வி. வி. கலைச்செல்வி/எதிரிக்கு எதிரி எனக்கு நண்பனல்ல

ஒருவர்க்கு ஒரு எதிரிதானே எதிரியாக இருக்க முடியும்? ஆனால் பாருங்கள்என் கண்கள்எனக்கு எதிராக நான் பார்க்கக்கூடாதவற்றையெல்லாம் பார்க்கிறது என் கைகள்எனக்கு எதிரானதையே எப்போதும் எழுதுகிறது என் கால்கள்நான் போகக் கூடாத பக்கம் தான் போகிறது. என் வாய் எப்போதும் எனக்கு எதிராகவே …

>>

ஏர்வாடி ராதாகிருஷ்ணன் /காதல் கடிதம்

கசங்கிக் கிடந்ததுஒரு காதல் கடிதம்.எழுதியவன் பெயரும் இல்லைஎழுதியதுயாருக்கென்றும் தெரியவில்லை . அதில் காதல் மட்டும்யாசிக்கப்பட்டிருந்தது.அது அவளால் ஏற்கப்பட்டதாஎன்பதும் தெரியவில்லை. அவளுக்கு அந்தக் கடிதம் கிடைத்திருக்குமா ?அவள் மறுத்துக் கசக்கியதாஅல்லதுஅவளே பயந்து குப்பையில் எறிந்ததா ? எதுவும் தெரியவில்லைஎன்றாலும் காதல் இருக்கிறதுஅந்தக் கசங்கிய …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/பண்ணை வீடு

கூட்டம், விளையாட்டு, குடில்எனப் பொருள்பலவாம் பண்ணைக்கு. கோழிப் பண்ணை, ஈமுப் பண்ணைஎதுவானாலும்முதலை வைக்க வேண்டும்.முதலையாய்வாரிச் சுருட்டி ஏமாற்ற,கையில்காப்பு நிச்சயம் ஏறும். பெரிய பண்ணை, சிறிய பண்ணைஎன்றுகொடி கட்டி சிற்றூர் ஆண்டவர்உண்டு.ஏழை,எளியவர் உழைப்பைஉறிஞ்சிஉல்லாசம் கண்டவருண்டு. விடுதலை வேள்வியில் மக்களாட்சிவரம் பெறஏகபோக உரிமை காலாவதிக்கணக்காகஇடுப்பில் …

>>

தங்கேஸ்/மொழி பெயர்ப்பு

ரூபி கெளர் என்ற பெண் கவிஞர் மற்றும் எழுத்தாளர் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார். ஆங்கிலத்தில் கவிதைகள் உரைநடைகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களின் …

>>

நாகேந்திர பாரதி/கண்மாய்க் காலம்

காலையிலும் மாலையிலும்கண்மாய்க்குப் போனதுண்டாமழைக்காலம் ஆனாலும்மறக்காமல் குடையுண்டா வழுக்கி விட்ட களிமண்ணால்வேட்டியிலே கறையுண்டாகரையோரக் கல் மேலேகாலோரம் தேய்த்ததுண்டா கண்மாயைக் கலக்கி விட்டதொபுக்கடீர்க் குதியல் உண்டாஇடுப்புத்துணி பிழிந்தெடுத்துதலை துவட்டி எழுந்ததுண்டா பரீட்சைக்குப் படிப்பதற்குக்கரையோரம் கோயில் உண்டாபால் பருவக் காதலுக்குப்படிக்கட்டும் அங்கு உண்டா தண்ணியிலே ஓட்டுச் …

>>

நகுலன்/நானுமென்னெழுத்தும்

நின் கைவசம்என் கைப்பிரதி“இதனையெழுது”என்றாய்எழுதினேன்.“இதனையழி” என்றாய்“அழித்தேன்”“இதனையிவ் வண்ணமெழுது” என்றாய்சொன்னவண்ணமே செய்தேன்.இதுவென்னூல்இதுவென் பெயர்இது வென்னெழுத்துவிமர்சனமும் விரைவில் வந்தது“ஆ என்ன வெழுத்து,” என்றாரொருவர்“ஆ இதுவன்றோ வெழுத்து” என்றாரொருவர்.என்எனழுத்தில் நானில்லைஎன்றாலுமென் பெயருண்டுஎழுதியெழுதி அழித்தேன்அழித்து அழித்து ஆளானேன்.விமர்சகரும் சொல்லி விட்டார்இல்லா ததையெல்லாம்உண்டென்றுசொல்லி விட்டார்.மாமுனி பரமஹம்ஸன்அவன் மாபெரும் சீடன்சொன்னான்“மாயை யென்பதுமன்பதையனுபவம்”மாயையென்னெழுத்துமாமாயைஎன் …

>>

ப.மதியழகன்

இன்று சொல்புதிது கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1கும்மாளம் குழந்தைகளின் கண்கள்ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன்பார்க்கின்றதுஅவர்களுடைய பாடப்புத்தகத்தின்நடுவில் மயிலிறகு இருக்கிறதுஅவர்களுடைய பேச்சில்மழலை தெரிகிறதுஅவர்களுடைய உலகத்தில்சோட்டா பீமையும்,லிட்டில் கிருஷ்ணாவையும் தவிரவேறு யாரையும்அவர்கள் அனுமதிப்பதில்லைஅவர்களை தேவதைகள்தான்பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்அவர்கள் ‘அ’ ‘ஆ’வன்னாசொல்ல ஆரம்பித்தவுடன்உயிர் எழுத்துகளுக்கும்மெய் எழுத்துகளுக்கும்றெக்கை முளைத்துபரதேவதைகளாகவகுப்பறையிலே வலம்வருகிறார்கள்டீச்சர் …

>>

தங்கேஸ்

வாசற் கோலத்தைஇழுத்துச் செல்லும்சிற்றெறும்புகளைவேடிக்கை பார்க்கதொடங்கியதிலிருந்துஆரம்பித்து விட்டதுஇன்றைய பொழுது இன்னும் கட்டி முடிக்கப்படாதமதில் சுவரின் மீதுகுறுக்கும் நெடுக்குமாக நடந்தபடிசோம்பல் முறிக்கும்வெள்ளை பூனைக்குஎந்த எலி உணவாகப் போகிறதோஇன்று சற்று ஆசுவாசமாய்புரண்டு படுத்திருந்ததெருக்களெல்லாம்கயமையின் காலடிகளை சுமக்கதங்கள் முதுகுகளைதயார்படுத்திக் கொள்கின்றன சற்று முன் அவள்நின்ற பால்கனிகாலியாகி விட்டதுஇனி …

>>

வே.கல்யாண்குமார்

துண்டுப்பட்டு கிடந்தாலும்..தமிழன் தோளில்..துண்டுகளைப் பாருங்கள்!துண்டின் கதை கேளுங்கள்! உழவர்களின் மேனியிலே..கிழிசல் துண்டு! உள்ளவனின் மேனியிலே சரிகைத் துண்டு!காதிபவனில் விற்காத கதர்த் துண்டு!கடைத்தெருவில் கலர்கலராய் தொங்குது துண்டு!கடவுள் இல்லை என்பவனுக்கு கறுப்புத் துண்டாம்!சபரிமலை சாமிதோளில் காவித் துண்டாம்!அதிஷ்டத்தை தருவதுவோ மஞ்சள் துண்டாம்!ஆளுக்காளு போடுவது …

>>

எஸ்ஸார்சி

கானல் நீர் எழுதினால் என்னஎழுதாவிட்டால் என்னநீ எழுதியதை யாரும்படிக்கப் போவதில்லைபடித்தவர்கள் விமர்சிக்கப்போவதில்லைசும்மா இருக்கலாம் தான்சுழி விடமாட்டேன் என்கிறதுதனக்கு மட்டுமே ஏதோதெரிந்த மாதிரிக்குகானல் நீர்அடிக்கடி காட்சியாவது ஓய்ந்தால்நலமாக இருக்கும்அதுதான் நடக்கமாட்டேன்என்கிறதுஅடம்பிடிக்கிறது எப்போதும். பம்மாத்து நன்றாக எழுதுவதற்கும்மனம் நன்றாக இருப்பதற்கும் துளிக்கூடசம்பந்தமே கிடையாதாவக்கிரமாய்ச் சிந்திப்பவர்கள்வக்கணையாய் …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

17/8/24 அன்று சொல் புதிது கவியரங்கத்தில் வாசித்த கவிதை 1 அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லைஆனால்அவன் தோற்றம்எனக்குப் பிடித்திருந்தது அவனுடைய சில குணங்கள் எனக்குப் பிடிக்கவில்லைஆனால்அவற்றை வேறொருவர் விமர்சித்தால்எனக்கு கோபம் வரும் சுய மதிப்பு மிகுந்தவள் நான்ஆனால்சில சமயம் அவனுடைய …

