திருக்குறள் சிந்தனை 26/அழகியசிங்கர்

என் கண்ணில் ஒரு புத்தகம் தட்டுப்பட்டது. ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் என்ற புத்தகம். முனைவர் யு ஜெயபாரதி, முனைவர் ந தேவி, திருமதி சுபாஷினி தயாரித்த புத்தகம்.

>>

அன்பு நண்பர்களே../சுப்பிரமணியன் சந்திரசேகரன்

உங்களில் எத்தனை பேருக்கு மும்பை மழைப்பொழிவின் இயல்பு தெரியும் என எனக்கு தெரியவில்லை எனது பணி காரணமாக ஒரு முறை சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது.
அது ஒரு மும்பை மாரிக் காலம்.. துல்லியமாக ஜூலை மாத மும்பை மாரிக் காலம்.
மும்பையில் மழை எப்போதும் சல்லடை நீர் தாரகைகள் போல் சிறுசிறு துளிகளாய் பொழிந்து கொண்டே இருக்கும் .

>>

இனிக்கும் தமிழ் – 86/ – டி வி ராதாகிருஷ்ணன்

முற்றிலும் மெல்லின எழுத்துகளால் அமைந்தது கீழே குறிப்பிட்டுள்ள கவிகாளமேகத்தின் பாடல்.. மானமே நண்ணா மனமென் மனமென்றுமமானமான் மன்னா நனிநாணும் – மீனமாமானா மினன்மின்னிமுன் முன்னே நண்ணினுமானா மனிமேனி மான் மானமே நன்னா மனம் என்- மானம் உடைய தமையினையே விரும்பாத மனத்தின் …

>>

விபரீத ஆசை/புதுமைப் பித்தன்

தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு மேவும் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுவத்தி, எருமுட்டை கலந்த வாசனை, தூரத்துப் பாடை எல்லாம் மெட்ராஸ் பிண ‘வாசனை நாற்றம்’ கலந்த காட்சியை என் புலனறிவில் இடித்து

>>

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …19/அழகியசிங்கர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு பதிப்பாளரும் கொண்டுவரும் புத்தகங்களைப் பார்க்கும்போது. இந்தப் புத்தகங்களை விற்கிறேனோ இல்லையோ நானே புத்தகங்களை வாங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.
முதலில் என் கடையில் என்னன்ன புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறேன் என்பதை ஓரளவாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். ஏனென்றால் புத்தகங்களைப் பற்றி சொல்லிவிட்டு உடனே நான் ஸ்டால் எண் 403க்கு ஓட வேண்டும்.
திரும்பவும் வீடு திரும்பும்போது அதிக நேரம் ஆகிவிடும். ஒருவிதத்தில் என் ஸ்டாலில் விற்க வைத்திருக்கிற புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதனால்தான் யாவரும் பதிப்பகம் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். ஒன்று விற்க முயற்சி செய்வேன். அல்லது நானே வாங்குவேன். இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிச் சேமித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி பிறகு சொல்கிறேன்.
இப்போது பா ராகவனின் யதி என்ற பிரம்மாண்டமான நாவலைப் பற்றி எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். 926 பக்கங்கள் கொண்ட யதி என்ற நாவலை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பா ராகவன் எத்தனை நாட்கள் எழுதினார் என்பது இருக்கட்டும். ஒரு வாசகன் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் இதைப் படிக்க.
புத்தகக் காட்சியில் இரா முருகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய அரசூர் வம்சத்திலிருந்து தொடர்ந்து அவர் எழுதிய நாவல்களில் 200க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி இருப்பதாகக் கூறி உள்ளார். கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வாசகன் எத்தனைக் கதாப்பாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வான் என்றும் தோன்றியது. ஆனால் யதியைப் பற்றி சி ஜே ஆனந்தகுமார் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறார். எப்படி குறைவான பாத்திரப்படைப்பை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்டமான நாவலைக் கட்டி எழுப்பினார் என்று.
அப்பாவின் புத்தகச் சேமிப்பில் கண்டு பிடித்த ஜாபால உபநிடதம்தான் எழுதத் தூண்டியதாக பா ராகவன் வெளிப்படுத்தி உள்ளார். இந் நாவலை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். இந் நாவலின் அதிகப்பக்கங்கள் என்னை மிரட்டத்தான் செய்கிறது. ஆனால் அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நாவலை மிரளாமல் வாசிப்பது எப்படி என்ற பயிற்சியை ஒரு வாசகன் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.
நாவலின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.
‘இந்த நாவல், துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை. இந்தியக் கலாச்சாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்காவது முடியும். இது பா ராகவனுக்குக் கூடி இருக்கிறது.’
புத்தகக் காட்சியில் இப் புத்தகத்தை விற்பதற்காக வைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமை படுகிறேன்.

>>

வெளியேற்றம்/ அதங்கோடு அனிஷ் குமார்

ஒரு கோப்பைத்
தேநீரின் நடுவில்
ஒரு விரல் நுனி பட்டு
கோப்பைக்குள்
வட்ட வட்டமாய் எழும்
அலைகள் போல
உங்கள் மனதை
சஞ்சலப்படுத்துகிறது
என் இருப்பு.

