மதுவந்தி/வீதியுலா
உற்சாகத் தேரில்உலா வரும் சாமிபார்க்கப் போகணும் அசைந்தாடி தேரில்கண்கொள்ளா காட்சிதரும்சாமி காண மகிழ்வு சாமி நம்மைப் பார்ப்பார்என்பது அதிமகிழ்வு. .(25.03.25 தபாலட்டையில் எழுதிய கவிதை. சேர்ந்த நாள் 02.04.25).
>>உற்சாகத் தேரில்உலா வரும் சாமிபார்க்கப் போகணும் அசைந்தாடி தேரில்கண்கொள்ளா காட்சிதரும்சாமி காண மகிழ்வு சாமி நம்மைப் பார்ப்பார்என்பது அதிமகிழ்வு. .(25.03.25 தபாலட்டையில் எழுதிய கவிதை. சேர்ந்த நாள் 02.04.25).
>>1.நான்ஒரு பறவையை நோக்கி போனேன்.அந்த பறவையோஒரு பூவை நோக்கி போனது.அப்போதுஅந்த பூ என்ன நினைத்திருக்கும்? நான் படிக்கச்சென்றுபின் வந்து பார்த்தேன்நீ எதையோ தேடிக்கொண்டிருந்தாய். பின்னர் மீண்டும் வந்து பார்க்கையில்உன்னைக் காணவில்லை. பறவையே நீ எங்கே போனாய்?உன் குட்டி உன்னைத் தேடாதா? 3. …
>>இவ்வளவுநீளவெண்டைக்காயைபட் வீட்டில்தான் பார்த்தேன் குழம்பு வைக்கஅர்ச்சனா தயாராகி விட்டாள் நான் சாப்பிடத் தயாராக உள்ளேன் இந்தக் காய் மட்டும்திமிர் பிடித்துத்தனியாய்த் தெரிந்ததுஎடுத்து வைத்துக்கொண்டேன்
>>முன்புபோல் இல்லைஎல்லாம தலைகீழாய்மாறி விட்டதுபத்திரிகை தேவையில்லையார் படிககிறாரகள்என்று தெரிய வேண்டியதில்லைமுகம் பார்த்துப்பேச வேண்டியதில்லைஎங்கும் எப்போதும்இருப்பதுபோல்இருக்கலாம்மற்றபடிஅதெல்லாம் கிடையாது
>>கவிதை எழுத வேண்டும்எது பற்றி வேண்டுமானாலும்என்றவுடன்மழை என ஒரு சொல்போதுமெனத் தோன்றியது. மழை என்றதும்உனக்குள் தோன்றும்எல்லாவற்றையும்நான் சொல்லிஏன் நிறுத்த வேண்டும்? மழையெனும்ஒரு சொல் போதுமே!!!. ( விருட்சம் கவிதைப் பட்டறை நிகழ்வில் (21.03.2025), கவிதைத் தலைப்பு கொடுத்து வாசித்த கவிதை.).
>>மழையைக் கண்டு மலைத்துப் போனான் பாலைவன நாட்டில் இருந்து பயணித்து வந்தவன் கொட்டித் தீர்த்த மழையை வெறுத்து விட்டு ஒதுங்கிய மனிதர் தம்மை விந்தை விலங்குகளாய் வியந்து பார்த்தான்!
>>படித்து பட்டம் பெற்றகிராமத்து இளைஞன்,வேலையின் பொருட்டுநகரவாசியானவன்.உடன் பணி செய்யும்பட்டணத்துப் பெண்ணைஆசை ஆசையாககாதலித்து மணந்தவன் ! நன்றாகத்தான் ஆரம்பித்ததுமண வாழ்க்கை !இருவரும் பணி செய்ததால்,வீட்டு வேலையில் பாதிஇவன் தலையில் !சனி ஞாயிறு வந்தால்துணிகள் துவைத்து,வீட்டை சுத்தம் செய்துமாலை டின்னர் வெளியில்,நைட் ஷோ கட்டாயம்! …
>>இன்றைய “சொல் புதிது” – “கவிதை பட்டறை “நிகழ்வில் உடனடி கவிதை தலைப்பு “மழை” க்கு நான் எழுதி படித்த கவிதை::-> வேகமாக பெய்ததுபோன வருட மழைகாலத்தில் பொய்த்துப் போனதுஅதனால் இப்போது பெய்யுமா?சந்தேகமே வந்ததுஇடியும் மின்னலும் இல்லாமல்பெரிய மழை பெய்கிறதுஊரே மகிழ்ச்சியில் …
>>இன்றைய சொல் புதிது நிகழ்வில் உடனடிக் கவிதை தலைப்பு ‘ மழை ‘ க்கு நான் எழுதிய கவிதை பேஞ்சும் கெடுக்கும்காஞ்சும் கெடுக்கும் மழை மட்டுமாமனமும் கூடத்தான் அடங்கி வந்தால்அமிர்தமாய் இனிக்கும் அடங்க மறுத்தால்நஞ்சாய் மாறும் ஆறும் குளமுமாய்அமைந்து போனாலும் சேரப் …
>>வானிலிருந்து கொட்டுகிறது மழைபூமியில் உயிர்கள்பிழைக்க வேண்டிஇயற்கையின் அருள் அதுமழை இன்றேல்நீயுமில்லை நானுமில்லைஎதுவுமில்லைமாதம் மும்மாரி பெய்திட்ட வாழ்க்கைமுன்னோர்களதுஇப்போதோ அச்சத்தைதருகிறதே மழைதவறுகள் எங்கிருந்தோ.