>>

மதுவந்தி கவிதைகள்

17.08.24 விருட்சம் இணைய கவியரங்கில் வாசித்த எனது 3 கவிதைகள் கீழே. “என்ன ஆச்சு ?”எனக்கேள்வி அனுப்பினால்“காத்திருத்தல் இனிது” எனகுறுஞ்செய்தி அனுப்புகிறாய். இதமான கடற்காற்றுஇளசான மாலைவெயில்காத்திருக்க வசதியானபேருந்து நிறுத்தம்.ஆனால்,, பார்வைகளின் சூடுதாங்க முடியவில்லை,பார்வைகளின் பின்னால்கேள்விகளும் , திட்டங்களும்புரிந்து இன்னும்இறுக்கத்தைக் கூட்டுகிறது. மூச்சிறைக்க …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள் சாலைக்கொரு சோகம் கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களேகண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே மண்ரோடாய் நானிருந்த அந்தக் காலம்மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம் சேற்று மண்ணில் மீன்குஞ்சு நீந்தி ஆடும்சிறுகுருவி ஓரத்தில் பாடி ஓடும் காற்று …

>>

மா. காளிதாஸ் கவிதை

ஒரு பொம்மை உடைவதற்கு முன்னும்உடைந்த பின்னும்அதைப் பொம்மையெனஒப்புக்கொள்ள மறுக்கிறாள் அம்மு. மழைநாளில்பொம்மையின் நிறங்களைவானத்தின் மீது வீசியவளைக்கையும் களவுமாகப் பிடிப்பேன் எனச் சூளுரைக்கிறாள். பொம்மையுடன் விளையாடிய தெருவுக்குப்பொம்மைத் தெருவெனப் பெயர் சூட்டுகிறாள். பொம்மைக்கான உணவுபொம்மைக்கான உடைபொம்மைக்கான விளையாட்டுப் பொருள் இல்லாத.அவ்வளவு பெரிய கடையை …

>>

சிதைந்த சிலை/ந.பானுமதி

கண்களை கசக்கிக் கொண்டேன்தலையற்ற சிலையைக் கண்ட நிமிடம்நெஞ்சு அதிர்ந்ததுகலையின் அழிவில்மானுடம் அல்லவோ வீழ்த்தப்பட்டது?எந்தத் தலையை அதில் பொருத்திப் பார்க்க?எதுவும் அந்த சிற்பியின் கனவாகுமா?தலைபோயும் உடல் வாடா சிலையில்தொண்டர்கள் தலைவர்கள் அரசர்கள் ஆண்டிகள்ஆண்கள் பெண்கள் என எவரும் தெளிவாகப் பொருந்தவில்லை இப்படியே இருக்கட்டும் …

>>

நாகேந்திர பாரதி/கத்தாழை முள்

———- காட்டுக் கத்தாழையைச்சாட்சியாய் வைத்துக் கீறிய பெயர் காட்டிக்காதல் என்றேன் நான் வடிந்த பால் காட்டிக்கண்ணீர் என்றாய் நீ செடிக்கும் வலிக்கும்சேதியும் புரிந்தது உனக்குள் இருக்கும்மென்மையும் புரிந்தது மனதிற்குள் கத்தாழைமுள்ளாய்க் குத்தியது ———

>>

வே.கல்யாண்குமார்/மண்பாண்டமே

கொண்டுவந்து போட்டாண்டி ஒருவன்!குதிகாலால் மிதித்தாண்டி ஒருவன்!மொண்டு மொண்டு நீர்ஊற்றி பிசைந்து…மண்பாண்டம் வனைந்தாண்டி குயவன்! மண்தரையில் விழுந்து எழுந்து ஆடி..மண்குவித்து மனம்களித்து மகிழ்ந்து விளையாடி.. பெண்கலந்து பேசி உடனாடி.. மண் உடைந்து கலந்து புதைந்தாண்டி! மண் பானை நெருப்பினிலே வெந்து..மண் பொம்மை யாகிகைத் …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

கூழாங்கற்களோடுபேசிக்கொண்டுபாறை இடுக்குகளில்ஓடிக்கொண்டுநாணற் தோப்ப்பில்சுற்றிக்கொண்டுஇதமான மணலில்கெண்டை மீனாகநீந்திக் கொள்ளவேவிருப்பமெனக்கு…இதைக் கேட்டுக்கொண்டநீங்கள்என்னை பலநிற பலநிறகண்கவர் மீனாக்கிவிட்டீர்கள்..ஒருசில கூழாங்கற்களோடும்..பூற்களோடும்..சில பொம்மைகளோடும்..இப்போது நானும்குறுக்கும் நெடுக்குமாய்..ஆக்சிஜன் நிரப்பப்பட்டுகுடுவைக்குள்அடைக்கப்பட்ட நதியில்!

>>

ப.மதியழகன்/சொர்க்கமே என்றாலும்

அரிசியையும் உளுந்தையும்சேர்த்து அரைத்துஆவியில் வேகவைத்தால்இட்லி தயார்எனக்கு இட்லி பிடிக்கும்மினி இட்லியின்ரசிகன் நான்காஞ்சிபுரம் இட்லியென்றால்நாவில் எச்சில் ஊறும்மதுரை இட்லிக்கென்றுதனி மகத்துவமே உண்டுஅதனுடன்சட்னியும், சாம்பாரும் சேர்ந்தால்அன்று விருந்துதான்என்னதான் பீட்ஸாவும்பர்கரும் வந்தாலும்இட்லி மீதுள்ளமோகம் குறையவில்லைஇட்லிமாவு புளித்துவிட்டால்தோசையாக மாறும் வித்தைநம்மவர்கன் கண்டுபிடிப்புதான்பல வீடுகளில்ஞாயிற்றுக்கிழமைகாலை நேரம்மல்லிகைப்பூ இட்லியுடன் தான்விடியும்சாப்பாட்டு …

>>

வே.கல்யாண்குமார்/இட்டலியே.. இட்டலியே

இட்டலியே.. இட்டலியேஎங்கள் வீட்டு இட்டலியேஉளுந்தமாவும் அரிசிமாவும்..சேர்ந்து வெந்த இட்டலியே! இட்டலியே இட்டலியேஅன்னை வார்த்த இட்டலியே! அன்றாடம் எங்கள்பசி தீர்க்க வந்த இட்டலியே! தொட்டுக்கொள்ள சுவையாக ஒட்டிப்பிறந்த சட்டினி! கட்டித்தங்கம் காரம் கம்மி வெங்காயம் சாம்பாரு! நல்லஎண்ணை மிளகாய்பொடி நாவுக்கேற்ற கூட்டணி! நடுநாயகமாகத் …

>>

கல்யாண்ஜி கவிதை

இந்த மணல்மலையில் பிறந்தது.இந்தச் சிப்பிகடலில் பிறந்தது.இந்த மழைவானத்தில் பிறந்தது.இந்த மஞ்சட் கொன்றைப் பூஉச்சிக் கிளையில்.எல்லாம் பிறந்ததுபெரிய பெரிய இடங்களில்.இப்போது பறந்து போனஇந்த மூன்று குருவிக் குஞ்சுகள்பிறந்தது மட்டும்எங்கள் வீட்டுத்துருப்பிடித்த தபால் பெட்டியில்.

>>

மோகன் ஜி/அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்

லக்ஷ்மி ராவே மா இண்டிகிக்ஷீராப்தி புத்ரி- வரலக்ஷ்மி ராவே மா இண்டிகி.. 🌼☘️🌺🌸 செல்வத் திருமகளே! பூமகளே!திருப்பாற்கடலில் உதித்தவளே!வரங்கள் அள்ளித்தரும் திருவே!எங்கள் இல்லத்துக்கு வருகை தாராய்… எங்கள் ஊருக்குஎங்கள் தேசத்துக்குவந்து வாசம் செய்வாய்! எங்கும் சுபிட்சம்எங்கும் மலர்ச்சிஎங்கும் அமைதிநிலைக்க வரமருள்வாய்! கேட்டதைக் …

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு/ஆனந்த சுதந்திரம்!

