பி. ஆர்.கிரிஜா/ நேர்மை !

மீனாவும் சரசுவும் தினமும் பக்கத்தில் உள்ள ஊருக்கு வந்து மீன் விற்று விட்டுத் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்வார்கள். ஒரு நாள் நினைத்த மாதிரி மீன் விற்கவில்லை. மதியத்திற்கு மேல் ஆகி விட்டது. மீன் ஒன்றும் விற்றபாடில்லை. “சரசு, நீ அந்தப் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/லாபக்கணக்கு

“என்னம்மா இன்னிக்கு நீ மீனா?” “ஆமாம் மீனுதான் வேணும்னு வரவங்க சொல்லறாங்க .” “நான் நண்டு கொண்டு வந்திருக்கேன்.” “இன்னிக்கு வியாபாரம் எப்படி இருக்குமோ தெரியலையே ?” “நேத்து எப்படி போச்சு ?” “நேத்திக்கு மழை வந்து வியாபாரமே இல்ல. மீனெல்லாம் …

>>

முனைவர் என் பத்ரி/மீன் கடை

 முனியம்மாவும், முத்தம்மாவும் மாமியார் மருமகள் உறவுக் கொண்டவர்கள். நேற்று வலை விரித்துப் பிடித்து மீன்களை எல்லாம் கூடை நிறைய போட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று யாரும் வாங்குவதற்கு தயாராக இல்லை. அன்றாடம் இவர்கள் மீனை விற்றுத்தான் தங்கள் பிழைப்பினை கடத்த வேண்டும் …

>>

நீயா நானா/ தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

          பாரதி பாஸ்கர், ராஜா பட்டிமன்ற விவாதத்திற்கு ஈடாகப் பட்டிணப்பாக்கக் கடற்கரை மணலில் எஸ்தரும் மேரியும் போட்டி போட்டு மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வெவ்வேறு விதமான மீன்களாதலால் அடிபிடில்லாம் வராம ஆனா சூடான வசவுகளுக்கு நடுவில் வியாபாரம் நடந்தது. மேரி வித்துட்டுப் …

>>

வி.பிரபாவதி/அங்கம்மாவும் செங்கம்மாவும்

இருவரும் சிறுவயது முதலே தோழிகள்.   மீனவக் குடும்பத்தில் பிறந்து நிறைய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர்கள். மழையிலும், வெள்ளத்திலும் அல்லாடும் வாழ்க்கைதான்.  பழகிப்போயிற்று. பள்ளிக்கூடம் போனாலும் படிப்பு ஏறவில்லை.  ஐந்தாம் வகுப்போடு சரி. “என்னாடி, நெதமும் வேகாத வெய்யிலானாலும், மழையினாலும் நம்ம யாவாரம் …

>>

சுஸ்ரீ/வலை வலையா பேச்சு

சரு,”இன்னிக்கு இவ்வளவுதான் புடிச்சிருக்கான் என் புருஷன், பெரிசா புது போட், மோட்டார் வச்சது எங்கப்பன் கொடுத்து என்ன பிரயோசனம்”மீனு,”போட் புதுசா இருந்தா போதுமா, சரியான வலை கிடைக்காட்டா,இது கிடைச்சதே அதிகம்”“என்ன பேச்சு வேற விதமா போவுது, எதையோ குத்திக் காட்டற மாதிரி …

>>

மோகனா சுகதேவ்/மாறியது காலம்

“மீனாட்சி! ஒரு விஷயம் தெரியுமா?” ஆற்றங்கரையில் குடத்துடன் வந்திருந்த கோமளா, மீனாட்சி, சகுந்தலாவைப் பார்த்தவுடன் கேட்டாள்.  “என்னக்கா விஷயம்?” “ சகுந்தலா! நேத்து நம்ம ஊர்லே ஒரு சாவு ஆச்சே, தெரியும்தானே?” “ஆமாக்கா! பாவம்! அந்தக் குமாருக்கு 35 வயசுதான் இருக்கும். …

>>

லீலா ராமசாமி /தாகம் ‌

**** “கமலி! சீக்கிரம் வா.. வெயிலுக்கு முன்னால போய்த் திரும்பிடலாம்” மல்லியும் வீரம்மாவும் காலிப்பானைகளுடன் வந்து அழைத்தார்கள். கமலி பானையுடன் வெளியே வந்தாள். கூடவே மகள் பூரணி. நாலு கிலோமீட்டர் தள்ளி ஊருக்கு வெளியே வறண்டு போன ஆற்றின் நடுவிலிருந்த ஊற்றுக் …

>>

தண்ணீர் / அப்புசிவா

“எப்போ போவாங்களாம்” கேட்டாள் தாமரை. “காலையில இருந்து இருக்காங்களாம்” என்றாள் மல்லிகை. “வழி மறிச்சு கேட்கறாங்களாம்” சோகமாகச் சொன்னாள் முல்லை. நிஜமாகவே வழியை மறித்து இருந்தது அந்த மாட்டு மந்தை. அதைக் கடந்து வருபவர்களின் குடங்கள் அரையாகத் தளும்பியிருப்பதையும் பார்த்தார்கள். “அதுங்களும் …

>>

ருக்மணி வெங்கட்ராமன் /நிறைந்த மனம்

“செவ்வந்தி.! தண்ணீருக்காக எத்தனை தூரம் நடக்க வேண்டி இருக்கு.” “ஆமாம் தாமரை.! தண்ணீர் கொஞ்சம் கூடச் சிந்தாம வீட்டுக்கு எடுத்துப் போகணும்.” “உள்ளே நுழைஞ்ச உடனே, என் மாமியா, ‘இத்தனை நேரமா ஒரு குடம் தண்ணி கொண்டார?’ என்று கத்துவா.” ஆதங்கத்துடன் …

>>

பானுமதி கண்ணன்/மன அழகு

ஆளுக்கு ஒரு குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, இரண்டு மைல் தள்ளியிருக்கும் பொதுக்கிணறு க்குத்  தண்ணீர் பிடிக்கப் போகிறபோதெல்லாம், முதல்நாள் இலவச டிவியில் பார்த்த படத்தைப் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டு போவது அந்த மூன்று பெண்களுக்கும் வழக்கம். “ஐயோ…நேத்து பார்த்த படத்துல …

>>

வி.பிரபாவதி/ஊர் வம்பு

தினமும் தண்ணீர் எடுக்கப் போகும்பொது வேலாயி, வீராயியுடன் புஷ்பாவும் அவள் மகளும் கூடச் சேர்ந்து கொள்வார்கள்.  புஷ்பாவிற்கு யாரைப்பற்றியாவது வம்பு பேச வேண்டும். இவர்கள் இருவரும் வேண்டாம் என்று நினைத்தாலும் எப்படியோ வந்து விடுவாள். அன்றைக்கு வேலாயி ஒரு முடிவுக்கு வந்தாள்.  …

>>

எம் ஷங்கர் /தீனி

“ அடியே இந்தக் கூத்த கேட்டியகளா? நம்ம பேச்சிமுத்து யாரோடையோ ஓடிப்  போயிட்டாளாம்,” வள்ளி கூறியதை கேட்டதும், “ அடி ஆத்தி அவளுக்கு வளந்த பிள்ளைங்க ரெண்டு இருக்கே?” பொன்னுத்தாயி அங்கலாய்த்தாள். “ அவ சரியான மேனாமினிக்கி. எனக்கு ரொம்ப நாளாவே …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /ஈரக் கனவு

