S அர்ஜுனன் /பெண்

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு தோழிகள் ஓரிடத்தில்சந்தித்துக் கொண்டனர்.சிறுவயது கொண்டாட்டங்கள் நீர்த்துப் போன கதையை பேசிக்கொண்டு இருந்தனர்.இளவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டதால், குடும்பச் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று என்று ஒருத்தி சொன்னாள்.குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு அனுபவிக்கும் கொடுமைகளை மற்றொருத்தி சொன்னாள்.மாமியார்,நாத்தனார் கொடுமையில் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/நாகரிகம்

காற்றில் பறக்கும் சுருள் கூந்தலும் ஜீன்ஸ் குர்தியும் முதுகுப் பின் பை,கேமரா சகிதம் நிஷா ஒரு வார மலையேற்றத்துக்குப் பின் வெளி உலகத் தொடர்பு இல்லாத அந்தப் பழங்குடியினர் இருப்பை அடைந்தாள்.ஆண்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்று இருக்க அங்கிருந்த பெண்களிடம் சைகை …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /அம்மா யார்?

ஒரே பிரசவத்தில் நாலு பெண்களை பெற்று,விஷயம் அறிந்த பின் மனம் குமுறி அழுத நல்லம்மா ஒரு முடிவுக்கு வந்து செயலும் பட்டாள்.உமா,பாமா, லதா, கீதா,நால்வரும் போட்டதுப் போட்ட படி அப்படியே போலீஸ் ஊர்தியில் ஏறிக் கொண்டார்கள்.போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/மூக்குத்தி முத்தழகி

அரவிந்திற்கு அந்தப் பெண் பவித்ராவை ரொம்பப் பிடித்திருந்தது.பழைமைக்கும் , புதுமைக்கும் பாலமிடுவதைப் போல அடக்கமாகவும், அதே சமயம் நாகரிகமாகவும் இருந்தாள்.ஒரே குறை…மூக்குத்தி குத்தாமல் முகத்தில் ஏதோ வெறிச்சென்றிருந்தது.அவன் அம்மா தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.அரவிந்த் ஏதோ காரணம் சொல்லி, பெண்களை நிராகரித்து வருவதாகவும், …

>>

மாலா மாதவன்/இருப்பின் இறுக்கம்

பச்சையம்மாவின் கண்கள் எதிரில் விளையாட்டுப் போல் தன் கழுத்தில்வளையமிட்டுக் கொண்டிருக்கும் சீலியை வெறித்தது.ஒரு வயித்துப்பாட்டுக்கு ஓடா உழைக்காம உட்கார்ந்து திங்கன்னு வாக்கப்பட்டு வாழ வந்தேன். உண்டான சோறிருந்தும்உட்கார நேரமில்ல. உட்காரும் வேளையில ஒரு பருக்கைச் சோறுமில்ல.சொல்லானும் எடுபட்டுதா? குரல்வளையே கோவிந்தாவாம். பேச்சத்த …

>>

பி. ஆர்.கிரிஜா/நால்வர்

ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வரை ஆங்கிலத்தில்க்வாட்ருப்லெட்ஸ் என்பார்கள். இந்த நால்வரில் ஒருத்திக்கு மட்டும் பேச முடியாது.மற்ற மூவரும் பாடுவதில் வல்லவர்கள். பேச வராத பெண் சிறந்த நாட்டியக் கலைஞர்.நால்வரும் சேர்ந்தே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள்.ஒரு நாள் சுகவீனமுற்ற நாட்டியம் தெரிந்த பெண்ணிற்கு …

>>

அழகியசிங்கர்/நெருக்கடி

பணத்துக்கு என்ன செய்வது என்று விழித்தான் பத்மநாபன். இன்னும் ₹ 50000 ஆவது வேண்டும். வேறு வழியில்லை ரமணனிடம் போய் நிற்க வேண்டும். அவனிடம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தான்.பெண் கல்யாணத்திற்கு. ₹ 50000 கிடைக்காவிட்டால் கல்யாணம் நின்று போனாலும் போய்விடலாம்.யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தர்ம தரிசனம்

சின்னையனுக்கு ரொம்ப நாள் ஆசை! குடும்பத்துடன் அந்தக் கோவிலுக்குப் போகவேண்டும் என்று.இத்தனை நாள் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சேர்த்து வைத்த பணம், குஞ்சு குளுவான்கள் , மனைவியுடன் இரயில் பயணத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.சாமியை விரைவு தரிசனத்தில் உடனே பார்க்க …

>>

அப்புசிவா/உயிரி

வயிறு வலிக்குது அப்பா” என்றாள் சின்ன மகள். “எனக்கும்” என்றான் அவளைவிட சின்னவன். எதுவும் சொல்லாமல் மயங்கிக்கிடந்தது கைக்குழந்தை. அவனின் குழந்தையை ஒத்திருக்கும் அம்மாவும் மயங்கியிருந்தார். “எத்தனை நாள் அடைபட்டிருக்க வேண்டும்? எதனால்?” கேட்டாள் மனைவி. “யாருக்குமே தெரியாதே” என்றான் கணவன். …

>>

சுஸ்ரீ/அன்பளிப்பு

“ஏன் இப்படி எல்லாரும் சோந்து போயிருக்கீங்க?நம்ம குடும்ப படத்தை போஸ்டராப் போட்டேஎதிர் கட்சிக்காரன் ஓட்டு சேகரிக்கறான்.”குணசேகரனின் கூச்சலைக் கேட்டு அவர் மனைவி,”தெருவுல போற மாடு கூட உங்க படம் போட்ட போஸ்டரை கடிச்சு குதறரதைப் பாத்தா பயமா இருக்கு, இந்த தடவை …

>>

ஸ்ரீராம்/லாட்டரி சீட்டு

அந்த மாடர்ன் ஆர்ட் கேலரியின் ஒரு பக்கம் மட்டும் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருந்தது.என்ன என்று விசாரித்தேன்.ஒவ்வொருவரும் 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.“உள்ளே ஒரு படம் இருக்கிறது. ஓவியர் அதை என்ன நினைத்துக் கொண்டு வரைந்திருக்கிறார் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பரிசோதனை

“ஒரு சிறிய பரிசோதனை செய்யப் போகிறோம். அனைவரும் தயாரா?”பேராசிரியரின் கேள்விக்கு மாணவிகள் உற்சாகமாகத் தலை அசைத்தார்கள்.“இந்த மூங்கிலால் ஆன உருவத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். கைகளால் உணர்ந்து கொள்ளலாம். அளவு எடுத்துக்கொள்ளலாம். பக்கத்திலேயே பல வண்ணக் கலவைகள், பொருட்கள் வைக்கப் பட்டுள்ளன. அவை …

>>

நாபா.மீரா/அக்கரைப் பச்சை

கணவன்,மனைவி… குழந்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்களுடன் பிணைந்து பசியால் சுருண்டு கிடக்க… அதே பகுதியில் ரோட்டோரமாய் நாய் ஒன்று படுத்த நிலையில்…மேய்வதற்கு புல் இல்லாமல்…. பேப்பர் குப்பைகளைக் கிளறிக் கொண்டு ஒரு பசு மாடு….இப்படியாக…அந்த ஐந்தறிவு மற்றும் ஆறறிவு ஜீவன்கள் பசிப்பிணியால் …

>>

S அர்ஜுனன்/இது முடிவல்ல..

