அழகியசிங்கர்/நீண்ட கவிதை

நீண்டகவிதை எழுதும்நோக்கமில்லைஎனக்கு ஒரு நீண்ட கவிதையைப்படிக்கும்போதுஎன் மனம்சஞ்சலம் அடைந்து விடும் பாதியில்நிறுத்தி விடுவேன் படித்தவரைஎந்த அர்த்தமும்கூடாமல்திரும்பவும் ஆரம்பத்திலிருந்துபடிக்க ஆரம்பிப்பேன் திரும்பவும்கவிதையை விட்டுஎங்கோபோய் விடுவேன் உங்களுக்குஒரு வேண்டுகோள்நீண்ட கவிதையைஎழுதாதீர்நிச்சயமாக நம்புங்கள்நான்படிக்க மாட்டேன் என்று

>>

ஆர் வத்ஸலா/பின் புத்தி

தபாலில் வந்தஇலக்கிய பத்திரிகையின் பக்கங்களைச் சேர்த்துகுத்தப்பட்ட ‘ஸ்டேப்ளர் பின்’ னைதன் கையில் படாமல் லாவகமாக எடுத்துகுப்பைத் தொட்டியில் போடப் போனவனை தடுத்து, அதை பழைய காகிதத்தில்சுற்றிப் போட்டாள் அவள், பின்னால்அது குப்பை அள்ளுபவரின்கையைக் குத்தாமலிருக்க 2/11/2024

>>

ஜெயமோகன்/பன்றிகளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

மேலும் சில விபரங்கள் இதோ… ஒன்று: பன்றிகள்சேற்றில் திளைக்கவில்லைஏனெனில் சேறென்றுஅவற்றிற்குத் தெரியாது. இரண்டு: பன்றிகள் அழகானவைஏனெனில்அவை ஒப்பனை செய்து கொள்வதில்லை. மூன்று: பன்றிகள் ஈனமிருகங்களல்லஏனெனில் அவைதம்மைவிட தாழ்ந்ததாய்எதைப் பற்றியும் கருதுவதில்லை. கடைசியாய்பன்றிகள் மனிதர்களின் அடிமைகளல்லஏனெனில்அவை மனிதனைச் சார்ந்திருக்கவில்லை. (நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது …

>>

கடற்கரய் மத்த விலாச அங்கதம்/ஆடி 2

என் சகல ஆட்டங்களையும்ஆடியில் இருந்தே கற்றேன்.எனக்குப் பல புதிர்முடிச்சுகளைக்கற்றுத் தந்தது இந்த ஆடிபல வித்தைகளை சொல்லித் தந்ததும் அதுதான்ஒரு கண்ணாடிச் சில்லுவைதெருவில் வைத்தபடிசூரிய ஒளிக்காக காத்திருந்த நாட்களில்என் கனவின் முதல் ஆட்டம் தொங்கியதுபல ரசாயன மாற்றங்களை அதைக் கொண்டு செய்தேன்அதுதான் என்னை …

>>

ப.மதியழகன்/பட்டாசு கனவு

எனக்கு புத்தாடைகளில்விருப்பமில்லைபட்சணங்கள் கூடஇரண்டாம்பட்சம் தான்எனக்கு தீபாவளியென்றால்வானத்தில் வெடித்துச் சிதறும்ராக்கெட்டுகள் தான்ஞாபகத்திற்கு வரும்திரும்பும் திசையெங்கும்ஒளி வெள்ளம்நட்சத்திரங்கள் மின்னிமறைவதைப் போலஊரெங்கும் கேட்கும்சற்றும் இடைவெளிவிடாதவெடிச் சத்தம்தலைக்கு எண்ணெய்வைத்த பின்புசாமி படத்தின் முன்புஅம்மா பலகாரங்கள்எடுத்து வைப்பாள்அப்பா புத்தாடைகள்எடுத்து வைப்பார்நான் பட்டாசுகளைஎடுத்து வைப்பேன்பால்யத்தில் தீபாவளியென்றால்விதவிதமாக வெடித்துச் சிதறும்பட்டாசுகள் தான்கனவில் …

>>

பி.ஆர். கிரிஜா/தீபாவளி!

தீபத் திருநாளாம் தீபாவளி!மகிழ்ச்சியாய்க் கொண்டாடும்நன்னாளாம் தீபாவளி!மகாலெட்சுமியின் அருள் வேண்டிவரிசையாய் நீயும் விளக்கேற்று!அக இருள் அகன்று புறமதில்இன்பம் என்றும் நாம் பெறுவோமே!புத்தாடை அணிந்து இனிப்பைச் சுவைத்துகூடியாடி மகிழ்வோமே!பெரியோர் சிறியோர் உ ற்றார் உறவினர் நண்பர்அனைவரும் ஒன்றாய்க்கூடிகண்ணனை வணங்கித் துதிப்போமே!நல்லதை நினைத்து தீயவை களைந்துநற்பணிகள் …

>>

விஞ்ஞானி/இன்னொரு ‘இருந்தாலும்’

இதுவரை தீபாவளியைஎட்ட நின்னு பாத்துதான்பழக்கம்.அதுலயும் சௌகரியங்கள்உண்டுபட்டு புடவை விலைக்கும்பருத்தி புடவை விலைக்கும்உள்ள வித்தியாசத்த பற்றிகவலை பட தேவையில்லை பட்டாசு கொளுத்தறபசங்களோட கூடவே ஓடதேவையில்லை பலகாரம் எப்படியும் நம்மளதேடி வந்திடும் பயப்படதேவையில்லை வாழ்த்துக்களையும்நன்றிகளையும் மாறி மாறிவரிசையா அனுப்பிகைப்பேசியில் மூழ்கி கிடக்கதேவையில்லை அந்நாள் முதல் …

>>

ரவி அல்லது /அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின்என்பா. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அசைந்தாடும் கிளைகள் உதிர்க்கிறது பூக்கள்.உள்ளத்தில் புகைகிறதுஉதிராத மனம்.மௌனத்தால்தான் சிறக்கிறதுநடுக்கடல்.*அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பகைவருக்கு இனிதாக மாறட்டும் வாழ்க்கை.பாதகருக்கு புரிதல் தோதாக சிறக்கட்டும்.விநாயகருக்கும் தும்பிக்கையற்ற முகம் கிடைக்கட்டும்.விளக்கத்தீபம் ஒளிரட்டும் யாவருக்குள்ளும். *

>>

ஏர்வாடி இராதகிருஷ்ணன் கவிதை

வந்து போகக் கூடாதாஎன்றாள்.போவதற்காக ஏன் வருவதுஎன்றேன். வந்து போய் இருக்கலாமேஎன்றாள்.வந்து போய் விட்டால் எங்கிருப்பதுஎன்றேன். நீ வரவே வேண்டாம் போஎன்று போய் விட்டாள்.

>>

அழகியசிங்கர்/இருந்தாலும்…

இப்போதுஎழுதிக் கொண்டிருக்கும்கவிதை95 வது கவிதைஇத்துடன் கவிதை எழுதுவதைநிறுத்தி விடுவேனாநிச்சயமாக இல்லைஎன் குறிக்கோள்1000 கவிதைகள் எழுதவேண்டும்ஏற்கனவே 500 கவிதைகளைப்புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன்இன்னொரு புத்தம்கொண்டுவரஇன்னும் 100 கவிதைகள்வேண்டும்நூறு கவிதைகள் எட்ட5 கவிதைகள்தேவைதேவைதேவைதேவை

>>

வினோத் பரமானந்தன்/தீபாவளி

நரகாசூரனைகொன்னதுக்குகொண்டாடுறோம்தீபாவளி ன்ணுபாட்டி சொல்ல… “கொன்னதுக்கு” என்னகொண்டாட்டம்என்ற குழப்பதுடனேகொண்டாடத் தொடங்கினேன்பால்யத்தின் தீபாவளியை … மூணு மீட்டர் துணி எடுத்துமுக்கு கடை டெய்லர் கிட்டகொடுத்துஅடுத்த சில தீபாவளிக்கும்போடுறாப்புலஅளவு குடுத்து…அதுக்காககாத்திருந்ததுஅம்புட்டு சொகம்… தைச்சு வந்த சட்டையைதினம், தினம்வச்ச கண்ணு வாங்காமஅலமாரியிலவச்சு..வச்சு..பார்த்தேனேஅதுவொரு சொகம்… சேர்த்து வச்ச காசுல..விளக்கு …

>>

விஞ்ஞானி/ மாற்றம்

அந்தஆடு மேய்க்கும் சிறுமியைஆடுகள் மலைக்காட்டுக்குள்அழைத்துக்கொண்டு போய்ஒரு மரத்தடி பாறையருகேவிட்டு விட்டு மேய செல்வதுவழக்கம்மாலை ஆடுகள் அவளைஅழைத்துக்கொண்டு வீடுதிரும்பும் வரைஅவளுக்கு அந்த பாறையில்இருக்கும் பெயர் தெரியாதஒரு சாமி சிலையே துணை இடத்தை சுத்தம் செய்துசிலையை குளிப்பாட்டிகாட்டுப் பூக்களால்அலங்கரித்து வீட்டிலிருந்துகொண்டு வந்த விபூதிகுங்குமத்தை பூசிதன் …

