கல்யாண்ஜி கவிதை

நடமாட்டமில்லாத கோவில் கல் மண்டபங்களில்பச்சைப் பாசியாக அப்பியிருப்பார்.புது உடுப்புகளை மழைக் காலத்தில்அடுத்தடுத்து அணிந்து நனைந்தும் நனையாமல்மழைக்கோட்டுடன் வருகிற ஒரு சகா ,முந்திய ஊர் அலுவலகத்தில் இருந்தார்.அகாலத்தில் வாட்சாப் அனுப்பியிருக்கும் சிநேகிதிக்குஅவருடைய அம்மாவுக்குப் பிடித்தகனகாம்பரமும் கருகமணியும்நினைவுக்கு வந்துவிட்டது.வெட்டிய சிகரெட் அட்டைகளில் குப்பு ஆச்சி …

>>

இந்திரநீலன் சுரேஷ் /நிஜங்களின் தரிசனம்

தூக்கம் தொலைத்த, செயற்கை சாயத்தைப் புன்னகையாய் பூசிய இளம் பெண்ணிடமிருந்து போர்டிங் பாஸ் பெற்று, இமிக்ரேஷனை கடந்து, செக்யூரிட்டி’யில் கலந்து, கன்வேயர் பெல்ட் ட்ரேயில் லேப்டாப்பை படுக்க வைத்தபோது, மொபைல் போன் அடித்தது. பிரசன்னா அதை அமைதிப்படுத்தி மற்ற வஸ்துக்களுடன் வைக்க, …

>>

ஜெயதேவன் கவிதை

வாழ்க்கை அழகாய்த் தெரிகிறதுமரணம் மணி அடிக்கும்போது அன்றாடம் சலிப்பை விநியோகித்துகிடந்த உடம்புஒரு தேவதையின் சிறகைப்போல்லேசாக இருக்கிறது வாழ்க்கைமுற்றும் தருவாயில் சிலந்தி வலைக்குள் சிக்கியிருந்த உயிர்ப்பூச்சிதளையறுபடும் தருணத்தில்தன் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு ஓடத் தயாராகிறது. தீக்குச்சிக்குள் இருந்த தீ தெரியாமல்தீப்பெட்டியை சுமந்துகொண்டேஅலைந்துகொண்டிருக்கிறோம் மரணக்குஞ்சு வெளிவரும்வரைநாம் …

>>

ரவிக்குமார்/அண்ணல் அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை

>>

ரவிக்குமார்/அண்ணல் அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை

>>

எஸ்.ராமகிருஷ்ணன்/புத்தகங்களை இழந்தோம்..

from S.Ramakrishnan website.. நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து …

>>

இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர்/ஓஷோ

இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர் ரமண மகரிஷி. இவர் சொல்ல வருவது ஒரே ஒரு செய்தியை தான். இவர் ஒரு சாதாரண மனிதர். இவர் மிகப்பெரிய அறிஞரல்ல . இவர் வீட்டை விட்டு வெளியேறும்போது இவருக்கு வயது பதினேழு தான். …

>>

அழகியசிங்கர்/இன்னும் ஒரு முறை..

இன்னும் ஒரு முறைஅது மாதிரி ஒரு வெள்ளம்வேண்டாம் 2015 இல் உள்ளே புகுந்த வெள்ளம். சேமித்து வைத்த புத்தகங்களை அழித்துச் சென்றுவிட்டது. இன்று காலையில் ஏனோ அதே ஞாபகம் கீழே உள்ள அறையில்அதேமாதிரிபுத்தகங்களைத்தேடித்தேடிசேகரித்துவைத்திருக்கிறேன் வெள்ளம்நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது..

>>

மனுஷ்ய புத்திரன் கவிதை

மூடிய கதவைபின்னால் இருந்துயாரோ பிடித்துத் தள்ளுகிறார்கள்கண்ணாடி ஜன்னல்களையாரோ அறைகிறார்கள் அது காற்றின் நூறு கரங்கள்‘ நான்தான் வந்திருக்கிறேன்கதவைத் திற’ என உறுமுறுகிறது புயல்இவ்வளவு அதிகாரமாகயாரும் கேட்டதில்லை மரங்கள் தலைவிரித்தாடுகின்றனமண்ணைத் தொடகிளைகள் தாழ்கின்றனமுறிந்தும் வீழ்கின்றன தகரங்களிலானவைகாற்றின் தாண்டவத்தில்காகிதம்போல கிழிபடுகின்றன காற்று மழைநீரைதிறந்த சாளரங்களுக்குள்வாரி …

>>

அனங்கன்/ஒரு ஆன்மா தெருவில் கிடக்கிறது

வாழ்ந்தமனிதரை நினைவுகூற ஒன்றுமில்லை…அவர்சேர்த்துவைத்த நூல்களைத் தவிர. சொத்தினைச் சமமாய்ப்பிரித்துக்கொண்டவர்கள்…சொல்லிவைத்தார்போல் தட்டிக்கழித்தது நூல்களைத்தான். கோணிப்பையில் குப்பையாய்த் திணித்து எடைக்குப்போட்டுவந்த வேலைக்காரனுக்குத் தெரியும்… இறந்துபோனவர் அவைகளை எங்ஙனம்பாதுகாத்தாரென்று… அப்பாவிற்குப் பிடித்ததைப் படையல்போட்டவர்கள்…ஒருநூலையும் வாங்கிவைத்திருக்கலாம். புத்தகம் இருந்தஅலமாரிகள் நல்ல கருந்தேக்கென்று சண்டைநடக்கிறது இப்போது… புத்தகத்தோடு தெருவில் …