ஆடி மாத மாலை. வயல்வெளி பொன்னிறமா மின்னுது. குளத்தில் தண்ணி எடுத்துட்டு மூன்று பெண்களும் தலையில் குடத்தோடு நடந்து போறாங்க. “என் மகன் பத்தாவது படிக்கிறான்”னு குப்பாயி சொன்னா. “நல்லா மார்க் வாங்கி கலெக்டர் ஆகணும்னு ஆசை.” “எனக்கும் அதே ஆசைதான். …

>>

எம்.எல்.பிரபா/உளவுத்துறை

மல்லிகாவின் மருமகள்கள் பொன்னி, வள்ளி, தங்கம். அந்தக் குடும்பம் ஒரு கூட்டு குடும்பம். மாமியாரைப் பற்றிப் பேசுவதற்கு ஏராளமான தகவல்கள் அவர்களுக்குள் இருக்கின்றன. எனவே அந்தக் கிராமத்து குளத்தில் தண்ணீர் எடுக்கப் போகும்போது தான் மாமியாரை பற்றி அவர்கள் பேசுவார்கள். தங்களுக்குள் …

>>

  சுதா கணபதி/குடங்கள்

“என்னங்கடி சரசு,  மங்கா ரெண்டு பேரும் காலங் காலையில சீவி சிங்காரிச்சுகிட்டு  குடத்தோட  கிளம்பிட்டீங்க ?  இன்னக்கி பொதன் கிழம தானே ;   மூணு மைல்  தள்ளி  இருக்கற மேச்சேரி  கிராமத்து நல்ல  தண்ணி கிணத்துல நம்மூரு ஜனங்கள வெள்ளிக் கிழமை …

>>

ஜி ஏ பிரபா/பைத்தியம்

      “இந்தப் பைத்தியத்தையும்  எதுக்கு கூட்டியாந்தே?”-செல்வி.       “வூட்ல யார் இருக்காங்க?” அலுப்புடன் கூறினாள் ராஜி.              இவள் அருகில் மலங்க, மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் சிறுமி.   அறிவும் வளரவில்லை. சரியான பேச்சும் வரவில்லை. எல்லோரும் பைத்தியம் என்றுதான் கிண்டல் …

>>

தமிழ்ச்செல்வன்/கரிச்சிக் கொட்டியவர்கள்

” ஏட்டி காமாச்சி நாம கரிச்சிக் கொட்டிட்டிருந்தோமே மீனாச்சி மவ எளமதிய அவா சரியா படிக்காம ஓட்டப்பந்தயம், தாண்டுறதுன்னு சுத்திட்டிருந்தான்னு ஞாபகமிருக்கா?” ” ஆமான்டி என்னாச்சி சுருக்கமா சொல்லித் தொலையேன் தண்ணீ பிடிச்சிட்டு ராவுக்கு சமைக்கணும்.” எனப் படப் படத்தாள் சரஸ்வதி …

>>

சுஶ்ரீ/வாழ்வின் விலை வாழையில்

அனிதா தன் தகப்பன் முனியனிடம், “அப்பா இன்னிக்கு சாயந்தரத்துக்குள் ஃபீஸ் கட்டலைண்டா பரிட்சை எழுத விடமாட்டாக, 500 ரூவா வேணும் கண்டிப்பா 4 மணிக்குள்ளே ஸ்கூலுக்கு கொண்டாந்திரு. முனியன் தெரிஞ்ச எல்லாரையும் கேட்டுப் பாத்தான் ஒரு 10 ரூவா கூடத் தேறலை …

>>

அழகியசிங்கர்/ஏன் இந்தத் தற்கொலை?

ஒவ்வொரு முறையும் குடங்களை எடுத்துக்கொண்டு மூன்று பேர்களும் பக்கத்து ஊரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவது வழக்கம்.  அவர்கள் வசிக்கும் ஊரில் தண்ணீர் இல்லை. முத்தழகி தன் பெண்ணையும் அவளுடன் அழைத்துக்கொண்டு வருவது வழக்கம். பெண்ணைத் தனியாக வீட்டில் விட்டு வருவதை …

>>

ரேவதி பாலு/குடிநீர் தட்டுப்பாடும் கொழுந்தியாள் கல்யாணமும்

வரிசையாக வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண குடங்களால் அந்தச் சாலையே குடங்களால் போடப்பட்ட சாலைபோல் தோற்றமளித்தது. அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியான மன்னார் சாமி இவர்கள் ஊர் நெடுஞ்சாலை வழியாகப் புதூருக்கு தன் கொழுந்தியாளின் கல்யாணத்துக்காகப் போகிறார் என்று கேள்விப்பட்டு …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/கடவுள் விளையாட்டு

 *பிள்ளையார் வாயிலிருந்து பால் வழிவது பற்றிதான்  இடது மூக்கில் மூக்குத்தி அணிந்த மகாராஷ்டிரா  பெண்கள் கையில் குடத்துடன் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமத்து  பிள்ளையார் தலையில்  ஒரு ஓட்டை உண்டு. அதில்  குடம் குடமாய் நீர் கொட்டி, வாயிலிருந்து …

>>

கரந்தை  இந்து/தங்கையின் துணை

  “ஏன்டி  கோமளா?  எனக்கு  ஒரு  விஷயம்  புரியவே இல்லை.  நீ எங்கே போனாலும்  எதுக்கு  இந்தக் குட்டிப் பிள்ளையை  அதான்  உன் தங்கை  குமுதாவைக்  கையில்  பிடிச்சுக்கிட்டே  போறே? ” என்று  கேட்டது  அவளின்  தோழி  கங்கா.        தோழி …

>>

எஸ்.எல். நாணு/கைபொம்மை

“செல்வி. காலி குடத்தை எடுத்துகினு நம்மள எதுக்கு இங்க வரச்சொன்னாங்க? நாம ரொம்ப காலமா கேட்டுக்கிட்டே இருக்கற தண்ணி லாரி வரப்போகுதா?” முனியம்மா கேட்டவுடன் செல்வி கிண்டலாகப் பார்த்து “வந்துட கிந்துடப் போவுது. எதிர்கட்சிக்காரங்க தண்ணிக்காகப் போராட்டம் நடத்தறாங்களாம். கூட்டம் சேரணும்ல. …

>>

கௌரி சங்கர்/முத்துவேல் பங்களா

சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு கன்னிகாபுரம் கிராமத்தின்  ஒரே பண்ணையார் கட்டிய வீடு தான் முத்துவேல் பங்களா. கிராமத்தில் அப்போது மொத்தமே எட்டு தெருக்கள் தான். பள்ளிக்கூடம் இன்னும் வரவில்லை. நஞ்சைக்காடுகளுக்கும், பூஞ்சைக்காடுகளுக்கும் சென்று வந்தனர் பெருசுகள். சில சிறியவர்கள் இரண்டு …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஊர்வம்பு

இடுப்பில் இருந்த குடத்தை தோளுக்கு மாற்றின தேவானை,” கோமதியக்கா! விசயம் தெரியுமா? சம்முகம் பொண்ணு கஸ்தூரியை, படிக்க விருதுநகர் பள்ளிக்கூடத்திலே சேர்க்க போறாளாம்! சமஞ்சு ஒரு மாசம் கூட ஆகலை டவுன் பஸ் ஏறிப் போய்ப் படிக்கப் போறதாம். நாள பின்ன …

>>

சுஶ்ரீ/தென்றலே என்னைத் தீண்டாதே

டேய் கமலேஷ் என்னை விட்டு ஏண்டா போனே, ஷைலஜா கொஞ்சம் கோவம் கலந்த கொஞ்சலோடு கேட்டாள். இந்த மாலை நேரங்களை நாம சேந்து எவ்வளவு ரசிச்சிருக்கோம்.”தென்றல் காற்றுன்னா இதுதான் பாரு உன் முகத்தைத் தொட்டு விளையாடிக் கன்னத்தை ஆசையா வருடிவிட்டு அப்பறம் …

>>

ஷைலஜா/விசயம் தெரியுமா?