>>இன்றைய (21-03-2025) நவீன விருட்சம் கவிதைச் சந்திப்பில் நான் வாசித்த உடனடித் தோன்றல் கவிதை! வருடா வருடம்வந்து வந்து பெய்யும்இந்த மழையைஎன்ன செய்யலாம்? அண்டா குண்டாக்களில்பிடித்து வைக்கலாம். கறுப்புக் குடை பிடித்துகண்டனம் காட்டலாம். துணிமணிகளைஈரம் படாமல்ஒளித்து வைக்கலாம். கவிதை எழுதலாம். ஆனால்நான் …
>>இன்று (21.03.2025) நடந்த விருட்சம் கவிதைப் பட்டறையில் வாசித்த கவிதை பொன்வானத்திலிருந்துவந்து விழும் முத்துப்பரல்கள்எல்லாப் பருவத்திலும்நான் மழையைப் பார்த்திருக்கிறேன்பால்யம் தான்என்னைக் கைப்பிடித்துஅழைத்துச் சென்றதுமழையில் நனைவதற்குஇப்போது வாழ்க்கையிலிருந்தும்,இயற்கையிடமிருந்தும் என்னை நான்தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன்இப்போது பெய்யெனப் பெய்தாலும்எனக்கு அது மழையாகத் தெரிவதில்லை…
>>கண்ணில் பட்டதுஅழகான பெட்டி ஒன்றுஉள்ளேஒன்றுமில்லை வெறும் பெட்டிஎடுத்து வைத்துக்கொண்டேன்முன்னும் பின்னும்பார்த்தேன்எனக்குப் பிடித்திருந்ததுஆமாம்உள்ளே இருக்கிற பொருள்முக்கியமில்லையாஎன்று நீங்கள் கேட்கலாம்அது முக்கியமில்லைஇப்போதுஅழகான வெறும் பெட்டிதான்முக்கியம்அதைத் தூக்கிப்போடமனசில்லை
>>இன்னுமொரு உலக மகளிர் தினம்!பாதிக்கு மீதியின் வந்தனம்” எனகவிதை சொல்லி மலர்களும் கொடுப்பாய்.மனதுக்கு மகிழ்வாக இருக்கும்.’இ. வ . இ. பி(இரு வருமானம் இரு பிள்ளைகள்)குடும்பத்தில் இயங்குகிற எனக்குஇன்னும் கொஞ்சம் ஆசைகள்.. “ எத்தனை தரம் சொன்னாலும்மூணு கட்டு புதினா ஏன் …
>>பெண்ணொரு மலரா?இருக்கலாம்.பெண்ணொரு நிலவா?இருக்கலாம்.பெண்ணொரு தென்றலா?இருக்கலாம்.பெண்ணொரு புயலா?இருக்கலாம்.பெண்ணொரு தேவதையா?இருக்கலாம்.பெண்ணொரு யட்சிணியா?இருக்கலாம்.பெண்ணொரு போராளியா?இருக்கலாம்.பெண்ணொரு சமாதானப்புறாவா?இருக்கலாம்.பெண்ணொரு இணைப்புப் பந்தமா?இருக்கலாம்.பெண்ணொரு வெட்டுக்கத்தியா?இருக்கலாம்.பெண்ணொரு எழிலுருவா?இருக்கலாம்.பெண்ணொரு நம்பிக்கைத் விருட்சமா?இருக்கலாம்.பெண்ணொரு கடலாழ் மனப்பிரதிநிதியா?இருக்கலாம்.பெண்ணொரு வெளியா?இருக்கலாம்.பெண்ணொரு உள்ளொளியா?இருக்கலாம்.பெண்ணொரு எழுச்சியா?இருக்கலாம்.பெண்ணொரு ஏவலாளியா?இருக்கலாம்.பெண்ணொரு எஜமானியா?இருக்கலாம்.பெண்ணொரு தன்வழித் தாரகையா?இருக்கலாம்.யாரையும் சாயலுமில்லாதுயார் கருணையும் விழையாதுசுயம்புவாய் மலரும்பெண்ணொரு பெரும் சக்தியா?பெண் …
>>நாங்க என்ன ஒங்க வீட்டுக்கிள்ளுக் கீரையா?சட்டெனவேசுட்டுவிடவெள்ளை நாரையா?மாங்கு மாங்குஎன்றுழைத்தகாலமெல்லாம் போச்சு!தாங்கு தாங்கு என்று எம்மைக்கொஞ்ச நாளும் ஆச்சு! பட்டிமன்றப் பொருளல்லபாரதிப் பெண்கள்தட்டிவிட உருண்டோடும்பந்தல்ல நாங்கள்தட்டிக்கேட்டு நியாயம்கேட்கும் உரிமை யாவும்மெட்டி தாலி கட்டிவிட்டால்அடங்கியா போகும்? சட்டம் தரும் உரிமை தனைஎட்டிடுவோமேமட்டம் உயர்வு என்பதனைவெட்டிடுவோமேபட்டம் …
>>ஆண்டுக்கொருநாள் வரும் திருவிழாப்போல …பெண்ணே!உனக்கும் வருகிறது ஒருநாள்மகளிர் தினமாய். அடுக்களை வியர்வையைத் துடைத்துக்கொண்டு ..தலைவாரிப்பூச்சூடுஉனக்கு மகுடம் சூட்டுவார்கள் அதற்காக. பொருளாதாரவிடுதலை…கல்வியில் விடுதலை எல்லாம் உனக்கு வந்துவிட்டது…ஆயினும் உன்சுவைக்காகஎன்றும் எதுவும் முடிவுசெய்யப்படுவதில்லை. விலங்கைஉடைத்தவர்களெல்லாம்விடுதலை அடைந்துவிட்டார்களென்றுசொல்வதற்கில்லை. இங்கு கடவுள் தாட்சாயினியாய் இருந்தாலும்ஈசனின் உத்தரவுவேண்டும். மகளிர்தினமென்பது …
>>என்னைச் சுற்றிபார்க்கிறேன்அம்மாவாகஅக்காவாகமனைவியாகமகளாகஎன் வாழ்க்கையின்பாதியைபங்கு போட்டுக்கொண்டவர்கள் இவர்கள்அம்மாவுக்கு வீடே உலகம்அக்காவுக்கு புகுந்த வீடுமனைவிக்கு அடுக்களையும் பாப்புவும்மகளுக்கு செல்லும் டிவியும்கனவுகளுடன் வளரும்பெண் குழந்தைகளுக்குஎன்னால் சிறகுகள் தரமுடியாமல் போகலாம்கொஞ்சம் அண்ணாந்துபார்த்தால் தெரியும்நான் விட்டுச் சென்றிருக்கும்விசாலமான வானத்தைபாத்திரம் தேய்த்து தேய்த்துரேகை தேய்ந்தவள் தான்என் தலையெழுத்தையேமாற்றிக் காட்டினாள்உயிர்கள் அனைத்தும்ஏங்குவது …
>>நான் உன்னைப் பார்க்க வருவேன்மிகச்சரியாக எண்பது கிலோமீட்டர் தாண்டி..மூன்று பேருந்துகளில்மாறி மாறிப் பயணித்துமூன்று மணி நேரம் செலவழித்து…..நீ சொன்னபடிமுப்பது குட்டி கிராமங்களையும்ஆறு பெரிய ஊர்களையும்தென்னைமரங்கள்அடர்ந்துபிரியமாய் நிற்கும் தோப்புகளையும்கடப்பேன்விளையவே விளையாது என்றுபோட்டதில்தரிசாய்க் கிடக்கும் காடுகளையும்இடுப்பளவு வளர்ந்து நிற்கிற மஞ்சள்செடி தோட்டத்தையும் கடப்பேன்.அழுக்கு மனிதர்கள்அவசரக்காரர்கள்அழகானவர்கள்பேசாதவர்கள்பேசிக்கொண்டேவருபவர்கள்எல்லோரையும் …
>>நான் மனிதர்களோடு அதிகம் சகவாசம்வைத்துக் கொள்வதில்லைஒரு புறா அளவுக்கு கூட ஒரு கிளி ஒரு வெட்டுக்கிளிஒரு செம்போத்து ஒரு கது வாளிஎன் நேரத்தை கொத்தி கொத்தி தின்னஅனுமதிப்பேன்ஆனால் மனிதர்களை அல்ல ஏன்மனிதர்கள் போல அவைகள்நேரத்தை காசு பண்ணுவதில்லை ஒரு அசட்டுச் சிரிப்போடு …
>>அனுதினம் விடியலில்புள்ளினங்கள் இசைமயக்கும் சரசாங்கிசன்னலோர அணிலின் பக்க வாத்திய இசைபனி படர்ந்த புல்லில்நுணல் பாடும் பண்தெருவோர ஆலயநாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்சுவற்றில் பல்லியின்பாவனி ராகம்தென்னை மர உச்சியில் பாளையின் அசைவுசெவிக்கினியசண்முகப்பிரியாஎன் அன்னையின் இனிய ஆபேரிஇதை விட சுவர்க்கம்வேறுண்டோ இப்புவியில் !