>>

வளவ. துரையன்/தூறலும் தூற்றலும்

நசநசவென்று இந்த மழை தூறிக் கொண்டிருக்கிறது. திறந்த வெளியில் எறும்புகளால் இரை இழுத்துப் போக முடியவில்ல பூக்காரியின் நனைந்த பூக்களிலிருந்தும் அவள் கண்களிலிருந்தும் நீர் சொட்டுகிறது. படித்தவுடன் வேலை கிடைப்பதாக எண்ணிக் கொண்டு மாணவர் பள்ளிக்கு ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள் நனைய விடாமல் …

>>

எஸ்ஸார்சி/என்னைத்தான்

இணையக் கால கவியரங்கம்21/11/23 எஸ்ஸார்சி வாசித்த கவிதை ஜன்னல் துடைக்க மாட்டீர்கதவுப் பூட்டுக்கு எண்ணெய்விடமாட்டீர்ஒட்டடை அடிக்க மாட்டீர்ஸ்டவ் க்ளீன்செய்யவும்மாட்டீர்வாஷிங் மெஷினில் துவைத்த துணியைஎடுத்துக் காயவைக்க மாட்டீர்காய்ந்த துணியை எடுத்துமடித்து வைக்க மாட்டீர்சூடு ஏறாது மக்கார் செய்யும் அயர்ன் பாக்சைப்பற்றிக் கவலைப்பட மாட்டீர்காய்கறி …

>>

சிறகா/பயாஸ் கோப்பு காரன்

சொல் புதிது 29 வது இணைய கால கவியரங்கம்.கவிதை வாசிப்பது சிறகா . திடீரென்று தோன்றினான் பயாஸ் கோப்பு கார ன் ஒரு கண் மூடி ஒரு கண் திறந்து வைக்க சொல்லி இதுவரை பார்த்திராத அழகிய வித்தியாசமான காட்சிகளை கடகடவென …

>>

நாகேந்திர பாரதி/பரீட்’சை

இணைய காலக் கவிதை படிப்பதற்குக் கிடைத்திருந்தநாளெல்லாம் பறந்து விடும்முடித்து விட்ட பாடங்கள்முடியாதது போல் தோன்றும் தேர்வுக்கு முதல் நாளில்லேசாகக் காய்ச்சல் வரும்தெரிந்த பாடம் எல்லாம்கனவுக்குள் காட்சி தரும் ஹாலுக்குள் நுழைந்ததுமேகண்ணுக்குள் மயக்கம் வரும்கேள்வித்தாள் கிடைத்தவுடன்லேசாக வேர்த்து வைக்கும் எல்லாமே எளிதானகேள்வியென்று தெரிய …

>>

எஸ் வி வேணுகோபாலன்/பொங்கிடும் கடலே புயலே!

புன்னகை பூக்கும் உள்ளம்தன்னகத்தில்லை கள்ளம்செங்கொடி இயக்க வாழ்க்கைசங்கொலி எழுச்சிப் பேச்சுஅரசியல் உறுதிப் பாடுவரிசையாய் தியாகச் சுவடுஇலக்கியம் தோய்ந்த சிந்தைகளப்பணி ஓங்கும் விந்தைஇசையிலே விளையாட்டினிலேவிசையுறு வேட்கை வேட்கைஅன்பினார் அறத்தார் தூயபண்பினார் அடக்கம் கொண்டார்எங்குதான் காண்போம் தோழாபொங்கிடும் கடலே புயலே! (இந்தியன் வங்கி ஓய்வு …

>>

பி. ஆர். கிரிஜா/கிணறு !

சுரேஷ் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு வந்தான். அது ஒரு சிறிய கிராமம். சுரேஷின் அம்மா அவனுக்கு கிராமத்தை காட்டுவதற்காகவே அத்தை வீட்டிற்கு ஒரு வாரம் இருப்பதற்காக அழைத்து வந்தாள்.சுரேஷிற்கு பயங்கர குஷி. அவன் அந்த பெரிய தாழ்வாரம், கொல்லை எல்லாவற்றையும் …

>>

வாழ்தல்/வைதேகி

25வது இணைய கால கவியரங்கம் மதில் சுவரில் வந்தமரும்காக்கைக்குப் பிடிசோறுதுளிர்த்திருக்கும் தொட்டிச் செடிக்குஒரு காலை வணக்கம்நீண்டநாள் கழித்து வந்தகீரைக்காரப் பாட்டியிடம் நலம் விசாரிப்புமாடிவீட்டு மழலைக்குகன்னத்து இதழ் ஒற்றல்பேருந்தில் ஏற தடுமாறும் பெரியவருக்குஇதமான கை பற்றல் என்றுவாழ்ந்துதான் பார்ப்போமே!வாழ்தல் என்றால்…பெரிதாக வேறென்ன? .