“அடியே செண்பகம் விசயம் தெரியுமா?”என்று ஆரம்பித்தாள்நீலாவதி.” அந்த மேனாமினுக்கி முத்துலட்சுமி கசாப்புக்கடை கதிரூகூட ஓடிப்போயிட்டாளாம்.”நர்மதா வேகமாக “அதைவிட பெரியவிசயம்கேளு.வடக்கு தெரு வடிவு அவ மாமியார்தலைல கோபத்துலகல்லை வீசினாளாமே?”என்றாள்.பங்கஜம் சிரித்தபடி”ஆனா கல்லுதான் ரெண்டா உடைஞ்சிதாம்.வடிவு கொடுத்து வச்சது அவ்ளோதான் போ..”எனப் பெரிதாகசிரித்தாள்.“ஆனாலும் செங்கமலத்துக்கு …

>>

அ. கௌரி சங்கர்/உச்சிபுள்ளையார்

“இந்த முதலாளிக்கு நம்ம சிரமம் தெரியமாட்டேங்குதே. அடிவாரத்தில் இருக்குற சந்தைக்குப் போய்த் தினமும் வாழைக்குலை வாங்கிட்டு வரணும்னு சொல்றாரு. மலை உச்சியில் இருக்கிற புள்ளையாரை கும்பிட வரும் ஜனங்களுக்குப் பழங்கள், தேங்காய் விற்று புழைக்கிறவரு முதலாளி. எனக்குச் சம்பளம் என்ன தர்ராரு? …

>>

சாந்தி சந்திரசேகரன்/இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்!

நீர் சொட்டு சொட்டாக ஊறியது.காத்திருந்த பெண்கள் நொந்து போய்ப் புலம்பத் துவங்கினர்.“இந்தத் தண்ணிக்காக நாலு கிலோமீட்டர் நடந்து வரதுக்குள்ளகுறுக்கு வலியும் கால் வலியும் உசுரு போகுத்துக்கா.”“ம்க்கும்.. இதுல இந்த வெயிலு வேற. வீடு சேர்றதுக்குள்ள தல வலி வந்திடுது”“நேத்து சுந்தரி மயங்கியே …

>>

குஞ்சனூர் குளம்/சுஶ்ரீ

வள்ளி,“ஏண்டி ராக்கு தெரியுமா விஷயம் நம்மூரு குளத்துக்கு விடிவு காலம் வரப் போவுதாமில்ல?”“என்னத்தை போ ஒவ்வொரு தேர்தல் வரப்பவும் இதுதான் பேச்சு, ஆனா நாமளும் இருவது வருஷமா இந்தக் குடத்தை தூக்கிட்டுதான் திரியுதோம்.”எச்சுமி,”இந்தத் தடவை ஏமாத்த முடியாது, இந்தப் பசு மாடுகளைப் …

>>

ஸ்ரீராம்/சிறுமியின் சிரிப்பு

“இந்த ஆம்பளைகள் நினைத்தால் சைக்கிளில் குடத்தை கட்டிக்கொண்டு போய்ச் சட்டுனு தண்ணி எடுத்துட்டு வந்துடலாம். ஒரு தடவைக்கு ரெண்டு மூணு குடங்கள் கூடக் கொண்டு வரலாம். நம்மையே அலைய வைக்குறாங்களே.”“சில ஆம்பளைங்க எடுத்துட்டு வர்றாங்க தான் பொம்மி… ஆனா பாரு். அவங்க …

>>

முனைவர் என் பத்ரி/வறட்சி

கமலாவும் விமலாவும் அமலாவும் காலி தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள்.அவர்களுடைய ஊரில் சில வருடங்களாக மழை இல்லை.அதனால் அவர்களுடைய ஊரில் தண்ணீருக்கு பற்றாக்குறை. அடுத்த ஊரில் ஏதோ ஒரே ஒரு கிணற்றில் தண்ணீர் கிடைக்கிறதாம். இந்தச் செய்தியை அறிந்த அவர்கள் …

>>

அழகியசிங்கர்/வாழைப்பழம்

மயிலாடுதுறையிலிருந்து 3 கிலோமீட்டர் தூரம்தான் அசிக்காடு கிராமம்.என் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி கூப்பிட்டார்வயலில் விளைகின்ற பொருள்களைக் கொடுப்பதற்குத்தான் கூப்பிடுகிறார். இந்த முறை என்ன கொடுக்கப் போகிறார். ஆவலாக இருந்தேன். சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனேன்.அண்ணன் என் சைக்கிள் பின்னால் கட்டிக் கொடுத்தது வாழைத்தாரு.வீடு வந்து …

>>

வி.பிரபாவதி/திருஷ்டி

தலையை நன்கு ஷாம்பூ போட்டுக் குளித்துப் பறக்கவிட்டபடி அறையை விட்டு வெளியே வந்தாள் அனிதா. இது என்ன தலைவிரிக் கோலமோ? நல்லாவா இருக்கு? ஒரு ரப்பர் பேண்டால் கொண்டை போட்டுக்கொள்ளக் கூடாதா என்று நினைத்தார் மாமியார் வசந்தா. கேட்பது பையனுக்கே பிடிக்காது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாழைத்தார் வேண்டுதல்

ராக்காயி வாழைத்தாரைக் கட்டி எடுத்து வந்து சைக்கிளில் கட்டி வைத்தாள். .”எடுத்துட்டு போய் வெரசா வந்துடு. நம் வூட்டிலும் இன்னிக்கு ஆடி வெள்ளி கும்பிடணும். இதிலிருந்து ரெண்டு வெட்டிக் கொடேன். நம்ம உழைப்பினால் தானே முதல் குலை வாத்தியார் வீட்டுக்குப் போவுது. …

>>

வி.பிரபாவதி/நம்பிக்கை

பொழுது விடிந்ததுமே வாழைத்தாரை வெட்டிப் பத்திரமாகச் சைக்கிளில் கட்டிக் கொண்டு சைக்கிளை வேகமாக மிதித்தான் மாறன்.பெரிய வீட்டம்மா போன வாரமே சொல்லியிருந்தாங்க. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்குக் கூழ் ஊத்தும்போது அந்த ரஸ்தாளி மரத்தின் முதல் தாரை அம்மன் பாதத்தில் வைத்து எல்லோருக்கும் …

>>

ரேவதி பாலு/குருவாயூரப்பனுக்கு அர்ப்பணம்

தோட்டக்காரன் பழனி வாழைக்குலையை கார் டிக்கியில் வைத்ததும் கார் குருவாயூர் நோக்கிப் புறப்பட்டது . சுப்பிரமணி தான் ஒட்டிக்கொண்டு போனார். அருகே அவர் மனைவி தங்கம், அதிகாலையில் குளித்து உடலில் மஞ்சள் மணமும் தலையில் மல்லிகை மணமும் மணக்க.அவர்கள் வாழைக்கொல்லையில் முதல் …

>>

நாபா.மீரா/நறுமுகையே!

