். எந்தவொரு கூர்நுனியும்சுள்ளென்ற ஒளியும் படாமல்மேலே மேலே பறத்தலைப் பார்த்தல்மிகப் பெரிய ஆசுவாசம்,பித்தநிலையும் கூட. கட்டவிழ்க்கப்படாமலேயேஊதப்பட்ட பலூன் சுருங்கிச் சுருங்கிமீண்டும் பழையநிலைக்குத் திரும்புதல்ஒரு …

>>

செ.புனிதஜோதி

அவ்வப்போதுதன்னிச்சையாய்வந்துவிடுகின்றனகவிதை போலும் வரிகள். ஏன் வந்தது?எதற்குச் சென்றது?என்பதுஏனோ புலப்படவில்லை. ஆனாலும் சிலமௌனம் பூசியதாகவும்…இன்னும் சிலசிக்கிமுக்கி கல்லைப் போன்றும். பூ பூத்தலைப்போன்றும்ஏதோவொன்றைநிகழ்த்திவிட்டுச்செல்கின்றன. நானோசுவரில் வரையும்சிறு குழந்தையின்பிஞ்சு விரலின்நெளிவு,சுளிவிற்கு ஏற்பதன்னை ஒப்படைத்தஓவியமாகிறேன்.

>>

வைதேகி/கவலை

பக்கத்து வீட்டு மதில் சுவரில்நினைத்துக் கொண்டாற்போல்கண்ணாடிச் சில்லுகள்முளைத்திருந்தனஎன் கவலையெல்லாம்அவ்வப்போது….எதையாவது தின்று விட்டுஒய்யாரமாய் வந்தமர்ந்துஅலகு தீட்டிக் கொண்டிருக்கும்தவிட்டுக்குருவி எங்கு செல்லும்?

>>

ஷண்முக சுப்பையா/அமரன்

எழுதுகோலை எடுத்தேன்ஏனோ அதுவாருகோலாய் மாறியது.செய்வதறியாதுஒரு கணம் திகைத்தேன்.மறுகணம்வருவது வரட்டு மென்றதனால்பழங்குப்பையைவாரி வாரி இறைத்தேன்.புதுக் குப்பையைக்கூட்டிக் குவித்தேன்.கண்டு நின்றஇலக்கியக் காவலர்கூட்டமொன்றுஓடோடி வந்தெனக்குபட்டாடை போர்த்திபரிசில் அளித்துஇலக்கிய மேதை உன் போல்உலகிலுண்டோ”என்றென்னைவாயார வாழ்த்திவானளாவப் புகழ்ந்து,அமரர் உலகில் புகுத்திஅதற்கு மேல்செய்யும் வகை அறியாதுதவித்தது.அமரன் நான்அவர்க் கென்னகைமாறு செய்யஎன்று …

>>

அழகியசிங்கர்/குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் இன்றுபிரேயர் வகுப்பில்நிற்கவில்லைஎன்று ஓடிவந்துவகுப்பில் பதுங்கி இருந்தஎன்னைஅடிக்க வந்தார்தலைமை ஆசிரியர் நான் அன்று கலந்துகொள்ளவில்லைதான் என்னை அடிக்கவேண்டுமென்றஅவர் வன்மத்தைநினைத்து வியந்தேன் கையில் பிரம்படியின்வலியைப் பொறுத்துக்கொண்டு..

>>

விஞ்ஞானி செல்லக்குட்டி

கண்மணி என் கண்மணிகண்மணி என் கண்மணி கண்ணில் காணும்மின்னல் உனதுபுன்னகை தானே கன்னம் தீண்டும்ஈர விரல்கள்பனித்துளி தானே மெல்ல தழுவும்தென்றல் உனதுதொடுதல்கள் தானே நான் கவலை மறந்துசிரிப்பதும் உன்அருகினில் தானே கண்மணி என் கண்மணி என்னிதயம் வருடும்கீதம் உனதுமழலைகள் தானே நான் …

>>

பி. ஆர். கிரிஜா/குழந்தைகள் தினம் !

தத்தித் தத்தி தவழ்ந்து வா !தாவித் தாவிஆடி வா !குண்டு கண்கள்சிமிட்டியேகுதூகலமாய்குதித்து வா !பொக்கை வாய்சிரிப்போடுஉலகை மயக்கஓடி வா !உன் கன்னக் குழியின் அழகினைகண்டு களிக்கஅசைந்து வா !குழந்தையும் தெய்வமும்ஒன்றெனவே உலகிற்குஉணர்த்த வா !உன்னுள் இருக்கும்குழந்தைமைஉயிர்ப்போடுஇருக்கட்டும் ! 14/11/2024

>>

ரவி அல்லது/சுயம் மறந்த சுழற்சி

தத்தித் தவழ்ந்துஎழுந்து நடப்பதாகத்தான்இருந்ததுபால்யத்தின்தொடக்கம்குழந்தைத்தனமாகயாவரையும்ஈர்த்து.இப்பொழுதும்தத்தித் தவழ்ந்து தான்எழுந்து நடக்க முடிகின்றது.அந்தக் கல்லமின்மையைகைவரப் பெறாதமுதிர்ந்த குழந்தையாகஇயலாமையின்இறுதியில்.யாவருக்கும்பாரமெனஅழுத்தி.* .

