ஸ்ரீராம்/ஜெய ஜெய ஜெயந்தி
ஃபோன் ஒரு ரிங் வந்து விட்டு நின்றது. அதிகாலை கோலம் போட வெளியில் வந்த ஜெயந்தி சட்டென உள்ளே திரும்பி ஃபோனை எடுத்தவள் ‘மிஸ்ட் கால்’ கணவன் ஜெகனிடமிருந்து என்று தெரிந்து, கீழே வைக்கப் போனவள் வாட்ஸாப்பில் ஏதோ வருவது தெரிந்து …
>>ஃபோன் ஒரு ரிங் வந்து விட்டு நின்றது. அதிகாலை கோலம் போட வெளியில் வந்த ஜெயந்தி சட்டென உள்ளே திரும்பி ஃபோனை எடுத்தவள் ‘மிஸ்ட் கால்’ கணவன் ஜெகனிடமிருந்து என்று தெரிந்து, கீழே வைக்கப் போனவள் வாட்ஸாப்பில் ஏதோ வருவது தெரிந்து …
>>கல்லூரி வாழ்க்கை என்று நாம் இருந்த நாட்களில்.என் மகிழ்ச்சி உன் மகிழ்ச்சி என்று நாம் இருந்த காலத்தில்.விடியற்காலை வெள்ளி முளைக்கும் நேரம்.நான் எழும் முன் காத்திருக்கும் உன் குறுஞ்செய்தி !!என்னை மகிழ்வித்து அதனால் நீயும் மகிழ என்று.மறக்காமல் நீ அனுப்பும் இனிய …
>>அந்தப் பொண்ணு என்னையே வெறிச்சு வெறிச்சுப் பார்க்குது பாருடா…. ஐயாவோட பர்சனாலிட்டி அப்படி….காலரை உயர்த்திப் பெருமை பேசிய நண்பன் நவீனை முறைத்தான் கவின்.கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக மெரீனா கடற்கரை சாலையில் … மாலை நேரம் கடற்கரையில் சிறிதுநேரம் இவர்கள் நடை பயின்று …
>>சுதாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. பேருந்து இன்னும் வந்தபாடில்லை. அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்றால் மேலதிகாரியின் அர்ச்சனையைக் காது கொண்டு கேட்க முடியாது. ஆட்டோவில் செல்லலாம் என்றால் வசதியில்லை. லேட்டாகப் போவதைவிட விடுமுறை எடுத்து விடலாமா என்று கூட ஒரு நிமிடம் நினைத்தாள் சுதா.அப்போது …
>>கந்தசாமி தினமும் நடைபயிற்சி செய்வதை தவற விடமாட்டார். அடாது மழை பெய்தாலும் குடையுடன் கிளம்பி விடுவார். மனைவி எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதே நடையோடு சேர்த்து, நண்பர்களைப் பார்த்து அரை மணி நேரம் பேசுவதற்குத்தான். …
>>நாகேந்திர பாரதி/ஆடிய ஆட்டம் என்ன ? – விருட்சம் நாளிதழ்
>>முகம் முழுக்க அப்பியிருந்த வண்ணப்பூச்சை தண்ணீர் அடித்து அழுத்தித் தேய்த்தும் இன்னும் முழுதும் போகவில்லை. கண்மாயில் போய் முக்குளித்து எழுந்தால் தான் முழுதும் போகும். அந்தக் கிராமத்தின் தெருக்கூத்துக் கலைஞர்களில் முக்கியமான ராஜபார்ட் நடிகர் அவர். சுந்தரம். ‘ காயாத கானகத்தே …
>>அந்தக் கலைக்கல்லூரி கலைஇயக்குநர்…முன்மாதிரியாய் வைத்த முகத்தை….அவரவர் பாணியில் ஓவியமாய் …களிமண் சிற்பமாய்…காகிதக்கூலில்…மற்றும் குப்பையென ஒதுக்கப்பட்ட பொருள்களில்பல்வேறு விதமாய் கலைபயிலும் மாணவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.வித்யா மட்டும் களிமண்ணை பிசைந்துவைத்துவிட்டு…ஒன்றும் செய்யாமல் மாதிரிக்கு வைத்த முகத்தை வெறித்தபடிஇருந்தாள்.கலைபயிற்றுவிக்கும் ஆசிரியர் அனைவரது படைப்புகளும் பார்வையிட்டு…சில திருத்தங்களையும் …
>>‘நீருண்ட மேகங்கள் நிலம் பார்க்காததால் தாகத்தால் தவித்தது மரம். அதன் பட்டைகள் செதிலாய் மின்னியது. ஊன்றிய கிளைகள் தனி வீடாக கிளைக்கும் மரத்துக்கும் சம்பந்தம் இல்லா நிலையில் தனக்குத் தானே மௌன தண்டனை கொடுத்துக் கொண்டது மரம்.’படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் தாக்கிய …
>>“ஏங்க.. உங்கப்பாவை பார்த்தீங்களா?.. எந்நேரமும் எந்த உணர்ச்சியும் காட்டாம வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கார்..” அர்ஜுனின் மனைவி சித்ரா சொன்னாள்.“ஆமா.. சித்ரா.. பணிஓய்வு பெற்ற ஆறு மாதங்களிலேயே மனைவியையும் இழந்து.. அந்த துக்கத்தில இருந்து வெளிவரத் தெரியாம இருக்காரு..”“அதுக்குனு அவரை அப்படியே விட்டுடுவீங்களா..?”அர்ஜுன் …
>>வைபவ் படீரென்று விழித்துக் கொண்டான். பதினெட்டு டிகிரியில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. தெப்பலாய் வியர்வையில் நனைந்திருந்தான்.அந்த முகம், அந்தக் கண்கள் இப்போதும் நடுங்க வைத்தது. அந்த மரம் சரிந்து கொண்டே இவனை நோக்கி வந்து கொண்டேயிருந்தது. திடீரென்று மரத்தில் அந்த முகம் …
>>அம்மா… ஈவ்னிங் காலேஜீல ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. வீட்டுக்கு வர நாழியாயிடும்… சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்த லாவண்யா முகம் சுளித்தாள்.போச்சு… இன்னைக்கு இந்த விடியாமூஞ்சிமொகத்துல முழிச்சிட்டுப் போறேனா…விளங்கினாப்பலத்தான்…சுகன்யா சொன்ன மனிதன்…. பார்ப்பதற்கு குரூபியாக இருந்த அவனை அந்த ஏரியாவில் யாருக்குமே பிடிக்காது.மாலை …