>>

அழகியசிங்கர்/ தீபாவளியும் அம்மாவும்

ஐம்பது ஆண்டுகள் முன்ஒரு சம்பவம் நடந்ததுஅம்மாஇறந்து விட்டாள்அப்போது தீபாவளி முடிந்திருந்ததுமழை கொட்டு கொட்டென்றுகொட்டியதுஅன்றிலிருந்துஒவ்வொரு ஆண்டும்அம்மா வருகிறாளென்றால்மழையோடுதான்வருவாள்ஆசி வழங்குவாள்அப்போதுமழை பேசும்அம்மாவும் பேசுவாள்புரியாத மொழியில்

>>

அனங்கன்/எத்தனை இல்லை

கதவைத் திறந்துவைத்தேன்காற்றுவரவில்லை….நேற்றுவந்த பறவைஇன்று காணவில்லை. அன்பைத்தேக்கி வைத்தேன்யாரும் கொள்ளவில்லை….எதிரில்வாலாட்டிய அன்பை நான்உணரவில்லை. புனிதமென்று சொல்லஎப்பரப்பு எல்லை….?புனிதர்கள் பகர்ந்த சொல்லைஒழுகிடுவார் இல்லை. தேடிவைத்த செல்வம் அமைதிதருவதில்லை….அமைதி என்றசெல்வம்வெளியில் கிடைப்பதில்லை. நிலைக்குமென்று எதுவும்நின்றுகொடுப்பதில்லை…நின்றுகொடுக்கும் தெய்வம்எந்தன் திசையில் இல்லை.♦

>>

மோகன் ஜி/தீபாவளி வானம்

வானவெளி கொண்டாடும் தீபாவளி!நரகாசுரன் வதத்தைக் கண்ட நாள்தொட்டுதீபாவளிதனைக் கொண்டாட வானம்தவறுவதேயில்லை. இங்கே நடக்கும் சகலத்துக்கும்சாட்சி பூதம் இந்த வானவெளி!இலட்சம் இலட்சமாய் அதற்குநட்சத்திர விழிகள்.எதுவுமதன் பார்வையினின்றுதப்புவதில்லை. மேகங்களைத் திரட்டியே மழையாய்தன் மகிழ்ச்சிதனைப் பொழிகிறது.சோகம் வெளிப்படுவதும் அவ்வாறே!தந்தையின் கோபத்தை தடுத்தாளும்தாய்போல்விரிவானமும் மேகக் குடைகள் விரித்தேசூரியனின் …

>>

விஞ்ஞானி/பட்டாசு

ஓடி ஓடி பட்டாசுக்களைவெடித்து மகிழும் சிறுவர்களைரசித்தபடி நின்ற நண்பர்களில் ஒருவர் சொன்னார்நாமளும் இத போல்தானசந்தோஷம் வர வரைக்கும் காத்திருக்கோம் கிடைத்ததும்அடுத்தத தேடி ஓடறோம் என்று. அடுத்தவரோநம்ம வாழ்க்கையேபட்டாசு போலத்தானேஎங்கேயோ தயாராகிஎப்படியெல்லாமோ மாறிகடைசியில் கரியா போவுதுஎன்றார் மூன்றாவது நண்பர்அமைதியாய் இருந்தார்.அவரிடம்எங்க உங்க நெனப்புஎன்று …

>>

ஹரணி/ஏனிப்படி…•••

கண்விழித்துக்காலையிலெழுந்துமாலையில் மயங்கிஇரவினில் உறங்கும்வரை காண்பவரிடம்பேசுபவரிடம்படிப்பனவற்றில்சொல்வனவற்றில்உரையாடும் சூழலில்செய்யும் தொழிலில்எனக் கண்கொத்திப்பாம்பெனக்குற்றங்களையேபொறுக்கும்ஒருசிலரைப்பார்க்கையில்கோபமோவருத்தமோபதில் கூறவோஎதுவும்தோனுவதில்லை.. ஏனிப்படி

>>

ராஜ மார்த்தாண்டன்/விமர்சனம்

எழுது எழுது என்றாய்எழுதினேன். உன் மீசையின் கம்பிரத்தைப்போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்மீசையின் வரலாறு தெரியுமா?அதன் வகைகள் அறிவாயா?மீசையைப் பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன்எழுதியசர்ரியலிசக் கள்தை படித்திருக்கிறாயா?கேள்விகளை அடுக்குகிறாய். நண்பனே!உன் கற்பனை மீசையைத் திருகிநீ கொள்ளும் பரவசம்எவ்விதம் நானறிவேன்எங்ஙனம் அதுகுறித்து எழுதுவேன். கொல்லிப்பாவை: …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/எஞ்சியவை

1ஒழுகும் பேனாதன் சித்திரத்தைத்தானே எழுதிக்கொள்கிறது—-2துக்கத்தின்சாம்பல்நீறு—-3ஆத்மாவின்காயங்கள்உன் சொற்கள்—4கடைசியில் எஞ்சியிருப்பதுஎதிரியின் சொற்களல்லநண்பர்களின் மௌனம்—-5மெல்லிய ஆம்பல்தண்டின் நாருறித்தகீற்றாகஒரு அல்குல்—6இரவில் கிசுகிசுக்காதேசொற்கள்நம்பிக்கையளித்துவிடும்—7ஓவியத்தூரிகைதீட்டாமலிருப்பதுபரிநிர்வாணம்—8மாயையைப் பற்றியார் பேசினாலும்நீ ஏன் புன்னகைக்கிறாய்?—-9கண்ணீர்த்துளிகளால்சில பக்கங்களைநிரப்பலாம்ஆனால் எல்லா பக்கங்களையும்நிரப்புவதுதகாது—-10இறந்த கவிஞர்களோடுபேசுதல் எல்லோருக்கும்வழமைஇறந்த பிறகே புகழ்தல்நம்மிடம் நிலைபெற்றுவிட்டமரபு—-11மிருகங்களையும் பறவைகளையும்உன் கவிதைகளுக்குள்வரவிட்டுவிடாதேஅவை நீ மனிதனல்லஎன்பதைச் சொல்லிவிடும்——12‘இதயபூர்வமாக’என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?அகராதியில் …

>>

பசப்பல் ராஜகோபால்/வேர்க்கும் ஜமுக்காளம்

அடிப்பதும் அணைப்பதும்கொடுப்பதும் எடுப்பதும்முடிப்பதும் தொடுப்பதும்நடிப்புனக் கென்றால்,ஜமுக்காளமா நான்?மேடை சமைத்த நாள்என்னைக் கேட்டாயா?நான் இல்லையென்றால்மேடை யாருக்குமேடைக்கு நானா?“என்னிஷ்டம்” என்றால்என்னிஷ்டம் ஏன்?கண்மூடிச் செவிபொத்திக்கட்டையாய்க் கிடப்பதற்கா?கட்டையாய்க் கிடந்தாலும்போகஸ்லைட் புழுக்கத்தில்உணர்வலை உருகிப்போய்வேர்வையாய் வழிகிறதேமூக்கைப் பொத்திக்கொள்.

>>

வே.கல்யாண்குமார்/எலியார்.!

எலியாரே.. எலியாரே..சௌக்கியமா.?எளியோரைப் போலிருப்பீர்..சௌக்கியமா.? வீட்டுக்குள்ளே பானையினைஉருட்டுவீரே..ஓடியாடி பரணிமேலேவிளையாடுவீரே.! சந்துக்குள்ளே பொந்துக்குள்ளே உருளுவீரே.!சாந்துநிறம் மின்னும் மேனி நிறத்தவரே.! ஊரையடிச்சு உலையில் போடும் பெருச்சாலிகள்உலவுகின்ற நாட்டில் பிறந்த சுண்டலியாரே! சுறண்டி பிழைத்து..நக்கித் தின்னும் கருப்புயெலிகள்சுதந்திரமாய் உலவுகின்ற நாட்டினிலே.. சுண்டலியாய் எங்கள் வீட்டின் கொள்ளைப்புறம் பிறந்தவரே.!முன்டியடித்து …

>>

ஆர்க்கே/காலத்திசையறிதல்

திரைகடல் திரிகிறேன்.தரைநிலம் அளக்கிறேன்.நிலமளித்தபூக்களனைத்தையும்வானளித்தநட்சத்திர மலர்களையும்என்எண்ணத்தின்படகில் இட்டு நிரப்பிஎன்உள்ளத்து ரோஜாவையும்உள்ளே மலர்த்தி வைத்துகாலச் சமுத்திரத்தில்கவிதையெனும்துடுப்புப்போட்டுநீ இருக்கும் இடம் நோக்கிநிறைய நிறையகுவித்து வாரேன்.நித்ய கண்மணியே!அத்தனையும் சூடிக்கொள்.ஆட்கொள்அத்தனைபூக்களையும்அதனோடுஎன்னையும்!

