ஷண்முக சுப்பையா/கரு

கவிதை பிறக்ககருவுற வேண்டிகட்டிலொன்றில்மெத்தை விரித்துகற்பனைக்காகக்காத்துக் கிடந்தேன்.வெளியேயாரோ ஒருத்தியாரிடமோ‘கருவிலே சிதைந்ததுமுதற் குழந்தைஇறந்து பிறந்ததுஇரண்டாவது குழந்தைபிறந்ததும் இறந்ததுமூன்றாவது குழந்தைஇப்பொழுது நான்கருவுற்றிருக்கிறேன்அது என்னாகுமோ?என்னையும்கொண்டு தான் போகுமோ?கண்டுதான்தெரிய வேண்டும்”என்று ஏனோஒப்பாரி வைத்துஓலமிட்டாள்.கேட்ட நான்வந்த கற்பனையைவிரட்டிவிட்டுநிம்மதியாய்தூங்கி விட்டேன். ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி – விருட்சம் நாளிதழ்

>>

ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி

பெட்டைக் கோழிமுட்டையிடும்!சேவற்கோழிஎன்ன செய்யும்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாது.ஒருவருக்கும் தெரியாது. ஷண்முக சுப்பையா/திருடர்கள் – விருட்சம் நாளிதழ் ஷண்முக சுப்பையா/படம் – விருட்சம் நாளிதழ் ஷண்முக சுப்பையா/அமரன் – விருட்சம் நாளிதழ்

>>

ஷண்முக சுப்பையா/அமரன்

எழுதுகோலை எடுத்தேன்ஏனோ அதுவாருகோலாய் மாறியது.செய்வதறியாதுஒரு கணம் திகைத்தேன்.மறுகணம்வருவது வரட்டு மென்றதனால்பழங்குப்பையைவாரி வாரி இறைத்தேன்.புதுக் குப்பையைக்கூட்டிக் குவித்தேன்.கண்டு நின்றஇலக்கியக் காவலர்கூட்டமொன்றுஓடோடி வந்தெனக்குபட்டாடை போர்த்திபரிசில் அளித்துஇலக்கிய மேதை உன் போல்உலகிலுண்டோ”என்றென்னைவாயார வாழ்த்திவானளாவப் புகழ்ந்து,அமரர் உலகில் புகுத்திஅதற்கு மேல்செய்யும் வகை அறியாதுதவித்தது.அமரன் நான்அவர்க் கென்னகைமாறு செய்யஎன்று …

>>

ஷண்முக சுப்பையா/திருடர்கள்

திருடன் ஒருவன்குருடன் வீட்டில்திருடப் போனான்.முடிந்த மட்டும்திருடிவிட்டுதிரும்பிவந்துதிருட்டுப் பொருளைஎடுத்துப் பார்த்தால்எல்லாம்திருடன் வீட்டில்திருட்டுப் போனதிருட்டுப் பொருள்.

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 85/அழகியசிங்கர்

14.11.2024 – வியாழன் ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள் எழுதியது இரவு 10.34

>>

அழகியசிங்கர்/குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் இன்றுபிரேயர் வகுப்பில்நிற்கவில்லைஎன்று ஓடிவந்துவகுப்பில் பதுங்கி இருந்தஎன்னைஅடிக்க வந்தார்தலைமை ஆசிரியர் நான் அன்று கலந்துகொள்ளவில்லைதான் என்னை அடிக்கவேண்டுமென்றஅவர் வன்மத்தைநினைத்து வியந்தேன் கையில் பிரம்படியின்வலியைப் பொறுத்துக்கொண்டு..

>>

விஞ்ஞானி செல்லக்குட்டி

கண்மணி என் கண்மணிகண்மணி என் கண்மணி கண்ணில் காணும்மின்னல் உனதுபுன்னகை தானே கன்னம் தீண்டும்ஈர விரல்கள்பனித்துளி தானே மெல்ல தழுவும்தென்றல் உனதுதொடுதல்கள் தானே நான் கவலை மறந்துசிரிப்பதும் உன்அருகினில் தானே கண்மணி என் கண்மணி என்னிதயம் வருடும்கீதம் உனதுமழலைகள் தானே நான் …

>>

பி. ஆர். கிரிஜா/குழந்தைகள் தினம் !

தத்தித் தத்தி தவழ்ந்து வா !தாவித் தாவிஆடி வா !குண்டு கண்கள்சிமிட்டியேகுதூகலமாய்குதித்து வா !பொக்கை வாய்சிரிப்போடுஉலகை மயக்கஓடி வா !உன் கன்னக் குழியின் அழகினைகண்டு களிக்கஅசைந்து வா !குழந்தையும் தெய்வமும்ஒன்றெனவே உலகிற்குஉணர்த்த வா !உன்னுள் இருக்கும்குழந்தைமைஉயிர்ப்போடுஇருக்கட்டும் ! 14/11/2024

>>

க.நா.சு. / ஐந்து ரூபாய்

நான் இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் மாம்பலத்தில் குடியிருந்தேன். அப்போதெல்லாம் சிரமத்தைப் பார்க்காமல் ‘பஸ் டர்மினஸுக்குப் போய்த்தான் பஸ் ஏறுவேன். நடு ஸ்டாப் எதிலும் பஸ் கிடைக்காது. பஸ்ஸுக்கு அப்படியும் தினம் காத்திருக்கத்தான் நேரும். அப்படிக் காத்திருக்கும் நேரங்களில் ஒரு பிச்சைக்காரன் …

>>

ரவி அல்லது/சுயம் மறந்த சுழற்சி

தத்தித் தவழ்ந்துஎழுந்து நடப்பதாகத்தான்இருந்ததுபால்யத்தின்தொடக்கம்குழந்தைத்தனமாகயாவரையும்ஈர்த்து.இப்பொழுதும்தத்தித் தவழ்ந்து தான்எழுந்து நடக்க முடிகின்றது.அந்தக் கல்லமின்மையைகைவரப் பெறாதமுதிர்ந்த குழந்தையாகஇயலாமையின்இறுதியில்.யாவருக்கும்பாரமெனஅழுத்தி.* .