>>நள்ளிரவில் சேத்தன் புரண்டு புரண்டு படுத்தான். என்ன கனவு அது? யாரு அது? ஒரு ஆணோட முகம் என்று தெரிந்தது. ஆனால் ஏன் இவ்வளவு விகாரமாய்?நினைத்து கொண்டே தூங்கிவிட்டான். திடீரென அவன் அம்மா பாக்கியம் எழுப்பினாள். “டேய் சேத்தன் எழுந்திரு. மணி …
>>யுரேகா என்று கூவாத குறையாக தனது அறிவியல் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே வந்தான் துருவ். ” ஒரு புது இயந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறேன். அதன் முதல் பயனாளியாக உங்களுக்கு அதை உபயோகப்படுத்துவதற்கு அனுமதியும் வாங்கி விட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் தந்தையிடம் …
>>முகத்தில் வயோதிகம் தொனிக்க, கண்களில் உணர்ச்சியற்ற ஒரு பார்வையுடன், ‘சிரிப்பு எத்தனை வராகன்?’ எனும் படியாய் சிரிப்பற்ற ஒரு முகம். பல ஆண்டுகளாய் அவனது கனவில் தோன்றி சுந்தரை இம்சிக்கும் அதே முகம்.திடுக்கிட்டு முழித்தான் சுந்தர்.“என்னங்க.. அதே கனவா?” இப்போது ரோகினிக்கு …
>>ஏதோ வேகத்தில் வரைந்துவிட்டேன்.அவசரம்தான், இப்படி என திட்டமிடவில்லை.இருக்கும் வண்ணங்களை கொண்டு ஒரு முகம்.ஏதோ குறைவதாக எனக்கு மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது.பார்வையிட வந்தவர்களோ பாராட்டித் தீர்த்தனர்.ஆனாலும் என்ன குறையென்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.பார்வையாளர் அற்ற ஒரு நேரம் முழுமையாக ஆராய்ந்தேன்.இன்னும் வண்ணங்கள் சேர்க்கலாமாவென யோசித்தேன்.அந்த …
>>மணி அண்ணாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பற்றிக் கொண்டு வரும்.அவனும் அவன் தீத்தழும்பேறிய அசிங்கமான மூஞ்சியும்! அம்மாவும்,அப்பாவும் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.சின்ன வயசிலேயே அம்மா,அப்பாவை இழந்த மணி அண்ணா _ சுரேஷின் பெரியப்பா பிள்ளை_ இவர்கள் வீட்டிலேயேதான் வளர்கிறான்.இவன் மேல் கொள்ளைப் …
>>“கால் வலி தாங்க முடியவில்லை” என்று காலில் மருந்து தேய்த்துக் கொண்டே சொன்ன மலரைப் பார்த்து விட்டு மௌனமாக கடந்து சென்றார் சாமிநாதன். மலருக்கு இது வழக்கம்தான். மன வலிகளைச் சொன்னாலும், மன வருத்தங்களை சொன்னாலும், ஏன் சந்தோஷங்களைச் சொன்னாலும் கூட …
>>“ராம், ஒவ்வொரு வருஷமும் புருஷ லட்சணமா என் பிறந்த நாளை மறந்துட்டு வருத்தப் படறீங்களேன்னு தான் இந்த முறை ஒரு வாரம் முன்னாடியே எனக்கு என்ன பரிசு வேணும்னு சொல்லிட்டேன்”.“தேங்க்ஸ் டியர். இந்த வருஷம் உன்னை எப்படி அசத்துறேன் பாரு. ’என் …
>>பத்து நாள் லீவு போட்டு படுக்கையில் உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்தார் பத்மநாபன். படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பரிமளாவின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது. காலை எழுந்து தன்னுடைய சிறு வேலைகளை பார்ப்பதே மிகவும் அலுப்பாகத் தெரிந்த அவருக்கு , காலை …
>>“டேய், குழந்தை அழறது கூடத் தெரியாம அப்படியென்ன கிழிக்கற?” தர்ஷா கூவினாள்.“ஒரு நிமிஷம், துணி உலர்த்தி முடிச்சுட்டேன்! இதோ வந்துட்டேன்!” அபினவ் கையைத் துடைத்துக் கொண்டே பரபரப்பாக வந்து குழந்தையை வாரிக் கொண்டான்.பால் கொடுத்துக் கொண்டே LinkedIn மெயில் செக் பண்ணினான். …
>>சுந்தரின் இந்தப் பழக்கம் ‘ நல்ல பழக்கம் ‘ என்று அவன் நினைக்கிறான். ஆனால் அவன் நண்பன் சேகர் இது ‘ கெட்ட பழக்கம் ‘ என்று உறுதியாக நம்புகிறான். ஆமாம். இந்த புத்தகம் வாங்குகிற பழக்கம்தாங்க.அடிக்கடி புத்தகக் கடைகளுக்குச் சென்று …
>>ராமசாமி தன் வாய் பேசாத மகனான ராஜேஷை கூப்பிட்டுக்கொண்டு அவன் வைத்தியத்திற்காக குறைந்தது 10 மருத்துவர்களை பார்த்திருப்பார் .அவனுக்கு பேச முடியும் ஆனால் பேச மாட்டான் . கல்லூரி படிப்பை முடித்து 2 வருடமாக வீட்டில் தான் உள்ளான் . நன்றாக …
>>“டேய் ரிஷி.. இந்த படத்தைப் பாருடா..” என்று அம்மா காண்பித்த படத்தில், ஒரு பெண் தன் பத்து கைகளாலும் வெவ்வேறு வேலை செய்துகொண்டு, மடியில் ஒரு குழந்தையை வைத்து பாலூட்டுவதாக இருந்தது.“இது மாதிரி தான்டா உனக்கு பொண்ணு பார்க்கணும்.. வேலைக்கு போனாலும் …
>>தத்துவம் பேசும் புத்தக குழுமம்: “என்ன நண்பர்களே! இன்னிக்கு மாநாட்டின் தலைப்பு என்ன? என்னவாருந்தாலும் எங்க குழு தான் வெற்றி பெற போகிறது. ஹ ஹ ஹ ஹ ஹா. இன்னிக்கு ஜனங்களுக்கு சாப்பாடு தண்ணியை விட தத்துவம் தான் வேண்டிருக்கு. …
