என்பா – 64, 65

என்பா – 64: கு. மா. பா. திருநாவுக்கரசு பூக்கோலம் மாக்கோலம் புள்ளிக் கோலம்பூவையர்கை வரைகின்ற வண்ணக் கோலம்பாக்கோலம் ஆக்குகின்ற கவிதை யாவும்நீர்க்கோலமாய் மறக்கும் நினைவு. என்பா – 65: பேசாமல் பேசுவது காதல் விழிகள்!சொல்லாமல் சொல்லுவது கவிதை மொழிகள்!நனையாமல் நனைத்துவிடும் …

>>

வரவேற்பு

என்பா செல்விபிரகாஷ்🌹 வரவேற்க ஒரு துண்டு மனம் இயல்பாய் வழிந்தோடும் சிறு புன்னகை அன்பை வெளிக்காட்ட கண்களில் பரவசம் கோலமாய்ப் பூக்கிறது மகிழ்ச்சி

>>

என்பா 46, 47

அழகியசிங்கர் என்பா 46 யார் வரைந்தார் இந்தக் கோலம்என் கண்ணில்இப்போது பட்டதுபட்டவுடன் வந்தமர்ந்ததுஎனக்குப் பிடித்ததுஆழமாக உள்ளேசென்றது. என்பா 47 எல்லோரும் புத்தகங்களைத்தயாரித்து விட்டுஅலை அலையென்றுஅலைந்து கொண்டிருக்கிறார்கள்காகிதத்தைக் தின்னும்கழுதைகளை ஏனோகாணவில்லை. இன்றும்.இன்றும்

>>

கவிதை எழுதுபவர்கள்

அழகியசிங்கர் கவிதை எழுதுபவர்கள்எல்லோரும் இப்படித்தான்அவர் கவிதைகளை யாரும் சரியில்லை என்றால்அடிக்க வருவார்கள்முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு பேச மாட்டார்கள்ஊரிலுள்ள கவிஞர்களொல்லோரும் என்னிடம் பேசுவதில்லைநானும் கவிதைகளை வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்.எல்லோரும் தூர தூர போகிறார்கள்

>>

திருமதி சீதா ரவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஸ்வர ஜதி

பானுமதி ந. திருமதி சீதா ரவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஸ்வர ஜதியைப் பற்றிய என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கர்நாடக சங்கீதத்தில் சரளி வரிசை ஜண்டை வரிசை கீதம் போன்ற வரிசைகளில் வர்ண பாடத்திற்கு முன்பாக இதை சொல்லிக் …

>>

இனிக்கும் தமிழ் – 4

டி வி  ராதாகிருஷ்ணன்  அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு.வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்குபுலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய …

>>

ஐராவதமும் புத்தக விமர்சனமும்

அழகியசிங்கர் என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார். ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும். அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம். ஒவ்வொரு விருட்சம் இதழிலிலும் எதாவது ஐராவதம் எழுதிக் …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 15

12.10.2021 அழகியசிங்கர் அழகியசிங்கர் : நேற்று இரவு 11.30 ஆகிவிட்டது.  அதனால் ஆசிரியர் பக்கம் எழுதாமல் தூங்கப் போய் விட்டேன். ஒரு நாளாவது இந்த இணைய இதழில் ஆசிரியர் குறிப்பு இல்லாமல் வரக்கூடாது என்று தோன்றுகிறது. ஜெகன் : ஆசிரியர் குறிப்பு என்றால் என்ன வெறும் …

>>

மகாத்மா காந்தி நூல் நிலைய 69ஆவது ஆண்டு விழாவின் தொகுப்பை ‘Landmarks’ யூடியூப்

10.10.2021 அன்று நடைபெற்ற மகாத்மா காந்தி நூல் நிலைய 69ஆவது ஆண்டு விழாவின் தொகுப்பை ‘Landmarks’ யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. மிக அற்புதமான தொகுப்பு. அனைவரும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொகுத்தளித்த நண்பர் திரு. நீலமேகம் அவர்களுக்கு நன்றி. கீழே உள்ள …

>>

நகுலன் ஸ்ருதி கவிதைகள்

கனல் தரையில்தாராளமாகவேசிதறிச் சென்றபிராந்திச் சுழிப்பில்ஒரு தீக்குச்சியைக்கிழித்துக் காட்டஅதன் மீதுதன் ஒளி பரவஓடிச் சலிக்கும்வெள்ளை நீலநீல வெள்ளைஜ்வாலைகள்எவ்வளவுஅழகாக இருக்கின்றனஇங்குதான்ருத்ரம்வெகு நேர்த்திகொள்ளும் போலும். நகுலன் ஸ்ருதி கவிதைகள்  பிராந்தி ஒருமங்கலான சூழ்நிலைபுகை மண்டிய ஒரு பிரக்ஞைஅசேதனங்கள் மாத்திரம்ஒரு அந்தியோக்கிய பாவம்காட்டும் ஒரு நிலையாருமில்லாத பிரதேசத்தில்நான் …

>>

கமலாம்பா

09/10/2021, சனிக்கிழமை  பி.ஆர்.கிரிஜா. நான் பி.ஆர்.கிரிஜா. இன்று சீதா ரவி அவர்கள் எழுதிய கமலாம்பா… என்ற சிறுகதையைப் பற்றி நான் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். சீதா ரவி அவர்களைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இசைஞானம் மிகவும் …

>>

என்பா – 62, என்பா – 63

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா – 62: நொடிமுள் விரைந்தும் பதிவது இல்லை!துடிக்கின்ற இதயம் கண்ணிற் படுவதில்லை!கடிகார முட்கள் மூன்றும் சுழன்றும்,மணிநிமிடங்களே நினைவில் நிற்கும்! என்பா – 63: உசுரை உருக்கி கிறுக்கி வச்சாங்க!அய்த்தைமகன் வரைஞ்ச அஞ்சல் அட்டைகள்!படிச்சிருந்தால் என்நெஞ்சில …

>>

இதுதானோ வாழ்க்கை

சுரேஷ் ராஜகோபால்  நாம் தேடுவதுநமக்கு கிடைக்காதுகண்ணெதிரில்பக்கத்தி லுள்ளவனுக்குகிட்டி விடும்நாம் பார்த்துஏங்கும் நேரத்தில்நமக்குக் கிடைத்ததைமறந்து விடுகிறோம்

>>

என்றோ எழுதிய

🌷க.சோமசுந்தரி. என்றோ எழுதியபழையநாட்குறிப்பின்பழுத்தகசங்கியபக்கத்திலிருந்துஎதைச்சையாககீழே விழுகிறதுஒரு அஞ்சல் அட்டை! அப்பாநலம் விசாரித்தஅன்றையபிரிய எழுத்துக்கள்! கால ஓட்டத்தில்அடிக்கடி…! இன்றும்நலம் விசாரிப்பாய்சிரித்த முகத்துடனேஎட்டி‌ப் பார்க்கிறது. நடு வீட்டுசுவற்றில் தொங்கும்அப்பாவின் புகைப்படம்!

