தங்கேஸ்/சவாரி

பாசம் என்பது மரியாதையாகவும்அன்பு என்பது கண்டிப்பாகவும்மாறிய நாட்களில்அப்பா எங்களை விட்டு அந்நியமாகிப்போனார் அதே சிரிப்பு அதே பேச்சுஅதே நடை உடை பாவனைஅதே கசங்கிய சட்டைநாள் முழுவதும் மாறாத உழைப்புஅப்படியே தான் இருக்கிறார்அவர் மாறவில்லைநாங்கள் தான் மாறி விட்டோம் காலம் ஒரு பனிக் …

>>

செ.புனிதஜோதி/பொறுப்பின் பஞ்சம்

கவனமின்மையின்கண்கள்எப்போதும்முதுகுப்புறத்தில்தான்இருக்கின்றன. எதிலும்நிதானம் கொள்ளாதஅவசரக்காரனின்பதற்றத்தோடுசிந்திக்கத் தவறும்மூளையும்அதனுடன் சேர்ந்திருக்கிறது. ‘பொறுப்பு உணர்ச்சி’ என்றஉணர்ச்சியற்றஜடமொன்றும்அதற்குள் உறைந்திருக்கிறது. அதன்அக்கறையின்மையால்பள்ளி வாகனத்தில்அழைத்துச் சென்றநாளைய கனவுகளைகை, கால், முகமெனஉருக்குலைத்துசிதைத்துஇடறியுள்ளதுரயில்வே கிராசிங்கில். நடந்த துயரத்திற்குஏதோவொரு காரணத்தைஇப்போதும் தேடிதன் கவனமின்மையைகாப்பாற்றபயணித்துக் கொண்டிருக்கிறதுகவனமின்மை. இதை கவனித்தஒவ்வொரு மனமும்சிறு கனவுப்பிஞ்சுகளுக்காகஇரங்கற்பா எழுத முடியாமல்வாய் பொத்திஅழுகிறது. —

>>

பி. ஆர்.கிரிஜா/கொசு !

பரமனின் படைப்பில்விந்தைகள் கோடிஎடுத்தியம்பஇயலாத செயல் ! எமை நசுக்கி உயிர் வாழும் உரிமையார் உமக்குக்கொடுத்தார்கள் ? எமைப் படைத்தஇறைவனிடம்எல்லாம் அறிந்த நீகேட்கக்கூடிய வினா ! எம் பிறப்பில் குறைஎதுவாக இருப்பினும்பரம்பொருளே அதன்மூல காரணகர்த்தா ! இதை அறிந்தால்உன் மனம்அமைதியில்மடங்கி அடங்கி விடும் …

>>

அழகியசிங்கர்/எங்குப் போனாலும்…

நேற்றுமனைவி கோயிலுக்குப்கிளம்பி விட்டாள்பாதி தூரத்தில் மழை திரும்பிவந்து விட்டாள் கொஞ்சநேரம் புலம்பிக்கொண்டிருந்தாள் நான்கூடஎங்கும் போக முடியாமல்வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன் அப்படித்தான் ஆகிவிடுகிறதுசில நாட்கள் அதேபோல்தெருவில் காலடி எடுத்துவைத்தால்வீட்டிற்குத் திரும்ப முடியாமல் அவஸ்தைப் படுவோம். வெளியிலோ உள்ளேயோஎங்கிருந்தாலும்ஒரேமாதிரி மனநிலை வேண்டும்

>>

அதங்கோடு அனிஷ்குமார்/ஒரே ஒரு நிமிடம்

ஒரு நிமிடம்பொறுத்திருங்கள்ஒரே ஒரு நிமிடம்.ஒரு மரத்திலிருந்துபழுத்த இலை ஒன்றுவிடை பெறுவது போலஇயல்பாய்ஒரு விடைபெறல் நிகழட்டும்.பூவைத் தேடிவண்டின் வருகை நிகழ்வது போலஒரு காதல்உங்களுக்கும் நிகழ்வதாக.மெல்ல மெல்லமுட்டி முகடு கிழித்துஒரு விதையிலைவெளிப்படுவது போலஒரு புன்னகைதன் நிலையில்வெளிப்படட்டும்.ஒரு நிமிடம்ஒரே ஒரு நிமிடம்நின்று நிதானியுங்கள்.நெடுஞ்சாலையில்அரளிச் செடிகளின் கையசைப்பில்கரும்புகை …

>>

ராமலக்ஷ்மி/முக்தி

அடர்ந்த மரத்திலிருந்துஉதிர்ந்த இலையொன்றுகாற்றின் போக்கில் பயணித்துநதிக்கரையோரத்துபுதர்ச் செடி மேல் அமர்கின்றது.கீழிருக்கும் நீரில் மிதக்கின்றதுமேலிருக்கும் சூரியன்.மூழ்கி விட முனைந்த இலைசுட்டு விடுமோ சூரியன் எனசற்றே அஞ்சி, பின்வீழ்ந்து மூழ்கவும் இல்லைவளிதனில் மிதந்துவேறிடம் தேடவும் இல்லைகாய்ந்து சருகாகிக் காத்திருக்கிறதுகாலத்திடம் தனை ஒப்படைத்து.**

>>

சாட் ஜி பி டி/காதல் கவிதை

நான் ஒரு காதல் கவிதை எழுது என்று சாட் ஜி பி டி கிட்டே கேட்டேன். அது எழுதிய கவிதை. உனது கண்களில் வெள்ளி நிலா,எனது கனவில் நீயே தவம்.மௌனத்தில் பேசும் உன் சிரிப்பு,என் இதயத்தில் இசை போல ஓசை. மழையில் …

>>

எஸ். வைத்தியநாதன் கவிதைகள்

உறுதி மாழி 82 20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள் இன்றோடுநழுவிய பதக்கங்கள் எவரையும்நினைவூட்டப் போவதில்லை- வளைந்த மீசை கொண்டபயணியை மீண்டும்சந்திக்கப் போவதில்லை- நந்தவனமெனக் கண்டதில்பழுதில்லை; உலாவ முயன்றதில் தான் தவறு- தொடைகள் நடுவில் புதைந்த தலையணைஇன்று …

>>

ஆ.இளம்பரிதி/இரண்டு படங்கள்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் பச்சை நிறைந்ததென் வீடுபாகை, புடலை, அவரை, முலாமெனஅடுக்கிச் சொல்லலாம்முயல், புறா, முட்டைக் கோழியும்அன்பால் வளர்க்கப் பட்டதுவேலி வளர்த்து பாதுகாப்போடுவிடுமுறை மகிழ்ச்சி குப்பையில் தெரியஞாயிறு தோறும் வளர்ந்ததை வெட்டுவார் அப்பா. …

>>

ஞானக்கூத்தன்/ஓட்டைத் தேவனார்க்கு வாழ்த்துகள்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் அனைத்து மக்களுக்கும் சரிசம மாகஓட்டைகள் வழங்கி யுள்ளஅற்புதப் பொருளேமும்முறை சொன்னேன் வாழ்த்துகள் உனக்கு சிறிதென்றாலும் பெரிதென்றாலும்அவரவர்க்கென்றே ஓட்டைகள்கிடைக்கும் படிக்குச் செய்தஉன்கருணைத் திறனைஎவர் மறந்தாலும் நான் மறப்பேனா அடுத்தவர் ஓட்டை …

