அனங்கன்/புனிதநூல்கள் ஒன்றும் புரிந்துகொள்வதற்கில்லை

இரண்டு தேவதூதர்களும்திகைத்துநிற்கிறார்கள்.அவர்களது போதனைகளைவிண்ணைக்கிழித்துச்செல்லும்அனங்கன்/ஏவுகணைகள் கேலிக்குள்ளாக்குகின்றன. பாவங்களுக்கு மனிதன் பயப்படவில்லை….உயிர்தெழுந்தாலும் ஒன்றும்ஆகிவிடப்போவதில்லை. புனிதநூல்கள் அனுதினமும்வாசிக்கப்பட்டாலும்….அதன்உண்மைத்தன்மைவிளங்கிக்கொள்ளப்படாமலேஇன்றுவரை இருக்கிறது. ஆலயங்களை ஆயுதங்கள்ஒருபோதும் வணங்கிச்செல்வதில்லை. தனிமனிதர்களின் ஆணவம்தலைமுறைகளைப் பொசுக்குகிறது. மதம் மனிதர்களை தின்றுசெரிக்கும் விலங்காக இருக்கிறது. காரணம் அறியாது உயிர்விடும்மக்களுக்காக யாரும் கண்ணீர்சிந்தப்போவதில்லை. உங்களுக்கு ஒன்றும் நடக்காதவரையில்உள்ளூர்ச்செய்திகளோடு…உலகச்செய்தியாய் …

>>

அழகியசிங்கர்/கண் சிமிட்டல்

நான்ரொம்பப் பெரியவன்ஆனபிறகுகாதலைப் பற்றிகவிதை எழுதுவதைநிறுத்திக் கொண்டேன் என்னிடம்அன்பாக இருக்கஎன் சுற்றமிருக்கிறது நலம் விசாரிக்கநட்பு வட்டமிருக்கிறது யாரும் இல்லாவிட்டால் கூடதெரு முனையில்இருக்கும்அனுமார் கருணை மிகுந்தமுக பாவனையுடன்என்னை ஆசீர்வாதம் செய்வார்ஒவ்வொருநாளும்கண் சிமிட்டலுடன்பார்த்தபடியேநடைப் பயிற்சிக்குப்போவேன்

>>

அதிரன்/இணைப்பு

நெடுஞ்சாலையில்பெரும் விபத்து என்றுதடம் மாறியது பயணம்ஒரு கிராமத்தின் வழியே…. ஒலிப்பான் சத்ததிற்குதலை தூக்கி கவனிக்கும்புல் தேடும் பசுக்கள். “எத்தனை காலம்தான்ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “என்ற பழைய பாடலைமுழங்கும்ஆளில்லா டீ கடை ஒன்று வறண்ட நிலத்துசோளக் கொல்லை பொம்மையில்கூடு கட்டிகுடும்பம் நடத்தும்மைனாக்கள் எல்லை …

>>

பி. ஆர். கிரிஜா/இயல்பாய் இரு !

மந்திர தந்திரம் வேண்டாம்ஆடம்பர மாளிகை வேண்டாம்சொற் புகழ்ச்சி வேண்டாம்வேடிக்கை காட்டும்வித்தைகள் வேண்டாம்எதிர்பார்க்கும் மனம் வேண்டாம்தன்னலம் கருதும் தோழமை வேண்டாம்தன்னடக்கம் இலா பண்பு வேண்டாம்அன்பில்லா உறவு வேண்டாம்என்றும் இயல்பாய் இருக்கும்பண்பதனை எப்போதுஎனக்களிப்பாய்பரந்தாமா ? 12/10/2024

>>

வே.கல்யாண்குமார்/காண்பது கவிதையில்

கவிஞன் யானோர்சின்னக் குழந்தை.!கலைமகள் நீயோ..அன்னை வடிவம்.!உன்னைத் தெரியும்உலகை அறியேன்..இந்நாள் வரைக்கும்எல்லாம் நீயே.! எழுத்தில் பறப்பேன் !கவியில் மிதப்பேன் !எப்படி சேர்ப்பது..என்பதை யறியேன்!வரவும் செலவும்..உன்னருள் அம்மா!வரமாய்.. தமிழைத்தந்திடு போதும்.! காண்பது கவிதையில்எழதுதல் என்வேலை..எப்போது பசிக்குமோ..ஆற்றுதல் உன்கடன்.!பைகளில் புத்தகம்கைகளில் எழுதுகோல்!உய்வது உன்னருள்..உதவுதல் உன்கடன்.! விழித்தால் …

>>

பி. ஆர்.கிரிஜா/கலைவாணி !

கனா ஒன்றுகண்டேன் வாணிகனா ஒன்றுகண்டேன் ! காணக் கிடைக்காதபெரும் காட்சிகண் முன் விரியக்கண்டேன் ! காணுமிடமனைத்தும்கலை வாணிஉன் மோனநிலை கண்டேன் ! பேதை நான்நிலை மறந்துசொல் இழந்துநின்றேன் ! உன் மோனத்தில்எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்என் அன்னையே ! 19/09/2023

>>

வே.கல்யாண்குமார்/கலைமகள் நீயோ..

கவிஞன் யானோர்சின்னக் குழந்தை.!கலைமகள் நீயோ..அன்னை வடிவம்.!உன்னைத் தெரியும்உலகை அறியேன்..இந்நாள் வரைக்கும்எல்லாம் நீயே.! எழுத்தில் பறப்பேன் !கவியில் மிதப்பேன் !எப்படி சேர்ப்பது..என்பதை யறியேன்!வரவும் செலவும்..உன்னருள் அம்மா!வரமாய்.. தமிழைத்தந்திடு போதும்.! காண்பது கவிதையில்எழதுதல் என்வேலை..எப்போது பசிக்குமோ..ஆற்றுதல் உன்கடன்.!பைகளில் புத்தகம்கைகளில் எழுதுகோல்!உய்வது உன்னருள்..உதவுதல் உன்கடன்.! விழித்தால் …

>>

வே.கல்யாண் குமார்/டாட்டா..டாட்டா.. உனக்கு டாட்டா.!

கலங்கின கண்கள்! கடவுளுடன்இன்று கலந்திடச் சென்றீர்..டாட்டா! கண்ணீரோடேகவிதையில் சொன்னேன் டாட்டா! பாட்டா தொடங்கி நாட்டில் தொழில்வளம்..ஊசியில் தொடங்கி உலைக்கலம் வரையில்..இரும்பைக் காய்ச்சி.. உருக்கி உலகினில்..ஊருக்கு உழைத்தீர்!பிரியாவிடை பெற்றீர் டாட்டா!பேசவொரு வார்த்தையேது.. டாட்டா! பல்தொழில் வித்தகரே..பண்பாட்டுச் சித்திரமே!தொல்பொருள் யாவும்தொழிற்ச்சாலை தோறும்நல்மனதோடு நாளும் உருவாக்கி..நாட்டுக்கு …

>>

அனங்கன்/இரத்தன் டாடாவே!

தேசத்தின் விடுதலைக்குப்பின்தொழில்மயம் உன்னால் உன்னதமானது. அறத்திற்கும் …தரத்திற்கும்உன்மேல் நம்பிக்கையிருந்தது. உனக்குப்பின்னால் வந்தவர்கள்…பணத்தால் உன்னை முந்தியிருக்கலாம்பண்பில் நீ தான் முதலென்றுபாரதம் அறியும். தொட்டதுறையில் எல்லாம்…கொடிகட்டிப்பறந்தாய் உந்தன்தொழில் நேர்மையால். ஆடம்பரத்தில்உன்னை அறிந்தவர்கள் இல்லை…நீ கொடுத்த அறம் உன்னை முன்நிறுத்தி நிற்கிறது. போய்வா தொழில் இமயமே!இமயம் …

>>

செ.புனிதஜோதி/டா(ட்)டா

எதனையோ சொல்ல வந்துஉங்களிடத்தில்சொல்ல முடியாமல்வெளியேறுகிறதுசொற்கள் தன் நிழலைப்பார்த்துதானே குரைக்கும்உயிரியைப்போலசொற்கள்சொற்களைப்பார்த்துதிட்டிக்கொள்கிறதுகோழையென. அந்தப் பரிதாவப்பட்டசொல் உயிரியையும்கைவிட முடியாமல்இந்தக் குடுவைக்குள்நிரப்பிக்கொண்டுதிரும்பிச்செல்கிறேன் குருதி ஓடுவதைப்போல்சொற்களும் ஓடுகின்றனஒருநாள்சுட்டெறிக்கும் வேளையில்வெளியேறலாம். பகல் சுட்டெறித்த சொற்களைஅந்தியில் சுட்டிக்காட்டும் வானம்அதன்பின்என்ன பெற்றுவிடுகிறது பெரிதாய்?இருளைத்தவிர. ஒன்று புரிந்துகொள்ளுங்கள்சொற்களை வீசத்தெரியாதவர்கள்கோழைகளல்லஎதிர்காலத்தை கணிக்கத்தெரிந்தவர்கள்.