>>

ஆர். வத்ஸலா/யாவரும் மகிழ…

இன்று நடைபெற்ற 25ஆவது கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை இது கட்டப்பட்ட கண்களுடன்பல்லாயிரம் பிரதஷிணங்கள் செய்துஎலும்புக்கூடு மாடுகள் ஆட்டிய எண்ணெயில்புனித ஸ்நானம் ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும்வெந்து மாண்டஓராயிரம் புழுக்கள் உமிழ்ந்து வைத்த நூலில்தீட்டில்லா பட்டாடை மருந்தூசியால் துளைக்கப்பட்டுஆயுள் குறைந்தகோமாதாக்கள் சுரந்த பாயஸம்பக்தியுடன் …

>>

அழகியசிங்கர்/தீபாவளி

எப்போதும் போலில்லாமல்இன்றுதீபாவளி என்பதால்சீக்கிரம் எழுந்துஎண்ணெய்த்தேய்த்துக் குளித்து விட்டுகாப்பியைக் குடித்தபிறகுசும்மா இருக்கிறேன்வீட்டில்தட்டில் வைத்த தின்பண்டங்களைமென்று கொண்டிருக்கிறேன்கவிதை வருமாஎன்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்யார்யாருக்கோகவிதைகள் உதயமாகிதொந்தரவு செய்கின்றன.. நமோ நாராயண!

>>

வைதேகி/கவிதை

இருபத்துமூன்றாவது இணையக்கால கவியரங்கம். 10.11.23 . விரல்களின் நுனியில்துளிர்க்கும் என் எழுத்துகள்ஓர் இலையை அசைத்துச்செல்லுமெனில்…மனக்காயத்திற்கு மிருதுவாய்மருந்திடுமெனில்…காதலின் கதகதப்பைச் சிறிது கண்ணியமாய்ச் சொல்லுமெனில்..நானும் எழுதிவிட்டுப் போகின்றேனேகவிதை என்ற பெயரில்எனக்குத் தெரிந்ததை…. .

>>

ஒரு கவிதாயினிபிறக்கிறாள் /சசிகலா விஸ்வநாதன்

எனக்கும் மற்றோர் கவிதைகளைபடிக்கத்தான் ஆசை.கற்றோர் கவிதைகள்கற்க; தன்கவிதை தானே சிறக்கும்;என்பான்; என் பின்பிறந்தான்.சரி!எதைப் படிப்பது?அவரைப் படி.இவரைப் படி.இதைப் படி.அதைப் படி.வெண்பா எழுது.என்பா எழுது.புதுக்கவிதை ஆக்கு.தன்முனைக் கவிதை ஆக்கு.குழம்பி விட்டேன்.என் தமிழ் ஆசானிடம்வினவினேன்என்ன செய்ய?எளிதான வழி ஒன்று பகர்ந்தார்.உனக்கு என்ன நன்கு வருகிறதோ,அதை …

>>

தேவர் மகான்/எஸ்ஸார்சி

31/10/23 சாதிமதம் கடந்த மகான்தேவர் முத்துராமலிங்கரைப் போற்றுவோம்தெய்வீகத்தையும் தேசத்தையும்தன்னிரு கண்களாகக் கொண்டாடியஆழம் கூடிய அற்புதம்உணவால் சைவத்துக்கு மாறியஅகவினத்தார்வள்ளல் இராமலிங்கரைஆராதித்த பெருமகன்நேதாஜிக்குத் தமிழ்மண்ணில்வீரர்களைத்திரட்டியதேசபக்தர்மதுரை மீனாட்சி ஆலயத்தில் அரிசனங்கள்பிரவேசிக்க முன்கையெடுத்தவைத்யநாதய்யருக்கு அரண்தேசப்பிரிவினையின்போதுதமிழக இசுலாமியர்நம்மோடு இருப்பர்உரக்கக்குரல் கொடுத்த நேர்மையாளர்மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டஇந்திய பாராளுமன்ற உறுப்பினர்நம்ப முடிகிறதா உங்களால்தேவருக்குச் …

>>

அழகியசிங்கர்/கண்ணாடி

கண்ணாடிகை தவறி விழுந்து விட்டது. ஆனால்அது விழுந்துகொண்டே இருக்கிறதுஎன்பதும்அது குறித்துகவனம்இருந்து கொண்டேஇருக்கிறதுஎன்பதும் உண்மை

>>

அழகியசிங்கர்/எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்

(அழகியசிங்கரின் என்பா வகை) 2.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்வேண்டுகிறேன்கண்ணை மூடிகடவுள்முன்பிறர் பொருள்மீதுஆசை வேண்டாம்இருப்பது போதும்என்மனமே 3.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்இப்புவி மீதுஅமைதி வேண்டும்மரணமில்லா வாழ்வுவாழ வேண்டும்வேண்டும் எல்லாருக்கும்எல்லாம் 4.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்உண்மைதான் ஆனால்அப்படி நிகழ்வதில்லைசிலர் எதற்கெடுத்தாலும்முணுமுணுக்கத் தவறுவதில்லைவாழ்க்கை அவர்களுக்குக்கசப்புதான் 5.எல்லோரும் நலமாகஇருக்க வேண்டும்.புவியில் நாமிருப்பதுநிச்சயம் …

>>

கலைவாணி/பி. ஆர்.கிரிஜா

கனா ஒன்றுகண்டேன் வாணிகனா ஒன்றுகண்டேன் ! காணக் கிடைக்காதபெரும் காட்சிகண் முன் விரியக்கண்டேன் ! காணுமிடமனைத்தும்கலை வாணிஉன் மோனநிலை கண்டேன் ! பேதை நான்நிலை மறந்துசொல் இழந்துநின்றேன் ! உன் மோனத்தில்எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்என் அன்னையே ! 19/09/2023

>>

அழகியசிங்கர்/ரோஜாப் பூ

கடைக்குச் சென்றேன்பழம் வாங்கபூக்கடையில் ரோஜாப்பூபார்த்தவுடன்அம்மா ஞாபகத்தில் வந்தாள்அவள் ஞாபகமாய்ரோஜாப்பூ அதிகமாய்வாங்கினேன்வீட்டிற்கு வந்தவுடன்ரோஜாப்பூவைமனைவியிடம் கொடுத்தேன்ஆனால் அம்மாவைப் பற்றி பேசவில்லை

>>

ஷம்ஸ் தப்ரிஸி கவிதை

தமிழில் : க. மோகனரங்கன் எல்லா தீர்க்கதரிசிகளும்இதுமட்டும் உபதேசித்த நல்லுரைகளின் சுருக்கம் இதுதான்; “ஒரு கண்ணாடியைநீங்களே கண்டுபிடியுங்கள்.”