>>

புஷ்பா விஸ்வநாதன்/மூட்டு புதிது

நிமிர்ந்த நன்னடையும்நேர் கொண்ட பார்வையும்வளைந்த மென்னடையும்வலிகொண்ட பார்வையுமாய்மாறிப்போனபின்வயதாகிப் போனவலது முழங்கால் மூட்டை“மூட்டு புதி”தெனமாற்றி வைத்திடமூட்டறுவை சிகிச்சைக்குமதுரை வந்தேன்.அழகர், மீனாட்சிஅருளாசிகளுடன்சுற்றமும் நட்பும்வாழ்த்தொலி முழங்கிடஅறுவை சிகிச்சைஅறைக்குள் நுழைந்தேன்மயக்கம் தெளிந்துகண்விழித்து பார்த்தால்வலி வலி வலி வலிவலி வலி வலி வலிமுதுகில் ஒரு‌குழாய்மூத்திரத்துக்கொரு குழாய்ஊசி மருந்துக்கெனகையில் ஒரு …

>>

வி.வி.கலைச்செல்வி/ஈயம் பித்தளைக்கும் இல்லாத ஒன்று

பழைய பொருட்கள் வாங்குபவர்இரண்டு நாட்களாய்மூன்று முறைக்குமேல்இந்தப்பக்கமாகவந்துவிட்டு போகிறார்பாப்பூவின் அப்பா கொஞ்சம்பழைய பொருட்களைஎடுத்து பட்டியலிடுகிறார்எழுதி எழுதி பக்கம்தீர்ந்து போன நோட்டுகளைபாப்பூ பக்குவமாய்பையிலிட்டு வைத்துள்ளாள்அம்மாவும் அவளுக்குவேண்டாததை ஓரமாய்அடுக்கியிருக்கிறாள்மீதமிருப்பதுஎன் முறை தான்எல்லாப் பழையதிலிருந்தும்ஏதாவது புதியதைகண்டுகொள்கிற என்னிடம்எடுத்து வைப்பதற்கும்போடுவதற்கும் எதுவுமில்லைஎன்பது கசக்கிற உண்மை தாராபுரம்

>>

சுரேஷ் ராஜகோபால்/மழை காலம்

காலையில் ஒரு கோப்பைநல்ல தேனீர்இரவுவரை கதகதப்பானகுளிர் காக்கும் போர்வையுடன்நல்ல சங்கீதம்மின்சாரம் இருக்கும் பட்சத்தில்இல்லாத போதுமனைவி குழந்தைகளோடுசிரிப்புடன் அரட்டை.மறுபடி தேநீர்மெதுவாக பெய்யும் மழையைவேடிக்கை பார்த்தால்நலமாக நேரம் போய்விடும்

>>

மனுஷ்ய புத்திரன்/நாம் நிறைய உண்டுவிட்டோம்

பேய் மழையில்தெருவில் யாருமில்லைபூனைகள், பறவைகள்எங்கோ பதுங்கிக் கொண்டனஅவ்வளவு மழையில்ஸ்விகி ஆள் ஒருவரும்ஸொமோட்டோ ஆள் ஒருவரும்சரியான அட்ரஸ் கேட்டுபோன் செய்துகொண்டிருக்கிறார்கள்மறுமுனையில் ஆர்டர் செய்தவர்கள்போனை எடுக்க மறுக்கிறார்கள்மின்னல் அவர்கள் தலைக்குமேல் வெட்டுகிறதுஇடி அவர்கள் தலைக்குமேல் முழங்குறதுஅவர்கள் பெட்டியில் இருப்பதுஒரு வறுத்த கோழியாக இருக்கலாம்ஒரு மினி …

>>

விஞ்ஞானி/பனிப்பாறை

அவன்மனைவி மக்கள் ஒதுங்கிடஅக்கம் பக்கம் ஒதுக்கிடதனியாகி போனதனியறை வாசி. இருக்கையில சாய்ந்து இருந்தவனை நிமிரசெய்ததுதொலைவில் கேட்டவெடிகுண்டு சத்தம் இரண்டாவது சத்தமும்மக்களின் ஓலமும்அவனை எழ வைத்தது கதவை ஒருக்களித்துதிறந்து கூட்டமாய் ஒடும்ஊராரை பார்க்கையில்மீண்டும் கேட்டதுகுண்டு வெடிக்கும் ஓசை. சாவுக்கு பயந்த ஓட்டம்தனக்கும் அதற்கும்எந்த …

>>

அனங்கன்/புனிதநூல்கள் ஒன்றும் புரிந்துகொள்வதற்கில்லை

இரண்டு தேவதூதர்களும்திகைத்துநிற்கிறார்கள்.அவர்களது போதனைகளைவிண்ணைக்கிழித்துச்செல்லும்அனங்கன்/ஏவுகணைகள் கேலிக்குள்ளாக்குகின்றன. பாவங்களுக்கு மனிதன் பயப்படவில்லை….உயிர்தெழுந்தாலும் ஒன்றும்ஆகிவிடப்போவதில்லை. புனிதநூல்கள் அனுதினமும்வாசிக்கப்பட்டாலும்….அதன்உண்மைத்தன்மைவிளங்கிக்கொள்ளப்படாமலேஇன்றுவரை இருக்கிறது. ஆலயங்களை ஆயுதங்கள்ஒருபோதும் வணங்கிச்செல்வதில்லை. தனிமனிதர்களின் ஆணவம்தலைமுறைகளைப் பொசுக்குகிறது. மதம் மனிதர்களை தின்றுசெரிக்கும் விலங்காக இருக்கிறது. காரணம் அறியாது உயிர்விடும்மக்களுக்காக யாரும் கண்ணீர்சிந்தப்போவதில்லை. உங்களுக்கு ஒன்றும் நடக்காதவரையில்உள்ளூர்ச்செய்திகளோடு…உலகச்செய்தியாய் …

>>

அழகியசிங்கர்/கண் சிமிட்டல்

நான்ரொம்பப் பெரியவன்ஆனபிறகுகாதலைப் பற்றிகவிதை எழுதுவதைநிறுத்திக் கொண்டேன் என்னிடம்அன்பாக இருக்கஎன் சுற்றமிருக்கிறது நலம் விசாரிக்கநட்பு வட்டமிருக்கிறது யாரும் இல்லாவிட்டால் கூடதெரு முனையில்இருக்கும்அனுமார் கருணை மிகுந்தமுக பாவனையுடன்என்னை ஆசீர்வாதம் செய்வார்ஒவ்வொருநாளும்கண் சிமிட்டலுடன்பார்த்தபடியேநடைப் பயிற்சிக்குப்போவேன்

>>

அதிரன்/இணைப்பு

நெடுஞ்சாலையில்பெரும் விபத்து என்றுதடம் மாறியது பயணம்ஒரு கிராமத்தின் வழியே…. ஒலிப்பான் சத்ததிற்குதலை தூக்கி கவனிக்கும்புல் தேடும் பசுக்கள். “எத்தனை காலம்தான்ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “என்ற பழைய பாடலைமுழங்கும்ஆளில்லா டீ கடை ஒன்று வறண்ட நிலத்துசோளக் கொல்லை பொம்மையில்கூடு கட்டிகுடும்பம் நடத்தும்மைனாக்கள் எல்லை …

>>

பி. ஆர். கிரிஜா/இயல்பாய் இரு !

மந்திர தந்திரம் வேண்டாம்ஆடம்பர மாளிகை வேண்டாம்சொற் புகழ்ச்சி வேண்டாம்வேடிக்கை காட்டும்வித்தைகள் வேண்டாம்எதிர்பார்க்கும் மனம் வேண்டாம்தன்னலம் கருதும் தோழமை வேண்டாம்தன்னடக்கம் இலா பண்பு வேண்டாம்அன்பில்லா உறவு வேண்டாம்என்றும் இயல்பாய் இருக்கும்பண்பதனை எப்போதுஎனக்களிப்பாய்பரந்தாமா ? 12/10/2024

>>

வே.கல்யாண்குமார்/காண்பது கவிதையில்

கவிஞன் யானோர்சின்னக் குழந்தை.!கலைமகள் நீயோ..அன்னை வடிவம்.!உன்னைத் தெரியும்உலகை அறியேன்..இந்நாள் வரைக்கும்எல்லாம் நீயே.! எழுத்தில் பறப்பேன் !கவியில் மிதப்பேன் !எப்படி சேர்ப்பது..என்பதை யறியேன்!வரவும் செலவும்..உன்னருள் அம்மா!வரமாய்.. தமிழைத்தந்திடு போதும்.! காண்பது கவிதையில்எழதுதல் என்வேலை..எப்போது பசிக்குமோ..ஆற்றுதல் உன்கடன்.!பைகளில் புத்தகம்கைகளில் எழுதுகோல்!உய்வது உன்னருள்..உதவுதல் உன்கடன்.! விழித்தால் …

>>

பி. ஆர்.கிரிஜா/கலைவாணி !

கனா ஒன்றுகண்டேன் வாணிகனா ஒன்றுகண்டேன் ! காணக் கிடைக்காதபெரும் காட்சிகண் முன் விரியக்கண்டேன் ! காணுமிடமனைத்தும்கலை வாணிஉன் மோனநிலை கண்டேன் ! பேதை நான்நிலை மறந்துசொல் இழந்துநின்றேன் ! உன் மோனத்தில்எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்என் அன்னையே ! 19/09/2023

>>

வே.கல்யாண்குமார்/கலைமகள் நீயோ..