>>

தினசரி ஆலாபனை

அழகியசிங்கர் கொய்யாப் பழம் கிலோ முப்பதுசத்தம் போட்டப்படி தள்ளு வண்டிக்காரன்மாதாகோயில் மணி நேரம் தவறாமல்ஹாலில் டிவி அலறல். என்பா 45 மடிப்பாக்கக் கொலுபார்க்க வந்தேன்கொஞ்ச பொம்மைகள்அதிகமாக இருந்தனபாரதியும் சாய்பாபாவும்ஒயிலாக இருந்தார்கள்பெண் வீட்டுக் கொலு

>>

காந்தி நூலக விழாவும் காந்தி ஜெயந்தி விழாவும்

எஸ்.ஸ்ரீதர்  கடந்த 10-10-2021 அன்று சென்னை சைதாப் பேட்டையிலுள்ள காந்தி நூலகத்தின் 69வது ஆண்டு விழாவும் தேசபிதா மகாத்மா அவர்களின் ஜெயந்தி விழாவும் நடந்தது. விழாவில், கல்கி இதழாசிரியர் ரமணன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர். நடராஜ், எழுத்தாளரும், விருட்சம் இதழாசிரியருமான …

>>

பொய்

முபீன் சாதிகா பெரும் செல்வங்களும் சொத்தும் கொண்டிருந்த ஒருவன் தன் அனைத்துச் சொத்துகளையும் யாரொருவர் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாத பொய்யைக் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தான். ஒவ்வொருவரும் வந்து விதவிதமான பொய்களைச் சொன்னார்கள். ஒருவன் வந்து அவனுக்கு உறவுமுறை என்கிறான். …

>>

நானும் ராமகிருஷ்ணனும் யார்?

G S மணிமுத்து * நீண்ட நாட்களாக எனக்குள் என்னை குடைந்து கொண்டிருந்த நான் யார் எனும் கேள்விக்கு பால்ய நண்பண் ராமகிருஷ்ணனின் மரணநாளன்றே விடை கிடைத்தது! *ராமகிருஷ்ணன் சித்தப்பா இவன் தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை குழந்தையில் கொள்ளை அழகன் …

>>

“நித்திய விமர்சனத்தின் நித்திரையில்லாக் காவலாளி” : நோயல் ஜோசப் இருதயராஜின் பின்நவீனத்துவ வெளிப்பாடுகள்!

முத்துக்குமார் [என்னுடைய இந்தக் கட்டுரை நவீன விருட்சம் சிற்றிதழில் சமீபத்தில் வெளிவந்தது. மேற்கத்திய கோட்பாடுகளை உள்வாங்குதல் என்பதை எதிர்கொள்வதில் பழமைவாதிகள் எந்த புதுச் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும், இவை பிரேரணை செய்யும் புதிய மதிப்பீடுகளையும், சிந்தனை-செயல் அல்லது செயல்-சிந்தனை சட்டகமாற்றங்களையும் சிறிதும் சுய-ஐயுறவு …

>>

வாழ்க சக்தி

பானுமதி ந மும்மலத்தை நீத்தருளும் முத்தமிழே நீ வாழி! முக்காலம் தாள் பணியும் முத்துமாரி நீ வாழி! நித்திலங்கள் தோற்றுவிக்கும் நித்திலமே நீ வாழி! நீக்கமற நிறைந்திருக்கும் வெண் சங்கே நீ வாழி! முகில் தழுவும் இமயத்தின் மென் பிடியே நீ …

>>

சரிந்த மணல்

பானுமதி ந  சரிந்த மணல் சுருங்கும் விரியும் வெளிச்சப் புள்ளிகள் ஒத்தைத் தடம் பதிந்ததோ பதிக்கக் காத்ததோ விரைந்த குளம்புகள் சருகாய்ப் புரண்டு புதைந்த கோணம் கோட்டோவியத்தின் கோணல் போல உச்சி தனில் ஒற்றை விளக்கு அணைந்தணைந்து மிச்ச வெளியில் அலைப்புறும் …

>>

இனிக்கும் தமிழ் – 3

டி வி ராதாகிருஷ்ணன்ழ > தமிழில் பலவகைப் பாடல்கள் உண்டு.அவற்றில் நமது புத்திக்கு வேலை> கொடுக்கும் பாடல்களும் உண்டு.>> உதாரணத்திற்கு, காளமேகப் புலவரின் இப்பாடலைக் காண்போம்..>> பூனைக்கு ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால்> ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே – மானேகேள்> முண்டகத்தின் …

>>

விருட்சம் நடத்தும் 21வது கதை வாசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக சனிக்கிழமை (09.10.2021) மாலை 6.30 மணிக்கு நடந்து முடிந்தது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிட்டி 2. சீதா ரவி வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி சிறப்பு செய்தனர். …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 14

10.10.2021 அழகியசிங்கர் அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன் : உங்களுக்குச் சக்தி கிருஷ்ணசாமி விருது கிடைத்துள்ளதா?   அழகியசிங்கர் : ஆமாம். இன்று தான் அந்த விழா நடந்தது. முதன் முதலாக சைதாப்பேட்டையில் இருக்கும் மகாத்மா காந்தி நூல் நிலையத்திற்குச் சென்றேன். ஜெகன் : விழா கேடயம் கிடைத்ததா? …

>>

தேடல் என்கிற கதை..