>>

இனிக்கும் தமிழ் – 85/ – டி வி ராதாகிருஷ்ணன்

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

>>

ஏழு புத்தகங்களின் அறிமுகம்/அழகியசிங்கர்

இன்னொரு புத்தகத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஏற்கனவே பிறமிளை பற்றியும், ஞானக்கூத்தன் பற்றியும் புத்தகங்கள் எழுதி உள்ளேன்.
‘பிரமிளும் விசிறி சாமியாரும்’ என்ற புத்தகத்தை 2018ஆம் ஆண்டு கொண்டு

>>

5. தந்தை வியோகம்/செல்லம்மாள் பாரதி

பாரதியாருக்கு விவாஹம் ஆன அடுத்த வருஷத்திலேயே அவர் தகப்பனார் நோயுற்று இறந்தார். பாரதியார் மனம் ரொம்பவும் வருந்தியது. “தந்தையின் வறுமை” மகனது மனதைப் பிடுங்கித் தின்றது. யந்திரப் போட்டியிலீடுபட்டுச் சின்னசாமி அய்யர் தமது சொத்தையெல்லாம் இழந்தார். தந்தையாரது பொருள் சேர்க்கும் ஆவலையும்,

>>

ஏழு புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்/அழகியசிங்கர்

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு அவசரம் அவசரமாக 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் பல புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன.

>>

நாய்ப் பாசம்/நாகேந்திர பாரதி

‘ இன்னைக்கு நடக்கிற நாய்கள் கண்காட்சியில் தன்னுடைய பொமரேனியன் முதலிடத்தில் ஜெயிக்கணும் ‘என்ற வெறியில் கமலா. காலையிலிருந்து அந்த நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்து தலை சீவி உடல் சீவி, வாசனைத் திரவியம் பூசி விதவிதமான ஆடைகள் அணிவித்துப் பார்த்து …

>>

ஒரு கதை ஒரு கருத்து – அழகியசிங்கர்

பொதுவாகக் கதைகளைப் படிக்கிறோம்.  எத்தனை கதைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.   இது மாதிரி யோசிக்கும் போது சுந்தர ராமசாமியின் கதைகளை உதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.

>>

க.நா.சு: ஓர் இலக்கிய இயக்கம்.

பிரஞ்சு நாவல் இலக்கிய உலகத்திலே
உருவத்திற்கும் நடைக்கும் சிறப்பான
முக்கியத்துவம் உண்டு .இதில் முக்கிய
மான நாவலாகக் கருதப்படுவது “குறுகி
ய வழி” ஸ்டெந்தால்,பால்ஸாக்,ஃப்ளோ
பேர்,முதலிய மேதைகளுக்கு இணையா
னவர் “குறுகிய வழி” எழுதிய ஆந்த்ரே
ழீடு என்பது உண்மை.
நாவல் என்றால் என்னென்ன இலக்கண
ங்கள் அவசியம் என்று பண்டிதர்கள் சொ
ல்கிறார்களோ அத்தனை இலக்கணங்க
ளையும் மீறி அற்புதமான நாவலை நமக்
குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் ஆந்த்
ரே ழீடு.நாட்குறிப்புகள்,கவிதை,இலக்கிய
சர்ச்சைகள் எல்லாவற்றையும் புகுத்தி
இலக்கணப் பண்டிதர்களைத் திணற அடி
த்திருக்கிறார்.உலக இலக்கியங்களிலு
ள்ள எல்லா கௌரவங்களையும் அவர்தம்
ஆயுட்காலத்திலேயே பெற்றவர்.ஒரு முப்
பது நாற்பது வருஷங்கள் பிரஞ்சுமொழி
யில் தலைசிறந்த ஆசிரியராக ஸ்தானம்
வகித்தவர்.அவருக்குப் போட்டியே இல்
லை.நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது
உலகில் அதுபற்றி ஆனந்திக்காத இலக்
கிய ரசிகர்கள் இல்லை என்றே சொல்ல
வேண்டும்.அவர் எழுதிய பல நூல்களை
நாவல் என்றே சொல்ல முடியாது.ஆனால்
“குறுகியவழி” என்ற நூல்தான் அவர் எழு
திய நூல்களிலே நாவல் என்ற பதத்தின்
லட்சிய உருவம்.
ழீட் நடையை மொழிபெயர்ப்பது சிரமமா
ன காரியம் என்பதை நன்கறிவேன்.
எட்டியவரையில் செய்ய முயன்றிருக்கி
றேன்.எந்த மொழிபெயர்ப்புமே ஓர் அள
வில் குறிக்கோளை எட்ட முடியாதுதான்.
ஓரளவிற்கு மூல நூலில் உள்ள சாராம்சம்
வந்துவிட்டால்போதும் என்று விட்டுவிட
வேண்டியதுதான்.ழீடின் இந்தநாவலில்
உள்ளது பூராவும் என் மொழிபெயர்ப்பில்
வந்திருக்க முடியாது என்று எனக்கு நிச்ச
யமாகத்தெரியும்.ழீடின் சிந்தனைகளை
யும்,கலையையும் ஓரளவிற்குக் காட்டியி
ருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்குண்
டு.நம் வாழ்க்கையே இந்தமாதிரி நாவல்
களால் வளம்பெறும் என்ற நம்பிக்கையி
ல் இந்தச் சிரமமான மொழிபெயர்ப்புக்
காரியங்களை மேற்கொண்டிருக்கிறேன்.
க.நா.சு