‌ சுதந்திரத் திருநாள் என்றால்சொல்லுக யாதென? இற்றை“புதியதோர் உலகம்” காணும்புதுமை இளைஞரைக் கேட்பீர்! “எதையும் செய்யலாம் இங்கே!எதையும் சொல்லலாம் இங்கே!எவர்க்குமே அடங்கிடா போக்கில்எவற்றையும் தூற்றலாம் இங்கே!” “வதைபட சுதந்திரம் தன்னைவாங்கிய காந்தியைக் கொன்றார்!மதங்களின் இணக்கம் தன்னைமதியாத போக்கில் சென்றார்” வாளுடன் இரத்தமும் …

>>

நாகேந்திர பாரதி/எது சுதந்திரம்

மற்றவர்க்காய் எழுதினாய்படித்தவர் பல பேர் மற்றவர்க்காய்ப் பேசினாய்கேட்டவர் பல பேர் உனக்காக எழுதுபடிப்பவர் படிக்கட்டும் உனக்காகப் பேசுகேட்பவர் கேட்கட்டும் இதுவே உன் இயற்கைஇதுவே உன் சுதந்திரம் ————

>>

ப.மதியழகன்/காந்தி பிறந்த மண்

காந்தியை மகாத்மா ஆக்கியதுஅகிம்சை எனும் மந்திரமேஅகிம்சையால் சுதந்திரம் பெற்றஒரேயொரு நாடுநம் பாரதத் திருநாடுஆயுதம் தாங்காமலேயேஆங்கிலேயர்களைகப்பலேறச் செய்தோம்காந்தி சொல்லேவேதவாக்கு என்று‘வெள்ளையனே வெளியேறு’என்ற கூக்குரலுடன்நாடே வீதிக்கு வந்துபோராடியதுகாந்தியைத் தவிரதலைவன் என்றசொல்லுக்கு தகுதியானவர்வேறு யாருமில்லைஅதனை இன்றையதலைமுறை உணரவேண்டும்அடக்குமுறைக்கு எதிராகவன்முறைகட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தால்நாட்டின் வரலாறேமாறியிருக்கும்நாளைய பொழுதுநமக்கான பொகுதுஎழுதட்டும் இந்தியாபுது வரலாறு!

>>

ஆர் வத்ஸலா/நாட்டுப்பற்று

நிறமிழந்த ‘பாலிஸ்டர்’சட்டை அணிந்த அவன்அந்த இடத்தைபெருக்கி சுத்தம் செய்தான்அடுக்கியிருந்தபிளாஸ்டிக் நாற்காலிகளைபிரித்துப் போட்டான்எல்லோரும் நல்லாடைகளில்கூடிய பின்சிறுகொடியும் குண்டூசியும்தந்துதானும் ஒன்றுகுத்திக் கொண்டான் பெருமையுடன் புதுக் கதர் சட்டை அணிந்திருந்தகுடியிருப்பு சங்கத்தின் காரியதரிசிக்குகடைசி நிமிடத்தில்தான் சாக்லெட் பாக்கெட் எடுத்து வர மறந்ததுநினைவுக்கு வரஓடினான் இவன்நிலவறையிலிருந்தசங்க அலுவலகத்திற்கு …

>>

சாய்ரேணு சங்கர் கவிதை

என் கால்கள் நடக்கும் பூமி நீஎனைக் காத்து நிற்கும் சாமி நீபொன்னாய் வளந்தரும் நாடு நீபுகலாம், சுகமாம் வீடு நீ அறம்காக்கும் போர் வீரன் நீஅகம் அடங்கிய தீரன் நீதிறனும் அறிவும் உன்சொத்துதேர்கல்வி ஞானம் உன்வித்து முகுந்தன் சொன்ன கீதைநீமுக்திநெறிக்கோர் பாதைநீஅகன்று …

>>

வே.கல்யாண்குமார்/இன்று காந்தி வந்தால்

வந்தேன் நான் நமதுபாரதத்தைப் பார்ப்பதற்கே!அந்தோ! அதிசயமே..அகிம்சை உண்டோ காண்பதற்கே!ஹே… ராம்! ஹே..ராம்! சாலையில் போதையிலே..இளைஞர் உருளக் கண்டேனே!சகலரும் இலஞ்ச ஆற்றில்மூழ்கிக் குளிக்க கண்டேனே! ஓலைக் குடிசையிலே..ஒதுக்குப்புறத்தில் பலர் இருக்க..பாலோடு பழரசத்தைசிலர் சுவைக்கக் கண்டேனே.! வெள்ளையர்கள் சென்ற பின்னே.. கொள்ளையர்கள் வந்தனரே..நல்லவர்கள் மூலையிலே.. …

>>

அழகியசிங்கர்/சுதந்திரதினம்

சுதந்திரதினம் 1 கிடைத்து78 ஆண்டுகள் முடிந்து விட்டதுஇன்னும் வறுமைஒழியவில்லைஏழை ஏழையாகத்தான்இருக்கிறான்பணக்காரன் பணக்காரனாகத்தான்இருக்கிறான் உண்மையில்சுதந்திரம்என்பதுகொண்டாட்டமாதிண்டாட்டமாதெரியவில்லை சுதந்திர தினம் 2 எனக்குஉண்மையில்பாரதிதான்ஞாபகத்திற்குவருகிறார் போகின்ற பாரதமும்வருகின்ற பாரதமும்என்று கவிதை எழுதினார் திரும்பிப்பார்த்தால்பாரதம்போய்க் கொண்டேஇருக்கிறது

>>

இலத்தூர் கி.சங்கர நாராயணன்/இதயமே இந்தியா

இந்திய மண்ணை நினைந்து விட்டால்இந்தியர் உள்ளம் இணைந்து விடும்சிந்திய ரத்தம் சிந்தனை வடிவாய்முந்தையர் நினைவை முடிக்கி விடும் கட்டப் பொம்மனை நினைந்து விட்டால்கட்டுடல் மீசை நினைத்து விட்டால்கட்டிளங் காளையர் நாட்டைக் காக்ககயத்தாறு நாடிக்கவனம் கொள்வர் போர்பந்தரிலே காலடி வைபுண்ணிய மண்ணை நெற்றியில் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மூவர்ண கொடி

தன்னிகர் அற்ற,தனிக் கொடி. பட்டொளி வீசி,பறக்கும் கொடி. பளிஞனும் இருளனும்,பணியும் கொடி செழுமை காட்டும்பச்சை வர்ணம்; உயர்வைச் சுட்டி,உயர்ந்த கொடி தூய்மை விளக்கும்வெண்மை நிறம்; அமைதி துலங்கும்,அருட் கொடி தியாகம் துளங்கும்காவி நிறம்; தீரம் செறிந்த,வீரக் கொடி தர்மம் விளையும்மண் இதுவென, …

>>

ஜெயதேவன் கவிதை

கடலிலிருந்து ஒரு சொம்புதண்ணீரைக் கொண்டுவந்துநடுஹாலில் வையுங்கள்வீடெங்கும் கேட்கும் அலையோசை காட்டுப்பூவை அதன்காம்பு நோகாமல் பறித்துவந்துபூஜை அறையில் வையுங்கள்காட்டின் பாடல் அதில் கேட்கும் ஒற்றை இறகுகூட ஒரு பறவையைஒற்றை சதங்கைகூடஒரு நாட்டியக்காரியின்மென்மயிர் பாதத்தையும் நினைவூட்டலாம் தனித்திருக்கும் ஒரே ஒரு நாற்காலி சொல்லிவிடுமேகுழந்தைகள் அற்ற …

>>

விஞ்ஞானி/வெள்ளி மூக்கு குதிரை

கழுதையை பார்த்துகுதிரை என்று சொல்லிகைதட்டி குதூகலித்ததுகுழந்தை . இல்லை அது கழுதைஎன்று சொன்ன அப்பாவைகழுதை முறைத்து பார்த்ததுநான் கழுதையாஇருந்தால் என்னகுதிரையாகஇருந்தால் என்னகுழந்தை சந்தோஷத்தைகெடுக்காமல் இருஎன்பது போல் ()

>>

வேகல்யாண்குமார்/ஆட்டுக்கல்

பாட்டியின் காலத்தில்பக்கபலமாயிருந்தேன!அம்மாவின் அரவணைப்பில்அசைந்தபடி நானிருந்தேன்!மகளே.. உன் காலத்தில்மறைவிலே இருக்கிறேன்..பேத்திகள் என்னை..இணையத்தில் பார்க்கலாம்.. ஆட்டுக்கல் என்றால் என்ன? என்று கேட்கலாம்! கூகுளில் தேடலாம்.. அருங்காட்சியகத்தில் ஆட்டுக்கல்லை வைக்கலாம்! எனக்கொரு நடுக்கல் எதிர்காலம் வைக்கலாம்!இட்டலிக்கு சட்டினிக்குஎன்னிலே ஆட்டினார்!இப்போது என்நிலைமைஎல்லோர்க்கும் புரியலாம்!பழமையை மறக்காதே! புதுயுகம் பிறந்தாலும்ஆட்டுக்கல்லை …