“மூன்று மாதமா வேலையில்ல.. சேமிப்பெல்லாம் காலியா போச்சு.. அழுற குழந்தைக்கு பால் கூட வாங்கிக் கொடுக்க முடியல.. அரளி விதையை அரைச்சிட்டு வர்றேன்.. குடும்பம் மொத்தத்துக்கும் நிம்மதி ஆயிடும்..” புலம்பினான் அவன்.“நண்டு, சிண்டு வரைக்கும் உன்னோட குடும்பத்தில உள்ளவங்க பத்தி நீ …

>>

விஜயா‌ ‌‌சுப்ரமணியம்/மாடர்ன் ‌ஆர்ட்

ஆர்ட காலணி கண்காட்சியில்‌‌. இருவர் ரொம்ப நேரமாக அந்த‌.படத்தை பார்த்து கொண்டு இருந்தாராகள்“இது என்ன ‌ஸார் புரியுதா “என்று ஒருவர் கேட்டார்“இந்த படம் பிரும்மா“விஷ்ணு சிவம் படமாக இருக்குமா?”“இல்லை இல்லை இது பிரும்மா வின்மூன்று தலை படம் தான்”அடுத்தவர் கேட்டார்“ஏங்க இது …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/காத்திருப்பு

” அம்மா, முடியவில்லை. ரொம்பப் பசிக்கிறது, தூக்கம் வருகிறது. மதியத்தில் இருந்து இங்கேயே இருக்கிறோம். எப்போது நம் பேருந்து வந்து எப்போது போய் சேர்வது?”மகள் புலம்பினாள்.அப்பாவும் அம்மாவும் கையறு நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பிள்ளைகளை பரிதாபமாக பார்த்தார்கள்.” பணம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /பழமையில் ஓர் புதுமை

ரகு ,ரவியின் கையில் இருந்த அந்த ஓவியத்தை கண் கொட்டாமல் பார்த்து யோசிக்கலானன் .இது என்னடா ?தலையும் இல்லை காலும் இல்லை, என்ன ஓவியம் வரைகிறாய் என்று முற்றுப் பெறாத அந்த பென்சில் கோடுகளை பற்றிக் கேட்டான்.“இது ஒரு கம்பெனிக்காக வரைந்து …

>>

மாலா மாதவன்/089654

கணினிச் சாலைகளில் இலக்கம் இலக்கமாய் நடந்து கொண்டிருந்தன அவைகள்.“இன்று நம் மூதாதையர் திருவிழா! கொண்டாட வேண்டாமா?” கேட்டது 065886“ஆமாம். கொண்டாட வேண்டும். இந்த மண்ணுலகத்தில் அவர்கள் கை கால் வயிறு தலை எனஒரு அமைப்போடு இருந்தார்களாம். எனக்குள் அந்த விஷயத்தை பதித்திருக்கிறார்கள்.” …

>>

ரவி அல்லது./சாத்தியத்தின் திறப்பு

உருக்குலைந்த மனதில் வீட்டிலிருந்த எல்லோரும் எவருடைய முகத்தையும் எவரும் பார்க்கத் தயங்கினார்கள். அதுவொரு பிணக்கூடமாக இருந்தது என்று சொன்னாலும் மிகையில்லைதான்.நடந்து போன நிகழ்வு சரியென தோன்றினாலும் வாழும் சூழலின் துயரம் அவர்களை வெளிக்காட்ட முடியாமல் நோக வைத்தது. இதற்கு முன் தலைமுறைகள் …

>>

சுஸ்ரீ/மாடர்ன் ஆர்ட்

ஏண்டி செளம்யா உன் பையன் இப்ப என்ன பண்றான்.அகிலாக்கா உனக்குதான் தெரியுமேரமேஷுக்கு எப்பவும் டிராயிங் கிராஃப்ட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்னு, அதான் ரோம்ல பேமஸ் ஆர்ட் காலேஜ்ல சேத்திருக்கோம்.இதைப் பாரு அவனோட ஆர்ட். அகிலா,”ஓ…என் பேத்தி இதை விட நன்னா வரைவாளே, இன்னும் …

>>

உஷா சங்கரநாராயணன்/ உள்ளும் புறமும்

“இந்தப்படமும் நீ வரைஞ்சதும் ஒண்ணா இல்லையே கிஷோர்” என்றார் கண் டாக்டர் கார்திகேயன்.“இல்ல டாக்டர் எனக்கு அப்படித்தான் தெரியுது” என்றான் கிஷோர்.கிஷோரின் அம்மா கொஞ்சம் கலவரமான முகத்துடன் “டாக்டர் கண்ணக் கொஞ்சம் நல்லா டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன். இவன் நல்லாத்தான் வரைஞ்சுட்டிருந்தான். …

>>

வசந்தா கோவிந்தராஜன்/கனவுக்கன்னி

காரிடாரில் நடக்கும்போது பாதி திறந்திருந்த சன்னல் வழியாக அந்த உருவம் பார்த்து அதிர்ந்து போனேன். கயிற்றால் கட்டப்பட்டு விரிந்த கூந்தலுடன் கவிழ்ந்து கிடந்த அந்தப் பெண்ணின் முகம் பரிச்சயமானதாய்த் தெரிந்தது.தீவிர யோசனையோடு பிரகாஷ் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அப்போது மருத்துவமனை …

>>

சுஸ்ரீ/என்னை விட்டுப் போகாதே

அம்மா அப்பா கிட்ட சொல்றதை ராமு ஹோம் ஒர்க் பண்ணிட்டே கேட்டுட்டு இருந்தான்.”ரேணுவுக்கு காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டு அனுப்பிடணும் 24வயசாச்சுஇன்னும் சின்னக் குழந்தையா என்ன?”ராமுவோட அக்கா ரேணு டிகிரி முடிச்சிட்டு வீட்ல இருக்கா.ராமுவோட படிப்புக்கு ஹெல்ப் பண்றேன்னுட்டு ரொம்ப ஹிம்சை …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/கட்டுகள்

“சற்று மெல்லத்தான் அந்த கட்டுகளைப் போட்டுத் தொலையேன்”.வரைந்து கொண்டிருந்த ஓவியம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் தூரப் போய் தலை குப்புற விழுந்தான் அவன்.முந்தைய இரவு குடிபோதையில் வண்டி ஓட்டியபோது எதன் மீதோ மோதிவிட்டு நிற்காமல் வந்தது லேசாக நினைவுக்கு வந்தது. அவன் …