>>

குதிரை /சுஜாதா

குதிரை, சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்ல முடியாது. அவரிடத்தில் பீஸ் என்கிற விஷயமே கிடையாது. எல்லாமே எட்டு முழம் தான்.
எண்பதுகளில் தீபாவளி மலர்கள் வெகுவாக முழங்கிய போது, அசோகமித்திரனும் சுஜாதாவும் ஒரு சுற்று வந்தார்கள். இந்த இருவரால் தீபாவளி மலர்களின் அந்தஸ்து பெருமளவில் கூடியது என்று தான் கூற வேண்டும்.

>>

கம்பன் கவியமுதம்-26/வளவ. துரையன்

[சாலி=ஒருவகை நெல்; திருமங்கையாழ்வார் திருக்கோவலூர் திவ்ய தேசத்தைப் பாடும்போது ‘செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே”’ என்பார்; வேலி=வயல்; வைப்பு=மருத நிலம்; மதுகரம் மொய்க்கும்=-வண்டுகள் மொய்க்கும்]

>>

இலக்கிய இன்பம் 26/கோவை எழிலன்

பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிப் பாக்கள் பல புனைந்த போதிலும் மரபில் தோய்ந்தவர். அவரையும் அறியாமல் அது சில இடங்களில் வெளிப்படுவது உண்டு. அத்தகைய ஒரு பாடலைக் காண்போம்.

>>

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி : சுஜாதா

ஆண்டாளைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார்.

>>

இனிக்கும் தமிழ் – 84/ – டி வி ராதாகிருஷ்ணன்

ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்த போது ,ஆணாதிக்கம்
மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும்
ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டி என) விமர்சிக்க,

>>

கல்லிடைக்குறிச்சியில் ஒரு வீடு/எம் டி முத்துக்குமாரசாமி

காலம் உறைந்து
கல்லிடைக்குறிச்சியின் கடைசி வளவில்
நாழி ஓடுகளாலான வீடாய் சமைந்திருக்கிறது
அதன் ஓவ்வொரு கூடத்தையும்

>>

தமிழ்ப்புலவர் ஒருவர்க்கும் இடையே நிகழ்ந்த அறிவுப்போட்டி. இதன்படி
திருச்செந்தூர்க் கோவிலின் வெளிப்பிரகாரத்தை மூன்றுமுறை

>>

இனிக்கும் தமிழ் – 81/ டி வி ராதாகிருஷ்ணன்

முருகன் அருள் பெற்ற பின், அருணகிரிக்கு இந்த உலகில் எல்லாமே சுவை குறைந்து விட்ட மாதிரி தெரிகிறது. அதிக பட்ச இனிப்பு உள்ள தேனும் கரும்பும் அவருக்கு கசக்கிறது

>>

வேட்டி தினம்! /திருப்பூர் கிருஷ்ணன்

தெருவெல்லாம் வேட்டிகளே தென்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆண்கள் உடை என்றால் அது வேட்டிதான். பான்ட், டிரவுசர் போன்ற

>>

இனிக்கும் தமிழ் – 80/ – டி வி ராதாகிருஷ்ணன்

உடம்பில் எந்த உறுப்புக்கு வலி வந்தாலும் கண் அழும். அது போல எந்த
உயிருக்கு துன்பம் வந்தாலும் பெரியவர்கள் அது தனக்கே வந்த துன்பம் போல நினைத்து வருந்துவார்கள்.

>>

இலக்கிய இன்பம் 25/கோவை எழிலன்

கடந்த பாடலுக்கு நேர்மாறான பாடல் மீண்டும் கம்பனிடமிருந்து. ஒரு மனிதன் நினைத்தவுடன் உறங்க முடியும் என்றால் அவன் மனதில் நிம்மதி இருக்கின்றது எனப் பொருள். சுந்தர காண்டத்தில் அனுமன் இரவு நேர இலங்கையைக் காணுகிறான்.

>>

திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றறப் பற்றிக் கொள்ள என சில /— எம்.டி.முத்துகுமாரசாமி

திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றறப் பற்றிக் கொள்ள என சில /— எம்.டி.முத்துகுமாரசாமி

>>

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது/எம்.டி.முத்துகுமாரசாமி

முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிப்பது என்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு

>>

கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்

1945 ஜூலை 3 அன்று சேலம் ஆத்தூர் வட்டத்திலுள்ள செக்கடிபட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கவிஞர் மித்ரா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டப் படிப்பை முடித்து, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகாலம் …

>>