>>

மீ. விசுவநாதன் /”பாரதரத்னா ரத்தன் டாடா”

ஆயிரமாய் விழுது கொண்டஆலமரம் விழுந்த தம்மாதாய்மண்ணைத் தொழுத பிள்ளைதன்னுயிரை விட்ட தம்மாநோயிலாத தொழில் ஒன்றேநோன்பாகக் கொண்ட வர்க்குஓய்வுதர வேண்டு மென்றுஉடன்தெய்வம் அழைத்த தம்மா ! தொழிற்சாலை தான வர்க்குத்தொண்டாற்றும் கோவி லென்றுவிழிபோல உழைப்போர் தன்னைதெய்வமெனப் போற்றி வந்தார்!பழியொன்றும் கொண்டார் இல்லைபாருக்கே வெளிச்சம் …

>>

அழகியசிங்கர்/ரத்தன் டாடா

ரத்தன் டாடா மறைந்தார்ஆனால்அவர் புகழ் மறையாதுஅவர் தயாரித்தநானோ கார்மறையாதுஅவர் என் கவனத்திற்குவந்தது அந்தக் கார் மூலம்தான்இபாபோதும்வைத்திருக்கிறேன்ஆனால்டிரைவர்தான் ஓட்டுகிறான்காரை

>>

பிரான்சிஸ் கிருபா/கைவிடல் படலம்

முதலில்அண்ணன்கள் கைவிட்டார்கள்.பிறகுகாதலிகள் கைவிட்டார்கள்.முடிவில்தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.இன்னும் தொடர்ந்ததுகைவிடல் படலம்.இறுதியாக அவனைஅவனே கைவிட்டான்.அதற்குப் பிறகுதான்நிகழ்ந்தது அற்புதம். –

>>

நீல பத்மநாபன்/தூக்கம்

ஜனனியின் கருப்பையில்மார்பின் கதகதப்பில்கயிறு நுனி தூளியில்கிரீச்சிடும் தொட்டிலில்தந்தையின் அரவணைப்பில்கோரைப் புல் பாயில்சூரலிழைக் கட்டிலில்எதிர்பாலின் கிளுகிளுப்பில்வெல்வெட் மெத்தையில்சேய்களின் ஸ்பரிசத்தில்கோரைப்புல் பாயில்கட்டாந் தரையில்நா லுபே ர்தோள் தாங்கும்பச்சை மூங்கில் பாடையில்இடுகாட்டு வரட்டியில்உய்விக்கும் நெருப்பில்ஆறடி மண்ணில்அந்தரீஷ வெளியில் 1966

>>

நீல பத்மநாபன்/நெருப்புக் குச்சி

உருண்ட முனையில்கந்தகச் செழுமைகுருதிச் செம்மை பரந்த பரப்பில்ரஸாயனக் கலவைசிமிழின் சீற்றம் அழுந்தி ஆழ்கையில்அழிக்கும் செந்தீஆக்கும் வெண்தீ எரிந்துஅடங்கையில்புகையிழை, கரித்துகள்கள்நூலிழை, உயிர் லட்சங்கள் 1967

>>

அழகியசிங்கர்/மகள் வீட்டில் கொலு

இன்றுமதியம் மகள் வீட்டில்நன்றாகத் தூங்கினேன் எழுந்தவுடன்கூட்டத்தில் வீற்றிருந்தகொலுவைப் பார்த்தேன் ஏனோஇங்கேயும் காந்தி இல்லை ஒரு நாவலைப் படித்துமுடிக்கும்நிலையில் இருந்தேன் நாவல் முடியும் தறுவாயில்நாவல் சோகமாக இருந்தது கொலுவைப் பார்த்தேன்மகள் உற்சாகமாகஇருந்தாள் சுண்டல் சாப்பிட்டேன்

>>

அதிரன்/பழி

தரிசித்துக்கொண்டிருந்தஅம்மாவின்கையை உதறிகல்த் தூண் ஒன்றை சுற்றிச் சுற்றிவிளையாடுகையில்எதிர்த்த தூணில் கண்பட்டஇராவணன் சிலையைசிறிது நேரம் உற்றுப் பார்த்தவள்அதன் அருகில் சென்றுநேருக்கு நேர் நின்று கொண்டுதனது இடது கையால் அவனதுபத்தாவது தலையும்வலது கையால் முதல் தலையும்அழுத்திப் பிடித்துமுகத்தின் அருகில் சென்றுபே….. பே ….பே….. என்று …

>>

விஞ்ஞானி/வாசம் வீசும் காற்று

மலர்ந்த செண்பகப்பூவைகண்டு காதலுற்றது காற்றுமுத்தமிட முனைகையில்ஒடிந்து விழுந்தது பூ பூ விழுந்ததில் அழகானதுஅந்த கருங்கல் தரை.காண பொறுக்காத காற்றுபாய்ந்தது அளளிக்கொள்ள. குறுக்கே வந்த சின்ன பெண்பூவை எடுத்து முகர்ந்தாள்முகம் மலர தலையில்வைத்துக்கொண்டாள் சின்ன பெண்ணின்மகிழ்வை கண்ட காற்றுமனமிளகி பிள்ளையிடம்பூவை விட்டு விட்டுமணத்தை …

>>

சசிகலா விஸ்வநாதன் /பொம்மை கொலு

நவராத்திரி கவிதை வருடம் தோறும் பொம்மை மருத்துவம்தப்பாமல் செய்வார் என் பாட்டியார்லக்ஷ்மியின் மேல் வலது கரம்,சிவகாமியின், மேல்இடது கரமாய் பரிமளிக்கும் கேலிக் கூத்து இவ்வருடமும்கௌதம புத்தர் அதைகனிவுடன் மறைப்பார் கல்யாண செட்டில்பெண்ணின் தாயாரில்லை;பரவாயில்லை; கல்யாணப் பெண் இருக்கிறாள். செட்டியார் தான் வழக்கம் …

>>

மீ. விசுவநாதன்/ “கிளிகள் கேட்ட மனித வரம்”

அந்தக் கோவிலின் கோபுரத்தில்அழகாய் இரண்டு பசுங்கிளிகள்நந்த வனத்திடைப் பூப்பறித்துநாதன் நம்பி தலைசூட்டி“இந்தப் பிறப்பினை நலம்செய்தாய்இனியோர் பிறப்பில் மனிதகுலம்வந்து பிறந்திட அருள்செய்யும்”வரத்தைக் கேட்டு நின்றவுடன் “உனக்கேன் இப்படி ஆசையென”உடனே கடவுள் கேட்கின்றான் !“எனக்காம் பலனிதைக் கேட்கவில்லைஇனிய தமிழிலே கவிசெய்துஉனக்கே மாலைகள் சூட்டிடுவேன்உலகம் உய்யத் …

>>

ரவி அல்லது /புறப் பாசாங்குகள்

வெகு சீக்கிரமாகவிடிந்து விடுகிறதுஎப்பொழுதும்.வெகு சீக்கிரமாகவிடியவே மறுக்கிறதுஎப்பொழுதாவது.போர்த்திக்கொண்டபோர்வையின்பொருட்டாகவேஅமைகிறதுதூக்கமும்விழிப்பும்எப்பொழுதும்நேரத்தைநொந்த படி.மற்றபடிகொசுவைப்போன்றகொசுறுக் காரணங்களுக்கும்இருக்கத்தான்செய்கிறதுதன்னை நோக்கிஒரு பொழுதும்திரும்பிடாதபடிபாசாங்கில்பார்த்துக் கொள்வதற்கு.