>>

S அர்ஜுனன் /தத்துவமஸி

தெருவில் பஜனைப்பாடலை பாடிக்கொண்டு சென்றவர்களைவேடிக்கை பார்த்த சிறுவன் தினேஷ்..“அம்மா.. நீயெல்லாம் இப்படி பஜனை பாடுற மாதிரியோ.. அடிக்கடி கோவிலுக்கு போகிற மாதிரியோ தெரியலையே?.. ஏன்?..” என்றான்.தாய் நிதானமாக பதில் சொன்னாள்..“பக்தி என்பது இப்படி வெளிப்படையா காண்பிக்கிறது மட்டுமில்ல.. எல்லா உயிரும் கடவுள்னு …

>>

அப்புசிவா/கிறுக்கல் கவிதை

“இப்படியேதான், எப்போ பார்த்தாலும் பண்றா”வந்ததில் இருந்து புலம்பித்தீர்த்தார் நண்பர்.“வீடெல்லாம் கிறுக்கல் “இப்போதும் அந்த பாப்பா எங்கள் வீட்டு சுவரிலும் வரைய ஓடியது.“ஸ்கூல் புக், நோட்டு எல்லாம் கிறுக்கல்”அவர் போட்டிருந்த சட்டையிலும் ஓவிய சுவடுகள் இருந்தன.பெண்ணின் கையெல்லாம் பேனா மை.ஒரு தாளையும் பேனாவையும் …

>>

அழகியசிங்கர்/பெண்ணின் நிலை

ஜனனி ஒரு நல்ல டான்சர். பாட்டும் பாடுவாள். டிவியில் நடனப் போட்டி.கடைசி நிமிடத்தில் ஜனனியைப் போட்டியில் சேர்க்கவில்லை.அவள் திறமையில் குறைகண்டா? இல்லவே இல்லை. நடுவர் ஒருவர் இன்னொரு பெண்ணை சேர்த்து விட்டார். ஜனனிக்கு பதிலாக. அதைக் கேள்விப்பட்டு ஜனனி உடைந்து விட்டாள். …

>>

ஸ்ரீராம் /குறியீடு

“எதற்கு பச்சை ட்ரெஸ் போட்டு கூந்தலால் உடம்பைக் கட்டி இருப்பதுபோல ஃபோட்டோ எடுக்கச் சொல்றே?”பெண்கள் பத்திரிகையில் பெண் விடுதலைக் கட்டுரைகள் எழுதுகிறாள் ரத்திகா.“ஒரு குறியீடுதான் சதீஷ். பெண்களுக்கு தன் அழகை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான் பலவீனம். அதேபோல பெண்களின் …

>>

நாகேந்திர பாரதி/கட்டறுத்தல்

இன்று நேற்று நடப்பதா இது. எத்தனை யுகங்களாய்த் தொடர்ந்து வருவது இது. மற்றவர் போட்ட கட்டுக்கள் சில, தானே போட்டுக்கொண்ட கட்டுக்களும் சில. இதிகாச நாயகிகளில் இருந்து இன்றைய நாயகிகள் வரை கட்டறுக்கும் வேலையே காலை முதல் மாலை வரை பெண்ணினத்திற்கு …

>>

எபி/இனம்புரியாத விடுதலை

இரவுகளை ஆகச் சிறந்த பொழுதாக அவன் வைத்திருந்தான்.ஒவ்வொரு இரவும் கனவுகளை அவனுக்கு ஒரு நண்பனைக் போல தினமும் பரிசளித்தன.கனவுகளை வரைந்து வரைந்து ரசிப்பதும் கொண்டாடித் தீர்ப்பதும் பொழுது போக்காக இருந்தது அவனுக்கு.அன்றைக்கு ஏதோ மிகுந்த மன அழுத்தத்தடன் புரண்டு கொண்டே கிடந்துவிட்டு …

>>

நாபா.மீரா/பிரதானம்

தாயம்மாவுக்கு மனசே ஆறவில்லை. மாயாம்மாவுக்கு இந்தச் சின்ன வயசுல இப்படியொரு கொடிய நோயா?தெனமும் ஏதோ கீமோவாமே…அது வைச்சு வைச்சு…முடியத்தனையும் கொட்டிச் போச்சாமே…தினந்தோறும் நீளமா தலை பின்னி எவ்வளோ அழகா பூ வைச்சிருப்பாங்க.நாதியில்லாம தெருவுல கிடந்த நம்மளுக்கு நாளும் வேளையும் தவறாம சாப்பாடு …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இது என்ன?

நான் ஒரு அடர்ந்த காடு வழியே நடந்துப் போய் கொண்டிருக்கிறேன்.காரிருள் படர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் எதுவும் தெரியவில்ல.பாழாய்ப் போன நிலவு கூட சதி செய்து விட்டது. ஓ! இன்று அமாவாசையா?சுற்றும் முற்றும் விழித்து நோக்கினேன்.கையில் பிடித்திருந்த சிறிய ஒளி மங்கிய …

>>

அழகியசிங்கர்/அப்பா சொன்னது சரி

சிற்பி முருகேசனுக்கு எந்த விதத்திலும் திருப்தி ஏற்படவில்லை. அவர் சிதையில் வார்த்த அந்த உருவத்தை உருவாக்கும் போது கண்கள் மட்டும் கொடூரமாகத் தெரிந்தன. ஏன் சரியாய் வரவில்லை ? ஒரு அறையில் அந்த வார்ப்பை மூடி வைத்து விட்டு, அந்த இடத்திலிருந்து …

>>

அர்ஜுனன்/மென்மையின் மறுபக்கம்

படுக்கையறை கதவு திறந்த சப்தத்தில் விழித்த ரேஷ்மா, முகமூடித் திருடன் ஒருவன் கத்தியுடன் வருவதைப் பார்த்தாள். கணவரும் வீட்டில் இல்லை. குழந்தை ரித்துவை அணைத்துக் கொண்டு தயாரானாள். வந்தவன் கத்தியைக் காட்டி செயினைக் கேட்டு மிரட்ட, அவள் அதைக் கொடுக்க.. அவன் …

>>

மாலா மாதவன்/தேவதை இளம் தேவி

கோபாலன் வழக்கம் போல குடியோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தான் குடும்பத் தலைவன் என்ற கர்வத்தோடு.“அம்மா! இதான் நீ!” ஐந்தாவது படிக்கும் சம்யுக்தா தான் வரைந்த ஓவியத்தை பவானியிடம் காண்பித்தாள்.“இதென்னடா பச்சைப் புடவை கட்டியிருக்கேன்? அம்மாவுக்குப் பச்சைப் புடவையே பிடிக்காதே?” பவானி கேட்டாள். …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பச்சைக் குழந்தை

திடீரென விழித்தாள் பவித்ரா.என்ன கனவு இது! இந்தக் கனவு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.ஒரு பெண்… பச்சை வண்ணத்தில் நைட்டி போல் உடையணிந்து ,கைகள் தெளிவாக இல்லாமல், அதிக முடியுடன், கருப்புக் கயிறுகளால் கட்டப் பட்டவளாகத் தென்படுகிறாள்.பார்க்கக் கொஞ்சம் பயமாகவும், ஆனால் பாவமாகவும் …