>>நான்தினமும் பருப்பு சாதம்இல்லாமல்சாப்பிட மாட்டேன்மனைவியும்என் குறிப்புணர்ந்துபருப்பு சாதம் வைத்துவிடுவாள் அன்றுபருப்பு சாதம் இல்லைசாப்பிட முடியாதுஎன்று எழுந்து விட்டேன் ஒரு மூலையில்போய்உட்கார்ந்து கொண்டேன் பசி வயிற்றைக்கிள்ளியதுஎன்ன செய்வதுதிரும்பவும் போய்தட்டின் முன் உட்கார்ந்தேன் இனிமேல்பருப்பு சாதமேகிடையாது என்றாள் மனைவி
>>நேற்றைய கூட்டத்திற்குஎதிர்பார்த்தசிலர் வரவே இல்லை அவர்கள் கவிதைகள்தொகுப்பில்இருந்ததுதெரிந்தும் எதிர்பார்த்த சிலர்இன்னொரு கூட்டத்திற்குப்போயிருப்பார் அல்லதுசும்மாவேஎதற்குப் போக வேண்டுமென்றுவீம்பில்இருந்திருப்பார் ஆனால்அவர்கள்கவிதைகள் புத்தகத்தில்இடம் பெற்றிருக்கின்றன கவிதைகள்அவர்கள் வரவைஆவலுடன்எதிர்பார்த்து ஏமாந்துபோயிருக்கும்
>>திரும்பவும்கவிதைகள் எழுதத்துணிந்தேன் ஞானக்கூத்தன் துணைநிற்கிறார் ஏற்கனவே 600 கவிதைகள்எழுதி விட்டேன்இனிமேலும் கவிதைகள்எழுதுவேன் நயத்தை எப்படிகவிதையில் சேர்ப்பதுஎன்று யோசித்தவண்ணம் இருக்கிறேன் ஞானக்கூத்தன்துணை நிற்கிறார்
>>நேற்று வீட்டைப் பூட்ட மறந்து போய்விட்டேன். இன்று காலைமோட்டார் பைக் எடுக்கையில்வண்டியின் சாவியை எடுத்து வராமல்கீழே வந்து விட்டேன். நடைப் பயிற்சியில்ஆசுவாசப்படுத்திக்கொள்ளஉட்கார்ந்தபூங்காவின் ஒதுக்குப்புற பெஞ்ச்சில்என் மூக்குக் கண்ணாடியைவிட்டு விட்டேன். காய்கறிக்கடையில்பாக்கி வாங்காததுதண்ணீர் குழாயைமூட மறந்ததுமாத்திரை சாப்பிட மறந்ததுஏனஇப்படியானமறதிகளின் நாட்கள்அதிகமாகிக் கொண்டுவருவது பற்றிஎன்அருமை …
>>கவிதையும் எழுத வேண்டாம்ஒரு மண்ணும் எழுத வேண்டாம்என்றாள் அவள் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனமில்லைஎன்றாள் அம்மாஉருப்படியக ஏதாவது செய்யலாம்என்றார் அப்பாமுதலில் இந்தக் கவிதையைகுப்பைத் தொட்டியில்எறிந்து விட்டு வருகிறேன் என்றுபிடுங்கிப் போனான் பையன்நாயும் தன் பங்கிற்கு லொள் என்றுகுரைத்து வைத்தது வாசலுக்கு வந்தவன்செம்பருத்தியை வ …
>>பாங்கோதும் ஓசையும்தேவாலய மணிச்சத்தமும்கோவிலின் காண்டாமணிச்சத்மும்ஒட்டு மொத்தமாய் கேட்கசிதறிப்பறக்கின்றன கோபுர புறாக்கள் அது கண்டுசிலையாகிப்போய் சொல்கிறேன் அப்பாடா இப்பவாவது என் கடவுளுக்குஎன்னை விட்டு சிறிது நேரம்ஓய்வெடுக்க தோன்றியதேஅது போதும் எனக்கு
>>மகனும் மருமகளும்வீட்டு வேலை முடித்துவீட்டிலிருந்து வேலை செய்யஅவரவர் மடிக்கணினியோடுஅவரவர் அறைக்குச் சென்றுவிடமதிய உணவுக்குப் பின்கண்கள் கொண்டு செருக,எனது அறையில் சென்றுபடுத்தேன். விழிப்புக் கொடுத்தபோதுஹாலில் குழந்தைகளின்பேச்சுச் சப்தம்.மெதுவாக எட்டிப் பார்த்தால்ஊஞ்சலில் பேத்தி அமர்ந்திருக்ககீழே பேரன் அமர்ந்திருந்தான்.”நான்தான் பாட்டிஇப்போ கதை சொல்வேன் “பேத்தி சொல்லியபடிஊஞ்சலில் …
>>இயந்திரமாய்பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்தேநீர் இடைவேளைமணி சத்தம் கேட்டுஆளுக்கொரு கோப்பை தேநீருடன்புல்த்தரையில் வந்தமர்ந்துசிரித்து மகிழ்ந்துபேசிக் கொண்டிருந்தனர். மீண்டும் மணி ஒலிக்கஇயந்திரமாய் மாறிப்போனார்கள் மகிழ்ச்சி என்பதுபலரது வாழ்வில்ஒரு தேநீர் குடிக்கும் நேர அளவு மட்டுமே
>>மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு. இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன. தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டது ஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோ என்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும். அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது. அதை அனுபவிப்போம்
>>தினமும் நடை பயிலும் அதே இடம்அதே முகங்கள்ஸ்நேகமாய் புன்னகைமௌனமே மொழிசில நேரங்களில்நீண்ட இடைவெளிக்குப் பின் இன்றுவேறு சிலபுது முகங்கள்பழைய முகங்கள் எங்கே? மனம்அலை பாய்ந்ததுஇருவர் மறைந்த செய்தி இடியென இறங்கியது .நொறுங்கிப் போனது இதயம்புது முகங்களின்கையசைப்புமலர்ந்த புன்னகைஅன்பான உரையாடல்மனித நேயம்உயிர்ப்புடன்இன்றும், என்றும்என்றென்றும் …
>>நீண்டும்,நெளிந்தும்,வளைந்தும்,நிமிர்ந்தும்செல்லும் சாலைகள். ஒன்றிலிருந்து ஒன்றுதொடங்கும்.புதிதாய்ப்பளபளக்கும் சில. முதியவளின் உடலின்சுருக்கம்போல் வீறலாய்ச் சில. தறியில் நெய்திட்டசேலையெனக்கரைகட்டியவை சில. மரங்கள் அணிவகுப்பில்பீடுநடைபோடவட்டமடிக்கும் சில. வாங்கிய கடனுக்கு வட்டிகட்டாதுஉடைந்தமனமெனச் சில. சாலைகளுக்கு முடிவில்லை,மானுடத்தின்தேடலுக்கும.இல்லையே முடிவு.