>>

ஆனந்த்/உன் குரல்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் வீட்டுப் படியிறங்கி நடந்துதெருக்கள் பல தாண்டிபொருட்கள் கடலாய்க் கிடக்கும்கடைவீதியைக் கடந்துநெடிதுயர்ந்து நிற்கும்அந்த நிலைவாசலைத்தாண்டிய பின்னும்சில ஓசைகள்காதில் விழுகின்றன. உலகின் குரல்கள் சற்றே அடங்கியவெளிப்பிரகாரத்து வெளிச்சம் விட்டுஉள்பிரகாரத்துஅறையிருளில் செல்லும்போதுமூதாதையரின் குரல்கள்காதருகில் …

>>

துரியன் கோஷ் ப்ரீதி/மழையும் முள்ளும்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்இனிக்கிறது என்றுவண்ணத்துப் பூச்சி சொன்னதுமுள் மரத்திடம்.இனிக்கிறதா?உன்னை விடக்கூடாதெனதனக்குள் நினைத்ததுஉச்சி முள்ளில் ஓணான் ஒன்று தரையிலிருந்து எறும்புகள்ஒட்டுக்கேட்டன குண்டத்து நெருப்பால்தான் மழை என்றதுமலைமீதிருந்து ஒரு குரல் காற்று வந்து …

>>

பிரதீபன்/ வருவோர் போவோரில் ஒருவர்

அந்த அலுவலகத்தில்வருவோரும் போவோருமாகஎப்போதும் கூட்டம் தான்;இருக்காதா பின்னே,இன்றியமையாதஅலுவலகம் ஆயிற்றே;’சுற்றி நிற்கும்தேநீர்க் கடைகள், உணவகங்கள்எல்லாமேஎப்போதும் சுறுசுறுப்புத்தான்; வருவோர் போவோரால்வளம்கொழிக்கும்அந்த அலுவலகத்தில்உள்ளே பணிபுரிவோருக்குக்கழிப்பறை உண்டு;ஆனால்வருவோர் போவேருக்கு?அதிலும்முதியவர், சிறுவர்களுக்கு ?சிந்தித்துப் பார்த்தவர்வருவோர் போவோரில்ஒருவர்தான்; தலைமை அலுவலகத்தோடுபோராடிப் போராடிஅனுமதி பெற்றார்அந்த ஒருவர்; தன் தொகையைமுன் தொகையாக்கிஎண்ணிச் சிலரிடம்நன்கொடை …

>>

செ.புனிதஜோதி கவிதை

சித்தார்த்தனிடத்தில்புத்தனையும் –புத்தனிடத்தில்சித்தார்த்தனையும் தேடுவதுமுரண். கிடைத்ததும்,கிடைக்கப் பெற்றதும்,கிடைக்கப்போகிறதும் –அனைத்துமேஅனுபவம். குளத்தில்கல்லெறிந்துசலனத்தை ஏற்படுத்துவதைவிட,அமைதியின் மேல்என்னையேநிதர்சனமாக வைத்துநான் பார்ப்பதுஅருவழி. பிறரின் இருளைநீக்கவோ,இருளென்றுவியாக்கியங்கள் பேசவோநான் யார்? அவரவர்உள்ளங்கை அளவிற்கேவெளிச்சம். என் இருள் விலக,என்னைஎனக்குள்ளேவிளக்கேற்றிவைத்துக்கொள்ள வேண்டியதுநானே. காலம் –விரைந்து வருகிறது.

>>

தேவதேவன்/அக்கரை இருள்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் நதி என்னை அழைத்தபோதுநதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்நடைவிரிப்பாய் விரிந்திருந்ததுபாறையின் மேலிருந்தஎன் அறையின் விளக்கொளி இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்என் நெஞ்சைச் சுண்டும் ஒருகுரல் கேட்டேன்முளைத்த துயரொன்றைகைநீட்டிப் போக்கிற்றுஇக்கரை நின்றிருந்த தோணி என் …

>>

கோபி கிருஷ்ணன்/இயக்கம்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் பிரபஞ்சத்தில் என்றோஒரு துகள்ஏன் என்று தெரியாதுஆனாலும்உருவெடுத்தது. காலம் உருள,துகளும் உருண்டது.பிற துகள்களுடன்உரசிமோதி, கலந்துசில உறவுகள், உணர்வுகள்பிரமைகள், அர்த்தங்கள் அனர்த்தங்கள்லட்சியங்கள் கொள்கைகள் வெறும் மாயைகள்உணர்வுகளில் சிக்கல்கள்முரண்படல்கள்ஒதுங்குதல்ஒதுக்குதல் சுமுகம் இணக்கம் வித்தியாசம் …

>>

ரா. ஸ்ரீனிவாஸன்/சூரியனைத் தவிர

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் சூரியனே, நீ உதயமாகும் பொழுதுஉன்னைத் தவிரநான் வேண்டுவதுவேறு எவருமில்லை.நான் உன்னுடன் உதிக்கின்றேன்இரவு வந்து கவிழ்கிற வரைஉன்னுடனே இருக்கின்றேன்வீழ்கின்றபோதுநீ எழுதுகின்றவண்ண வண்ண ஓவியத்தைநானும் எழுதியபடி நீ மறைகின்றாய்மலைகளுக்கும்கட்டிடங்களுக்கும்ஒவ்வொன்றிற்கும் அப்பால் நீ …

>>

தங்கேஸ்/தவளைகள்

மொழியின் அதிகபட்ச சாத்தியமேமௌனத்தில் குதிப்பது தானே பேசி பேசியே கெட்டவர்கள் தான் அதிகம்அல்லது கெடுத்தவர்கள் பொதுவாக பிசாசு வளர்ப்பதுஅவ்வளவு ஆபத்தானதுகுரங்கு குட்டி போல் தாவி வந்துநம் மீது ஒட்டிக் கொள்ளும்தோளில் சுமந்து கொண்டுதிரிபவர்களை கேளுங்கள்ஒவ்வொருவனும் பிறவிக்கவிஞனாக இருப்பான் செய்யுள் பாட வந்து …

>>

விஞ்ஞானி/கரையை தேடி

வீட்டுக்குள் மழை வெள்ளம்படியேறி மாடியை எட்டிப்பார்த்தது அங்கிங்கெனாதபடி எங்கும்நீரில் மிதந்தன பொருள்கள் ஏரிப்படுகையில் மனைவாங்க வேண்டாம் என்றதாத்தாவின் படம்ஒரு பக்கம் மிதந்தது இன்னொரு பக்கம்ஏரி ஊராகி இத்தனை வருடங்கள் வராத தண்ணீர்இனி மேலா வர போகுதுஎன குறைந்த விலைக்குஇடம் வாங்கி வீடு …

>>

வே.கல்யாண்குமார்./நான்கு நாய்க்குட்டிகள்.!