கவிஞன் யானோர்சின்னக் குழந்தை.!கலைமகள் நீயோ..அன்னை வடிவம்.!உன்னைத் தெரியும்உலகை அறியேன்..இந்நாள் வரைக்கும்எல்லாம் நீயே.! எழுத்தில் பறப்பேன் !கவியில் மிதப்பேன் !எப்படி சேர்ப்பது..என்பதை யறியேன்!வரவும் செலவும்..உன்னருள் அம்மா!வரமாய்.. தமிழைத்தந்திடு போதும்.! காண்பது கவிதையில்எழதுதல் என்வேலை..எப்போது பசிக்குமோ..ஆற்றுதல் உன்கடன்.!பைகளில் புத்தகம்கைகளில் எழுதுகோல்!உய்வது உன்னருள்..உதவுதல் உன்கடன்.! விழித்தால் …

>>

வே.கல்யாண் குமார்/டாட்டா..டாட்டா.. உனக்கு டாட்டா.!

கலங்கின கண்கள்! கடவுளுடன்இன்று கலந்திடச் சென்றீர்..டாட்டா! கண்ணீரோடேகவிதையில் சொன்னேன் டாட்டா! பாட்டா தொடங்கி நாட்டில் தொழில்வளம்..ஊசியில் தொடங்கி உலைக்கலம் வரையில்..இரும்பைக் காய்ச்சி.. உருக்கி உலகினில்..ஊருக்கு உழைத்தீர்!பிரியாவிடை பெற்றீர் டாட்டா!பேசவொரு வார்த்தையேது.. டாட்டா! பல்தொழில் வித்தகரே..பண்பாட்டுச் சித்திரமே!தொல்பொருள் யாவும்தொழிற்ச்சாலை தோறும்நல்மனதோடு நாளும் உருவாக்கி..நாட்டுக்கு …

>>

அனங்கன்/இரத்தன் டாடாவே!

தேசத்தின் விடுதலைக்குப்பின்தொழில்மயம் உன்னால் உன்னதமானது. அறத்திற்கும் …தரத்திற்கும்உன்மேல் நம்பிக்கையிருந்தது. உனக்குப்பின்னால் வந்தவர்கள்…பணத்தால் உன்னை முந்தியிருக்கலாம்பண்பில் நீ தான் முதலென்றுபாரதம் அறியும். தொட்டதுறையில் எல்லாம்…கொடிகட்டிப்பறந்தாய் உந்தன்தொழில் நேர்மையால். ஆடம்பரத்தில்உன்னை அறிந்தவர்கள் இல்லை…நீ கொடுத்த அறம் உன்னை முன்நிறுத்தி நிற்கிறது. போய்வா தொழில் இமயமே!இமயம் …

>>

செ.புனிதஜோதி/டா(ட்)டா

எதனையோ சொல்ல வந்துஉங்களிடத்தில்சொல்ல முடியாமல்வெளியேறுகிறதுசொற்கள் தன் நிழலைப்பார்த்துதானே குரைக்கும்உயிரியைப்போலசொற்கள்சொற்களைப்பார்த்துதிட்டிக்கொள்கிறதுகோழையென. அந்தப் பரிதாவப்பட்டசொல் உயிரியையும்கைவிட முடியாமல்இந்தக் குடுவைக்குள்நிரப்பிக்கொண்டுதிரும்பிச்செல்கிறேன் குருதி ஓடுவதைப்போல்சொற்களும் ஓடுகின்றனஒருநாள்சுட்டெறிக்கும் வேளையில்வெளியேறலாம். பகல் சுட்டெறித்த சொற்களைஅந்தியில் சுட்டிக்காட்டும் வானம்அதன்பின்என்ன பெற்றுவிடுகிறது பெரிதாய்?இருளைத்தவிர. ஒன்று புரிந்துகொள்ளுங்கள்சொற்களை வீசத்தெரியாதவர்கள்கோழைகளல்லஎதிர்காலத்தை கணிக்கத்தெரிந்தவர்கள்.

>>

மீ. விசுவநாதன் /”பாரதரத்னா ரத்தன் டாடா”

ஆயிரமாய் விழுது கொண்டஆலமரம் விழுந்த தம்மாதாய்மண்ணைத் தொழுத பிள்ளைதன்னுயிரை விட்ட தம்மாநோயிலாத தொழில் ஒன்றேநோன்பாகக் கொண்ட வர்க்குஓய்வுதர வேண்டு மென்றுஉடன்தெய்வம் அழைத்த தம்மா ! தொழிற்சாலை தான வர்க்குத்தொண்டாற்றும் கோவி லென்றுவிழிபோல உழைப்போர் தன்னைதெய்வமெனப் போற்றி வந்தார்!பழியொன்றும் கொண்டார் இல்லைபாருக்கே வெளிச்சம் …

>>

அழகியசிங்கர்/ரத்தன் டாடா

ரத்தன் டாடா மறைந்தார்ஆனால்அவர் புகழ் மறையாதுஅவர் தயாரித்தநானோ கார்மறையாதுஅவர் என் கவனத்திற்குவந்தது அந்தக் கார் மூலம்தான்இபாபோதும்வைத்திருக்கிறேன்ஆனால்டிரைவர்தான் ஓட்டுகிறான்காரை

>>

பிரான்சிஸ் கிருபா/கைவிடல் படலம்

முதலில்அண்ணன்கள் கைவிட்டார்கள்.பிறகுகாதலிகள் கைவிட்டார்கள்.முடிவில்தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.இன்னும் தொடர்ந்ததுகைவிடல் படலம்.இறுதியாக அவனைஅவனே கைவிட்டான்.அதற்குப் பிறகுதான்நிகழ்ந்தது அற்புதம். –

>>

நீல பத்மநாபன்/தூக்கம்

ஜனனியின் கருப்பையில்மார்பின் கதகதப்பில்கயிறு நுனி தூளியில்கிரீச்சிடும் தொட்டிலில்தந்தையின் அரவணைப்பில்கோரைப் புல் பாயில்சூரலிழைக் கட்டிலில்எதிர்பாலின் கிளுகிளுப்பில்வெல்வெட் மெத்தையில்சேய்களின் ஸ்பரிசத்தில்கோரைப்புல் பாயில்கட்டாந் தரையில்நா லுபே ர்தோள் தாங்கும்பச்சை மூங்கில் பாடையில்இடுகாட்டு வரட்டியில்உய்விக்கும் நெருப்பில்ஆறடி மண்ணில்அந்தரீஷ வெளியில் 1966

>>

நீல பத்மநாபன்/நெருப்புக் குச்சி

உருண்ட முனையில்கந்தகச் செழுமைகுருதிச் செம்மை பரந்த பரப்பில்ரஸாயனக் கலவைசிமிழின் சீற்றம் அழுந்தி ஆழ்கையில்அழிக்கும் செந்தீஆக்கும் வெண்தீ எரிந்துஅடங்கையில்புகையிழை, கரித்துகள்கள்நூலிழை, உயிர் லட்சங்கள் 1967

>>

அழகியசிங்கர்/மகள் வீட்டில் கொலு

இன்றுமதியம் மகள் வீட்டில்நன்றாகத் தூங்கினேன் எழுந்தவுடன்கூட்டத்தில் வீற்றிருந்தகொலுவைப் பார்த்தேன் ஏனோஇங்கேயும் காந்தி இல்லை ஒரு நாவலைப் படித்துமுடிக்கும்நிலையில் இருந்தேன் நாவல் முடியும் தறுவாயில்நாவல் சோகமாக இருந்தது கொலுவைப் பார்த்தேன்மகள் உற்சாகமாகஇருந்தாள் சுண்டல் சாப்பிட்டேன்

>>

அதிரன்/பழி

தரிசித்துக்கொண்டிருந்தஅம்மாவின்கையை உதறிகல்த் தூண் ஒன்றை சுற்றிச் சுற்றிவிளையாடுகையில்எதிர்த்த தூணில் கண்பட்டஇராவணன் சிலையைசிறிது நேரம் உற்றுப் பார்த்தவள்அதன் அருகில் சென்றுநேருக்கு நேர் நின்று கொண்டுதனது இடது கையால் அவனதுபத்தாவது தலையும்வலது கையால் முதல் தலையும்அழுத்திப் பிடித்துமுகத்தின் அருகில் சென்றுபே….. பே ….பே….. என்று …

>>

விஞ்ஞானி/வாசம் வீசும் காற்று

மலர்ந்த செண்பகப்பூவைகண்டு காதலுற்றது காற்றுமுத்தமிட முனைகையில்ஒடிந்து விழுந்தது பூ பூ விழுந்ததில் அழகானதுஅந்த கருங்கல் தரை.காண பொறுக்காத காற்றுபாய்ந்தது அளளிக்கொள்ள. குறுக்கே வந்த சின்ன பெண்பூவை எடுத்து முகர்ந்தாள்முகம் மலர தலையில்வைத்துக்கொண்டாள் சின்ன பெண்ணின்மகிழ்வை கண்ட காற்றுமனமிளகி பிள்ளையிடம்பூவை விட்டு விட்டுமணத்தை …