>>“தாரா உனக்கு வயசாச்சே தவிர புத்தி இன்னும் வளரலை”அம்மா கத்தறா சமையலறைல இருந்து.“அது வளற தனியா உரம் போடோணும், பழைய சோத்துலயும் சுண்டைக்கா குழம்புலயும் வளறாது அது.”“மூதேவி எதுத்து எதுத்து பேசறதுக்கு மட்டும் உரம் வேண்டாமா”“அது பரம்பரை சொத்து உன்னோட ஜீன்ஸ்”“எல்லாம் …
>>தாரிணியால் தன் கையில் திணிக்கப் பட்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.ஐ ஐ டியில் கோல்ட் மெடலிஸ்ட் அவன். திருமண விஷயத்தில் அவனுக்கு வைக்கப் பட்ட இந்த தேர்வு புதுமையாக இருந்தது.“டேய்! பொண்ணு பார்க்க வரச் சொல்லிட்டு இப்படி டெஸ்ட் வைக்கற …
>>மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …
>>சோமசுந்தர அய்யா ஒரு வித தயக்கத்துடன் தன் அலைபேசியை எடுத்து திலக்கிற்கு அழைப்பு விடுத்தார் . திலக் தனது அலுவலக பணியாக வெளியே சென்றதால் அவர் அழைப்பை எடுக்க முடியவில்லை ,பின்னர் அவரை அழைத்தான் .அவர் தயங்கிக்கொண்டே “தம்பி எப்படி பா …
>>குழந்தையாக வளர்த்த மகளுக்கும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்பதை ராதாவால் இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.“என்னம்மா செய்யுற..? நான் வேணும்ன்னா அப்பாவுக்கு காய்ச்சல் சரியானதும் உதவிக்கு வரவா?” ராதாவின் குரலில் சற்று வருத்தம்.“எனக்கென்னம்மா.. நல்லாருக்கேன். உங்க காலம் மாதிரி நானே எல்லா …
>>புத்தகங்களை வாங்கிக் குவித்து அதை படித்துக் கரைத்துக் குடித்த முகிலன் இப்போது தன் வீட்டின் ஒரு மூலையில் ஜன்னலோரம் பழைய நார் படுக்கையில் கிழிந்த நாராய் கிடக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று அறியப்பட்டவர். வாங்காத பரிசுகள் …
>>நீட் எழுதி ரேங்ல வந்து மெடிகல் காலேஜ்ல சேரறது இருக்கே அது பெரிய பிரம்ம பிரயத்னம்.எனக்கு அதிர்ஷ்டம்னே வச்சிக்கங்களேன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிலயே இடம் கிடைச்சது.மிடில் கிளாஸ் பொண்ணுக்கு மெடிகல் சீட் கனவுதானே அதுவும் ஜெனரல் கேடகிரில.ஆத்தர் செளராசின்றவர் எழுதின …
>>காலை பரபரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா.அவள் கணவன் ராம் தூங்கிக் கொண்டிருந்தான் இவள் சமைத்து, இரண்டு குழந்தைகளைப் பள்ளிக்குக் காலை உணவு கொடுத்து, லஞ்ச் பாக்ஸுடன் கிளப்பி அனுப்பி விட்டு கணவனுக்கும் , தனக்கும் லஞ்ச் கட்டிக் தானும் ரெடியாகிப் …
>>அவன் அந்த அறையில் தனியாக உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிலும் புத்தகங்கள்.அவனால் அழுகையை அடக்க முடியவில்லை.இன்னும் சில தினங்களில் இங்குள்ள புத்தகங்கெல்லாம் அவனுக்குச் சொந்தமில்லை.இன்னொருவருக்குச் சொந்தம் ஆகப் போறது.ஆமாம். அவன் விற்றுவிட்டான். மனைவியின் தொல்லை தாங்காமல். இந்த வயதில் இனிமேல் முடியாது என்ற …
>>“அம்மு.. அண்ணா லைப்ரரி போயிட்டு வர்றேன்” மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார் கோவிந்தன்.“ஏதோ கவிதை புத்தகம் வெளியீட்டு விழானு போன வாரம் உங்களுக்கு வாட்ஸப்பில அழைப்பு வந்ததே.. அதுக்கா..?” கேட்டாள் அம்புஜம்.“ஆமா..”“ஏன்தான் இப்படி புஸ்தகமா வாங்கி குமிக்கிறீங்களோ?.. விழாவுக்கு கூப்பிடுறவங்க ஓசிக்கா புஸ்தகம் …
>>வானம் பொத்தலாகிப் போனதோ? அந்தச் செய்தி கேட்டதிலிருந்து என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நான் தமிழ்நாடு அரசு அலுவலகத்தின் நூலகர்.எங்கள் கட்டிடம் மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது. விஸ்தாரமான சாளரங்களுடன் காற்றோட்டமாக இருக்கும். மழை காலத்தில் ஒழுகும். ஒழுகாத இடத்தில் புத்தகங்களை மேலே …
>>“சில்லரை திருட்டு சின்ராசு சின்ராசு சின்ராசு”குற்றவாளி கூண்டில் ஏறி நின்ற சின்ராசுவை பார்த்த நீதிபதி சுந்தரத்திற்கு சலிப்பு மேலோங்கி விட்டது.” இப்பதானே ரெண்டு வாரம் முன்னாடி அபராதம் போட்டு அனுப்பிச்சேன். இது எத்தனாவது முறை ? என்ன செய்துட்டு வந்திருக்கே? ““ஒரு …
>>எனக்கு அந்த மாளிகையில் உறுத்திக்கொண்டே இருந்தது அந்த அறை.அப்பாவின் நெருங்கிய நண்பரின் வீடு அது.நான் சிறுவயதில் வந்த நினைவு.இப்போது அப்பாவும் இல்லை. அவர் நண்பரும் இல்லை.எனினும் தவிர்க்கமுடியா பந்தம் என்பதால் என் மகள் திருமண பத்திரிக்கை வைக்க வந்திருந்தோம்.அப்பாவின் நண்பரின் மகனுக்கும் …
>>அம்மா சுஜாதா பயங்கர சுத்தக்காரி.வீட்டை வெகு நேர்த்தியாக வைத்திருப்பாள்.எல்லா விஷயங்களிலும் அப்பாவுடன் ஒத்துப் போகும் அவள், அவருடன் சண்டையிடுவது இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமே.அவளுக்கு தேவையில்லாத பொருட்களை வீட்டில் சேர்க்கப் பிடிக்காது.அப்பாவுக்கோ பழைய பொருட்கள் எதையுமே தூக்கிப் போட மனம் வராது.நாட்கள் …
