அப்புசிவா/கிறுக்கல் கவிதை

“இப்படியேதான், எப்போ பார்த்தாலும் பண்றா”வந்ததில் இருந்து புலம்பித்தீர்த்தார் நண்பர்.“வீடெல்லாம் கிறுக்கல் “இப்போதும் அந்த பாப்பா எங்கள் வீட்டு சுவரிலும் வரைய ஓடியது.“ஸ்கூல் புக், நோட்டு எல்லாம் கிறுக்கல்”அவர் போட்டிருந்த சட்டையிலும் ஓவிய சுவடுகள் இருந்தன.பெண்ணின் கையெல்லாம் பேனா மை.ஒரு தாளையும் பேனாவையும் …

>>

அழகியசிங்கர்/பெண்ணின் நிலை

ஜனனி ஒரு நல்ல டான்சர். பாட்டும் பாடுவாள். டிவியில் நடனப் போட்டி.கடைசி நிமிடத்தில் ஜனனியைப் போட்டியில் சேர்க்கவில்லை.அவள் திறமையில் குறைகண்டா? இல்லவே இல்லை. நடுவர் ஒருவர் இன்னொரு பெண்ணை சேர்த்து விட்டார். ஜனனிக்கு பதிலாக. அதைக் கேள்விப்பட்டு ஜனனி உடைந்து விட்டாள். …

>>

ஸ்ரீராம் /குறியீடு

“எதற்கு பச்சை ட்ரெஸ் போட்டு கூந்தலால் உடம்பைக் கட்டி இருப்பதுபோல ஃபோட்டோ எடுக்கச் சொல்றே?”பெண்கள் பத்திரிகையில் பெண் விடுதலைக் கட்டுரைகள் எழுதுகிறாள் ரத்திகா.“ஒரு குறியீடுதான் சதீஷ். பெண்களுக்கு தன் அழகை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான் பலவீனம். அதேபோல பெண்களின் …

>>

நாகேந்திர பாரதி/கட்டறுத்தல்

இன்று நேற்று நடப்பதா இது. எத்தனை யுகங்களாய்த் தொடர்ந்து வருவது இது. மற்றவர் போட்ட கட்டுக்கள் சில, தானே போட்டுக்கொண்ட கட்டுக்களும் சில. இதிகாச நாயகிகளில் இருந்து இன்றைய நாயகிகள் வரை கட்டறுக்கும் வேலையே காலை முதல் மாலை வரை பெண்ணினத்திற்கு …

>>

எபி/இனம்புரியாத விடுதலை

இரவுகளை ஆகச் சிறந்த பொழுதாக அவன் வைத்திருந்தான்.ஒவ்வொரு இரவும் கனவுகளை அவனுக்கு ஒரு நண்பனைக் போல தினமும் பரிசளித்தன.கனவுகளை வரைந்து வரைந்து ரசிப்பதும் கொண்டாடித் தீர்ப்பதும் பொழுது போக்காக இருந்தது அவனுக்கு.அன்றைக்கு ஏதோ மிகுந்த மன அழுத்தத்தடன் புரண்டு கொண்டே கிடந்துவிட்டு …

>>

நாபா.மீரா/பிரதானம்

தாயம்மாவுக்கு மனசே ஆறவில்லை. மாயாம்மாவுக்கு இந்தச் சின்ன வயசுல இப்படியொரு கொடிய நோயா?தெனமும் ஏதோ கீமோவாமே…அது வைச்சு வைச்சு…முடியத்தனையும் கொட்டிச் போச்சாமே…தினந்தோறும் நீளமா தலை பின்னி எவ்வளோ அழகா பூ வைச்சிருப்பாங்க.நாதியில்லாம தெருவுல கிடந்த நம்மளுக்கு நாளும் வேளையும் தவறாம சாப்பாடு …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இது என்ன?

நான் ஒரு அடர்ந்த காடு வழியே நடந்துப் போய் கொண்டிருக்கிறேன்.காரிருள் படர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் எதுவும் தெரியவில்ல.பாழாய்ப் போன நிலவு கூட சதி செய்து விட்டது. ஓ! இன்று அமாவாசையா?சுற்றும் முற்றும் விழித்து நோக்கினேன்.கையில் பிடித்திருந்த சிறிய ஒளி மங்கிய …

>>

அழகியசிங்கர்/அப்பா சொன்னது சரி

சிற்பி முருகேசனுக்கு எந்த விதத்திலும் திருப்தி ஏற்படவில்லை. அவர் சிதையில் வார்த்த அந்த உருவத்தை உருவாக்கும் போது கண்கள் மட்டும் கொடூரமாகத் தெரிந்தன. ஏன் சரியாய் வரவில்லை ? ஒரு அறையில் அந்த வார்ப்பை மூடி வைத்து விட்டு, அந்த இடத்திலிருந்து …

>>

அர்ஜுனன்/மென்மையின் மறுபக்கம்

படுக்கையறை கதவு திறந்த சப்தத்தில் விழித்த ரேஷ்மா, முகமூடித் திருடன் ஒருவன் கத்தியுடன் வருவதைப் பார்த்தாள். கணவரும் வீட்டில் இல்லை. குழந்தை ரித்துவை அணைத்துக் கொண்டு தயாரானாள். வந்தவன் கத்தியைக் காட்டி செயினைக் கேட்டு மிரட்ட, அவள் அதைக் கொடுக்க.. அவன் …

>>

மாலா மாதவன்/தேவதை இளம் தேவி

கோபாலன் வழக்கம் போல குடியோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தான் குடும்பத் தலைவன் என்ற கர்வத்தோடு.“அம்மா! இதான் நீ!” ஐந்தாவது படிக்கும் சம்யுக்தா தான் வரைந்த ஓவியத்தை பவானியிடம் காண்பித்தாள்.“இதென்னடா பச்சைப் புடவை கட்டியிருக்கேன்? அம்மாவுக்குப் பச்சைப் புடவையே பிடிக்காதே?” பவானி கேட்டாள். …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பச்சைக் குழந்தை

திடீரென விழித்தாள் பவித்ரா.என்ன கனவு இது! இந்தக் கனவு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.ஒரு பெண்… பச்சை வண்ணத்தில் நைட்டி போல் உடையணிந்து ,கைகள் தெளிவாக இல்லாமல், அதிக முடியுடன், கருப்புக் கயிறுகளால் கட்டப் பட்டவளாகத் தென்படுகிறாள்.பார்க்கக் கொஞ்சம் பயமாகவும், ஆனால் பாவமாகவும் …

>>

உஷா சங்கரநாராயணன்/வீரம்

வீல் என்ற சத்தம் கேட்டு சுஜாவை தட்டி எழுப்பினாள் அம்மா.“எதுக்கு கத்தறே! என்ன கனவு?” என்றாள்.ஒருத்தர் வந்தா ஒரு கத்தி வச்சு குத்திடுவோம்னு பையில் வச்சிருந்தேன்மா. ட்யூஷன் போய்ட்டு வந்துட்டிருந்தேனா… நாலு பேரு வந்துட்டாய்ங்க.அங்க இங்க ஓட முடியல. கத்திய வச்சு …