>>இதுதான் கவிதையா? ‘சோ’வின்(கேள்விக்) கவிதை “கவிதை என்றால் என்னவென்று இத்தனை நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது. சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால் என்னவென்று இப்போது புரிந்தது. எழுதுவதை எழுதிவிடவேண்டும்-எதுகை மோனை நடை தாளம் …
>>எங்கள் வீட்டுப் பீரோகாதலர் தினத்தன்றுவிபரீதமாய்டைனிங் டேபிளைப்பார்த்துகாதலை வெளிப்படுத்தியதுடைனிங் டேபிளோபைத்தியம் பைத்தியம்என்றது
>>வண்ணத்துப் பூச்சிபடபடத்துபச்சிலை மேல்வீற்றிருக்கசெல்லமாய் வருடும்சிறகின் ஓசையில்பச்சிலையும்மெய் சிலிர்த்து நாணத்தில்உடல் வளைக்கவண்ணத்துப் பூச்சியும் ஸ்பரிசத்தில்முகம் சிவக்ககள்ளமில்லா காதல்களியாட்டம் அங்கேஆனந்தமான அரங்கேற்றம் ! 14/02/2025
>>ஒரு கணம் தான்முழுமையாகப் பார்த்தேன்கெழுத்தி மீன் முள்ளைப் போலஇதயத்தை கிழித்து விட்டுப்போய் விட்டது உன் பார்வை
>>நாடகத்தில் ஓவியத்தில்காதல் இனிது.!நடைமுறையில் காண்பதுவோஅநு மிக அரிது.! காவியத்தில்் கவிதைகளில்காதல் இனிது.!காட்சியிலே அனுபத்தில்அது மிகக் கொடிது.! சாதிமதம் இல்லையெனில்காதல் இனிது.!சற்றே நம் வீட்டிலென்றால்..கசக்கும் மருந்து.! அடுத்த வீட்டில்..தெருவிலென்றால்..காதல் இனிது..அதுநமது வீட்டிலென்றால்..ஏற்பவர் அரிது.! ஆண்களுக்கும் பெண்களுக்கும்காதல் பொதுஉடமை!கண்கள் செய்தபாபம் என்றால்..ஐயா அது கொடுமை.! …
>>இரண்டு காதல் வண்டுகளில்ஒன்றுதேடிவந்த ரோஜாப்பூக்களைஎங்கே காணோம் என்றுகேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று சொன்னது மற்றொன்று. இரண்டு காதல் குருவிகளில்ஒன்றுஏனிந்த பெற்றோர்கள் கவலையில்இருக்கிறார்கள் என்றுகேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று சொன்னது மற்றொன்று. இரண்டு காதல் தும்பிகளில்ஒன்றுஏன் மேல் தட்டு உணவகங்கள்வண்ணத்தில் ஒளிர்கின்றனஎன்று கேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று …
>>When you see around you,After I quit,In everything you see, you wouldSee myself, a bitOr at least may hear my voice,A hum, a tune, a stroke,May remember words and silence …
>>ஒற்றைத் துளசிஒற்றைத் துளி அமுதம்ஒற்றைத் துளி கவிதைஒற்றைச் சொட்டுச் சூரியன்ஒற்றைக் கிரண வானவில்ஒற்றை உதட்டுச் சுழிப்புஒற்றை விழிக்குறும்புயாவையும் உள்ளடக்கித் ததும்பும்உன்ஒற்றை அன்பைத் தாயேன்–இன்றைய தானமாய் எனக்கு!–
>>எழுத முடியாதஹைக்கூ நீ எல்லோரும் எழுதிபார்க்கும் புதுக்கவிதைநான் செய்வோம் வாசெய்யுள் ஒன்றை
>>நீர் விழுந்துநிலம் நெகிழ்ந்தது போல்பண்ணோடு இன்னிசை ஒன்றியது போல்அரும்பாய் இருந்ததுமலராய் மலர்ந்தது போல்காலத்தே பொழியும் சாரல் மழை போல்எவரும் அறியாத தருணத்தில்எவரும் எதிர்பாரா வகையில்;நானும் எதிர்பாரா மனதில்பூக்கிறது ; எங்கள் காதல்.ஒரிரண்டு கண்ணீர் துளிகளில்இரு மனங்களையும் ஒன்றாக்கி!வினோதம் தான்!
>>அன்பாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அறிவாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அடக்கமாய் இருக்கிறாய்பயமாக இருக்கிறது அருளாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அழகாகவும் இருக்கிறாய்அதிகம் பயமாக இருக்கிறது
>>இதய தீபத்தையாரோ தூண்டிவிட்டார்பளிச்சென வெளிச்சம் பரவியதுஇருள் மெல்ல விலகியது. 1 எனக்குள் ஒளி வந்ததுஇத்தனை நாள்அது எங்கிருந்ததோஇப்போதாவது வந்ததே மகிழ்ச்சி. 2 என்னோடு மகிழப் பலரிருக்கமகிழ்ச்சி தளும்பியதுஒளி வெள்ளத்தேஉலகம் மகிழட்டும் . 3
>>ஒரே ஒரு நாள் அல்லசமூகத்தை நேசிப்பவர்களுக்குஅன்றாடம்காதலர் தினம்இன்றைக்குச் சிறப்பு தினம் அன்பின் திறப்புஅன்பின் சிலிர்ப்புஅன்பின் இனிப்புஅன்பின் பெருக்குகாதலர் தினம் பொறுப்புத் துறப்பு அல்ல, காதல்பொறுப்பின் இணை பகிர்வுபகிர்வின் இணை கொண்டாட்டம்கொண்டாட்டத்தின் இணை மலர்ச்சி, காதல் நூற்றாண்டுகளுக்கு முன்பேஆழ ஊன்றியிருக்கும்சாதீய நச்சு வேரைஓசையின்றிக்கல்லி …
>>வலையைக் கரையில்உதறும்போதுவிழுந்த மீன்களில்ஒன்று மட்டும்தரைக்கும் நீருமாய்த்தத்தளிக்கிறது. அலைவந்து அழைக்கவில்லைஅவனுமதை எடுக்கவில்லைபெருநீர்ப்பரப்புக்க்குப்போனால் பேரானந்தம். அவனிடம் சென்றால்அரும்பசி தீர்க்கலாம். தப்பித்தலுக்கு இடம் தேடித்துள்ளித் துள்ளிக் குதிக்கிறதுஎட்டாப்பழத்துக்குக்கொட்டாவி விடுவது போல்.இருந்தாலும் இன்னுமதுதாவித் தாவி விழுகிறது. உயிர் வாழ்வதே வேண்டாம்என அதுஉள்ளே நினைக்கையில்பறந்து வந்த காகமதைப்பாய்ந்து கொத்துகிறது
>>அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் குடி வந்த புது வீடு, மிகப் பிடித்துப் போனது.சிறு வீட்டு வாசலில், கண் பறிக்கும்வண்ண மலர்ச் செடிகள்.விளக்கெரியும் துளசி மாடம்,நேர்த்தியான கோலத்துடன்.பெரிய மொட்டை மாடி ,நடக்க மிக வசதி.வரும் பறவைகள் ஏராளம்.நித்தம் …
>>கொழிக்கும் வளமும் கொள்ளை அழகே!செழிக்கும் இயற்கை உயிர்வளி வீசும்!பொழிலின் அழகில் மகிழ்ச்சி பொங்கும்!எழிலாய் மணக்கும் பூக்கள் ஆனந்தம்!நெஞ்சம் மகிழும் சோலைகளின் காட்சி!கொஞ்சும் இனிமைக்கு வனங்களே சாட்சி!மலர்ச்சி காணும் மழலையர் புன்னகை!கிளர்ச்சி தருமே காதலியின் மென்னகை!பசுமை வளர்ச்சி பல்லுயிர் வாழும்!பசுமைச் சுழற்சி மழையே …
>>பெற்றவர் யார், உடன் பிறந்தவர்யார்?ஊர் எது, பேர் ஏது, இங்கு ஏன்வந்தாய்?. நாள்தோறும் உன் அழுகைமனக்குகைபுகுந்து மாய்க்கிறதே , இருவிழிபளபளக்கிறது. கண்காணா இடம்தேடிநின்றாயோ,தெய்வம் கருணை காட்டமறுத்ததோ? பசி மறந்தாய், தூக்கமும்தான்விட்டிட்டாய்அதிரும் குரலும் அடங்கிப்போனாய். தேனீபோல் சுழன்றாடும்ஆற்றல்போனதெங்கே ?. ஓரிடத்தில்ஒடுங்கினாய். இரும்புச் சங்கிலியில் …
>>பாட்டி வைத்த பதியன்களால்தோட்டத்தில் ஒருரோஜா காடேஇருந்தது பாட்டி இருந்தவரை அதில்பறிக்கும் முதல் பூ தாத்தாபடத்துக்கு இப்போதும் முதல் பூதாத்தாவுக்குதான்அடுத்ததுதான்பாட்டிக்கு. தாத்தா ரொம்பகோபக்காரராம்பாவம் பாட்டிஎன்பாள் அம்மாஅடிக்கடி.
