சசிகலா விஸ்வநாதன்/நினைவு நாள்

நல் நினைவுகளைநிலத்தில் விட்டுசெல்பவர்கள், செவ்வனேசென்று இருப்பர்.தாபம் அவரை ஒருபோதும் தாக்காது.இருக்கும் போதுஇருந்து வாழ்பவர்,மறுமையிலும் அவ்வாறே; வருந்தார்.தீதென அறிந்துதீச்சொல் அறையார்.நினைவு நாள்அனுசரி; தவறில்லை;நயந்து.பயந்தல்ல; அன்னமும்,ஆடையும்,இன்வார்த்தையும், நற்பொருளும்,அளி; உன் தகுதியில், அவர்க்கு.எடுப்பதில் முனைவர்க்குகொடுப்பதிலென்ன மனநிறைவு;உனக்கு? வருடம்இரு முறைதம்பியர்,தங்கையருடன்சேர்ந்து நீத்தோர்நினைவில் நீந்தி,இன்புற்று இருக்க உன்னால் முடியுமெனில்அதுவே …

>>

புனித ஜோதி கவிதை

ஓடி,ஓடிதேடி அலைந்தபிறைதன்னில்பௌர்ணமியைக்கண்ட பெருமிதம்… ஒற்றையடிப்பாதைதன்னில்இரு திசைகள்உணர்ந்ததருணம்… ஒரு இருண்மையைகைப்பிடித்துநடக்கையில்தன்னிலிருந்தேபுறப்பட்டக்கலங்கரைவிளக்கம் இங்கேபாதைகள்எல்லாம்நமக்குள்பார்க்கும் விதத்தில்ஆயிரம் ஓட்டைகள்

>>

விஞ்ஞானி/சார்லி சாப்ளின்.

மழை பெய்துக் கொண்டிருந்ததுஇவனுக்காக அழுவது போல. திண்ணையில் நின்றபடிமழையைபார்த்துக்கொண்டிருந்தான்வீட்டிற்குள் அழுகை சத்தம்இவன் அழவில்லைஇவன் ஆண்மகன்.அதனால் அழவில்லைஆனால் அழவேண்டும்போலிருந்தது சார்லி சாப்ளின்மழையில் நனைந்தபடிபிறருக்கு தெரியாமல்அழுவேன் என்றதுநினைவுக்கு வந்தது. சட்டென தெருவில் இறங்கிமழையில் நனைந்தபடிநடந்தான் சில அடிகள் வைப்பதற்குள்பின்னால் சத்தம்.திரும்பி பார்த்தான்அவன் அம்மாஇவன் தலைக்கு …

>>

எஸ் வி  வேணுகோபாலன் /தாய்நாடும் தாயும்

தயார் நிலையில்இருக்கிறதுஇராணுவம் என்றுமக்களுக்குத்தொலைக்காட்சி செய்தியில்தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அதிபர் ஒருவர் கண்ணீர்துடைத்துக் கொள்கிறாள்ஓர் அன்னை எல்லைக்குஇரண்டு பக்கம் இருக்கும்சிப்பாய்களுக்காகவும்!

>>

விஞ்ஞானி/இந்தியன் பட்ஜெட்

பட்ஜெட் பற்றியசெய்தியாளர்கேள்விக்கு எப்படி போட்டாலும்துண்டு விழுகிறதுமாத கடைசியில்கைமாத்து வாங்கிசமாளிக்கிறேன்என்றான்இந்திய குடிமகனாய். ()