>>

பி. ஆர்.கிரிஜா/திறமை

சுட்டிப் பெண் உஷா எப்போதும் எதையாவது வரைந்த வண்ணம் இருப்பதைப் பார்த்து அவள் அம்மா முகம் சுழிப்பாள். படிப்பில் கவனம் செலுத்தாமல் எப்போதும் படம் வரைகிறாள் என்று தன் கணவனிடம் ஒரே புலம்பல்.அன்று பள்ளியிலிருந்து திரும்பிய உஷா மகிழ்ச்சியுடன் ஓடி வந்து …

>>

மாலா மாதவன்/கலவை மனம்

அகல்யா கை போன போக்கில் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா வீட்டுக்கு வந்ததில் இருந்து ஆழ்கடல் அமைதியாய் அவள் மனம் இருந்தது.“என்னம்மா திடீர்னு! உன் வீட்டுக்காரர் கூட இல்லாம?” அம்மா பயத்துடன் கேட்ட போது கூட அவள் பதில் சொல்ல வில்லை.“ஏங்க …

>>

மாலா மாதவன்/முகவாசல்

“முகம் தாம்மா மனசோட வாசல் அது தெரியுமா உனக்கு?”முகவாசல் செய்யும் வேலைக்காரி ரஞ்சிதம் என்னிடம் கேட்ட போது இவளுக்கு எப்படி இப்படியெல்லாம் பேச வருதுன்னு நான் வியந்தேன்.“ம்க்கும்! உனக்குத் தெரியாதா என்ன? நீ தான் எழுத்தாளரச்சே!” மீண்டும் சொன்னாள்.என் முகத்தில் கொட்டிய …

>>

சுபாஷிணி ரமணன்/உயில்

“ஏங்க, விஷயம் தெரியுமா?”உங்க தம்பி வரப்போறாராம். இத்தனை நாள் இல்லாம இப்ப எதுக்கு வராருன்னு தெரியலையே”மனைவி மீனா சொல்லியதைக் கேட்ட கோதண்டராமன், “வேறெதுக்கு? எல்லாம் பணத்துக்காகத்தான்” என்றான் சலிப்போடு.அதே வேகத்தில் எழுந்து அண்ணன் சிவராமனிடம் சென்றான். “அண்ணா! ஒரு விஷயம்”என்றான். அவன் …

>>

எம். ஷங்கர்/க்ராஸ் கனெக்‌ஷன்

புது அப்பார்ட்மென்ட்டுக்குள் குடிபுகுந்தவுடனே ஆணிஅடிப்பதிலும் எலக்ட்ரிக்கனெக்‌ஷனலிலும் பிஸியாக இருந்தவன், மணியடிப்பதை கேட்டு கதைவை திறந்தான்.“ஹலோ நான் கமலா, பக்கத்து ஃபிளாட் , உங்களை எங்க வீட்டுக்கு காஃபி சாப்பிட கூப்பிட வந்தேன்”என்றவளிடம்“ நீங்க உஷாவை கூட்டிட்டு போங்க, நான் இந்த கனெக்‌ஷனை …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/கணவன் மனைவி

என்ன கிளம்பிச்சா,ஹெல்ப் பண்ணினா சீக்கிரம் கிளம்பலாம், பசங்க இப்போ தானே போனாங்க, இன்னும்10 நிமிஷம் ஆகும்.என்ன 10 நிமிஷமா போச்சுடா இன்னிக்கி லேட் தான்.ரெஜிஸ்டர் ஆபீஸ் கும்பலாகிடும்தெரியுமில்ல, அப்ப காலைல ஹெல்ப் செஞ்சி இருக்கணும்.என்ன நான் ஹெல்ப் செய்யணுமா!!பின்ன செஞ்சா என்ன!!குறைஞ்சு …

>>

நாகேந்திர பாரதி /சக்தி

அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும் சுறுசுறுப்பு . அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி, அவள் வேலையின் வேகத்தைப் பார்ப்பவர்க்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். குளியல், சமையல், குழந்தையின் பள்ளி , கணவனுடன் அனுசரணை , அலுவலக ஆட்டோ, வேலை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /அயல் நாட்டுக் காதலி

சே . இவ்வளவு மோசமானவனா என் கணவன் ?பவித்ராவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது .விஷயம் இவ்வளவுதான் . அண்மையில் பாண்டிச்சேரி செல்லும்போது , பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி நின்ற ஜூலியைப் பார்த்தாள் . அவள் ஒட்டுப் போட்ட உடையையும் , ஒற்றைக் …

>>

நாபா.மீரா/விழிகளில் ஒரு வானவில்

கசுவா கிராமம். அந்த அரசுப்பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. குழந்தைகள் தின சிறப்புப் போட்டியாக ‘நீவீர் ரசித்த பண்டிகை’ குறித்து ஒரு படம் வரையவும்…குழந்தைகள் அவர்கள் கை வண்ணத்தில் அழகழகாய் படங்கள் வரைந்து குவித்தனர்.புகழ்பெற்ற ஓவியர் எழிலன் நடுவராக அழைக்கப்பட்டிருந்தார்.வண்ணங்கள் ஆங்காங்கே தீட்டப்பட்ட …

>>

நாபா.மீரா/ஜால்ரா

இந்த வாரக்கடைசில நடக்கப்போற கச்சேரிக்குள்ள நம்ம கஞ்சி காமேஸ்வரன் வந்துடுவானோன்னோ…. சாம்பு வித்வான் தன் குழுவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார்.ஊம்….நாம இத்தனை பேரு இருந்தாலும் அவன் வந்து கூஜா தூக்கணும் இவருக்கு…முணுமுணுத்தனர் குழுவினர்.காமேஸ்வரனின் ஜால்ரா இணைந்து கச்சேரி நல்லபடியாக முடிந்தது.இவன் தாளத்துக்காகத் …

>>

ஸ்ரீராம்/சிவாபாரம்

“என்னடா சிவா? டெய்லர் கடையில எல்லாருக்கும் தைத்த துணில மிச்சம் இருந்த ‘பிட்’ எல்லாம் வச்சு உனக்கு சட்டை தைச்சு கொடுத்துட்டானா?” என்று கூறி சிரித்த நாராயணனை தாண்டி விந்தி விந்தி நடந்தான் சிவா.‘ உங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்கு. எனக்கு வேதனையா …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பாதை

தலையில் சிறிய குடுமியும் , நெற்றியில் நாமமும் , பஞ்சகச்சம்,ஜிப்பாவும் அணிந்த அந்த இளைஞர்கள் இறைவன் நாமத்தை பாடியபடியே இசைக்கருவிகளுடன் ஊரின் ஊடே நடந்து கொண்டிருந்தார்கள்.” பார்க்க எல்லாம் படிச்ச வசதியான பிள்ளைங்க போல இருக்கு. இவங்களுக்கு வெளிநாட்டு பணம் வந்துட்டு …