>>காலையில் அழகாகக் கனிவுடன் இருக்கிறான். அவன் பார்வையில்கையில் கலப்பையுடன் செல்லும்கடும் உழைப்பாளிகள்கட்டுசுமக்க, களையெடுக்கஅறுப்பறுக்கப் போகும்மகளிர் கூட்டம் மேலும்கசங்காத மடிப்பு ஆடையுடன்அலுவலகம் போகும்கருத்தாலுழைக்கும்அதிகார அடிமைகள் மதியம் உச்சி வேளையிலும்அவர்களைப் பார்க்கிறான்.ஆண்டைகளும் கொழுத்தவர்களும்கார்ப்பரேட் முதலாளிகளும்அளித்த வெப்ப்ப் பெருமூச்சுகளால் வாடிய கீரைத்தண்டாய்வதங்கிப் புலம்புகின்றார் அவன் கண்கள் …
>>அவள் போட்டகோலத்தின் நடுவேபூசணிப்பூ வைக்கும்பொறுப்பு அவனது அந்த ஊருணித் தோட்டத்தில்பூத்த பூவெல்லாம்காயாகிப் பழுத்தகாலமும் ஆனது அவன் கனவுத் தோட்டத்தில்பூத்த பூவெல்லாம்சருகாய் ஆனதுகோலமும் போனது
>>வாசலில் இடுவது மாக்கோலம்வார்த்தையில் இடுவது பாக்கோலம்பரம்பொருள் தந்தது ஒளிக்கோலம்பாரிது கொண்டது களிக்கோலம் பாவையர் இடுவது இழைக்கோலம்பாவியர் இடுவது பிழைக்கோலம்வானகம் கொண்டது மழைக்கோலம்கானகம் பெற்றது தழைக்கோலம் மேகங்கள் சேர்ந்தால் கார்க்கோலம் – அவைமேனி சிலிர்த்தால் நீர்க்கோலம்வீரன் கொள்வான் போர்க்கோலம் – அவன்வெற்றியில் காண்பான் …
>>எனக்கு கிறுக்கல்களாகத்தான்தோன்றும் அம்மாவின் கோலங்கள்அம்மாவுக்கு எல்லா மாதமும்மார்கழி தான்அடுக்களை வேலை முடிந்தவுடன்கோலப்புத்தகத்தோடு தபஸ் பண்ணஆரம்பித்துவிடுவாள்அம்மாவால் முன்பு போல்விடியற்காலையில் கண்விழிக்கமுடிவில்லைதர்மபத்தினியின் உபயத்தால்கிழக்கு வெளுத்த பிறகுதான்இப்போது கோலமெல்லாம்ஆனாலும் அம்மாவின் கைகள்சும்மா இல்லை காகிதத்தில்கோலங்களை வரைந்துகொண்டுதான் இருந்ததுஒருமுறை அவள் சுகவீனமாகஇருக்கும்போதுநோட்டுப் புத்தகத்தைபுரட்டிப் பார்த்தேன்முன்பு கிறுக்கல்களாகத்தெரிந்ததுஇப்போது தான் …
>>இயந்திரத்தில் அரைத்தஅரிசி மாவில்புள்ளி வைத்தஇதய கமலகோலம்,கால் படாதசாமி சன்னிதியில் – ஊற வைத்த அரிசியைஅம்மியில்‘நைஸ்’ஸாக அரைத்து அளவாக நீர் சேர்த்துசிறு துண்டு துணி தோய்த்துபிரித்த இரண்டு விரல்களின்மேல் கட்டை விரல்அழுத்திவழியும் ஈர மாவில்புள்ளி கணக்கில்லாஇரட்டை இழைஓவியமாய்படிக்கோலம்,சிவப்பு சிமென்ட் திண்ணையில் – தெருவை …
>>தரைத் தளத்தில் அழகான வீடு. ஆசையாய் தேர்ந்தெடுத்தகிழக்கு பார்த்த வீடு. தினமும் அரிசி மாகோலம். தாமரைப்பூவும் கிளியும் மயிலும் மானுமாக… நன்றாகவே நடந்ததுகுடி புகும் விழாக்கள். பின்னே வந்ததுபெரும் தலைவலி. முதல் தளத்திற்குஎன் வீட்டு வாசல் குப்பைத் தொட்டியாகியது கோலங்கள் அலங்கோலம் …
>>ஏ 703 பிளாட் அக்காபேப்பர் பில் பணம்வாங்கப் போகையில்கேட்டார்கள்,நீ இரண்டு நாள் முன்னாடி பேப்பர்போட வரலியா? ஆமாம், எனக்கு வேறவேலை , தம்பியபோடச் சொன்னேன்.ஏன் என்ன ஆச்சு? வாசல் கோலம்அழியாம பேப்பர்போட்டுப் போவ நீ. அன்னிக்கு கோலம்மேலேயே பேப்பரப் போட்டுஅலங்கோலம் ஆயிடுச்சு.
>>புள்ளி வைத்தவுடன்,மனத்தில் விரியும்ஒரு கோலம் அல்ல;ஒன்பது கோலங்கள்.ஒரு மயில்,ஒரு குயில்,ஒரு மலர்,ஒரு மனத்தில்உருவாகி;வளைந்தும், நெளிந்தும்மேலெழும்பியும்கீழெறங்கியும்புள்ளிகளை லாவகமாய் இணைக்கும் கரங்கள்அனிச்சையாய்;மனதின் இச்சையாய்.
>>சாதாரண கோலம்தான்வாசல் கேட்டைத்தாண்டும்போதுகண்ணில் தட்டுப்பட்டதுஒரு நிமிடம்அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்உலகம் சுழன்றுகொண்டிருக்கிறதுதெருவில் நடக்கும்போதுமனதிலிருந்து கோலம் மறைந்து விட்டது
>>வெறும் புள்ளிகள்வெறும் கோடுகளில்ஒன்றுமில்லை. புள்ளிகளையும்கோடுகளையும்இணைக்கிறகரங்கள்கரங்களைஇயக்குகிறமனசு அங்கேபிறக்கிறதுகோலம்.