அழகியசிங்கர் இந்த வார கல்கி இதழில் (18.10.2016) என் கதை தேடல் பிரசுரமாகி உள்ளது. கதைக்கான ஓவியத்துடன் ஒரு கதையைப் பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கிறது. இக் கதையை நீங்கள் படிக்க வேண்டும். இக் கதை எப்படி வந்திருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறேன். …

>>

மூன்று கவிதைகள்

நந்தாகுமாரன் ஸ்தூல இருளின் சூட்சும சொல் நாள் நீள இரவில்சலனச் சொற்களின் சதங்கை ஆட்டம்தொடர்ந்து மனப் பரண் ஏறுகிறது எரிநட்சத்திரக் கண்களின்சம்ஹாரச் சிமிட்டலில்சாம்பலாகிறது கூதல்ஒவ்வொரு பனித்துளியாகச் சிதைத்து வயிற்றின் குரல்வளையை நெறித்துஇன்னும் ஒரு மிடறு நீர் பருகஇடைக்கால விரதம் மேலும் நீடிக்கிறது …

>>

மாதிரிப் போலிகள்…

சு. விக்னேஷ் என்னை மாதிரி வெண்மை இந்த மலைகளுக்கு இல்லை என்னும் மேகங்கள் கருமையைக் கடலிடம் கடன்வாங்குகின்றன… என்னை மாதிரி பசுமை வெய்யிலுக்கில்லை என்னும் செடிகள் அதே வெய்யிலில் பழுத்து உதிர்கின்றன… உண்மையில்நம்மைப் போல யாருமில்லை… நம்மைப் போல யாருமில்லை என …

>>

இனிக்கும் தமிழ் – 2

டி வி ராதாகிருஷ்ணன் கந்தர் அந்தாதியில் ஒரு பாடல் உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமொப்பில்உண்ணாமுலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே (உண்ணா முலை..உண்ணா முலை..உண்ணா முலை..உண்னா முலை எனநான்கு வரிகளிலும் வருவது …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 13

09.10.2021 அழகியசிங்கர் ஜெகனும் மோகினியும் (அழகியசிங்கரைப் பார்த்து) : வணக்கம். அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன் : உங்களால் முடியாதது எது? அழகியசிங்கர் : புத்தகம் படிக்காமல் இருப்பது ஜெகன் : உங்களால் முடிந்தது அழகியசிங்கர் : புத்தகம் படிப்பது மோஹினி :  இன்றைய கதைஞர்கள் கூட்டம் எப்படி நடந்தது? அழகியசிங்கர்: சிறப்பாக …

>>

கள்ளா, வா, புலியைக்குத்து

வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார்.சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை …

>>

தர்மராஜ் கவிதைகள்

 என்பா 61 நனைந்தசிறகு உணவில்லையெனினும்மழையைவெறுப்பதில்லை வாழ்வில்சோதனைமழைபோல்இயற்கையே பறவைபோலன்றிசோதனையைவெறுப்பதேன்மனிதன் வாழ்க்கையில் போராடு வெற்றிபெறு. என்பா. 62. எங்கள்வீட்டில்கொலுவைத்துள்ளோம் கடவுள்கள்மட்டும்மனிதர்கள்யாருமில்லை இடைவெளிஇல்லாகொலுவுக்கு வருவதில்லையாம் இன்று நவராத்திரி மூன்றாம்தினம். என்பா 63. செக்கிங்இன்ஸ்பெக்டர்வராமடிக்கெட்வாங்கமாட்டாங்க இப்பகாசில்லாதடிக்கெட்டசண்டைபோட்டுவாங்குறாளுக நாட்டுலநிறையபேர்நல்லவங்களாஆயிட்டாங்க அரசுப்பேருந்துநடத்துனரின்புலம்பல்.

>>

பெருமை

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚***அணுகுண்டினால்அமெரிக்காவிற்குப் பெருமைஎண்ணெய் வளத்தால்அரேபியா நாட்டுக்குப் பெருமைஅடர்ந்த காடுகளால்ஆப்பிரிக்க நாட்டுக்குப் பெருமைஆன்மீக அன்பர்களால்இந்திய நாட்டுக்கு பெருமை

>>

என்பா – 60, 61

: கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா 60 தஞ்சாவூர் தலையாட்டி ஜோடி பொம்மைகள்!படுக்கவைத்த மறுநொடியில் நிமிர்ந்து ஆடின!பஞ்சடைத்தப் பாதியுடல் நடன பொம்மைகள்பாவாடை கிடைக்காமல் பரிதவித்தன! என்பா – 61: விநாயகரின் காலடியில் உயிருள்ள எலிக்குஞ்சு!ஸ்ரீ ராமன் நெஞ்சின்மேல் அனுமாரின் பாதம்!தொட்டி …

>>

என்பா 43, 44

அழகியசிங்கர் என்பா 43 கொலுவைப் பற்றி எழுது என்றாள்என்ன எழுதுவது என்று கேட்டேன்மைதிலி கொலு வைத்திருக்கிறாள் என்றுஎழுதி விட்டேன் இப்போது என்பா 44 கொலுப்படிகளில் காந்திபாரதி இல்லையில்லைபுன்னகைக்கும் வள்ளலார் பாபா இல்லையில்லைஎன்றேன் மைதிலியிடம்ஆமாம்.கையில் கிடைத்த பொம்மைகளைவைத்தேனென்றாள்

>>

தலையாட்டி

வவேசு கொலுப்படி பொம்மைகள்கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தன;என்னைப் பார்த்ததும்“ கவிஞனே கேளும் !அருகிலுள்ள கொழுத்த முகத்தோன்எதற்கெடுத்தாலும் தலையாட்டுகிறான்;ஆடாமல் பொம்மையாய் இரு என்றால்அதற்கும் தலையாட்டுகிறான்.அசையாதிருக்கும் எங்களிடைஆடும் இவன் தலை எதற்காக ?தரைப்படியில் அவனைத்தனியாக வைத்துவிடு !” என்றன.நான்“ சரி எனத் தலையாட்டினேன்.”வவேசு

>>

தள்ளுவண்டி கடை

செ.புனிதஜோதி பிழைக்க வழி தேடி வந்தவருக்கும்படித்துகொண்டே வேலைப்பார்க்கும் பசங்களுக்கும்சொற்பகூலி பெறும் உழைப்பாளிக்கும்அதுதான் ஐந்துநட்சத்திர உணவகம்