>>

சசிகலா விஸ்வநாதன் /பொம்மை கொலு

நவராத்திரி கவிதை வருடம் தோறும் பொம்மை மருத்துவம்தப்பாமல் செய்வார் என் பாட்டியார்லக்ஷ்மியின் மேல் வலது கரம்,சிவகாமியின், மேல்இடது கரமாய் பரிமளிக்கும் கேலிக் கூத்து இவ்வருடமும்கௌதம புத்தர் அதைகனிவுடன் மறைப்பார் கல்யாண செட்டில்பெண்ணின் தாயாரில்லை;பரவாயில்லை; கல்யாணப் பெண் இருக்கிறாள். செட்டியார் தான் வழக்கம் …

>>

மீ. விசுவநாதன்/ “கிளிகள் கேட்ட மனித வரம்”

அந்தக் கோவிலின் கோபுரத்தில்அழகாய் இரண்டு பசுங்கிளிகள்நந்த வனத்திடைப் பூப்பறித்துநாதன் நம்பி தலைசூட்டி“இந்தப் பிறப்பினை நலம்செய்தாய்இனியோர் பிறப்பில் மனிதகுலம்வந்து பிறந்திட அருள்செய்யும்”வரத்தைக் கேட்டு நின்றவுடன் “உனக்கேன் இப்படி ஆசையென”உடனே கடவுள் கேட்கின்றான் !“எனக்காம் பலனிதைக் கேட்கவில்லைஇனிய தமிழிலே கவிசெய்துஉனக்கே மாலைகள் சூட்டிடுவேன்உலகம் உய்யத் …

>>

ரவி அல்லது /புறப் பாசாங்குகள்

வெகு சீக்கிரமாகவிடிந்து விடுகிறதுஎப்பொழுதும்.வெகு சீக்கிரமாகவிடியவே மறுக்கிறதுஎப்பொழுதாவது.போர்த்திக்கொண்டபோர்வையின்பொருட்டாகவேஅமைகிறதுதூக்கமும்விழிப்பும்எப்பொழுதும்நேரத்தைநொந்த படி.மற்றபடிகொசுவைப்போன்றகொசுறுக் காரணங்களுக்கும்இருக்கத்தான்செய்கிறதுதன்னை நோக்கிஒரு பொழுதும்திரும்பிடாதபடிபாசாங்கில்பார்த்துக் கொள்வதற்கு.

>>

மீ. விசுவநாதன்/”பராசக்தி வடிவம்தான் எல்லாம்”

பராசக்தி வடிவம்தான் பாரில் எல்லாம்பக்குவமாய் அதுபுரிய வடிவம் கண்டார்!நிராதரவாய் உணர்கின்ற உள்ளத் திற்குநிறைபலத்தைக் கொண்டுவர ஆன்ம சக்திவராததுபோல் வந்ததுதான் மூன்று சக்தி!மாகாளி, இலக்குமியும், வாணி என்றேமகாசக்தி தோற்றமுடன் கொலுவாய் நின்றுவரந்தரவே நவராத்ரி நாளில் வந்தார் ! படிப்படியாய் முன்னேறி வாழ்வில் ஒங்கபடியமைத்து …

>>

சசிகலா விஸ்வநாதன்/கொலு

கொலு வைக்க ஆசைதான்.வேலை கொஞ்சம் மலைப்புதான்.காலை அலுவல் போகணும்.மாலை சுண்டல் செய்யணும்.இதொன்றும் பெரிய வேலையில்லை‌கூப்பிட்டவர் இல்லம் செல்லணும்.நாலு பேர் பார்க்க,நல்லதாய் நான் உடுத்தணும்.நாளை வீட்டு அலுவல்அலுவலக அலுவல்அத்தனையும் மனதில் ஓடசிந்தனைகளும் சவால்களும் முந்தி நிற்கமுறுவல் காட்டிஇன்முகத்துடன் பேசணும்வீடு வந்து சேரஅடுப்படி வேலைகள்கடுப்படிக்க …

>>

அழகியசிங்கர்/கொலு

ஒவ்வொரு குடும்பமாய்நேரில் பார்த்துக்கூப்பிடுகிறாள்எங்கள் வீட்டில் கொலுஎன்று வாருங்கள் என்று யாரும் உடனே வருவதில்லை எல்லோருக்கும்சிந்தனைகள்தான்அதிகமாக இருக்கின்றன யாரும் கொலு பார்க்கஎங்கள் வீட்டிற்குவரவில்லை தூங்கப் போகும்போதுஇன்று யாரும் வரவில்லைஎன்று வருத்தப் படுகிறாள் நானும்வருத்தப் படுகிறேன்கவிதைப் புத்தகம் கேட்டுஎன்னிடம் யாரும்வருவதே இல்லை என்று

>>

ம.சக்திவேலாயுதம்/மரப்பாச்சி பொம்மைகளாய்

அம்மா வாங்கி வைத்தநளினமானகமகம சந்தன வாடை சுமந்தமரப்பாச்சி பொம்மையொன்றைநெஞ்சோடிருத்திஅம்மையை நினைக்கும்மகனொருத்தானநான் புரட்டாசி மாசத்தில்மனதில் அடுக்குகிறேன்கொலு ஒன்றை..ஐந்தே படிகளாக!ஒவ்வொரு படியிலும்ஒவ்வொரு படிப்பினைகள்…முதற்படியில்தெய்வீக இருப்பாய்தெளிந்தோடும் காட்சிகள்..இரண்டாம் படியில்தேரோட்டம் சப்பரமெனஇறை வீதி உலாக்கள்..மூன்றாம் படியில்மரங்கள் பூங்காக்களெனஅசையாத மனங்கள்..நான்காம் படியில்விலங்குகள் பறவைகளெனஆர்ப்பரிக்கா கூட்டங்கள்..ஐந்தாம் படியில்மரப்பாச்சி பொம்மைகளாய்நானும் அவளும்..இடையில் …

>>

விஞ்ஞானி/பிள்ளைகளின் கொலு

அம்மா பூ விற்கும்மரப்பலகை மேடையைஅடியில் போட்டனர் நல்ல துணி வைக்கும்ட்ரங்க் பெட்டி அடுத்தபடியானது சிறிய கல்லா மரப்பெட்டிமேல் தட்டாய் அமர்ந்துக்கொண்டது அப்பாவின் வேட்டியால்மூடி கொலுப்படியைதயார் செய்தனர். அம்மா வேலை செய்யும்வீடுகளிலிருந்து வாங்கிவந்த சிதிலமானமண்பொம்மைகளுக்குஅக்கா மருத்துவச்சிஆனாள். இலவசமாய் கிடைக்கும்களிமண் புல் செடிகள்இத்யாதியுடன் கவனமாய்கொலுவை …

>>

ஷண்முக சுப்பையா/தாலாட்டு

யாரும் அடிக்காமல்நீ ஏன் அழுகின்றாய்!நீ பிறக்காமலிருக்கநான் முயன்றேன்என்ற கறுப்பாலோ?காரணமில்லாமல்நீ ஏன் சிரிக்கின்றாய்?எனை ஏமாற்றிநீ பிறந்து விட்டாய்என்ற களிப்பாலோ!

>>

வே.கல்யாண்குமார்/கொலு பொம்மை!

வீட்டுக்கு வீடு சென்றேபாட்டுப் பாடுவோம்!வீதிக்கு வீதிசென்றேசுண்டல் வாங்குவோம்! கூட்டுக்குள் ஒன்றுகூடிபறவைகளாகுவோம்!நாட்டுக்கு நவராத்திரிகொண்டாடுவோம்! ஏட்டுக்கு அதிபதியைசரஸ்வதியை போற்றிஇயந்திர வடிவானஇலக்குமியை வணங்கி சக்தி சிவம் பெருமாளைசித்தி விநாயகரை..முத்துத் தமிழ் கடவுள்முருகனையே துதிப்பாம்! செட்டியார் பொம்மை..சிங்கப்பூரு பொம்மை..யானை பூனை குரங்குநாய்கள் பொம்மை பாரு! மேளக்காரர் நாதஸ்வரம்குடுகுடுப்பைக் …

>>

மா. காளிதாஸ்/பழைய கோயில் யானை

1. கோயில் சங்கிலியின் கட்டறுத்துஓடிய யானைவனத்தின் நுழைவாயிலில் நின்றுதிரும்பிப் பார்த்தது.ஒரு கவள உருண்டையைப் போலநகரத்தின் வாயில்நுழைந்து கொண்டிருந்தது வனம். 2. கழுத்துமணி ஒலிக்கமீள வனம் புகுந்த கோயில் யானைஆற்றில் இறங்கி அலசியது மேனியை.மூக்கைத் துளைத்த சூட வாசனைதாங்க மாட்டாமல்ஓலமிட்டுக் கரைந்தன காட்டு …

>>

எஸ் வி வேணுகோபாலன்/கழித்துக் கட்டுதல்

வெகு நேரம்பேசியும்பேரம் படியாமல்இரண்டாவது நபரும்அகன்று போனபின்எங்கிருந்தோ வந்தமூன்றாமவர்பேச விடாதுவேகப் படுத்திஅவர்சொன்ன பேரத்திற்குப் படிய வைத்துஆட்களைக்கொண்டு வந்துஇறக்கி விட்டார்அதைவிட வேகமாக அடுத்த வீடுபின் வீடுஅக்கம் பக்கம்போய்ச் சொல்லி வந்தாயிற்று அதற்குள்ஓசை கேட்கத் தொடங்கி விட்டதுரம்பம் வைத்து அறுக்கும் ஓசைகயிற்றைக் கட்டிஇழுக்கும் ஓசைகனத்த கிளைகளில்சிணுங்கிக் …

>>

ரவி அல்லது/ஆகர்ச மிளிர்வு

கோவித்துக்கொண்டு போனஎதுவும் வரவே இல்லை.வருகின்ற எதுவும்இணக்கமாக இல்லை.இப்படியானஊசலாட்டத்தில்வார்த்தையற்றுஓய்ந்து போனஆயாசதருணத்தைமௌனமெனமட்டும்சொல்லிவிட முடியாது.*-ரவி அல்லது.