>>இறந்துகிடந்தபட்டாம் பூச்சியைபூப் போல எடுத்துக் கொண்டு வந்தாள் பாப்பூ. வண்ணங்கள் கலையாமல் இருந்ததுஅது தூங்குவது போலத்தான் எனக்குத் தெரிந்ததுஅதன் நான்கு கால்களிலும் ஈரம் காயாமல் ஒட்டிக் கிடந்ததுபெயர் தெரியாத பூவின் மகரந்தம். பாப்பூ சொன்னாள் இறந்துடுச்சும்மா .ஆனால் நான்மறுபடியும் சொல்கிறேன் அது …
>>மேகப் பொதியில் ஒன்றுமெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல்தொட்டுத் தடவியது போல் தெக்குத் தென்றல் என்னைத்தேடி வந்தது போல் முல்லைப் பூவின் வாசம்மூச்சில் நிறைந்தது போல் பக்கம் நீ வந்து மெல்லபட்டு அமர்ந்த போது —————————-
>>நந்தனம் பேருந்து நிறுத்தம் இறங்கினால்அண்ணாசாலையைத் தாண்டத்தான் வேண்டும்பதினைந்து நாட்களுக்குஒரு டிராஃபிக் காவலரைப் போடாது நிர்வாகம்புத்தகக் காட்சிக்குச் செல்லும்நடைபாதையில்பழைய புத்தகக் கடைகள்அடைத்துக் கொண்டு.தார்ச்சாலை நடைபாதைஇவையிடை கிடக்கும் உடைந்த கருங்கல் சில்லுகள்காருக்கும் டூவீலருக்கும்நடப்போருக்கும் ஓரேயொரு பாதைஒரு கிலோ மீட்டருக்கு நடந்தால் புத்தகக் காட்சியை எட்டலாம்டிக்கட் …
>>(க.நா.சு பிறந்த நாள் இன்று) காதல், காதல் என்று இருப்பவருக்குஒரு வினாடிக் காலம் என்பதுஒரு நாழிகையே ஆகிவிடுகிறதுஒரு நாழிகையே என்றால்ஒரு நாளாகப்போகிறதுகாதலில் கடிகாரத்தின் போக்குஒரு தினுசானது தான்காமத்தின் போக்கில் ஒரு மணிஒரு விநாடியாகப் போகிறது.
>>பிரிந்து போகிறார்கள். மக்கள்கூட்டம் கூட்டமாய்ப் பிரிந்து போகிறார்கள்,பேருந்துகளில், அகலமானநடைமேடைகளும் மஞ்சள் கண்ணுடையதொங்கும் கடிகாரங்கள் உள்ளரெயில் நிலையங்களில்சிற்றூர்களில் நகரங்களில்பிரிந்து போகிறார்கள். பெற்றோர்கள், பிள்ளைகள்,காதல – காதலியர்கள், தம்பதிகள், துறவிகள்ஏழைகள், பணக்காரர்கள் பிரிந்து போகிறார்கள்.கப்பலில் போகிறார்கள். மாலைஆறு மணிக்கு வடமேற்கில் போகும் விமானத்தில்பிரிகிறார்கள்பிரிந்து போகிறவர்கள் …
>>நான்கு சக்கர வண்டி ஒன்றும்இரண்டு சக்கர வண்டி ஒன்றும்தெருவில் மோதிக் கொண்டன.அப்போது இரவு மணி ஒன்பது.நான்கு சக்கர வண்டிக்காரர்வண்டியை விட்டு வெளியே வந்துஇரண்டு சக்கர வண்டியைத் திட்டினார்.அவரும் பதிலுக்குத் திட்டினார்.தனக்குப் பெரிய பெரிய ஆளைத் தெரியும் என்றுநான்கும் இரண்டும் சொல்லிக் கொண்டன.நான்கு …
>>மனித வாழ்க்கையில்ஆயிரம் ஜன்னல்மனக் கதவில்மூடிய ஜன்னல்குடிசை வாழ் ஏழையின்அறையிலும் ஜன்னல்உடையிலும் ஜன்னல்மாட மாளிகையில்அழகூட்டும் ஜன்னல்இறைவன் சந்நிதியில் மணி கோர்த்த ஜன்னல்காதலியின் கடைக்கண் பார்வை தரும் ஜன்னல்கள்ளனும் அடைபடும்சிறைவாச ஜன்னல்பள்ளிச் சிறாருக்கும்அடைக்கலம் ஜன்னல்பேதை பெண்ணுக்குவடிகால் ஜன்னல்இன்ப துன்பம்பகிர்ந்திடும் ஜன்னல்அன்பெனும் அகஜன்னலை நீஅகலத் திறந்திடுவாழ்க்கையேபேரானந்தம் …
>>எங்கே போகிறாய் பசுவே? எங்கள் தலைவர் எங்களை மீட்டார்ஊருக்குப் போகிறேன் பையா. ஊருக்குள் போகும் மார்க்கம்நினைவில் உள்ளதா பசுவே?கழனியில் எத்தனை நடவுகள்எத்தனை அறுப்புகள் நடந்ததென்றாலும்வளர்த்தவர் மார்க்கம் மறக்குமோ பையா? உன்னைத் திருடிச் சென்றவர் உனக்குக்காலம் தவறாமல் பசும்புல் தந்துகழுநீர் காட்டிக் காத்தாரோ …
>>மௌனியும் சுசீலாவும்தெருவில் நடந்தால்மக்கள் எல்லோரும்சுசீலாவைப் பார்ப்பார்கள்.நகுலனும் சுசீலாவும்தெருவில் நடந்தால்மக்கள் எல்லோரும்சுசீலாவைப் பார்ப்பார்கள்மௌனியும் நகுலனும்தெருவில் நடந்தால்சுசீலா ஏன் வரவில்லை என்றுமக்கள் தெருவில் தேடுவார்கள்சுசீலாவும் தோழியும்தெருவில் நடந்தால்மௌனியும் நகுலனும்வரவில்லை என்றுமக்கள் மகிழ்வார்கள்நானும் சுசீலாவும்தெருவில் நடந்தால் மக்கள்என்னையே பார்ப்பார்கள்எப்படி இவளை இவன்பிடித்தான் என்று.
>>எதைச் செய்ய வேண்டுமென்றபடிப்பினைஎதையெல்லாமோ செய்து முடித்த பின்கிடைக்கிறது.தொலைத்து விட்டதாய்நினைத்த வாழ்க்கையோதேடி எடுத்துவாழ்ந்து விடுவேனென்றபெருநம்பிக்கையுடன்மௌனமாய் காத்திருக்கிறது.
>>மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு. இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன. தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டது ஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோ என்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும். அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது. அதை அனுபவிப்போம்
>>மஞ்சள் நிறமுடைய பட்டாம் பூச்சிதோட்டத்தில் நுழைந்ததுசமையலறையில் நுழையும் மாட்டுப்பெண் போலவெண்டை பூத்திருந்ததுகத்தரி பூத்திருந்ததுஅவரை பூத்திருந்ததுகட்டிவிடப்பட்ட கயிறுடன்புடலை தொங்கிக் கொண்டிருந்ததுபட்டாம் பூச்சி ஒவ்வொரு பூவின் மேலும்பறந்தது, உட்கார்ந்ததுஅடுத்த பூவை நாடிற்றுஉதவி செய்யவா என்றேன்சிறகை வேகமாய் வீசி பறந்து போயிற்று.