>>

செ.புனிதஜோதி கவிதை

சந்தன முகத்தோனேசடுதியில் வாருமய்யா.சங்கடம் கரைந்திடவேமயிலேறி வாருமய்யா…சுடர்மிக்க ஒளியானேசுவைமிக்க கனியானேசுந்தர வடிவேலாசுகம் கொஞ்சம் தாருமய்யா …உன் வில்லானப் புருவத்திலேகரும வினைகளைக் களைபவனே..உன்கூர் செவித்திறத்தாலேபக்தர்களின் குறைக் கேட்பவனே..அருள் தரும் விழியாலேகருணைகள் பொழிபவனே….உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம்எங்கள் உள்ளமெல்லாம் உன்கீதம்…உன் நாசி விடும் மூச்சாலேஎங்கள் நாடியொலி நிலைக்குதய்யா…உன் …

>>

அதிரன்/சத்தம்

வெள்ளிக்கிழமைநள்ளிரவில்இயற்கையின் அழுத்தமானமுதல் அழைப்புக்கு பதில் சொல்லகழிவறை சென்றவனுக்குபலமாக கேட்டது எதிர் மாடித் தளத்துஇளைஞர்களின் மது விருந்து கொண்டாட்ட சத்தம்சாளரத்தை திறந்து பார்த்த போதுஎந்த சத்தமும் இல்லை….தெருமுழுக்க நிசப்தம் . மீண்டும் சத்தம்தெருவில் யாரோ ஒரு பெண்கைபேசியில் யாரோடோ சண்டை போடும்சத்தம்மறுமுறை சாளரம் …

>>

செந்தில் பிரசாத்/நினைவுகள் சில

ஹேமா டீச்சர்ஆசிரியர் தினத்துக்குஅணிந்திருந்த புடவையின் நிறம்இன்னும் பசுமரத்தாணியாய்மனதில்…நேற்றுநான் அணிந்த உடையேநினைவில் நிற்காதஎன்எழுபது வயதில்.

>>

அழகியசிங்கர்/கருப்பு நாய்

வாட்டச்சாட்டமாகக்கருப்புநாய்அப்பாலோ மருந்தகத்தில்கட்டியிருந்ததுஅசந்து விட்டேன்அதனிடம் கேட்டேன்போட்டோவுக்குபோஸ் கொடு என்றுசரிசரி என்று தலை அசைத்ததுகம்பீரமானஅதன் தோற்றத்தைப்புகைப்படம்எடுத்துக்கொண்டேன்சிறிது நேரத்தில்அதன் எஜமானைப்பார்த்தவுடன்வாலசைத்தது இன்றுநான் சந்தித்தமுக்கியமானநபர்கருப்புநாய்

>>

ஷண்முக சுப்பையா/சுடுகாடு

சுடுகாடொன்றுசுற்றித்திரிந்தது.அதி அற்புதசடலந்தாங்கிஆண்டுக் கணக்காய்சுடுகாடொன்றுசுற்றித் திரிந்தது.சுடுகாடென்றால்அது மெய்ச் சுடுகாடுஅதில் கொள்ளிவைப்புகுத்தகையல்ல.இதுவரைக்கும்கொள்ளி வைத்தார்எண்ணிலாதார்என்றிருந்தும்சடலமட்டும்வெந்து வெண்ணீறுஆகவில்லை.நீறி நீறிஇருந்ததல்லால்வெந்து வெண்ணீறுஆகவில்லை.அதனால் தானோஎன ஐயுறுமாறுமெய்ச்சுடுகாடதுவும்நெட்டுயிர்த்துநெட்டுயிர்த்துசுற்றித் திரிந்தது.யாரோ இறுதியில்கருணை கூர்ந்துவைத்த கொள்ளிபற்றிப் பிடித்திடநீறி நீறிஇருந்த சடலமும்மாயமாய் மறைந்தது.மெய்ச்சுடுகாடதுவும்பொய்ச் சுடுகாடுபோய்ச் சேர்ந்தது.

>>

சிறகா/உறவுகள்

. இருளில் தேடினாலும்பகலில் தேடினாலும்ஒளியின் துணையின்றிகண்டறிய இயலாது . காற்றில் மிதக்கும்பஞ்சு வெடித்த விதை போல்புலம் பெயர்ந்தஉறவுகள். .21-7-2024.

>>

மாடல்/தங்கேஸ்

ஒரு ஊர்லஒரு காடு இருந்ததுஅதில் ஒரு சிங்கம்ராஜாவாக தன்னைமுடி சூட்டிக்கொண்டதுஅதற்குப் பிறகு அதன் குட்டிபிறகு அந்த குட்டியின் குட்டிஇப்படி குட்டி வாரிசுகளாகவேபரம்பரையாகஅந்த காட்டை ஆள ஆரம்பித்தனஅதற்கு சிங்கமாடல் ஆட்சியென்றுபெயர் சூட்டப்பட்டுவிழாவும் எடுக்கப்டுகிறதுஆனால் அதே காட்டில்மான்கள் என்னவோஅதே பயத்துடன் தான்குட்டையில் இறங்கிநீர் அருந்துகின்றனஇன்னமும்

>>

அதிரன்/அம்மாவின் பூனை

பூரணம் என அதற்குபெயர் வைத்திருந்தாள் அம்மா.அவள் என்ன பேசினாலும்புரியும் அதற்குஅதுபோல்அம்மாவிற்க்குஅதன் “மியாவ்கள் “ ஒரு மியாவில் புரிந்து விடும்,அதற்கு என்ன வேண்டும் என. சில நேரம் பசிசில நேரம் ஸ்பரிசம். பூரணத்திற்க்கு நாங்கள் எல்லாம்ஒரு பொருட்டல்லஅம்மா வீட்டில் இல்லை என்றால்ஒவ்வொரு அறையாகபார்த்து …

>>

விஞ்ஞானி/துணை

அபூர்வமாய் வாங்கியஅரிசியை களைந்துஉலைவைக்ககுடிசைக்குள் நுழைந்தஅனாதைக் கிழவிகருப்பா கருப்பா எனகுரல் கொடுத்துவெளியே வரச்சொல்லஅந்த கருப்பு பூனையோஅடுப்புக்குள் இல்லை. எந்நேரமும் அடுப்புக்குள்சுகமாய் உறங்கும்பூனையை காணாதுதிகைத்த கிழவிஅரிசி பானையைஅப்படியே புடையில்வைத்துவிட்டுகருப்பா கருப்பா எனகுரல் கொடுத்தபடிஅதை தேடலானாள்‌ ()

>>

வே.கல்யாண்குமார்/கண்ணாடி

.!முன்னாடி நின்று பார்!முகத்தைக் காட்டும்!கண்ணாடி.. கதைகேளுகண்கள் திறக்கும்! என்னாடி சொல்வது?எல்லோரும் பார்க்கும்கண்ணாடி பேசினால்கணத்திலே வியர்க்கும்! சூடிக் கொடுத்தவள்மாலையை அணிந்தே..பாடிக் களிப்புற்றபழமைமிகு கண்ணாடி! ஆடிக் களித்தவர்..ஆண்களும் பெண்களும்அன்றாடம் பார்க்கின்றஆடியே.. கண்ணாடி! ரசம்போனக் கண்ணாடிவீசுவார் குப்பையில்..நிசம் காட்டி உடைந்தாலும்நினைக்கவும் மறுப்பாரே.! கண்ணாடி மனத்தில்கடவுள் வைத்திருந்தால்முன்னாடி …

>>

கவிஞர் கூடல் தாரிக் கவிதை

நீல நிறப் பறவையொன்றுபறப்பதைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறதுகடலுக்குஇறக்கை முளைத்தால்எவ்வளவு நன்றாக இருக்கும் ‘’ ? 2.எல்லாருக்கும்ஆறுதல் சொல்லியபடிமனதுக்குள் அழும்அப்பாவுக்குள்அமைதியாகஓடிக்கொண்டிருக்கிறதுதுயரமென்னும் பெருங்கடல் ‘’ 3.அப்படி என்னதான்சொல்ல நினைக்கிறதுஅலை ததும்ப ததும்பபேசத் துடிக்கும் கடல் 4.புன்னகைத்தபடியேகடந்து செல்லும்மழலையொன்றின்சின்னஞ்சிறு உதடுரோஜா மலரே தான் ‘’‘’ செடியில் மட்டும் …