எங்க வீட்டுத் தோட்டத்திலே.. இன்று நாய்குட்டி போட்டதடி.!நான்கு குட்டிப் போட்டதடி அதுநாலும் நாலு வண்ணமடிவெள்ளை நிறத்தொருக் குட்டி..என் வீட்டுக்குள் வந்து விளையாடுதடி..செல்லம் சிவப்புநிறக் குட்டி..பல சேட்டைகள் செய்து காட்டுதடி..கள்ளக் கருப்புநிறக் குட்டி..என் காலைச்சுற்றிக் குதிக்குதடி.. சுட்டி..!மெல்லக் கண்திறந்துக் குட்டி..எம்மை மெய்சிலிர்க்க வைக்குதடி …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/போரும், பசியும்

ஆதிமனிதன் குகையில்வாழ்ந்தான்,விலங்குகளோடு போரிட்டான்உணவும்,தற்காப்பும் நோக்கமானது.. குழுவெனக் கூடிய வேளைதலைமைக்குநேரிட்டது பகையும், போரும். நாகரிகம் தொட்டவேளைநாடு,நகரம்பிடிபட, மணிமுடி தேடவந்ததுசண்டை சச்சரவு. மண்ணுக்கும், பொன்னுக்கும்மட்டுமல்லப்பெண்ணுக்கும் பெரும்போர்குருசேத்திரம்இன்றும் சான்று. அன்றும்,இன்றும், என்றும்தன்னலம்ஒன்றே போரின் ஆணிவேர் பொற்காலமென வரலாறுசொல்லும்சங்க்காலத்திலும் போரின்விளைவேபொதுப்பெண்டிர் எனில்மறுப்புண்டோ ?. வசியும், வளனும் அழிக்கும்,பசியும்,தீங்கும் …

>>

எஸ் வி வேணுகோபாலன்/நிற்காது பெய்யும் மழை

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சோவென்று கொட்டத் தொடங்கியமழையிலிருந்து தப்பித்துமழைக்குள் புகுந்துமழையை ஏய்த்துமழையின் விலகிமழையை மழையால் கடந்துமழையைக் கொண்டாடிமழையோடு ஓடிமழையின் கைப்பிடித்து நடந்துமழையோடு வந்து சேர்ந்துமழைக் கையால் தட்டியகதவைத் திறந்துஅலறிப் பதறிகைத்துண்டு கொண்டு வந்து‘இப்படியா எங்கும் ஒதுங்காதுநனைந்து வருவாங்க’ என்றபடிவசவுகளைத் …

>>

செந்தமிழ்பாரதி/தெரிந்தால் கூறுங்கள்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சின்ன மழைச் சாரலில்சிட்டுக்குருவிகள் குளித்துச்சிறகுகளை உலர்த்திவிட்டுக்காற்றில் மிதக்கிறது.பாலைவனம் பூப்பதற்குக்கண்ணீர்விடும் மேகங்கள்கடலை நிரப்பிவிட்டுகரிசல் காட்டில் அழுகிறது.ஓடைகளைஅறுத்து அருவியாக்கிஆறுகள் முளைத்தனவேகாடுகளைக் கடந்ததுகடலில் கலந்தனவே!மாதவிடாய் இல்லாமல்வயசுக்குவந்த பூக்கள்ஒருநாள் ராணியாக வாழ்ந்துசாவதைப் பாருங்கள்.உலக வரைபடமே தெரியாமல்பயணிக்கும் பறவைகள்யாரை நம்பி சிறகைவிரிக்குதுதெரிந்தால் …

>>

தர்மராஜன் குமார்/பத்து கவிதைகள்

20/06/2025 அன்று நடைபெற்ற விருட்சம் நடத்திய “கவிதை வாசிக்கும்” நிகழ்ச்சியில் நான் வாசித்த பத்து கவிதைகள். (1)முயற்சி: முட்டி முட்டி பார்க்கிறேன்முட்டி மோதி பார்க்கிறேன்முக்கனிச்சாறு போல்கவிதையை நான்இங்கு தரமுக் கண்ணன் மைந்தனேநீரே முன்னின்று அருளுமையா. (2)நீர் தாகம் தனை தீர்க்கும் நீ …

>>

நாகேந்திர பாரதி /கவிதைகள் பத்து

(இன்று அழகியசிங்கரின் சொல் புதிது ஜூம் நிகழ்வில் வாசித்த கவிதைகள் பத்து . எனது கவிதைத் தொகுப்பு மின்கவிதைப் புத்தகம் ‘இருட்டின் வெளிச்சம் – நாகேந்திர பாரதியின் கவிதைகள் – தொகுப்பு 85 லிருந்து) கவிதைகள் பத்து இரக்கம் ஓரக் குடை …

>>

ஆர்க்கே/சுமைதாங்கிகள்

சில புஜபல பராக்கிரமசாலிகளின்விழிச்சிவப்பில்கோஷத்தில்வேஷத்தில்கவன ஈர்ப்புகளில்கவனத் தவிர்ப்புகளில்நியாய அநியாய பங்கெடுப்பில்அநியாய நியாய புறக்கணிப்பில்பதறல்களில் பாராட்டுகளில்கதறல்களில் களிப்புகளில்காலப்போக்கில்தெரிந்தே விடுகிறது–அவர்கள் சுமந்துநின்றது நிற்பது நிற்கப்போவதுஉற்சவப் பல்லக்காஉறைநிலைப் பாடையா என்பது!

>>

அனங்கன்/அப்பா

அடிக்கடி உதிர்த்த சொற்களில்லை…ஆனால் அடிமனதில் இருக்கிறது.நீயும் கோவலன்தான்…என்தாய் கண்ணகிக்கு குழந்தையாய் நானிருந்தேன்.உன்னிடம் கற்றுக்கொண்டதுஎப்படி வாழக்கூடாது என்பதுதான்.தந்தையர் தினத்தில் எத்தனையோ நினைவுகள்…அவரவர் தந்தையை உயர்த்திப்பிடித்திருக்கும்.எனக்கும் இருக்கிறது…நீ என்னை அடித்ததில்லை….திட்டியதில்லை.எல்லோருக்கும் எல்லாத்தந்தைகளும்கைபிடித்துச்சென்றதில்லை…அதுவாய்க்காத குழந்தைகள்எத்தனை எத்தனையோ…ஆயிரம் இருக்கட்டும்..என்பிறப்பு அவதாரமில்லை…சாதாரணம்…மிகச்சாதாரணம்.என்னைக் கலைக்காமல் காத்துநின்றாயே…அதற்காகவே ஒருகோடி வணக்கங்கள்.♦

>>

விஞ்ஞானி/அப்பா

அந்த தத்துவ மேதையிடம்உங்கள் அம்மா அப்பா பற்றியஉங்கள் கருத்து என்னஎன்று கேட்டனர் என் இதயத்தில் அம்மாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பதுகடவுள் என்றார் அப்ப உங்கள் அப்பா என்றனர் என் இதயத்தில் அப்பாவுக்குபக்கத்தில் இருப்பதுஅம்மா என்றார்.