>>எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்நாற்பது வயதுக்காரர்ஊழல் ராமசாமித் தெருவில் சற்றுபெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார்ஒரு மின்விசிறிஇரண்டு பெஞ்ச்சுகள்இரண்டு வரிசைகள்டோக்கன் கொடுக்க ஒரு மடந்தைஅவர் சொன்னார்நோயாளிகள் சிலபேர் அவரைத்தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்வலது கணுக்காலில் வீக்கம் …
>>கச்சிதமாய்பொருந்தியிருந்தநீலவர்ணச் சேலையைதன் விரல் விலக்கிவானத்திடம்காட்டிக் கொண்டிருந்ததுஅந்த மேகம். தொட்டிச் செடியுறைநீல மலர்மற்றொரு மலரிடம் பேசுவதைப் போல்என்னிடம் தலையசைந்துபேசிக் கொண்டிருந்தது. என்னைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறாய்சலனமேதுமில்லாதஇந்தநான்கு கால் பிராணியைப்போல். உன்னை பகடையாய்அதன் பிடிக்குள்இந்தக் காலம் வைத்திருப்பதுபுரிந்தாலும்.. உன் லாகிரி தோய்ந்தஅந்தஒற்றைச் சொல்லுக்காய்சுற்றுகிறதுஎன் உலகம்.
>>குழந்தைப் பருவத்தில் எப்படிப்பட்டகனாக்களை நான் கண்டேன் என்பதுமுற்றிலும் மறந்துவிட்டது.எனது குழந்தை நண்பர்கள் என்னிடம்எந்தக் கனவையும் சொன்னதில்லைஏதோ ஒரு முறை ஒரு கனவைவிளக்கு வைக்கும் நேரம்அம்மாவிடம் சொன்னேன். என் வாயைஒற்றை விரலால் அம்மா மூடினாள்பல கனவுகள் நைந்து கிழிசலாகிமறதிக் காற்றில் பறந்து விட்டன.அப்புறம் …
>>தோண்டினார்கள் நாலடி ஆழம்.குடிநீர்க் குழாய்களும் சாக்கடைக் குழாய்களும்அருகில் அருகில் இருந்தன.கம்பிக் குழாய்களும் கண்ணில் பட்டன. வெள்ளைக் காரர்களின் ஆட்சிக் காலத்தில்போட்ட குழாய்கள் என்கிறார்கள்.நாலடி ஆழப் பள்ளத்துக்குப் பக்கத்தில்குவிந்து கிடக்கும் அரை ஈர மண்ணில்மண்புழு ஒன்றைக் கூடக் காணோம்.சென்னைமா நகரத்தை விட்டுஎன்றைக்கு நீங்கின …
>>போக்குவரத்துநெரிசல் அதிகம் இல்லாத அகலச்சாலைஅவனுக்கு வசதியாகத் தான் இருந்தது. தொளத்தொளச் சட்டைக்கால்புறம் மடிக்கப்பட்டப் பேண்டுக்குள்ஓர் அழுக்கு மனிதன்.முகமெல்லாம் வாழ்க்கை அனுபவத் தழும்புகள். கையிலும் சட்டைப் பையிலும்வண்ண வண்ண சாக்பீஸ்துண்டுகள். அழுக்குத் துணியும் தூக்கிஎறியப்பட்ட வாழை இலையும்சாலையைச் சுத்தம் செய்தன. அடுத்தஒரு மணிநேர …
>>நெற்றியில் புரளும் முடியைஇழுத்து கட்டு என்றாள்அம்மா சென்னையிலிருந்துடீ வி திரையில் என்னைபார்த்தபடி இயக்கிக்கொண்டுஇருந்தாள் அவள் அமெரிக்காவில் நான்பொங்கல் செய்து கொண்டுஇருந்தேன் தொழில்நுட்பத்தின்உதவியுடன்அம்மா சொல்ல சொல்லசெய்ததில் சுவையானபொங்கல் தயாரானது. குடும்பத்தின் ஆரவாரசந்தோஷத்தை திரையில்கண்டு ரசித்தாள் அம்மா. ஆனால் ஒரு விஷயத்தில்தொழில்நுட்பம் தோற்றுபோனது அந்த …
>>அதனால் பயனில்லைஎன்கிறார்கள் பார்ப்பவர்கள். தெரியாமல் பலன் கொடுக்கும்கற்பகதரு அது. சுவர்கள் எல்லையாகவும்ஓடுகள் வானமாகவும்வாசற்கதவின்றிவாவென்றழைக்கும். ஆடுமாடுகள் ஏன்கழுதைகளுக்கும்அது காப்பகம். காசுவைத்துச் சூதாடக்கச்சிதமான இடம். முதன்முதல் சிறுவர்கள்சிகரெட் பற்றவைக்கஅரிச்சுவடி கற்றுத்தரும்ஆரம்பப் பள்ளி. கல்லூரி மாணவர்பிறர் தொல்லையின்றித்தேர்வுக்குப் படிக்கும்தேவலோகம் கூட. கருப்பு நிறக் கமலாஅங்கேதான் அருமையாகஇளைஞர்களுக்குஇரவு …
>>சொன்னார். சொன்னார். மூச்சுவிடாமல்சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்.உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்எவ்வளவு கஷ்டம் கேட்பதுபோலநீண்ட நேரம் பாவனை செய்வது?கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்சொன்னார். மூன்றாம் மனிதன்ஒருவன் வந்தென்னை மீட்கமாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்அவரே ஓய்ந்துபோய் …
>>இன்று பொங்கல் தினம்மனைவி வாசலில்ரசனையுடன் கோலம் போட்டாள்நன்றாக இருக்கிறது என்றேன்அவள் மனதில் கரைபுரண்டோடியது உற்சாகம். எப்போதும் இப்படிநீடித்திருக்க வேண்டும்
>>மங்களம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!மனம் நிறையும் தைத்திங்கள் முதல்நாள்!பொங்கல் பொங்கிடும் தைத்திங்கள் முதல்நாள்!புத்தாடை உடுத்திடும்தைத்திங்கள் முதல்நாள்!இந்நன்னாளில் உங்கள் இல்லங்களில்அன்பு பொங்கிடஆர்வம் பொங்கிடஇன்பம் பொங்கிடஈகை பொங்கிடஉறவு பொங்கிடஊக்கம் பொங்கிடஎழுத்து பொங்கிடஏற்றம் பொங்கிடவாழ்த்துகிறேன்இனிய பொங்கல்நல்வாழ்த்துகள்
>>இருளில் எழுகிறான் பேப்பர் பையன்.கைகால் கழுவிப் பல்தேய்த்துவெளியே போகிறான் பேப்பர் பையன். கடைத்தெருப் பக்கம் நடைபாதையில்பேப்பர் கட்டைப் பிரிக்கிறார்கள்.அங்கே வருகிறான் பேப்பர் பையன். குமுதம் விகடன் ஹிந்து எக்ஸ்பிரஸ்தினமலர் இந்தியா டுடே அப்புறம்ஈநாடு, ப்ரபா, மாத்ரூ பூமி என்றுதனித்தனியாகப் பிரிக்கிறார்கள். இரண்டு …
>>புத்தகம் தயாரிப்பதுஅவ்வளவு சுலபமில்லை புத்தகம் விற்பதும்இன்னும் சுலபமில்லை விற்றப் புத்தகத்தைவாசகர்படிப்பதென்பதுநடக்காத காரியம் அதனால் என்னஎழுதுபவர்கள் சும்மாஇருப்பதுமில்லை
>>துள்ளி ஓடிற்றுபுத்தகக் காட்சிநடைப் பாதையில்ஒரு நாய்க்குட்டி அதுக்குபுத்தகங்கள் பற்றிஎன்ன தெரியும்? வேடிக்கைப்பார்த்த எங்களுக்குஎன்ன தெரியும்அதைப் பற்றி விற்கப்படாமல்இங்கே வீற்றிருக்கும்புத்தகங்களுக்கும்எதுவும் தெரியாது 2.1.2025 – 4.52
>>கதவைத் திறந்தேன்உள்ளேகவிதை எட்டிப் பார்த்ததுகவிதைதிறந்ததா ஆர்கேதிறந்தாராஒன்றும் புரியவில்லைஆர்கே திறந்தார்கவிதையும் திறந்ததுகவிதை திறந்தாலும்ஆர்கே திறந்தாலும்உங்கள் மனம்திறக்க வேண்டும்கவிதை வாசிக்க
>>தலைவலிதலைவலிஎனக்கில்லைஎனக்கில்லைஎதிரில்விற்பதற்கு வைத்திருக்கும்புத்தகத்தின் பெயர்.