>>

ஆர்க்கே/ விழிச்சுடரழகி!

புருவ மத்தியில்என்னைநிற்க வைக்கிறாய். இமைகளின் மஞ்சத்துள்என்னைஇருக்கச் சொல்கிறாய். மூக்குத்திக் கதிர்வீச்சில்என்னைமூச்சுவிடச் சொல்கிறாய். விழியிரண்டின் கரையோரம்என்னைநடைபயிலச் சொல்கிறாய். மெல்லிதழ்களின் பெருஞ்சுழிப்பில்என்னைகவிதை குவிக்கச் சொல்கிறாய். அத்தனைக்கும் நீயே கதி.என்ஆயுளுக்கும்நீயே என் சகி. நேற்று இன்று நாளைஅன்று இன்று என்றென்றும்இப்பிறவிமுப்பிறவிஏழேழு ஜென்மமெனஎத்தனை எத்தனைபிறப்பெடுத்துநான்புறப்பாடானாலும்அத்தனைக்கும்எனக்காய்கிருஷ்ண துலாபாரஒற்றைத் துளசியாய்தோன்றிமகத்துவப் …

>>

ரா.ஸ்ரீனிவாஸன்/கணத் தோற்றம்

கணத் தோற்றத்தைக் கைப்பிடித்துநனவெனும் நூலிற் கோர்த்தெடுத்துமனனம் செய்து உருவேற்றுகிறேன் கனவாகி ஜனனமாகும் ஓருலகுநுரைத்து நுரைத்துஊதிப்பெருத்து உருவாகி உருவாகிவிரிவடைந்து வேறாகித் ததும்ப அங்கேபார்த்துக் கொண்டிருக்கிறேன்கணப்பொழுதுக் குமிழிகள்… கணத்துக்குள் கணமாகிநழுவும் கணத்தைக் கணக்கிடுகிறேன்அதுவென் வசப்படவில்லை தோன்றித் தோன்றி மறையும்இடைவெளிகளுக்கிடையேஅதனைக் கைப்பற்றுகிறேன்மறுகாட்சியாக்கி மீட்டுக் கொள்கிறேன் முதற்காட்சி …

>>

அழகியசிங்கர்/கடவுள் பக்தி

காலையில் எழுந்தவுடன்குளித்துவிட்டுவிபூதி இட்டுக்கொள்கிறேன் இட்டுக்கொள்ளவில்லைஎன்றால்மனைவி சாப்பாடு போட மாட்டாள் எனக்குக் கடவுள் பக்தியைஇப்படித்தான்புகட்டுகிறாள்.

>>

அழகியசிங்கர்/பேருந்து நிறுத்தம்

18 கே பேருந்து நிறுத்தத்தில்நின்று கொண்டிருந்தேன் பேருந்து இன்னும் வரவில்லை அங்கேநின்றிருந்த பெண்ணைப் பார்த்தேன் எங்கோ பார்த்திருக்கிறேன்என்று மனம் சொல்லியதுஅவளையேஉற்றுப் பார்த்தேன். அவள் திடீரென்றுஎன் பக்கத்தில்வந்து நின்று‘ஐ லவ் யூ’ என்றாள்.

>>

ஒளவையார் பாடல்கள்

பொன்மழை பெய்யுமாறு வருணனை வேண்டுதல் கருணையால் இந்தக் கடல்உலகம் காக்கும்வருணனே, மாமலையன் கோவல் – திருமணத்தில்முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்பொன்மாரி யாகப் பொழி. கடல் சூழ்ந்த இந்த உலகத்தைக் கருணையுடன் காக்கும் வருணனே!. மலையமான் திருமுடிக்காரியினது திருக்கோவலூரில் நடைபெறும் திருமணத்தின் போது, …

>>

மோகன் ஜி/தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்

தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்… ஐயர் ஹோட்டல் தேநீர்நாயர் ஸ்டால் காபிமயில் பாடின சங்கீதம்மாமியார் தந்த உற்சாகம்மலிவில் கிடைத்த பதார்த்தம்புரோகிதர் வீட்டு சிரார்த்தம்லாக்டவுன் கால மேக்அப்புபழைய வண்டியின் பிக்கப்புஇரவல் தந்த புத்தகம்இரவில் கண்ட சொப்பனம்படித்தே பண்ணிய பாயசம்கவிஞன் எழுதிய ஹாஸ்யம்சர்க்கார் போடும் கமிஷன்ஆதார் …