>>

பி.ஆர்.கிரிஜா/அப்பா

அப்பா என்றால் அமைதிஅப்பாவின் பொறுமைஅளப்பரியதுஅன்பின் அடையாளம்பண்பின் இருப்பிடம்அப்பா எனவிளித்தால்உடல் சிலிர்க்கும்அப்பாவின் மடிஅரசவையின் அரியணைஎன் உயிரில் கலந்துஅன்றும் இன்றும் என்றும் வழி காட்டும் கலங்கரை விளக்கம் ! 15/06/2025

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /தந்தையர் தினம்

ஒரே ஒரு தினம் மட்டுமேபோதுமா தந்தையின் பெருமை பேச? இன்று என்னுடன் நீங்கள் இல்லைஎன்றாலும் உங்களை நினைக்காத நாள் இல்லை.அப்பா, உங்கள் பாசம் கொண்ட நெஞ்சம்கண்ணில் தெரிந்த உங்கள் கண்டிப்பும்இப்பவும் பசுமை யாக நினைப்பில். குடும்பத்தின் அசையா இரும்புத் தூண் அல்லவோஎனக்கு …

>>

அழகியசிங்கர்/அப்பா

அப்பாசைக்கிளிலிருந்துகீழே விழுந்து விட்டார்மேட் இன் இங்கிலாந்துசைக்கிள்40 ஆண்டுகளுக்கு முன்வாங்கியதுஎழுந்திருக்க முடியவில்லைதெருவில் யாரோகொடுத்த பிளாஸ்டிக்நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்டீயைக் குடித்தபடிவலியுடன்இடுப்பில் எலும்பு முறிவுதிரும்பத் தீவிரசிகிச்சைக்குப் பிறகு..எல்லாம் சரியான பிறகுமுதல் விஷயமாகச்சைக்கிளைத் தானம் செய்து விட்டார் எனக்கு 60 வயதுக்குப்பிறகு சைக்கிளே ஓட்ட வரலை.

>>

எல்,ரகோத்தமன்/அணையா தீபம்

 நீ ஏன் எங்கோபார்த்துக் கொண்டிருகுகிறாய்! வானத்தில்மிக உயரேவட்டமிடும் பறவையைஎத்தனை நேரம்பார்த்துக் கொண்டிருப்பாய்! அது தன் துணையைதேடிக் கொண்டிருக்கிறது! நான்உன்னருகில் தான்இருக்கிறேன்! மனதுள்ளேஉன்னோடு தான்பேசிக் கொண்டிருக்கிறேன்! உன் நினைவுச்சிறகுகளின் இறகுகள்ஒவ்வொன்றாய் உதிர்ந்துபோகுமுன் நீ திரும்பிப் பர்த்துவிடு! சற்றே திரும்பிப்பார்த்தால் போதும்! ஒரு வெண்ணிற மலரின்சிரிப்பில் மலர்ந்த நம் நேசம்உயிர்பித்துவிடும்! அவ்வுயிர்ப்பின் பெருமூச்சில்நம் உள்ளங்கை …

>>

வேகல்யாண்குமார்/பிள்ளைகள் உலகம்.!

சின்ன சின்னப் பிள்ளைகளே வாங்க!பள்ளிக்கூடம் திறந்தாச்சு வாங்க.!வண்ண வண்ணப்பட்டாம்பூச்சி நீங்க..வல்வராய் உயரவேணும் நீங்க.! அரசுப் பள்ளியில் நீங்க சேரணும்..ஆர்வமுடன் தாய் மொழியைப் பயிலணும்..புதுசுப்புதுசாக படித்து அறியணும்..புதிய உலகத்தின் ஔியில் தெரியணும்..! ஒன்றுகூடி நீங்க ஆடி மகிழணும்..என்றும் பெற்றவர் சொல்லைக் கேட்கணும்..நன்று என்பதை …

>>

தங்கேஸ்வரன்/அது

ஒரு அற்ப புழுவாகஇப்போதுநம் கண் முன்னால்நெளிந்து கொண்டிருப்பதுநேற்று வரை பெரியமலைப்பாம்பாகத்தான்இருந்தது ஒரு சினனஞ்சிறியசெம்மறி ஆட்டுக் குட்டியைஎசக் கேடாக முறை தவறிவிழுங்கப் போய்ஆரம்பித்தது வினை பறி கொடுத்த தாய்க்கும்தெரியவில்லைவிழுங்கப்பட்ட குட்டிக்கும்தெரியவில்லை(சாகும் போதாவது உண்மைதெரிய வேண்டாமா ? )பாதுகாக்கும் மேய்ப்பரும்கவனப் பிசகில்சோரம் போய் விட்டார்என்று …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இழந்து போன உயிர்களும் கிரிக்கெட் மேட்சும்!

பதினேழு வருஷ காத்திருப்புராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வாங்கியது தங்க கப்சின்னசாமி ஸ்டேடியம் கண்டது திருவிழா கூட்டம்பின்னி சாய்த்தது ,பல உயிர்கள் நட்டம்.ஆடல்,பாடல்,கொண்டாட்டம்மிதிபட்டு நசுங்கிய மக்கள்பெருமை நிறைந்தகேளிக்கைவரம்பு மீறிய நெரிசலால் சிலர் மடியவும்,பலர் காயமடையவும்,முடிந்தது வேடிக்கை!

>>

செ.புனிதஜோதி கவிதை

சாம்பல் பூசி கிடந்தஅதிகாலை வானத்தைசிறகுகளால்துடைத்தபடி பறக்கும் பறவையைப் போல் 28-மாடி கட்டடத்தின்சன்னல் கதவுகளைகயிற்றில் கட்டிதுடைத்துக்கொண்டிருக்கிறான். அவன் பறவையாதல்இந்த சமூகம்விதிக்கப்பட்டவையா?அவன் ஏற்றுக் கொண்டவையா?ஏதோவொன்று எவ்வளவு கடினங்களையும்உதறிவிட்டுபறக்கும்சிறகுகள் இருந்தால் போதும் துலங்கும் ஒளிக்கீற்றுகள்அவன் வானில்

>>

பி.ஆர்.கிரிஜா/இழந்து போன உயிர்களும் கிரிக்கெட் மேட்சும் !

கோப்பை வென்றவன் கோடியில் புரள்பவன்தன் ஆதர்ச வீரன் கடைக்கண் படாதோஎன ஏங்கித் தவிக்கும்கடைக்கோடி மக்கள் அறிவிலிகள்செத்து மடிந்து மண்ணோடு போனவர்கள்கோப்பையை மீட்கலாம்,போன உயிர்கள் ?

>>

சசிகலா விஸ்வநாதன்/இழந்து போன உயிர்களும்- கிரிக்கெட் மேட்சும்

பதினெட்டு வருடக் காத்திருப்புகரைபுரண்ட மகிழ்வு!வரைமுறையற்ற ஆவேச எழுச்சிபதினெட்டு மணி நேரத்தில் வடிந்தது.இப்போதும் கூக்குரலும் சத்தமும்!ஒருவருக்கு ஒருவர்சொல்கிறார்கள்;நானில்லை அங்கு!நீதான்! நீதான்!மிரளும் தலைவர்கள்;புரட்டிப் பேசும் அதிகாரிகள்!குழம்பிய குட்டையில்மீன் பிடிக்கும் எதிராளிகள்பந்தயத்தில் ஆடின குதிரைகள்கதை கந்தலும் கந்தாயமுமாக.