>>

S.அர்ஜுன்/தத்துவமஸி

ஹரே ராமா ஹரே ராமா,ராம ராம ஹரே ஹரேஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேதெரு முழுதும் ஒலிக்கச்செய்து, ஒரு சிறிய குழு தாளம் போட்டு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் சென்றது.சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வேகமாக வந்த சிறுவன் தினேஷ், …

>>

ஸ்ரீராம் – ராமஜோசியம் ராமஜோசியம் டிகி டிகி டிகி

ஹாலில் மாட்டியிருந்த நாம சங்கீதப் படத்தைப் பார்த்தபடி அப்பாவின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தான் விஸ்வம்.“இந்தப் படம் எப்படி உங்கள் அப்பா நினைவைத் தருகிறது? உங்க அப்பா குக்.. ஸாரி, செஃப்தானே?லலிதா முன்னர் கேட்ட கேள்வி நினைவில் ஆடியது.“பரவாயில்லை.. ‘குக்’ன்னே சொல்லலாம். அப்பா தன்னோட …

>>

சீனு/காலை வணக்கம் படத்திற்குப் பாடல்

காலை எழுந்தவுடன் முன்புசேர்ந்து வேலை செய்தவர்க்கும்பள்ளியில் சேர்ந்துநூலை ப்படித்தவர்க்கும்நாள்தோறும் கூட இருந்துநாளை கழிப்பவர்க்கும்காலை வணக்கம் சொல்ல வேண்டும் இது எனதுவெகுநாட்ப்பழக்கம்.வேலைப்பளுவாலே சிலநாள் அதனை மறந்தால்கேள்விகள் பல வரும் உடல்ஊறு எதுவும் இல்லையே என்றுபேறு என்னசெய்தேன் இப்படிநண்பர் உறவினரை நான் பெற நான் …

>>

சிவா/முகம்

சாயந்திர டீக்கடை அரட்டை அது.எழுத்தாள ஓவிய இசை நண்பர்களின் குரூப்.ஒருமணி நேரம் அதுவாக ஓடும்.“தப்புதான்னு இவர் சொன்னார்”“கண்டிப்பா நீ சொன்னாலும் அப்படிதான்”“நியூஸ்ல கூட தப்புன்னாங்க”“உங்க கருத்தை வச்சு கதை எழுதணும்”“உங்க கதை படிச்சுட்டு அதுக்கு கவிதை எழுதுவேன்”“எல்லோரும் சொல்றோம்… ஓவியரே நீங்க”“நான் …

>>

பி.ஆர்.கிரிஜா/கூட்டுப் பிரார்த்தனை

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த அறுவர் குழு கிளம்பி விடும். இவர்கள்அறுவருக்கும் உள்ள ஒற்றுமை இசை. ஒருவர் நன்றாகப் பாடக் கூடியவர். மற்ற ஐந்து பேரும் ஒவ்வொரு வாத்தியம் வாசிப்பதில் வல்லவர்கள். இவர்கள் அறுவருக்கும் இறை நம்பிக்கை அதிகம். காலை …

>>

ஜெயலட்சுமி கே/வெளிச்சம்

திடீரெனப் பெய்த அடைமழை, மாலதி தன் வீட்டில் வந்து சேரும் அவசரத்தை அதிகப்படுத்தியது. நகரத்தின் மின்சாரம் மொத்தமாகத் துண்டிக்கப்பட, இருள் பேய் உருவம் எடுத்தது போல் சுற்றிலும் சூழ்ந்தது. தெரு விளக்குகள் அணைந்து, அக்கம் பக்கத்து வீடுகளின் நடமாட்டமும் சத்தமும் அடங்கிப் …

>>

சசிகலா விஸ்வநாதன் /ஒத்த மனங்கள்

அதிர்ச்சியில், சுகந்தியின் குதுகலம், காற்று போன பலூன் மாதிரி சப்பி விட்டதுஇந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி; என்ற யோசனையை விட இது ஒரு பிரச்சனையா; என்பதில் கூட அவளுக்கு தெளிவில்லை.உடனடியாக சுகந்தி தனது அலுவலகத்திலிருந்து வேகமாக அடையாறு நோக்கி தன் …

>>

ஸ்ரீராம்/ஜெய ஜெய ஜெயந்தி

ஃபோன் ஒரு ரிங் வந்து விட்டு நின்றது. அதிகாலை கோலம் போட வெளியில் வந்த ஜெயந்தி சட்டென உள்ளே திரும்பி ஃபோனை எடுத்தவள் ‘மிஸ்ட் கால்’ கணவன் ஜெகனிடமிருந்து என்று தெரிந்து, கீழே வைக்கப் போனவள் வாட்ஸாப்பில் ஏதோ வருவது தெரிந்து …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/குறுஞ்செய்தி வெறும் செய்தி ஆனதே !!

கல்லூரி வாழ்க்கை என்று நாம் இருந்த நாட்களில்.என் மகிழ்ச்சி உன் மகிழ்ச்சி என்று நாம் இருந்த காலத்தில்.விடியற்காலை வெள்ளி முளைக்கும் நேரம்.நான் எழும் முன் காத்திருக்கும் உன் குறுஞ்செய்தி !!என்னை மகிழ்வித்து அதனால் நீயும் மகிழ என்று.மறக்காமல் நீ அனுப்பும் இனிய …

>>

நாபா.மீரா/பார்வை

அந்தப் பொண்ணு என்னையே வெறிச்சு வெறிச்சுப் பார்க்குது பாருடா…. ஐயாவோட பர்சனாலிட்டி அப்படி….காலரை உயர்த்திப் பெருமை பேசிய நண்பன் நவீனை முறைத்தான் கவின்.கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக மெரீனா கடற்கரை சாலையில் … மாலை நேரம் கடற்கரையில் சிறிதுநேரம் இவர்கள் நடை பயின்று …

>>

பி. ஆர்.கிரிஜா/ உதவி

சுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. பேருந்து இன்னும் வந்தபாடில்லை. அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்றால் மேலதிகாரியின் அர்ச்சனையைக் காது கொண்டு கேட்க முடியாது. ஆட்டோவில் செல்லலாம் என்றால் வசதியில்லை. லேட்டாகப் போவதைவிட விடுமுறை எடுத்து விடலாமா என்று கூட ஒரு நிமிடம் நினைத்தாள் சுதா.அப்போது …

>>

பி. ஆர்.கிரிஜா/அறியாத முகம்

கந்தசாமி தினமும் நடைபயிற்சி செய்வதை தவற விடமாட்டார். அடாது மழை பெய்தாலும் குடையுடன் கிளம்பி விடுவார். மனைவி எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதே நடையோடு சேர்த்து, நண்பர்களைப் பார்த்து அரை மணி நேரம் பேசுவதற்குத்தான். …

>>

நாகேந்திர பாரதி/ஆடிய ஆட்டம் என்ன ?