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

எல்லா வேளைகளிலும்உங்கள் குழந்தைத்தனங்கள்ரசிக்கப்படுவதில்லை… எல்லா பொழுதுகளிலும்உங்களது வேசங்கள்பொருந்துவதில்லை.. எல்லா நாட்களிலும்உங்களுக்கான நாள்அமைந்து விடுவதில்லை.. எல்லா பயணங்களிலும்உங்களின் இலக்குவந்து விடுவதில்லை.. எல்லா மனங்களிலும்உங்களுக்கான அன்புகிடைக்கப்பெறுவதில்லை.. எல்லா முயற்சிகளிலும்உங்களுக்கான வெற்றிகிடைத்துவிடுவதில்லை.. எல்லா எழுத்துக்களிலும்உங்களுக்கான வரிகள்கண்டறியப்படுவதில்லை.. எல்லா நியாயங்களிலும்உங்கள் நியாயங்கள்பேசப்படுவதில்லை.. இந்த கவிதை கூடஎல்லா நேரங்களிலும்பேசப்பட …

>>

எஸ் வி வேணுகோபாலன்/இயற்கை

தன் பிம்பத்தைக்கண்ணாடியில் அல்லநீரருந்தும்ஓடையில் கூடப்பார்த்துக் கொள்ளாதுநடந்து போகிறது வேங்கை யாரும்அடைமொழிகளோடுஅறிமுகம்செய்விக்காமல்பேசத் தொடங்குகிறது கிளிபாடிக்கொண்டிருக்கிறது குயில் அகந்தையோடு அல்லஇயல்பானகம்பீரத்தோடுநடக்கிறது மயில் தன்னை இன்னுமின்னும்வியந்து பார்க்கின்றனர் மனிதர்கள்என்பதறியாதுஇயங்கிக் கொண்டே இருக்கின்றன எறும்புகள் இந்தக் கவிதையைவாசித்துஒன்றும்ஆகப் போவதில்லைஇந்தக் கணம்சன்னல் வழிஎன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்வீட்டு மொட்டை …

>>

வைதேகி./நம்பிக்கை..

நாள்தோறும் பேருந்தில் ஏறியவுடன்மூன்று பேர் இருக்கையில் உடைமைகளைபரப்பியபடி ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கும் பெண்மணிநகர்ந்து இடம் தரும் வரை…நின்று கொண்டிருக்கின்றேன்..என் தோள்பையின் கனத்தையும்புன்னகையின் வீரியத்தையும்என்றாவது ஒருநாள் உணர்த்தி விடமுடியுமென்றபெருநம்பிக்கையை கைப்பிடியாய் பற்றிக்கொண்டு….

>>

அலெஜாண்ட்ரா பிசார்னிக் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் கவிஞன் என்பவன்சிறந்த சிகிச்சையாளன் என்றும் கருதப்படுகிறது.அந்த வகையில்கவிதைச் செயல்பாடானது பேயோட்டுதல்,செப்பிடு வித்தை காட்டுதல்ஆகியவற்றோடு கூடுதலாக,பழுது நீக்கும் பணியுடனும்சம்பந்தப்பட்டிருப்பது.ஒரு கவிதையைஎழுதுவது என்பதுஅடிப்படையான காயத்தை,அதன் கண்ணீரை சரிசெய்வதாகும். ஏனெனில் இங்கே நாம் எல்லோருமே காயமடைந்துள்ளோம்.

>>

விஸ்வநாதன் ரமேஷ்/ஆற்றாமை

அலெக்ஸ் இந்ரஜால் காமிக்ஸ் படிக்ககொடுப்பான்கந்தசாமிகால்பந்து கபடிவீரன்சிராஜுதீன் பிரியாணிசாப்ட்ரியா மாப்ளஎன்று அன்புடன்கேட்பான்பரமசிவம்அவன் கடைபொட்டுக்கடலைஒரு கைப்பிடிகூட கொடுப்பான்பாஸ்கர் எனக்குசைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தான்கண்ணன்டேபிளில் தாளம்போட்டுக் கொண்டுமங்கியதோர் நிலவினிலேஅற்புதமாகப் பாடுவான்சுப்புராஜ் தான்அந்த மாதிரிகதைகள் அதிகம்சொல்வான்கல்லா மாங்காஅடிக்க தனி கும்பல்நவராத்திரி சுண்டலுக்குஒரு தனி செட்டுகுளத்தை எல்லோரும்துவம்சம் செய்யநான் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/என்ன செய்யப் போறீங்க

