பாசக் கூடு/கு.மா.பா.திருநாவுக்கரசு

சிட்டுக் குருவிகள், அணில்கள் வலம் வர
சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டில்,
செந்தேள், கரையான் , சிலந்திகள் கூட
சேற்றுச் சுவர்க்குள் கொட்டமடிக்கும்!

>>

ஒரு நிமிடம் கவிதையைப் படியுங்கள்/அழகியசிங்கர்

நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை. இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார். கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது. அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.

>>

மூன்று என்பாகள்/கு.மா.பா.திருநாவுக்கரசு

முகிழ்தல் முகத்திற்கு பொலிவு தரும்!
காதலின் முகிழ்தல் கண்களில் தொடங்கும்!
ஈதலின் முகிழ்தல் இதயத்தில் அரும்பும்!
தாய்மை கருவாய் முகிழும்!

>>

எம் டி முத்துக்குமாரசாமி கவிதை

பாவைக்காய் பிட்ளையில்
வெல்லம் சிறிது சேர்த்து சுவை கூட்டச்
சொல்லித்தந்து நீதான், தெரியுமா?”
என்றவளை இரண்டு விறற்கட்டு
விட்டுக்கட்டிய பூச்சரமென

>>

மலர்தல்/மதுவந்தி

குழாய்நீர் நெகிழி வாளியில்
வீழ்கிற ஓசை தாண்டி,
குழந்தை அழும் குரல் கேட்டு
அரைகுறையாய்க் குளியல் முடித்து
அவசரமாய் ஓடி வந்தேன்.

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

உட்பட நினைக்கிறாய்
அசோக மரங்கள் சம இடைவெளியில்
நெடிதுயர்ந்து நிற்பதைப் பார்க்கையில்
மனம் மாறி அசோகமரங்களுக்குக்
காடுகளின் முகங்களுண்டா

>>

எஸ். சண்முகம் கவிதை

அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்

>>

வாழ்க்கை வானம்.! /ஆர்க்கே.!

வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.

>>

எஸ்.சண்முகம் கவிதை

காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது

>>

வண்ணதாசன் கவிதை

குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

ஊன்றி மண்டபங்களின் கல்தரைகளில்
பின்னே ஏறி அமர்கிறேன்
நான் பார்க்கும் பிராணிகளும்
ஏன் பின்னங்கால்களால்
தங்கள் தலைகளைத் தொடும்

>>

எஸ்.சண்முகம் கவிதை

முழுமையடையாத சுற்றிலிருந்து விலகி
அதே சாலையிலிருந்து
குறுகலான சந்தின் துவக்கத்தில்
விழிகளில் சுழிக்கும் உள்ளரங்கமான நகைப்பும்

>>

சிவந்த சிறு துளி விசிறல்கள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

கடல் வா வா என அழைத்தபோது
கைகள் கோர்த்து நீராட ஓடினோமே
களிவெறி ஏறி அலைகளில்
ஆடையற்று புரண்டோமே
அவ்வசைவுகளின் நளினங்களெல்லாம்
என் கனவுகளில் வருவதில்லை
பிரம்மாண்டத்தின்

>>

மெளன விரதம்/உமா சக்தி

இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!

>>