>>

மீ. விசுவநாதன்/”கொலுபாக்க வாங்கோ”

கொலுபாக்க வாங்கோ – எங்ககொலுபாக்க வாங்கோ கருவண்ண மேக ராமன்தருமத்தைக் காக்க வேண்டிபருவத்தில் காடு போன …. (கொலுபாக்க வாங்கோ) தாய்தந்தை வார்த்தை ஏற்றுவாய்வார்த்தை கோபம் இன்றிபோய்வந்த கதையைச் சொல்லும் ..(கொலுபாக்க வாங்கோ) நம்பிவந்த உயிரை எல்லாம்தம்பியாக ஏற்றுக் கொண்டஎம்பிரானின் பண்பைக் …

>>

செ.புனிதஜோதி/இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்

இந்த உலகம் பூங்காவனமாய்இருந்தபோதுநம் உடலும் பூ போல் இருந்திருக்குமா ?அம்மா என்கின்றான்வயிற்றில் புற்று ஏற்பட்ட பையன் . அவளுக்கு என்ன சொல்வதென்றேதெரியவில்லை ?கருப்பையில்பொத்தி வளர்த்த அத்தனை ஈரத்தோடுஇறுக்கி அணைத்துக் கொள்கிறாள். கணமேறி அவன் உடல்இப்போது கொஞ்சம்பூப்போல் மாறியிருக்கும்.

>>

வே.கல்யாண்குமார்/கொடிகாத்தக் குமரன்!

அடி..அடி..அடி… என்று அடிக் கொடுத்த போதும்பிடி..பிடி..பிடி.. என்றுகொடியைப் பிடித்த குமரன்! தடி..தடி..தடி.. அங்கேதலைவில் அடித்தப் போதும்..தலைக் கொடுத்து விடுதலைக்கு தனைக் கொடுத்தக் குமரன்! புடி..புடி..புடி..என்று விரட்டி வந்தபோதும்..கொடிப் பிடித்தே.. உயிர் கொடுத்த விடுதலையின் வீரன்! ஒடி..ஒடி..ஒடி..என்றுகையை ஒடித்தப் போதும்.. விடாமலே கொடியைப் …

>>

வானவில் கே.ரவி/கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்

பொம்மை பொம்மையாக வந்து புன்னகைப்பாளேதன்னையே விதவிதமாய்அடுக்கி வைப்பாளே – எங்கும்அவளிருப்பாளே நன்மை தீமை போர்நடத்திவெற்றி கொள்வாளேஉண்மை என்ற சுடராகஒளிதருவாளே – கொஞ்சம்ஒளிந்து கொள்வாளே கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்பட்டாம்பூச்சி போலத்தான்சிறகடிப்பாள் சிணுங்கிடுவாள்பாவாடைச் சட்டையுடன்ரெட்டைஜடைப் பின்னலுடன்பக்கத்து வீட்டுப் பெண்ணாகவந்தழைத்திடுவாள் – சுண்டல்தந்தனுப்பிடுவாள்கோலாகலமாக அவள்கொலுவிருப்பாளே …

>>

ம.சக்திவேலாயுதம்/இந்த கண்ணாடி உலகினில்

ஆக்கலைஅளித்தலைஅம்மா பார்த்துக்கொள்கிறார்..காத்தலைவகுத்தலைஅப்பா பார்த்துக்கொள்கிறார்..மறைத்தலைஅருளலைஅவள் பார்த்துக் கொள்கிறாள்..இருத்தலைஇல்லாமல்நான் பார்த்துக்கொள்கிறேன்..இந்த கண்ணாடி உலகினில்பிரதிபலிக்கும்பிரதிபலிக்காதஎல்லாவற்றையும்நாங்கள் நால்வரும்பார்த்துக் கொள்கிறோம்..ஏனோ எங்களைத் தவிர!

>>

சங்கரன்/இது சின்னக் கொலு!

இது சின்னக் கொலு!சிங்காரக் கொலு!குட்டி வைத்தகுதூகலக் கொலு! பிள்ளையார் சிவன்பெருமாள் புகழ்பாடும் ப்ரமாதக் கொலு! அலங்கார விளக்கோடுஅற்புதக் கொலு! சிங்கம் ரியாவின்சிங்காரக் கொலு! ஒன்பது இரவோடுஒளிரட்டும் வாழ்வே!

>>

நாகேந்திர பாரதி/நம்பிக்கை

வண்ணப் பூக்கள் எல்லாம்வாசம் வீசுவ தில்லை வாசம் வீசும் பூவிலும்விஷத்தின் தன்மை உண்டு புறத்தில் சிரிப்பவர் எல்லாம்அகத்தில் மகிழ்பவர் அல்லர் ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்அடிகள் சறுக்குவ தில்லை நம்பிக் கெட்டவரும் உண்டுநம்பாமல் கெட்டவரும் உண்டு –

>>

அழகியசிங்கர்/எங்கள் வீட்டுக் கொலு

நான்விரும்பும் ஜே.கிருஷ்ணமூர்த்திரமணர்அரவிந்தர்காந்தி பொம்மைகள்எதுவுமே இல்லை பிள்ளையார்பத்து இடத்தில் இருக்கிறார்மரப்பாச்சி பொம்மைகள்செட்டியார் பொம்மைகள்இருக்கின்றன

>>

தங்கேஸ்/சொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லை

விளையாட்டுப் போலஒடுகிறது பொழுதுசோழிகளை உருட்டுபவன்யார் என்றே தெரியவில்லை நிலவின் மீதுதவளை குதிக்கதவளையைப் பிடித்துநீர்பாம்பு விழுங்கஇரண்டையும் கபளீகரம்செய்கிறது இரவு தொடரும் விளையாட்டைவேடிக்கை பார்க்கும் குளத்திற்குசொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லைஒரு அலகிலா விளையாட்டின்சாட்சி என்பதை தவிர

>>

மீ. விசுவநாதன்/”புதுப்புது பொம்மைகள் பாருங்க”

புதுப்புது பொம்மைகள் பாருங்க – இதில்பொலியும் கலைநயம் ரசியுங்கஅதுக்கது துனையினைக் காணுங்க – முகம்அன்பில் சிரிப்பதை உணருங்க மைனா குருவியும் கிளி,அணிலும் – கருமைபோல் காக்கையும் இருக்குங்கசைனா பொம்மையே வேண்டாங்க – நம்மசெந்தூர் முருகன வாங்குங்க உயர்ந்த தியாகியின் உருவமுங்க – …

>>

வி.வி. கலைச்செல்வி /சொற்கள் விற்பனைக்கு

அவனிடம் நூறு வாழ்த்துச் சொற்கள் இருந்தனஎனக்கு ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்ததுஎல்லா வாழ்த்துச் சொற்களும் இங்கிதம் தெரிந்தவைஇடத்திற்கு தகுந்தது போல் தன்னை உருமாற்றிக் கொள்பவை.எல்லோர் மனதையும் குளிரவைப்பவை .இத்தனை வாழ்த்துச் சொற்களை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் என்றேன்.தட்டேந்தும் போது விழுகிற …

>>

ப.மதியழகன்/காந்தியம்

எங்கே போகிறதுஎன் தேசம்காந்தியின் கொள்கைகள்காலாவதியாகிவிட்டனவருடத்துக்கு ஒருமுறைமட்டுமே அவரது பெயர்ஊடகங்களில் அடிபடுகிறதுஅப்படி ஒரு தலைவன்இருந்தான் என்பதேதெரியாமல் போய்விடுமோஅடுத்த தலைமுறையினருக்குஇன்றைய வன்முறை மிகுந்தஉலகத்தில்அகிம்சையின் மேல்நம்பிக்கை வைப்பதுகேலிக்குரியதாகிவிட்டதுபிரிட்டிஷார் அவரைஒரு போராளியாகப் பார்த்தனர்வேற்று மதத்தினர் அவரைஒரு இந்துவாகப் பாரத்தனர்வேற்று நாட்டினர் அவரைஒரு இந்தியனாகப் பார்த்தனர்உயிர் பிரியும் வரையாரும் …