உலகின் மூலை முடுங்கெங்கும் ஒலிக்கும் உன்னதக் கேள்விஎன்ன செய்யப் போறீங்க… உதாரணத்திற்கு ஒன்று…கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு …எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க …ஆவேசமாக, அழுகையாக, ஆதங்கமாகஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன…என்ன செய்யப் போறீங்க….அடுத்தொரு பிரச்சினை வரும் வரை ஒலிக்கும்….பிறகும் ஒலிக்கும்… அடுத்தப் பிரச்சினைக்காக … …

>>

ப.மதியழகன்/குடை

எனக்கு நனைவது பிடிக்கும்எனவே குடை எடுத்துச்செல்வதில்லைமழை இயற்கையின் அற்புதம்அதற்கா கறுப்புக் கொடி காட்டுவதுபூமி மீது வானம் கொள்ளும்கருணையே மழைநான்கு சுவர்களுக்குள்அடைபட்டுக் கிடந்தாலும்வானத்துக்குக் கீழே தான்நாம் வாழ்கிறோம்மழைக்காலத்தில் மட்டுமேவரும் குடைகளின் திருவிழாமற்ற நேரங்களில்கேட்பாரற்று தூசி படிந்துஓர் மூலையில் உறங்கும்குடைக்கம்பியில் சிலந்திவலை பின்னும்கறுத்த மேகமும்ஈரக் …

>>

எஸ்ஸார்சி/ஜனநாயகம்

அமெரிக்க பூர்வீகக் குடிகள்அரைக் கோடிபேர்அமெரிக்க மொத்த ஜனத்தொகையில்ரெண்டு சதவிதம் இது98 சதவிதம் வந்தேறிகள்சமூகம்தான் இதுஅமெரிக்காவில்326 நிலத்திட்டுகளில்வாழட்டும் அவர்கள்ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்ரிசர்வேஷன் நிலம்.சட்டம் ஒழுங்குநிதி ஆளுகையெனபூர்வீக குடிகளின்அத்தனைப் பிரச்சனைக்கும்மொத்தமாய் அரசாங்கமேபொறுப்புமக்களால் மக்களுக்காகமக்களுடையஎன்ன விளக்கம்தருவார்களோ. கவிதை வாசிப்பு இணைய அரங்கு

>>

ப.மதியழகன்/யானை

குடியிருப்புப் பகுதியில்யானையின் கால்த்தடம்கோவில் யானை போலல்லகாட்டு யானைகள் மூர்க்கமானவையானையைக் குறித்த வதந்திஅப்பகுதி முழுவதும்தீயாய்ப் பரவியதுதினந்தோறும் விதவிதமானபுரளிகள்காத்திருந்த வனத்துறையினரின்கண்ணில் விரலைவிட்டு ஆட்டியதுஅக்காட்டு யானைஎதைத் தேடி வந்திருக்கும் எனஅவர்களால் யூகிக்கமுடியவில்லைமாநிலத்தின் மொத்தகவனமும் அவ்வூரின்பக்கம் திரும்பியதுபெண் யானைக்குமதம் பிடிக்காதுஎன்ற செய்தி சற்றுஆறுதலாய் இருந்ததுஇரவில் நடமாட வேண்டாம்என …

>>

நாகேந்திர பாரதி/கூரைத் தீயில் குஞ்சுகள்

கூரைத் தீயின் ஓரச் சிவப்புவேடிக்கை காட்டியதுவினாடி நேரம்தான் விறுவிறென்று மேலேறிவிழுந்ததும் தெரிந்ததுதீ சுடும் என்று தோல் எரிந்து கரியாகிதுவளும் போது பஞ்சு மிட்டாய் வாங்கி வரும்அப்பா நினைப்போடும்பாடம் சொல்லித் தரும்அம்மா நினைப்போடும்தோளில் தூங்க வைக்கும்தாத்தா நினைப்போடும்பக்கத்தில் படுத்திருக்கும்பாட்டி நினைப்போடும் துடிதுடித்தபடியேதூங்கிப் போனோம்