>>

ஆர்க்கே/ விழிச்சுடரழகி!

புருவ மத்தியில்என்னைநிற்க வைக்கிறாய். இமைகளின் மஞ்சத்துள்என்னைஇருக்கச் சொல்கிறாய். மூக்குத்திக் கதிர்வீச்சில்என்னைமூச்சுவிடச் சொல்கிறாய். விழியிரண்டின் கரையோரம்என்னைநடைபயிலச் சொல்கிறாய். மெல்லிதழ்களின் பெருஞ்சுழிப்பில்என்னைகவிதை குவிக்கச் சொல்கிறாய். அத்தனைக்கும் நீயே கதி.என்ஆயுளுக்கும்நீயே என் சகி. நேற்று இன்று நாளைஅன்று இன்று என்றென்றும்இப்பிறவிமுப்பிறவிஏழேழு ஜென்மமெனஎத்தனை எத்தனைபிறப்பெடுத்துநான்புறப்பாடானாலும்அத்தனைக்கும்எனக்காய்கிருஷ்ண துலாபாரஒற்றைத் துளசியாய்தோன்றிமகத்துவப் …

>>

ரா.ஸ்ரீனிவாஸன்/கணத் தோற்றம்

கணத் தோற்றத்தைக் கைப்பிடித்துநனவெனும் நூலிற் கோர்த்தெடுத்துமனனம் செய்து உருவேற்றுகிறேன் கனவாகி ஜனனமாகும் ஓருலகுநுரைத்து நுரைத்துஊதிப்பெருத்து உருவாகி உருவாகிவிரிவடைந்து வேறாகித் ததும்ப அங்கேபார்த்துக் கொண்டிருக்கிறேன்கணப்பொழுதுக் குமிழிகள்… கணத்துக்குள் கணமாகிநழுவும் கணத்தைக் கணக்கிடுகிறேன்அதுவென் வசப்படவில்லை தோன்றித் தோன்றி மறையும்இடைவெளிகளுக்கிடையேஅதனைக் கைப்பற்றுகிறேன்மறுகாட்சியாக்கி மீட்டுக் கொள்கிறேன் முதற்காட்சி …

>>

லா. ச. ராமாமிருதம்/மஹாபலி

சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

‘மாகடல் மடை திறந்தால் போன்று, கல்வி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறதே, சோவியத் ஒன்றியத்தில் இளமையில் மட்டுமல்லாமல் முதுமையிலும் ஆழ்ந்து கற்கின்றனரே ! பாட்டிகளும் பாட்டாளிகளும் படிப்பாளியாக விளங்குகின்றனரே. எங்கெங்கு நோக்கினும் எல்லார்க்கும் கல்வி, நல்ல கல்வி, ஒன்றான கல்வி என்ற அறிவொளி வீசுகிறதே …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் /தத்துவம் – பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்

‘தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்களைத்தான் வளரவிட வேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளரவிடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் – திறமை – ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கின்றது. இதை அனுபவத்துக்குக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும். உன்னை எதிர்த்துச் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

சம்பரான் ஜில்லாவில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி மகாத்மாவின் விசாரணை ஆரம்பமாயிற்று. குடியானவர்களிடம் அவர்களுடைய கஷ்டங்களைப்பற்றி வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டன. வாக்கு மூலத்தில் உண்மையை அப்படியே சொல்ல வேண்டும் என்றும் கொஞ்சங்கூட மிகைப்படுத்தக் கூடாது என்றும் மகாத்மா வற்புறுத்தினார். ஒவ்வொரு குடியானவனும் வாக்குமூலம் கொடுத்ததும் …

>>

அழகியசிங்கர்/கடவுள் பக்தி

காலையில் எழுந்தவுடன்குளித்துவிட்டுவிபூதி இட்டுக்கொள்கிறேன் இட்டுக்கொள்ளவில்லைஎன்றால்மனைவி சாப்பாடு போட மாட்டாள் எனக்குக் கடவுள் பக்தியைஇப்படித்தான்புகட்டுகிறாள்.

>>

அழகியசிங்கர்/பேருந்து நிறுத்தம்

18 கே பேருந்து நிறுத்தத்தில்நின்று கொண்டிருந்தேன் பேருந்து இன்னும் வரவில்லை அங்கேநின்றிருந்த பெண்ணைப் பார்த்தேன் எங்கோ பார்த்திருக்கிறேன்என்று மனம் சொல்லியதுஅவளையேஉற்றுப் பார்த்தேன். அவள் திடீரென்றுஎன் பக்கத்தில்வந்து நின்று‘ஐ லவ் யூ’ என்றாள்.