>>

மீ. விசுவநாதன்/”பராசக்தி வடிவம்தான் எல்லாம்”

பராசக்தி வடிவம்தான் பாரில் எல்லாம்பக்குவமாய் அதுபுரிய வடிவம் கண்டார்!நிராதரவாய் உணர்கின்ற உள்ளத் திற்குநிறைபலத்தைக் கொண்டுவர ஆன்ம சக்திவராததுபோல் வந்ததுதான் மூன்று சக்தி!மாகாளி, இலக்குமியும், வாணி என்றேமகாசக்தி தோற்றமுடன் கொலுவாய் நின்றுவரந்தரவே நவராத்ரி நாளில் வந்தார் ! படிப்படியாய் முன்னேறி வாழ்வில் ஒங்கபடியமைத்து …

>>

சசிகலா விஸ்வநாதன்/கொலு

கொலு வைக்க ஆசைதான்.வேலை கொஞ்சம் மலைப்புதான்.காலை அலுவல் போகணும்.மாலை சுண்டல் செய்யணும்.இதொன்றும் பெரிய வேலையில்லை‌கூப்பிட்டவர் இல்லம் செல்லணும்.நாலு பேர் பார்க்க,நல்லதாய் நான் உடுத்தணும்.நாளை வீட்டு அலுவல்அலுவலக அலுவல்அத்தனையும் மனதில் ஓடசிந்தனைகளும் சவால்களும் முந்தி நிற்கமுறுவல் காட்டிஇன்முகத்துடன் பேசணும்வீடு வந்து சேரஅடுப்படி வேலைகள்கடுப்படிக்க …

>>

அழகியசிங்கர்/கொலு

ஒவ்வொரு குடும்பமாய்நேரில் பார்த்துக்கூப்பிடுகிறாள்எங்கள் வீட்டில் கொலுஎன்று வாருங்கள் என்று யாரும் உடனே வருவதில்லை எல்லோருக்கும்சிந்தனைகள்தான்அதிகமாக இருக்கின்றன யாரும் கொலு பார்க்கஎங்கள் வீட்டிற்குவரவில்லை தூங்கப் போகும்போதுஇன்று யாரும் வரவில்லைஎன்று வருத்தப் படுகிறாள் நானும்வருத்தப் படுகிறேன்கவிதைப் புத்தகம் கேட்டுஎன்னிடம் யாரும்வருவதே இல்லை என்று

>>

ம.சக்திவேலாயுதம்/மரப்பாச்சி பொம்மைகளாய்

அம்மா வாங்கி வைத்தநளினமானகமகம சந்தன வாடை சுமந்தமரப்பாச்சி பொம்மையொன்றைநெஞ்சோடிருத்திஅம்மையை நினைக்கும்மகனொருத்தானநான் புரட்டாசி மாசத்தில்மனதில் அடுக்குகிறேன்கொலு ஒன்றை..ஐந்தே படிகளாக!ஒவ்வொரு படியிலும்ஒவ்வொரு படிப்பினைகள்…முதற்படியில்தெய்வீக இருப்பாய்தெளிந்தோடும் காட்சிகள்..இரண்டாம் படியில்தேரோட்டம் சப்பரமெனஇறை வீதி உலாக்கள்..மூன்றாம் படியில்மரங்கள் பூங்காக்களெனஅசையாத மனங்கள்..நான்காம் படியில்விலங்குகள் பறவைகளெனஆர்ப்பரிக்கா கூட்டங்கள்..ஐந்தாம் படியில்மரப்பாச்சி பொம்மைகளாய்நானும் அவளும்..இடையில் …

>>

விஞ்ஞானி/பிள்ளைகளின் கொலு

அம்மா பூ விற்கும்மரப்பலகை மேடையைஅடியில் போட்டனர் நல்ல துணி வைக்கும்ட்ரங்க் பெட்டி அடுத்தபடியானது சிறிய கல்லா மரப்பெட்டிமேல் தட்டாய் அமர்ந்துக்கொண்டது அப்பாவின் வேட்டியால்மூடி கொலுப்படியைதயார் செய்தனர். அம்மா வேலை செய்யும்வீடுகளிலிருந்து வாங்கிவந்த சிதிலமானமண்பொம்மைகளுக்குஅக்கா மருத்துவச்சிஆனாள். இலவசமாய் கிடைக்கும்களிமண் புல் செடிகள்இத்யாதியுடன் கவனமாய்கொலுவை …

>>

ஷண்முக சுப்பையா/தாலாட்டு

யாரும் அடிக்காமல்நீ ஏன் அழுகின்றாய்!நீ பிறக்காமலிருக்கநான் முயன்றேன்என்ற கறுப்பாலோ?காரணமில்லாமல்நீ ஏன் சிரிக்கின்றாய்?எனை ஏமாற்றிநீ பிறந்து விட்டாய்என்ற களிப்பாலோ!

>>

வே.கல்யாண்குமார்/கொலு பொம்மை!

வீட்டுக்கு வீடு சென்றேபாட்டுப் பாடுவோம்!வீதிக்கு வீதிசென்றேசுண்டல் வாங்குவோம்! கூட்டுக்குள் ஒன்றுகூடிபறவைகளாகுவோம்!நாட்டுக்கு நவராத்திரிகொண்டாடுவோம்! ஏட்டுக்கு அதிபதியைசரஸ்வதியை போற்றிஇயந்திர வடிவானஇலக்குமியை வணங்கி சக்தி சிவம் பெருமாளைசித்தி விநாயகரை..முத்துத் தமிழ் கடவுள்முருகனையே துதிப்பாம்! செட்டியார் பொம்மை..சிங்கப்பூரு பொம்மை..யானை பூனை குரங்குநாய்கள் பொம்மை பாரு! மேளக்காரர் நாதஸ்வரம்குடுகுடுப்பைக் …

>>

மா. காளிதாஸ்/பழைய கோயில் யானை

1. கோயில் சங்கிலியின் கட்டறுத்துஓடிய யானைவனத்தின் நுழைவாயிலில் நின்றுதிரும்பிப் பார்த்தது.ஒரு கவள உருண்டையைப் போலநகரத்தின் வாயில்நுழைந்து கொண்டிருந்தது வனம். 2. கழுத்துமணி ஒலிக்கமீள வனம் புகுந்த கோயில் யானைஆற்றில் இறங்கி அலசியது மேனியை.மூக்கைத் துளைத்த சூட வாசனைதாங்க மாட்டாமல்ஓலமிட்டுக் கரைந்தன காட்டு …

>>

எஸ் வி வேணுகோபாலன்/கழித்துக் கட்டுதல்

வெகு நேரம்பேசியும்பேரம் படியாமல்இரண்டாவது நபரும்அகன்று போனபின்எங்கிருந்தோ வந்தமூன்றாமவர்பேச விடாதுவேகப் படுத்திஅவர்சொன்ன பேரத்திற்குப் படிய வைத்துஆட்களைக்கொண்டு வந்துஇறக்கி விட்டார்அதைவிட வேகமாக அடுத்த வீடுபின் வீடுஅக்கம் பக்கம்போய்ச் சொல்லி வந்தாயிற்று அதற்குள்ஓசை கேட்கத் தொடங்கி விட்டதுரம்பம் வைத்து அறுக்கும் ஓசைகயிற்றைக் கட்டிஇழுக்கும் ஓசைகனத்த கிளைகளில்சிணுங்கிக் …

>>

ரவி அல்லது/ஆகர்ச மிளிர்வு

கோவித்துக்கொண்டு போனஎதுவும் வரவே இல்லை.வருகின்ற எதுவும்இணக்கமாக இல்லை.இப்படியானஊசலாட்டத்தில்வார்த்தையற்றுஓய்ந்து போனஆயாசதருணத்தைமௌனமெனமட்டும்சொல்லிவிட முடியாது.*-ரவி அல்லது.

>>

மீ. விசுவநாதன்/”கொலுபாக்க வாங்கோ”

கொலுபாக்க வாங்கோ – எங்ககொலுபாக்க வாங்கோ கருவண்ண மேக ராமன்தருமத்தைக் காக்க வேண்டிபருவத்தில் காடு போன …. (கொலுபாக்க வாங்கோ) தாய்தந்தை வார்த்தை ஏற்றுவாய்வார்த்தை கோபம் இன்றிபோய்வந்த கதையைச் சொல்லும் ..(கொலுபாக்க வாங்கோ) நம்பிவந்த உயிரை எல்லாம்தம்பியாக ஏற்றுக் கொண்டஎம்பிரானின் பண்பைக் …

>>

செ.புனிதஜோதி/இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்

இந்த உலகம் பூங்காவனமாய்இருந்தபோதுநம் உடலும் பூ போல் இருந்திருக்குமா ?அம்மா என்கின்றான்வயிற்றில் புற்று ஏற்பட்ட பையன் . அவளுக்கு என்ன சொல்வதென்றேதெரியவில்லை ?கருப்பையில்பொத்தி வளர்த்த அத்தனை ஈரத்தோடுஇறுக்கி அணைத்துக் கொள்கிறாள். கணமேறி அவன் உடல்இப்போது கொஞ்சம்பூப்போல் மாறியிருக்கும்.

>>

வே.கல்யாண்குமார்/கொடிகாத்தக் குமரன்!