முகம் முழுக்க அப்பியிருந்த வண்ணப்பூச்சை தண்ணீர் அடித்து அழுத்தித் தேய்த்தும் இன்னும் முழுதும் போகவில்லை. கண்மாயில் போய் முக்குளித்து எழுந்தால் தான் முழுதும் போகும். அந்தக் கிராமத்தின் தெருக்கூத்துக் கலைஞர்களில் முக்கியமான ராஜபார்ட் நடிகர் அவர். சுந்தரம். ‘ காயாத கானகத்தே …

>>

அனங்கன்/முகம்

அந்தக் கலைக்கல்லூரி கலைஇயக்குநர்…முன்மாதிரியாய் வைத்த முகத்தை….அவரவர் பாணியில் ஓவியமாய் …களிமண் சிற்பமாய்…காகிதக்கூலில்…மற்றும் குப்பையென ஒதுக்கப்பட்ட பொருள்களில்பல்வேறு விதமாய் கலைபயிலும் மாணவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.வித்யா மட்டும் களிமண்ணை பிசைந்துவைத்துவிட்டு…ஒன்றும் செய்யாமல் மாதிரிக்கு வைத்த முகத்தை வெறித்தபடிஇருந்தாள்.கலைபயிற்றுவிக்கும் ஆசிரியர் அனைவரது படைப்புகளும் பார்வையிட்டு…சில திருத்தங்களையும் …

>>

மாலா மாதவன்/தாகம்

‘நீருண்ட மேகங்கள் நிலம் பார்க்காததால் தாகத்தால் தவித்தது மரம். அதன் பட்டைகள் செதிலாய் மின்னியது. ஊன்றிய கிளைகள் தனி வீடாக கிளைக்கும் மரத்துக்கும் சம்பந்தம் இல்லா நிலையில் தனக்குத் தானே மௌன தண்டனை கொடுத்துக் கொண்டது மரம்.’படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் தாக்கிய …

>>

அர்ஜூனன்/மீண்டும்..

“ஏங்க.. உங்கப்பாவை பார்த்தீங்களா?.. எந்நேரமும் எந்த உணர்ச்சியும் காட்டாம வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கார்..” அர்ஜுனின் மனைவி சித்ரா சொன்னாள்.“ஆமா.. சித்ரா.. பணிஓய்வு பெற்ற ஆறு மாதங்களிலேயே மனைவியையும் இழந்து.. அந்த துக்கத்தில இருந்து வெளிவரத் தெரியாம இருக்காரு..”“அதுக்குனு அவரை அப்படியே விட்டுடுவீங்களா..?”அர்ஜுன் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/நக்கீரன் முகம்

வைபவ் படீரென்று விழித்துக் கொண்டான். பதினெட்டு டிகிரியில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. தெப்பலாய் வியர்வையில் நனைந்திருந்தான்.அந்த முகம், அந்தக் கண்கள் இப்போதும் நடுங்க வைத்தது. அந்த மரம் சரிந்து கொண்டே இவனை நோக்கி வந்து கொண்டேயிருந்தது. திடீரென்று மரத்தில் அந்த முகம் …

>>

நாபா.மீரா/விடியாமூஞ்சி

அம்மா… ஈவ்னிங் காலேஜீல ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. வீட்டுக்கு வர நாழியாயிடும்… சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்த லாவண்யா முகம் சுளித்தாள்.போச்சு… இன்னைக்கு இந்த விடியாமூஞ்சிமொகத்துல முழிச்சிட்டுப் போறேனா…விளங்கினாப்பலத்தான்…சுகன்யா சொன்ன மனிதன்…. பார்ப்பதற்கு குரூபியாக இருந்த அவனை அந்த ஏரியாவில் யாருக்குமே பிடிக்காது.மாலை …

>>

சந்தியா ஷங்கர்/”அமானுஷ்யம்”

நள்ளிரவில் சேத்தன் புரண்டு புரண்டு படுத்தான். என்ன கனவு அது? யாரு அது? ஒரு ஆணோட முகம் என்று தெரிந்தது. ஆனால் ஏன் இவ்வளவு விகாரமாய்?நினைத்து கொண்டே தூங்கிவிட்டான். திடீரென அவன் அம்மா பாக்கியம் எழுப்பினாள். “டேய் சேத்தன் எழுந்திரு. மணி …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/நியூரான் தீற்றல்

யுரேகா என்று கூவாத குறையாக தனது அறிவியல் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே வந்தான் துருவ். ” ஒரு புது இயந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறேன். அதன் முதல் பயனாளியாக உங்களுக்கு அதை உபயோகப்படுத்துவதற்கு அனுமதியும் வாங்கி விட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் தந்தையிடம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/அதே முகம்..!

முகத்தில் வயோதிகம் தொனிக்க, கண்களில் உணர்ச்சியற்ற ஒரு பார்வையுடன், ‘சிரிப்பு எத்தனை வராகன்?’ எனும் படியாய் சிரிப்பற்ற ஒரு முகம். பல ஆண்டுகளாய் அவனது கனவில் தோன்றி சுந்தரை இம்சிக்கும் அதே முகம்.திடுக்கிட்டு முழித்தான் சுந்தர்.“என்னங்க.. அதே கனவா?” இப்போது ரோகினிக்கு …

>>

சிவா/உறுத்தல்

ஏதோ வேகத்தில் வரைந்துவிட்டேன்.அவசரம்தான், இப்படி என திட்டமிடவில்லை.இருக்கும் வண்ணங்களை கொண்டு ஒரு முகம்.ஏதோ குறைவதாக எனக்கு மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது.பார்வையிட வந்தவர்களோ பாராட்டித் தீர்த்தனர்.ஆனாலும் என்ன குறையென்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.பார்வையாளர் அற்ற ஒரு நேரம் முழுமையாக ஆராய்ந்தேன்.இன்னும் வண்ணங்கள் சேர்க்கலாமாவென யோசித்தேன்.அந்த …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பேரழகன்

மணி அண்ணாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பற்றிக் கொண்டு வரும்.அவனும் அவன் தீத்தழும்பேறிய அசிங்கமான மூஞ்சியும்! அம்மாவும்,அப்பாவும் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.சின்ன வயசிலேயே அம்மா,அப்பாவை இழந்த மணி அண்ணா _ சுரேஷின் பெரியப்பா பிள்ளை_ இவர்கள் வீட்டிலேயேதான் வளர்கிறான்.இவன் மேல் கொள்ளைப் …

>>

ஸ்ரீராம்/புருஷமரம்

“கால் வலி தாங்க முடியவில்லை” என்று காலில் மருந்து தேய்த்துக் கொண்டே சொன்ன மலரைப் பார்த்து விட்டு மௌனமாக கடந்து சென்றார் சாமிநாதன். மலருக்கு இது வழக்கம்தான். மன வலிகளைச் சொன்னாலும், மன வருத்தங்களை சொன்னாலும், ஏன் சந்தோஷங்களைச் சொன்னாலும் கூட …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/ பிறந்தநாள் பரிசு