>>

பாகற்காய்/கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

ஆசிரியர் கலைமகள்…………………. பாகல் என்றும் இதுஅழைக்கப்படுகிறது.பூக்கும் நிலைத்திணைப் பிரிவைச் சேர்ந்த கொடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய ஒரு காயாகும். தெவச சமையலுக்கு இதனை அவசியம் எடுத்துக் கொள்கிறார்கள். பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. …

>>

அபிலாஷ் சந்திரன்/சாருவின் ஔரங்சேப் நாவல்

சாருவின் ஔரங்சேப் நாவலை தமிழில் அது தொடராக வெளிவந்தபோது படித்து சிறுகுறிப்புகளை எழுதினேன். தொடரென்பதால் அது தேவைக்கதிகமாக நீண்டுவிட்டது என அதை நாவலாக அச்சில் படிக்கையில் தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் தமிழில் மிகத்தனித்துவமான சுவையான நாவல் அது. மேலும் ஆங்கில மொழியாக்கத்துக்காக …

>>

தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) புதன்கிழமை அதிகாலை காலமானார்

கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கத்திலேயே ராஜ் கெளதமனின் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 1950 ஆண்டு பிறந்த எஸ்.புஷ்பராஜ், பின்னாளில் தனது பெயரை …

>>

நண்பர் ராஜ் கௌதமன் மறைந்தார்/எம்.டி.முத்துக்கமாரசாமி

நண்பர் ராஜ் கௌதமன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 1990 களில் அவர் என்னை அழைத்து புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தொடர் உரைகள் வழங்க ஏற்பாடு செய்தார். அப்போது அவர் என்னை அவர் வீட்டில் விருந்தினராகத் தங்க …

>>

ஒளவையார் பாடல்கள்

பொன்மழை பெய்யுமாறு வருணனை வேண்டுதல் கருணையால் இந்தக் கடல்உலகம் காக்கும்வருணனே, மாமலையன் கோவல் – திருமணத்தில்முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்பொன்மாரி யாகப் பொழி. கடல் சூழ்ந்த இந்த உலகத்தைக் கருணையுடன் காக்கும் வருணனே!. மலையமான் திருமுடிக்காரியினது திருக்கோவலூரில் நடைபெறும் திருமணத்தின் போது, …

>>

ஷண்முக சுப்பையா/வித்தை

பூத்துக் குலுங்கும்மாமரங்களேஉங்களில் சிலதேன்காய்த்துக் கனிகள்ஈவதில்லை!ஏய்த்துப் பிழைத்திடும்வித்தை அதுவெனில்அவைதனைவெட்டி வீழ்த்திடும் நாள்வெகு தூரத்திலிலை.

>>

ஷண்முக சுப்பையா/செம்மறி ஆடு

அம்மா அம்மாஅந்தச் செம்மறி ஆடுசும்மா சும்மாமுட்டிட வருது.கொம்பின்னும் முளைக்கவில்லைஆயினும் அதற்குதெம்பிற்கொரு குறைவுமில்லை.குட்டி ஆடதுஎன்ன பாடு படுத்துது.ஆதலாலேஅம்மா நீயேஅதன் உடையவர் யாரோஅவரிடம் உடனேஅதைக் கட்டிடச் சொல்லு.இல்லாவிட்டால்இனிநான்போகவே மாட்டேன்.வெளியே.

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /பகவத் தியானம்

நீதிபதி கிருஷ்ணஸ்வாமி ரெட்டியார் சுவாமி ஞானானந்தரை ஒருமுறை பார்த்த போது கேட்டார்: “சுவாமி, இந்த ஜென்மாவிலே நாம அனுபவிக்கிற புண்ய பாவம் பூர்வத்தில் நாம செஞ்ச எந்த புண்ய பாவத்தால கிடைக்கிறதுன்னு ஏதாவது கணக்கு இருக்கா?”சுவாமி ஞானானந்தா: “அதை விடுங்க குப்பை. …

>>

ஐராவதமும் தீபாவளி மலர்களும்/அழகியசிங்கர்

ஐராவதம் மூலமாகத்தான் எனக்குத் தீபாவளி மலர்களைப் பற்றிய கவனம் ஏற்பட்டது. நான் தீபாவளி மலரை எப்போதும் வாங்கியதும் இல்லை.பொருட்படுத்தியதும் இல்லை. ஐராவதமோ லெண்டிங் லைப்ரரி மூலம் பழைய தீபாவளி மலர்களை ஆவேசமாக எடுத்துப் படிக்கும்போது , அவரிடமும் ஒருவித ஏக்கம் ஒளிந்து …

>>

மோகன் ஜி/தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்

தேறாதவை கேட்பின் வரிவடிவேலோய்… ஐயர் ஹோட்டல் தேநீர்நாயர் ஸ்டால் காபிமயில் பாடின சங்கீதம்மாமியார் தந்த உற்சாகம்மலிவில் கிடைத்த பதார்த்தம்புரோகிதர் வீட்டு சிரார்த்தம்லாக்டவுன் கால மேக்அப்புபழைய வண்டியின் பிக்கப்புஇரவல் தந்த புத்தகம்இரவில் கண்ட சொப்பனம்படித்தே பண்ணிய பாயசம்கவிஞன் எழுதிய ஹாஸ்யம்சர்க்கார் போடும் கமிஷன்ஆதார் …

>>

நாகேந்திரபாரதி/ இடை வெளி

அடுத்த ஊரேஅப்போது தூரம் அங்கிருந்த உறவுகளோஅப்போது பக்கம் அடுத்த நாடேஇப்போது பக்கம் இங்கிருக்கும் உறவுகளோஇப்போது தூரம் பக்கமோ தூரமோஇடை வெளியில் இல்லை

>>

ப.மதியழகன்/எனக்கு காதல் பிறந்திருக்கிறது

விடியலிலேயே எழுந்துவிடுகிறேன்தினமும் ஷேவ் செய்கிறேன்மடிப்பு கலையாமல் உடை உடுத்துகிறேன்அவசர அவசரமாக சாப்பிடுகிறேன்கண்ணாடி முன்பு அதிகநேரம் நிற்கிறேன்ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்கிறேன்விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்உறக்கமில்லாமல் புரண்டு படுக்கிறேன்தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறேன்புத்தகத்தின் நடுவே மயிலிறகு வளர்க்கிறேன்அடிக்கடி மணி பார்க்கிறேன்கந்தசஷ்டி கவசம் படிக்கிறேன்நெற்றியில் விபூதி …