>>

தங்கேஸ்/நிழல்களின் விளையாட்டு

நிழல்களின் வழியேபாதை கண்டு பயணிப்பவன்நான் நிழல்களில் தான் பேதங்களில்லைஇனம் மதம் நிறம் பால் எனபாகுபாடுகள் இல்லை சில நேரம் குதித்து குதித்து வரும்நிழல்களை பார்க்கும் போதுமனதை பார்ப்பது போலவே இருக்கும் நடனமிடும் சுடரின் நிழல்நடராஜரின் அம்சம் திரியின் நிழல்பேசும் மௌனத்தின் நாவுகள் …

>>

பானுமதி ந/சலன மெழுத்து

அமைதியாக இருந்தது அந்தக் குளம்நான் எறிந்த கல் அலையலையாய்தாத்தாப் பூச்சி பறப்பது போலநடனமிட்டு அதன் சலனத்தின் மேல்எழுதி எழுதி மூழ்கியது.அரசிலைகள் கீழ் நோக்கி வளைந்துஅதைப் படிக்கப் பார்த்தன.மதியின் ஒளியும் அதை ஆய்வு செய்யப் பார்த்ததுமௌன குருவும், அங்கிருந்த பிள்ளையாரும்சிரித்த ஒலி அதன் …

>>

நாகேந்திர பாரதி/ஆவி அணைஞ்சுச்சா

(இன்றைய சொல் புதிது ஜூம் நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள்) குனிஞ்சு படிக்கிறப்போகுப்புன்னு மின்னுச்சாநிமிந்து பாத்தாக்கநெருப்புன்னு தெரிஞ்சுச்சா ஓடக் கிளம்புறப்போஓலைத்தீ தடுக்குச்சாசுத்திக் கரும்புகையாகண்ணைக் கருக்குச்சா கத்திக் குரலெடுக்கதொண்டை அடைச்சிருச்சாதண்ணித் தாகத்தில்நாக்கு வறண்டுடுச்சா வீட்டாரின் நினைப்பெல்லாம்விக்கலாய் வந்துச்சாவெளையாண்ட இடமெல்லாம்கண்ணுக்குள் ஓடுச்சா பக்கத்துப் …

>>

ஆத்மாநாம் /பதில்

குற்றுகர முற்றுகரச் சந்திகளைசீர்சீர் ஆய்ப் பிரித்துதளை தளையாய் அடித்துஒரு ஒற்றை வைத்துசுற்றிச் சுற்றி வந்துஎங்கும் மை நிரப்பிஎழுத்துக்களை உருவாக்கிபொருளைச் சேர்த்துவார்த்தைகள் ஆய்ச் சேர்த்துஒவ்வொரு வாக்கியத்திற்கும்கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்துஏதாவது சொல்லியாக வேண்டும்நமக்கேன் வம்பு

>>

ஆத்மாநாம் /சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்நீங்கள் யாரென்று சொல்லுங்கள்உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்முழித்த முழி முழியையே முழுங்கும் போலநீங்கள் யாரானால் என்னநான் யாரானால் என்னஅனாவசியக் கேள்விகள்அனாவசிய பதில்கள்எதையும் நிரூபிக்காமல்சற்று சும்மா இருங்கள்

>>

மதுவந்தி/அறை காலியாய் இருக்கிறது

அறையில் நான்தனியே இருந்தவரைஅறை காலியாக இல்லை. ஜன்னலை மூடிகதவைச் சாத்திவெளியே வந்தபின்அறை காலியாய்இருக்கிறதெனத்தோன்றியது. காலியாகத்தான்இருக்கிறதாவெனதிறந்து பார்த்தால்மீண்டும் அறையில் நான். அறைக் கதவைச்சாத்தியபின்அறை காலியாகத்தான்இருக்கிறதா?. . 14.06.24.