>>

உஷா சங்கரநாராயணன்/வீரம்

வீல் என்ற சத்தம் கேட்டு சுஜாவை தட்டி எழுப்பினாள் அம்மா.“எதுக்கு கத்தறே! என்ன கனவு?” என்றாள்.ஒருத்தர் வந்தா ஒரு கத்தி வச்சு குத்திடுவோம்னு பையில் வச்சிருந்தேன்மா. ட்யூஷன் போய்ட்டு வந்துட்டிருந்தேனா… நாலு பேரு வந்துட்டாய்ங்க.அங்க இங்க ஓட முடியல. கத்திய வச்சு …

>>

பி. ஆர்.கிரிஜா/திறமை

சுட்டிப் பெண் உஷா எப்போதும் எதையாவது வரைந்த வண்ணம் இருப்பதைப் பார்த்து அவள் அம்மா முகம் சுழிப்பாள். படிப்பில் கவனம் செலுத்தாமல் எப்போதும் படம் வரைகிறாள் என்று தன் கணவனிடம் ஒரே புலம்பல்.அன்று பள்ளியிலிருந்து திரும்பிய உஷா மகிழ்ச்சியுடன் ஓடி வந்து …

>>

மாலா மாதவன்/கலவை மனம்

அகல்யா கை போன போக்கில் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா வீட்டுக்கு வந்ததில் இருந்து ஆழ்கடல் அமைதியாய் அவள் மனம் இருந்தது.“என்னம்மா திடீர்னு! உன் வீட்டுக்காரர் கூட இல்லாம?” அம்மா பயத்துடன் கேட்ட போது கூட அவள் பதில் சொல்ல வில்லை.“ஏங்க …

>>

மாலா மாதவன்/முகவாசல்

“முகம் தாம்மா மனசோட வாசல் அது தெரியுமா உனக்கு?”முகவாசல் செய்யும் வேலைக்காரி ரஞ்சிதம் என்னிடம் கேட்ட போது இவளுக்கு எப்படி இப்படியெல்லாம் பேச வருதுன்னு நான் வியந்தேன்.“ம்க்கும்! உனக்குத் தெரியாதா என்ன? நீ தான் எழுத்தாளரச்சே!” மீண்டும் சொன்னாள்.என் முகத்தில் கொட்டிய …

>>

சுபாஷிணி ரமணன்/உயில்

“ஏங்க, விஷயம் தெரியுமா?”உங்க தம்பி வரப்போறாராம். இத்தனை நாள் இல்லாம இப்ப எதுக்கு வராருன்னு தெரியலையே”மனைவி மீனா சொல்லியதைக் கேட்ட கோதண்டராமன், “வேறெதுக்கு? எல்லாம் பணத்துக்காகத்தான்” என்றான் சலிப்போடு.அதே வேகத்தில் எழுந்து அண்ணன் சிவராமனிடம் சென்றான். “அண்ணா! ஒரு விஷயம்”என்றான். அவன் …

>>

எம். ஷங்கர்/க்ராஸ் கனெக்‌ஷன்

புது அப்பார்ட்மென்ட்டுக்குள் குடிபுகுந்தவுடனே ஆணிஅடிப்பதிலும் எலக்ட்ரிக்கனெக்‌ஷனலிலும் பிஸியாக இருந்தவன், மணியடிப்பதை கேட்டு கதைவை திறந்தான்.“ஹலோ நான் கமலா, பக்கத்து ஃபிளாட் , உங்களை எங்க வீட்டுக்கு காஃபி சாப்பிட கூப்பிட வந்தேன்”என்றவளிடம்“ நீங்க உஷாவை கூட்டிட்டு போங்க, நான் இந்த கனெக்‌ஷனை …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/கணவன் மனைவி

என்ன கிளம்பிச்சா,ஹெல்ப் பண்ணினா சீக்கிரம் கிளம்பலாம், பசங்க இப்போ தானே போனாங்க, இன்னும்10 நிமிஷம் ஆகும்.என்ன 10 நிமிஷமா போச்சுடா இன்னிக்கி லேட் தான்.ரெஜிஸ்டர் ஆபீஸ் கும்பலாகிடும்தெரியுமில்ல, அப்ப காலைல ஹெல்ப் செஞ்சி இருக்கணும்.என்ன நான் ஹெல்ப் செய்யணுமா!!பின்ன செஞ்சா என்ன!!குறைஞ்சு …

>>

நாகேந்திர பாரதி /சக்தி

அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும் சுறுசுறுப்பு . அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி, அவள் வேலையின் வேகத்தைப் பார்ப்பவர்க்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். குளியல், சமையல், குழந்தையின் பள்ளி , கணவனுடன் அனுசரணை , அலுவலக ஆட்டோ, வேலை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /அயல் நாட்டுக் காதலி

சே . இவ்வளவு மோசமானவனா என் கணவன் ?பவித்ராவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது .விஷயம் இவ்வளவுதான் . அண்மையில் பாண்டிச்சேரி செல்லும்போது , பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி நின்ற ஜூலியைப் பார்த்தாள் . அவள் ஒட்டுப் போட்ட உடையையும் , ஒற்றைக் …

>>

நாபா.மீரா/விழிகளில் ஒரு வானவில்

கசுவா கிராமம். அந்த அரசுப்பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. குழந்தைகள் தின சிறப்புப் போட்டியாக ‘நீவீர் ரசித்த பண்டிகை’ குறித்து ஒரு படம் வரையவும்…குழந்தைகள் அவர்கள் கை வண்ணத்தில் அழகழகாய் படங்கள் வரைந்து குவித்தனர்.புகழ்பெற்ற ஓவியர் எழிலன் நடுவராக அழைக்கப்பட்டிருந்தார்.வண்ணங்கள் ஆங்காங்கே தீட்டப்பட்ட …

>>

நாபா.மீரா/ஜால்ரா

இந்த வாரக்கடைசில நடக்கப்போற கச்சேரிக்குள்ள நம்ம கஞ்சி காமேஸ்வரன் வந்துடுவானோன்னோ…. சாம்பு வித்வான் தன் குழுவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார்.ஊம்….நாம இத்தனை பேரு இருந்தாலும் அவன் வந்து கூஜா தூக்கணும் இவருக்கு…முணுமுணுத்தனர் குழுவினர்.காமேஸ்வரனின் ஜால்ரா இணைந்து கச்சேரி நல்லபடியாக முடிந்தது.இவன் தாளத்துக்காகத் …

>>

ஸ்ரீராம்/சிவாபாரம்

“என்னடா சிவா? டெய்லர் கடையில எல்லாருக்கும் தைத்த துணில மிச்சம் இருந்த ‘பிட்’ எல்லாம் வச்சு உனக்கு சட்டை தைச்சு கொடுத்துட்டானா?” என்று கூறி சிரித்த நாராயணனை தாண்டி விந்தி விந்தி நடந்தான் சிவா.‘ உங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்கு. எனக்கு வேதனையா …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பாதை