>>

அதிரன்/மற்றொரு முறை

அலகில் அலகு பூட்டிஅமுதம் பரிமாறிபுணர்ந்து பூரிக்கும்புறாக்களைமாடத்தில் காணும்பொழுதெல்லாம்மற்றொரு முறைதடவிப் பார்த்துக் கொள்கிறான்நாள்காட்டியில்தான் தாய் நாட்டுக்கு திரும்பயிருக்கும்அந்த நாளை

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/புன்னகை

பொன் நகை வேண்டாம்புன்னகை போதும்!சொன்னவர் பிள்ளை வீட்டார்.புன்னகை எங்கே, தேடி அலைந்தனர்பெண் வீட்டார்.நகைக் கடை முன்னில் விளம்பரம் காட்டியது, “இங்குப் புன்னகை கிடைக்கும்.” எழுதி வைத்து இருந்தார்கள் உள்ளே“பொன் நகை வாங்கினால் எங்கள் பரிசாக புன்னகை இங்கு கிடைக்கும்”.

>>

பழக்கங்களால் வருவன/அழகியசிங்கர்

ஔவையார் (தனிப்பாடல் திரட்டு) சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்; – நித்தம் நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். ஓவியம் எழுதுவது கைப்பழக்கத்தால் சிறப்பை அடையும். சிறந்த தமிழ் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் உண்டாவதாகும். …

>>

அயோத்யா மண்டபம்/சுஜாதா

(முகநூல் பதிவு ராம் ஸ்ரீதர்) கிருஷ்ணமூர்த்தி குரலில் உற்சாகம் பொங்க போன் செய்தான்,‘‘கண்ணே கலைச்செல்வி, பாஸ்போர்ட், ஏர்டிக்கெட் எல்லாம் தயார். வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃபிளைட்டில ஷய்க்! சிங்கப்பூர் நாரிட்டா சான்ஃப்ரான்சிஸ்கோ ஆண்டர்சன் ஏர்போர்ட்டுக்கு வந்துருவான், எல்லாம் பேக் பண்ணிட்டயோல்லியோ?’’“இன்னும் திணிச்சுகிட்டே …

>>

தனிப்பாடல் திரட்டு/அழகியசிங்கர்

ஔவையார் விருந்திட வேண்டுமென்ற கணவன் பட்டபாடு கவிதை: இருந்து முகம் திருந்தி ஈரொடுபேன் வாங்கி விருந்து வந்தது என்று விளம்ப. வருந்திமிக ஆடினாள் பாடினாள் ஆடி பழமுறத்தால் சாடினால் ஓடோட தான். கருத்து : ஒருவன் தன் மனைவி அருகில் அமர்ந்தான் …

>>

ஏற்றிடு என்னையும்/சசிகலா விஸ்வநாதன்

அவ்வையை ஏற்றினாய், கைலை மலைக்கு, தும்பிக்கையாலே!; நம்பிக்கை வைத்தேன்; நானும் அதன்மேலே; என்னையும் ஏற்றிட வா; செம்பொருள் செல்வத்துடன்; சேர்த்திடு என்னையும். 18-9-2023

>>

சிந்தையில் சிறந்தவன்/சசிகலா விஸ்வநாதன்

வகைமை : அழகியசிங்கரின் என்பா வேழ முகத்தான்,தாழ வயிற்றான், அஞ்சு கரத்தான்,விஞ்சு நடையான், ஐங்கரத்தான் அவன்,ஓங்கார உருவுடைத்தான்; சிந்தையில் புகுந்திட சிறப்பு! 17-9-2023

>>

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதை

விருந்துக்கு வந்தவனைகூலிக்குப் பேசிவேலைக்கு அமர்த்தும்இந்த வாழ்க்கையோடுஇன்னும் விவாதித்துவிசனப்பட்டுக் கொண்டிராமல்ஒரு பூஞ்செடியை நட்டுஅதன் வேர்களில் என்னுயிரூற்றை பின்னி விட்டுப் போகவே விரும்புகிறேன்என்னை விட்டு!–(சம்மனசுக்காடு Sandhya Pathippagam )

>>

ப்ரான்சிஸ் க்ருபா/வாசுதேவன்

ப்ரான்சிஸ் க்ருபா உடன் நான் நெருங்கி பழகியதில்லை. நண்பர் உமா வரதராஜன் ஆசியத்துவத்தில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிக்கையில் விரிவாக அவருடைய ‘கன்னி’ நாவலைப் பற்றி எழுதினேன். சென்னையில் ஒரு இலக்கிய சந்திப்பில் என் கட்டுரையை வாசித்து பயத்துடன் என்னை அணைத்து …