>>

கோசின்ரா கவிதை

சாதிக்கெதிரான ஒரு கவிதையை காதலித்தேன்அந்த கவிதையிலிருந்தஒரு பெண்ணையும் காதலித்தேன்ஒரு நாள் கவிதையோடு பேசிக்கொண்டிருந்த போதுஅந்தப்பெண்ணும் வந்தாள்கவிதையின் குலம் கோத்திரம் பற்றி சொன்னேன்அவள் என்னுடைய குலம் கோத்திரம் கேட்டாள்நான் சொன்னேன்அப்புறம் அவள் விடை பெற்று சென்று விட்டாள்பிறகு அவளுடைய கவிதையும்ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமல் …

>>

ஜோஸப் பிராட்ஸ்கி/வஸந்த கீதம்

பிரமிள் மொழிபெயர்ப்புக் கவிதை இந்தக் குளிர்காலத்திலும் எனக்குப்பைத்தியம் பிடிக்கவில்லை.பூமியின் பசுமை எழுந்துபனிக்கட்டிகளைச் சிதறடிக்கிறது.எனவே இன்னும் நான் என்புத்திசுவாதீனத்தை இழக்கவில்லை.என்னை நானேடஜன் கணக்குத் துகள்களாகப்பிளந்துகொண்டிருக்கிறேன்.என் மூளைமீது பனித்துகள் படிகிறதுமரங்களிடையே பனிபெய்கிறதுநமது அதிருப்திகளுக்குஎல்லை இல்லை,ஆனால்குளிர்காலங்களுக்கு முடிவு உண்டு.நினவின் விருந்தாளியாககவிதை பிரவேசிக்கும்போதுதான்உலகம் மாறுகிறது.

>>

திருப்பூர் கிருஷ்ணன்/இந்திரா செளந்தரராஜன் காலமானார்!

*இந்திரா செளந்தரராஜன் அவர் வசிக்கும் மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி திடீரென ஹொசூரிலிருந்து, லா.ச.ரா. சப்தரிஷி மூலம் எனக்குக் கிடைத்தது. இந்திரா செளந்தரராஜனின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் க்ளிக் ரவியைத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப் படுத்திக் கொண்டேன். …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஒன்பது கஜ புடவை

ஒரு ஏழை ப்ராமண சமையல்காரர் தன் மனைவி மற்றும் 4 பெண்களுடன் பெரியவா தரிசனத்திற்கு வந்தார் . பிராமணரும் குழந்தைகளும் மடத்திற்குள் போக மனைவி வெளியில் நின்றாள்.பிராமணர் பெரியவாளிடம் யாசகம் கேட்டார். “பெரியவா, எனக்கு ரெண்டு ஒன்பது கஜம் புடவை, ரவிக்கை …

>>

வானவில் கே.ரவி /பொம்மலாட்டம்

கோடிக் கணக்கில் நீயே பிரிந்துபொம்மலாட்டம் ஆடுகிறாய்ஒவ்வொரு பொம்மைக்கும் ஒருவிரல் என்றால்எத்தனை விரல்கள், எத்தனை கைகள்!எத்தனை கோடி நட்சத்திரங்கள்!எத்தனை கோடி அணுத்துகள்கள்அத்தனையும் ஒரே புள்ளியில்போட்டடைத்து வைத்தாய்!கொஞ்சம் சிலுப்பிக் கொண்ட போதுபுள்ளியைப்போட்டுடைத்து விட்டாய்!அடைப்பதும் உடைப்பதும் உன்விளையாட்டுஅகப்பட்டுக் கொண்டேன் என்றுநான்அங்கலாய்ப்பது கேட்டுநீசிந்தும் புன்னகைக்குத் தானிந்தப் பாட்டு …

>>

புதுமைப்பித்தன்/மாயவலை

1என்.பி. நாயகம் கலாசாலை மாணவன். கலாசாலை மாணவர்களுக்கு என்னென்ன தவறுகள், இலட்சியங்கள், உத்ஸாகங்கள் உண்டோ அவ்வளவும் அவனுக்கு இருந்தது. புதிய எண்ணங்களில் பிரேமை, புதிய அனுபவங்களில் ஆசை, தவறுகள் என்பவற்றைச் செய்வதில் ஒரு குதூஹலம் எல்லாம் இருந்தது. ஆனால் தைரியம் மட்டும் …

>>

வல்லிக்கண்ணன் /புதுக்கவிதை பற்றி

பிச்சமூர்த்தி கட்டுரை பிரசுரமானதற்குப் பிறகு, ‘எழுத்து’ ஏட்டில்கவிதை, வசனகவிதை பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இடம் பெற்றன. ‘எழுத்து’ 15-வது ஏட்டில் தலையங்கப் பகுதியாக, ஆசிரியர் தனது எண்ணங்களை வெளியிட்டிருந்தார். ‘எழுத்து அரங்கம்’ பகுதியில், இலங்கை ஆர். முருகையனும், திருப்பத்தூர் பொ.சுந்தரமூர்த்தி நயினாரும் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள். மாலை -(08.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது.

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள். மாலை -(08.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 103 காசியபனின் அசடு நாவல் குறித்து உரையாடல் காசியபனின் அசடு நாவலில் பெண் பாத்திரங்கள் – …

>>

சௌந்தர்ராஜன் எப்படி இந்திரா சௌந்தர்ராஜன் ஆனார்?