>>காந்தி நூல் நிலையம்.புராதனப் பாணியில் கட்டமைப்பு கொண்ட அந்த நூலகத்தின் உள்ளிருந்து வெளியே பார்க்கும்படி இருந்த கண்ணாடி அமைப்பு இயற்கையோடு இயைந்து பரிமளித்தது.ஊம்… என்ன இருந்து என்ன … இந்த டிஜிட்டல் யுகத்துல நம்மள சீந்த நாதியில்லாம போச்சே…. தமிழ் வரிசையில் …
>>“விபுலா, கிளம்ப எல்லாம் தயாரா?”” ஆமாம் ஜே. 500 வருடங்கள் பின்னோக்கி போக அமைத்து இருக்கிறேன்.”” போய் சேர ஒரு சில மணிகளாவது ஆகுமே. பொழுது போக என்ன செய்வாய்?”” படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த 200 புத்தகங்களை இந்த …
>>சுற்றுலா வந்திருந்த புகாரி காட்டிற்குள், தான் பறந்து வந்த வான்குடை மிதவை திசைமாற்றி இறக்கி விட்ட போது சற்றுத் தடுமாறித் தான் போனான் ரவி.தன் தொலைந்ததாக தவித்திருந்தவன் , உதவி தேடி காட்டிற்குள் அலைந்த போது, அத்துவானக்காட்டிற்குள் ஔிந்திருந்த அரண்மனைப் போல, …
>>அப்பாவிற்கு எதுமே நினைவில் இல்லை.‘கண்ணாடிய இங்க தான வச்சேன்…’ என பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார்.சாப்பிட்டு முடித்த பின்னரும்,’நான் சாப்பிடவே இல்ல…’ என சத்தியம் செய்வார்.அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை.ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை!‘அப்பா…நீ எங்க போய்யிட்ட?’அப்பாவுக்கு ஏற்பட்ட நோயை நான் …
>>பரணிதரனுக்கு மிகவும் கவலையாய் இருந்தது. இதுவரை தான் சேகரித்துவைத்த நூல்களைப் பார்த்தபடியிருந்தார்.ஒவ்வொரு நூலும் ஒருகதை சொல்லும் …அறிவைத்தாங்கிநிற்கும் அனைத்தும் அநாதையாய்ப்போனதுபோல்ஓர்உணர்வு.வாசிக்கும் பழக்கம் அறவே குறைந்துபோன நிலையில்….இதனையெல்லாம் இனியார் வாசிக்கப்போகிறார்கள்.உறவுகள் கண்காணத்தொலைவில்.தன்னைப் பார்க்கவே ஆள் இல்லாத நிலையில் யார் இதனைப் பாதுகாத்து பராமரிக்கமுடியும்.இந்தப்புத்தகங்களால் …
>>கடைசி மூச்சை விட காத்திருந்தார் ராமு தாத்தா.அவர் படுக்கை அருகில் குழுமி நின்றார்கள் அவரது இரண்டு மகன்களும் பேரன்களும்.அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது.கண்களில் ஏக்கம் இருந்தது.தான் சேர்த்த புத்தகங்களை யாரும் படிக்கவில்லை என்கிற குறை தாத்தாவுக்கு.மகன்களுக்கோ பேரன்களுக்கோ புத்தகம் …
>>இன்று காலை என் இனிய நண்பர் ராஜப்பா என்னைத் தொலைபேசியில் அழைத்து” ரவி,இன்னிக்கு சாயங்காலம் நீ என்னோட ஒரு இடத்துக்கு வரப் போகிறாய். நான் உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்”என்ற அன்பு கட்டளையை மீற முடியவில்லை. ஆழ்வார்பேட்டையில், ஒரு ஆறுமாடிக் கட்டிடம்.அது …
>>எட்டாம் வகுப்பு படிக்கும் அவினாஷ் தினமும் தன் வீட்டு பாடத்தை முடித்துவிட்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு விளையாட செல்வான் . அப்படி அங்கு சென்ற போது , ஒரு நாள் அங்கு டாமி தன் குட்டிகளை வயிற்றில் சுமந்து கொண்டு அடிப்பட்ட …
>>ஒரு மணி நேரத்தில் எத்தனை மாற்றம் தங்கள் வாழ்வில் என்று நெகிழ்ந்து போய் இருந்தன அந்த நான்கு குட்டி நாய்களும் . கால் மடக்கி அமர்ந்திருக்கும் அவள் மடியில் , அவள் ஜீன்ஸில் அமர்ந்து ஒன்றை ஒன்று கொஞ்சும் காட்சியை ரசித்து …
>>ராதா வேலை முடித்த அசதியில் ஆட்டோ ஏறி உட்கார்ந்தாள் , அவள் தன் அலுவலக தெருவின் முனை திரும்புவதற்குள் ,அவளுக்கு ஒரு ஆடிட்டரிடம் இருந்து அழைப்பு “மேடம் ,வீட்டிற்கு சென்றதும் எங்களுக்கு அந்த பைலை அனுப்பிவிடுங்கள், நாங்கள் இன்றோடு உங்கள் கம்பெனி …
>>எழில் குழந்தைக்கு பால் புகட்டியவாறே… கணினியில் தேவையான விவரங்களைச்சேகரித்தாள்.மாமா… இந்தாங்க இந்த மாதச் செலவுக்கான பணம்..வரவுல வச்சிட்டு… பிளான் பண்ணுங்க…அத்தை சமையலறை உங்க டிபார்ட்மெண்ட் இல்லையா… மளிகை, காய்கறிகள்… குழந்தைகளுக்குத் தேவையான சத்துணவு மற்றும் சாயங்கால ஸ்நாக்ஸ் எல்லாம் மாமாவோட கலந்தாலோசித்து …
>>சித்ரா ஒரு நிமிடம் கண்ணயர்ந்தாள். மடமடவென்று அவள் கைகளில் எல்லாம் திணிக்கப்பட்டன.ஒரு பக்கம் வாளி. துடைப்பதற்கு பிரஷ். இன்னொரு கையில் படித்து முடிக்க முடியாத புத்தகம்.லாப்டாப்பில் கை அசைய, மடியில் இருந்த குழந்தை நழுவி விழ …விழ…திடீரென்று கண் விழித்தாள். இப்போது …
>>‘ஐயா ஓவியத் திலகமே , இதிலே முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்களே ‘ என்று கொஞ்சியபடி கேட்ட சுந்தரியை இழுத்து அணைத்தபடி , ‘என்னடி கண்ணு , சொல்லேன் ‘ என்றவனை. விலக்கி விட்டுச் சொன்னாள் . ‘பிஸ்டல் ‘ . அதிர்ந்த …