>>

இரு கவிதைகள்/நாகேந்திர பாரதி

அழகியசிங்கரின் (14.09.2023) இன்றைய நவீன விருட்சம் ‘சொல் புதிது’ நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் பாரம் சுமக்கும் வேர்கள்—————————————————-—-விதைத்த போதேவிதிக்கப் பட்டது பாரம் சுமந்துபழக்கப் பட்டது பூவாய் மலர்ந்துக்காயாய் விளைந்து கனியாய்க் கனிந்ததைக்காண முடியாமல் பூமிக்கு உள்ளேயேபுதைந்து கிடப்பது வேர் முட்டிக் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்

வகைமை : அழகியசிங்கரின் என்பா 1. நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்மனம் சும்மா கேட்ட கேள்வியில்திடுக்கிட்டு விழித்த சோம்பேறித்தனம் கூறியதுசும்மா இருத்தலே சுகம் 2. நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்சும்மா இந்தப் பக்கம் வந்தேன்சும்மா சும்மா கேட்டால் பதிலேதுசிறிது சும்மா இருங்கள்

>>

புவனா சந்திரசேகரன்/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?

வகைமை : அழகியசிங்கரின் என்பா நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?தயக்கம் கைகளைக் கட்டிப் போட்டது!மயக்கம் மதியினை உறங்க வைத்தது!காலம் நாளையாவது கனியட்டும்!

>>

நாகேந்திர பாரதி /ஏன் சும்மா இருக்கிறீர்கள்

வகைமை : அழகியசிங்கர் என்பா நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்காண்பதற்கு என்ன காட்சிகளா இல்லைசொல்வதற்கு என்ன சொற்களா இல்லைஎழுதிப் பார்க்கலாமே கவிதை ——————————–

>>

தற்போதைய புகழை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

நான் தாய் மாமா பொண்ண தான் கல்யாணம் பண்ணேன். சினிமால இயக்குனர் ஆகணும்னு ஓடிட்ருந்த போது என் வருமானம் தெரியாது, எங்க வேலை பாக்குரேன்னு தெரியாது, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் நாந்தான் ! இந்த 28 வருஷ திருமண வாழ்க்கைல இந்த 7 …

>>

கிருஷ்ண லீலை-2/சஞ்சயன்

சரக்கொன்றைமரநிழலில் இன்றுஎன்ன சாகசம்புரியவந்தாய்கண்ணா?சின்னக் குழலூதித்துயர் வாங்கித்துயில் தந்தாய்..உன்னோடு விளையாடஆளில்லையென்றோகாண்டா மணிஒலித்துத்துயிலெழுப்பத்துணிந்தாய் நீ? கிருஷ்ண லீலை 3 சீடை கை முறுக்கு வெண்ணெய் தந்திடக் குழந்தையாவான்சிற்றாடை குளக்கரையில் களவாடும் காதலன் அவனேசீடனாம் பார்த்தன் வேண்டத் தேரோட்டும் சாரதி ஆவான்சீவனின் மனக்குழப்பம் தெளிவிக்கக் கீதை …

>>

கிருஷ்ண லீலை-1/மதுவந்தி

சியாமள வண்ணாகாற்றிலாடும்உன் குழல் கண்டோகாதிலாடும்இரு குழைகண்டோவியந்து விரியும்உன் விழிகண்டோபவளக்கனிஇதழ்கள் கண்டோஎனக்கு வியப்பில்லைஉன்தத்ரூப தரிசனம்எனக்களித்தபிரம்மனைஅந்த ஓவியனைஎண்ணி எண்ணிவியந்து கொண்டேஇருக்கிறேன்..

>>

என்நண்பர்ஆத்மாநாம்/கல்பனாரத்தன்

முதல் பதிப்பு : டிசம்பர் 2008பக்கங்கள் : 152விலை: ரூ 100 ஸ்டெல்லா புரூஸ் 2008 மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதியாக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அவரது உயிர் நண்பர் அழகியசிங்கர் நூலாக வெளியிட்டுள்ளார். “வேட்கையும் …

>>

கவிதை பூக்கும் தானாக/சசிகலா விஸ்வநாதன்

கவிதை வகை : அழகிய சிங்கர் என்பா(1)சான்றோர் கவி மழை பொழிய; என் போன்றோர்சொல் கற்று; சொல் தேர்ந்து;சொல் கோர்த்து; சொப்பனத்தில் பிறந்ததே கவி! கவனமுடன் சிந்திக்ககவிதை பிறக்கும்; எளிதாய்; வேண்டுவது எல்லாம் கருத்தாய் ஒரு பார்வை;ஒரு சொற்கோர்வை; கவிதை ஆக்க …

>>

சிறகா/கவிதைக்குறித்து கேள்வி – பதில்

வணக்கம் இரவு. சில சமயம் உறக்கத்தில் வார்த்தைகள் கோர்த்துக் கொண்டோ, அன்றி சிதற லாகவோ வரும். தானாக உருக்கொண்டாலோழிய செயற்கையாக வருவது கடினம். பயணங்களின் போது, மனம் வருத்தம், சந்தோஷம் கொள்ளும் போது, சில ஓவியங்களை காணும் போது. வலிய உருவாவதில்லை …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/கவிதைக் குறித்து கேள்வி – பதில்

தானாக வரும்பொழுதுமன நிறைவு ஏற்படும். இரண்டுமே உரத்துப் படித்துப் பார்ப்பேன்.சரி என்று தோன்றினால் சற்று அழகு படுத்தமுயற்சிப்பேன். எனது கவிதைகளில் சமுதாயக் சீர்திருத்தம் பற்றி எழுதியது உண்டு.