>>

ஆத்மாநாம்/பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய் போ.பிச்சை பிச்சை என்று கத்து.உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை.எல்லையற்ற பெருவெளியை கடக்கணும்.உன் பசிக்காக உணவு.சில அரிசி மணிகளில் இல்லை.உன்னிடம் ஒன்றுமே இல்லை.சில சதுரச் செங்கற்கள் தவிரஉனக்கு பிச்சையிடமும் ஒருவருமில்லை.உன்னைத் தவிர. இதனைச் சொல்வதுநான் இல்லை நீதான்

>>

ஆத்மாநாம்/அன்பு

அன்பு என்பதேகாண அரிதான உலகில்கொடூரம் அளப்பரியதாக உளதுஊசி ஏறிய அவள் கைவிரலில்ரத்தம் கசிகிறதுதுண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறதுமேலாளன் வருகிறான் அவன்வணிகப் பேச்சோடுசிகித்ஸைக்கு வேண்டியஅன்பு கூடவா இல்லைதுணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றனமனிதன்நிர்வாணமாய்த் திரிகிறான்நகரமெங்கும்அன்பைத் தேடிபயத்துடன்

>>

ஆத்மாநாம்/கண்டிப்பாக

விற்பனைஒரு அழைப்புநீங்கள்ஏதாவது ஒரு இடத்திலாவதுவாங்கியாக வேண்டும்மனைவியைபிள்ளைகளைஇத்துடனில்லாதுகடைகளில் ஏதாவதுஇன்றைக்குஇலக்கியம் ஒரு பொருள்அது உயிரல்லாததுஉயிருள்ள இலக்கியம்இன்றைக குமௌனமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றதுநீங்கள்ஏதாவது ஒன்றைச் சொல்லியாக வேண்டும்

>>

எஸ் வி வேணுகோபாலன் /காதல் கடத்தி

காஃபி வெறும் பழக்கமல்லவெற்று நடைமுறையும் அல்ல காஃபி ஒரு கடிகார முள் சிலருக்கு –காலத்தைச் சரியாகக் காட்ட வேண்டும்அன்றாடத்தின் ஒவ்வொரு காஃபியும் காஃபி அருந்துவதற்கு அல்லபேச வைப்பதற்குசொக்க வைப்பதற்குநாக்கிலேயே குடியிருப்பதற்குநினைவில் தங்கி வாட்டுவதற்கு விரலில் சுற்றிவிட முடியுமெனப்படும்டாக்கா மஸ்லின் சேலை போலவேஇறுதிச் …

>>

தங்கேஸ்/மீன் குஞ்சுக்களைப் போல

ஒரு சிறிய தேங்காய் சில்லுக்காகபொறியில் அகப்பட்டுசெத்துப் போனபருத்த எலியின் குரு மிளகு கண்கள்இன்னும் மனதிற்குள்உருண்ட படியே தான் இருக்கின்றன வெட்டுப்பலகையில்விறைத்துக் கிடக்கும்கெண்டை மீனின்விரிந்த விழிகளுக்குள்கடல் வண்ணம்தீர்ந்து விடாமல்இன்னும் கொஞ்சம்மிச்சமிருக்கிறது பாதியில் முறிந்து போனஒரு அந்தரங்க கவிதை கூடதொண்டைக்குள் மாட்டிக் கொண்டகெளுத்தி முள்ளைப் …