>>மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …
>>இன்று வேலைக்கு வேதா வரமாட்டாள் என்பது நினைவில் நின்றது.காலை காஃபிக்குப்பின்,படியளக்கும் அலுவலக வேலைகளில் ஈடுபட்டு,ஒரு அளவிற்கு செய்து முடித்தாள்.உறங்கும் குழந்தை ஸரஸாவை எழுப்ப மனதில்லாமல் எழுப்பி உடை மாற்றி உணவளித்தாள்.காலை உணவாக இட்லி – சாம்பாரும் செய்து, மதிய உணவிற்கு துவையலும் …
>>கமலா காலை எழுந்தவுடன் அன்றைய வேலைகள் கண் முன் கதக் நாட்டியம் ஆட தொடங்கிவிட்டது.அவள் சில காலம் கதக் பயின்று இருந்தாள்.நின்ற இடத்திலேயே சுற்றுகள் போட்டவண்ணம் முத்திரைகள்.அன்று ஆரம்பித்த சுற்றல் இன்னும் தீவிரம் அடைந்து தலையை சுற்ற வைக்கிறது. கமலா முதல் …
>>மூக்கு மட்டும் பெரிசா இருக்கே… மூச்சு இருக்கும் தானே! ஏன் எனக்கு மூச்சு விட முடியாமல் இருக்கே! அவள் எடுத்துக் கொண்டு போய்ட்டாள்; போல இருக்கே. நாளைக்காவது வந்து விட்டால்; எனக்கு மூச்சு வரும் ;’ என்று சொன்னவர். நாற்காலியில் உட்கார்ந்து, …
>>தாங்கள் வசித்த அதே பன்மாடிக்கட்டிடத்தில்மூன்றாவது மாடியில் குடிவந்திருந்த ரமா ,ரகுதம்பதியின் மகன் சுரேஷ் பொறியியல் படித்தபின் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான்என்று கேள்விப்பட்டதும் முதல்மாடியில் இருந்தவீணா, விவேக் தம்பதியினருக்குதங்கள் மகள் நந்தினிக்கு அவன் ஜாதகத்தைகேட்டுவாங்கி பொருந்தினால் விவாகமுயற்சியில் இறங்கலாம் என்று தோன்றவே கிளம்பிசென்றார்கள்.“என் …
>>அவளின் செதுக்கிய மூக்கும் , செப்பு இதழ்களும் அவனைக் கவரவில்லை. , அந்தச் சிந்தனைக் கண்கள். அன்பும், அழகும் , அறிவும் ததும்பும் அந்தக் கண்களைப் பார்த்தபின் வேறு சிந்தனை இல்லாமல் மயங்கிக் கிடந்தான் மாலன். சுந்தர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். …
>>முகத்தில் சோகம்படர நாற்காலியில் உட்கார்ந்திருந்தஅம்மாவை “என்னாச்சு?”உமா கவலையுடன் கேட்டாள்.“உனக்கு விஷயம் தெரியாதா?”“என்ன விஷயம்”?“உன் அண்ணன் ரகுவின் பெண்டாட்டி மீராவுக்கு உடம்பு சரயில்லையாம்”“என்னவாம்?அண்ணா என்ன சொன்னான்?”“சொல்லாததுதான் பிரச்சினை”“அப்போவிஷயம் உனக்கு எப்படித்தெரிஞ்சுது?”“அவங்க பக்கத்து வீட்டிலே இருக்கிற மீனா மாமியை நான்கறிகாய் வாங்கப்போனபோது கடையில் பார்த்தேன்.அவங்கசொன்னாங்க. …
>>வீட்டு முன் வராண்டாவில் உட்கார்ந்து யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த தீபக் திடீரென்று “அம்மா சீக்கிரம் வா”என்று அலறினான்.பயந்துபோன லலிதா சமைப்பதை நிறுத்திகேஸ் அடுப்பை அணைத்துவிட்டு “என்னஆச்சு தீபக்?” என்று பதட்டத்துடன் கேட்டவாறுவராண்டாவுக்கு விரைந்து வந்தாள்?“அதோபாரு எலி”“இதுக்கா என்னவோ புலியைப்பார்த்தவன்மாதிரி கத்தினே?”என் தட்டில் …
>>விளக்கை அணைத்துவிட்டு வனஜாவைத் தாண்டி மெத்தையில் அந்த பக்கம் போய்ப் படுத்துக் கொண்டேன். மணி பத்து ஆனால், எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் டாண் என்று படுக்கைக்குச் சென்றாய் விடும். எங்களுடைய ரிடையர்மென்ட்டுக்கு முன்னாலேயே என்றோ தொடங்கிவிட்ட தூக்க அட்டவணை….. …
>>வேளச்சேரி பஸ் டெர்மினஸ் தாண்டி வந்து கொண்டிருந்தேன். நடுவில் வந்த ஒரு தெருமுனையில் ஒரு பெண்மணி ஸ்கூட்டரில் எதிர்ப்பட்டார். என்னருகில் நிறுத்தி “சார்! பனகல் பார்க் எங்க இருக்கு?” “இது வேளச்சேரி. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் டி நகர்லதான் பனகல் பார்க் …
>>“ராஜேஷ் ஏன் டல்லாக இருக்கே? எதுவும்பேசாமல் முகத்தில் சோகம் திரையிட இப்படிஉன்னை பார்க்கவே கஷ்டமாக இருக்கு”“என் தலைஎழுத்து. அதைப்பற்றி சொல்லிஎஉன்னையும் தொல்லைப்படுத்த விரும்பல்லே”” புரியும்படி சொல்லு”“இன்னும் ரெண்டுநாளில்பணம் கட்டாடிபரீட்சை எழுத முடியாதாம்.ஆசிரியர் சொன்னார்”“சரி கட்டிடு இதில் என்னப்ராப்ளம்”?“அதை ஏன் கேட்கிறே,அதுக்காக நான் …
>>சுந்தர் தன் நண்பன் சுரேஷை உற்றுப்பார்த்துதிகைப்புக்குள்ளானான்.“என்ன அப்படிப்பார்க்கிறே?”“இல்லே உன் முகத்திலே எதேவோ மிஸ் ஆகுதே”ஓ அதுவா என்னனு கெஸ்பண்ணு”“கெஸ்ஸு கேஸு ஒண்ணு தாடி வெச்சுக்கஉனக்கு ரொம்பப்பிடிக்குது ஏன்னா அதுதான்லேட்டஸ்ட் பேஷன்னு சொல்லுவே. சினிமாமற்றும் சின்னத்திரை நடிகர்கள்கூட தாடியுடன் தான் நடிக்கிறாங்கன்னு சொல்லுவே …