அப்பா ..அப்பா, சத்தமாக அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள் அஞ்சலி.ஏம்மா, இவ்வளவு பதட்டமா வர்றே கேட்டபடியே அவளை அமரவைத்து குடிக்க சில்லென்று மண்பானை நீர் கொடுத்தாள் அம்மா.வெட்டிவேர் சுவையுடன் குளிர்ந்த நீர் தொண்டையில் இறங்கியதில் அவள் படபடப்பு சற்றே தணிந்தது.அறையிலிருந்து வெளியே வந்தவரிடம், …

>>

ரேவதி பாலு/தலை முடி தானம்

“இங்கே வாத்திவ்யா ! இது என்ன ? இப்படி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு காலேஜுக்கு போற?”ஊரிலிருந்து காலையில் வந்திருக்கும் சொர்ணம் பாட்டி தான் பேத்தியைப் பார்த்துச் சொன்னாள்.திவ்யா பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வெளியேற, ரேணு அம்மாவைப் பார்த்து, ” …

>>

நாபா.மீரா/வாழையடி வாழை

ஆறுமுகம், முதலாளி பரமேஸ்வரன் கொடுத்தனுப்பிய வாழைத்தாரை சைக்கிளில் சணல் கயிறு வைத்து இறுக்கிக் கட்டிவிட்டு திருவள்ளூரைச் சேர்ந்த மீஞ்சூரிலிருந்து பூங்குளம் நோக்கிச் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.பூங்குளத்தில் பண்ணையார் வீரபாண்டியன் வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டும்.பரம எம்ஜிஆர் ரசிகன் ஆறுமுகம்.“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் …

>>

பி.ஆர்.கிரிஜா/ திருப்தி

பச்சை பசேல் என்ற வயல் சூழ்ந்த கிராமம் சித்திரப்பட்டி. கந்தசாமிக்கு அவனுடைய ஊர்மேல் அப்படியொரு காதல். தினமும் சைக்கிளில் சென்று தன் வேலைகளை முடிப்பான். அப்பா குமாரசாமி விவசாயம் பார்த்தாலும் கூடவே சில தொழில்களும் செய்து வந்தார். நல்ல உழைப்பாளி. விவசாயத்தில் …

>>

அர்ஜுனன்/எண்ணங்கள்

மூன்று பேரும் ஒரே இடத்தில் இருந்தாலும், மூவரின் பார்வையும் மூன்று திசைகளில் இருந்தன.வீட்டுத் தலைவன் இறந்ததிலிருந்து அந்த வீட்டில் சிரிப்பு என்பதே நின்றுபோய் விட்டது.மூத்தவனுக்கு தன் பள்ளிப்படிப்பு இடைநின்றுவிடுமோ என்ற நீண்டகால கவலை.இளையவன் தன் உடனடி பசியைத் தீர்க்க, வீட்டில் இருந்த …

>>

எஸ் . எல். நாணு/பலி

ஊருக்கு வெளியே இருந்த காட்டு பங்களாவில் நரபலிக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு மாரியின் வருகைக்காகக் காத்திருந்தான் தேவன்.பங்களாவின் கூடத்துக்கு நடுவில் பெரிய ஹோம குண்டம். அதில் விடாமல் தணல் தகித்துக் கொண்டிருந்தது.பக்கத்தில் குங்குமம் சந்தனம் பூசிய பெரிய பைரவ கத்தி.மாரி வந்துவிட்டால் …

>>

கரந்தை இந்து/அண்ணனுக்குப் பிடித்த பரிசு

“என்னங்க பலமான யோசனை அப்படி ? நானும் பார்க்கிறேன். ரொம்ப நேரமா மோட்டு வளையைப் பார்த்துத் தாடையில் கை வைச்சுக்கிட்டு அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ” அருகில் வந்து கணவன் பத்மநாபனைக் கேட்டாள் மனைவி பத்மா.அண்ணனும் அண்ணியும் “எண்பது முடியுதுன்னு ஆயுஷ்ஹோமம் …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/ படம் ஒன்று -பலன் இரண்டு

இடது கையில் எலும்பு முறிவு மற்றும் பின் மண்டையில் ரத்தக்கசிவு என்று ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தாள் மாயா.பள்ளியிலிருந்து வரும்பொழுது ஒரு சைக்கிள் காரன் வந்து மாயா மேல் மோதிவிட்டு, வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டான்.அடிபட்ட மாயாவை பக்கத்து வீட்டு வசந்த் உடனே …

>>

எம். எல்.பிரபா/”தங்கையின் வாழை”

ராதாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. அவள் தினமும் இரவில் அண்ணன் ரகுவிடம் போனில் பேசிவிட்டு தான் தூங்குவாள். போன் அடித்துக் கொண்டே இருந்தது. ரகு ஓடி வந்து போனை எடுத்து ஹலோ, எப்படிம்மா இருக்க? என்றான் .நான் நல்லா இருக்கேன் …

>>

ஸ்ரீராம்/ஓவியம்

“டாடி.. மம்மி..” பெருங் கூச்சலுடன் ஸ்கூல் பஸ் நிற்பதற்கு முன்னாலேயே கீழே குதித்து, தடுமாறி, கையில் சுருட்டிய ஒரு பேப்பருடனும், பரிசு கோப்பையுடனும், முதுகில் மாட்டிய ஸ்கூல் பேக்குடனும் உள்ளே ஓடி வந்த ஏஞ்சலை, “பார்த்து.. பார்த்து… கீழே விழுந்திட போறே..” …

>>

மரு.ச.கந்தசாமி/வாழை சீர்

கபாலியும் முத்துவும் சகோதரர்கள்.முத்து படித்து அரசு வேலையில் பக்கத்து ஊரில் வசிக்க ,கபாலி விவசாயம் செய்து வந்தான்.கபாலி “நானும் தம்பி மாதிரி படித்திருந்தால் இந்த விவசாயத்தை நம்பி நிலத்தில் காத்துக் கிடக்க வேண்டாம்” என‌ மனைவியிடம் புலம்பினான்.அவளோ” யார் யாருக்கு என்ன …

>>

முனைவர் என். பத்ரி/வாழவைக்கும் வாழைக்காய்

கோபாலு ஒரு விவசாயி. அவனுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. நகரத்துக்கு வெளியே ஒரு கிராமத்தில் அவனுக்கு ஒரு ஏக்கர் நிலம் .அந்த நிலம் முழுவதும் வாழை மரங்கள் மட்டுமே. அவன் சில நாட்களில் கூலி வேலைக்கும் செல்வான். பெரும்பாலும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கவலை நீக்கிய குலை