>>

அழகியசிங்கர்/கிரிக்கெட்

சில தினங்களுக்குமுன்னால்கிரிக்கெட் பைத்தியமாகஎல்லோரும்அலைந்துகொண்டிருந்தார்கள்ஒரே ஆர ப்பா‌ட்ட‌ம்ஒரே கூச்சல்டிவியில் பார்த்துக் கொண்டிருந்தஎனக்குதூங்கும்போதுபடப்படப்பாய் உணர்வேன்மனசைக் கட்டுப்படுத்தமுடியாத என்ன கண்றாவிஎன்று தோன்றும்செய்தியை அறிந்தபோது அதிர்ந்தேன்இப்படி வெறிக் கூச்சலுடன்அலைபவர்கள் அவலத்தை எண்ணிவருந்தினேன்

>>

நாகேந்திர பாரதி/பூட்டிய வீடு

இந்த வீடு முன்பொரு நண்பகலில்திறந்து இருந்தது திண்ணையில் ஆழாக்கு நெல்லுக்குஅள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்அரைக்கீரையை அம்மாச்சியிடம் கீரைக்காரி முன்ஹாலில் கட்டிலில் இருந்து வரும்மெல்லிய குறட்டை மூக்குப் பொடி வாசத்தோடுதாத்தாவிடம் இருந்து அடுத்த ஹாலில் தாயம் ஆட்டத்தில்குத்து வாங்கி காய்களை இழந்து கொண்டிருந்தான்அப்பத்தாவிடம் பேரன் …

>>

வி.வி. கலைச்செல்வி/அப்படியே இரு

பேச்சோடு பேச்சாகபேசிக் கொண்டிருக்கையில் என்னை பைத்தியகாரி என்று சொல்லிவிட்டாள் என் ப்ரியமான தோழி. எனக்கு கோபம் வரவில்லை அழுகைவரவில்லைஅதிமுக்கியமாக சிறு வருத்தம் கூட வரவில்லை. ஒரு பைத்தியமாவதற்குஎன்னென்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் என்னிடம் இருக்கிறது அதில் சந்தோசம் தான் எனக்கு பாருங்கள் …

>>

அழகியசிங்கர்/பை

இந்தப் பைஓட்டையாய் இருக்கிறது ஓட்டைப் பையை நிரப்பதபால்கள், எல்லாம் ஞாபகமாய்போஸ்ட் செய்கிறேன். ஓட்டைப் பையைத்திரும்பவும்கொண்டு வந்து விடுகிறேன். இன்னும் பல தபால்களைநிரப்புவதற்கு…. காலம் காலமாய்ஓட்டைப் பையும் தபால்களும்.

>>

அதிரன்/ஜூன் 2

வண்ண வண்ண சீருடை அணிந்துமுதுகில் ஒரு மூட்டை சுமந்துசிறகில்லாம் பறந்து செல்கிறதுசின்ன பட்டாம்பூச்சி ஒன்று அதை டாட்டா காட்டிவழியனுப்பி வைக்கிறதுஒரு பெரிய பட்டாம்பூச்சி

>>

சசிகலா விஸ்வநாதன்/ஒரு மிடறு

ஒரு மிடறு நீர் போதும்என் விடாய் தணிந்து விடும். ஒரே ஒரு சொல் போதும்என் வெறுமை களைய, ஒரே ஒரு பார்வை போதும்என் உயிர் துளிர் விட, ஒரே ஒரு தொடுகை போதும்என் நம்பிக்கை நீள, நீ நீயாக இருந்தால் மட்டும்.

>>

லாவண்யாசத்யநாதன்/ நிகர்

புழுதி புழுக்கம்வாகன நெரிசல்சிறிய சந்தில்விமான வேகத்தில்வரும் ஸ்கூட்டர்வழி மறிக்கும் மாடுகுறுக்கே ஓடும்பாதசாரிதுரத்தி வந்துபின்வழியில் ஏறும்வாலிபக்கிறுக்கன்இத்தனை நடுவிலும்விபத்தில்லாமல்அரசு பேருந்து ஓட்டும்ஓட்டுநருக்கு நிகராய்பூமிதனில்யாருமில்லையிஸ்ஸையே!

>>

அழகியசிங்கர்/பஸ்

இப்போதெல்லாம்பஸ்ஸில்செல்வதில்லைபஸ்ஸில்எப்போதும் வழியும்கூட்டத்தைப் பார்ப்பதுண்டு நான்ஆட்டோவைநம்பி வாழ்கிறேன்பயணத்துடன்அவர்கள் புலம்பல்களையும்கேட்பதுண்டு ஆனால்பஸ்ஸில் போக எனக்குப் பிடிப்பதில்லை

>>

விஞ்ஞானி/ஓட்டுநர்

ஓட்டுநர் என்றதும்முறுக்கிய மீசைஇறுக்கி முடிந்த சிகைதிரண்ட தோளில் துண்டுதிறந்த மார்பில் சுருள் முடிகையில் தார் குச்சி சகிதம் ஒற்றை மாட்டு வண்டியைஓட்டும் தாத்தா பக்கத்தில்உட்கார சண்டை போட்டஅந்த நாட்கள் நினைவுக்குவருகிறது

>>

சசிகலா விஸ்வநாதன்/ஓட்டுநர்

ஒரு ஓட்டுநரைத்தான்நான் மணந்துள்ளேன்;என்பது எனக்குமூன்றாம் மாதமே தெரிந்துவிட்டது. தேர்ந்த இயக்குநர் அவர்!இப்படி உடுத்து!அப்படி பேசு!இதை இவ்வாறு செய்!அவரிடம் அவ்வாறு பேசு!ஒரு வார்த்தை கூடஎதிர்மறை பதமாய்இருக்காது; எனக்குஎதிர் சொல் எடுக்கவோ;எதிர்வினை ஆற்றவோ;இயலாது!என்னால் இயலும்;எதிர்வினை ஆற்றவும்எதிர்சொல் பேசவும்.அதற்கான வாய்ப்பைஅவர் அளித்ததே இல்லை.என்பதில் எனக்கு குறைதான்!வலுவுக்கு …

>>

ரவி அல்லது/ஏக்கப்பொழுதான பயண சாஸ்வதங்கள்

ஓட்டுநர் தினம்: விடிபொழுதின்முன் பகுதிதொடங்கிவிடாதுபயணிக்கிறதுவாழ்க்கைஅலுவலெனவும்அகங்காரத்துக்கெனவும்ஆசைக்கெனவுமாகநேரத்தையும்நிம்மதியையும்கரைத்துஈட்டலும் செலவுமாகஎப்பொழுதும். மூச்சுக் கயிற்றின்முடிச்சுஇறுகும் முன்அன்றாடங்கள்ஒருவரின் கையில்அனாயசமாகஒப்புக்கொடுக்கப்பட்டுஓடுகிறதுயாதொருபயமற்றதாகபயணங்கள். விலைவைக்க முடியாததுஉயிரென்றாலும்வேதனையாகத்தான்இருக்கிறதுஎங்கும்ஓட்டுநருக்குஊதியத்தைகொஞ்சம்கூட்டிக் கொடுப்பதற்கு தயங்கும்அரசுகளையும்அதன்மக்களையும்நினைக்கும்பொழுது.* 01/06/25.12:47ம.