>>

பாற்கடல். 2.0/சப்தரிஷி லா.ச.ரா

வி ரு ட் ஷ ம் முப்பத்து ஆண்டுகளுக்கு மேலாக விருட்ஷம் இதழினை விடாப்பிடியாக வைராக்யத்துடன் நடத்தி வரும் அழகியசிங்கர் சிந்தாநதியை பிரசுரிக்க விரும்புவதாக கூறினார். அவர்கேட்டுக்கொண்டபடி இதற்கு அணிந்துரை எழுதியிருக்கிறேன் தேன் குடிக்க கசக்குமா என்ன?அட்டைப்படத்தின் லாசரா அதிலிருந்து நம்மைப்பார்க்கும்போதுஅதிலிருந்து …

>>

நரேந்திரர்களின் கவனித்திற்கு/ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்

மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் பலியானபோது மிகவும் அதிர்ந்து போய் இருந்தார் இந்திரா..! அந்த துக்கத்தை தாங்க முடியாமல் தவித்து புழுங்கினார்..! தன்னிடம் ஆறுதல் சொல்ல வருபவர்கள் முன்பு, ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால்கூட அவர்கள் மனம் பாதிக்கப்படும் என்று தன்னுடைய …

>>

வாழும் சாட்சிகள்/அதங்கோடு அனிஷ்குமார்

விரலசைவில்ஒரு நொடியில்கடல் கடந்தும்கதைக்க முடிகிறது. கால வேகத்தைகடக்க கூடஎதிர்காலத்தில்கைகூடலாம். நாளைகளைஇன்றே எழுதிப் பார்க்கலாம். நமக்காகசெயற்கை கரங்கள்கவிதை எழுதிக்குவிக்கும்காலத்தில்அசாத்தியங்கள்சாத்தியமாகும்அற்புத உலகின்வாழும் சாட்சிகள்நானும்நீங்களும் ஆனாலும் என்ன?புல் தானாகவே வளர்கிறது.மொட்டவிழ்ந்துபூக்கள் தானாகவேமலர்கின்றன.–

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 8/அழகியசிங்கர்

பரம ரகசியம் குவளைக் கண்ணன் என் அப்பா ஒரு சும்மாஇதுஅவர் இறந்துபல வருடங்கள் கழித்துஇப்போதுதான் தெரிந்தது அதுவும் நான் ஒரு சும்மாஎன்பது தெரிந்தபிறகு வெவ்வேறு தொழில்களில் பொருளீட்டும்நண்பர்கள் உண்டெனக்குஅவர்களின் வாழ்வுமுறை பற்றிஎனக்கு ஒன்றும் தெரியாதுபுதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள் அனைவருடனான எனதுஅனைத்துத் தொடர்பும் …

>>

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?/சுரேஷ் ராஜகோபால்

உடனே நம்மவர்கள் “முட்டாள்” என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல். சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன…? அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு …

>>

விபத்தா கவிதையா/அழகியசிங்கர்

ஒரு ஞாயிற்றுக் கிழமைகவிதை எழுத வேண்டுமென்றுநினைத்தேன்அப்போது டூ வீலர்ஓட்டிக் கொண்டுசென்று கொண்டிருந்தேன்முன்னால் சென்ற வண்டி பிரேக் போடகீழேதடுமாறி விழுந்தேன்உலகமே ஒரு வினாடிபுரியவில்லைகையில் அடிகவிதை எங்கே எழுதுவது?நல்லகாலம் கவிதைவாசிப்பவர்கள் தப்பித்தார்கள்

>>

அர்ஜுனனும்,கிருஷ்ணரும்../சுரேஷ் ராஜகோபால்

ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். “அர்ஜுனா,அது புறா தானே.?” என்று கேட்டார் கிருஷ்ணர்.” ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!” என்றான் அர்ஜுனன். சில …

>>

சந்திராயன் 3/விஜயலக்ஷ்மி கண்ணன்

இன்று ஒருத் திருநாள்வாழ்த்திப் பாடி கொண்டாட உள்ளம் விழைகிறது! நிலவைத் தொட்ட நம் நாட்டின் பெருமைப் வரும் தலைமுறைக்குகலங்கரை விளக்கு. நிலா நிலா ஓடி வாஅன்று பாடிய நாம்நிலவே நிலவேஇதோ வந்தேன் நான் இன்று. நிலவைக் காட்டி சோறு ஊட்டிய காலம் …

>>

ஒரு உண்மைக்கு உடன்பாடில்லை/அனங்கன்

்்்்் எத்தனையோ கவிகள் பாடியஇன்பநிலா….காதலர்கள் கண்டுகிறங்கியத்தங்கநிலா… களங்கமுடன் தேய்ந்து..வளர்ந்த அந்த அழகுநிலா…ஒப்புமைக்கு பெண்முகத்தைப்பெற்றநிலா… பாலையிலும்…ஆழியிலும் காய்ந்தநிலா…பரம்பரையாய்க் கதைகள் சொல்ல வந்தநிலா…. திரையிசையில் பலபாடல்களைக் கண்டநிலா…திக்கற்றோர் துன்பத்தை தின்ற நிலா… வானமதில் தொங்கின்ற வண்ணநிலா…வாழ்க்கையெங்கும் நம்முடனேவந்தநிலா…. இன்று வெறும் தரையாய் நாம் அதனை …