மனம் சோர்ந்து போய் விட்டாள் காயத்ரி. கணவன் அரவிந்தனுக்கு இருதார யோகமாம். அதிலும் ஒரு தாரம் இறந்து விடுவாளாம். தனக்கு முன் யாருடனாவது காதல் வந்து, கல்யாணம் ஆகி இருக்குமோ? கணவனை வேறு மாதிரிப் பார்க்க ஆரம்பித்தாள்.இவர்களது வீட்டின் கீழ் போர்ஷனில் …

>>

ஷைலஜா/ப்ரார்த்தனை

அந்த சிறுஊருக்குப் பெயரே பச்சை வயல்.அப்படியொரு பசுமை.தபால் பட்டுவாடா முடித்து வீடுகிளம்பத்தயாரானான்போஸ்ட்மேன்வேலவன்.அவனது சைக்கிள் காரியரில் ஒருநீண்டவாழைத்தாரை இலையில் சுற்றி வைத்தபாண்டியன் ‘தோட்டத்துல விளைஞ்சது கொண்டுபோ,” என்றார் உரிமையாக‌.பாரமின்றிவண்டியை சாலையில்மிதித்துப்போக நினைத்த வேலவனுக்கு அவர்பேச்சைத்தட்டமுடியவில்லை‌.ஏனென்றால் அவர் போஸ்ட்மாஸ்டர்.வேண்டாவெறுப்பாய்சைக்கிள்பெடலைமிதித்தபடி பாதி வழி போகையில் வேலவனின்போன் …

>>

ஆசீர்வாதம்/சாந்தி சந்திரசேகரன்

“நம்ம வீட்டுலயும் ஸ்டீபன் வீடு மாதிரி குடில் வைக்க, கிறிஸ்துமஸ் மரம் வாங்கித் தாரீங்களா அப்பா?” எதையுமே கேட்காத ராதா, கந்தசாமியிடம் ஆசையாய் கேட்க அவரால் மறுக்க முடியவில்லை. “ஏங்க தீபாவளி பண்டிகை கொண்டாடவே எவ்ளோ சிரமப்பட்டோம். அவகிட்ட செலவச் சொல்லிப் …

>>

அ.எபநேசர் அருள் ராஜன் /கொழந்த மனசு

இராமசாமியின் கொழந்த மனசு பதக் பதக்ன்னு அடிச்சிக்கிச்சி.நாலு பேர் ஏதும் சொல்வாங்களோன்னு எப்போதும் பயம்.சைக்கிள ஓட்ட முடியாம காலு நடுங்குச்சி.யாருகிட்டையாச்சும் சொன்னா தன்னைக் கேலி செய்வாங்களோன்னு பயப்பட்டான்.ஆனாலும் அவன் நினைக்கிறததான் செய்யணும்னு பொறப்பட்டான்.அவனுக்கு ஊரு வச்ச பட்டப்பேரு கொழந்த.கொழந்த மாதிரி தான் …

>>

ஜெ.பாஸ்கரன்/அரசிலிருந்து ஒரு கடிதம்!

“சார், போஸ்ட்”இப்படிக் கூப்பிட்டுக் கடிதங்கள் கொடுத்த நாட்களை எண்ணியபடி, டவுனிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்த கள்ளிப்பட்டி கிராமத்துக்குத் தன் பழைய சைக்கிளில் வந்துகொண்டிருந்தான் போஸ்ட்மேன் தருமு.மண் தெருவை ஒட்டிச் சுமார் ஒரு மைல் தூரத்துக்குப் பசுமையான மரங்களும், வாழைத் தோட்டங்களும், வயல்களும் …

>>

வாழையடி வாழை / அப்புசிவா

* சைக்கிளை நிறுத்தினான்.சுற்றுமுற்றும் பார்த்தான்.யாருமே இல்லை.அந்தக் குடிசையின் அருகே தள்ளிக்கொண்டிருந்த வாழைக்குலையை சத்தமின்றி வெட்டினான்.கேரியரில் வைத்து வேகமாகக் கிளம்பினான்.எப்படியும் இருநூறு பழம் தேறும் என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.வீட்டை அடைந்து வாழைத்தாரை திண்ணையில் இறக்கிவைத்தான்.உம்மென இருந்தாள் மனைவி.“ஏண்டி… என்னா கவலையா இருக்க?”“சந்தைக்குப் போனேன்”“சரி?”“பத்திரமாதான் …

>>

கிரிஜா ராகவன்/நான் யார் தெரியுமா?

“கான்பரன்ஸ் முடிஞ்ச உடனே எனக்குத் தனியா பேச நிகிலா மேடம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்காங்க.” பக்கத்தில் இருந்த சீனியர் ரிப்போர்டர் விமலாவிடம் பெருமையாகச் சொன்னாள் சுசரிதா. பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு அடுத்த கான்பிரன்சுக்கு தி பார்க் ஹோட்டலுக்குப் போவதற்கு வேகமாகக் கிளம்பிய …

>>

எஸ்.எல். நாணு/முகம்

பிரபல தொழிலதிபர் அஷ்வினின் பிறந்தநாள் விழா லீலா பேலஸில் கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது.சென்னை மாநகரத்தின் பல முக்கியஸ்தர்கள் அங்குக் கூடியிருந்தார்கள்.ஒவ்வொருவராக மேடையேறி அஷ்வினுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு மைக்கில் அவனைப் புகழ்ந்து பேசினார்கள்.“மிஸஸ் அஷ்வின்”இறுதியாக அஷ்வினின் மனைவி பூரணியைப் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுதந்திரமே….

இரண்டு நாள் விடுமுறை என்பதால் பவித்ரா மகிழ்ச்சியில் குதித்தாள். அதிலும் கணவர் அரவிந்த் இன்று இரவே அலுவலக வேலையாக வெளியூர் செல்கிறார். சுதந்திரம் அதிகமானது போல் உணர்ந்தாள்.கூந்தல் சிலுப்பிக் கொள்ள, காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள். காலையில் நேரம் கழித்து எழுந்து …

>>

ஜெ.பாஸ்கரன்/தனிமை

கிராமத்து மாலை வெயில், மெர்லினையும் அவள் தோள்வரை வளர்ந்திருந்த கதிர்களையும் ஆரஞ்சு நிறத்தில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது.எஸ்தர் சித்திதான் அப்பா திடீரெனத் தவறிவிட்ட செய்தியைத் தெரிவித்திருந்தாள்.மெர்லின் கல்லூரிப் படிப்பை முடித்து, வெளியூரில் வேலைக்குப் போனபோது, அம்மா இறந்துவிட, தனிமையில் அப்பா.தன்னுடன் பணி புரியும் எஸ்தரைத் …

>>

அர்ஜுனன்/ஆதரவு

அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, உயர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பவள் சுஜா.தமிழகத்தில் அவளது பெற்றோர் நினைவாக, ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று தொடங்க நினைத்தாள்.“குழந்தைகளுக்கான அனாதை இல்லமா?” எனக் கேட்டாள் தோழி.“குழந்தைகளுக்கு அரசாங்கம் தொடங்கி, தனியார் தொண்டு நிறுவனங்கள்வரை நிறையவே நடக்கின்றன. எனது …