அடி..அடி..அடி… என்று அடிக் கொடுத்த போதும்பிடி..பிடி..பிடி.. என்றுகொடியைப் பிடித்த குமரன்! தடி..தடி..தடி.. அங்கேதலைவில் அடித்தப் போதும்..தலைக் கொடுத்து விடுதலைக்கு தனைக் கொடுத்தக் குமரன்! புடி..புடி..புடி..என்று விரட்டி வந்தபோதும்..கொடிப் பிடித்தே.. உயிர் கொடுத்த விடுதலையின் வீரன்! ஒடி..ஒடி..ஒடி..என்றுகையை ஒடித்தப் போதும்.. விடாமலே கொடியைப் …

>>

வானவில் கே.ரவி/கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்

பொம்மை பொம்மையாக வந்து புன்னகைப்பாளேதன்னையே விதவிதமாய்அடுக்கி வைப்பாளே – எங்கும்அவளிருப்பாளே நன்மை தீமை போர்நடத்திவெற்றி கொள்வாளேஉண்மை என்ற சுடராகஒளிதருவாளே – கொஞ்சம்ஒளிந்து கொள்வாளே கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்பட்டாம்பூச்சி போலத்தான்சிறகடிப்பாள் சிணுங்கிடுவாள்பாவாடைச் சட்டையுடன்ரெட்டைஜடைப் பின்னலுடன்பக்கத்து வீட்டுப் பெண்ணாகவந்தழைத்திடுவாள் – சுண்டல்தந்தனுப்பிடுவாள்கோலாகலமாக அவள்கொலுவிருப்பாளே …

>>

ம.சக்திவேலாயுதம்/இந்த கண்ணாடி உலகினில்

ஆக்கலைஅளித்தலைஅம்மா பார்த்துக்கொள்கிறார்..காத்தலைவகுத்தலைஅப்பா பார்த்துக்கொள்கிறார்..மறைத்தலைஅருளலைஅவள் பார்த்துக் கொள்கிறாள்..இருத்தலைஇல்லாமல்நான் பார்த்துக்கொள்கிறேன்..இந்த கண்ணாடி உலகினில்பிரதிபலிக்கும்பிரதிபலிக்காதஎல்லாவற்றையும்நாங்கள் நால்வரும்பார்த்துக் கொள்கிறோம்..ஏனோ எங்களைத் தவிர!

>>

சங்கரன்/இது சின்னக் கொலு!

இது சின்னக் கொலு!சிங்காரக் கொலு!குட்டி வைத்தகுதூகலக் கொலு! பிள்ளையார் சிவன்பெருமாள் புகழ்பாடும் ப்ரமாதக் கொலு! அலங்கார விளக்கோடுஅற்புதக் கொலு! சிங்கம் ரியாவின்சிங்காரக் கொலு! ஒன்பது இரவோடுஒளிரட்டும் வாழ்வே!

>>

நாகேந்திர பாரதி/நம்பிக்கை

வண்ணப் பூக்கள் எல்லாம்வாசம் வீசுவ தில்லை வாசம் வீசும் பூவிலும்விஷத்தின் தன்மை உண்டு புறத்தில் சிரிப்பவர் எல்லாம்அகத்தில் மகிழ்பவர் அல்லர் ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்அடிகள் சறுக்குவ தில்லை நம்பிக் கெட்டவரும் உண்டுநம்பாமல் கெட்டவரும் உண்டு –

>>

அழகியசிங்கர்/எங்கள் வீட்டுக் கொலு

நான்விரும்பும் ஜே.கிருஷ்ணமூர்த்திரமணர்அரவிந்தர்காந்தி பொம்மைகள்எதுவுமே இல்லை பிள்ளையார்பத்து இடத்தில் இருக்கிறார்மரப்பாச்சி பொம்மைகள்செட்டியார் பொம்மைகள்இருக்கின்றன

>>

தங்கேஸ்/சொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லை

விளையாட்டுப் போலஒடுகிறது பொழுதுசோழிகளை உருட்டுபவன்யார் என்றே தெரியவில்லை நிலவின் மீதுதவளை குதிக்கதவளையைப் பிடித்துநீர்பாம்பு விழுங்கஇரண்டையும் கபளீகரம்செய்கிறது இரவு தொடரும் விளையாட்டைவேடிக்கை பார்க்கும் குளத்திற்குசொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லைஒரு அலகிலா விளையாட்டின்சாட்சி என்பதை தவிர

>>

மீ. விசுவநாதன்/”புதுப்புது பொம்மைகள் பாருங்க”

புதுப்புது பொம்மைகள் பாருங்க – இதில்பொலியும் கலைநயம் ரசியுங்கஅதுக்கது துனையினைக் காணுங்க – முகம்அன்பில் சிரிப்பதை உணருங்க மைனா குருவியும் கிளி,அணிலும் – கருமைபோல் காக்கையும் இருக்குங்கசைனா பொம்மையே வேண்டாங்க – நம்மசெந்தூர் முருகன வாங்குங்க உயர்ந்த தியாகியின் உருவமுங்க – …

>>

வி.வி. கலைச்செல்வி /சொற்கள் விற்பனைக்கு

அவனிடம் நூறு வாழ்த்துச் சொற்கள் இருந்தனஎனக்கு ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்ததுஎல்லா வாழ்த்துச் சொற்களும் இங்கிதம் தெரிந்தவைஇடத்திற்கு தகுந்தது போல் தன்னை உருமாற்றிக் கொள்பவை.எல்லோர் மனதையும் குளிரவைப்பவை .இத்தனை வாழ்த்துச் சொற்களை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் என்றேன்.தட்டேந்தும் போது விழுகிற …

>>

ப.மதியழகன்/காந்தியம்

எங்கே போகிறதுஎன் தேசம்காந்தியின் கொள்கைகள்காலாவதியாகிவிட்டனவருடத்துக்கு ஒருமுறைமட்டுமே அவரது பெயர்ஊடகங்களில் அடிபடுகிறதுஅப்படி ஒரு தலைவன்இருந்தான் என்பதேதெரியாமல் போய்விடுமோஅடுத்த தலைமுறையினருக்குஇன்றைய வன்முறை மிகுந்தஉலகத்தில்அகிம்சையின் மேல்நம்பிக்கை வைப்பதுகேலிக்குரியதாகிவிட்டதுபிரிட்டிஷார் அவரைஒரு போராளியாகப் பார்த்தனர்வேற்று மதத்தினர் அவரைஒரு இந்துவாகப் பாரத்தனர்வேற்று நாட்டினர் அவரைஒரு இந்தியனாகப் பார்த்தனர்உயிர் பிரியும் வரையாரும் …

>>

அழகியசிங்கர்/காந்தி

கற்பனைக்கூட செய்யமுடியவில்லை/இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று எங்கள் வீட்டுக்கொலுவில்எங்கள் காந்தி இருக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் இருந்தால்தினமும் ஒரு நிமிடம்உன்னை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுவேன்

>>

“தன்னை வென்ற குருநாதர்”/மீ. விசுவநாதன்

அந்தி பகலாய் ஊர்சுற்றிஅடைந்த பலன்கள் ஒன்றில்லைபந்தி விரிந்த இடமெல்லாம்பசிக்கு ஏற்ற உணவில்லைசந்தி சிரிக்க வாழ்ந்தோனைசரியாய்க் கண்டு அழைத்தீரேசந்தி ரசேக ரபாரதியேசரணம் சரணம் சரணமய்யா ! தன்னை வென்ற குருநாதாதவத்தோன் சந்ர சேகரரே !என்னுள் கோடி எண்ணங்கள்என்னை வதைத்து வாட்டுகையில்உன்னை எண்ணி ஓர்நிமிடம்உள்ளே …

>>

ஞானக்கூத்தன்/காந்தீ மஹ்ஹான்

எழுந்ததும் கனைத்தார்; மெல்லசொற்பொழிவாற்றலானார்-வழுக்கையைச் சொறிந்தவாறு‘வாழ்கநீ எம்மான்’ என்றார்;மேசையின் விரிப்பைச் சுண்டி‘வையத்து நாட்டில்’ என்றார்வேட்டியை இறுக்கிக் கொண்டுüவிடுதலை தவறிý என்றார்பெண்களை நோட்டம் விட்டு‘பாழ்பட்டு நின்ற’ என்றார்புறப்பட்டு நான் போகச்சே‘பாரத தேசம்’ என்றார்;‘வாழ்விக்க வந்த’ என்னும்எஞ்சிய பாட்டை தூக்கிஜன்னலின் வழியாய்ப் போட்டார்தெருவிலே பொறுக்கிக் கொள்ள, …

>>

கல்யாண்ஜி கவிதை

அனாதை இல்லச் சிறுவர்கள்வேதக்கோவில் வழிபாட்டுக்குச் செல்கிறார்கள்.இரண்டு இரண்டு பேராகத்தான்செல்ல வேண்டும்.பராக்குப் பார்க்கக் கூடாதுசிரித்து விளையாடக் கூடாது.கடைசி இருவருக்கு முன்புஇடது ஓரம் இருந்த சிறுவன்நேற்றுப் பெய்து கிடந்தமழைத்தண்ணீரைக் காலால் எத்தினான்.பேருந்து நிறுத்த ஆட்டுக் குட்டியை விரட்டிவிட்டுவரிசையில் சேர்ந்து கொண்டான்.அவன் வாயில் பாதி கடித்த …