>>

அழகியசிங்கர்/காந்தி

கற்பனைக்கூட செய்யமுடியவில்லை/இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று எங்கள் வீட்டுக்கொலுவில்எங்கள் காந்தி இருக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் இருந்தால்தினமும் ஒரு நிமிடம்உன்னை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுவேன்

>>

“தன்னை வென்ற குருநாதர்”/மீ. விசுவநாதன்

அந்தி பகலாய் ஊர்சுற்றிஅடைந்த பலன்கள் ஒன்றில்லைபந்தி விரிந்த இடமெல்லாம்பசிக்கு ஏற்ற உணவில்லைசந்தி சிரிக்க வாழ்ந்தோனைசரியாய்க் கண்டு அழைத்தீரேசந்தி ரசேக ரபாரதியேசரணம் சரணம் சரணமய்யா ! தன்னை வென்ற குருநாதாதவத்தோன் சந்ர சேகரரே !என்னுள் கோடி எண்ணங்கள்என்னை வதைத்து வாட்டுகையில்உன்னை எண்ணி ஓர்நிமிடம்உள்ளே …

>>

ஞானக்கூத்தன்/காந்தீ மஹ்ஹான்

எழுந்ததும் கனைத்தார்; மெல்லசொற்பொழிவாற்றலானார்-வழுக்கையைச் சொறிந்தவாறு‘வாழ்கநீ எம்மான்’ என்றார்;மேசையின் விரிப்பைச் சுண்டி‘வையத்து நாட்டில்’ என்றார்வேட்டியை இறுக்கிக் கொண்டுüவிடுதலை தவறிý என்றார்பெண்களை நோட்டம் விட்டு‘பாழ்பட்டு நின்ற’ என்றார்புறப்பட்டு நான் போகச்சே‘பாரத தேசம்’ என்றார்;‘வாழ்விக்க வந்த’ என்னும்எஞ்சிய பாட்டை தூக்கிஜன்னலின் வழியாய்ப் போட்டார்தெருவிலே பொறுக்கிக் கொள்ள, …

>>

கல்யாண்ஜி கவிதை

அனாதை இல்லச் சிறுவர்கள்வேதக்கோவில் வழிபாட்டுக்குச் செல்கிறார்கள்.இரண்டு இரண்டு பேராகத்தான்செல்ல வேண்டும்.பராக்குப் பார்க்கக் கூடாதுசிரித்து விளையாடக் கூடாது.கடைசி இருவருக்கு முன்புஇடது ஓரம் இருந்த சிறுவன்நேற்றுப் பெய்து கிடந்தமழைத்தண்ணீரைக் காலால் எத்தினான்.பேருந்து நிறுத்த ஆட்டுக் குட்டியை விரட்டிவிட்டுவரிசையில் சேர்ந்து கொண்டான்.அவன் வாயில் பாதி கடித்த …

>>

நாகேந்திர பாரதி/கால (ஏ)மாற்றம்

அம்மா தலை வாரி விட்டகாலம் அப்போது அப்பா சினிமா கூட்டிப் போனகாலம் அப்போது அண்ணனுடன் சைக்கிள் ஓட்டியகாலம் அப்போது தோழியுடன் அரட்டை அடித்தகாலம் அப்போது ஆபீசும் அடுப்படியும்ஆஸ்பத்திரியும் இப்போது

>>

விஞ்ஞானி/தாத்தா

குடு குடுவென ஓடி வந்துமடியினில் ஏறிஎன் தலையில் கிடந்தகாய்ந்த பூவினை எடுத்துகையில் கொடுத்து விட்டுகுடு குடுவென ஓடினாள்பேத்தி காய்ந்த பூவைதலையிலிருந்துதட்டி விடுவதைஎன் அம்மாசெய்திருக்க கூடும்என் சகோதரிகளும்என் மனைவியும்செய்திருக்க கூடும்என் மகள்கள் கூடசெய்திருக்க கூடும்கவனத்தில் அப்படிமனதை தொட்டநினைவு சுவடுகள்எதுவும் இல்லை. கையிலிருந்த காய்ந்தபூவிடம் …

>>

வி.வி. கலைச்செல்வி /திரும்புதல்

ஒரு தேநீர்குடித்துவிட்டு போஎன்று சொன்னாள்நான் சந்தித்துவிட்டு திரும்பிய தோழிதேநீரும் ஒரு தோழி போலத்தான் இனிப்பு குறைவாகவும்துவர்ப்பு அதிகமாகவும்இருக்கிறது என்றேன்இருந்தாலும் என்ன.என்று சொல்லிவிட்டுஎனக்குமட்டும் இன்னும்கொஞ்சம் இனிப்பு சேர்த்தாள். இல்லாது போகையில்சேர்த்துக் கொள்வதுஎத்தனை எளிதோ அத்தனை எளிதுஇருப்பதைஅப்படியே ஏற்பதும். தாராபுரம்

>>

வத்சலா/கொண்டாடுபவர்

பாடும் கடிகாரம்அதுமணிக்கொருமுறைபாடிவிட்டுநேரத்திக்கேற்பமணியடிக்கும்என் பேத்திக்குபாட்டு பிடிக்கும்என்றுவாங்கியதுஅவள் சிறுமியாக இருந்தபோது ஒவ்வொரு மணிக்கும்ஓடுவாள்அதன் முன் நின்றுபாட்டை ரசிக்க பத்தாண்டு இயங்கிய பின்நிறுத்திக் கொண்டு விட்டது இன்றுபாடுவதை மட்டும் மணி காட்டுகிறதுஅடிக்கிறது அவள் நேற்று கிளம்பினாள்கல்லூரி மாணவ விடுதியில்சேர தளம் இதழ் 25 அக்-டிச 2022

>>

வானவில் கே.ரவி/வலிகள்

(ஐந்து நாட்களுக்கு முன்பு ஓர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்பொழுது வீட்டுக் காவலில் இருக்கிறேன். முதல் மூன்று நாட்கள் அவ்வளவு வலியில்லை. நேற்றில் இருந்து வலி, வலி! தொடர்ந்து இல்லாவிட்டாலும், விட்டு விட்டு வலி. எழுந்தால் வலி, அமர்ந்தால் வலி, …

>>

விஞ்ஞானி/ஐந்தும் அவளும்

: அவளது கண்களிலே இருபதுகளில் தென்றலாய்வீசும் காற்று நாற்பதுகளில் கோபமாய்தெறிக்கும் நெருப்பு அறுபதுகளில் ஆற்றாமல்வழியும் நீர் எண்பதுகளில் வெறித்திடும்வெற்றிட வெளி இறுதியில் அணைத்துவருடிடும் நிலம் ()

>>

அனங்கன்/நெய்மட்டுமா பொய்…?்்்்

உண்மைக்கருகில் எதுவுமில்லை என்றால்…பொய்யின் அலங்காரத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…நாம் அப்படித்தான்வாழப்பழகிக்கொண்டிருக்கிறோம். கடவுளைக்கூட அப்படித்தானென்றால்…அது நாத்திகவாதமாகிவிடும். பாலே உண்மையில்லை என்றாலும்…அந்த வெண்நுரையை அரசாங்க அங்கிகாரத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். எல்லா உணவுப்பொருள்களிலும் கலப்படம் இருக்கிறது…உணவுப்பாதுகாப்புத் துறையின் வரையறை எல்லையோடு… ஏலஎல்லை விலைக்குள் என்றுமே தூய்மையான நெய்யை அடையமுடியாது… …

>>

வே.கல்யாண்குமார்/சுற்றுலா

.. அரசியல்வாதி யெல்லாம் அமரிக்கா போகின்றான்! அன்றாடம் காய்ச்சிகளோ தெருத்தெருவாய்ப் போகின்றான்! கோடியிலே மிதப்பவனோ கோவாக்கு போகின்றான்..கோடிவீட்டு குப்புசாமி கோவில்குளம் போகின்றான்! குளுகுளு வண்டியேறிகொடுத்துவைத்தோன் போகின்றான்.. முன்பதிவில்லாப் பெட்டியிலே.. முட்டிமோதி யார்போவார்? சுற்றிவந்தால் சுகம் என்று சுற்றுலா சிலர் போக.. பற்றுடனே.. …

>>

வவேசு/மந்தையினம்

பரந்த புல்வெளியில்மர நிழல்கள் குடைவிரிக்கும்;புல்வெளிக்கு இடையும்சில பூக்கள் தரை நிரப்பும். மேய்ச்சல் நிலம்,மந்தை மந்தையாய் ஆடுகள்பாய்ச்சல் பழகும் களம். நாவால் புல்லை இழுத்து மடக்கிகழுத்தை நிமிர்த்திக்களை எடுப்பது போல்புல்லசை போடும் ஆடுகள் ஆடுகள். இன்றே மொத்தப் புற்பரப்பதனைதின்று முடிக்கத் தீவிரம் போலக்குனிந்த …