>>

அழகியசிங்கர்/டிரஸ்

புனிதா புயல் போல் நுழைந்தாள் வீட்டிற்குள்.“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”என்று அம்மாவைப் பார்த்துத் திட்டினாள்.“நீ ஒன்று சொல்கிறாய்.. அப்பா ஒண்ணு சொல்கிறார்..நான் எந்த டிரஸ் போட்டுக் கொண்டு போறது..” இறுதியில் அவள் விருப்பப்படிதான் டிரஸ் போட்டுக்கொண்டாள். அம்மாவும் அப்பாவும் மூக்கில் விரல் வைத்தபடி …

>>

கோபம்/ அப்புசிவா

“டேய் அழகா இருக்குடா இந்த படம்” “ஆமா, எனக்கும் பிடிச்சிருக்கு” “ஏஐ தானே?” “ஹாஹா, ஏஐ மாதிரியே வரைஞ்சேன்” “அட… பாரேன், பேக்கிரவுண்டு, புல்வெளி எல்லாமே செம்ம” “ஆமாபா, நீ கூட வரையலாம்” “எனக்கு வேணாமே அந்த ரிஸ்க், அதுசரி… ஏன் …

>>

எம்.எல்.பிரபா/முகமூடி

வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக ஆட்டோவில் ஏறினாள் துர்கா. அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண். சொந்தமாக இரண்டு கார்கள் வீட்டில் உள்ளது. அவளிடம் ஓட்டுனர் லைசன்ஸ் உள்ளது. இருந்தாலும் ஆட்டோவில் செல்வது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் .அதைவிட ஆட்டோவை ஓட்டிச் செல்ல …

>>

மரு.ச.கந்தசாமி/மீரா

மீரா கல்லூரியின் கனவு தேவதை .படிப்பிலும், விளையாட்டிலும் அழகிலும், நம்பர் 1. கல்லூரியில் அவளை சுற்றாத பாய்ஸே இல்லை. அவள் பெற்றோர் மீராவிடம்” மீரா உன் அழகுக்கும் படிப்புக்கும் ஏற்ற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொள்” என்று வற்புறுத்தினர். மீராவோ …

>>

வாழ்க்கை வாழ்வதற்கே/சாந்தி சந்திரசேகரன்

‘பெற்றோர்களை இழந்து.. யாருக்கோ அடிபணிந்து.. வாழும் வாழ்க்கை இனி தேவையில்லை’ என்று முடிவெடுத்த ரஞ்சிதா, அங்கிருந்த மலை உச்சியை நாடினாள். கோரைப்புற்கள் காற்றின் தாளத்திற்கு தலையசைத்தன..! இளையராஜாவின் இசையினும்.. மெல்லிசையாய் மலையும் மரமும் சங்கீதக் கச்சேரி நடத்தின. மனதில் இருந்த பாரமெல்லாம் …

>>

முகம் தொலைத்தவர்கள் /ஸ்ரீராம்

ஆடிட் நடந்து கொண்டிருப்பதால் இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது வீடு திரும்ப. “எல்லோரும் தான் ஆபிசுக்கு போறா.. இவள மாதிரி அழிச்சாட்டியம் யாரும் பண்றது இல்லை” ஹாலில் அமர்ந்திருந்த மாமியாரின் குரல் சிடுசிடுவென்று முணுமுணுப்பாக ஒலித்தது. கிச்சனுக்குள் நுழைந்தவள் அங்கிருந்த …

>>

சுஶ்ரீ/தென்றலே என்னை தீண்டாதே

டேய் கமலேஷ் என்னை விட்டு ஏண்டா போனே,ஷைலஜா கோவம் கலந்த கொஞ்சலோடு கேட்டாள். இந்த மாலை நேரங்களை நாம எவ்வளவு ரசிச்சிருக்கோம். ”தென்றல் காற்றுன்னா இதுதான் உன் முகத்தை தொட்டு விளையாடி கன்னத்தை வருடிவிட்டு அப்பறம் என் கிட்ட வருது” கமலேஷ் …

>>

முனைவர் அ.எபநேசர் அருள் ராஜன்/காற்று சொன்ன சங்கதி

காற்று பலமாக வீசியதில் தீபாவின் கொண்டை அவிழ்ந்து பின்னோக்கிப் பறந்தது கூந்தல்.ஏதோ ஒரு இறுக்கத்தில் இருந்து விடுபட்டு தலைமுதல் கால் வரை சிலிர்க்கச் செய்திருந்தது. ஆளுயரப் புற்கள் காற்றிலாடி அவள் கன்னத்தை வருடின. கண்ணீரைத் துடைத்தன. காற்று காதோரம் பேசியது. வாழ்க்கையில் …

>>

ஷைலஜா/காற்றுக்கென்ன வேலி

சிவப்பு கோட். வெள்ளை ஷால். காற்றில் பறக்கநீல வானத்தின் கூந்தலாக பஞ்சு மேகம் மேலே படர்ந்ததைப்பார்த்தாள். ‘வானுக்கும் என்னைப்போலமுகம் இல்லை.’ அவள் முணுமுணுத்தது காற்றினிலே கீதமாய் ஒலித்தது. ஒருகாலத்தில்.அந்தக்குரலை ரசித்து மணந்தவனின்குரூர முகம் கழுத்தில் தாலி ஏறிய பின்பு தான் தெரிந்தது …

>>

முனைவர் என். பத்ரி/பாரதியின் புதுமைப்பெண்

அமலா ஒரு கல்லூரியில் படிக்கும் யுவதி. பாரதியின் சிந்தனைகளில் முழுவதுமாக ஊறியவள். ஆனால் அவளுடைய பெற்றோர்கள் எப்பொழுதும் அவள் மற்றவர்களுடன் பேசுவதை விரும்புவதில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு கல்லூரியில் மட்டும் சேர்ந்து விட்டாள். பட்டப் படிப்பில் இறுதி வகுப்ப்பில் படிக்கும் அவள் தன்னுடைய …

>>

அர்ஜுனன்/சிதைந்த வீடு

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஊருக்குச் சென்றிருந்தேன். மேலத் தெருவில் இருந்த அந்த மச்சு வீட்டின் நிலைமை என்னை மிகவும் பாதித்தது. “இது நம்ம விநாயகம் தாத்தா வீடு தானே?” நண்பனிடம் கேட்டேன். “தாத்தாவை இன்னும் ஞாபகம் இருக்கா?” “ஏன் இல்லாம..? …

>>

சாந்தி சந்திரசேகரன்/கல்வி!