>>

கலாவதி பாஸ்கரன்/பொங்கல் விடுமுறை

படித்து பட்டம் பெற்றகிராமத்து இளைஞன்,வேலையின் பொருட்டுநகரவாசியானவன்.உடன் பணி செய்யும்பட்டணத்துப் பெண்ணைஆசை ஆசையாககாதலித்து மணந்தவன் ! நன்றாகத்தான் ஆரம்பித்ததுமண வாழ்க்கை !இருவரும் பணி செய்ததால்,வீட்டு வேலையில் பாதிஇவன் தலையில் !சனி ஞாயிறு வந்தால்துணிகள் துவைத்து,வீட்டை சுத்தம் செய்துமாலை டின்னர் வெளியில்,நைட் ஷோ கட்டாயம்! …

>>

ஆர் வத்ஸலா/மாமனிதர்

மாளிகையில் பிறந்துபட்டாடை உடுத்தி வளர்ந்துபள்ளி முதல்உயர் கல்வி வரைஇங்கிலாந்தில் படித்தவர் ஒற்றை ஆடை அணிந்தவரின் மெல்லிய குரலுக்கு செவி சாய்த்துமுரட்டு கதர் கட்டிஅடி வாங்கியும்அகிம்சை காத்துஒன்பதாண்டு சிறையில் வாழ்ந்தவர் எம்மதமும் சம்மதம் என்றவர்குழந்தையில் தெய்வம் கண்டவர்உடை மேல் ரோஜா மலரும்உள்ளம்‌ நிறைய …

>>

அழகியசிங்கர்/தபால் ஆபீஸ்

மேற்கு மாம்பலம்தபால் ஆபீஸில்தினமும் தபால்கள்போட வருவேன்அங்குள்ளவர்கள் என்னைப் பார்த்துபுன்னகைப்பார்கள்ஆனால்ஏனோ தெரியவில்லைவேறு தபால் ஆபீஸைஎனக்குப் பிடிப்பதில்லை (24.05.2025 அன்று தபாலில் அனுப்பிய கவிதை. இன்னொரு கவிதை வரவில்லை)

>>

கிரிஜா ராகவன்/அப்பா இறந்து ஆறாவது வருடம்

விரைந்து ஓடும் ரயில் பயணத்தில்பின்னோக்கி விரையும் காட்சிகள் போல்அப்பாவின் நினைவும் வேகம் அடங்கிகுமுறல் குறைந்து அமைதியாய் நிற்கிறது அப்பாவைக் கேட்காமல் ஒன்றும் செய்ய முடியாதுஅப்பா சொல்லி விட்டால் அது அரசு ஆணைஅப்பா கிட்ட சொல்லிடுவேன் என்னும் அஸ்திரம்எப்போது பாயுமோ என்ற பயத்திலே …

>>

வி.வி கலைச்செல்வி/மாறும் மழை

இது கோடைமழைகுடை எடுத்துப் போகுழந்தை மாதிரி நனைந்துவிடாதேபின் குளிரெடுக்கும்காய்ச்சல் வருமென்கிறாள் அம்மா . ஒரு மழையில் நனையாமலிருக்கஅம்மாவிடம் ஆயிரம் உப்புச்சப்பில்லாத காரணங்கள் இருக்கிறதுபோகட்டும் விடுங்கள் அம்மாவும்அம்மாவின் காரணங்களும் பூவரசங்கன்றை ஊன்றி வைத்தஎனக்கும் பூவரசங்கன்றுக்கும்இது கொடை மழை தாராபுரம்

>>

பி. ஆர். கிரிஜா/ஆதங்கம் !

பல்லாயிரம் ஆதங்க அலைகள், மனித மனதில்;பள்ளு பாட விடாமல் பரிதவிப்பு மனதோரத்தில் !பெண்ணின் ஆதங்கம் கல்வி !இளைஞனின் ஆதங்கம் பணி நிரந்தரம் !பெற்றோரின் ஆதங்கம் பிள்ளைகள் கரையேற்றம் !பாட்டியின் ஆதங்கம் ஊன்றுகோல் மேல் !பால்காரர் ஆதங்கம் கறவை மாடு மேல் !நடிகையின் …

>>

அனங்கன்/குறைகளில் நிறையும் நிறை

படியேறும் தருணத்தில்பளிச்சென்று சிரிக்கிறது அந்தப்பூ.இயற்கை அதற்கான நியதியைஒருபோதும் ஔித்துவைத்திருப்பதில்லை.மலர்ச்சியை வெடிப்புகளிடையே ஔிரவிட்டுதன்னிருப்பை நிறைசெய்கிறது அச்செடி.இருக்குமிடம் எதுவானால் என்ன …மனதை மலரவிட்டு வாழ்வதுஅனைவருக்கும் வாய்ப்பதில்லை.இன்னொரு பூவுக்குகாத்திருக்கும் வெறுமையில்இன்னும் காலம் நீளப்போகிறது.♦

>>

பி. ஆர்.கிரிஜாவின் இரண்டு கவிதைகள்

உருவம் தூரத்தில் புள்ளியாய்உன் உருவம்என் மனதில் என்றும்நீ விஸ்வரூபம்காலம் நமைப் பிரித்தாலும்கண்கள் என்றோ புகைப்படம் பிடித்ததே ! சித்திரம் அரூபமாய் நீ வானில்அழியாத கோலமாய்என் மனதில்உன் புகைப்படம் சித்திரமாய் சுவரில்அலங்கரிப்புஉன் வாசம் நாசித் துவாரம் வழியே உடல் முழுதும் பரவபரவச நிலையில் …

>>

பானுமதியின் ஐந்து கவிதைகள்

சுகம் எல்லைகளில் கால் கடுக்க நிற்கிறார்கள்.வீரமும் காதலும் எழுதுகோல களில் ததும்பத்ததும்பஎழுதிய பெருமிதங்கள்பொறுக்க மாட்டாமல் பொரூ முகின்றன.பச்சை பசும் வெளியில் குருதிப் பூக்கள்மலரும் வாசம் எங்கள் நாசிகளைஎட்டுவதில்லைஅன்றே சொன்னார் முண்டாசுக்கவிஞர்உரமற்ற நெஞ்சம்நேர்மை இல்லாத வாழ்வுவாய்ச்சொல் வீரர்களுக்கு ஒரு விண்ணப்பம்.உங்கள் கைகள் போரிட …

>>

நாகேந்திர பாரதி 5 கவிதைகள்

அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் . சமீபத்தில் மதுரை, உத்தரகோசமங்கை, புக்குளம், நயினார்கோவில் என்று சொந்த ஊர்களுக்குப் பயணம் சென்று வந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்து இன்று காலையில் எழுதிய கவிதைகள் பக்திப் பயணம் …