>>

ஷண்முக சுப்பையா/காலம்

இந்த உலகில்இருப்பவரில்இருப்போர்ஒரு சிலரேஇருப்பார் போல்நடிப்போரேபெரும்பாலோர்.இவருடனேஇறந்தோரும்இறந்தார் போல்இருப்பாரும்இல்லாமலில்லை.இவருள்ளேஇறந்த பின்னும்இருந்திடுவார்யாரென்றுகாலமென்னும்கள்வன்தான்கண்டறிவான். ஷண்முக சுப்பையா/பாதை விதிகள் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

>>

காளி-தாஸ்/எனக்கோர் திமிங்கலம்

எனக்கோர் திமிங்கலம்கடற்புறத்தில் நட்பாகியதுகாதலிப்பதாக சொல்லிகண் கலங்கியதுசம்மதித்ததும் களிப்பில்புரண்டது கரையெல்லாம்வாலூன்றி ஆடிபுயல்மூண்டு கடல் பொங்கியஒருநாள்வேட்கையோடு வந்ததுகண்ணிமைக்காமல்என்துடையிடுக்கைக் கவனித்ததுபெரும் மழை உதிர்ந்ததும்முதுகிலேற்றி என்னைகடலுள் விரைந்ததுநீர்ப்பாதை நெடுகபிரளய இடிஇரண்டு மூன்று நான்கெனபல கடல் கடந்தது திமிங்கலம்நீர் உலகத்திலும்ஓயாத என் கீழ் அதுஓய்ந்து சோர்ந்ததுஇறுதியில்நன்றியுடன் வாலால் என்னைத் …

>>

அழகியசிங்கர்/தி.சோ. வேணுகோபாலன் எழுத்து காலத்து கவிஞர்

எழுத்து பத்திரிக்கையில் எழுதிய முக்கியமான கவிஞர் தி.சோ.வேணுகோபாலன். ‘கோடை வயல்’ என்ற பெயரில் இவரது கவிதைகள் எழுத்து வெளியீடாக ஆகஸ்ட் 1965 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. என் கவிதையின்புது குரலுக்குபிரசவம் பார்த்த மருத்துவர்திரு.ந. பிச்சமூர்த்தி அவர்களின்அடிக்கமலங்களுக்குஎன்று ந.பிச்சமூர்த்திக்குசமர்ப்பணம் செய்துள்ளார். தி. சோ. …

>>

தி.சோ.வேணுகோபாலன்/எங்கோ மழை ?

கருங்கடல்வெண்மலைகாலனின் கணக்கறும்மரணப் பொறிகளில்இருவிதம்…கருவியால் மூச்சுக்குகவசம் இட்டுகாலடிச் சுவடுமுடியிலும் அடியிலும்பதிக்கபுடைத்தெழும்சிலநெஞ்சம்மானுடப் பெருமை. இடைப்படும்தரை தவழ்ந்துஇயற்கையை எதிர்த்திடும்உரம்பெறா இதயங்கள்பலகோடி எதிர்ப்பிலாதுஎமன்கால் பட்டழியும்குறியின்றிஊறும்நினைப்பின்றிவாழும் (?)எறும்புகள் (மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுதியிலிருந்து)

>>

அதிரன்/கழுத்தில் பட்டை கட்டிய

மதில் மேல் நின்று கொண்டுதெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுகழுத்தில் பட்டை கட்டியகருப்பு நாய் ஒன்று.வீடா? ….தெருவா? …தெருவா?… வீடா?…என்ற கேள்வி கேட்டபடிமனதுக்குள்வேடிக்கை காட்டி கொண்டிருந்தததுவெள்ள பூனை ஒன்று. –

>>

பழநிபாரதி கவிதை

நீரில்லாத நதியில்நிறைந்து தளும்புகிறது நினைவு நீயென் கண்களில்மூழ்கி எழுகிறாய் ஆடிப்பெருக்கில்உன்னை நனைத்தஅந்த மஞ்சள்இன்னும்உதிர்ந்துவிடாமல்ஊசலாடிக்கொண்டிருக்கிறதுஒரு பழுத்த இலையாக கவிதையை சொல் புதிது என்ற புலனத்தில் பகிர்ந்து கொண்டவர் : அனங்கன்)

>>

ப.மதியழகன்/ஆழி

கடல் ஊமையாய் இருக்கஅலைகள் பேசுகின்றனபரந்து விரிந்த நீர்நிலைஒற்றை வானம்கடலுக்கும் தெரிந்திருக்கிறதுகுழந்தை பாஷைதீண்டுவது தித்திக்கத்தான்செய்கிறதுஓய்ந்திருக்கிறது கடல்மீதமிருப்பது காலடித்தடங்கள்மட்டுமேஎத்தனை முறை பார்த்தாலும்சலிப்பதே இல்லைஅள்ளி எடுத்துப் பார்த்ததும்உள்ளங்கையில்வண்ணத்தை இழக்கிறதுஅழைக்கிறது கடல்விலகிச் செல்கிறது கரைகடலின் அழகைஅள்ளிப் பருகிக் கொண்டிருக்கிறதுநிலவுஒரு பேரலை என்பதுஆயிரம் சிற்றலைகளைஉள்ளடக்கியதுகுழந்தைகள் கரையேறுவதுகடலுக்குப் பிடிப்பதில்லைகடல் எதனையும் …

>>

எஸ். சண்முகம் கவிதை

அருகில் யாரும் இசைக்கவில்லைஎனினும் தவழ்ந்த வண்ணமுள்ளதுஓலிக் கோர்வையின் லயம் நீர் பாய்ந்தோடும் சில்லிடுதலாககுளிர்மையில் அலர்ந்துநிலைக்கும் அறை அதரங்களுக்கிடையில் ஒற்றைக் கோடாய்இடைவெளிபொம்மையின் அமர்வு போலும்மெய்யுறையும் காலை வெளிச்சத்தில் மிந்தலையும்கைப்பிடியளவு மணல்வண்ண பறவைநிழல்திட்டில் வந்திறங்குகையில் உடல்மீது குவியும் சிறகுகள்பாவும் சிறுகால்கள் என எவ்வேளையிலும் இசை …

>>

ஆர் வத்ஸலா/மோமோ

மோமா குட்டி வந்தாள்அவள் எனது மகளுடன்- அவர்கள் வீட்டிற்கு வண்ணம்பூசப்படுவதாலும்குட்டிக்கு பெயிண்ட் வாசஒவ்வாமை இருப்பதாலும் அவர்கள் வருவதற்கு முன்பேஎன் மகள் சொல்படிஏக ஏற்பாடுகள்என் வீட்டில் –மோமோ குட்டியின் பாதுகாப்பு கருதி அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டனவேடிக்கை பார்த்துக் கொண்டேமோமோ வெளியில் விழுந்துவிடுவாளோ என்று …

>>

செ.புனிதஜோதி/இயற்கையை கொஞ்சம் நேசி

மலைகளுக்கு கால்கள் உண்டுஎனஅறிவித்திருக்கிறது மழைஅதற்கு கண்கள் இல்லை என்பதைகுவிந்துகிடக்கும்உயிர்சடலனங்கள் மீதுஎழுதியிருக்கிறது நெடுநாள் பசிகொண்டஅரக்கனைப்போல்மனித உயிர்களைஅள்ளி விழுங்கி இருக்கிறதுஅந்த மலை கதைகளிலும்கற்பனையிலும்கண்டிராதமலை விழுதல்மழையாலா?மனிதர்களாலா?பட்டிமன்றங்கள்நடந்தேறிக்கொண்டிருக்கிறதுஇங்கு மலையும்,மழையும்,சேர்ந்துவயநாட்டு மக்களுக்குவாக்கரிசி இட்டுயிருக்கிறது மீட்பு பணிகள்துரிதமாய் இயங்கினாலும்அதை விடதுரிதமாய்உயிர்களைஉரமாக்கி கொண்டிருக்கிறதுஅந்த நிலம் கருணை உள்ளம் கொண்டவர்களின்கண்களிலும் மழைகாவுகொண்ட உயிர்களைக்காணும்வேளையில்நெஞ்சிலும் …

>>

விஞ்ஞானி/நிலச்சரிவு

தோண்ட தோண்ட வரும் சடலங்கள்விதவை மண்ணின் வேதனைபிரசவத்தில்.வெட்டிய மரத்தை விற்றவன்மாளிகையில்வெட்டிய கூலியின் குடும்பம்மண்ணுக்கடியில்.மக்களை மக்களுக்காகமக்களே கொல்லும்கொடுமைக்கு பலியானது கேரளம்.