கோடை வெயில் சுட்டெரிக்கும் ஒரு காலை வேளையில், கிராமத்து வாத்தியார் வீட்டின் தரையில் அமர்ந்திருக்கிறது அந்த எளிய குடும்பம். ​தன் இரு மகன்களையும் அரவணைத்தபடி நடுவே அமர்ந்திருந்தாள் அந்தத் தாய். “மேச்சட்ட போடாத நம்ம பயலுகளுக்கு எப்பிடி வாத்தியார் சொல்லிக்குடுப்பாரு” காலையிலேயே …

>>

சுஶ்ரீ/காத்திருப்பு

செஞ்சூரியன் ஜெயில்ல இருந்து இன்னிக்கு திரும்பி வரப் போறான்.அவன் மனைவி காற்றிடை ,மகள் சிவந்தி,மகன் வேளன் மூவரும் காத்திருக்காங்க. அவன் செயிலுக்கு போறப்ப இந்த இரட்டை பசங்களுக்கு 6 மாசம். குடும்பமே வேலை பாத்த தோட்டத்து ஆண்டை(முதலாளி) காற்றிடையை அறிவுறுத்தி அனுப்பியிருந்தார்,”அவனை …

>>

ஜெ.பாஸ்கரன்/கண்ணம்மா

… காற்று, இடி மின்னலுடன் பெருமழை. அந்த ஊரே நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்டது. இயற்கைக்கு பாரபட்சம் இல்லை, ஊரில் எதுவும் மிச்சமில்லை. விதிவசமாகத் தப்பித்த கண்ணம்மாவும், இரண்டு குழந்தைகளும் மட்டும், அரசு கொடுக்கும் நிவாரண நிதி உதவிக்காகக் காத்திருந்தனர். யாரோ கொடுத்த உடைகள், …

>>

எஸ்.எல். நாணு/ஓவியம்

“ஏ பாண்டியா.. கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாம என்னடே திரும்பி உட்கார்ந்து கிடக்கே?”இளைய மகனை அதட்டினாள் ராக்கம்மா..“எனக்குப் பிடிக்கலை”“என்ன பிடிக்கலை?”“சாமி பிடிக்கலை..”மூத்தவன் எசக்கியப்பன் உடனே..“தம்பி.. அப்படியெல்லாம் சொல்லாதே.. சாமி குத்தமாயிரும்”பாண்டியன் பிடிவாதமாக இருந்தான்.“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது.. எனக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்”ராக்காயி பயந்து …

>>

மரு.ச.கந்தசாமி/கனவு பலித்தது

மூக்காயி அதிகம் படித்தவள் .கணவன் வீரப்பன் குடிப்பழக்கத்தில் அடிமையாகி வேலை செய்யாமல் ஒரே சண்டை .அவன் தினமும் குடிபோதையில் “ஏடி நீ படித்து என்ன பெரிய கலெக்டர் வேலைக்கா போகிறாய்? பேசாமல் சமையல் செய்து சோறு போடு போதும் ” என்று …

>>

கௌரிசங்கர்/தாய்மை

அன்றுசென்னை புழல் ஜெயில் முன்பாக ஜனங்கள் திரண்டு நின்று கொண்டு இருந்தார்கள். கணவன் ஜெயிலில் மூன்று வருடங்களாக ஒரு சிறு குற்றத்திற்காக அடைபட்டுக்கொண்டு இருந்த மனைவியின் விடுதலையை எதிர்பார்த்து காத்து இருந்தான். அருகில் ஒரு மனைவி கணவனின் விடுதலையை எதிர்பார்த்து காத்து …

>>

எம். எல்.பிரபா/மழை வெள்ளம்

நேற்றிலிருந்து மழை நிக்காம பேஞ்சிக்கிட்டே இருக்குது. ஆற்றில் இருந்து வெள்ளம் ஊருக்குள்ள வந்து கிராமமே முழுகிடுச்சு. வெளியே போகவே முடியல.வீட்டை சுத்தி தண்ணி தேங்கியது. கன்னியம்மா தன்னோட ரெண்டு பசங்களோட கூரை வீட்டுல கொஞ்சம் ஒழுகாத ஒரு மூலையில உட்கார்ந்து கொண்டிருந்தாள். …

>>

அ. கௌரி சங்கர்/நம்பிக்கை

குருவாயூர் ஊரிலில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கொத்துப்புழா என்ற கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் அன்று திருவிழா. பலவிதமான படையல்கள், ஊர்வலங்கள், ஆட்டம் பாட்டம் என்று கிராமமே பொங்கி வழிந்தது. பெண்களும் பெண் குழந்தைகளும் புத்தாடைகள் அணிந்தவண்ணம் …

>>

புதிய உதயம் – ஸ்ரீராம்

முதுபெரும் கர்னாடக இசைப் பாடகர் அபராஜிதன், உதவியாளர் சொல்லி, வெளியே வந்து பார்த்தபோது அந்த மூவரும் ஹாலில் சோபாவைப் புறக்கணித்து தரையில் உட்கார்ந்து இருந்தார்கள். யார் என்று ஒரு நிமிடம் நெற்றியை சுருக்கிய அவருக்கு, சட்டென இசையமைப்பாளர் விஸ்வம்குமார் அனுப்பிய ஆட்கள் …

>>

நாபா.மீரா/பொம்மலாட்டம்

கணினி ஆசிரியை மாலினி 12-ஆம் வகுப்பு A-பிரிவுக்குள் நுழைய, மாணவர்கள் கோரஸாக ‘குட்மார்னிங் மிஸ்’ என்றனர். மாணவர்கள் குரலில் தொனித்த உற்சாகம் ஆற்றலாய் உருவெடுத்து தன்னுள் புகுந்தது போல் உணர்ந்த மாலினி.., ஸ்டூடண்ட்ஸ்.. இன்னைக்கு AI தொழில்நுட்பம் பத்தி சொல்லப் போறேன். …

>>

கரந்தை இந்து/திடீர் திருமணம்

“கண்ணா, நாம் இருவரும் உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டாள் காவ்யா .திடுக்கிட்டுப் போன கண்ணன் “ஏன் காவ்யா திடீரென இப்படி வந்து கேட்கிறே? உனக்கு என்னாச்சு இன்னிக்கு?”“நீயும், நானும் ஸ்கூல் காலத்தில் இருந்தே பழகிக்கிட்டு இருக்கோம். நமக்குள் நிறைய விஷயங்களில் …

>>

சுஶ்ரீ/நெஞ்சு நிறைய சுமை

மார்த்தா திகைப்பில் இருந்தா. இப்படி அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஒரே நாளில் பரலோகப் பிராப்தி அடைவார்கள் என்று நினைச்சுக் கூட பாக்கலை.மைசூர்லயே பெரிய டிம்பர் மெர்ச்சன்ட் ராபர்ட்.எக்கச் சக்கமா சொத்து மட்டுமில்லை குழந்தைகளும் கூட. பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய …

>>

சசிகலா விஸ்வநாதன்/நான் மனிதி

பணிக்கு சேர்ந்த முதல் நாள் திருவாருலிருந்து மும்பை போயிருந்த சாவித்திரி கொஞ்சம் படபடப்பாகத்தான் உணர்ந்தாள்.பக்கத்தில் இருந்த மாதவன்”பயப்படேண்டா டோ! எந்து வேணோமெங்கிலும் என்னோடு சோதிச்சோ.”ன்றதும் படபடப்பு கொஞ்சம் குறைந்தது. எதிர்த்த சீட் டிலிருந்த அனிருத் கன்னடாவில்”நிம்ம மனை எல்லி இத்தே? நாவு …