>>

சந்திராயன் 3/அழகியசிங்கர்

நிலாவை வைத்துபாடுவது அர்த்தமில்லைஎன்று தோன்றுகிறதுபெண்ணை நிலாவோடுதொடர்புப்படுத்தியஅர்த்தமற்ற கவிதைகள்சாரமிழந்து போய்விட்டனசந்திராயன் 3 தோன்றியபிறகுஎத்தனை அபத்தமானகவிதைகள் நிலவை வைத்து

>>

இன்று சதுரங்கமகுடத்துக்கான மோதல்/பாலு கவுண்டர்

சில நாள்களுக்கு முன்பு சர்வதேச செஸ் சம்மேளனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் உங்களுக்குப் பிடித்த செஸ் வீரர் யார் என்று பார்வையாளர்களிடம் தொகுப்பாளர் கேட்கும்போது, பெரும்பாலானவர்கள்மேக்னஸ் கார்ல்சன் என்றே கூறினார்கள். சிலர் வேறு சிலரின் …

>>

சில ரகசியங்கள்/விஜயலக்ஷ்மி கண்ணன்

நேற்று சென்றுவிட்டதுஇன்று கிடைத்தது இப்போது வரைநாளை உண்டா தெரியவில்லை. சில ரகசியங்கள் வெளி தெரியாமல் இருக்கவே நிம்மதி இறக்கும் தருணம் அறிய நேர்ந்தால் தினமும் இறப்பே. நம்மை ஈன்றவர்களைநாம் நிர்ணயிக்க வில்லை.நம்மையும் அப்படியே. கல்லை கடவுள் என்றும்,கடவுளை கல் என்றும் காட்டுகிறோம். …

>>

திண்ணை இருந்த வீடு – தஞ்சாவூர்க் கதைகள்/ஜெ.பாஸ்கரன்

புத்தக அறிமுகம் – 3. சசி எம். குமார். தஞ்சாவூர் மானோஜ்பட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தற்போது திரைப் படத்துறையில் இணை இயக்குனராய் செயலாற்றுகிறார் சசி எம்.குமார். சின்னச் சின்னக் கதைகளாக 23 கிராமீய மணம் வீசும் கதைகளின் தொகுப்புதான் …

>>

நம் மணிக் கொடி/விஜயலக்ஷ்மி கண்ணன்

கொடி பறக்குது,நம் நாட்டின் கொடி பறக்குதுமூவண்ணம் மிளிர உயரேபறக்குதே நம் மணிக் கொடி.தியாகமும்,பசுமையும்,உடன் சாந்தியும் கிட்டிடவே,உழைப்பின் சிறப்பு ஓங்கிடவும்சக்கரம் சுழலுதே. கோடி கோடி மக்கள் சுதந்திரமாகவளமுடன் வாழவும்நீதி தடுமாறாமல்,அன்பு சிறிதும் நசுங்காமல்,பாசப் பிணைப்பு கள் சிதறாமல்,உலகம் போற்ற,மனித நேயம் ஓங்கவும்நம் திரு …

>>

யானை/பி. ஆர்.கிரிஜா

அலுக்காத ஒன்று யானை ! பார்க்கப் பார்க்க திகட்டாத ஒன்று யானை! கோயிலில்கொலுவிருக்கும் கல் யானை !சாமி புறப்பாட்டில் சப்பரம் முன் பாகனுடன் யானை ! கழுத்தில் மணி. ஒலிக்க ஆடி வரும் யானை! குழந்தைகள் குதூகலிக்க நடந்து வரும் யானை!சிறியவர், …

>>

சாதி தேவையோ/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

சாதி என்பது சிறுகதை தான் அதுமீதியான பழங்கதைதான்ஆதியில் சாதியை விதைத்தவர்கள்பாதியில் மாண்டதை அறியாயோ? நேர்மைக்குச் சாதியில்லை -உடல்வேர்வைக்குச் சாதியில்லை – காதல்பார்வைக்கும் சாதியில்லை-பின் சாதிப்போர்வைக்குள் நீ மட்டும் ஏன்? அன்புக்குச் சாதியில்லை -உயர்பண்புக்குச் சாதியில்லை -செய்யும்வம்புக்கும் சாதியில்லை-பின்வீம்புக்குச் சாதிகள் ஏன்? கருத்தை …

>>

புத்தகக் குவியல்/அழகியசிங்கர்

என்னைநான் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறேன் நானும்இப்படித்தான்புத்தகக் குவியலுக்குநடுவில்வீற்றிருக்கிறேன் நான் எழுந்துநடமாடும்போது புத்தகமே நடனமாடுவதுபோல் தோன்றுகிறது.

>>

அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்/அன்புச்செல்வி சுப்புராஜூ

அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்முதுகுவலியுடன் மண்டியிட்டு இறைவனை வேண்டினேன்பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறாயாசிரித்தவாறே வரம் தந்தார்

>>

சாவி சார்../ஓவியர் அரஸ்

சாவி சார் திறமையானவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்….அதே சமயம் கோபம் வந்தால் ஒரேயடியாய் தூக்கிபோட்டுவிடுவார்….அவரிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்கமுடியாதது…அப்போது நான் பத்திரிக்கையில் முதல் அடி யெடுத்துவைத்த காலம்…சின்ன சின்ன தாக துணுக்கு ஓவியங்கள் வரைவேன்….அதை பக்கத்தில் வந்து பார்த்து ரசித்துவிட்டு …