“ராம், ஒவ்வொரு வருஷமும் புருஷ லட்சணமா என் பிறந்த நாளை மறந்துட்டு வருத்தப் படறீங்களேன்னு தான் இந்த முறை ஒரு வாரம் முன்னாடியே எனக்கு என்ன பரிசு வேணும்னு சொல்லிட்டேன்”.“தேங்க்ஸ் டியர். இந்த வருஷம் உன்னை எப்படி அசத்துறேன் பாரு. ’என் …

>>

ஸ்ரீராம்/பம்பர பரிமளா

பத்து நாள் லீவு போட்டு படுக்கையில் உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்தார் பத்மநாபன். படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பரிமளாவின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது. காலை எழுந்து தன்னுடைய சிறு வேலைகளை பார்ப்பதே மிகவும் அலுப்பாகத் தெரிந்த அவருக்கு , காலை …

>>

வசந்தா கோவிந்தராஜன்/ஆண் பாவம்

“டேய், குழந்தை அழறது கூடத் தெரியாம அப்படியென்ன கிழிக்கற?” தர்ஷா கூவினாள்.“ஒரு நிமிஷம், துணி உலர்த்தி முடிச்சுட்டேன்! இதோ வந்துட்டேன்!” அபினவ் கையைத் துடைத்துக் கொண்டே பரபரப்பாக வந்து குழந்தையை வாரிக் கொண்டான்.பால் கொடுத்துக் கொண்டே LinkedIn மெயில் செக் பண்ணினான். …

>>

நாகேந்திர பாரதி/புத்தக நோய்

சுந்தரின் இந்தப் பழக்கம் ‘ நல்ல பழக்கம் ‘ என்று அவன் நினைக்கிறான். ஆனால் அவன் நண்பன் சேகர் இது ‘ கெட்ட பழக்கம் ‘ என்று உறுதியாக நம்புகிறான். ஆமாம். இந்த புத்தகம் வாங்குகிற பழக்கம்தாங்க.அடிக்கடி புத்தகக் கடைகளுக்குச் சென்று …

>>

சுகன்யா சம்பத்குமார்/மௌனம்

ராமசாமி தன் வாய் பேசாத மகனான ராஜேஷை கூப்பிட்டுக்கொண்டு அவன் வைத்தியத்திற்காக குறைந்தது 10 மருத்துவர்களை பார்த்திருப்பார் .அவனுக்கு பேச முடியும் ஆனால் பேச மாட்டான் . கல்லூரி படிப்பை முடித்து 2 வருடமாக வீட்டில் தான் உள்ளான் . நன்றாக …

>>

S. அர்ஜுனன்/ பெண்ணொன்று கண்டேன்..

“டேய் ரிஷி.. இந்த படத்தைப் பாருடா..” என்று அம்மா காண்பித்த படத்தில், ஒரு பெண் தன் பத்து கைகளாலும் வெவ்வேறு வேலை செய்துகொண்டு, மடியில் ஒரு குழந்தையை வைத்து பாலூட்டுவதாக இருந்தது.“இது மாதிரி தான்டா உனக்கு பொண்ணு பார்க்கணும்.. வேலைக்கு போனாலும் …

>>

சந்தியா ஷங்கர்/”புத்தகங்களின் மாநாடு”

தத்துவம் பேசும் புத்தக குழுமம்: “என்ன நண்பர்களே! இன்னிக்கு மாநாட்டின் தலைப்பு என்ன? என்னவாருந்தாலும் எங்க குழு தான் வெற்றி பெற போகிறது. ஹ ஹ ஹ ஹ ஹா. இன்னிக்கு ஜனங்களுக்கு சாப்பாடு தண்ணியை விட தத்துவம் தான் வேண்டிருக்கு. …

>>

சுஸ்ரீ/தசாவதானி தாரகேஸ்வரி

“தாரா உனக்கு வயசாச்சே தவிர புத்தி இன்னும் வளரலை”அம்மா கத்தறா சமையலறைல இருந்து.“அது வளற தனியா உரம் போடோணும், பழைய சோத்துலயும் சுண்டைக்கா குழம்புலயும் வளறாது அது.”“மூதேவி எதுத்து எதுத்து பேசறதுக்கு மட்டும் உரம் வேண்டாமா”“அது பரம்பரை சொத்து உன்னோட ஜீன்ஸ்”“எல்லாம் …

>>

மாலா மாதவன்/சுயம்வரம்

தாரிணியால் தன் கையில் திணிக்கப் பட்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.ஐ ஐ டியில் கோல்ட் மெடலிஸ்ட் அவன். திருமண விஷயத்தில் அவனுக்கு வைக்கப் பட்ட இந்த தேர்வு புதுமையாக இருந்தது.“டேய்! பொண்ணு பார்க்க வரச் சொல்லிட்டு இப்படி டெஸ்ட் வைக்கற …

>>

பி.ஆர்.கிரிஜா/சாமர்த்தியம்

மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …

>>

சுகன்யா சம்பத்குமார் /நூலகம்

சோமசுந்தர அய்யா ஒரு வித தயக்கத்துடன் தன் அலைபேசியை எடுத்து திலக்கிற்கு அழைப்பு விடுத்தார் . திலக் தனது அலுவலக பணியாக வெளியே சென்றதால் அவர் அழைப்பை எடுக்க முடியவில்லை ,பின்னர் அவரை அழைத்தான் .அவர் தயங்கிக்கொண்டே “தம்பி எப்படி பா …

>>

சாந்தி சந்திரசேகரன்/பொறுப்பு..!

குழந்தையாக வளர்த்த மகளுக்கும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்பதை ராதாவால் இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.“என்னம்மா செய்யுற..? நான் வேணும்ன்னா அப்பாவுக்கு காய்ச்சல் சரியானதும் உதவிக்கு வரவா?” ராதாவின் குரலில் சற்று வருத்தம்.“எனக்கென்னம்மா.. நல்லாருக்கேன். உங்க காலம் மாதிரி நானே எல்லா …

>>

பி. ஆர்.கிரிஜா/புத்தகப் புழு

புத்தகங்களை வாங்கிக் குவித்து அதை படித்துக் கரைத்துக் குடித்த முகிலன் இப்போது தன் வீட்டின் ஒரு மூலையில் ஜன்னலோரம் பழைய நார் படுக்கையில் கிழிந்த நாராய் கிடக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று அறியப்பட்டவர். வாங்காத பரிசுகள் …

>>

சுஸ்ரீ/ஹ்யூமென் அனாடமி

நீட் எழுதி ரேங்ல வந்து மெடிகல் காலேஜ்ல சேரறது இருக்கே அது பெரிய பிரம்ம பிரயத்னம்.எனக்கு அதிர்ஷ்டம்னே வச்சிக்கங்களேன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிலயே இடம் கிடைச்சது.மிடில் கிளாஸ் பொண்ணுக்கு மெடிகல் சீட் கனவுதானே அதுவும் ஜெனரல் கேடகிரில.ஆத்தர் செளராசின்றவர் எழுதின …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/நோ பிராப்ளம்