>>

மோகன் ஜி/அந்தி மயக்கம்

சற்று நேரம் அப்படியே நில்லும்ஆதித்யரே!சந்தி பண்ணி முடித்து விடுகிறேன்.கொஞ்சம் காயத்ரியை வாங்கிக் கொண்டுதெம்பாகச் செல்லும் வே! நாளை உதயகாலம் ‘பல்’லென்று விடிவீர் தானே?யுகம்யுகமாய் எரிந்து கொண்டிருப்பதாய்சலித்துக் கொள்ளாதீர்!ஒரு நாள் நீர் உதிக்காமல் போனால்என்னாகும் என நினைக்கவே இயலவில்லை. இருந்த வரை பெற்றோர் …

>>

நாம்/விஸ்வநாதன் ரமேஷ்

:இருக்கிறார்கள்எல்லோரும் இருக்கிறார்கள்எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள்எல்லோரும்மிக கவனமாகஇருக்கிறார்கள்எல்லோரும்மிக மிக கவனமாகஇருக்கிறார்கள்இருக்கிறார்கள்.

>>

ஆத்மாநாம்/குளிர் கண்ணாடிகள்

குளிர் கண்ணாடிகளைஅணிந்து கொண்டேன்சாயம் பூசப்பட்ட உலகம்ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.சாயம் பூசப்பட்ட மனிதர்கள்என் கண்களை உற்றுப் பார்த்தனர்ஒருவன் என்னைக் கேட்டான்ஏன் இந்தக் கண்ணாடி..ஆயிரம் காரணங்களைநான் கூற எத்தனித்தேன்உண்மையை அவன் நம்பவேயில்லை.கணணாடியைக் கழற்றி வைத்தேன்உலகம்ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.

>>

செ.புனிதஜோதி/கனவு

நிறைவேறுமா?நிறைவேறாதா?பதற்றத்தைகையில் பிடித்தபடிஅழைத்துச்செல்கிறான்கனவை… நெருக்கடிகள் சூழும் வேளையில்திருவிழாவில் கைநழுவும்குழந்தையைப் போல்தொலைக்க நினைப்பான்.. கொள்கைப் பிடிமான நாளில்கலவி முடிந்துநெற்றியில் முத்தமிட்டுஅணைத்துக்கொள்ளும்தலைவனைப்போல்மகிழ்வான்.. பசியை நிரப்பி விட்டுகலைகூத்தாடியைவேடிக்கை காணும்கனவிற்கு மட்டும்எந்தவொரு வலியுமில்லை விரட்டி அடிக்கமுடியாமல்ஒட்டிக்கொண்டகனவினால்பொதிசுமக்கும்கழுதையாய்மாறியமன முதுகில்மட்டும்எப்போதும்பள்ளம்.

>>

க. மோகனரங்கன்/கிழக்கிருத்தல்

அம்மாவுக்கு நான்அடிக்கடி வந்து பார்ப்பதில்லைஎன்று என்மீது குறை.எப்போதும் உடனிருப்பார்என்று நம்பிய அப்பாஇடையிலேயேஇல்லாமல் போய்விட்டார்.சகோதரர்களோடு பெரிதாகசச்சரவு ஏதுமில்லை.காதலைச் சொன்ன பெண்யாரையோ கல்யாணம் செய்துகொண்டுநிறை வாழ்வு வாழ்கிறாள்.உற்ற நண்பர்கள்ஒரிரண்டு பேர் உண்டுஅவர்களும் அவ்வப்போது காணாமல்போய்திரும்ப வருவார்கள்.வேலை செய்யும் இடத்திலும்வேற்றுமை பாராட்டுபவர்கள்இருக்கவே செய்கிறார்கள்.வீடு வேறு வழியில்லாமல்என்னைச் …

>>

அதிரன் கவிதை

முதல் முறைஇசைக்கருவி ஒன்றைகையில் ஏந்தி நிற்கிறேன்.அதன் முறுக்கேறிய தந்திகள்மீட்ட அழைக்கின்றனஎன் விரல்களை.மீட்டலின் நீட்டலில்மெல்ல பரவுகிறதுஅறை எங்கும்ஒரு அபசுரத்தின்முதல் சுரம்.