முகநூலில் : ஆர்.கந்தசாமி ப: நான் பிறந்து வளர்ந்தது சேலத்தில் ஒரு சாதாரண மத்திய தரக் குடும்பத்தில். அப்பா பார்த்தசாரதி, டிவி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்தார். அம்மாவின் பெயர் இந்திரா. இளவயது முதற்கொண்டே எழுத்தார்வம் எனக்குள் இருந்தது. என் பெரியப்பா ஏ.எஸ். …

>>

நாகேந்திர பாரதி/வாழ்க்கை இனிது

எடுப்பதில் இல்லைஎன்றுமே இன்பம் கொடுப்பதில் இருப்பதேகுறைவில்லா இன்பம் எத்தனை காலம்என்பது தெரியாது எத்தனை மனிதர்கள்என்பது தெரியாது மனிதரும் காலமும்மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்துமகிழ்வது இனிது

>>

மோகன் ஜி/டில்லி கணேஷ்

இன்னுமொரு அரிய கலைஞனை இழந்து விட்டோம். டில்லி கணேஷ் அவர்களின் மரணச் செய்தி அறியவந்ததுமுதல் அவரைப் பற்றிய நினைவுகள்மனதில் குமிழிட்டபடி இருக்கின்றன.எழுபதுகளின் பிற்பகுதி. நான் வேலையில் சேர்ந்துவிட்ட காலம்.டெல்லி கணேஷ் சாரின் உறவினர் ஒருவர் எனக்கு மேலதிகாரியாக இருந்தார். அந்த அதிகாரியும் …

>>

ரவி அல்லது/வல்லான் வகுத்த வழி

அழகிய சிங்கரின் என்பா: மூர்கமாக மோதியாவையும் முடக்கிப்போடுவதும்.தீர்க்கமாக பொய்யைச்சொல்லிதிசை திருப்புவதும்.வாய்மையென வரலாற்றைஎப்பொழுதும் திரிப்பதுவே.வல்லான் வகுத்த வழி.*

>>

ப.மதியழகன்/வல்லான் வகுத்த வழி

1)யாருக்கு வேண்டும் பதவியும் அதிகாரமும்யாருக்கு வேண்டும் மகுடமும் மாண்பும்தீது எதுவென்று அறிகிலார் எல்லாம்வல்லான் வகுத்த வழி! 2)இனிப்பென்றால் இனிக்கும் கசப்பென்றால் கசக்கும்வாழ்வும் மரணமும் இணை கோடுகள்எவருக்குத் தெரியும் சூட்சுமம் எல்லாம்வல்லான் வகுத்த வழி! 3)நம்மால் ஆவது ஏதும் உண்டோகண்டவர் விண்டிலர் விண்டவர் …

>>

செந்தில் பிரசாத்/ முதுமை

சேகரித்து வைத்தகவிதைகளைசெலவழிக்க துணிந்தகாலம்.பதுக்கி வைத்தநினைவுகளைஅசைபோட பணிந்தஞானம்.கடந்து வந்தபாதையைபின்னோக்கி இழுத்தநேரம்.எப்படி எல்லாமோ வாழ்ந்துகடந்த பின்எப்படியாவது இருக்க முடிந்தஉண்மை நிலைமைஉணர்த்திய உயரிய பருவம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/வல்லான் வகுத்த வழி

அழகிய சிங்கரின் என்பா 1,பொல்லார் வாழ்வதும்,நல்லார் வீழ்வதும்கல்லார் ஏற்றமும்,கற்றோர் இறக்கமும்,சூரன் தோல்வியும் அசூரன் வெற்றியும்வல்லான் வகுத்த வழி 2 கல்லின் கண் தேரைக்கும் படியளக்கும்கனகன் அவனுக்குநல் உணவாய்ஆலகால நஞ்சு அமைந்த விதிவல்லான் வகுத்த வழி 3.சாதகம் பார்த்து அமைந்த திருமணம்பாதகம் ஆகி …

>>

விஞ்ஞானி/வல்லான் வகுத்த வழி

எல்லோருக்கும் இங்கு எல்லாமும் என்றாலும்எந்நாளும் புவியாளும்பொல்லார்முன் செல்லாதுநல்லார் நலமுறவும்இல்லார் வளம்பெறவும்வல்லான் வகுத்த வழி

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்/சூதாட்டம்

சூதாடி மாந்தர்களின்சுகவாழ்வும் ஒருநாளில்பாதாளம் போகுமெனல்பாரறிந்த உண்மையன்றோ? சொல்ல முடியாத துன்பக் கதைசூதாடி மனிதரின் சோகக் கதைநல்ல மனிதரும் வஞ்சகராகிகள்ள வேலைகள் செய்த கதை-சிலர்கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல ) அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்அரசு …

>>

வல்லிக்கண்ணன்/அக்கரைப் பச்சை

கடற்கரைக் கோயிலை ஒட்டிய வெளிப்புறத்தில், சிறிய கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். பிரகாரத்தில் போய் வந்து கொண்டிருந்த ஆட்கள் நல்ல வேடிக்கைப் பொருள்களாக விளங்கிய போதிலும், கிழக்கே விரிந்து கிடந்த கடலும் வானமும், கரையை ஒட்டியிருந்த …

>>

சாய்ரேணு சங்கர் கவிதை

எந்த முகம் கண்டதாலேஎழுவினைகள் நீங்கிடுமோஅந்த முகம் முன்புவந்துஇப்போது தோன்றிடுமோஇன்று காணும் எந்தன்முகம்எழில்வடிவாய் வந்தமுகம்இணையிலாத ஆறுமுகம்இன்பமினி ஏறுமுகம் ஈசன்விழி யாத்தமுகம்எனதன்னை பூத்தமுகம்பாசமுடன் இவரிருவர்பாலருக்குத் தந்தமுகம்கதிரின்முகம் அக்னிமுகம்காப்பதிலோ மாலின்முகம்விதிஞானம் அனைத்துமாகும்வித்தகனார் வேலின்முகம் அஜமுகியைத் தண்டித்தஐயனார்க்கு அண்ணன்முகம்கஜமுகனை க்ரௌஞ்சத்தைக்கதறவைத்த கந்தன்முகம்கஜமுகனார் மூத்தவராம்கடவுளுக்குத் தம்பிமுகம்த்வஜமெனவே பகைவனையும்செய்தகருணை நம்பிமுகம் …