>>ராஜன் காய்கறி கடையில்காத்திருக்கிறதுஅந்த அன்னாசிப் பழம் பைன் ஆப்பிள்பைன் ஆப்பிள்…வாங்கலாம்பைன் ஆப்பிள்…என்ற குழந்தையின் குரல் ஈர்த்ததுகாலையில் குழந்தையின் தந்தைகாய்கள் ஏதேதோதேர்வு செய்துதட்டுகளில் நிரப்பிநகர்த்துகிறார்எடை போட குழந்தைக்குச் சொல்கிறார்வாங்கிக்கலாம்வாங்கிக்கலாம்என்று வெற்று சமாதானம் வாங்கிய ஆப்பிள் ஆரஞ்சு தீரட்டும் என்று தாழ்த்திய குரலில் சொன்னபடி! …
>>இருவர் நடந்து போனோம் இருவர் எதிரில் வந்தனர் அதிலொருவர் தெரிந்தவர்போல தெரிந்தார் கடந்து போகும் அந்தநொடியில் அவர் என்னை நோக்கிபுன்னகைத்தார்நானும் புன்னகைத்தேன் சின்ன முறுவலுடன்எங்களை பார்த்தபடிகடந்து போயினர். மனைவி கேட்டாள்யார் அது என்று தெரியவில்லைஆனால்பார்த்த முகம் என்றேன். இருவர் மனங்கள் இதைநம்பவில்லை …
>>அரங்கம் அமைப்பதும்அடுக்கி வைப்பதும்வருடம் வரும் வாடிக்கைவருவோர் போவோரில்ஒருவராவது வாங்கினால்மனதில் நிகழும்வாண வேடிக்கை!
>>கையளவு உள்ளத்திலே கடலளவு ஆசையென்றான் ஊரறிந்த கவிஞன் நானோகடலளவு ஆசைக்கிங்கேகையளவு வாய்ப்புமின்றிகரையோரம் அலைகிறேன்கவிஞனாய் ஆக பிறக்கும் மன கற்பனைக்குஆயிரம் சிறகுகள் முளைக்கபறக்க இடமின்றி ஆகாயம் கூட சுருங்கி போவதைகண்டு மயங்கி போகிறேன் காணும் கனவினில் நூறுநதிகள் பிறக்கையில்ஓட தடமின்றி பூமியும் இங்கே சிறுத்து போவதைகண்டு வெறுத்து போகிறேன் …
>>எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறேன்… ஒரு அன்பை..ஒரு பிரிவை.. ஒரு நெகிழ்வை, ஒரு நிராகரிப்பை சின்னதொரு தோல்வியை,பெரிய வெற்றியை.. கையாட்டி கடக்கும்குழந்தையை, அதிகமாகப் போனவத்தல் குழம்பின் காரத்தை, இந்த அரசியலை.. ஆறிக் கொண்டிருக்கும்காபியை.. என்னை நம்பி விடியும்விடியலை… கவிதையைத் தவிர்த்துவேறெப்படி கொண்டாடுவது…
>>பூங்காவில் அவனுக்குஎதிரே தோன்றியவரைகண்டதும் மனம்பதற ஆரம்பித்ததுஅவர் தானே? எனகேள்வியும் கேட்கிறது. அவரேதான்இரண்டு முறைதிரும்பியும் பார்த்துக்கொண்டது. யார்?ஏன்? எதற்கு?அவரைப்பற்றி அப்படிச்சொன்னார்கள்? அவர் ஒரு வகையில்அவனுக்குதூரத்துச் சொந்தமும் கூட இரண்டாம் முறைஎதிரில் வந்த பொழுது“எப்படியிருக்கிறீர்கள்?நலமா ?”“நீண்ட நாளாயிற்றேஉங்களைப் பார்த்து “என்கிறான் அவர் முன்பை விடஇளைத்திருந்தார்உடல் …
>>சேமித்து வைத்தஉண்டியலின்அடிக்காசுகளில்ஒட்டியுள்ளஉலோகத் தூசிகளுடன்உலா வருகின்றனசில ஞாபகங்கள். சேமித்தக் காசுகளில்சில செல்லாக்காசுகளாகிசிரிக்கின்றன. ஒவ்வொரு காசுகளிலும்கொடுத்த மூஞ்சிகள்பல்லிளிக்கின்றன. இருப்பினும்அடுத்தக்காசு வாங்கமானங்கெட்ட மனம்கையேந்தி நிற்கிறது.
>>இருளைக் கண்டுதான்இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள் ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம்தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிடவெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன்உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும் தெரிய வரும் வெளிச்சம் என்பது நமக்கு …
>>காய்ந்த சுல்லி களையும்உலர்ந்த புல்லிதழ்களையும்ஒவ்வொன்றாகஎடுத்துவந்து வீட்டுள்சிறுகூட்டில்லத்தைக்கட்டிமுடித்தசின்னக்குருவியே … என் வீட்டு இளைய மகள்கருவுற்றநேரத்தில்நடக்கும் நல்நிகழ்வாய்மகிழ்ந்தார்கள். சில நாட்களில்குருவியின்ஒற்றையொலிகுஞ்சுகளின்கூட்டொலியானது. உன் உறவுகள்ஒவ்வொன்றாய்மேலே பறந்தன. ஒருநாள் உன்கூடும்மின்விசிறி காற்றில் பறந்து கீழே விழுந்தது. பறவையின்ஒலியிடத்தைப்பேச்சொலிகள் பிடித்தன.
>>கோழிக்கு இரைகிடைக்கிறது. அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவன சிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும். அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும் அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ? இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா? அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன. நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதை நாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.T
>>கைத்தடிக்குப் பாதுகாப்பாய்வாழும் வயதுகாலாற நடந்திருந்தேன்மாலைக் கதிரொளியில்மாறிப் பொன்னா யொளிர்ந்தநரை தலையில் படிந்தனகிளை விட்டிறங்கும் சில மலர்கள்மன்னிக்கலாம்! வேனிலின்வெட்கப்படாத இந்த ஆசைகளை (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)
>>