>>ஒற்றையிழையில் வாசலில் போடப்பட்டுள்ள கோலம் என் கவனத்தைக் கலைத்தது!குழந்தை கிறுக்கினாற் போன்ற கோலம். ஆனாலும் அதில் ஓர் ஒழுங்கு இருந்தது. இது என்ன கோலம்?கீழே ஒரு சக்கரம், தேர்க் கோலமோ? நடுவில் ஒரு சூரியன்; அருகில் சந்திரனைக் காணோமே – பொங்கல் …
>>அகிலாவுக்கு நல்ல மூடு என்றால் அழகு அழகான புள்ளிக் கோலங்கள், அதன் மேல் வித விதமான அலங்காரம், வண்ணப் பொடிகள் ,வண்ண வண்ண மலர்கள் வைத்து ஒரு கலக்கு கலக்கிடுவாள். எதிர்வீட்டு பால்கனியில் நின்று கொண்டு அகிலாவின் கை வண்ணத்தை வியந்து …
>>தன் தாயின் நெருங்கிய சிநேகிதி பிரபல சின்னத்திரை நடிகை காமேஸ்வரியை பார்க்க வந்த நித்யா “என்ன ஆன்டி உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைனுபேப்பரில் படிச்சேன். பல தடவை போன் பண்ணிப்பார்த்தேன். நம்பர் ஈஸ் நாட் ரீச்சபிள்னு வந்தது.. என்ன ஆச்சு ஆன்டி?”“வாம்மா …
>>“ஏன் டல்லா இருக்கே? நான் சொன்னபடிவிநாயகரை தரிசித்து வேண்டிக்கிட்டியே .உனக்கு நல்லதே நடக்கும். இனி கவலையைவிடு.”“எனக்கு நான் பரீட்சை சரியாக எழுதலையோஅப்படின்னு கவலையா இருக்கு”தன்நண்பன் சத்யாவின் புலம்பலை திரும்பத்திரும்பக்கேட்டு அலுத்துப்போனவனாய்அருண்” த்ச். நீ ரொம்ப குழம்பிப்போயிருக்கேபேசாமல் இருடா” என்று கோபத்துடன் சொன்னான்.சத்யாவின் …
>>1000 நீதி கதைகள் தேவர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த விருத்தாசுரனை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பகவான் விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, “ததீசி முனிவரின் எலும்பைக் கொண்டு விஸ்வகர்மாவை ஒரு வஜ்ராயுதம் செய்யச் சொல்லுங்கள். அதைக் …
>>அவர்கள் இருவரையும் வரச் சொன்னார் வகுப்பு ஆசிரியர்.அவர்களுக்குப் புரியவில்லை. ஏன் வரச் சொன்னார் என்று.ஓய்வறையில் அவர்களைச் சந்தித்தார் வகுப்பாசிரியர்.“உங்களுக்கு ஒரு குழந்தைதானா?”“ஆமாம்.”“வீட்டில் எப்படி இருப்பாள்”“மற்றக் குழந்தைகள் மாதிரி இருப்பாள்”“அவள் வகுப்பில் பாடங்களைக் கவனிப்பதற்குப் பதில் ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறாள். “அவர்களுக்குத் திகைப்பாக …
>>நீண்ட நாட்களாகவே அம்மாவிடம் ஒரு பொம்மை வாங்கித் தருமாறு அடம் பிடித்துக் கொண்டே இருந்தாள் அபி. அவள் அம்மா அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கையில் காசு இருந்தால்தானே வாங்கிக் கொடுப்பதற்கு. அது இந்த நான்கு வயது அபிக்கு புரிய வாய்ப்பில்லைதான்.அன்றும் …
>>வழக்கம் போல் பரபரப்பான காலை நேரம் தான் அவளுக்கு. வீட்டில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் பெற்றோருக்கு வேண்டியன செய்து விட்டு , கையில் ஒலி எழுப்பும் செல்லில் அழைக்கும் அலுவலக அதிகாரியின் அவசரத் தொனிக்கு ஏற்றபடி பதில் அளித்து விட்டு, அந்த அவசரத்திற்குத் …
>>எப்போதுமே டி.டி.கே ரோடு அவசரகதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ! ஆனால் இன்று அந்த நீண்டு விரிந்த சாலையில் நடுநாயகமாக உள்ள டேக் சென்டர் வாயிலில் கார்களின் முண்டியடிப்பு சற்று அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். வந்திருந்த சிலர் அக்கம்பக்கத்துத் …
>>அனுவின் ஒரே மகன் பத்து வயது அருண். சிறு வயதிலிருந்தே கையில் கிடைக்கும் எல்லாவற்றிலும் தட்டித் தட்டி ஒலி வரவழைப்பது அவனுக்கு பிடித்தமான விஷயம். அவனுக்கு தாள வாத்தியத்தில் ஆர்வம் இருந்தது புரிய வர, அவனைத் தகுந்த குருவிடம் சேர்த்து மிருதங்கம் …
>>எங்கள் குடியிருப்பில் புதிதாக ஓர் உடற்பயிற்சி மையம் துவங்கியுள்ளனர். அதன் கட்டணம் உரிமையாளர்கள் கட்டும் பராமரிப்பு வைப்பு நிதியிலிருந்து செல்வதால் அந்த மையத்தை பயன்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டேன். நேற்று காலை பயந்து கொண்டே முதல் நாள் சென்றேன். எனக்கு தெரிந்த ஜிம், …
>>வியாழன் கார்த்தால 5:30 மணிக்கு எழுந்து சமைச்சிட்டு இருந்தேன். வழக்கமா என் பின்னாடி வந்து ‘காபி தரியா ‘ ன்னு என்னோட உசரமா, அரும்பு மீசையுடன், உடஞ்ச குரலுடன் எனக்கு தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என் பதினஞ்சு வயசு சீமந்தபுத்திரனை …
>>ஆயிற்று; இன்றுடன் மணிகண்டனின் காரியம் எல்லாம் முடிந்து அவரவர் இல்லம் திரும்பியாயிற்று. அண்ணா- மன்னி அப்பா, இவர்கள் மட்டும்;இன்று என்னுடன். நாளை அவர்களுடன் கிளம்ப வற்புறுத்திக் கூப்பிடுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வாங்கி ஒரு மாறுதலுக்கு பெங்களூரில் வந்து …