>>

தங்கேஸ்/தலைக்கு மேல் உரசிச்செல்லும் பறவையின் நிழல்

தலைக்கு மேல் உரசிச்செல்லும்பறவையின் நிழலொன்றுஞாபகமுற்ற நெஞ்சை சிறகு விரிக்கசொல்கின்றது முகில்யானை கூட்டங்களின்காலடியில் விம்மி மிதிபடச் சொல்கிறது உருத்தெரியாமல் மழையாய் பொழிந்துபின்புமறைந்து போ என்கிறது தூக்கனாங்குருவி கூட்டுக்குள் உருளும்வெண்முட்டைகளுக்குஇரவெல்லாம் காவல் இரு என்கிறது ஒரு கோடையில் தண்ணீரற்ற துளசி செடியாய்பட்டுப்போ என்கிறது உறங்கவிடாத …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/முருகன் என்றால் அழகு!

…………………………*சேயோன் என அழைக்கப்படும் முருகனுக்குக் கந்தன், ஆறுமுகன், குமரன், காங்கேயன், கார்த்திகேயன் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. மற்ற தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததை அந்தந்தப் புராணங்களில் வாசிக்கிறோம். கந்த புராணம் வித்தியாசமானது. முருகன் சூரபத்மனை வதம் செய்வதில்லை. மரமாய் நின்ற …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஆக்கப்பூர்வமான மறுப்பு

மனிதனின் வெறித்தனம் முற்றிலும் மாறுவதற்கான வழி தியானம் தான். இலட்சியங்கள், கொள்கைகள் ஆகியவற்றுள் கட்டுண்டு கிடக்கும் மனிதனால்பிறருடன் ஏற்படும் சச்சரவுகளுக்கு முடிவு கட்ட முடிய வில்லை. குறுகிய தேசீயக் கொள்கைகள், மதக் கொள்கைகள், போலி கௌரவம், ஆணவம் ஆகியவைமனிதனை அழிக்கிறது. இம்மாதிரியான …

>>

முருகா சரணம்/மோகன் ஜி

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆட்டோகிராப் இது!“ஒருமையுணர்வு இருமையும் தரும்” வயலூர் முருகப் பெருமான் அருளை எங்களுக்கும் பெற்றுத் தாரும் வள்ளலே! இன்று அந்தப் பெருமகனாரின் 31வது நினைவு நாள். மேன்மக்கள் உலவிய தமிழ்மண் நமது!! …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை -(08.11.2024)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை –(08.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 103 காசியபனின் அசடு நாவல் குறித்து உரையாடல் காசியபனின் அசடு நாவலில் பெண் பாத்திரங்கள் – முபீன் சாதிகா …

>>

தொகுப்பு : எஸ்.மகாராஜன் / ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் கடிதங்கள்

அருமை நண்பர்மகராஜன் அவர்களுக்கு ஓமC/o. ‘கல்கி’ 23-7-45 திருவள்ளுவர் விழாவுக்கு அழைப்பு குற்றாலம் போய்விட்டு இன்று இங்கே வந்து சேர்ந்தது. விழாத்தான்; திருவிழாத்தான்; பத்து நாளும் நடக்கிறது. ரொம்ப சந்தோஷம். நண்பர் கல்கிக்கு அழைப்புப் பத்திரிகையைக் காட்டினேன். ரொம்ப ரொம்ப வியந்தார். …

>>

தெலுங்கு : வம்சி கிருஷ்ணா/அம்மாவின் தூக்கம்

மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்tkgowri@gmail.com எந்த நள்ளிரவிலேயோ திடீரென்றுவிழிப்பு வந்து பார்த்தால்…உள்ளங்காலுக்கு எண்ணெய் தேய்த்தபடிகட்டில்மீது அமர்ந்த நிலையில்தென்படுவாள் அம்மா‘ஏனம்மா தூக்கம் வரவில்லையா?’என்று கேட்டால்,இன்னும் படுத்துக் கொள்ளவில்லையடாஎன்று பதில் வரும் மறுநாள் காலையில்ரயிலுக்குப் போகவேண்டும் என அலாரம்வைத்துக் கொண்டால்அலாரம் அடிக்கும் முன்பேதட்டி எழுப்புவாள் …

>>

வைத்தியநாதன்/தொலை தூரம்

தொலைந்து போனவர்கள்என்றார் கந்தசாமி –மெய்தான்-என்றாலும்சமூக ஊடகங்கள்இருந்தாலும்-தடை விதிக்கிறோம் ரத்து செய்கிறோம்தொலைக்கிறோம்மீட்கிறோம்தொலைந்து போகிறோம்மீட்கப் படுகிறோம் –என்றாலும்இருந்தாலும்மெய்தான்கந்தசாமி –ஆதூரம்தொலைதூரம்தான்.

>>

இராஜாமணி/காலச்சக்கரம்

சிறுவயதில்அப்பாவோடு பயணிக்கும் பொழுதுபெரிய ட்ரங்க் பெட்டி நான் பயணிக்கும் போதுஆடம்பர சூட்கேஸ் இப்போ குடும்பமாய் பயணிக்கிற வேளைஅவரவர் உருட்டிச்செல்லசக்கரம் வைத்த பெட்டி காலம் மாறிபெட்டி மாறியதிலரயில் நிலையத்தில்சிவப்புச்சட்டை போர்ட்டர்குந்த வைத்து வெறுமே உட்கார்ந்து பெட்டியோடுஓட்டிய சக்கரத்தையேவெறித்துக் கொண்டிருந்தார்.