தலையில் சிறிய குடுமியும் , நெற்றியில் நாமமும் , பஞ்சகச்சம்,ஜிப்பாவும் அணிந்த அந்த இளைஞர்கள் இறைவன் நாமத்தை பாடியபடியே இசைக்கருவிகளுடன் ஊரின் ஊடே நடந்து கொண்டிருந்தார்கள்.” பார்க்க எல்லாம் படிச்ச வசதியான பிள்ளைங்க போல இருக்கு. இவங்களுக்கு வெளிநாட்டு பணம் வந்துட்டு …

>>

S.அர்ஜுன்/தத்துவமஸி

ஹரே ராமா ஹரே ராமா,ராம ராம ஹரே ஹரேஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேதெரு முழுதும் ஒலிக்கச்செய்து, ஒரு சிறிய குழு தாளம் போட்டு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் சென்றது.சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வேகமாக வந்த சிறுவன் தினேஷ், …

>>

ஸ்ரீராம் – ராமஜோசியம் ராமஜோசியம் டிகி டிகி டிகி

ஹாலில் மாட்டியிருந்த நாம சங்கீதப் படத்தைப் பார்த்தபடி அப்பாவின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தான் விஸ்வம்.“இந்தப் படம் எப்படி உங்கள் அப்பா நினைவைத் தருகிறது? உங்க அப்பா குக்.. ஸாரி, செஃப்தானே?லலிதா முன்னர் கேட்ட கேள்வி நினைவில் ஆடியது.“பரவாயில்லை.. ‘குக்’ன்னே சொல்லலாம். அப்பா தன்னோட …

>>

சீனு/காலை வணக்கம் படத்திற்குப் பாடல்

காலை எழுந்தவுடன் முன்புசேர்ந்து வேலை செய்தவர்க்கும்பள்ளியில் சேர்ந்துநூலை ப்படித்தவர்க்கும்நாள்தோறும் கூட இருந்துநாளை கழிப்பவர்க்கும்காலை வணக்கம் சொல்ல வேண்டும் இது எனதுவெகுநாட்ப்பழக்கம்.வேலைப்பளுவாலே சிலநாள் அதனை மறந்தால்கேள்விகள் பல வரும் உடல்ஊறு எதுவும் இல்லையே என்றுபேறு என்னசெய்தேன் இப்படிநண்பர் உறவினரை நான் பெற நான் …

>>

சிவா/முகம்

சாயந்திர டீக்கடை அரட்டை அது.எழுத்தாள ஓவிய இசை நண்பர்களின் குரூப்.ஒருமணி நேரம் அதுவாக ஓடும்.“தப்புதான்னு இவர் சொன்னார்”“கண்டிப்பா நீ சொன்னாலும் அப்படிதான்”“நியூஸ்ல கூட தப்புன்னாங்க”“உங்க கருத்தை வச்சு கதை எழுதணும்”“உங்க கதை படிச்சுட்டு அதுக்கு கவிதை எழுதுவேன்”“எல்லோரும் சொல்றோம்… ஓவியரே நீங்க”“நான் …

>>

பி.ஆர்.கிரிஜா/கூட்டுப் பிரார்த்தனை

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த அறுவர் குழு கிளம்பி விடும். இவர்கள்அறுவருக்கும் உள்ள ஒற்றுமை இசை. ஒருவர் நன்றாகப் பாடக் கூடியவர். மற்ற ஐந்து பேரும் ஒவ்வொரு வாத்தியம் வாசிப்பதில் வல்லவர்கள். இவர்கள் அறுவருக்கும் இறை நம்பிக்கை அதிகம். காலை …

>>

ஜெயலட்சுமி கே/வெளிச்சம்

திடீரெனப் பெய்த அடைமழை, மாலதி தன் வீட்டில் வந்து சேரும் அவசரத்தை அதிகப்படுத்தியது. நகரத்தின் மின்சாரம் மொத்தமாகத் துண்டிக்கப்பட, இருள் பேய் உருவம் எடுத்தது போல் சுற்றிலும் சூழ்ந்தது. தெரு விளக்குகள் அணைந்து, அக்கம் பக்கத்து வீடுகளின் நடமாட்டமும் சத்தமும் அடங்கிப் …

>>

சசிகலா விஸ்வநாதன் /ஒத்த மனங்கள்

அதிர்ச்சியில், சுகந்தியின் குதுகலம், காற்று போன பலூன் மாதிரி சப்பி விட்டதுஇந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி; என்ற யோசனையை விட இது ஒரு பிரச்சனையா; என்பதில் கூட அவளுக்கு தெளிவில்லை.உடனடியாக சுகந்தி தனது அலுவலகத்திலிருந்து வேகமாக அடையாறு நோக்கி தன் …

>>

ஸ்ரீராம்/ஜெய ஜெய ஜெயந்தி

ஃபோன் ஒரு ரிங் வந்து விட்டு நின்றது. அதிகாலை கோலம் போட வெளியில் வந்த ஜெயந்தி சட்டென உள்ளே திரும்பி ஃபோனை எடுத்தவள் ‘மிஸ்ட் கால்’ கணவன் ஜெகனிடமிருந்து என்று தெரிந்து, கீழே வைக்கப் போனவள் வாட்ஸாப்பில் ஏதோ வருவது தெரிந்து …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/குறுஞ்செய்தி வெறும் செய்தி ஆனதே !!

கல்லூரி வாழ்க்கை என்று நாம் இருந்த நாட்களில்.என் மகிழ்ச்சி உன் மகிழ்ச்சி என்று நாம் இருந்த காலத்தில்.விடியற்காலை வெள்ளி முளைக்கும் நேரம்.நான் எழும் முன் காத்திருக்கும் உன் குறுஞ்செய்தி !!என்னை மகிழ்வித்து அதனால் நீயும் மகிழ என்று.மறக்காமல் நீ அனுப்பும் இனிய …

>>

நாபா.மீரா/பார்வை

அந்தப் பொண்ணு என்னையே வெறிச்சு வெறிச்சுப் பார்க்குது பாருடா…. ஐயாவோட பர்சனாலிட்டி அப்படி….காலரை உயர்த்திப் பெருமை பேசிய நண்பன் நவீனை முறைத்தான் கவின்.கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக மெரீனா கடற்கரை சாலையில் … மாலை நேரம் கடற்கரையில் சிறிதுநேரம் இவர்கள் நடை பயின்று …

>>

பி. ஆர்.கிரிஜா/ உதவி

சுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. பேருந்து இன்னும் வந்தபாடில்லை. அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்றால் மேலதிகாரியின் அர்ச்சனையைக் காது கொண்டு கேட்க முடியாது. ஆட்டோவில் செல்லலாம் என்றால் வசதியில்லை. லேட்டாகப் போவதைவிட விடுமுறை எடுத்து விடலாமா என்று கூட ஒரு நிமிடம் நினைத்தாள் சுதா.அப்போது …

>>

பி. ஆர்.கிரிஜா/அறியாத முகம்

கந்தசாமி தினமும் நடைபயிற்சி செய்வதை தவற விடமாட்டார். அடாது மழை பெய்தாலும் குடையுடன் கிளம்பி விடுவார். மனைவி எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதே நடையோடு சேர்த்து, நண்பர்களைப் பார்த்து அரை மணி நேரம் பேசுவதற்குத்தான். …

>>

நாகேந்திர பாரதி/ஆடிய ஆட்டம் என்ன ?