>>

தமிழ் ஹைக்கூ

யாஸ்மின் சல்மா பனித்துளி தரை பார்த்து தலை வாரிக்கொண்டது மரம் புல்வெளியில் – பனித்துளி! நிலா அள்ளித் தெளித்த கோலப் புள்ளிகளில் கற்றையாய் விழுந்த ஒற்றைப் புள்ளி – நிலா சூரியன் இன்று போகிறேன் மீண்டும் வருவேன் இரவில் இருந்து மீண்டு …

>>

கவிஞன்

புஷ்பால ஜெயக்குமார் அவனிடம்  உங்களது  சராசரி விமர்சனங்களை  முன் வைக்காதீர்கள்  அவனை நீங்கள்  கண்காணிப்பது போல்  அசவுகரியமானது  வேறு எதுவும் இல்லை  அவன் காத்துக் கொண்டிருப்பது  ஒரு பெரிய காட்டில் என்றால்  நீங்கள் நம்புவீர்களா  என்று தெரியவில்லை  எப்படியோ எதுவோ  அவன் …

>>

நீ

டி வி ராதாகிருஷ்ணன் நீஉறங்குகையில்தாழ்ந்த இமைகளைமயிலிறகு போல என்றிட்டான்கவி ஒருவன்..கவிதைக்கு உண்மையும்அழகுதான்.

>>

ஒரு நாடகத்தைப் படிக்க வேண்டுமா மேடையில் பார்க்க வேண்டுமா

அழகியசிங்கர் சமீபத்தில் என் நண்பர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்னை ராமானுஜர் என்ற நாடகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நாடகத்தை எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி. நான் பொதுவாக நாடகமோ சினிமாவோ இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. முதலில் ஒரு அரங்கத்தில் உட்கார்ந்துகொண்டு …

>>

எதிரெதிர்

பானுமதி.ந பார்த்து விட்டேன் அவனை வேலியோரம் ஏதோ போகிறது நிச்சலனமாகத் தாண்டிப் போகிறான் பல்லி, ஓணான், பச்சோந்தி, பாம்பு வேலி தாண்டிப் போவது எதுவோ? வால் சுழற்றி  திரும்பும் அதன் பார்வை அவனும் அப்படி எண்ணியிருக்கலாம். வேலிகள் அகழிகளாக பல்லிகள் முதலைகள் …

>>

தாகத்தைத் தணிக்காத தண்ணீர்!

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா – 1: பழம்பெருமை வாய்ந்த சுற்றுலாத் தலம்!  பலமாநிலத்தோர் வந்து பார்க்கும் இடம்!  வெகுபக்கம் கண்டுவர வாய்ப்பு இருந்தும் மகத்துவமே அறியாத உள்ளூரார்! என்பா – 2: நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்!  எத்தனை …

>>

இனிக்கும் தமிழ்

டி வி ராதாகிருஷ்ணன் தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு.அதுபோல ஒரு ஒரு பொருளைக் குறிக்க பல சொல் உண்டு. பொன்விளைந்த களத்தூரைச் சேற்ந்தவர் கவி வீரராகவர்.இவர் பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர். அவர் எழுதியுள்ள பாடல் ஒன்றினைப் பார்ப்போம். …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 12

அழகியசிங்கர் ஜெகன் : வணக்கம். அழகியசிங்கர் : வணக்கம். மோஹினி : வணக்கம். அழகியசிங்கர்: வணக்கம். ஜெகன் : புதிய முயற்சி எப்படி இருக்கிறது? அழகியசிங்கர் : என்னைப் பொறுத்தவரை நன்றாகப் பொழுது போகிறது. மோஹினி : உங்களால் முன்புபோல் புத்தகம் படிக்க முடியவில்லை இல்லையா? அழகியசிங்கர் : ஆமாம். அதெல்லாம் …

>>

நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியிலிருந்து…….

உன் உலகத்தில இருப்பதுதான் குதூகலமாக இருக்கிறது சுசீலாவின்கடிதத்திலிருந்து, 2. நான் வழக்கம்போல்என் அறையில்நான் என்னுடன்இருந்தேன்கதவு தட்டுகிற மாதிரிகேட்டது“யார்?”என்று கேட்டேன்“நான்தான்சுசீலாகதவைத் திற”என்றாள்எந்த சமயத்தில்எந்தக் கதவுதிறக்கும் என்றுயார்தான்சொல்ல முடியும்?

>>

நாரைக் கூட்டம்

அழகியசிங்கர் ஒரு பாறையின் கீழ் நாரைக் கூட்டம் சிறப்பாக வாழ்ந்து வந்தது.நரிக்குப் பிடிக்கவில்லை. நாரை இடும் முட்டைகளின் மீது அதன் கவனம். நாக்கைச் சப்பிக்கொண்டு எப்போது கவர்ந்து வரலாமென்று யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. ஒரு கிழ நாரை …

>>

சக்திகள் மூவர்- நவராத்திரி

பானுமதி.ந சுடரே! கன்னல் பின்னல் கைக் கொண்டவளே! இடரே படரின் அரிமாயேறி ஆட்கொள்பவளே! மடமை அகற்றி மதியச் செதுக்கும் அருள் கொண்டவளே! திருவே! கமலம் கவளம் கைக் கொண்டவளே! மருவே வாரின் கறுவே கொண்டு கடித்தெறிபவளே! உளமே அழகும் திருவும் பெறவே …

>>

எங்கேயும் சுற்றி’

எஸ்ஸார்சி                 மலர் அங்காடிப் பேருந்து நிலையம்.  உங்களுக்கு சட்டென்று நினைவில் வருகிறதே அந்த ஊர் தான்.  கழுத்து மாரியின் சிலை ஒன்று  பேருந்து நிலைய கிழக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இன்றைக்கும் இருக்கிறது..  அதனைக் குட்டியாக ஒரு கோவில் …

>>

இளையவர்களின் புதுக்கவிதைகள்

தமிழவன்  இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தலைப்பில் தில்லிகை என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில் தமிழவன் தலைமையில் ஒரு சிறப்பான கலந்துரையாடல்.  அதன் காணொளியை நீங்கள் கேட்டு மகிழுங்கள்.

>>

மகாத்மா காந்தி நூல் நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு..