>>

திண்டுக்கல்சமையல்/கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்வது எப்படி

தேவையானவை: ஊறவைத்த கம்பு – அரை கப், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், …

>>

‘ ஜி.பி.சதுர்புஜன்’/திருவல்லிக்கேணி பார்த்தசாரதி!

அல்லிக்கேணி அழகனே! ஆண்மகனே!நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையனே!அமரத்துவம் பாரதிக்கு அளித்தவனே! என்வாழ்விற்குத் துணையாக வந்தோனே! மீசை வைத்துப் பாரதியைச் சாய்த்தோனே! என்ஆசையெல்லாம் அறிந்து அடக்கி ஆள்வோனே!சிவனே மட்டும் என்று சிந்தை வைத்திருந்தவனைசில கணம் என்னைப் பார் என்றே சொன்னவனே! வரிசையிலே …

>>

விஞ்ஞானி/கவியரங்கம்

கவியரங்கத்தில் நான்ஒலிபெருக்கி முன்ஆவேசமாக கடவுளை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரும் அதை மதித்ததாகதெரியவில்லை காதலை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரையும் அது பாதித்ததாகதெரியவில்லை துன்பங்களை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரும் அதை கவனித்ததாகதெரியவில்லை இன்பங்களை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யார் காதிலும் விழுந்ததாய்தெரியவில்லை உண்மையை பற்றி எழுதமாட்டேன் …

>>

எச்.என்.ஹரிஹரன்/லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

இந்த வருட லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் என் இஷ்ட தெய்வம் முருகன் ஐ மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. அட்டைப்படத்திலிருந்து தொடங்கி, கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட கவிதை/கட்டுரைகள் என முருகன் பேரில். இருபத்தொரு சிறுகதைகளின் ஊர்வலமும் இந்த இதழில். ஒருவராக நின்று இத்தனை …

>>

செ.புனிதஜோதி கவிதை

அவனின் ஒவ்வொரு பெயரையும்அரோகரா கோஷத்தோடுமெய் உருகபெண்கள்விளம்பிக்கொண்டிருந்தனர். மலரிடம் தேன் அருந்தும் வண்ணத்துப்பூச்சியின் சிறகாய்திறந்தும்,மூடியும்தன் சொரூப விளையாட்டைக்காட்டினஒவ்வொரு இதழும். அவனின்ஒவ்வொரு பெயரிலும்தேன் குழைந்த தித்திப்பைகவிதை உணரத்தொடங்கியதைஅவன் உணந்தானோஎன்னவோ? எம் தமிழ் புலவர்கள்உணர்ந்திருந்தனர்அந்த ஆன்மாஎங்கிருந்தோஎனக்குள்ளும்எழுதத் தொடங்கியிருந்தது இப்போதுமழை விழுந்தநிலமெனமாறிகொண்டிருந்தேன். அந்தக்கந்தன்,கடம்பன்இன்னும்,இன்னும்அழகாய் தெரிந்தான்எம் தமிழால்.

>>

வாசுதேவன் ஜீ.என்/கவனமாக படியுங்கள்

தயவுசெய்து படிக்கத் தவறாதீர்கள் வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள், ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள் : ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்க …

>>

எழுத்தாளர் சுஜாதா/இப்படியும் ஒரு மாறுதலான பிறந்த நாள் குறிப்புக்கள்! –

சுஜாதா தனது 70ஆவது பிறந்த தினத்தைப் (2005) பற்றிக் கூறியது.“மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.ஒரு தாத்தா …

>>

மோகன் ஜி/கோலம்

நேற்று என் மருமகளின் மேஜையை அகஸ்மாத்தாகப் பார்த்தேன். ஆன்லைன் அலுவலகப் பணியின்போது, சிக்கலான வர்த்தகக் குறிப்புகள், எண்களினூடே ஒரு எட்டுப்புள்ளிக் கோலத்தையும் தன் குறிப்பேட்டில் கிறுக்கியிருந்தாள்.ஏதோ சிந்திக்கையிலோ, பிறரின் விளக்கத்தைக் கேட்கையிலோ அனிச்சையாக வரைந்திருக்க வேண்டும்.கோலமிடும் அவகாசம் இல்லாத போதிலும், எப்போதோ …

>>

அழகியசிங்கர்/கவிதையும் ரசனையும் – 8

சமீபத்தில் நடந்த கவிதை உரையாடல் நிகழ்ச்சியில் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க மறந்து விட்டேன்.கவிதை புரிய வேண்டுமா? வேண்டாமா? நான் இங்குப் பேசுவது புரியக் கூடிய கவிதைகளைத்தான். புரியாமல் எழுதப்படுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்வேன். அப்படியும் அது புரியவில்லை என்றால் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் /வில்வம்

ஆசிரியர் கலைமகள்………………. பஞ்ச தருக்கள்(ஐந்து மரங்கள்)பாதிரி, மா, வன்னி, மந்தாரை,வில்வம் இவை தேவலோக தருக்கள் என அழைக்கப்படுகின்றன! சிவ பூஜைக்கு விசேஷமானது வில்வ பத்திரமாகும். வில்வம் லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது…………வில்வத்தை சிவனுக்கு சமர்பித்தால் என்னென்ன பலன்கள் …

>>

அழகியசிங்கர்/நீண்ட கவிதை

நீண்டகவிதை எழுதும்நோக்கமில்லைஎனக்கு ஒரு நீண்ட கவிதையைப்படிக்கும்போதுஎன் மனம்சஞ்சலம் அடைந்து விடும் பாதியில்நிறுத்தி விடுவேன் படித்தவரைஎந்த அர்த்தமும்கூடாமல்திரும்பவும் ஆரம்பத்திலிருந்துபடிக்க ஆரம்பிப்பேன் திரும்பவும்கவிதையை விட்டுஎங்கோபோய் விடுவேன் உங்களுக்குஒரு வேண்டுகோள்நீண்ட கவிதையைஎழுதாதீர்நிச்சயமாக நம்புங்கள்நான்படிக்க மாட்டேன் என்று