முகம் முழுக்க அப்பியிருந்த வண்ணப்பூச்சை தண்ணீர் அடித்து அழுத்தித் தேய்த்தும் இன்னும் முழுதும் போகவில்லை. கண்மாயில் போய் முக்குளித்து எழுந்தால் தான் முழுதும் போகும். அந்தக் கிராமத்தின் தெருக்கூத்துக் கலைஞர்களில் முக்கியமான ராஜபார்ட் நடிகர் அவர். சுந்தரம். ‘ காயாத கானகத்தே …

>>

அனங்கன்/முகம்

அந்தக் கலைக்கல்லூரி கலைஇயக்குநர்…முன்மாதிரியாய் வைத்த முகத்தை….அவரவர் பாணியில் ஓவியமாய் …களிமண் சிற்பமாய்…காகிதக்கூலில்…மற்றும் குப்பையென ஒதுக்கப்பட்ட பொருள்களில்பல்வேறு விதமாய் கலைபயிலும் மாணவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.வித்யா மட்டும் களிமண்ணை பிசைந்துவைத்துவிட்டு…ஒன்றும் செய்யாமல் மாதிரிக்கு வைத்த முகத்தை வெறித்தபடிஇருந்தாள்.கலைபயிற்றுவிக்கும் ஆசிரியர் அனைவரது படைப்புகளும் பார்வையிட்டு…சில திருத்தங்களையும் …

>>

மாலா மாதவன்/தாகம்

‘நீருண்ட மேகங்கள் நிலம் பார்க்காததால் தாகத்தால் தவித்தது மரம். அதன் பட்டைகள் செதிலாய் மின்னியது. ஊன்றிய கிளைகள் தனி வீடாக கிளைக்கும் மரத்துக்கும் சம்பந்தம் இல்லா நிலையில் தனக்குத் தானே மௌன தண்டனை கொடுத்துக் கொண்டது மரம்.’படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் தாக்கிய …

>>

அர்ஜூனன்/மீண்டும்..

“ஏங்க.. உங்கப்பாவை பார்த்தீங்களா?.. எந்நேரமும் எந்த உணர்ச்சியும் காட்டாம வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கார்..” அர்ஜுனின் மனைவி சித்ரா சொன்னாள்.“ஆமா.. சித்ரா.. பணிஓய்வு பெற்ற ஆறு மாதங்களிலேயே மனைவியையும் இழந்து.. அந்த துக்கத்தில இருந்து வெளிவரத் தெரியாம இருக்காரு..”“அதுக்குனு அவரை அப்படியே விட்டுடுவீங்களா..?”அர்ஜுன் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/நக்கீரன் முகம்

வைபவ் படீரென்று விழித்துக் கொண்டான். பதினெட்டு டிகிரியில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. தெப்பலாய் வியர்வையில் நனைந்திருந்தான்.அந்த முகம், அந்தக் கண்கள் இப்போதும் நடுங்க வைத்தது. அந்த மரம் சரிந்து கொண்டே இவனை நோக்கி வந்து கொண்டேயிருந்தது. திடீரென்று மரத்தில் அந்த முகம் …

>>

நாபா.மீரா/விடியாமூஞ்சி

அம்மா… ஈவ்னிங் காலேஜீல ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. வீட்டுக்கு வர நாழியாயிடும்… சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்த லாவண்யா முகம் சுளித்தாள்.போச்சு… இன்னைக்கு இந்த விடியாமூஞ்சிமொகத்துல முழிச்சிட்டுப் போறேனா…விளங்கினாப்பலத்தான்…சுகன்யா சொன்ன மனிதன்…. பார்ப்பதற்கு குரூபியாக இருந்த அவனை அந்த ஏரியாவில் யாருக்குமே பிடிக்காது.மாலை …

>>

சந்தியா ஷங்கர்/”அமானுஷ்யம்”

நள்ளிரவில் சேத்தன் புரண்டு புரண்டு படுத்தான். என்ன கனவு அது? யாரு அது? ஒரு ஆணோட முகம் என்று தெரிந்தது. ஆனால் ஏன் இவ்வளவு விகாரமாய்?நினைத்து கொண்டே தூங்கிவிட்டான். திடீரென அவன் அம்மா பாக்கியம் எழுப்பினாள். “டேய் சேத்தன் எழுந்திரு. மணி …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/நியூரான் தீற்றல்

யுரேகா என்று கூவாத குறையாக தனது அறிவியல் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே வந்தான் துருவ். ” ஒரு புது இயந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறேன். அதன் முதல் பயனாளியாக உங்களுக்கு அதை உபயோகப்படுத்துவதற்கு அனுமதியும் வாங்கி விட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் தந்தையிடம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/அதே முகம்..!

முகத்தில் வயோதிகம் தொனிக்க, கண்களில் உணர்ச்சியற்ற ஒரு பார்வையுடன், ‘சிரிப்பு எத்தனை வராகன்?’ எனும் படியாய் சிரிப்பற்ற ஒரு முகம். பல ஆண்டுகளாய் அவனது கனவில் தோன்றி சுந்தரை இம்சிக்கும் அதே முகம்.திடுக்கிட்டு முழித்தான் சுந்தர்.“என்னங்க.. அதே கனவா?” இப்போது ரோகினிக்கு …

>>

சிவா/உறுத்தல்

ஏதோ வேகத்தில் வரைந்துவிட்டேன்.அவசரம்தான், இப்படி என திட்டமிடவில்லை.இருக்கும் வண்ணங்களை கொண்டு ஒரு முகம்.ஏதோ குறைவதாக எனக்கு மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது.பார்வையிட வந்தவர்களோ பாராட்டித் தீர்த்தனர்.ஆனாலும் என்ன குறையென்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.பார்வையாளர் அற்ற ஒரு நேரம் முழுமையாக ஆராய்ந்தேன்.இன்னும் வண்ணங்கள் சேர்க்கலாமாவென யோசித்தேன்.அந்த …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பேரழகன்

மணி அண்ணாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பற்றிக் கொண்டு வரும்.அவனும் அவன் தீத்தழும்பேறிய அசிங்கமான மூஞ்சியும்! அம்மாவும்,அப்பாவும் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.சின்ன வயசிலேயே அம்மா,அப்பாவை இழந்த மணி அண்ணா _ சுரேஷின் பெரியப்பா பிள்ளை_ இவர்கள் வீட்டிலேயேதான் வளர்கிறான்.இவன் மேல் கொள்ளைப் …