>>

லிமரைக்கூ கவிதைகள்/நெல்லை க சோமசுந்தரி

2. எழுத்தை இயக்கும் அசைமண்ணின் மரபை மீட்டித் தருகிறதுநாட்டுப்புற பாடல் இசை 3. பேசும் குரலின் நேசம்மறக்க முடியாமல் சுழன்று நிற்கும்நெல்லை மண்ணின் வாசம்

>>

பாஷோ ஹைக்கூ இதழ்

தொகுத்தவர் : அதிரன் இன்று ருசித்த ஹைக்கூ கவிதைகள்எண் 220 கூரைக்குள் நுழையும் வெயிலைதொட்டு விளையாடுகிறதுகுட்டிப் பூனை– ஜா.பிராங்க்ளின் குமார் என்ன சொல்லி அனுப்பவீடு வந்திருக்கிறதுவிற்ற ஆடு வெயில் விலகிய பின்செடிக்கே திரும்பியதுஅதன் நிழல் அஸ்தியைக் கரைக்கப்போகிறேன்இனி கடல்தான்என் அம்மா என் …

>>

ஆடி வா ஆடி/விஜயலக்ஷ்மி கண்ணன்

ஆடி வந்தால் எல்லாம் தெய்வீகம்.ஆடி வெள்ளிக்கிழமைகள்,ஆடிப் பூரம்,ஆடிப் பெருக்குவரலட்சுமி விரதம் ,பூஜை,அலைமகளும்கலைமகளும் போட்டி போட்டுக் கொண்டு நம் இல்லம் வருவார்கள்மலைமகள் உடன் வந்துவாழ்த்திடும் அற்புதமான ஆடி.🙏🙏

>>

ஆசை வரம்/கலைச்செல்வி

முதல் பூ பூத்து விட்டதுஆசையாய் வைத்த செடி.மலர்தல் ஒரு வரம் அடுத்த பூ மலர்வதற்காககாத்திருக்க வேண்டும் நானும் செடியும். காத்திருத்தல் என்பதுஒரு நேரத்தின் நிம்மதி 3.8 2023

>>

மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி/ஷாகூல் ஹமீத்

Shahul hameed மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி, 103 வயது வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா, இனி… நினைவில் மட்டும்…. மன்னர் ஆட்சிக் காலத்தில், மன்னர் உட்பட பிரமுகர்கள் வரும்போதும், கோவில்களில் மூர்த்திகள் ஊர்வலம் வரும்போதும், வரவேற்பு கொடுக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் …

>>

எனக்குப் பிடித்த தலையங்கம்…./அழகியசிங்கர்

அக்டோபர் 1988 ஆம் ஆண்டிலிருந்து 28வது இதழுடன் ழ என்ற பத்திரிகை நின்று விட்டது. 1978 ஆம் ஆண்டு மே மாதம் கவிதை மாத ஏடு என்ற பெயரில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பில் தொடங்கப்பட்ட இதழ். ஒவ்வொரு மாதமும் சரியாக வந்திருந்தால் …

>>

மரப்பாச்சி வீரன்/அழகியசிங்கர்

நான் ஒரு மரப்பாச்சி வீரன் உங்களுக்கில்லைமனைவிக்கு ஆடாமல் அசையாமல்மனைவி செல்லுமிடம்சென்று கொண்டிருப்பேன் நில் என்றால் நிற்பேன்உட்கார் என்றால் உட்காருவேன் சில சங்கடமானஇடங்களுக்குப் போகும்போதுஎன் தூக்கம் கெடுகிறதுநிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் ஆனால்நான்தான் மரப்பாச்சி வீரனாயிற்றே?அதுவும் மனைவிசொல்படி கேட்பவன் ஆயிற்றே

>>

இரு கவிதைகள்/சுரேஷ் ராஜகோபால்

1. அழகான பொம்மைகள் வரிசையாக நின்றனபழகிய நண்பர்களாக அணிவகுத்தது சிறப்புநவராத்திரிகொலுவுக்கு பொம்மையே பிரதானம்ஓரத்துல மரப்பாச்சி பொம்மை. 2. வலுவான இடத்துல வல்லவன் இருப்பான்கொலு முடிந்தால் பொம்மைகள்பரண்மேலேஅடுத்த வருடம்தான் அதற்கு மறியாதைமரப்பாச்சி பொம்மை மட்டும் வெளியே. 23 07 2023

>>

இரு கவிதைகள்/ந.பானுமதி

ஈரமற்ற கல் கண்களில் திரளும் நீர்உன் நெஞ்சில் குருதியாகப்பாய வேண்டாம்ஆனால்நான் எதற்கெடுத்தாலும்அழுபவள் இல்லை எனஅறிந்த உன் கரங்கள்என் தோளைத் தழுவிஇருக்கலாம்,என் தோழா!கன்னங்களின் நீரை கைக்குட்டை கொண்டுஒத்தி இருக்கலாம்என் அன்பேவெம்பாலையின் கல்லைப் போல் ஈரமற்றுப் போனதில்என் மனதிலும் வடிகிறது செந்நீர்ஒரு நாள் அது …

>>

அஞ்சலட்டைக் கதைகள் 21/அழகியசிங்கர்

இது என் 21வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டரை நிமிடங்களுக்குள் முடிந்து விடுகிறது. ஏன் இப்படி? அந்த இடம் அமைதியாக இருந்தது. கேட்டிலிருந்து ஆசிரமத்தைப் பார்க்கும்போது அமைதி என்றால் அப்படியொரு அமைதி. அங்கு எல்லோரும் சந்திக்கும் பெரிய கூடத்தில் ஒருவர் …

>>