>>

நாகேந்திர பாரதி/கால (ஏ)மாற்றம்

அம்மா தலை வாரி விட்டகாலம் அப்போது அப்பா சினிமா கூட்டிப் போனகாலம் அப்போது அண்ணனுடன் சைக்கிள் ஓட்டியகாலம் அப்போது தோழியுடன் அரட்டை அடித்தகாலம் அப்போது ஆபீசும் அடுப்படியும்ஆஸ்பத்திரியும் இப்போது

>>

விஞ்ஞானி/தாத்தா

குடு குடுவென ஓடி வந்துமடியினில் ஏறிஎன் தலையில் கிடந்தகாய்ந்த பூவினை எடுத்துகையில் கொடுத்து விட்டுகுடு குடுவென ஓடினாள்பேத்தி காய்ந்த பூவைதலையிலிருந்துதட்டி விடுவதைஎன் அம்மாசெய்திருக்க கூடும்என் சகோதரிகளும்என் மனைவியும்செய்திருக்க கூடும்என் மகள்கள் கூடசெய்திருக்க கூடும்கவனத்தில் அப்படிமனதை தொட்டநினைவு சுவடுகள்எதுவும் இல்லை. கையிலிருந்த காய்ந்தபூவிடம் …

>>

வி.வி. கலைச்செல்வி /திரும்புதல்

ஒரு தேநீர்குடித்துவிட்டு போஎன்று சொன்னாள்நான் சந்தித்துவிட்டு திரும்பிய தோழிதேநீரும் ஒரு தோழி போலத்தான் இனிப்பு குறைவாகவும்துவர்ப்பு அதிகமாகவும்இருக்கிறது என்றேன்இருந்தாலும் என்ன.என்று சொல்லிவிட்டுஎனக்குமட்டும் இன்னும்கொஞ்சம் இனிப்பு சேர்த்தாள். இல்லாது போகையில்சேர்த்துக் கொள்வதுஎத்தனை எளிதோ அத்தனை எளிதுஇருப்பதைஅப்படியே ஏற்பதும். தாராபுரம்

>>

வத்சலா/கொண்டாடுபவர்

பாடும் கடிகாரம்அதுமணிக்கொருமுறைபாடிவிட்டுநேரத்திக்கேற்பமணியடிக்கும்என் பேத்திக்குபாட்டு பிடிக்கும்என்றுவாங்கியதுஅவள் சிறுமியாக இருந்தபோது ஒவ்வொரு மணிக்கும்ஓடுவாள்அதன் முன் நின்றுபாட்டை ரசிக்க பத்தாண்டு இயங்கிய பின்நிறுத்திக் கொண்டு விட்டது இன்றுபாடுவதை மட்டும் மணி காட்டுகிறதுஅடிக்கிறது அவள் நேற்று கிளம்பினாள்கல்லூரி மாணவ விடுதியில்சேர தளம் இதழ் 25 அக்-டிச 2022

>>

வானவில் கே.ரவி/வலிகள்

(ஐந்து நாட்களுக்கு முன்பு ஓர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்பொழுது வீட்டுக் காவலில் இருக்கிறேன். முதல் மூன்று நாட்கள் அவ்வளவு வலியில்லை. நேற்றில் இருந்து வலி, வலி! தொடர்ந்து இல்லாவிட்டாலும், விட்டு விட்டு வலி. எழுந்தால் வலி, அமர்ந்தால் வலி, …

>>

விஞ்ஞானி/ஐந்தும் அவளும்

: அவளது கண்களிலே இருபதுகளில் தென்றலாய்வீசும் காற்று நாற்பதுகளில் கோபமாய்தெறிக்கும் நெருப்பு அறுபதுகளில் ஆற்றாமல்வழியும் நீர் எண்பதுகளில் வெறித்திடும்வெற்றிட வெளி இறுதியில் அணைத்துவருடிடும் நிலம் ()

>>

அனங்கன்/நெய்மட்டுமா பொய்…?்்்்

உண்மைக்கருகில் எதுவுமில்லை என்றால்…பொய்யின் அலங்காரத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…நாம் அப்படித்தான்வாழப்பழகிக்கொண்டிருக்கிறோம். கடவுளைக்கூட அப்படித்தானென்றால்…அது நாத்திகவாதமாகிவிடும். பாலே உண்மையில்லை என்றாலும்…அந்த வெண்நுரையை அரசாங்க அங்கிகாரத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். எல்லா உணவுப்பொருள்களிலும் கலப்படம் இருக்கிறது…உணவுப்பாதுகாப்புத் துறையின் வரையறை எல்லையோடு… ஏலஎல்லை விலைக்குள் என்றுமே தூய்மையான நெய்யை அடையமுடியாது… …

>>

வே.கல்யாண்குமார்/சுற்றுலா

.. அரசியல்வாதி யெல்லாம் அமரிக்கா போகின்றான்! அன்றாடம் காய்ச்சிகளோ தெருத்தெருவாய்ப் போகின்றான்! கோடியிலே மிதப்பவனோ கோவாக்கு போகின்றான்..கோடிவீட்டு குப்புசாமி கோவில்குளம் போகின்றான்! குளுகுளு வண்டியேறிகொடுத்துவைத்தோன் போகின்றான்.. முன்பதிவில்லாப் பெட்டியிலே.. முட்டிமோதி யார்போவார்? சுற்றிவந்தால் சுகம் என்று சுற்றுலா சிலர் போக.. பற்றுடனே.. …

>>

வவேசு/மந்தையினம்

பரந்த புல்வெளியில்மர நிழல்கள் குடைவிரிக்கும்;புல்வெளிக்கு இடையும்சில பூக்கள் தரை நிரப்பும். மேய்ச்சல் நிலம்,மந்தை மந்தையாய் ஆடுகள்பாய்ச்சல் பழகும் களம். நாவால் புல்லை இழுத்து மடக்கிகழுத்தை நிமிர்த்திக்களை எடுப்பது போல்புல்லசை போடும் ஆடுகள் ஆடுகள். இன்றே மொத்தப் புற்பரப்பதனைதின்று முடிக்கத் தீவிரம் போலக்குனிந்த …

>>

திருப்பதி லட்டு/அழகியசிங்கர்

நான் எழுதியதிருப்பதி லட்டு என்றகவிதைமாயமாக மறைந்து விட்டதுபோனில் எனக்குலட்டு மீது இருந்தபிரியம் இப்போது இல்லைதிருப்பதி கோயிலுக்குச்சென்றால்லட்டு வாங்கும் கூட்டத்தில்இனிமேல்நிற்க மாட்டேன்.. ஆனால்லட்டு வாங்காமல்திருப்பதி கோயிலுக்குச்செல்வதும் என்னால் ஏற்கமுடியவில்லை

>>

வி.வி.கலைச்செல்வி/ஒரு பரிசு ஒரு கவலை

என் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து எழுதிக் கொண்டு வா என்றாள் என் தோழிசத்தியமாக எதை எழுதுவது.?எதைவிடுவது.? என்று தெரியவில்லை. எதையாவது எழுதிவிட்டால் எதற்கு உனக்கு இந்த வேலையென்று .?கோபித்து கொள்வாள்எதையாவது விட்டுவிட்டால் உனக்குத் தெரிந்ததுஇவ்வளவுதானா.? என்பாள் ஏன் வம்பென்று வெறுங்கையை …

>>

எல்.ரகோத்தமன்/படிக்கட்டுகளில் நெளியும் அரவம்

ஏறுவதற்கு மட்டுமல்லஇறங்குவதற்கும் கூடதேவை படிக்கட்டுகள்! அந்தவேடிக்கை மனிதர்கள்மிகவும் உற்சாகமுடன்பரவசமாய்மேலிருந்து கீழேகீழிருந்து மேலேநகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த சுறுசுறுப்பானநகரும் படிக்கட்டுகளில்வேடிக்கை மனிதர்களைவேடிக்கை பார்த்தபடி கடத்தும் நொடிகளில்என் காலுக்கடியில்ஓர் அரவம் போல் ஊர்கிறதுஒரு தயக்கம்!ஒரு அச்சம்!அது விரிக்கிறது ஒரு தடைசுழன்றுவரும் படிகளில்கால் வைக்க! என்னுள் அழகாய்படமெடுத்தாடுகிறஅரவத்திடம்தினம் …