>>

ஜெ.பாஸ்கரன்/பொம்மைகள்

மீராவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நீல நிற ஜீன்ஸ், வெளிர்ப் பச்சையில் பல வண்ணப் புள்ளிகள் போட்ட மேல் சட்டை, குட்டை முடி, கண்களில் துறுதுறுப்பு – கைகளில் ஆறேழு பொம்மைகள். அந்தக் கடையில் தேடித் தேடி, ஒரே அளவில் பல வண்ணத்தில் …

>>

எம். எல்.பிரபா/பருவ காலங்கள்

“ சரோஜா டீச்சர் பிற்பகல் கடைசி பாட வேளையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். டீச்சர்… டீச்சர்… என்றான் மணி. என்னப்பா, என்ன வேணும்? ஏதாவது சந்தேகமா? ஆமாம் டீச்சர். எல் நினோ… எல் நினோ.. அப்படின்னு எங்க அப்பா எதோ …

>>

ப்ரார்த்தனை/ஷைலஜா

. “மரியா ! பைத்தியக்கார ஆஸ்பத்திரி நெருப்பு புடிச்சுகிச்சி.ஒரேபதட்டமா இருக்கு “போனில் சகநர்ஸ் காந்திமதி சொன்னதும் மரியாவுக்கு நெஞ்சு துடித்தது. சாலை விபத்தில் அவளது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு நான்கு மாதமாய்வீட்டோடு படுக்கையில் கிடக்கிறாள். ‘தெய்வமே! அந்த ஆறு பேரையும் காப்பாற்றி …

>>

எ.ஸ். எல். நாணு/சாணக்யதனம்

“இதப்பாரு ரமா.. நீ நல்ல திறமைசாலியா இருக்கலாம்.. தலை சிறந்த நிர்வாகியா இருக்கலாம்.. ஆனா கார்பரேட்னு வந்துட்டா கொஞ்சம் சாணக்யத்தனமும் வேணும்.. போர்ட் மீட்டிங்கறது லேசுபட்ட விஷயம் இல்லை.. உனக்கு அனுபவம் பத்தாது”ராஜ்மோகன் மகளை கவலையுடன் பார்த்தார்..“எல்லா விஷயத்துலயும் நீ கொஞ்சம் …

>>

ஷைலஜா/ப்ரார்த்தனை

.l“மரியா ! பைத்தியக்கார ஆஸ்பத்திரி நெருப்பு புடிச்சுகிச்சி.ஒரேபதட்டமா இருக்கு “போனில் சகநர்ஸ் காந்திமதி சொன்னதும் மரியாவுக்கு நெஞ்சு துடித்தது. சாலை விபத்தில் அவளது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு நான்கு மாதமாய்வீட்டோடு படுக்கையில் கிடக்கிறாள். ‘தெய்வமே! அந்த ஆறு பேரையும் காப்பாற்றி விடு. …

>>

அழகியசிங்கர்/மேரி

அந்த ஏரியாவில் அவள் பிரபலமானவள். அவளைத் தேடி வராத வாடிக்கையாளரே இல்லை.ஒவ்வொரு முறையும் அவள் வீட்டைத் தாண்டிப் போகும்போது அவள் வீட்டிற்குள் நுழைய வேண்டுமென்று நினைத்துக் கொள்வான். அவன் அவள் வீட்டைத் தாண்டிப் போகும்போது அந்தப் பெண் மேரி அவனைப் பார்த்துப் …

>>

ஸ்ரீராம்/சிறகுகள்

கடைசித்தம்பி ரகு அந்தப் படத்தைக் கொண்டுவந்து ஹால் சுவரில் மாட்டினான். “இதைப் பார்த்து கூட அஞ்சு அண்ணனுக்கும் நிலைமை தெரிஞ்சு திருந்திடவா போறாங்க” என்று நினைத்துக் கொண்டான். அப்பா இறந்தபின் இவர்களை எடுத்து வளர்த்த அம்மாவும் மறைந்துவிட அக்காதான் எல்லோரையும் வளர்த்து …

>>

முனைவர் என். பத்ரி/அகதிகள் ஆறு பேர் !

கவிதா ராமேஸ்வரத்தின் கடலோரப் பகுதியில் வசிக்கும் ஒரு சமூக சேவகி. அவள் ஒரு ஏழை .என்றாலும் மற்றவர் துயர் துடைக்கும் பணியில் சிறப்பான அக்கறை காட்டுபவர். அன்று காலை கட்டுமரத்திலிருந்து இலங்கையிலிருந்து ஆறு அகதிகள் ராமேஸ்வரத்தின் கடலோரத்தில் வந்து இறங்கினார்கள். ஒளி …

>>

ரேவதி பாலு/மாற்றங்கள் தந்த ஏற்றங்கள்

“அம்மா இன்னைக்கு நான் உன்னை ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போக போறேன் .அங்க போனதும் நீ ரொம்ப ஆச்சரியப்பட போறே!” என்றான் சுதாகர். “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே காரில் ஏறினாள் சாரதா. “என்னடா …

>>

சசிகலா விஸ்வநாதன்/குர்பானி

நஃபிஸா ஆட்டை ஓட்டிக்கொண்டு வந்தாள். நல்ல வளர்ந்த கொழுத்த ஆடு. குர்பானிக்கென்றே நேர்ந்து விட்டது போல் இருந்ததுஅவனோட இள மஞ்சள் நிறம் மாலை வெயிலில் பொன் போன்று ஒளிர் விட்டது. நெற்றியில் கறுப்பு நிற திட்டில் நடுவில் வெள்ளை நிறத்தில் பொட்டு …

>>

கஸ்தூரி குருசாமி/ஐந்தறிவு உயிர்

கொத்தனாராக தினக்கூலிக்கு வேலை பார்த்து வந்த ரஹீம் கொரோனாவில் இறந்த பின்பு வாழ வழியின்றி ஒரு வீட்டில் சமையல் செய்து வந்தாள் கதீஜா. பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்.மதியம் மட்டும் அங்கு உணவு உண்பாள். அந்த வீட்டு எஜமானி அவளுடன் அன்பாகவே …

>>

மஞ்சுவின் மஞ்சை/கஸ்தூரி குருசாமி

மஞ்சு தன் காதலனை பார்க்க தோட்டத்திற்கு செல்கிறாள்,அவளோடு அவள் வளர்க்கும் மயிலும் உடன் சென்றது,மஞ்சையின் அழகுக்கு இணையாக ஒப்பனை செய்து காத்திருந்தாள். ஐந்து வயதிலிருந்து இந்த மயிலோடு lவிளையாடுகிறாள்.இன்று அவளை சந்திக்க வருவதாக காதலன் தகவல் கொடுத்தான். ஆயிரம் கனவுகளோடு காத்திருக்கும் …

>>

கஸ்தூரி குருசாமி/அப்பாவின் கண்டிப்பு

கீதா திருமணமாகி திருச்சியில் கணவ ரோடு தனிக்குடித்தனம் போனாள். சாமான்களை எடுத்து வைக்கும் போது அப்பாவின் புகைப்படத்தை மாட்டினாள். அப்பா ரொம்ப கண்டிப்பானவர் எந்த வேலையிலும் கௌரவம் பார்க்க கூடாது, எல்லா வேலையும் செய்ய வேண்டும்,ஆடம்பரம் கூடாது, எல்லோரையும் மதிக்க வேண்டும் …

>>