>>

ஆர் வத்ஸலா வாசித்த 5 கவிதைகள்

16/5/25 அன்று “கவிதை வாசிக்கலாம் வாங்க” 33 ஆவது கூட்டத்தில் நான் வாசித்த 5 கவிதைகள் 1 என்றும்ஆர் வத்ஸலா இல்லாவிட்டாலும்இருக்கிறாய்நீ மருத்துவரின் விதி மீறிஇனிப்பை கையில் எடுத்தால்உனது நெற்றியின் சுருக்கம்என்னை லேசாக கண்டிக்கிறது ஆனால்சில சமயம் பரிதாபப் பட்டுநான் தேநீரில்சிட்டிகை …

>>

கிரிஜா ராகவன்/கை பிடித்துக் கூட்டிச் செல்

கை நீட்டி கன்னம் வருடிமெய்தடவி மோவாய் தொட்டுதலை முன்னுச்சி ஒதுக்கிதன்மையாய் பேசுவாய் ! விரல்களை மெதுவாய் நீவிகை கோர்த்து இறுகப் பற்றிஎன் உள்ளங்கை எடுத்துஉன் கன்னம் புதைப்பாய் ! அறுபது வயதுப் பெண்ணாய்அருகில் இருந்தாலும்பள்ளிக் குழந்தையாய்என்னைக் கொஞ்சி மகிழ்வாய் ! அம்மா …

>>

ஆர்க்கே/என் கவிதையை..

என் கவிதையை..!—–அன்புடன் ஆர்க்கே! இன்னும் சுருக்கமாகஎழுதி இருக்கலாம். இன்னும் சூசகமாகசொல்லி இருக்கலாம். இன்னும் புதியதாகயோசித்திருக்கலாம். இன்னும் அலங்கார வார்த்தைகள்சேர்க்காதிருந்திருக்கலாம். இன்னும் சிந்தனைத் தெளிவுடன்இருந்திருக்கலாம். இன்னும் தாமதமாகஎழுதியிருக்கலாம். எத்தனையோ தோன்றியபடியேதான்இருக்கிறது எனக்கு..ஒரு கவிதையை எழுதுவதற்கு முன். இப்போது கூடஎழுதாமலேயே இருந்திருக்கலாம்என் கவிதையைஎன்றும் கூடத்தான்.—-அன்புடன் …

>>

சுரேஷ் ராஜகோபால்/கத்திரியில் மழை

கத்திரிவெயிலின்ஒரு நாள்கடந்தோம்….….என்று ஒருகவிதை எழுதஅமர்ந்தேன்,கடும் கோடை வெயில்நடுவே…. வானம்இருண்டுசூறைக்காற்றுபலமாகவீசதூரலாகஆரம்பித்துமழையும் வந்ததுநின்று பெய்ததுமனம் மகிழ்ந்தது..நின்றபின்சூட்டைக் கிளப்பலாம்இயற்கைசிரிக்கும் நேரம்

>>

பி. ஆர்.கிரிஜா/மே!

ஞாயிறு நன்றாய் உதிக்கட்டுமே !திங்கள் வேலைதுவங்கட்டுமே !செவ்வாய் பணி செவ்வனே தொடரட்டுமே !புதன் அனைத்தும் காரியம் துலங்கட்டுமே !வியாழன் முழுதும் அயராது உழைக்கட்டுமே !வெள்ளி தோறும் இறை துதி செய் மனமே !சனி குடும்பத்துடன் கொண்டாட்டமே ! 01/05/20252 pm

>>

வி.வி கலைச்செல்வி/அதெல்லாம் ஒன்றுமில்லை

வெள்ளை அடிக்கையில்இடறிவிழுந்து கொஞ்சம் அடிபட்டுவிட்டதுஅடிபடுவது மிகச் சாதாரணம்அதை விடவும் வலி பொறுத்தல் மிக மிகச் சாதாரணம் அடிபட்ட இடத்திற்கு அம்மம்மா அரதப் பழைய. வைத்தியமாய் எண்ணெய் பூசு என்கிறாள்அம்மாவோ டைக்ளோ பினாக் ஆயின்மெண்டோடு நிற்கிறாள்அப்பா வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் சரியாகுமென்கிறார் நானாக …

>>

அதிரன்/ஜன்னல்

இவர் அறையின் ஜன்னல்வழியே பார்த்தால் .எதிர் திசையில்அவர் அறையின் ஜன்னல் தெரியும் சரியான நேரத்திற்குஜன்னல் அருகேஇருவரும் வந்து விடுவார்கள் சாப்பிட்டாச்சா? என்பது போல்சைகையில்இவர் அவரை கேட்ப்பார்? ஆமாம் என்பது போல்அவர் தலையசைத்து விட்டுநீ ? என்பது போல் சைகை காட்டுவார் இப்படி …

>>

— செ. புனிதஜோதி கவிதை

என் வீட்டு வாசலின்முன்எப்போதும் படுத்திருக்கும்ஒரு பொன்னிறப் பூனை… இன்றுஎன்னவோ,பட்டுத் துணியைப் போல்அவ்வளவு குழைவு அதனை மடியில் வைத்துஅதன் முதுகுப்புறத்தைஎன் கைகளால்நீவி விட ஆசை… ஆனால் அது,தன் உடலுக்கு விடுதலை தந்த ஞானியெனப் படுத்திருந்தது… தூக்கி கொஞ்சுவதை விடபார்த்துக் கொண்டே இரு –அதுவே …

>>

வி. வி. கலைச்செல்வி/ இருவர்க்கும் நிம்மதி

நேற்று ஒரு கவிதை படித்தேன்அது ஒரு வாழ்வியல் கவிதைஇன்றுஅது நினைவில் வந்ததுஇப்போது அதுபாதி தான் புரிந்ததுமீதி புரியவேயில்லை எப்படியும் மீதியும்புரிந்துவிடும் என்றுநான் அதன் பாதியிலேயே நின்று கொண்டிருந்தேன் நான் அனாதைபோல் பாதியில் நின்றதுஅந்தக் கவிதைக்குவலித்திருக்கும் போலசட்டென்று என் நினைவிலிருந்து குதித்துவெளியே போய்விட்டது

>>

சசிகலா விஸ்வநாதன்/மௌனம்

தபால் கார்டில் வந்த கவிதை செயலற்ற ஒரு செயல் செய்யபேச்சற்ற ஒரு பேச்சே மௌனம்அமைதியின் ஆதாரநாதம்!அது ஒன்றே சாதனம்!ஓசையற்ற நினைவுஆசையற்ற உள்ளம்விசையற்ற நிலையில்நசையற்ற செயல்திறன்ஆம்!அதுவே மௌனம்.

