ஹரணி கவிதை

என்னங்க நீங்கஒழுங்கா கைரேகைவைக்கமாட்டேங்குறீங்க?என்று கேட்கிறாள்ரேஷன் கடையில்பணியாற்றும்எரிச்சலுற்ற பெண்… உங்க கவிதைரொம்ப நல்லாருக்குஎன்று சொல்லும்என்னைப் பார்த்து… கவிதையெழுதும்விரலுக்குக்கைரேகை வைக்கத்தெரியவில்லை…

>>

யார் பொறுப்பு/நாகேந்திர பாரதி

பத்து வயதில்எரிந்த குடிசைக்குள்கரிக்கட்டைகளாய்பெற்றோர் உடம்பு இருபது வயதில்திருடிப் பிடிபட்டுபோலீஸ் அடிபட்டுபுகுந்த ஜெயில் வீடு முப்பது வயதில்மூணு முடிச்சோடுவந்த பெண்ணிடம்முரட்டு உறவு நாற்பது வயதில்குடியின் வெறியில்அடிச்சுத் துவைத்ததில்ஓடிய மனைவி அம்பது வயதில்ரத்தம் செத்துதரும ஆஸ்பத்திரியில்தரையில் கிடந்தது அறுபது வயதில்அழுகை வற்றிப் போய்அழுக்கு உடம்போடுகோயில் …

>>

கவிதையும் கதையும்/கல்யாண்ஜி

.*பூப்பது கவிதை.தொடுத்தது கதை.இரண்டும் பூ தான்.*கவிதை அருவி.கதை நதி.இரண்டும் நீர் தான்.*கவிதை திசை காட்டி.கதை காற்சுவடுகள்.வாழ்வுச் சாலை பொது.*கவிதை கனவு.கதை நனவு.மனம்தான் மையம்.*கவிதை நெருப்பு.கதை வெயில்.ஒன்று தொட்டால் சுடும்.மற்றதில் தொடாவிட்டாலும் நிழல் விழும்.*கவிதை என்பது கலவி.கதை என்பது பிரசவம்.ஒன்று கருவுக்கு முந்தியது.இன்னொன்று …

>>

வைதேகி/புனிதர்கள்

கரம் பற்றி பால்யம் பேசுவதும்
கடற்கரைக்கு அழைத்துச் செல்வதும் நிலவைக்காட்டி பாட்டி வடை சுட்ட கதை
கூறுவதுமென கழியும் பொழுதுகளில்

>>

வைதேகி/மறதி

நேற்றைய வசவுகளின் வீரியமகற்றி
அடுக்களைக்குள் புகுந்து புறப்பட
தோதாகத்தான் இருக்கிறது.
செய்வதற்கு ஏதுமற்ற தருணங்களி

>>

மதுவந்தி/குளத்துக்கு அலைகளில்லை

இன்று (05.11.23) விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த, எனது கவிதை கீழே பதிவு செய்கிறேன். ஆழமற்று இருந்தால்இத்தனை ஆர்ப்பரிப்புதேவையில்லை.பரந்து கிடக்காமல்நாலு எல்லைக்குள்சுருங்கிக் கிடந்தால்இத்தனை அலைக்கழிப்புதேவையில்லை.தேடித்தேடி, மீண்டும்சலிக்காமல் தேடுகிறஆர்வம் இல்லாமலிருந்தால்இத்தனை பரபரப்புதேவையில்லை.ஆர்ப்பரிப்பும்அலைக்கழிப்பும்பரபரப்பும் இருந்தாலும்உலகைத் தலைகீழாய்புரட்டவியலாதுஎனத் தெரிந்தும்தெரிந்ததைமறக்க வழியில்லை.புரிந்ததைதொலைக்க வழியில்லைசிந்திக்கத் தெரிந்தமனசுக்குஅதுவே …

>>

ஞானக்கூத்தன்/சொர்க்கவாசல்

பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியன்று சொர்க்க வாசலென்று வடக்கில் ஒரு கதவைத் திறக்கிறார்கள்
சொர்க்க வாசல் வழியாய்
மக்கள் பரவசப்பட்டுப் போகிறார்கள்

>>

ஆர். வத்ஸலா/தவறுதலாக ஒரு விடுதலை

இன்றைய இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை – சாலை ஓரத்திலமர்ந்துவிரித்த விழிகளால்வருவோர் போவோரைவேடிக்கை பார்த்துக்கொண்டு நான் –அப்பாதையில் பயணிக்ககுறிப்பிட்ட ஒரு சிலருக்கே சீட்டு என்பது போல மற்றவர் போலல்லாமல்நின்றுநீ என்னை திரும்பிப் பார்த்தாய்எனக்கு உரமூட்டிவேரூன்றிப் போன என் கால்களைஅதிசயமாக நடக்க …

>>