>>

திருப்பதி லட்டு/அழகியசிங்கர்

நான் எழுதியதிருப்பதி லட்டு என்றகவிதைமாயமாக மறைந்து விட்டதுபோனில் எனக்குலட்டு மீது இருந்தபிரியம் இப்போது இல்லைதிருப்பதி கோயிலுக்குச்சென்றால்லட்டு வாங்கும் கூட்டத்தில்இனிமேல்நிற்க மாட்டேன்.. ஆனால்லட்டு வாங்காமல்திருப்பதி கோயிலுக்குச்செல்வதும் என்னால் ஏற்கமுடியவில்லை

>>

வி.வி.கலைச்செல்வி/ஒரு பரிசு ஒரு கவலை

என் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து எழுதிக் கொண்டு வா என்றாள் என் தோழிசத்தியமாக எதை எழுதுவது.?எதைவிடுவது.? என்று தெரியவில்லை. எதையாவது எழுதிவிட்டால் எதற்கு உனக்கு இந்த வேலையென்று .?கோபித்து கொள்வாள்எதையாவது விட்டுவிட்டால் உனக்குத் தெரிந்ததுஇவ்வளவுதானா.? என்பாள் ஏன் வம்பென்று வெறுங்கையை …

>>

எல்.ரகோத்தமன்/படிக்கட்டுகளில் நெளியும் அரவம்

ஏறுவதற்கு மட்டுமல்லஇறங்குவதற்கும் கூடதேவை படிக்கட்டுகள்! அந்தவேடிக்கை மனிதர்கள்மிகவும் உற்சாகமுடன்பரவசமாய்மேலிருந்து கீழேகீழிருந்து மேலேநகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த சுறுசுறுப்பானநகரும் படிக்கட்டுகளில்வேடிக்கை மனிதர்களைவேடிக்கை பார்த்தபடி கடத்தும் நொடிகளில்என் காலுக்கடியில்ஓர் அரவம் போல் ஊர்கிறதுஒரு தயக்கம்!ஒரு அச்சம்!அது விரிக்கிறது ஒரு தடைசுழன்றுவரும் படிகளில்கால் வைக்க! என்னுள் அழகாய்படமெடுத்தாடுகிறஅரவத்திடம்தினம் …

>>

மோகன் ஜி/இல்லாமை

பூக்காத செடிக்குஇலையே தான் பூவடியோ!பிள்ளையிலா பெண்ணுக்குபுருஷனே தான் பிள்ளையடி! ஆலையில்லா ஊருக்குசர்க்கரை இலுப்பையடி!ஆளில்லாக் கோயிலுக்கோவௌவாலே பக்தனடி! வேகமில்லா வண்டிக்குசாலையிறக்கம் வேகமடி!வேலையில்லா வீணனுக்குஊர்வம்பே வேலையடி! ரசிச்சவன் கண்ணுக்குராட்சசியும் ரம்பையடி !பசிச்சவனுக்கே பழையசோறும்பந்தி வைச்ச விருந்தடியோ! கெட்டுப்போன உறவுக்கேதிருவிழா ஒரு குசலமடி!விட்டுப்போன மனசுக்குஊர்சேவை மருந்தடியோ! …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள் ஒத்தைப் பனை மரம் கள்ளு இறக்கிய காலத்தில்காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில்கஞ்சி குடித்தவர் பல பேர் காஞ்சு போன காலத்தில்மட்டை உரித்தவர் சில பேர் உறிஞ்சு விழும் சட்டத்தில்முதுகு …

>>

வி.வி. கலைச்செல்வி/சாமிகளின் உருளுகிற தலை

அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்று வந்தார்கள்அம்பது ரூபாய் தந்தேன் கருப்புசாமிக்கு கட்டிடம் கட்டுகிறோம் என்று கறாராக நூறு கேட்டார்கள்கடனே என்று கொடுத்தேன் வருகிற புண்ணியத்தில் பாவத்தை கழுவிக் கொள்ளலாம்என்கிற நினைப்பில் விழுந்ததெல்லாம் மண்தான் நேற்று அந்த வழிபோகும்போது பார்த்தேன். கருப்புசாமி அதே …

>>

இதைப் போலத்தான் அதுவும்/வி.வி. கலைச்செல்வி

நேற்று எப்படியோ அப்படித்தான்இன்றும் இருந்ததுஎன்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. உறுதியாக கூறினால் அது உண்மையானதாகவும் இன்னும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். எல்லா உறுதிக்கும் இங்கே இப்போது சாட்சிகள் கேட்கிறார்கள். அது எப்போதும் என்னால் முடியாமல் போய்விடுகிறது. நேற்று ஒரு கவிதையை ரசித்தேன்இன்று …

>>

ரவி அல்லது/ஞாபக மூட்டிடாத அழைப்புகள்

அள்ளித்தந்த வாசனையைபூக்களென்றுசொன்னால்என்ன செய்வது.பருகத் தந்தஅன்பைபானமெனச் சொன்னால்என்ன செய்வது.பறக்கக் கொடுத்தவானத்தைபார்த்துக் கொண்டிருந்தால்என்ன செய்வது.இவ்வாறானபுறக்கூத்தில்நீங்கள்அழைக்கும் பொழுதுஎன்னைநான்மறந்துபோனேனேஇப்பொழுதுஎன்ன செய்வது… *

>>

செ.புனிதஜோதி கவிதை

பூ விழுதலைஇயல்பாய்ஏற்றுக்கொள்ளும்நிலமாய் இருந்திருக்கிறாள் காலம் முழுதும்அவள் மீதுவெயில்படர்ந்தும்ஒருமுறை கூடசலித்துகொள்ளவில்லைஇவ் வாழ்வை பனைமரத்தில்இருவாசல் வைத்துகட்டும்தூக்கணாங் குருவியின்கூடு போன்றதுவாழ்வு என்கிறாள் வாழ்வைஇனிதாய்காண்பவளிடத்தில்இதுபோன்றசொற்களைத்தவிரவேறு என்னஎதிர்ப்பார்க்க? இருள் நெருங்கமுடியாஒளியவள்..

>>

மோகன் ஜி/ நானுமது….

நான்போஜராஜனல்லகவிதைக்கென உயிரை விட்டுவிட. நான்பிருதிவி ராஜனல்லஒரு சம்யுக்தையை தூக்கிச் செல்ல. நான்தேசிங்கு ராஜனல்லசெஞ்சிக் கோட்டையைக் கட்டி ஆள. நான்ராஜ ராஐனல்லதஞ்சையில் கோயிலை நாட்டிச் செல்ல நான்கவிராஜன் பாரதி வம்சம் உயிர்ப்பிக்கும் கவிதை சொல்லி,சம்யுக்தைகளுக்கு காதல் சொல்லி,கோட்டைகளில் தமிழை ஏற்றி,கோயில்களில் பாசுரம் பாடி,திரிகின்ற …

>>

நாகேந்திர பாரதி/ஒற்றைச் செருப்பு

கலவர அவசரத்தில்கழன்று விழுந்ததா ஓடும் பஸ்ஸில்உதறி விழுந்ததா வேண்டாம் என்றுவிட்டு எறிந்ததா கொஞ்ச தூரத்தில்ஜோடி கிடக்குமென எடுத்துப் போகிறான்ஏழை ஒருவன்

>>

சாய்ரேணு சங்கர்/பாதம் சிரமேல் பதி

அகங்காரம் ஒன்று அதிவினை ஒன்றுசகமிரண் டென்னுளே சுற்ற – பகவனே!தாதை உனக்கெனத் தான மளிக்கிறேன்பாதம் சிரமேல் பதி. வேஷமிட்ட மாயை விரிந்து பரந்ததேசேஷனார் தாங்கச் சேர்ந்ததே – சீர்ஷத்தேஓதப் புரோக்த உலகை அளந்தபின்பாதம் சிரமேல் பதி. காணச் சிறியவன் காசி னியளக்கஓணத் …

>>

அதிரன்/பயணம்

காணவில்லைஎன்ற சுவரொட்டி விளம்பரத்தில்கண்ட முகம்மிகப்பரிட்ச்சயமாகஇருந்தது கடந்து சென்றவர்கள்மீண்டும் மீண்டும் கண்டு சென்றனர்சுவரொட்டியைஒரு நீண்ட சிரிப்பொலிக்கு பின்தலையை சொரிந்த படிஅங்கிருந்துபயணிக்க தொடங்கினான்காணாத அவனைகாண்பதற்காக!

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/காமன் கணை

கதையெழுதித்தாடி வளர்த்துக்கண்டதென்ன சதை வளர்த்துப்பிணக்குழியில் விடுவதற்கோஇவ்வளவும்?முலைமொட்டுகள் அரும்பிற்றோஅவளுடலில்? சட்டியை உடைக்கும் பூச்செடி போல‘ப்ரா’வை மீறிப்பாய்ந்தனவோ விரிமுலைகள்?காமன் கணைஅவள் ஜகனத்தே தைத்ததோ?

>>

நாகேந்திர பாரதி/சூழலும் சுழலும்

குளத்தில் மூழ்கிய கல்லாகமூழ்கிப் போனான்முண்டாசுக் கவிஞன்வறுமைச் சூழலாய் விழுந்த கல் அதிர்வுவிரிந்து விரிந்துகரையைத் தாண்டிகவிதைச் சுழலாய்

>>