>>

மோகன் ஜி/இல்லாமை

பூக்காத செடிக்குஇலையே தான் பூவடியோ!பிள்ளையிலா பெண்ணுக்குபுருஷனே தான் பிள்ளையடி! ஆலையில்லா ஊருக்குசர்க்கரை இலுப்பையடி!ஆளில்லாக் கோயிலுக்கோவௌவாலே பக்தனடி! வேகமில்லா வண்டிக்குசாலையிறக்கம் வேகமடி!வேலையில்லா வீணனுக்குஊர்வம்பே வேலையடி! ரசிச்சவன் கண்ணுக்குராட்சசியும் ரம்பையடி !பசிச்சவனுக்கே பழையசோறும்பந்தி வைச்ச விருந்தடியோ! கெட்டுப்போன உறவுக்கேதிருவிழா ஒரு குசலமடி!விட்டுப்போன மனசுக்குஊர்சேவை மருந்தடியோ! …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள் ஒத்தைப் பனை மரம் கள்ளு இறக்கிய காலத்தில்காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில்கஞ்சி குடித்தவர் பல பேர் காஞ்சு போன காலத்தில்மட்டை உரித்தவர் சில பேர் உறிஞ்சு விழும் சட்டத்தில்முதுகு …

>>

வி.வி. கலைச்செல்வி/சாமிகளின் உருளுகிற தலை

அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்று வந்தார்கள்அம்பது ரூபாய் தந்தேன் கருப்புசாமிக்கு கட்டிடம் கட்டுகிறோம் என்று கறாராக நூறு கேட்டார்கள்கடனே என்று கொடுத்தேன் வருகிற புண்ணியத்தில் பாவத்தை கழுவிக் கொள்ளலாம்என்கிற நினைப்பில் விழுந்ததெல்லாம் மண்தான் நேற்று அந்த வழிபோகும்போது பார்த்தேன். கருப்புசாமி அதே …

>>

இதைப் போலத்தான் அதுவும்/வி.வி. கலைச்செல்வி

நேற்று எப்படியோ அப்படித்தான்இன்றும் இருந்ததுஎன்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. உறுதியாக கூறினால் அது உண்மையானதாகவும் இன்னும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். எல்லா உறுதிக்கும் இங்கே இப்போது சாட்சிகள் கேட்கிறார்கள். அது எப்போதும் என்னால் முடியாமல் போய்விடுகிறது. நேற்று ஒரு கவிதையை ரசித்தேன்இன்று …

>>

ரவி அல்லது/ஞாபக மூட்டிடாத அழைப்புகள்

அள்ளித்தந்த வாசனையைபூக்களென்றுசொன்னால்என்ன செய்வது.பருகத் தந்தஅன்பைபானமெனச் சொன்னால்என்ன செய்வது.பறக்கக் கொடுத்தவானத்தைபார்த்துக் கொண்டிருந்தால்என்ன செய்வது.இவ்வாறானபுறக்கூத்தில்நீங்கள்அழைக்கும் பொழுதுஎன்னைநான்மறந்துபோனேனேஇப்பொழுதுஎன்ன செய்வது… *

>>

செ.புனிதஜோதி கவிதை

பூ விழுதலைஇயல்பாய்ஏற்றுக்கொள்ளும்நிலமாய் இருந்திருக்கிறாள் காலம் முழுதும்அவள் மீதுவெயில்படர்ந்தும்ஒருமுறை கூடசலித்துகொள்ளவில்லைஇவ் வாழ்வை பனைமரத்தில்இருவாசல் வைத்துகட்டும்தூக்கணாங் குருவியின்கூடு போன்றதுவாழ்வு என்கிறாள் வாழ்வைஇனிதாய்காண்பவளிடத்தில்இதுபோன்றசொற்களைத்தவிரவேறு என்னஎதிர்ப்பார்க்க? இருள் நெருங்கமுடியாஒளியவள்..

>>

மோகன் ஜி/ நானுமது….

நான்போஜராஜனல்லகவிதைக்கென உயிரை விட்டுவிட. நான்பிருதிவி ராஜனல்லஒரு சம்யுக்தையை தூக்கிச் செல்ல. நான்தேசிங்கு ராஜனல்லசெஞ்சிக் கோட்டையைக் கட்டி ஆள. நான்ராஜ ராஐனல்லதஞ்சையில் கோயிலை நாட்டிச் செல்ல நான்கவிராஜன் பாரதி வம்சம் உயிர்ப்பிக்கும் கவிதை சொல்லி,சம்யுக்தைகளுக்கு காதல் சொல்லி,கோட்டைகளில் தமிழை ஏற்றி,கோயில்களில் பாசுரம் பாடி,திரிகின்ற …

>>

நாகேந்திர பாரதி/ஒற்றைச் செருப்பு

கலவர அவசரத்தில்கழன்று விழுந்ததா ஓடும் பஸ்ஸில்உதறி விழுந்ததா வேண்டாம் என்றுவிட்டு எறிந்ததா கொஞ்ச தூரத்தில்ஜோடி கிடக்குமென எடுத்துப் போகிறான்ஏழை ஒருவன்

>>

சாய்ரேணு சங்கர்/பாதம் சிரமேல் பதி

அகங்காரம் ஒன்று அதிவினை ஒன்றுசகமிரண் டென்னுளே சுற்ற – பகவனே!தாதை உனக்கெனத் தான மளிக்கிறேன்பாதம் சிரமேல் பதி. வேஷமிட்ட மாயை விரிந்து பரந்ததேசேஷனார் தாங்கச் சேர்ந்ததே – சீர்ஷத்தேஓதப் புரோக்த உலகை அளந்தபின்பாதம் சிரமேல் பதி. காணச் சிறியவன் காசி னியளக்கஓணத் …

>>

அதிரன்/பயணம்

காணவில்லைஎன்ற சுவரொட்டி விளம்பரத்தில்கண்ட முகம்மிகப்பரிட்ச்சயமாகஇருந்தது கடந்து சென்றவர்கள்மீண்டும் மீண்டும் கண்டு சென்றனர்சுவரொட்டியைஒரு நீண்ட சிரிப்பொலிக்கு பின்தலையை சொரிந்த படிஅங்கிருந்துபயணிக்க தொடங்கினான்காணாத அவனைகாண்பதற்காக!

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/காமன் கணை

கதையெழுதித்தாடி வளர்த்துக்கண்டதென்ன சதை வளர்த்துப்பிணக்குழியில் விடுவதற்கோஇவ்வளவும்?முலைமொட்டுகள் அரும்பிற்றோஅவளுடலில்? சட்டியை உடைக்கும் பூச்செடி போல‘ப்ரா’வை மீறிப்பாய்ந்தனவோ விரிமுலைகள்?காமன் கணைஅவள் ஜகனத்தே தைத்ததோ?

>>

நாகேந்திர பாரதி/சூழலும் சுழலும்

குளத்தில் மூழ்கிய கல்லாகமூழ்கிப் போனான்முண்டாசுக் கவிஞன்வறுமைச் சூழலாய் விழுந்த கல் அதிர்வுவிரிந்து விரிந்துகரையைத் தாண்டிகவிதைச் சுழலாய்

>>

ஆர்க்கே!/புரிபடா வாழ்க்கை!

புள்ளி என நினைத்தேன்.முற்றும் எனப் போய் நின்று கொண்டது. விரிசல் என நினைத்தேன்.வேரறுத்தது. விலகாதென நம்பினேன்.விடைபெற்றுப் போனது. இடைவெளியென கருதினேன்.அகழியானது. திரையென இருந்தேன்.கண்ணாடிச் சுவராகிகருங்கல் கோட்டையானது. வெறும் சலனமென இருந்தேன்.மௌனச் சமாதியானது. கடைசிவரையான காப்பு எனஇருந்தேன்.கைவிட்டுப் போனது. இனியெலாம் சுகமென்றானேன்.இன்றிறுதியென்றானது. வெற்றூடலென்றிருந்தேன்.பிரிவொன்றையே …

>>

தங்கேஸ்/தரிசனம்

ஒரு பின்னிரவு மழையில்விரிகிறது அடர்ந்த கானகம் காலால் இடறியபடியேபுல்லை உருட்டி உருட்டிதும்பிக்கையால் எடுத்துஉண்கின்றதுஒரு யானைக் குடும்பம்இரண்டு குட்டிகளுடன் வெட்கத்தை விட்டு முழுவதுமாகமலர்ந்து விட்டரேடியோப் பூக்களையும்கோழிக் கொண்டைப் பூக்களையும்பார்த்துவிரிந்த உன் இமைகளில்தோன்றி மறைந்துகொண்டேயிருந்ததுஇளம் வெய்யில் மணலாற்றின் சிற்றோடையில்உருண்டோடிய நீரைகைகளால் வாரி வாரிஎன் நோக்கி …