>>அம்மா உன்னிடம் யாராச்சும் நான்இந்தமுறைபரீட்சையில் எத்தனை மார்க வாங்கியிருக்கேன்னு கேட்டால் சொல்லாதே என்ற தன்மகள் வித்யாவை பவானி குழப்பத்துடன்பார்த்தாள்.என்னபார்க்கிறே?உனக்கு என்னாச்சு ஏன் அப்படிச்சொல்லறே?சொல்லக்கூடாதுன்னு தடைபோடரமாதிரிநீ அப்படி ஒண்ணும் குறைவாக மார்க்வாங்கலியே.அம்மா காரணம் இல்லாமே நான் எதையும்சொல்லமாட்டேன்னுஉனக்கேதெரியும்.ஆமாம்.எதுக்கு என்னை கேட்கிறே?இதுக்கு காரணம் என்னன்னு …
>>நிலைமை.” என்று பதிலளித்தாள்“உங்கள் திட்டம் என்ன?”என்றபாவனாவின் கேள்விக்கு அமுதன், இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியில் இருப்பேன். இன்னும் கொஞ்சம் மூலதனம் சேர்க்க வேண்டியுள்ளது.அதன் பின் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் சிறு தொழிற்சாலை நிறுவதுதான் என் வருங்காலத்திற்கான திட்டம். இந்தியாவில் இன்னும் …
>>சவரிமுத்துவின் சவப்பெட்டி!‘இது எனக்காகச் செய்யப்பட்ட பெட்டிதானே?’ – சவரிமுத்து சன்னமாகக் கேட்டார். ஒரு வாரமாக ஐசியூ வில் வளைந்த புடலங்காயாய்ப் படுத்துக்கிடக்க, எல்லா துவாரங்கலிலும் இரப்பர்க் குழாய்கள்!‘ஆமாம்’‘என் உயரத்திற்குப் பத்தாது போல இருக்கே; காலை மடிச்சுத்தான் படுக்கணுமோ?’‘உங்க உயரம் அஞ்சடி பத்தங்குலம். …
>>தினமும் பார்க்கும் காட்சிதான். ஆனாலும் மீனாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் பக்கத்து வீடு ஒரு தனி வீடு. அதில் தாய், மகன், மருமகள், பத்து வயது பேரன் இவர்கள் வசிக்கிறார்கள். அந்த மருமகள் தனியார் …
>>கோயிலுக்குச்செல்லும் வழியில் எதிர்ப்பட்ட இளம்பெண் தங்கள் வீட்டில் வெலைசெய்யும் சரளாஎன்பதை அவள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தாராவால் உணரமுடிந்தது.ஆனால் அந்தப்பெண் சரளா கண்டுகொள்ளாதவளாக முகத்தைத்திருப்பிக்கொண்டு. ஏன் போனாள் என்று தாராவுக்குப்புரியவில்லை. இவ்வளவிற்கும் அவளை ஒருவேலைக்காரியாகப்பார்க்காமல் தாராவும் மற்றவர்களும் வீட்டுமனுஷியாகத்தான் நடத்தினார்கள்.அவளுக்கு ஒருபிரச்சினைஎன்றால் வரிந்துகட்டிக்கொண்டு …
>>அந்தக் கருப்புப் பூனை என் பேத்தியை விடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த பேத்தி பூனையைக் கொஞ்ச ஆரம்பிக்க அது அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. பயந்து விட்டாள்.நான் பூனையைத் துரத்தினேன்.அடுத்த நாள் காலை என் வீட்டு வாசலில் பூனை வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தது.“ஆரபி, …
>>வீட்டில் பரபரப்பு. ஆனால் ரம்யா அலுவலகம் போய்விட்டு மாலை ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்று வருவதாகச் சொல்லியிருந்தாள்.பெண் பார்க்கிற அன்றுகூட இந்தப் பெண் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாளே என்று அவையத்திற்குக் கடுப்பு.சரியாக ரம்யா வந்தபிறகு அவர்களும் வந்திருந்தார்கள். முகத்தை நன்றாகத் …
>>“என் கேள்விக்கு இன்று நீ பதில் சொல்லியேஆகணும். இல்லாட்டி உன்னை விடமாட்டேன்.”என்ற அம்மா வைதேகியை சிவா வியப்புடன்பார்த்தான்“என்ன கேட்கப்போறே?”“உன் கல்யாணவிஷயம்”“ஆரம்பிச்சுட்டியா? நான்தான் எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேனே”“அதுதான் ஏன்னு கேட்கிறேன். நாங்க வரன்பார்க்கிறோம்னு சொன்னால் எங்களையும்விடமாட்டேங்கிரே. நீ யாரையாவது காதலிக்கிறாயான்னு கேட்டாலும் …
>>வனிதா கோயிலுக்குப்போகிறவழியிலிருந்தமுனைத்திருப்பத்தில் அந்தக்குப்பைத்தொட்டிமல்லாந்துகிடந்தது. அதன் சக்கரங்கள்தேய்ந்துபோய்,மேல்விளிம்பும் உடைந்துபோன நிலையில். அதிலிருந்துகீழே பரவலாக விழுந்துகிடந்த குப்பை குட்டிகோபுரங்கள் வடிவில் சாலைமறியல்செய்வதுபோல் விழுந்து கிடந்தது.பின்னால் நடந்துவந்த பாட்டியிடம்“எத்தனைநாளாக இப்படி குப்பை ரோடைஅடைச்சுக்கிட்டு அசிங்கமாக் கிடக்குது பாட்டி”என்றுகேட்டாள்.“அதை ஏன் கேட்கிறே. போனவாரம் பெரியமழை கொட்டித்தே அதிலிருந்தே …
>>தவலை போட்ட குட்டி! ஒரு சமயம் ஒரு பெரியவர் ஒரு கருமானிடமிருந்து ஒரு தவலையைக் கடனாக வாங்கினார். பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும்போது ஒரு தட்டை அதோடு வைத்துக் கொடுத்தார்.“தட்டு ஏது?” என்று கேட்டான் கருமான்.“தவலை குட்டி போட்டது?”கருமான் மிக்க மகிழ்ச்சியுடன் …
>>குவாங்க் சீனாவில் குவாங்க் என்ற ஒரு பையன் இருந்தான். அவன் மிகவும் கெட்டிக் காரப் பையன்.ஒரு சமயம் அவனும் அவனுடைய நண்பர்களும் விளையாடிக் கொண்டிருக் கையில், ஒரு பையன் ஒரு பெரிய ஜாடிக்குள் விழுந்துவிட்டான். அந்த ஜாடி நிறையத் தண்ணீர் இருந்தது. …