>>

தங்கேஸ்/மாறாதவை

மழை நாட்களில்என்றும் மாறாதவைஈரச் சிறகுகளைஉதறாமல்பறந்து வரும்கருங் காகங்களும்அது கொண்டு வந்துசேர்க்கும்நினைவுகளும்

>>

எல்.ரகோத்தமன்/பிரம்மம்

 முட்கள்ரோஜாவின்பாதுகாவலனெனபெருமை கொள்கிறது! ரோஜாதான் முட்சிறையில்சிக்கித் தவிப்பதாய்தலையசைத்து அசைத்துயாரிடமோ விடுதலைகேட்கிறது! நான் இல்லையெனில்நீங்கள் யாரேனகேலியாய் சிரித்துமுள்ளையும் மலரையும்காத்து நின்றதுவேர் கொண்ட செடி! அது செடியல்லபிரம்மம்!பிரம்மனுக்கேது விடுதலை! 30-07-2024

>>

ஷண்முக சுப்பையா/பாதை விதிகள்

நட நீநடைப் பாதையில்இல்லையேல்நட நீவலப்பக்கமாய்நடப்பாயேல்முன்னிருந்துவருவனவைஒவ்வொன்றும்உன்மேல்ஏறவரும்.பார்த்து நீஒதுங்கிடலாம்.பின் விருந்துவருவனவைஉன்னருகேவரவே வரா.ஒதுங்கியேபோம்.குறுக்கே தாண்டவிரும்புவாயேல்இடம் பார்த்துவலம் பார்த்துமேலும் ஓர் முறைஇடம் பார்த்துநீ தாண்டியேதாண்டிடுவாய்.பாதை விதிகள்இவையெல்லாம்தெளிவானவைமிகமிகத்தெளிவானவை.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/வயநாட்டில் கோரத் தாண்டவம்

என்னுயிர் மண்ணே, உனக்கு ஏன் இந்த கோபம்?வயனாட்டின் வாழ்வையே புரட்டிஅடித்து எதை சாதித்தாய்? வீடும் வாசலும் சரிந்துவிடும் கண்ணீர் மட்டும் எதிலும் எங்கும். கேரளத்தின் அழகில் மயங்காதவர் இல்லை.அதேஅழகில் மறைந்து இருந்து கொல்லும்வேகத்தை என்னவென்று சொல்ல? எங்கு நோக்கினும்ஏலக்காயும், காபி தோட்டங்களும், …

>>

மனுஷ்ய புத்திரன்/வயநாடு 2024……..

ஒரு குட்டிச்சுவர் இடிவதுபோல
மலைகள் இடிந்து விழுந்த இரவில்
அடிவாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள்
ஒரு பேய்க் கனவு கண்டனர்
மலைகள் பிசாசுகளாக எழுந்து வந்து
நீர்க் கரங்களால்
யாவற்றையும் தின்னும் கனவு

>>

தங்கேஸ்/ஒரு சிறிய மின்னல் தீற்றில்

வாசல் நாற்காலிமழையில் நனைந்து கொண்டிருப்பதுநீயே நனைவது போல் இருக்கிறதுபார்ப்பதற்கு மின்சாரம் இழையறுந்த பொழுதுகளில் தான்பின்னி பின்னி மேலேறுகின்றனஇந்த நினைவுகள் யார் வீட்டிலிருந்து வந்தாலும்அழுகைச் சத்தம் முதலில் தொடுவதுஇதயத்தை தானே ஒரு சிறிய மின்னல் தீற்றில்ஜீவலிக்கத் தான்இந்த பூமிஇன்னும் இருட்டாகவே இருக்கிறது மழை …

>>

ஜெயதேவன்/ வயலார் கண்ணீர் சிந்துகிறார்

ஒரு நாள் மரங்களில் இருந்த குருவி முட்டைகளை எடுத்துச் சென்றீர்கள்காடுகண்டு கொள்ளவில்லைஇன்னொரு நாள்குருவி கட்டிய கூட்டை சிதைத்தீர்கள் ஒன்றும் சொல்லவில்லை காடு .உங்கள் அவரைக் கொடிக்கு முட்டுக் தர அந்த மரத்தின்கிளையை வெட்டினீர்கள்விக்கித்தது காடுஇன்னொரு நாள் அறுவை எந்திரத்தை நட்டு வைத்தான் …

>>

எஸ். சண்முகம் கவிதை

நன்றாக உலர்ந்தவிட்ட போதும்கொடியைவிட்டு அகற்றாமல்ஆடைகள் ஒருநொடி பார்க்கையில்காற்றில் படபடப்பதை நிறுத்த வேண்டுமா கொடியிலிருந்த களைந்த ஆடைகளின்சுருக்கங்கள்வாழ்தலில் நேர்ந்த ஒரு அவமடிப்பாக இருக்கலாமோஉதறாமல் விடுத்த நுண் தூசுகள்சட்டை பையில் சேகரமாயிருந்தனவிழிசாத்தி உயரே நிமிர்ந்து திறந்தேன் மேகமிலா கதிரொளிவயதின் ஊற்றுக் கண்ணை ஓளிர்விக்ககறுப்பு வெள்ளைக்குள்சிறுவனொருவன் …

>>

விஞ்ஞானி)/மண்

கண்ணில் விழுந்த மண்துகளின் உறுத்தல்தாங்க முடியவில்லை வீட்டு மருத்துவம்பலன் தரவில்லைமருத்துவரை நாட வேண்டியதாயிற்று கணிசமான வலிக்கும்செலவுக்கும் பின்னரேமண்ணில்லா கண்ணுடன்வீடு திரும்ப முடிந்தது ஆண்டவன் தன்னைமட்டும் ஏனிப்படிபடுத்தி வைக்கிறான்துக்குணி மண்ணால்எவ்வளவு அவஸ்தை எனும் புலம்பல்களுக்கிடையே தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது கேரளத்தில் பேரிடர்கனமழையால் மண் …

>>

வே.கல்யாண்குமார்/ஐயோ! வயநாடே!

தயவில்யோ தேவனே உனக்கு.?வயநாட்டிலே என்னஉன் கணக்கு? தாய் உறங்க அவள்மடியில் மகனுறங்க..தயவின்றியே தலையில் இடி இறங்க..வாய்திறக்கவும் வழியின்றி மலையிறங்க..மலையிறங்க கூடவே மழையிறங்க… மண்ணெல்லாம் உடல் புதைய..நிலமெல்லாம் சரிய..கண்ணில்லையோ தேவனே உனக்கு?கருணை என்ற பெயரெதற்கு உனக்கு? கடவுளின் தேசமே..கண்ணீரின் தேசமாச்சே!தண்ணீரில் மிதக்கும்தருணமே நரகமாச்சே!அழகான …

>>

தங்கேஸ்/அழுவது ஏனென்று தெரியாது…

கோப்பையில் ஊற்றிவைக்கப்பட்டிருக்கும் தேனீரைஆளுக்கு ஒரு மிடறுபருகுவதற்காயிருக்கலாம் கை குழந்தை போலகாதுக்கு மேலேஎட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும்முதல் நரைக்காகவும் இருக்கலாம் ஒரு வெள்ளை காகித கப்பல் போலஅந்தி வானில் பறந்து கொண்டிருந்தவெண் நாரையை வெகுநேரம்பார்த்ததற்க்காகவும் இருக்கலாம் அல்லதுமொட்டை மாடியில்நடை பயிற்சியின் போதுஎதுவுமே பேசாமல்நீ என் விரல்களைப்பிடித்துக் …

>>

செ.புனிதஜோதி கவிதை

பெண்டுலத்தின்ஆட்டம்கடிகாரத்தின் விசையால் நாட்காட்டியின்படபடக்கும் ஓசைகாற்றின் திசையால் அண்டை வீட்டுக்காரியின்ரோஜாச்செடியும்என் வீட்டிற்குள் கிடக்கிறதுநிழலால் வாழ்ந்தேதீர வேண்டும்கட்டாயத்தில்இரு வேறு உயிர்கள் இங்குஎல்லாம் அப்படித்தான்ஒருவரின் கைப்பிடிக்குள்ஒருவரின் வாழ்க்கை சுயம் தேடிநிற்பவையெல்லாம்அல்லாடிக் கொண்டிருக்கிறதுபட்டமாய் பாரபட்சமின்றிவிழுங்க காத்திருக்கிறதுஆறடி மண்.