>>

கி. நாராயணசுவாமி கவிதை

மீனுக்காக வளைந்து தவமிருந்தகொக்கின் தலைச் சிறகைச்ஊதி சிலுப்பி செல்லும் கூதற் காற்றிடம்பனித்துளியில் பதுங்கி இருந்த கொக்கின் பிம்பம் கேட்டதுகூ சவில்லையா உனக்குவெண்ணெய் மெத்தையை தடவிப் படரும் சுகம்அரிதினும் அரிதானது என்ற கூதற் காற்றைப் பார்க்கசற்றே தலை நிமிர்ந்த கொக்கின் ஒற்றைக்காலின் கீழேவாளை …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

வயது வித்தியாசம்பார்க்காமல் வருகிறதுபல கவலைகள்..வயது வித்தியாசம்பார்த்து வருகிறதுசில கவிதைகள்.. ஒரு படிக் கவலைகளால்கனவுகளெல்லாம்கண்ணீராய் ஓடுகிறது..ஒரு பிடிக் கனவுகளால்கவிதைகளெல்லாம்கானல்நீராய் ஓடுகிறது.. ஒரு கவலைமனசெல்லாம் அப்பிக் கொண்டால்துயரக் கவிதை பிறக்கிறது..ஒரு கவிதைமனசெல்லாம் படிந்து கொண்டால்துயரமே பிறக்கிறது.. கவலைகள் நம்மை எப்போதும்அழச் செய்கிறது…எப்போதாவது எழுச் செய்கிறது..கவிதைகள் …

>>

மீ. விசுவநாதன்/”நாளொன்று போனது அவ்வளவே.”

மாதா கோவில் மணி ஓசைமசூதியின் தொழுகை ஒலிஆலய மணியின் ஓசைகூடவே குண்டு வெடிக்கும் பேரிடிமக்களின் அழுகுரல், ஓலம்எல்லாமே காற்றில் கலந்து வருகிறதுசெய்தித் தாளில்அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கையும்ஊடகங்களில்ஆவேசமான காரசார அலசல்களும்சடங்காக முடிகிறதுதோளில் பாடச் சுமைகளுடன்ஒட்டகங்களாய்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்ஒன்றுமே நடக்காதது போலபடித்தவனும், பாமரனும்காலையிலேயேவரிசையாக …

>>

அழகியசிங்கர்/ஆத்மாநாமின் ஏக்கம்

ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின் கவிதை ஒன்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

>>

செ.புனிதஜோதிகவிதை

எனக்கானகவிதை நோட்டைஅடுப்பங்கரைமூலையில்ஒளித்து வைத்திருப்பேன் உனக்கானநோட்டுகளைபலரும் பார்க்கும்வண்ணம்மேசையில்பரத்தி வைத்திருப்பாய் எனக்கானவிருப்ப பாடலைகெட்போனில்கேட்டுக்கொண்டிருப்பேன் உனக்கானவிருப்ப பாடலைSpeaker மூலம்சத்தமாய் கேட்டுகொண்டிருப்பாய் உனக்கானஉணவை சமைத்து,சமைத்துஎனக்கானஉணவு எது என்பதைமறந்திருப்பேன் உனக்கானவிருப்பத்தைஎன் மீதுதிணித்து,திணித்துஎனக்கானவிருப்பம்தடயமின்றிகாணாமல் போயிருக்கும் இங்கேஎல்லாம் அப்படித்தான்உன் அதிகாரத்தின்கீழ்தான் நான்இருந்தாலும்நீ சொல்வாய்என் இல்லத்தலைவியென்று

>>

வே.கல்யாணகுமார்/பார் மகனே பார்!

குனிந்து நீ நடப்பதா நிமிர்ந்து பார்!
கொடியினைப் பிடிக்கும்முன் ஆய்ந்துபார்!
துணிவுடன் பாதையைத் தொடர்ந்துபார்!
துயரெல்லாம் உனைவிட்டு விலகும்பார்!

>>