காலை பரபரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா.அவள் கணவன் ராம் தூங்கிக் கொண்டிருந்தான் இவள் சமைத்து, இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்குக் காலை உணவு கொடுத்து, லஞ்ச் பாக்ஸுடன் கிளப்பி அனுப்பி விட்டு கணவனுக்கும் , தனக்கும் லஞ்ச் கட்டிக் தானும் ரெடியாகிப் …

>>

அழகியசிங்கர்/விற்று விட்டான்

அவன் அந்த அறையில் தனியாக உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிலும் புத்தகங்கள்.அவனால் அழுகையை அடக்க முடியவில்லை.இன்னும் சில தினங்களில் இங்குள்ள புத்தகங்கெல்லாம் அவனுக்குச் சொந்தமில்லை.இன்னொருவருக்குச் சொந்தம் ஆகப் போறது.ஆமாம். அவன் விற்றுவிட்டான். மனைவியின் தொல்லை தாங்காமல். இந்த வயதில் இனிமேல் முடியாது என்ற …

>>

S. அர்ஜுனன்/காலச் சக்கரம்

“அம்மு.. அண்ணா லைப்ரரி போயிட்டு வர்றேன்” மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார் கோவிந்தன்.“ஏதோ கவிதை புத்தகம் வெளியீட்டு விழானு போன வாரம் உங்களுக்கு வாட்ஸப்பில அழைப்பு வந்ததே.. அதுக்கா..?” கேட்டாள் அம்புஜம்.“ஆமா..”“ஏன்தான் இப்படி புஸ்தகமா வாங்கி குமிக்கிறீங்களோ?.. விழாவுக்கு கூப்பிடுறவங்க ஓசிக்கா புஸ்தகம் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தப்பித்த சாம்ராஜ்யம்

வானம் பொத்தலாகிப் போனதோ? அந்தச் செய்தி கேட்டதிலிருந்து என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நான் தமிழ்நாடு அரசு அலுவலகத்தின் நூலகர்.எங்கள் கட்டிடம் மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது. விஸ்தாரமான சாளரங்களுடன் காற்றோட்டமாக இருக்கும். மழை காலத்தில் ஒழுகும். ஒழுகாத இடத்தில் புத்தகங்களை மேலே …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்./சின்ராசுவின் புத்தகச் சந்திப்பு

“சில்லரை திருட்டு சின்ராசு சின்ராசு சின்ராசு”குற்றவாளி கூண்டில் ஏறி நின்ற சின்ராசுவை பார்த்த நீதிபதி சுந்தரத்திற்கு சலிப்பு மேலோங்கி விட்டது.” இப்பதானே ரெண்டு வாரம் முன்னாடி அபராதம் போட்டு அனுப்பிச்சேன். இது எத்தனாவது முறை ? என்ன செய்துட்டு வந்திருக்கே? ““ஒரு …

>>

சிவா/கண் காட்சி

எனக்கு அந்த மாளிகையில் உறுத்திக்கொண்டே இருந்தது அந்த அறை.அப்பாவின் நெருங்கிய நண்பரின் வீடு அது.நான் சிறுவயதில் வந்த நினைவு.இப்போது அப்பாவும் இல்லை. அவர் நண்பரும் இல்லை.எனினும் தவிர்க்கமுடியா பந்தம் என்பதால் என் மகள் திருமண பத்திரிக்கை வைக்க வந்திருந்தோம்.அப்பாவின் நண்பரின் மகனுக்கும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுத்தக் காரி

அம்மா சுஜாதா பயங்கர சுத்தக்காரி.வீட்டை வெகு நேர்த்தியாக வைத்திருப்பாள்.எல்லா விஷயங்களிலும் அப்பாவுடன் ஒத்துப் போகும் அவள், அவருடன் சண்டையிடுவது இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமே.அவளுக்கு தேவையில்லாத பொருட்களை வீட்டில் சேர்க்கப் பிடிக்காது.அப்பாவுக்கோ பழைய பொருட்கள் எதையுமே தூக்கிப் போட மனம் வராது.நாட்கள் …

>>

நாபா.மீரா/யுக சாட்சி

காந்தி நூல் நிலையம்.புராதனப் பாணியில் கட்டமைப்பு கொண்ட அந்த நூலகத்தின் உள்ளிருந்து வெளியே பார்க்கும்படி இருந்த கண்ணாடி அமைப்பு இயற்கையோடு இயைந்து பரிமளித்தது.ஊம்… என்ன இருந்து என்ன … இந்த டிஜிட்டல் யுகத்துல நம்மள சீந்த நாதியில்லாம போச்சே…. தமிழ் வரிசையில் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/காலப் புத்தகம்

“விபுலா, கிளம்ப எல்லாம் தயாரா?”” ஆமாம் ஜே. 500 வருடங்கள் பின்னோக்கி போக அமைத்து இருக்கிறேன்.”” போய் சேர ஒரு சில மணிகளாவது ஆகுமே. பொழுது போக என்ன செய்வாய்?”” படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த 200 புத்தகங்களை இந்த …

>>

சாந்திசந்திரசேகரன்/அரண்மனை..!

சுற்றுலா வந்திருந்த புகாரி காட்டிற்குள், தான் பறந்து வந்த வான்குடை மிதவை திசைமாற்றி இறக்கி விட்ட போது சற்றுத் தடுமாறித் தான் போனான் ரவி.தன் தொலைந்ததாக தவித்திருந்தவன் , உதவி தேடி காட்டிற்குள் அலைந்த போது, அத்துவானக்காட்டிற்குள் ஔிந்திருந்த அரண்மனைப் போல, …

>>

எஸ். சரத்குமார்/நினைவு

அப்பாவிற்கு எதுமே நினைவில் இல்லை.‘கண்ணாடிய இங்க தான வச்சேன்…’ என பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார்.சாப்பிட்டு முடித்த பின்னரும்,’நான் சாப்பிடவே இல்ல…’ என சத்தியம் செய்வார்.அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை.ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை!‘அப்பா…நீ எங்க போய்யிட்ட?’அப்பாவுக்கு ஏற்பட்ட நோயை நான் …

>>

அனங்கன்/மனிதர்கள் இருக்கிறார்கள்

பரணிதரனுக்கு மிகவும் கவலையாய் இருந்தது. இதுவரை தான் சேகரித்துவைத்த நூல்களைப் பார்த்தபடியிருந்தார்.ஒவ்வொரு நூலும் ஒருகதை சொல்லும் …அறிவைத்தாங்கிநிற்கும் அனைத்தும் அநாதையாய்ப்போனதுபோல்ஓர்உணர்வு.வாசிக்கும் பழக்கம் அறவே குறைந்துபோன நிலையில்….இதனையெல்லாம் இனியார் வாசிக்கப்போகிறார்கள்.உறவுகள் கண்காணத்தொலைவில்.தன்னைப் பார்க்கவே ஆள் இல்லாத நிலையில் யார் இதனைப் பாதுகாத்து பராமரிக்கமுடியும்.இந்தப்புத்தகங்களால் …