>>புழுதி கிளப்பிக் கொண்டு ஒரு ஆடி கார் அந்த கிராமத்தில் நுழைந்து பயணித்தது. ஊரே காரை உற்று பார்த்தன. நேரே போய் பச்சை நிற பெயின்ட் அடித்த ஒரு மச்சு வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர். நீல …
>>ஞாயிறு மதியம் மூர்த்தியின் நண்பன் வாசுவிடமிருந்துபோன்வந்து அவனுடன் பேசியபிறகே மூர்த்தி சுறுசுறுப்புடன் வேலைசெய்யத்துவங்கினான்.ஹால் சுவரிலிருந்த தன்மகன்கள் நிகில்நீலேஷ் இருவரின் புகைப்படங்களையும் நீக்கிவிட்டு ,அங்கேபிள்ளையார் மற்றும் முருகனின்படங்களைபூஜை அறையிலிருந்து கொண்டுவந்து மாட்டினான்.தன் மகன்களின்அறையை தாளிட்டுவைத்தான்.“என்ன பண்ணறீங்க நீங்க?”அவன் மனைவி மீனா அதிர்ந்து போனவளாககேட்டாள்.“என் …
>>எத்தனை முறை சொல்லி இருக்கிறாள் அம்மா, தான் வளர்ந்த கதையை. அவள் பெற்றோருக்கு ஒரே பெண்ணாக அவள் பிறந்தது முதல், அவள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்த அவர்கள் கூட்டிச் சென்ற இடங்கள் எத்தனை, வாங்கிக் கொடுத்த ஆடைகள் எத்தனை, தின்பண்டம் …
>>குறுங் கதை-124 அலைபேசி சிணுங்க, கீதா அதை ஒத்தி எடுத்து பேசினாள். ராதிகா தான். “என்னடி! தீபாவளிக்கு ஜவுளி எடுத்தாச்சா?” என்று அக்கறையாக கேட்டதுமே, கீதா சுதாரித்துக் கொண்டாள்.” இன்னும் நவராத்திரியே முடியலை; அதற்குள் என்ன அவசரம்? நிதானமாக வாங்கலாம்” என்றாள். …
>>வாழ்நாள்சாதனையாளர் விருது பெறவிருந்தபிரபல மூத்தநடிகர் உதயசந்திரனை பேட்டிகாண அடையாரில் இருந்த அவர் வீட்டுக்குப்போன அருண் தோட்டத்தில் தனயாகசெடிகளுக்குநீரூற்றியவண்ணம் நின்றஉதயசந்திரனைக்கண்டு திகைத்தான்.முன்பெல்லாம் இவர்வீட்டில் ரசிகர்களின்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.பிரபல இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள்,நடிகர்கள்,என்று யாராவது வந்தவண்ணம்இருப்பார்கள். கைப்பேசி அடித்து அழைத்தவண்ணமிருக்கும்.சோப்பு, வேட்டி,நெய்,பேஸ்ட் என்று எல்லா விளம்பரங்களிலும் …
>>ஒரு காகம் ஒரு காகத்திற்கு வெகு தாகமாக இருந்தது, எங்கெங்கெல்லாமோ தண்ணீருக்காக அலைந்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் குறுகிய கழுத்துள்ள ஒரு கூஜாவில் தண்ணீர் இருப்பது தெரிந்தது. ஆனால் தண்ணீர் மிகவும் அடி யில் இருந்ததால் அதனால் மூக்கை கூஜாவிற்குள் …
>>இரு பெண்மணிகள் போலந்து நாட்டில் பிரபு குலப் பெண்மணிகள் இருவர் தத்தம் குதிரை வண்டிகளில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது வண்டிகள் ஒரு குறுகிய சந்தில் எதிரெதிராக வந்து நின்றுவிட்டன. எவராவது ஒருவர் மற்றவருக்கு வழி விட்டாலொழிய இருவருமே அச்சந்தைக் கடக்க …
>>மோகன் லால்ஜி கோரக்பூர், கல்யாண் பத்திரிகையைச் சேர்ந்த ஸ்ரீமோகன்லால்ஜீ நமது சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்தவர். ஒரு சமயம் அவருடைய குழந்தையொன்று காலமாகிவிட்டது. அதை அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவர் மிகுந்த துக்கத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் …
>>நான் சுரேஷ். பத்தாம் வகுப்பு படிக்கிறேன். என் தங்கை யாமினி, எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.இன்று காலை எழுந்ததிலிருந்து கழுத்து வலி. இடதுபுறம் திரும்ப முடியவில்லை. யாராவது இடதுபுறத்திலிருந்து கூப்பிட்டால் தலையைத் திருப்ப முடியாமல் முழுதுமாய் நானே திரும்பி என்னவென்று கேட்கிறேன்.“என்னடா? கழுத்து …
>>வெகு நாட்களாக ராவுத்தர் வீட்டில்தான் வாசம்.இறாலின் வாசனை தான் பிடிக்க முடியுமே தவிர ; ஒருநாளும் கிடைக்காது,ஒரு இறால் துண்டு.இன்று மீன் வாங்கி வந்தவுடன் ஷஹிரா மீனை கழுவி திருத்தும் போது, நழுவி கீழே விழுந்ததை அவள் கவனிக்கவில்லை.மீனை கவனமாய் கவ்வி …
>>வாயில் கவ்விய இறாலைத் தண்ணீரில் போட்டு விட்டு பூனை சொன்னது.இன்று கொக்கிடமிருந்து காப்பாற்றி விட்டேன். நாளும் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை.நன்றி என் அம்மா பேச்சை மீறி தண்ணீர் மேல் மட்டத்திற்கு வந்தது தவறு என்று உணர்ந்தேன் பூனை அண்ணா.சரிதான் அவரவர்க்கு …
>>அழகிய யுவதி மகாராஜா சத்திரபால், தம் பிரஜைகள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவர் என்று பெயர் வாங்கியவர்.ஒரு சமயம் அவர் தர்பாரில் உட்கார்ந்திருந்த சமயம் ஒரு அழகிய யுவதி அவரைப் பார்க்க வந்தாள். மகாராஜாவின் அழகைக் கண்டதும், அவள் அப்படியே …
>>