>>

மா. காளிதாஸ் கவிதை

ஒரு சிறிய கல் அல்லதுஒரு சிறிய தடுப்பு ஏதுமின்றிக்காற்றுக்குப் படபடக்கிறதுஒரு சிறிய கதவு. யாரும் உட்புகவில்லையாரும் வெளியேறவும் இல்லைகாற்றும் நிற்கவில்லை. கைகட்டி நிற்கின்றனவீடும் பொதுவெளியும். காரணமும் காரியமும் அறிந்துசிரிக்கும் தச்சன்தயாராக வைத்திருக்கிறான்மேலும் 365 தாழ்ப்பாள்கள்.

>>

ஷண்முக சுப்பையா/அறிஞர்கள்

நேற்றுவரைஇருப்பது போல்இருந்து வந்தான்.இன்றவன்இல்லவேயில்லை. “மகராசன் ! ஐயோ!போய் மறைந் தான்’என அவனைஅறியா தாரும்தவியாய்தவிக்கின்றார். இன்றுவரைஇல்லாதது போல்இருந்து வருகின்றேன்.நேற்று நான்இல்லவேயில்லை.“நடைப்பிணம்! சீச்சீ!நடமாடித் திரிகின்றான்”என என்னைஅறிந்தோறும்நகையாய்நகைக்கின்றார்.

>>

சசிகலா விஸ்வநாதன்/நினைவு நாள்

நல் நினைவுகளைநிலத்தில் விட்டுசெல்பவர்கள், செவ்வனேசென்று இருப்பர்.தாபம் அவரை ஒருபோதும் தாக்காது.இருக்கும் போதுஇருந்து வாழ்பவர்,மறுமையிலும் அவ்வாறே; வருந்தார்.தீதென அறிந்துதீச்சொல் அறையார்.நினைவு நாள்அனுசரி; தவறில்லை;நயந்து.பயந்தல்ல; அன்னமும்,ஆடையும்,இன்வார்த்தையும், நற்பொருளும்,அளி; உன் தகுதியில், அவர்க்கு.எடுப்பதில் முனைவர்க்குகொடுப்பதிலென்ன மனநிறைவு;உனக்கு? வருடம்இரு முறைதம்பியர்,தங்கையருடன்சேர்ந்து நீத்தோர்நினைவில் நீந்தி,இன்புற்று இருக்க உன்னால் முடியுமெனில்அதுவே …

>>

புனித ஜோதி கவிதை

ஓடி,ஓடிதேடி அலைந்தபிறைதன்னில்பௌர்ணமியைக்கண்ட பெருமிதம்… ஒற்றையடிப்பாதைதன்னில்இரு திசைகள்உணர்ந்ததருணம்… ஒரு இருண்மையைகைப்பிடித்துநடக்கையில்தன்னிலிருந்தேபுறப்பட்டக்கலங்கரைவிளக்கம் இங்கேபாதைகள்எல்லாம்நமக்குள்பார்க்கும் விதத்தில்ஆயிரம் ஓட்டைகள்

>>

விஞ்ஞானி/சார்லி சாப்ளின்.

மழை பெய்துக் கொண்டிருந்ததுஇவனுக்காக அழுவது போல. திண்ணையில் நின்றபடிமழையைபார்த்துக்கொண்டிருந்தான்வீட்டிற்குள் அழுகை சத்தம்இவன் அழவில்லைஇவன் ஆண்மகன்.அதனால் அழவில்லைஆனால் அழவேண்டும்போலிருந்தது சார்லி சாப்ளின்மழையில் நனைந்தபடிபிறருக்கு தெரியாமல்அழுவேன் என்றதுநினைவுக்கு வந்தது. சட்டென தெருவில் இறங்கிமழையில் நனைந்தபடிநடந்தான் சில அடிகள் வைப்பதற்குள்பின்னால் சத்தம்.திரும்பி பார்த்தான்அவன் அம்மாஇவன் தலைக்கு …

>>

எஸ் வி  வேணுகோபாலன் /தாய்நாடும் தாயும்

தயார் நிலையில்இருக்கிறதுஇராணுவம் என்றுமக்களுக்குத்தொலைக்காட்சி செய்தியில்தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அதிபர் ஒருவர் கண்ணீர்துடைத்துக் கொள்கிறாள்ஓர் அன்னை எல்லைக்குஇரண்டு பக்கம் இருக்கும்சிப்பாய்களுக்காகவும்!

>>

விஞ்ஞானி/இந்தியன் பட்ஜெட்

பட்ஜெட் பற்றியசெய்தியாளர்கேள்விக்கு எப்படி போட்டாலும்துண்டு விழுகிறதுமாத கடைசியில்கைமாத்து வாங்கிசமாளிக்கிறேன்என்றான்இந்திய குடிமகனாய். ()

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

எல்லா வேளைகளிலும்உங்கள் குழந்தைத்தனங்கள்ரசிக்கப்படுவதில்லை… எல்லா பொழுதுகளிலும்உங்களது வேசங்கள்பொருந்துவதில்லை.. எல்லா நாட்களிலும்உங்களுக்கான நாள்அமைந்து விடுவதில்லை.. எல்லா பயணங்களிலும்உங்களின் இலக்குவந்து விடுவதில்லை.. எல்லா மனங்களிலும்உங்களுக்கான அன்புகிடைக்கப்பெறுவதில்லை.. எல்லா முயற்சிகளிலும்உங்களுக்கான வெற்றிகிடைத்துவிடுவதில்லை.. எல்லா எழுத்துக்களிலும்உங்களுக்கான வரிகள்கண்டறியப்படுவதில்லை.. எல்லா நியாயங்களிலும்உங்கள் நியாயங்கள்பேசப்படுவதில்லை.. இந்த கவிதை கூடஎல்லா நேரங்களிலும்பேசப்பட …

>>

எஸ் வி வேணுகோபாலன்/இயற்கை

தன் பிம்பத்தைக்கண்ணாடியில் அல்லநீரருந்தும்ஓடையில் கூடப்பார்த்துக் கொள்ளாதுநடந்து போகிறது வேங்கை யாரும்அடைமொழிகளோடுஅறிமுகம்செய்விக்காமல்பேசத் தொடங்குகிறது கிளிபாடிக்கொண்டிருக்கிறது குயில் அகந்தையோடு அல்லஇயல்பானகம்பீரத்தோடுநடக்கிறது மயில் தன்னை இன்னுமின்னும்வியந்து பார்க்கின்றனர் மனிதர்கள்என்பதறியாதுஇயங்கிக் கொண்டே இருக்கின்றன எறும்புகள் இந்தக் கவிதையைவாசித்துஒன்றும்ஆகப் போவதில்லைஇந்தக் கணம்சன்னல் வழிஎன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்வீட்டு மொட்டை …

>>

வைதேகி./நம்பிக்கை..

நாள்தோறும் பேருந்தில் ஏறியவுடன்மூன்று பேர் இருக்கையில் உடைமைகளைபரப்பியபடி ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கும் பெண்மணிநகர்ந்து இடம் தரும் வரை…நின்று கொண்டிருக்கின்றேன்..என் தோள்பையின் கனத்தையும்புன்னகையின் வீரியத்தையும்என்றாவது ஒருநாள் உணர்த்தி விடமுடியுமென்றபெருநம்பிக்கையை கைப்பிடியாய் பற்றிக்கொண்டு….

>>

அலெஜாண்ட்ரா பிசார்னிக் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் கவிஞன் என்பவன்சிறந்த சிகிச்சையாளன் என்றும் கருதப்படுகிறது.அந்த வகையில்கவிதைச் செயல்பாடானது பேயோட்டுதல்,செப்பிடு வித்தை காட்டுதல்ஆகியவற்றோடு கூடுதலாக,பழுது நீக்கும் பணியுடனும்சம்பந்தப்பட்டிருப்பது.ஒரு கவிதையைஎழுதுவது என்பதுஅடிப்படையான காயத்தை,அதன் கண்ணீரை சரிசெய்வதாகும். ஏனெனில் இங்கே நாம் எல்லோருமே காயமடைந்துள்ளோம்.