>>

ஸ்ரீராம்/தாத்தாவின் பொக்கிஷம்

கடைசி மூச்சை விட காத்திருந்தார் ராமு தாத்தா.அவர் படுக்கை அருகில் குழுமி நின்றார்கள் அவரது இரண்டு மகன்களும் பேரன்களும்.அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது.கண்களில் ஏக்கம் இருந்தது.தான் சேர்த்த புத்தகங்களை யாரும் படிக்கவில்லை என்கிற குறை தாத்தாவுக்கு.மகன்களுக்கோ பேரன்களுக்கோ புத்தகம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நூலகம் என் உலகம்

இன்று காலை என் இனிய நண்பர் ராஜப்பா என்னைத் தொலைபேசியில் அழைத்து” ரவி,இன்னிக்கு சாயங்காலம் நீ என்னோட ஒரு இடத்துக்கு வரப் போகிறாய். நான் உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்”என்ற அன்பு கட்டளையை மீற முடியவில்லை. ஆழ்வார்பேட்டையில், ஒரு ஆறுமாடிக் கட்டிடம்.அது …

>>

சுகன்யா சம்பத்குமார் /டாமி

எட்டாம் வகுப்பு படிக்கும் அவினாஷ் தினமும் தன் வீட்டு பாடத்தை முடித்துவிட்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு விளையாட செல்வான் . அப்படி அங்கு சென்ற போது , ஒரு நாள் அங்கு டாமி தன் குட்டிகளை வயிற்றில் சுமந்து கொண்டு அடிப்பட்ட …

>>

நாகேந்திர பாரதி/நாய் அம்மா

ஒரு மணி நேரத்தில் எத்தனை மாற்றம் தங்கள் வாழ்வில் என்று நெகிழ்ந்து போய் இருந்தன அந்த நான்கு குட்டி நாய்களும் . கால் மடக்கி அமர்ந்திருக்கும் அவள் மடியில் , அவள் ஜீன்ஸில் அமர்ந்து ஒன்றை ஒன்று கொஞ்சும் காட்சியை ரசித்து …

>>

சுகன்யா சம்பத்குமார் /பருத்திமூட்டை

ராதா வேலை முடித்த அசதியில் ஆட்டோ ஏறி உட்கார்ந்தாள் , அவள் தன் அலுவலக தெருவின் முனை திரும்புவதற்குள் ,அவளுக்கு ஒரு ஆடிட்டரிடம் இருந்து அழைப்பு “மேடம் ,வீட்டிற்கு சென்றதும் எங்களுக்கு அந்த பைலை அனுப்பிவிடுங்கள், நாங்கள் இன்றோடு உங்கள் கம்பெனி …

>>

மீரா பார்த்தசாரதி/அஷ்டாவதானி

எழில் குழந்தைக்கு பால் புகட்டியவாறே… கணினியில் தேவையான விவரங்களைச்சேகரித்தாள்.மாமா… இந்தாங்க இந்த மாதச் செலவுக்கான பணம்..வரவுல வச்சிட்டு… பிளான் பண்ணுங்க…அத்தை சமையலறை உங்க டிபார்ட்மெண்ட் இல்லையா… மளிகை, காய்கறிகள்… குழந்தைகளுக்குத் தேவையான சத்துணவு மற்றும் சாயங்கால ஸ்நாக்ஸ் எல்லாம் மாமாவோட கலந்தாலோசித்து …

>>

அழகியசிங்கர்/அவள் மட்டும்தான்

சித்ரா ஒரு நிமிடம் கண்ணயர்ந்தாள். மடமடவென்று அவள் கைகளில் எல்லாம் திணிக்கப்பட்டன.ஒரு பக்கம் வாளி. துடைப்பதற்கு பிரஷ். இன்னொரு கையில் படித்து முடிக்க முடியாத புத்தகம்.லாப்டாப்பில் கை அசைய, மடியில் இருந்த குழந்தை நழுவி விழ …விழ…திடீரென்று கண் விழித்தாள். இப்போது …

>>

நாகேந்திர பாரதி/கை ஓட்டம்

‘ஐயா ஓவியத் திலகமே , இதிலே முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்களே ‘ என்று கொஞ்சியபடி கேட்ட சுந்தரியை இழுத்து அணைத்தபடி , ‘என்னடி கண்ணு , சொல்லேன் ‘ என்றவனை. விலக்கி விட்டுச் சொன்னாள் . ‘பிஸ்டல் ‘ . அதிர்ந்த …

>>

பி.ஆர்.கிரிஜா/சாமர்த்தியம்

மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …

>>

சசிகலா விஸ்வநாதன்/துரியா

இன்று வேலைக்கு வேதா வரமாட்டாள் என்பது நினைவில் நின்றது.காலை காஃபிக்குப்பின்,படியளக்கும் அலுவலக வேலைகளில் ஈடுபட்டு,ஒரு அளவிற்கு செய்து முடித்தாள்.உறங்கும் குழந்தை ஸரஸாவை எழுப்ப மனதில்லாமல் எழுப்பி உடை மாற்றி உணவளித்தாள்.காலை உணவாக இட்லி – சாம்பாரும் செய்து, மதிய உணவிற்கு துவையலும் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் என்றும் அட்டாவதானி

கமலா காலை எழுந்தவுடன் அன்றைய வேலைகள் கண் முன் கதக் நாட்டியம் ஆட தொடங்கிவிட்டது.அவள் சில காலம் கதக் பயின்று இருந்தாள்.நின்ற இடத்திலேயே சுற்றுகள் போட்டவண்ணம் முத்திரைகள்.அன்று ஆரம்பித்த சுற்றல் இன்னும் தீவிரம் அடைந்து தலையை சுற்ற வைக்கிறது. கமலா முதல் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ சிதிலம்

மூக்கு மட்டும் பெரிசா இருக்கே… மூச்சு இருக்கும் தானே! ஏன் எனக்கு மூச்சு விட முடியாமல் இருக்கே! அவள் எடுத்துக் கொண்டு போய்ட்டாள்; போல இருக்கே. நாளைக்காவது வந்து விட்டால்; எனக்கு மூச்சு வரும் ;’ என்று சொன்னவர். நாற்காலியில் உட்கார்ந்து, …

>>

லக்ஷ்மிரமணன்/வயது

தாங்கள் வசித்த அதே பன்மாடிக்கட்டிடத்தில்மூன்றாவது மாடியில் குடிவந்திருந்த ரமா ,ரகுதம்பதியின் மகன் சுரேஷ் பொறியியல் படித்தபின் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான்என்று கேள்விப்பட்டதும் முதல்மாடியில் இருந்தவீணா, விவேக் தம்பதியினருக்குதங்கள் மகள் நந்தினிக்கு அவன் ஜாதகத்தைகேட்டுவாங்கி பொருந்தினால் விவாகமுயற்சியில் இறங்கலாம் என்று தோன்றவே கிளம்பிசென்றார்கள்.“என் …

>>

நாகேந்திர பாரதி/அதே கண்கள்

அவளின் செதுக்கிய மூக்கும் , செப்பு இதழ்களும் அவனைக் கவரவில்லை. , அந்தச் சிந்தனைக் கண்கள். அன்பும், அழகும் , அறிவும் ததும்பும் அந்தக் கண்களைப் பார்த்தபின் வேறு சிந்தனை இல்லாமல் மயங்கிக் கிடந்தான் மாலன். சுந்தர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். …