>>

நாகேந்திரபாரதி/ இடை வெளி

அடுத்த ஊரேஅப்போது தூரம் அங்கிருந்த உறவுகளோஅப்போது பக்கம் அடுத்த நாடேஇப்போது பக்கம் இங்கிருக்கும் உறவுகளோஇப்போது தூரம் பக்கமோ தூரமோஇடை வெளியில் இல்லை

>>

ப.மதியழகன்/எனக்கு காதல் பிறந்திருக்கிறது

விடியலிலேயே எழுந்துவிடுகிறேன்தினமும் ஷேவ் செய்கிறேன்மடிப்பு கலையாமல் உடை உடுத்துகிறேன்அவசர அவசரமாக சாப்பிடுகிறேன்கண்ணாடி முன்பு அதிகநேரம் நிற்கிறேன்ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்கிறேன்விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்உறக்கமில்லாமல் புரண்டு படுக்கிறேன்தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறேன்புத்தகத்தின் நடுவே மயிலிறகு வளர்க்கிறேன்அடிக்கடி மணி பார்க்கிறேன்கந்தசஷ்டி கவசம் படிக்கிறேன்நெற்றியில் விபூதி …

>>

கோசின்ரா கவிதை

சாதிக்கெதிரான ஒரு கவிதையை காதலித்தேன்அந்த கவிதையிலிருந்தஒரு பெண்ணையும் காதலித்தேன்ஒரு நாள் கவிதையோடு பேசிக்கொண்டிருந்த போதுஅந்தப்பெண்ணும் வந்தாள்கவிதையின் குலம் கோத்திரம் பற்றி சொன்னேன்அவள் என்னுடைய குலம் கோத்திரம் கேட்டாள்நான் சொன்னேன்அப்புறம் அவள் விடை பெற்று சென்று விட்டாள்பிறகு அவளுடைய கவிதையும்ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் …

>>

வானவில் கே.ரவி /பொம்மலாட்டம்

கோடிக் கணக்கில் நீயே பிரிந்துபொம்மலாட்டம் ஆடுகிறாய்ஒவ்வொரு பொம்மைக்கும் ஒருவிரல் என்றால்எத்தனை விரல்கள், எத்தனை கைகள்!எத்தனை கோடி நட்சத்திரங்கள்!எத்தனை கோடி அணுத்துகள்கள்அத்தனையும் ஒரே புள்ளியில்போட்டடைத்து வைத்தாய்!கொஞ்சம் சிலுப்பிக் கொண்ட போதுபுள்ளியைப்போட்டுடைத்து விட்டாய்!அடைப்பதும் உடைப்பதும் உன்விளையாட்டுஅகப்பட்டுக் கொண்டேன் என்றுநான்அங்கலாய்ப்பது கேட்டுநீசிந்தும் புன்னகைக்குத் தானிந்தப் பாட்டு …

>>

நாகேந்திர பாரதி/வாழ்க்கை இனிது

எடுப்பதில் இல்லைஎன்றுமே இன்பம் கொடுப்பதில் இருப்பதேகுறைவில்லா இன்பம் எத்தனை காலம்என்பது தெரியாது எத்தனை மனிதர்கள்என்பது தெரியாது மனிதரும் காலமும்மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்துமகிழ்வது இனிது

>>

செந்தில் பிரசாத்/ முதுமை

சேகரித்து வைத்தகவிதைகளைசெலவழிக்க துணிந்தகாலம்.பதுக்கி வைத்தநினைவுகளைஅசைபோட பணிந்தஞானம்.கடந்து வந்தபாதையைபின்னோக்கி இழுத்தநேரம்.எப்படி எல்லாமோ வாழ்ந்துகடந்த பின்எப்படியாவது இருக்க முடிந்தஉண்மை நிலைமைஉணர்த்திய உயரிய பருவம்.

>>

சாய்ரேணு சங்கர் கவிதை

எந்த முகம் கண்டதாலேஎழுவினைகள் நீங்கிடுமோஅந்த முகம் முன்புவந்துஇப்போது தோன்றிடுமோஇன்று காணும் எந்தன்முகம்எழில்வடிவாய் வந்தமுகம்இணையிலாத ஆறுமுகம்இன்பமினி ஏறுமுகம் ஈசன்விழி யாத்தமுகம்எனதன்னை பூத்தமுகம்பாசமுடன் இவரிருவர்பாலருக்குத் தந்தமுகம்கதிரின்முகம் அக்னிமுகம்காப்பதிலோ மாலின்முகம்விதிஞானம் அனைத்துமாகும்வித்தகனார் வேலின்முகம் அஜமுகியைத் தண்டித்தஐயனார்க்கு அண்ணன்முகம்கஜமுகனை க்ரௌஞ்சத்தைக்கதறவைத்த கந்தன்முகம்கஜமுகனார் மூத்தவராம்கடவுளுக்குத் தம்பிமுகம்த்வஜமெனவே பகைவனையும்செய்தகருணை நம்பிமுகம் …