>>

ஸ்ரீராம்/புருஷமரம்

“கால் வலி தாங்க முடியவில்லை” என்று காலில் மருந்து தேய்த்துக் கொண்டே சொன்ன மலரைப் பார்த்து விட்டு மௌனமாக கடந்து சென்றார் சாமிநாதன். மலருக்கு இது வழக்கம்தான். மன வலிகளைச் சொன்னாலும், மன வருத்தங்களை சொன்னாலும், ஏன் சந்தோஷங்களைச் சொன்னாலும் கூட …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/ பிறந்தநாள் பரிசு

“ராம், ஒவ்வொரு வருஷமும் புருஷ லட்சணமா என் பிறந்த நாளை மறந்துட்டு வருத்தப் படறீங்களேன்னு தான் இந்த முறை ஒரு வாரம் முன்னாடியே எனக்கு என்ன பரிசு வேணும்னு சொல்லிட்டேன்”.“தேங்க்ஸ் டியர். இந்த வருஷம் உன்னை எப்படி அசத்துறேன் பாரு. ’என் …

>>

ஸ்ரீராம்/பம்பர பரிமளா

பத்து நாள் லீவு போட்டு படுக்கையில் உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்தார் பத்மநாபன். படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பரிமளாவின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது. காலை எழுந்து தன்னுடைய சிறு வேலைகளை பார்ப்பதே மிகவும் அலுப்பாகத் தெரிந்த அவருக்கு , காலை …

>>

வசந்தா கோவிந்தராஜன்/ஆண் பாவம்

“டேய், குழந்தை அழறது கூடத் தெரியாம அப்படியென்ன கிழிக்கற?” தர்ஷா கூவினாள்.“ஒரு நிமிஷம், துணி உலர்த்தி முடிச்சுட்டேன்! இதோ வந்துட்டேன்!” அபினவ் கையைத் துடைத்துக் கொண்டே பரபரப்பாக வந்து குழந்தையை வாரிக் கொண்டான்.பால் கொடுத்துக் கொண்டே LinkedIn மெயில் செக் பண்ணினான். …

>>

நாகேந்திர பாரதி/புத்தக நோய்

சுந்தரின் இந்தப் பழக்கம் ‘ நல்ல பழக்கம் ‘ என்று அவன் நினைக்கிறான். ஆனால் அவன் நண்பன் சேகர் இது ‘ கெட்ட பழக்கம் ‘ என்று உறுதியாக நம்புகிறான். ஆமாம். இந்த புத்தகம் வாங்குகிற பழக்கம்தாங்க.அடிக்கடி புத்தகக் கடைகளுக்குச் சென்று …

>>

சுகன்யா சம்பத்குமார்/மௌனம்

ராமசாமி தன் வாய் பேசாத மகனான ராஜேஷை கூப்பிட்டுக்கொண்டு அவன் வைத்தியத்திற்காக குறைந்தது 10 மருத்துவர்களை பார்த்திருப்பார் .அவனுக்கு பேச முடியும் ஆனால் பேச மாட்டான் . கல்லூரி படிப்பை முடித்து 2 வருடமாக வீட்டில் தான் உள்ளான் . நன்றாக …

>>

S. அர்ஜுனன்/ பெண்ணொன்று கண்டேன்..

“டேய் ரிஷி.. இந்த படத்தைப் பாருடா..” என்று அம்மா காண்பித்த படத்தில், ஒரு பெண் தன் பத்து கைகளாலும் வெவ்வேறு வேலை செய்துகொண்டு, மடியில் ஒரு குழந்தையை வைத்து பாலூட்டுவதாக இருந்தது.“இது மாதிரி தான்டா உனக்கு பொண்ணு பார்க்கணும்.. வேலைக்கு போனாலும் …

>>

சந்தியா ஷங்கர்/”புத்தகங்களின் மாநாடு”

தத்துவம் பேசும் புத்தக குழுமம்: “என்ன நண்பர்களே! இன்னிக்கு மாநாட்டின் தலைப்பு என்ன? என்னவாருந்தாலும் எங்க குழு தான் வெற்றி பெற போகிறது. ஹ ஹ ஹ ஹ ஹா. இன்னிக்கு ஜனங்களுக்கு சாப்பாடு தண்ணியை விட தத்துவம் தான் வேண்டிருக்கு. …

>>

சுஸ்ரீ/தசாவதானி தாரகேஸ்வரி

“தாரா உனக்கு வயசாச்சே தவிர புத்தி இன்னும் வளரலை”அம்மா கத்தறா சமையலறைல இருந்து.“அது வளற தனியா உரம் போடோணும், பழைய சோத்துலயும் சுண்டைக்கா குழம்புலயும் வளறாது அது.”“மூதேவி எதுத்து எதுத்து பேசறதுக்கு மட்டும் உரம் வேண்டாமா”“அது பரம்பரை சொத்து உன்னோட ஜீன்ஸ்”“எல்லாம் …

>>

மாலா மாதவன்/சுயம்வரம்

தாரிணியால் தன் கையில் திணிக்கப் பட்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.ஐ ஐ டியில் கோல்ட் மெடலிஸ்ட் அவன். திருமண விஷயத்தில் அவனுக்கு வைக்கப் பட்ட இந்த தேர்வு புதுமையாக இருந்தது.“டேய்! பொண்ணு பார்க்க வரச் சொல்லிட்டு இப்படி டெஸ்ட் வைக்கற …

>>

பி.ஆர்.கிரிஜா/சாமர்த்தியம்

மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …

>>

சுகன்யா சம்பத்குமார் /நூலகம்

சோமசுந்தர அய்யா ஒரு வித தயக்கத்துடன் தன் அலைபேசியை எடுத்து திலக்கிற்கு அழைப்பு விடுத்தார் . திலக் தனது அலுவலக பணியாக வெளியே சென்றதால் அவர் அழைப்பை எடுக்க முடியவில்லை ,பின்னர் அவரை அழைத்தான் .அவர் தயங்கிக்கொண்டே “தம்பி எப்படி பா …

>>

சாந்தி சந்திரசேகரன்/பொறுப்பு..!