>>

பாக்கியலட்சுமி/நிராகரிப்பு

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மயக்கும் தமிழில் மனம் நிறைந்தகருத்துக்களைக் கோர்த்துதணிக்கை ஒன்றில் அரங்கேற்றினேன்கொங்கு தமிழில் கொடுத்த உரையைஅனைவரும் ஆர்ப்பரித்து ரசித்தனர்சகலரின் உரைகளை விட எனது சிறப்பாகவேஇருந்ததென்ற மனநிறைவில்கல்லொன்று பெரிதாய் விழுந்ததுதேர்ந்தெடுக்கப்பட்டதில் விடுபட்டது என் பெயர்விழாப் பொழுதில் என் சொற்கள்வேறொருவர் …

>>

லாவண்யா சத்யநாதன்/பிராணாவஸ்தை

மலையளவுசொத்திருந்தும்கைநிறையபணமிருந்தும்மனதுக்குள் வறியவன்.கடலை மிட்டாய் வாங்ககணக்குப் பார்ப்பான்.உடைகள் வாங்க பலகடைகள் ஏறி இறங்குவான்.அளவு சரியில்லைநிறம் சம்மதமில்லையென்றுசாயம் போன சட்டைஅணிந்து திரிவான்.சுயமறுப்பு சிகாமணிநாலு தலைமுறை வீட்டைநவீனப்படுத்துமாறுபிள்ளைப்பூச்சியாய்துளைத்தாள் மனைவி.எனக்கும் ஆசைதான்கல்லுக்கும் மண்ணுக்கும்காசைக் கொட்டவேண்டாமென்றுகாசை மிச்சம்பிடித்தான்.இப்போது பார்நிராகரித்த ஆசைகளைநினைத்துஅல்லாடுகிறது உயிர்.சட்டி லேசில் உடையாமல்.

>>

ஹரணி கவிதைகள்

விபத்து..•••கொஞ்சம் பார்த்துப்போயிருக்கலாம்அய்யோ பாவம்…பார்க்காமல் போகஇயலாது..பார்த்துப் போகும்போதுதான்நடக்கிறது எல்லாமும்.. யார் யாரைப் பார்ப்பது?எது யாரைப் பார்க்கிறது? இவற்றுடன்தான்..•••பாதிக்குமேல்செல்லரித்த வாழ்வில்..சிலர் நல்ல தூக்கத்தில்சிலர் இருமுகிறார்கள்கொஞ்சம் தும்மல்கள்தொண்டைக் கரகரப்பில்கொஞ்சம் பேர்..யோவ்.. நிறுத்துய்யாஸ்டாப்பிங் தெரியாதா?பாக்கிக் கொடுங்க..யாரும்…….. இறங்கணுமா?ஹைலி இன்டீசண்ட் பீப்பிள்சார்.. ஆமாம் சார்..தினமும் நடக்கிறதுஆனாலும் பேருந்து பயணம்பாதுகாப்பானதுஆமாம்.. …

>>

சசிகலா விஸ்வநாத்/ஏக்கம்

அம்மா, பாட்டியைக் கடிந்து ஒரு வார்த்தைசொல்வதைக் கண்டு ஓடி வந்த சிறுமி;அம்மாவைப் பார்த்து முறைத்தது!புரிந்ததா, அதற்கு? தெரியவில்லை,எனக்கு! அம்மா கையிலிருந்த தன்பொம்மையை பிடுங்கிக் கொண்டு”நான் இனி பாட்டி செல்லம் தான்’ என்றுசொல்லி பாட்டி மடியில் உட்கார்ந்துகொண்டு, வலது கை விரல்களை மடக்கி‘டூ’ …

>>

நிஷாந்தன்/பரிமாறுதல்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மனச்சட்டியில் இட்டுமிகுந்த கவனத்துடன் சமைத்தஎனது எண்ணங்களைச்சொற்களின் கரண்டியில்பக்குவமாகப் பரிமாறுவதற்குஎனக்குத் தெரியவேயில்லை.என் முகத்தையும்ஏந்திய கரண்டியையும்அவநம்பிக்கையுடன்பார்க்கிறீர்கள்.சட்டியிலிடப்பட்டபொருட்கள் குறித்துசந்தேகம் கொள்கிறீர்கள்.காரசாரமாக விவாதிக்கிறீர்கள்.கரண்டிக்கும் உணவுக்கும்உள்ள வேறுபாட்டைஉங்களுக்குஎப்படித்தான் நான்புரிய வைப்பேன்எனது இன்னொருகரண்டி மூலம்?

>>

ஆர் வத்ஸலா/ஏன்?

என் கவிதைகளை மட்டும்உன் கண்தாண்டிச்‌ சென்று விடுகிறதேஏன்? அவைநல்ல கவிதைகள் அல்லஎன்பதாலா?அல்லதுநல்ல கவிதைகள்என்பதாலா? 5/4/25

>>

அழகியசிங்கர்/நான்

நான்பொய் சொல்லவில்லைதிருடவில்லையாரையும்ஏமாற்றவில்லைஎன்ன பிரச்சினைஉங்களுக்குநான்வெறுமனேகவிதைத்தான் எழுதுகிறேன்அதைப் படித்துத்தொலைத்தால் என்ன?

>>

பிரமிள்/மாரி

குளமாய்ப் பூக்கும்மழை விதைகள்.முகிலின் குரல் எச்சில்.வானச் சுவரொட்டிபல்லிக் குமுறல்.பரிதி கிழித்துதொங்கும் மின்னல்.தண்ணீர் பின்னிநீர் நூல் திரளின்வேர் கிளைத்தமலை முளைகள்காற்றின் சவுக்குத் தொடர்உருகிய கண்ணாடிக்கடல் அலைப் பாறை.கணங்கள் கழன்றதுபருவத்தின் ஓர்ஒற்றை பிரிந்ததுவெளியில் மாரிச்கவர் எழுந்ததுதூரிகை இயற்கைபுரண்டது.

>>

சாய்ரேனு பானு/புத்தர் இன்று பிறந்தால்

புத்தர் இன்று பிறந்தால்புத்தம்புதிதாய் என்ன வரும்?புத்தர் என்றும் புத்தரே.சத்தியம் என்றும் சத்தியமே. இன்னொரு போதி புகழ்பெறும்இன்னொரு அசோகன் பிறப்பெடுப்பான்பின்னொரு சங்கரன் வந்திடுவான்இனியொரு புத்தர் பிறந்துவந்தால்! புத்தர் என்று பிறந்தாலும்நித்தம் நடப்பதுதான் நடக்கும்.புத்தம் என்பது மனதினிலேபுதிதென்ன காலத்தின் ஓட்டத்திலே?

>>

விஞ்ஞானி/புத்தர் இன்று பிறந்தால்

அனைத்து துன்பத்துக்கும்காரணமான ஆசையைதுறக்க சொன்னதைமாற்றிஅனைத்துக்கும் ஆசை படுஎன்று சொல்லக்கூடும் யாதாயினும் துன்பம்விலகாது என்பதால்

>>

மதுவந்தி./புத்தர் இன்று பிறந்தால்…?

கேள்வியே எனக்குப்புரியவில்லை. இதோ என் மேஜையிலமர்ந்துசாந்தமான முகத்தோடு,நான் சொல்வதையெலாம்பொறுமையாய்க் கேட்டுஆசீர்வதிக்கிறஇவர் யார்! 04.04.25.

>>