துளி – 223 அழகியசிங்கர் ஒருநாள் ம. நித்யானந்தம் போன் செய்தார். ஒரு பரிசு கொடுக்கப் போகிறோம் என்றார்.சக்தி கிருஷ்ணசாமி விருது வழங்கப் போவதாகக் கூறினார். நேரிடையாக வீட்டிற்கு வந்திருந்து அழைப்பிதழைக் கொடுத்தார். என் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினேன். என்னையும் ஞாபகப்படுத்துகிறீர்களே …

>>

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

பேசுகிறேன் ஒவ்வொருவருக்குள்ளும்  ஒரு விருப்பம் மறைந்திருக்கிறது  அதைப் பற்றிய பிழைகளோடு  அறைகள் என்றால் வீடு  வீடு முழுக்க காற்றைப் போல்  காலம் நிறைந்திருக்கிறது  என் எண்ணங்களைக்  கசக்கிப் பிழிந்து  ரசித்துச் சுவைத்தேன்  கரும்பின் சக்கையைத்  துப்பியபடி சாற்றைக் குடித்தேன்  நான் நினைத்ததைச் சரியாகப்  …

>>

திருட்டு ராஜ்யம்

வளவ. துரையன் இந்தக் காலத்தில்ஒரே ஒரு ஊர்லஎன்று ஆரம்பித்தால் சிறுவர்கள் ராஜாகதை வேண்டாமென்றுஅடம் பிடிக்கிறார்கள் ராஜாக்களின்சண்டையும் சரசமும்இன்று ரசிக்க முடியவில்லையாம் திருடர்களின் கதைதான்சிறுவர்க்கும் வேண்டுமாம் திருடர்கள்வேறு வேறு வேடங்களில்திடீரென்று வருவதும் நமக்குத் தெரியாமல்நம்மைக் கொள்ளையடிப்பதும்சிறுவர்களுக்குப்பிடித்திருக்கிறது. அவர்களும் அத்தொழிலையேவிரும்புகிறார்கள் திருடர் இப்பொழுதுதிருடிக் கொண்டதெல்லாம்பெரியவனாகி …

>>

பானுமதி ந கவிதைகள்

யார்? வாகை மரத்தின் கீழ்க் கிளையிலிருந்து கரைந்தது காகம் முன்பெல்லாம் விருந்து எனச் சொன்ன அம்மா தாளடி சென்று நெல் மணி அளந்து நெஞ்சு வலியுடன் வீடு திரும்பி காணாமல் போன அப்பா வந்திருப்பதாகச் சொன்னாள்.        பார்வைகள் தென்றல் எனும் தொட்டிலிலே …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 11

07.10.2021 அழகியசிங்கர் 1. வணக்கம் வணக்கம் 2. எப்போது இந்த ஐடியா தோன்றியது? எந்த ஐடியா 3. இணையப் பத்திரிகைக் கொண்டு வரவேண்டுமென்ற ஐடியா ரொம்ப நாளா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது.\ 4. மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் உங்கள் பத்திரிகையை “ தெரியாது.  300 பேர்கள் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (5)

ஜெ.பாஸ்கரன் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போல், வேளை தவறாமல், வகை வகையாய், வாய்க்கு ருசியாய் உணவு படைத்தவர் திரு. புஷ்பவனம். காலையில் டீ முடித்தவுடன், நேரில் வந்து எங்களுடன் பேசுவார். முந்தைய நாள் உணவு எப்படி இருந்தது, காரம், உப்பு, எண்ணை …

>>

போலீஸ் ஸ்டேஷன்

அழகியசிங்கர் ஒருமுறை நானும் மனைவியும் அடையார் கேட் ஓட்டல் வழியாக வந்து கொண்டிருந்தோம்.நான் மெதுவாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் டபக்கென்று மனைவியின் பர்ஸ்ஸைப் பறித்துக்கொண்டு டூ வீலரில் பறந்து விட்டார்கள். மனைவி …

>>

சாகசம்

முபீன் சாதிகா அந்தச் சிறுவன் ஓர் அழகான மாயக் குதிரையை வளர்த்து வந்தான். அதில் பயணம் செய்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்பி அதைக் கிளப்பினான். குதிரை சிறுவனிடம் அந்தப் பயணம் மிகவும் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றது. அப்போது …

>>

தளர்தல்

ஆர். வத்ஸலா பகலிலே இரவுபோர்த்து முடங்கிய வானம்பற்றி எரியும் மேகம்மூடும் இமைகள்வறண்ட சிந்தனைமரத்துப் போன உடல்கனத்துப் போன மனம்காற்றுக்கு சிறை முதல் துளிஉடன் உறிஞ்சிக் காயும் பூமிமூச்சிரைக்கத் தொடரும்துணைத் துளிகள்சிலிர்க்க வைக்கும் மின்னூசிகள்கண் கூசும்ஒளிச் செல்வம்முக்கண்ணன்முடி தேடும்ஆகாசகங்கை நிறைந்த பூமிஅலட்சியமாய் உமிழும் …

>>

தர்மராஜ் கவிதைகள்

என்பா 57 வெளியில்வந்தேன்மூக்கிலிரு சொட்டுநீர் விரைந்தேன் படுக்கையறைக்குஏனிங்கு வந்தேன் மீண்டும் வெளியில்மீண்டும் படுக்கையறை கைத்துண்டு கண்ணில் பட்டது. என்பா 58 பனைமரம் நாட்டின்நிலத்தடிநீர் தேக்கி அடிமுதல் நுனிவரைஅத்தனையும் தங்கம் பனைமரத்தின் அழிவுபஞ்சத்தின் அறிகுறி பனை விதை விதைப்போம்.

>>

திறக்கப்படும் நேரம்

செல்விபிரகாஷ்🌹 காத்திருப்புக்காவியத்தின் பக்கங்கள் எல்லாம் திருவிழா கனவுதான். பெட்டியில் அடைக்கப்பட்ட பொம்மைகளின் ஏகாந்த நினைவுகளில் அவதாரங்கள் இடம்மாற்றிப்படுக்கலாம்,புதுப்பபுது வேடம் பூண்டு தெய்வங்கள் தேவதைகளை வேடிக்கைப்பார்க்கச்சொல்லலாம். நடக்கும்வரை நடக்கட்டும்,எல்லாம் அடுத்தமுறைப்பெட்டியைத்திறக்கும்வரைதான்.அதுவரை காத்துக்கிடக்கட்டும் தெய்வங்கள் ஒரு பிடி சுண்டலுக்கும் ஒரு படி சங்கீதத்திற்கும்.