>>

விஞ்ஞானி/தேவதை

உடைந்த ஓடுகளின் இடுக்கில்ஊடுருவி வந்த சூரியவெளிச்சத்தில் வண்ணங்கள் உதிர்ந்தவண்ணத்துப்பூச்சியாய்வாழ்ந்தாலும் அதை மறந்து காரைகள் பெயர்ந்து விழுந்தசுவற்றில் மாட்டியிருந்தரசம் போன கண்ணாடியில் உற்று பார்த்து முகம் துடைத்துமுடி ஒதுக்கி உடை திருத்திவாசலுக்கு வந்தவள் தெருவில் இறங்கிநடக்கும் போதுஆரம்பம் ஆனதுவீதியில் தேவதையின்ஊர்வலம். (

>>

புனிதஜோதி கவிதை

எல்லா கணக்கும்சரியாகத்தான்போடப்படுகிறதுஎப்படி வருகிறதுபிழை? எப்போதுபுயல் வருமெனபுலப்படுவதில்லைகாற்றுக்கு உள்ளங்கையை விடசிறிய மனம்என்னசெய்யும்அந்நாளில் வெயிலின்வெம்மையைஇறக்கி வைத்துபடம் வரையும்நிழல்ஒரு கண்ணீர்துளி

>>

கணபதி வந்துவிட்டார்/அழகியசிங்கர்

எங்கள் தெருவில்கணபதி வந்துவிட்டார்சிங்கத்துடன்காட்சி தருகிறார்நானிருக்கும்அறையில்தெருவில் நடக்கும்நிகழ்ச்சிகள்ஒவ்வொன்றாகத் தொடர்ந்துவந்து கொண்டிருக்கின்றனஎங்கள் பொழுதும்நீண்டுகொண்டே போகிறதுபிள்ளையார் வாழ்கபிள்ளையார் வாழ்க

>>

ஆர் வத்ஸலா/நல்லாசிரியர்

குழந்தையின் கை பிடித்து நடை பழக்கும் தாயைப் போல்என்னை பயிற்றுவித்தனர் தவறுக்கு தண்டனை தந்து பயமுறுத்தாமல்மெல்லிய குரலில்“நீ இப்படி செய்யலாமா?”எனும் கேள்வியால் என்னை வெட்கித் தலை குனிய வைத்து திருத்தினார்கள் அவர்களின் அன்பில் தோய்ந்திருந்த ஒவ்வொரு பாடமும் நமது நெஞ்சத்தில்கல் வெட்டாகின …

>>

அனங்கன்/நல்லார் ஒருவர் உளேல்…

வகுப்பறையில் கற்றுக்கொடுத்தவர்களெல்லாம்…இன்று கல்லறையில் இருக்கிறார்கள்…கற்றுக்கொடுத்ததெல்லாம்என்னிடம்தான் இருக்கிறது வடுமாறாமல். வாழ்வின் வழிநெடுக கற்றுக்கொடுத்தவர்களைகணக்கிட வழியில்லை….படித்தஅறிவைவிட பட்டறிவேவாழ்வைக் கடக்க வழிவகுக்கிறது. தன்னறிவுவருவது மரத்தின் தூரிலா இருக்கிறது…உனக்குள் இருக்கும் ஔியை மனந்தான்கொண்டுவரவேண்டும்…மரத்திலென்ன இருக்கிறது . இறைச்சிக்கான கோழியைஉரமூட்டி வளர்ப்பதுபோல்இன்றையக் கல்விநிலையங்கள்.பொய்யான பதிவோடுபலகல்லூரிகளில்மோசடிப்பேராசியர்கள். ஆசிரியரைஅடிக்க கைஓங்கும்அரசுப்பள்ளி மாணவர்கள்…ஊதியம் …

>>

ஷண்முக சுப்பையா/மேற்கத்தியோரே!

ஒரு பக்கம்வாழ வழி வகுக்கும்மறுபக்கம்சாகக் குழிபறிக்கும்உங்களைப் போலல்லநாங்கள்.நாங்களோவாழவும் விரும்பமாட்டோம்சாகவும் துணிய மாட்டோம்.உங்களைப் போலல்லநாங்கள்.வாழாமல் வாழ்ந்துசாகாமற் சாகும்நாங்கள் நாங்களே.

>>

சசிகலா விஸ்வநாதன்/ஏணிப்படிகள்..

என் வாழ்வில் ஏற்றமிகு ஏணிகள்.அத்தனையும் ஏறி வந்தே நானிங்கே.முற்றம் முழுவதும்கூட்டலும்,கழித்தலும்,பெருக்கலும், வகுத்தலும்….எண்களால் என்னை நிரப்பின என்முதல் ஆசான்;என் அன்னை.எழுத்து கூட்டிபடிக்கும் வித்தைகற்பித்து, ஆங்கிலம்வெகு எளிதென்றேபுரிய வைத்த ரூபி டீச்சர்.சோதனை சாலையில்பிப்பட் உறிஞ்சவும்ப்யுரெட் பிடிக்கவும்இரண்டு கண்களால்மைக்ரோஸ்கோப் பார்க்கவும் கற்பித்த,“மேஸ்த்ரி”தனபாலும்,உடல்கூறு சாலையில்ஃபோர்ஸப்ஸும், ஸ்கேல்ப்பலும்கையில் பிடிக்ககற்பித்த …

>>

சாய்ரேணு சங்கர்/வெள்ளம்

மேகம் கருத்தது மேகம் கருத்ததுமேவிடும் நீரினில் மேனி பெருத்ததுதாகம் தணித்திடத் தானும் நினைத்ததுதண்ணெணப் பூமியில் பொன்மழை பெய்தது மயிலினம் ஆடுது மயிலினம் ஆடுதுமஞ்சினம் மின்னியே மத்தளம் கொட்டுதுகுயிலினம் எல்லாம் கூட்டிலடங்குதுகுளிரது பரவுது குவலயம் நடுங்குது வானம் திறந்தது வானம் திறந்ததுவையம் செழித்திடப் …

>>

மோகன் ஜி/காத்திருப்பு

பூமுடித்த பொக்கிஷமே!பூத்தொடுத்து பொற்சிலையாய்காத்திருப்பும் யாருக்கென சித்தினியே? சீவிமுடித்து சிங்காரித்துகோவிலுக்கே கூடிச்செல்லநாடும்நல்ல தோழியர்க்கா? பேருவகைப் பெட்டகமாய்தெருப்புழுதி உடற்கப்பஆடச்சென்ற பிள்ளைக்கா? கோலமயிலே! குலவிளக்கேயெனசாலப்புகழ்ந்து மடிசாய்த்தேகாதலுரைக்கும் கணவனுக்கா? நோன்பிருந்து நைந்துருகிபைந்தமிழால் பாடித்துதித்துபக்திசெய்த பரமனுக்கா? பெண்மையினைப் போற்றியிங்குகண்ணியத்தில் உயர்த்திநிதம்சீர்காணுமொரு காலத்துக்கா? மகளொருத்தி இரவினிலும்திகைப்பின்றி நடமாடும்காந்திசொன்ன சமூகத்திற்கா? எதற்கென …

>>

நாகேந்திர பாரதி/ஒத்தையடிப் பாதை

ஆரம்பத்தில் கிளைகள் பல பிரிந்தாலும்அடுத்தடுத்த அடி விழுந்து அமைந்த பாதை வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதைகண்மாய் மேட்டினிலே ஒரு பாதை காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலேகுறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை புல்லும் பயிரும் அமுங்கிப் போய்புதிதாக உருவெடுக்கும் அழகுப் பாதை நடந்து …

>>

எல்.ரகோத்தமன்/மூன்று கவிதைகள்

1)        மனசு வாசலிலிட்ட கோலத்தின்அழகில் மிளிர்கிறதுவிரல் வழி வழிந்தவெள்ளை மனசு!                               2)        மின்னல் திக்கற்ற பயணம்!உடன் ஒரு ஆட்டுக்குட்டி!திடீரெனசோர்ந்த நடைவேகம் கொண்டது!தூரத்தில் சிரித்ததுஒரு நட்சத்திரம்!வெட்டிச் சென்றதுமின்னல்!துள்ளி குதித்ததுஆட்டுக்குட்டி! 3)        கொக்கு மனதின்சாகச வேளியில்ஒரு வண்ணக் கலவைதன் பூடகப் பின்னலில்மானசீக மொழியின்மந்திரச் சொற்களினூடேபல் நூறு அர்த்தங்களின்அர்த்தங்களைஅமைதியாய் தேடியபடிநீள்கிறது ஒரு ஓவியம்! ஓவியத்தின்புரிநிலை விளிம்புகளில்வாழ்வின் ருசிகளைகொத்திச் …

