தகுதி/க நா சு

ஜமக்காளம் விரிப்பான்;
வெற்றிலை பாக்கு கூஜாத் தண்ணீர்
எடுத்து வைப்பான்; தூசி தட்டிப்
புத்தகங்கள் அடுக்கி வைப்பான்

>>

தர்மநியாயம்/எஸ்ஸார்சி

செய்த குற்றம் ஒன்றுகீழமை நீதிமன்றம்வழங்கியது விடுதலைமுடியாது பிடி அவனைஉயர்நீதிமன்றம்தருகிறது ஆணைசெய்த குற்றம்மற்றொன்றுகீழமை நீதியகம்தந்தது தண்டனைஉயர்நீதிமன்றமோஅருளியது விடுதலைஆகப்பெரும்நீதிமன்றம்இட்டது கட்டளையாருக்கும் இல்லை விடுதலைகுற்றம் ஒன்றுதண்டனை விதம் விதமாய்வழக்கு உரை திறன்நிர்ணயிக்குமாம் தீர்ப்பைகண்கட்டிய நீதி தேவதைவாயும் கட்டிக்கொண்டாள்சரஸ்வதி நதி திரிவேணியில்தெரிகிறதா கண்ணுக்கு.

>>

அக்கமாகாதேவியின் கவிதைகள்/லட்சுமி மணிவண்ணன்

கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்
வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்
அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2/ 160/அழகியசிங்கர்  

பூத்தொடுத்தல் உமா மஹேஸ்வரி  இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.இறுக்கி முடிச்சிட்டால்காம்புகளின் கழுத்து முறியும்.தளரப் பிணைத்தால்மலர்கள் தரையில் நழுவும்.வாசலில் மரணம் நிற்பதறிந்தும்வருந்தாமல் சிரிக்கும்இந்தப் பூவைஎப்படித் தொடுக்க நான்ஒருவேளை,என் மனமே நூலாகும்நுண்மையுற்றாலொழிய நன்றி : வெறும் பொழுது – உமா …

>>

இது குழந்தைகள் தின பாட்டு!/வே.கல்யாணகுமார்

ஏந்த ஊருக்கு போகுது வண்டி? எனக்கு சொல்வாயா..
அந்த ஊருக்கு நானும் வாரேன் ஏத்திட்டுப் போவாயா?
பாப்பா ஓட்டும் வண்டியில் ஏறி ஊருக்கு போவேனே..
பாப்போவோடே பாப்பாவாக விளையாடப் போறேனே!

>>