>>

தங்கேஸ்/தலைக்கு மேல் உரசிச்செல்லும் பறவையின் நிழல்

தலைக்கு மேல் உரசிச்செல்லும்பறவையின் நிழலொன்றுஞாபகமுற்ற நெஞ்சை சிறகு விரிக்கசொல்கின்றது முகில்யானை கூட்டங்களின்காலடியில் விம்மி மிதிபடச் சொல்கிறது உருத்தெரியாமல் மழையாய் பொழிந்துபின்புமறைந்து போ என்கிறது தூக்கனாங்குருவி கூட்டுக்குள் உருளும்வெண்முட்டைகளுக்குஇரவெல்லாம் காவல் இரு என்கிறது ஒரு கோடையில் தண்ணீரற்ற துளசி செடியாய்பட்டுப்போ என்கிறது உறங்கவிடாத …

>>

வைத்தியநாதன்/தொலை தூரம்

தொலைந்து போனவர்கள்என்றார் கந்தசாமி –மெய்தான்-என்றாலும்சமூக ஊடகங்கள்இருந்தாலும்-தடை விதிக்கிறோம் ரத்து செய்கிறோம்தொலைக்கிறோம்மீட்கிறோம்தொலைந்து போகிறோம்மீட்கப் படுகிறோம் –என்றாலும்இருந்தாலும்மெய்தான்கந்தசாமி –ஆதூரம்தொலைதூரம்தான்.

>>

இராஜாமணி/காலச்சக்கரம்

சிறுவயதில்அப்பாவோடு பயணிக்கும் பொழுதுபெரிய ட்ரங்க் பெட்டி நான் பயணிக்கும் போதுஆடம்பர சூட்கேஸ் இப்போ குடும்பமாய் பயணிக்கிற வேளைஅவரவர் உருட்டிச்செல்லசக்கரம் வைத்த பெட்டி காலம் மாறிபெட்டி மாறியதிலரயில் நிலையத்தில்சிவப்புச்சட்டை போர்ட்டர்குந்த வைத்து வெறுமே உட்கார்ந்து பெட்டியோடுஓட்டிய சக்கரத்தையேவெறித்துக் கொண்டிருந்தார்.

>>

‘ ஜி.பி.சதுர்புஜன்’/திருவல்லிக்கேணி பார்த்தசாரதி!

அல்லிக்கேணி அழகனே! ஆண்மகனே!நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையனே!அமரத்துவம் பாரதிக்கு அளித்தவனே! என்வாழ்விற்குத் துணையாக வந்தோனே! மீசை வைத்துப் பாரதியைச் சாய்த்தோனே! என்ஆசையெல்லாம் அறிந்து அடக்கி ஆள்வோனே!சிவனே மட்டும் என்று சிந்தை வைத்திருந்தவனைசில கணம் என்னைப் பார் என்றே சொன்னவனே! வரிசையிலே …

>>

விஞ்ஞானி/கவியரங்கம்

கவியரங்கத்தில் நான்ஒலிபெருக்கி முன்ஆவேசமாக கடவுளை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரும் அதை மதித்ததாகதெரியவில்லை காதலை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரையும் அது பாதித்ததாகதெரியவில்லை துன்பங்களை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரும் அதை கவனித்ததாகதெரியவில்லை இன்பங்களை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யார் காதிலும் விழுந்ததாய்தெரியவில்லை உண்மையை பற்றி எழுதமாட்டேன் …

>>

செ.புனிதஜோதி கவிதை

அவனின் ஒவ்வொரு பெயரையும்அரோகரா கோஷத்தோடுமெய் உருகபெண்கள்விளம்பிக்கொண்டிருந்தனர். மலரிடம் தேன் அருந்தும் வண்ணத்துப்பூச்சியின் சிறகாய்திறந்தும்,மூடியும்தன் சொரூப விளையாட்டைக்காட்டினஒவ்வொரு இதழும். அவனின்ஒவ்வொரு பெயரிலும்தேன் குழைந்த தித்திப்பைகவிதை உணரத்தொடங்கியதைஅவன் உணந்தானோஎன்னவோ? எம் தமிழ் புலவர்கள்உணர்ந்திருந்தனர்அந்த ஆன்மாஎங்கிருந்தோஎனக்குள்ளும்எழுதத் தொடங்கியிருந்தது இப்போதுமழை விழுந்தநிலமெனமாறிகொண்டிருந்தேன். அந்தக்கந்தன்,கடம்பன்இன்னும்,இன்னும்அழகாய் தெரிந்தான்எம் தமிழால்.

>>