>>

நவராத்திரி நினைவுகள்

உமா பாலு கள்ளிப் பெட்டியை அம்மா திறக்க,சொல்லனா ஆவலோடு காத்திருப்போம் பிள்ளைகள்பழைய துணிகள் சுற்றிய பொம்மைகளை வெளியே கொண்டுவந்து ஒவ்வொன்றாக தூசி தட்டி வைத்த நினைவுகள் .பொம்மைகளை சுற்றிய துணிகள்யாவும் நினைவுப் பேழைகளேஎட்டாவதுபடிக்கையில் , ஒண்ணாவதில் போட்ட கவுன்கள் வெளிப்படும்இது என்னுடையது …

>>

படி ….கொலுப்படி

வவேசு படியில் கொலுவிருக்கும் பொம்மைகள்நாம் பார்க்கஅசையாதிருந்துவிட்டு நாம் தூங்கும் போதுஓடி விளையாடுமாம் குழந்தைசொல்லிவிட்டு உறங்கிவிட்டாள் பொம்மைகள்விழித்துக் கொண்டன.

>>

என்பா 42

அழகியசிங்கர் பொதுவாக ஞானக்கூத்தன்அதிகமாகப் பேசமாட்டார்கவிதைக் குறித்துப்பேசியது ஞாபகத்திலில்லைஆனால் சந்தித்துக்கொண்டிருந்தோம் பேசிக்கொண்டிருந்தோம்இப்போதோ அவர் கவிதைகள்தான்

>>

சுரேஷ் ராஜகோபால் கவிதை

யார் ஒருவரிடம்நம்மால் இயல்பாகஇருக்க முடிகிறதோ… யார் அருகாமையில்நம்மால் பாதுகாப்பாகஉணர முடிகிறதோ… யார் முன்னால்நம் முகமூடிகளின்திரை விலகுகிறதோ… அந்த ஒருவரைத் தான்அத்தனை அலட்சியமாய்நாம் தொலைத்து விடுகிறோம்.

>>

புனித ஜோதி கவிதைகள்

கவிதை 1 மழையில்லாத பொழுதுகளிலும்உன் நினைவு மழையால்நனைந்துக்கொண்டிருக்கின்றேன். மழைக்காலத்தில்சொல்லவா வேண்டும்உன் நினைவுத்தாவணியில்வாடையை அணைக்கின்றேன்… ஐம்பூதங்களில் சீற்றம்என்ன செய்யப்போகிறது?நீ தான்என் நாடி பூதமாயிற்றே… உன் மௌன யுத்தத்தை விடவாபெரிய யுத்தத்தைஇந்த பிரபஞ்சம் கண்டுவிடப்போகிறது…. என்காதல் தேசத்துநீலாம்பிரியே… கிளைகள் அடர்ந்தமரமென்றாலும்மழை விட்டுவிடவா போகிறதுஇச் சிறுகூட்டை…. …

>>

வண்ணமயமாதல்…!

ஆர்க்கே.! மலரில் அமர்ந்திருந்தஅந்த வண்ணத்துபூச்சிபூவுடன்என்ன பேசியதோஎன்ன தேடியதோஎன்ன பரிமாற்றம் நிகழ்ந்ததோஅவைகட்குள்.காற்றில் மீண்டது வண்ணத்துப்பூச்சி.மலரின் அழகு சரி பாதி குறைந்தது.

>>

ஞானக்கூத்தனின் கையெழுத்து

ஆர். வத்ஸலா ஞானக்கூத்தனின் அவர்களின் கவிதையைப் பற்றி எழுதுவதற்கு பல அறிஞர்கள் உள்ளார்கள். ஆகையால் நான் அவருடைய கையெழுத்தைப் பற்றி எழுத விழைகிறேன். மிகப் பெரிய கவிஞர் என்று அறியப்பட்டிருந்தாலும் முதன்முதலாக எழுத தொடங்கியிருந்த என்னுடன் கூட அவர் சகஜமாக பழகுவார். …

>>

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்

அழகியசிங்கர் ஒருமுறை நண்பர்களுடன் அவரைச் சந்தித்தப் போது, அவர் பேசியது ஞாபகத்திற்கு வருகிறது. அன்று தனக்குப் பிற்நத நாள் என்று கூறினார். கூடியிருந்த நாங்கள் அவரை வாழ்த்னோம். அப்போது அவர் சொன்னார். இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்று குடும்பத்தாரிடம் சொன்னேன். …

>>

இரண்டு காணொளிகளையும் பதிவிட்டேன்

வணக்கம். தினமும் நவீன விருட்சம் டெய்லியில் தரமான படைப்புகளை வெளியிட வேண்டுமென்று நினைப்பேன். தூங்கும்போது யோசித்துப் பார்ப்பேன்.  என்னன்ன படைப்புகளை இன்று பதிவிட்டோமென்று. இரண்டு காணொளிகளையும் பதிவிட்டேன். கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று மூன்று விதமாகப் படைப்புகளை வெளிப்படுத்துகிறேன்.   ‘விருட்சம் நினைவுகள்’ என்ற தொடர் கட்டுரையை நாளையிலிருந்து ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன். இன்று பெருந்தேவி, முபீன்  கதைகள் சிறப்பாக அமைந்தன. தொடர்ந்து …

>>

வால் நட்சத்திரம்

முபீன் சாதிகா அந்தச் சிவப்பு வால் நட்சத்திரத்தின் வால் அவன் வாழும் கிரகத்தை உரசப் போகிறது. அதனால் அந்தக் கிரகத்தில் பனிப் பொழிவு தொடங்கிவிடும். கிரகத்திலுள்ள பனி உருகி முழு கிரகத்திலும் நிறைந்துவிடும். அது பல நாள் நீடிக்கும். மீண்டும் பனி …

>>

நினைவுகூர்தல்

பெருந்தேவி என் சிறுவயது நினைவுகளில் ஒன்று என் அம்மாவுடன் செஸ் விளையாடுதல். அம்மாதான் எப்போதும் ஜெயிப்பாள். அம்மாவுடன் சீட்டும் விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தின் பெயர் நினைவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, ஜாக்கி, குவீன், கிங் என்று வரிசையாக அடுக்கும் ஒரு ஆட்டம். என் …