>>

விஸ்வநாதன் ரமேஷ்/ஆற்றாமை

அலெக்ஸ் இந்ரஜால் காமிக்ஸ் படிக்ககொடுப்பான்கந்தசாமிகால்பந்து கபடிவீரன்சிராஜுதீன் பிரியாணிசாப்ட்ரியா மாப்ளஎன்று அன்புடன்கேட்பான்பரமசிவம்அவன் கடைபொட்டுக்கடலைஒரு கைப்பிடிகூட கொடுப்பான்பாஸ்கர் எனக்குசைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தான்கண்ணன்டேபிளில் தாளம்போட்டுக் கொண்டுமங்கியதோர் நிலவினிலேஅற்புதமாகப் பாடுவான்சுப்புராஜ் தான்அந்த மாதிரிகதைகள் அதிகம்சொல்வான்கல்லா மாங்காஅடிக்க தனி கும்பல்நவராத்திரி சுண்டலுக்குஒரு தனி செட்டுகுளத்தை எல்லோரும்துவம்சம் செய்யநான் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/என்ன செய்யப் போறீங்க

உலகின் மூலை முடுங்கெங்கும் ஒலிக்கும் உன்னதக் கேள்விஎன்ன செய்யப் போறீங்க… உதாரணத்திற்கு ஒன்று…கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு …எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க …ஆவேசமாக, அழுகையாக, ஆதங்கமாகஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன…என்ன செய்யப் போறீங்க….அடுத்தொரு பிரச்சினை வரும் வரை ஒலிக்கும்….பிறகும் ஒலிக்கும்… அடுத்தப் பிரச்சினைக்காக … …

>>

ப.மதியழகன்/குடை

எனக்கு நனைவது பிடிக்கும்எனவே குடை எடுத்துச்செல்வதில்லைமழை இயற்கையின் அற்புதம்அதற்கா கறுப்புக் கொடி காட்டுவதுபூமி மீது வானம் கொள்ளும்கருணையே மழைநான்கு சுவர்களுக்குள்அடைபட்டுக் கிடந்தாலும்வானத்துக்குக் கீழே தான்நாம் வாழ்கிறோம்மழைக்காலத்தில் மட்டுமேவரும் குடைகளின் திருவிழாமற்ற நேரங்களில்கேட்பாரற்று தூசி படிந்துஓர் மூலையில் உறங்கும்குடைக்கம்பியில் சிலந்திவலை பின்னும்கறுத்த மேகமும்ஈரக் …

>>

எஸ்ஸார்சி/ஜனநாயகம்

அமெரிக்க பூர்வீகக் குடிகள்அரைக் கோடிபேர்அமெரிக்க மொத்த ஜனத்தொகையில்ரெண்டு சதவிதம் இது98 சதவிதம் வந்தேறிகள்சமூகம்தான் இதுஅமெரிக்காவில்326 நிலத்திட்டுகளில்வாழட்டும் அவர்கள்ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்ரிசர்வேஷன் நிலம்.சட்டம் ஒழுங்குநிதி ஆளுகையெனபூர்வீக குடிகளின்அத்தனைப் பிரச்சனைக்கும்மொத்தமாய் அரசாங்கமேபொறுப்புமக்களால் மக்களுக்காகமக்களுடையஎன்ன விளக்கம்தருவார்களோ. கவிதை வாசிப்பு இணைய அரங்கு

>>

ப.மதியழகன்/யானை

குடியிருப்புப் பகுதியில்யானையின் கால்த்தடம்கோவில் யானை போலல்லகாட்டு யானைகள் மூர்க்கமானவையானையைக் குறித்த வதந்திஅப்பகுதி முழுவதும்தீயாய்ப் பரவியதுதினந்தோறும் விதவிதமானபுரளிகள்காத்திருந்த வனத்துறையினரின்கண்ணில் விரலைவிட்டு ஆட்டியதுஅக்காட்டு யானைஎதைத் தேடி வந்திருக்கும் எனஅவர்களால் யூகிக்கமுடியவில்லைமாநிலத்தின் மொத்தகவனமும் அவ்வூரின்பக்கம் திரும்பியதுபெண் யானைக்குமதம் பிடிக்காதுஎன்ற செய்தி சற்றுஆறுதலாய் இருந்ததுஇரவில் நடமாட வேண்டாம்என …

>>

நாகேந்திர பாரதி/கூரைத் தீயில் குஞ்சுகள்

கூரைத் தீயின் ஓரச் சிவப்புவேடிக்கை காட்டியதுவினாடி நேரம்தான் விறுவிறென்று மேலேறிவிழுந்ததும் தெரிந்ததுதீ சுடும் என்று தோல் எரிந்து கரியாகிதுவளும் போது பஞ்சு மிட்டாய் வாங்கி வரும்அப்பா நினைப்போடும்பாடம் சொல்லித் தரும்அம்மா நினைப்போடும்தோளில் தூங்க வைக்கும்தாத்தா நினைப்போடும்பக்கத்தில் படுத்திருக்கும்பாட்டி நினைப்போடும் துடிதுடித்தபடியேதூங்கிப் போனோம்

>>

தங்கேஸ்/நிழல்களின் விளையாட்டு

நிழல்களின் வழியேபாதை கண்டு பயணிப்பவன்நான் நிழல்களில் தான் பேதங்களில்லைஇனம் மதம் நிறம் பால் எனபாகுபாடுகள் இல்லை சில நேரம் குதித்து குதித்து வரும்நிழல்களை பார்க்கும் போதுமனதை பார்ப்பது போலவே இருக்கும் நடனமிடும் சுடரின் நிழல்நடராஜரின் அம்சம் திரியின் நிழல்பேசும் மௌனத்தின் நாவுகள் …

>>

பானுமதி ந/சலன மெழுத்து

அமைதியாக இருந்தது அந்தக் குளம்நான் எறிந்த கல் அலையலையாய்தாத்தாப் பூச்சி பறப்பது போலநடனமிட்டு அதன் சலனத்தின் மேல்எழுதி எழுதி மூழ்கியது.அரசிலைகள் கீழ் நோக்கி வளைந்துஅதைப் படிக்கப் பார்த்தன.மதியின் ஒளியும் அதை ஆய்வு செய்யப் பார்த்ததுமௌன குருவும், அங்கிருந்த பிள்ளையாரும்சிரித்த ஒலி அதன் …

>>

நாகேந்திர பாரதி/ஆவி அணைஞ்சுச்சா

(இன்றைய சொல் புதிது ஜூம் நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள்) குனிஞ்சு படிக்கிறப்போகுப்புன்னு மின்னுச்சாநிமிந்து பாத்தாக்கநெருப்புன்னு தெரிஞ்சுச்சா ஓடக் கிளம்புறப்போஓலைத்தீ தடுக்குச்சாசுத்திக் கரும்புகையாகண்ணைக் கருக்குச்சா கத்திக் குரலெடுக்கதொண்டை அடைச்சிருச்சாதண்ணித் தாகத்தில்நாக்கு வறண்டுடுச்சா வீட்டாரின் நினைப்பெல்லாம்விக்கலாய் வந்துச்சாவெளையாண்ட இடமெல்லாம்கண்ணுக்குள் ஓடுச்சா பக்கத்துப் …

>>

ஆத்மாநாம் /பதில்

குற்றுகர முற்றுகரச் சந்திகளைசீர்சீர் ஆய்ப் பிரித்துதளை தளையாய் அடித்துஒரு ஒற்றை வைத்துசுற்றிச் சுற்றி வந்துஎங்கும் மை நிரப்பிஎழுத்துக்களை உருவாக்கிபொருளைச் சேர்த்துவார்த்தைகள் ஆய்ச் சேர்த்துஒவ்வொரு வாக்கியத்திற்கும்கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்துஏதாவது சொல்லியாக வேண்டும்நமக்கேன் வம்பு

>>

ஆத்மாநாம் /சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்நீங்கள் யாரென்று சொல்லுங்கள்உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்முழித்த முழி முழியையே முழுங்கும் போலநீங்கள் யாரானால் என்னநான் யாரானால் என்னஅனாவசியக் கேள்விகள்அனாவசிய பதில்கள்எதையும் நிரூபிக்காமல்சற்று சும்மா இருங்கள்

>>

மதுவந்தி/அறை காலியாய் இருக்கிறது

அறையில் நான்தனியே இருந்தவரைஅறை காலியாக இல்லை. ஜன்னலை மூடிகதவைச் சாத்திவெளியே வந்தபின்அறை காலியாய்இருக்கிறதெனத்தோன்றியது. காலியாகத்தான்இருக்கிறதாவெனதிறந்து பார்த்தால்மீண்டும் அறையில் நான். அறைக் கதவைச்சாத்தியபின்அறை காலியாகத்தான்இருக்கிறதா?. . 14.06.24.

>>

ஆத்மாநாம்/பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய் போ.பிச்சை பிச்சை என்று கத்து.உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை.எல்லையற்ற பெருவெளியை கடக்கணும்.உன் பசிக்காக உணவு.சில அரிசி மணிகளில் இல்லை.உன்னிடம் ஒன்றுமே இல்லை.சில சதுரச் செங்கற்கள் தவிரஉனக்கு பிச்சையிடமும் ஒருவருமில்லை.உன்னைத் தவிர. இதனைச் சொல்வதுநான் இல்லை நீதான்

>>