>>

வைதேகி/குறுகுறுப்பு

காலையில் கோலமிட்டுக்கொண்டிருக்கிறேன்அருகே வந்து உரசி நிற்கிறதுகன்றுக்குட்டியொன்று…மணிக்கண்களின் யாசிப்பில்இரங்கிவாழைப்பழங்கள் எடுத்து வந்துஅதனருகே வைத்து விட்டுகோலமிடக் குனிகிறேன்கோபித்துக் கொண்டாற்போல்விருட்டென்று திரும்பி நடக்கிறதுஅழைத்து அறியா தடுமாற்றத்துடன்டேய் ஏன் இப்படி செய்கிறாய்?என்கிறேன்நின்றபடி திரும்பிப் பார்க்கிறதுகையிலேந்தி நீட்டுகிறேன் பழங்களைநாவால் கையை ஈரப்படுத்தியபடிஉண்டு விட்டுநகர்ந்து செல்கிறதுஇப்பொழுது வரை..மனம் மட்டும் நகரவேயில்லை.கையோடு …

>>

சிறகா/சும்மா

சும்மா இருப்பதால்சும்மா ஆகிவிடுமா இக்காலம் பல ஆண்டுகளாக சும்மா இருந்தமலைகளே இடம் பெயர்ந்துதடம் அற்று அமிழ்ந்து போக சும்மா காணாமல் தான்போயிற்றுபெரியதாக ஒன்றுமில்லை ஆயினும் சும்மா ஒரு பகிர்தல்சுற்றி சுற்றி வருகிறதுசும்மாவான சும்மாவாக.

>>

“கருணைப் பழம்”/மீ. விசுவநாதன்

ரஷ்யா உக்ரைன் போர்பங்களாதேஷ் கலவரம்பாலஸ்தீனப் படுகொலைகள்இலங்கை உள்நாட்டுக் கலவரம்மணிப்பூர் ரகளைகல்கத்தா மருத்துவர் கற்பழிப்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகள்வயநாடு நிலச்சரிவின் சோகம்இப்படியான துன்பங்களில்இருத்து உயிர்களைஇறைவா நீதான்கருணையுடன் காக்க வேண்டும்என்றுவேண்டிக் கொள்ளும் நான்,என் இடது கால் கட்டை விரலில்மெதுவாக ஊறி வந்தசிறு எறும்பைஎன்வலது பாதத்தால் தேய்த்துஏன்கொல்ல …

>>

சும்மா..சும்மா..ஹரணி

சும்மா சும்மா சும்மா சும்மாஎன்பது சும்மா இல்லை இல்லைசும்மா இருப்பது சுகமே இல்லைசும்மா காலம் கழிக்காதே. சும்மா சும்மா சும்மா சும்மாகத்திட எதுவுமில்லை சும்மா சும்மாவேஎன்றிட யாருக்கும் வாழ்வும் இல்லைசும்மா வாழ்வின் ஞானம். சும்மா சும்மா சும்மா சும்மாசும்மாவைச் சுமப்பது சும்மா …

>>

ஆர் வத்ஸலா/வருவான்

விடியுமுன் நீராடிசெய்து முடித்தேன் பலகாரம் பல அவன் மேனி வண்ண பட்டு உடுத்திகடலலை ஒத்த நீள் முடியை சீவி முடிந்துசெஞ்சாந்துத் திலகமிட்டுஎரிதிரி சூட்டில் படர்ந்த கரு மை தீட்டிமாலை வான வண்ண வளையல் அடுக்கி காத்திருந்தேன் மாலை வரைவருவானென சோர்வு மயக்கத்தில்கண் …

>>

சாய்ரேணு சங்கர்/கண்ணன் என்றொரு கவிதை பிறந்தது

பல்லவி கண்ணன் என்றொரு கவிதை பிறந்ததுகாசினியெங்கும் கொண்டாட்டம்வண்ணமெடுத்து அழகாய்க் கருணைவழங்கும் நீல வரியோட்டம் சரணங்கள் கஷ்டமும் கலியும் தீர்ந்திடப் பிறந்ததுகண்ணன் என்ற கவிதைஅஷ்டமி ரோகிணி சேர்ந்திடத் தோன்றியஅச்சுதனெனும் கவிதை தேவகியும்வசு தேவரும் படித்ததெய்வமிந்தக் கவிதைஆவினம் காவினம் ஆயர்கள்தாமும்ஆழ்ந்து மகிழ்ந்த கவிதை திருடிய …

>>

வே.கல்யாண்குமார்./கண்ணன் என் காவலன்.!

காரிருளில் நான் வீழ்ந்து கிடந்தபோது..காவலுக்கு ஒருவனாகக் கண்ணன் வந்தான்!பாருளகில் ஔிவெள்ளம் மாக வந்தான்!பார்த்தனுக்கு சாரதிபோல் கண்ணன் வந்தான்!வேறுவேறு பாதையில் நான் நடந்தபோது..வேணுகானம் இசைத்தப்படி கண்ணன் வந்தான்!மாறுபாடு பாராது மனவாசல் நின்றே..மனிதனாக்க காவலுக்காய் கண்ணன் வந்தான்!ஐம்புலத்தின் சிறையிருந்த அறியாதவனை..ஓர் ஆபத்தாண்டவனாய் நின்று காவல் …

>>

விஞ்ஞானி/கண்ணனுக்காக

வட்ட வட்ட வெளிச்ச துளிகளாய்முகத்தில் மோதி வம்பிழுத்ததுசூரியனோ என சிணுங்கினாள் நான் இல்லை அந்த தாமரைஇலை மீதாடும் நீர்த்திவலையைபார் என்றான் சூரியன் என் மீது பட்ட கதிர் உன்னைதொட்டது உண்மைதான் ஆனால்என்னை முன்னும் பின்னும்ஓடவிடும் இலையே இதற்குகாரணம் என்றது நீர்த்திவலை. ஐயோ …

>>

ப.மதியழகன்/கண்ணன் பிறந்தான்…

கோபியர்களுக்குஅவன் கோபாலன்அர்ஜுனனுக்கு அவன்பரந்தாமன்பக்தர்களுக்கு அவன்பரமாத்மாதுவாரகைக்கு அவன்மன்னன்அவதாரங்களில் அவன்கிருஷ்ணன்அவனது லீலையேஇவ்வுலகம்அவனது உபதேசமேகீதைபாண்டவர்களுக்குவெற்றி தேடித் தந்தான்சத்தியத்தை நிலைநாட்டவேஅவன் பிறந்து வந்தான்வாழ்க்கையே திருவிழாஎன்றான்போபிகைகளுடன்ஆனந்த நடனம் புரிந்தான்இன்றும் புல்லாங்குழல்எங்கள் புருஷோத்தமன்புகழ் பாடிக் கொண்டிருக்கிறது!

>>

ப்ரியாராஜ்/கிருஷ்ணன்

அன்று அவன்மக்களுக்காக மண் உண்டான்!இன்று அவன் அருள்வேண்டி மக்கள்மண்சோறு உண்கிறார்கள்!!அன்றைய கண்ணன்மக்களைகாக்க மலையை தாங்கினான்!மக்கள் இன்று அவன்அருள் வேண்டி கிரிவலம் வருகின்றார்கள்!!அன்று அவன் பாரதப்போரில் நல்லவர் பக்கம்..!!இன்றும் உலக போர் தடுக்க முயலும் நம் பாரத பிரதமர்

>>

ப.மதியழகன்/குக்கூ

1வண்ணத்துப்பூச்சிவருகிறது போகிறதுமலர் அங்கேயேஇருக்கிறது 2தடாகத்தில்மிதந்து கொண்டிருக்கும்தாமரை இலையில்பளிங்குகளாகநீர்க்குமிழிகள் 3தீயின்முலை சப்பும்விட்டில் பூச்சிகள் 4எனக்கு முன்பாதை இருக்கிறதுநான் சேருமிடம்எது? 5பிரபஞ்சமேமெளனமாக இருக்கிறதுநான் ஊமைஆயினும் பேச்சுநின்றபாடில்லை 6வசந்தம்வருகிறது போகிறதுநீல மலர்கள்இருந்த இடத்தில்… 7நான்நிலாவைப் பார்க்கிறேன்நிலாஎன்னைப் பார்க்கிறது 8விழுந்தஒற்றை மழைத்துளியின்தலைமேல்மற்றொரு துளி விழுகிறது 9என் குரல்மலைமுகடுகளின் …

>>

தி.சோ. வேணுகோபாலன்/நாகரிகம்

விண்வெளிக் கப்பலில்வெகுதூரம் சென்றேன்காலை வலித்ததுஓய்வு எடுக்கவேண்டிகிராமத்தில்என் வீட்டுக்கு வரப்பார்த்தால்அடையாளம் தெரியவில்லை. ‘எழுத்து’ அக், 1969

>>