>>

கட்டிடம்

அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை கட்டிடம் அந்த உயரமான கட்டிடத்தை கீழேயிருந்துபார்த்தபோது தலைச் சுற்றாமலில்லை. 18 மாடிகளைக் கடந்து மாடியின் உச்சிக்குப் போய்விட்டான். மாடியிலிருந்து கீழே பார்த்தான். பரபரப்பாக துளித்துளியாக மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவனுக்கு இப்போது …

>>

அன்றும் இன்றும் ஒரு எழுத்து

செல்லப்பா சுப்ரமணியன் காமிரா போட்டோ எடுக்கையில் என்னையே பார்த்தார்கள் போட்டோவை காட்டுகையில் தன்னையே பார்த்தார்கள்                    சி சு செல்லப்பா செல்ஃபி போட்டோ எடுக்கையில் தன்னையே பார்த்தார்கள் போட்டோவை காட்டுகையில் தன்னையே பார்த்தார்கள்            அன்றும் இன்றும் ஒரு எழுத்து மாற்றம்

>>

செப்டம்பர் பதினொன்று

நாகேந்திர  பாரதி ஒரு நிமிடக் கதை -1 திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மறுபக்கம் . . பயத்தோடு இறங்கும் அவனை சறுக்கும் பாறை வழுக்கி விடுகிறது . ஓடி வரும் அவனை  எதிர்கொண்டவன் கட்டிப்பிடிக்க உருண்டு வருகிறார்கள் . கீழே ஒரு …

>>

மலையில் ஒரு விருந்து

லீ போ மொழி பொ : க.மோகனரங்கன் எமது ஆன்மாவைஅவற்றினுடைய நாட்பட்டபழைய துயரங்களினின்றும்கழுவிப் பிழியவெனநூறு ஜாடி மதுவைநாங்கள் காலி செய்தோம்.அது அற்புதமானதொரு இரவு…நிலவு பிரகாசமாக ஒளிரும்போதுபடுக்கைக்கு செல்ல எங்களுக்கு மனமில்லை,ஆயினும் கடைசியில் குடிமயக்கம் எம்மை ஆட்கொண்டது ;மலையில் வெட்டவெளியில்நாங்கள் சாய்ந்தோம்,பூமி தலையணையாக,விரிந்த …

>>

இன்று தான் சென்னை வந்தேன்

வணக்கம். மயிலாடுதுறையில் உள்ள சில கோவில்களுக்கு குடும்பத்தோடு சென்று வந்தேன்.முக்கியமாக என்னுடைய டெய்லி விருட்சத்தைத் தொடர்ந்து நடத்து முடியுமா என்ற கேள்விக்குறி என்னுள் எழுந்தது.  முடியும் என்று நிரூபித்துக் காட்டினேன்.எங்கிருந்தாலும் இந்த இணைய இதழை நடத்த இயலும்.பெரும்பாலும் காரில் போய்க்கொண்டிருக்கும்போது படைப்புகளைச் சேர்த்துக் கொண்டு வந்தேன். ஆனால் சில குறைபாடுகளைத் …

>>

இறுக்கம்

ஆர். வத்ஸலா ரசிக்க முடிவதில்லைஇப்பொழுதெல்லாம்முன் போல்மழையை கருமேகம் சூழ்ந்ததும்வந்து விடுகிறதுகவலைகுடியிருப்பை கட்டியவர்செய்த தவற்றால்வெளியில் பெய்யும் போதெல்லாம்வீட்டிற்குள்ளும்பெய்கிறது மழை தண்ணீராய் பணம் செலவழித்துவேனிற் காலத்தில் சரி செய்தாலும்ரசிக்க முடிவதுமுதல் மழையை மட்டுமேஇரண்டாவதற்குதேவையாயிருக்கிறதுமறுபடியும்வீட்டினுள் குடை நேரம் கழித்து வரும் வேலைக்காரியை கடிந்து கொள்வதில்லைஇங்கு வந்தது …

>>

நண்பரின் கவிதை

இரா. முருகன்  தொலைபேசி ஒலிக்க,’ஒரு கவிதை எழுதினேன், கேளுங்கஎட்டு வரிக் கவிதைஎன் சந்திரஹாசன் அண்ணா பற்றிஎன் அப்பா பற்றி, என்னைப் பற்றிஎன் எண்ணங்கள் பற்றிஇரண்டு நிமிடத்தில்எல்லா உணர்ச்சியும் பொங்கிவரகலைத்துப் போட்ட பிம்பங்களாககுரலில் உருமாறும் கவிதை.சரி சார், பார்க்கலாம்விடைபெற்றோம்

>>

மழை

உமா பாலு வானத்திற்கு வந்தது பூமியின் மேல்காதல்மேகத்தை அழைத்தது தூது செல்லசிலிர்த்தது பூமி மழைக்கரம் தீண்டபுள்ளினம் புல்லினம் யாவும் உயிர்த்தனஎல்லாம் இன்ப மயம்.

>>

தொலைந்துபோகிறேன்

செல்விபிகாஷ்🌹 ஏதோ ஒன்றின் நிசப்த சிந்தனையில், எண்ணம் ஏதுமற்ற வெறுமைப்பொழுதுகளில், “காகிதத்தை எப்படி நிரப்புவது?” என்று எழுதுகோலைக் கேள்விகேட்டபடி, பார்வையைத் திருடனாய் ஒளிந்து நகர்த்திய ஒரு தந்திரப்பொழுதில், வாழ்க்கைக்காய், வயிற்றுக்காய் உறவுக்காய்,உணர்வுக்காய்,மணித்துளிகளை விழுங்கி,காலத்தைத்தின்று குவித்த சில ஓய்வற்றப்பொழுதுகளில் கண்களைக் கசக்கி இதயத்தைப் …

>>

கோணல்

 எல்.ரகோத்தமன்  வெண் சேனைகருஞ்சேனையார் மோதிக் கொண்டாலும்வெற்றி பெறுவது ராஜாதோற்பதும் ராஜாஆத்திரமடைவது மனிதன்!