>>

லக்ஷ்மி ரமணன்/புரிதல்

முகத்தில் சோகம்படர நாற்காலியில் உட்கார்ந்திருந்தஅம்மாவை “என்னாச்சு?”உமா கவலையுடன் கேட்டாள்.“உனக்கு விஷயம் தெரியாதா?”“என்ன விஷயம்”?“உன் அண்ணன் ரகுவின் பெண்டாட்டி மீராவுக்கு உடம்பு சரயில்லையாம்”“என்னவாம்?அண்ணா என்ன சொன்னான்?”“சொல்லாததுதான் பிரச்சினை”“அப்போவிஷயம் உனக்கு எப்படித்தெரிஞ்சுது?”“அவங்க பக்கத்து வீட்டிலே இருக்கிற மீனா மாமியை நான்கறிகாய் வாங்கப்போனபோது கடையில் பார்த்தேன்.அவங்கசொன்னாங்க. …

>>

லக்ஷ்மி ரமணன்/எலியும் வலியும்

வீட்டு முன் வராண்டாவில் உட்கார்ந்து யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த தீபக் திடீரென்று “அம்மா சீக்கிரம் வா”என்று அலறினான்.பயந்துபோன லலிதா சமைப்பதை நிறுத்திகேஸ் அடுப்பை அணைத்துவிட்டு “என்னஆச்சு தீபக்?” என்று பதட்டத்துடன் கேட்டவாறுவராண்டாவுக்கு விரைந்து வந்தாள்?“அதோபாரு எலி”“இதுக்கா என்னவோ புலியைப்பார்த்தவன்மாதிரி கத்தினே?”என் தட்டில் …

>>

ஜி பி சதுர்புஜன்/“தீர்வு”

விளக்கை அணைத்துவிட்டு வனஜாவைத் தாண்டி மெத்தையில் அந்த பக்கம் போய்ப் படுத்துக் கொண்டேன். மணி பத்து ஆனால், எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் டாண் என்று படுக்கைக்குச் சென்றாய் விடும். எங்களுடைய ரிடையர்மென்ட்டுக்கு முன்னாலேயே என்றோ தொடங்கிவிட்ட தூக்க அட்டவணை….. …

>>

அனங்கன்/வேளச்சேரி பஸ் டெர்மினஸ்

வேளச்சேரி பஸ் டெர்மினஸ் தாண்டி வந்து கொண்டிருந்தேன். நடுவில் வந்த ஒரு தெருமுனையில் ஒரு பெண்மணி ஸ்கூட்டரில் எதிர்ப்பட்டார். என்னருகில் நிறுத்தி “சார்! பனகல் பார்க் எங்க இருக்கு?” “இது வேளச்சேரி. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் டி நகர்லதான் பனகல் பார்க் …

>>

லக்ஷ்மி ரமணன் / நண்பன்

“ராஜேஷ் ஏன் டல்லாக இருக்கே? எதுவும்பேசாமல் முகத்தில் சோகம் திரையிட இப்படிஉன்னை பார்க்கவே கஷ்டமாக இருக்கு”“என் தலைஎழுத்து. அதைப்பற்றி சொல்லிஎஉன்னையும் தொல்லைப்படுத்த விரும்பல்லே”” புரியும்படி சொல்லு”“இன்னும் ரெண்டுநாளில்பணம் கட்டாடிபரீட்சை எழுத முடியாதாம்.ஆசிரியர் சொன்னார்”“சரி கட்டிடு இதில் என்னப்ராப்ளம்”?“அதை ஏன் கேட்கிறே,அதுக்காக நான் …

>>

லக்ஷ்மி ரமணன்/இப்படியும்..

சுந்தர் தன் நண்பன் சுரேஷை உற்றுப்பார்த்துதிகைப்புக்குள்ளானான்.“என்ன அப்படிப்பார்க்கிறே?”“இல்லே உன் முகத்திலே எதேவோ மிஸ் ஆகுதே”ஓ அதுவா என்னனு கெஸ்பண்ணு”“கெஸ்ஸு கேஸு ஒண்ணு தாடி வெச்சுக்கஉனக்கு ரொம்பப்பிடிக்குது ஏன்னா அதுதான்லேட்டஸ்ட் பேஷன்னு சொல்லுவே. சினிமாமற்றும் சின்னத்திரை நடிகர்கள்கூட தாடியுடன் தான் நடிக்கிறாங்கன்னு சொல்லுவே …

>>

ஜெ.பாஸ்கரன்/கோணலாய் ஒரு கோலம்!

ஒற்றையிழையில் வாசலில் போடப்பட்டுள்ள கோலம் என் கவனத்தைக் கலைத்தது!குழந்தை கிறுக்கினாற் போன்ற கோலம். ஆனாலும் அதில் ஓர் ஒழுங்கு இருந்தது. இது என்ன கோலம்?கீழே ஒரு சக்கரம், தேர்க் கோலமோ? நடுவில் ஒரு சூரியன்; அருகில் சந்திரனைக் காணோமே – பொங்கல் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /புள்ளிக்கோலம்

அகிலாவுக்கு நல்ல மூடு என்றால் அழகு அழகான புள்ளிக் கோலங்கள், அதன் மேல் வித விதமான அலங்காரம், வண்ணப் பொடிகள் ,வண்ண வண்ண மலர்கள் வைத்து ஒரு கலக்கு கலக்கிடுவாள். எதிர்வீட்டு பால்கனியில் நின்று கொண்டு அகிலாவின் கை வண்ணத்தை வியந்து …

>>

லக்ஷ்மிரமணன்/இதுவும். அதுவும்….

தன் தாயின் நெருங்கிய சிநேகிதி பிரபல சின்னத்திரை நடிகை காமேஸ்வரியை பார்க்க வந்த நித்யா “என்ன ஆன்டி உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைனுபேப்பரில் படிச்சேன். பல தடவை போன் பண்ணிப்பார்த்தேன். நம்பர் ஈஸ் நாட் ரீச்சபிள்னு வந்தது.. என்ன ஆச்சு ஆன்டி?”“வாம்மா …

>>

லக்ஷ்மி ரமணன்/ அனுக்கிரகம்

“ஏன் டல்லா இருக்கே? நான் சொன்னபடிவிநாயகரை தரிசித்து வேண்டிக்கிட்டியே .உனக்கு நல்லதே நடக்கும். இனி கவலையைவிடு.”“எனக்கு நான் பரீட்சை சரியாக எழுதலையோஅப்படின்னு கவலையா இருக்கு”தன்நண்பன் சத்யாவின் புலம்பலை திரும்பத்திரும்பக்கேட்டு அலுத்துப்போனவனாய்அருண்” த்ச். நீ ரொம்ப குழம்பிப்போயிருக்கேபேசாமல் இருடா” என்று கோபத்துடன் சொன்னான்.சத்யாவின் …

>>