குழந்தையாக வளர்த்த மகளுக்கும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்பதை ராதாவால் இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.“என்னம்மா செய்யுற..? நான் வேணும்ன்னா அப்பாவுக்கு காய்ச்சல் சரியானதும் உதவிக்கு வரவா?” ராதாவின் குரலில் சற்று வருத்தம்.“எனக்கென்னம்மா.. நல்லாருக்கேன். உங்க காலம் மாதிரி நானே எல்லா …

>>

பி. ஆர்.கிரிஜா/புத்தகப் புழு

புத்தகங்களை வாங்கிக் குவித்து அதை படித்துக் கரைத்துக் குடித்த முகிலன் இப்போது தன் வீட்டின் ஒரு மூலையில் ஜன்னலோரம் பழைய நார் படுக்கையில் கிழிந்த நாராய் கிடக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று அறியப்பட்டவர். வாங்காத பரிசுகள் …

>>

சுஸ்ரீ/ஹ்யூமென் அனாடமி

நீட் எழுதி ரேங்ல வந்து மெடிகல் காலேஜ்ல சேரறது இருக்கே அது பெரிய பிரம்ம பிரயத்னம்.எனக்கு அதிர்ஷ்டம்னே வச்சிக்கங்களேன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிலயே இடம் கிடைச்சது.மிடில் கிளாஸ் பொண்ணுக்கு மெடிகல் சீட் கனவுதானே அதுவும் ஜெனரல் கேடகிரில.ஆத்தர் செளராசின்றவர் எழுதின …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/நோ பிராப்ளம்

காலை பரபரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா.அவள் கணவன் ராம் தூங்கிக் கொண்டிருந்தான் இவள் சமைத்து, இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்குக் காலை உணவு கொடுத்து, லஞ்ச் பாக்ஸுடன் கிளப்பி அனுப்பி விட்டு கணவனுக்கும் , தனக்கும் லஞ்ச் கட்டிக் தானும் ரெடியாகிப் …

>>

அழகியசிங்கர்/விற்று விட்டான்

அவன் அந்த அறையில் தனியாக உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிலும் புத்தகங்கள்.அவனால் அழுகையை அடக்க முடியவில்லை.இன்னும் சில தினங்களில் இங்குள்ள புத்தகங்கெல்லாம் அவனுக்குச் சொந்தமில்லை.இன்னொருவருக்குச் சொந்தம் ஆகப் போறது.ஆமாம். அவன் விற்றுவிட்டான். மனைவியின் தொல்லை தாங்காமல். இந்த வயதில் இனிமேல் முடியாது என்ற …

>>

S. அர்ஜுனன்/காலச் சக்கரம்

“அம்மு.. அண்ணா லைப்ரரி போயிட்டு வர்றேன்” மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார் கோவிந்தன்.“ஏதோ கவிதை புத்தகம் வெளியீட்டு விழானு போன வாரம் உங்களுக்கு வாட்ஸப்பில அழைப்பு வந்ததே.. அதுக்கா..?” கேட்டாள் அம்புஜம்.“ஆமா..”“ஏன்தான் இப்படி புஸ்தகமா வாங்கி குமிக்கிறீங்களோ?.. விழாவுக்கு கூப்பிடுறவங்க ஓசிக்கா புஸ்தகம் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தப்பித்த சாம்ராஜ்யம்

வானம் பொத்தலாகிப் போனதோ? அந்தச் செய்தி கேட்டதிலிருந்து என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நான் தமிழ்நாடு அரசு அலுவலகத்தின் நூலகர்.எங்கள் கட்டிடம் மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது. விஸ்தாரமான சாளரங்களுடன் காற்றோட்டமாக இருக்கும். மழை காலத்தில் ஒழுகும். ஒழுகாத இடத்தில் புத்தகங்களை மேலே …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்./சின்ராசுவின் புத்தகச் சந்திப்பு

“சில்லரை திருட்டு சின்ராசு சின்ராசு சின்ராசு”குற்றவாளி கூண்டில் ஏறி நின்ற சின்ராசுவை பார்த்த நீதிபதி சுந்தரத்திற்கு சலிப்பு மேலோங்கி விட்டது.” இப்பதானே ரெண்டு வாரம் முன்னாடி அபராதம் போட்டு அனுப்பிச்சேன். இது எத்தனாவது முறை ? என்ன செய்துட்டு வந்திருக்கே? ““ஒரு …

>>

சிவா/கண் காட்சி

எனக்கு அந்த மாளிகையில் உறுத்திக்கொண்டே இருந்தது அந்த அறை.அப்பாவின் நெருங்கிய நண்பரின் வீடு அது.நான் சிறுவயதில் வந்த நினைவு.இப்போது அப்பாவும் இல்லை. அவர் நண்பரும் இல்லை.எனினும் தவிர்க்கமுடியா பந்தம் என்பதால் என் மகள் திருமண பத்திரிக்கை வைக்க வந்திருந்தோம்.அப்பாவின் நண்பரின் மகனுக்கும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுத்தக் காரி

அம்மா சுஜாதா பயங்கர சுத்தக்காரி.வீட்டை வெகு நேர்த்தியாக வைத்திருப்பாள்.எல்லா விஷயங்களிலும் அப்பாவுடன் ஒத்துப் போகும் அவள், அவருடன் சண்டையிடுவது இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமே.அவளுக்கு தேவையில்லாத பொருட்களை வீட்டில் சேர்க்கப் பிடிக்காது.அப்பாவுக்கோ பழைய பொருட்கள் எதையுமே தூக்கிப் போட மனம் வராது.நாட்கள் …

>>

நாபா.மீரா/யுக சாட்சி

காந்தி நூல் நிலையம்.புராதனப் பாணியில் கட்டமைப்பு கொண்ட அந்த நூலகத்தின் உள்ளிருந்து வெளியே பார்க்கும்படி இருந்த கண்ணாடி அமைப்பு இயற்கையோடு இயைந்து பரிமளித்தது.ஊம்… என்ன இருந்து என்ன … இந்த டிஜிட்டல் யுகத்துல நம்மள சீந்த நாதியில்லாம போச்சே…. தமிழ் வரிசையில் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/காலப் புத்தகம்

“விபுலா, கிளம்ப எல்லாம் தயாரா?”” ஆமாம் ஜே. 500 வருடங்கள் பின்னோக்கி போக அமைத்து இருக்கிறேன்.”” போய் சேர ஒரு சில மணிகளாவது ஆகுமே. பொழுது போக என்ன செய்வாய்?”” படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த 200 புத்தகங்களை இந்த …

>>

சாந்திசந்திரசேகரன்/அரண்மனை..!

சுற்றுலா வந்திருந்த புகாரி காட்டிற்குள், தான் பறந்து வந்த வான்குடை மிதவை திசைமாற்றி இறக்கி விட்ட போது சற்றுத் தடுமாறித் தான் போனான் ரவி.தன் தொலைந்ததாக தவித்திருந்தவன் , உதவி தேடி காட்டிற்குள் அலைந்த போது, அத்துவானக்காட்டிற்குள் ஔிந்திருந்த அரண்மனைப் போல, …

>>

எஸ். சரத்குமார்/நினைவு

அப்பாவிற்கு எதுமே நினைவில் இல்லை.‘கண்ணாடிய இங்க தான வச்சேன்…’ என பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார்.சாப்பிட்டு முடித்த பின்னரும்,’நான் சாப்பிடவே இல்ல…’ என சத்தியம் செய்வார்.அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை.ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை!‘அப்பா…நீ எங்க போய்யிட்ட?’அப்பாவுக்கு ஏற்பட்ட நோயை நான் …

>>