>>

அவளும்தான்……

…வளவ. துரையன் சபரியைப் போலஇராமனின் வருகைக்குவிராதனும் கவந்தனும் கூடக்காத்திருக்கிறார்கள் நோக்கங்கள்வேறு வேறாயினும்எதிர்பார்ப்பு ஒன்றுதானே? ஒரு நீர்த்துளியாவதுவிழுமென்றுதான் அந்தஒரு முளை வெளியேவருகிறது அதன் எதிர்பார்ப்புஅன்று கருகுகையில்அது இடும் சாபம்கருக்குழந்தையும் கூடத்தாங்கமுடியாது சிறுபுழுவை அலகில்தூக்கிக் குஞ்சிற்காகவிரையும் குருவிக்குத் தெரியும்கூடு செல்லும் வழி பாதை இருட்டானாலும்பறந்து …

>>

யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?

அழகியசிங்கர் எனக்கு எப்போதும் இந்தச் சந்தேகம் வருவதுண்டு. முன்பை விட இப்போது தமிழ்ப் புத்தகங்களை யாராவது விரும்பிப் படிக்கிறார்களா என்ற சந்தேகம்தான். இது குறித்த நான் பலரிடம் விஜாரிக்க விரும்பவில்லை. சமீபத்தில் பெஸன்ட் நகர் பீச்சில் காலை 6 மணிக்கு சில …

>>

“காருணீக பித்ரு”

மீ.விசுவநாதன் “பள்ளிக் கூடம் விட்டு மதியம்சாப்பாட்டுக்கு சைக்கிள்ள வந்த ஒரு அம்பி மேல லாரி ஏறி புள்ள அதே எடத்துல செத்துப் போச்சைய்யா…எலக்ஷனுக்குப் போட்டிருந்த பந்தக் கம்புல இடிச்சு அந்தப் புள்ள லாரிக்குப் பின் டயர்ல மாட்டி இழுத்துக்கிட்டே வந்து எங்க …

>>

மனக் கருவூலத்திலிருந்து -பூரணி

க்ருஷாங்கினி சாமியும் பூதமும மனிதர்கள் பேசும்போது சில சமயங்களில் கேட்டதுண்டு, “சாமியாவது பூதமாவது! ஒன்றும் கிடையாது” என்று. இதிலிருந்து தெரிவது சாமி வேறு பூதம் வேறு என்பதுதான். சாமி என்பது தெய்வீகத்தையும், பூதம் என்பது பௌதீகத்தையும் குறிக்கிறது. பௌதீகம் தெய்வீகமாக முடியாது. …

>>

எப்படியாயினும்

ஆர். வத்ஸலா நான் எழுதிய கவிதைநல்ல கவிதைசுமாரான கவிதைமோசமான கவிதைகவிதையே அல்லாத கவிதைஉனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்அது என் கவிதைநான் பெற்றது

>>

நாடகமே உலகம் அரிதாரத்த பூசிக்  கொள்ள ஆசை

எஸ் வி வேணுகோபாலன்  “என்ன சித்ர குப்தரே, கணக்குகள் கச்சிதமா?”“கூட்டல் கழித்தலில் கொஞ்சம் தகராறு அடிக்கிறது பிரபோ”“வாத்தியார் பிரம தேவனிடம் ஒருமுறை வாய்ப்பாடு கேட்டுக் கொள்வது தானே?”“அவருக்கே மறந்து போச்சாம்!”“என்னது, சரி, சரஸ்வதி?”“பூலோகத்துல தனக்குப் போட்டியா கம்ப்யூட்டர் கண்டு பிடிச்சாட்டங்கன்னு அந்தம்மா …

>>

https://bea0ba7ab1ab1ca410de357b3987602f.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html Do you want to instead open the app ? Later Open now முகப்பு  இலக்கியம் கோபால்  Published : 03 Oct 2021 03:10 AMLast Updated : 03 Oct 2021 05:11 AM இலக்கியத்துக்கென்று ஓர் இணைய நாளிதழ்: …

>>

எலிப்பொறி

உதயசங்கர் எப்படியும் இன்று அந்த எலியைப் பிடித்து விடவேண்டும். அயத்து மறந்து எந்தப் பொருளையும் வைப்பதற்கு நீதமில்லை என்று நினைத்தாள் கோமு. இதுவரை அவள் எலியைப் பார்க்கவில்லை. ஆனால் எலி இருக்கிறதென்று நம்பினாள் கோமு. நேற்று இரவில் அவளுடைய பித்தவெடிப்பு விழுந்த …

>>

களவு

முபீன் சாதிகா அவன் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளைச் செய்யக்கூடியவன். ஆனால் அவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கவே முடியாத பல களவு வேலைகளைச் செய்திருக்கிறான். ஒரு வங்கியின் பணக்கிடங்கு இருக்கும் அறைக்குள் அவனால் நுழைய முடியவில்லை. அந்தக் கதவு திறக்கச் சிலருடைய விழித்திரையைப் பதிவு …

>>

ஆசிரியர் பக்கம் வணக்கம்.நான் இப்போது மயிலாடுதுறையில் இருக்கிறேன். ஆனால் அங்கிருந்து மிகுந்த சிரமங்களுடன் smart phone ஐ வைத்துக்கொண்டு எனக்கு வரும் போஸ்டுகளைப் பதிவு செய்கிறேன். இரண்டு நாட்களில் சென்னைக்கு வந்து விடுவேன். வந்தவுடன் நான் செய்த தவறுகளை சரிசெய்து விடுவேன்.

>>

இதோ ஒரு கவிதை –

இதோ ஒரு கவிதை – வ.வே.சு எனும் தலைப்பில் நான் இரசித்த கவிதைகளைப் பற்றி எழுத உள்ளேன். சமகாலக் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றியனவாக அவை அமையும். இதோ ஒரு கவிதை-1 “நாற்காலி” – அழகியசிங்கர் அழகியசிங்கரின் “நாற்காலி” கவிதை மிக எளிய …

>>

தோழமை  

-எஸ்ஸார்சி  பணி ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆச்சரியமாக  இருக்கிறது. திரும்பிப்பார்ப்பதற்குள்  வயது  ஓடிப்போய்விடும் என்பார்கள்.அது சரியாகத்தான் இருக்கிறது.. முதுகுன்றம் நகரில் அவனுக்கு ஒரு காலி மனை இருந்தது. அதனை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ’ஏதாவது ஒன்று இருக்கட்டுமே’ என்று வாங்கிப்போட்டான். அந்த …

>>