>>

லக்ஷ்மி ரமணன்/வேண்டாமே

“என் கேள்விக்கு இன்று நீ பதில் சொல்லியேஆகணும். இல்லாட்டி உன்னை விடமாட்டேன்.”என்ற அம்மா வைதேகியை சிவா வியப்புடன்பார்த்தான்“என்ன கேட்கப்போறே?”“உன் கல்யாணவிஷயம்”“ஆரம்பிச்சுட்டியா? நான்தான் எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேனே”“அதுதான் ஏன்னு கேட்கிறேன். நாங்க வரன்பார்க்கிறோம்னு சொன்னால் எங்களையும்விடமாட்டேங்கிரே. நீ யாரையாவது காதலிக்கிறாயான்னு கேட்டாலும் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

7.எதிர்பாராத வெற்றி சம்பரான் குடியானவர்களுடைய குறைகளை விசாரித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தோட்ட முதலாளிகளையும் சர்க்கார் அதிகாரிகளையும் காந்திஜி சந்தித்துத் தாம் செய்யப் போகும் வேலையைப் பற்றி அறிவித்துவிட விரும்பினார். பீஹார் மாகாணத்தில் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒரு கலெக்டரும் மூன்று அல்லது …

>>

அமரன்…/கதிரவன்  ஆர்

காதலும், கருணையும், வீரமும் நிறைந்த ஒரு ராணுவ மேஜரின் வாழ்க்கையை திரையில் பார்த்த பிரமிப்பை அப்படியே தருகிறது அமரன். கொஞ்சம் தவறினால் கிரிஞ்சாகவோ, சற்று கவனம் பிசகினால் டாக்குமென்ட்ரியாகவோ மாறிவிடக்கூடிய ஆபத்தான ஒரு கதை. அதுவும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒருவரின் …

>>

லா. ச. ராமாமிருதம்/ரயில்

வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் …

>>

எழுத்துக்கு மரியாதை – லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டைல்!/ஜெ.பாஸ்கரன்

“லேடீஸ் ஸ்பெஷல்” 2024 ஆம் வருட தீபாவளி மலர் வெளியிடப்பட்டதே வித்தியாசமாக இருந்தது. குவிகம் zoom மீட்டிங்கில் சிறப்பாக வெளியிடப்பட்டது! மலரில் எழுதிய சிலரும் பங்கு கொண்டு, மலரைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்ட நல்ல அறிமுகக் கூட்டமாக அமைந்தது. …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை 6.30(01.11.2024) சூமில் சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 102 100 வது இதழ் விருட்சம் கதைகள் தொகுதி 2 இரா.முருகன் எழுதிய வைக்கோல் கிராமம் …

>>

அழகியசிங்கர்/வெளியே மழை நின்று விட்டது

இன்று வந்துவிட்டாள்அம்மா!மழையும் கூட உள்ளேஎன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்ஆசீர்வாதம் செய்துவிட்டுப்போ என்றேன். என்ன செய்து கொண்டிருக்கிறாய்?உன்னைப் பற்றிகவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் வீண் வேலைஎதாவது உருப்படியாய்ச் செய் ஏன்? யாரும் படிக்க மாட்டார்கள் போகட்டுமென்றேன்யார் கவிதைகளை யார் படிப்பார்கள்யாரும் யார் கவிதைகளையும் படிப்பதில்லைஏன் அவர்கள் …

>>

ஆர் வத்ஸலா/பின் புத்தி

தபாலில் வந்தஇலக்கிய பத்திரிகையின் பக்கங்களைச் சேர்த்துகுத்தப்பட்ட ‘ஸ்டேப்ளர் பின்’ னைதன் கையில் படாமல் லாவகமாக எடுத்துகுப்பைத் தொட்டியில் போடப் போனவனை தடுத்து, அதை பழைய காகிதத்தில்சுற்றிப் போட்டாள் அவள், பின்னால்அது குப்பை அள்ளுபவரின்கையைக் குத்தாமலிருக்க 2/11/2024

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.ஒருவன் …

>>

கோபிகிருஷ்ணன்/காணி நிலம் வேண்டும்

அக்டோபர் 1980. திருமணமாகி தாராவுடன் மயிலையிலுள்ள ஒரு சிறு சந்தில் உள்ள வீட்டில் ஒரு பகுதியில் குடியேறினேன். சந்தில் பல நாய்கள், நாய்க்குட்டிகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள், வழிநெடுக புழுதி நிறைந்த மண், சகதி, ஆவினங்களின் கழிவுகள், மிகவும் ஓரமாக நடந்து …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில் 1917-ஆம் வருஷம் மிகவும் முக்கியமான வருஷமாகும். அந்த ஆண்டில் இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் பலம்தரக் கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முக்கியமானது ‘சம்பரான் சத்தியாக் கிரஹம்’ என்று பெயர் பெற்றது. அந்த நிகழ்ச்சியின் மூலம் மகாத்மா …

>>

ஜெயமோகன்/பன்றிகளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

மேலும் சில விபரங்கள் இதோ… ஒன்று: பன்றிகள்சேற்றில் திளைக்கவில்லைஏனெனில் சேறென்றுஅவற்றிற்குத் தெரியாது. இரண்டு: பன்றிகள் அழகானவைஏனெனில்அவை ஒப்பனை செய்து கொள்வதில்லை. மூன்று: பன்றிகள் ஈனமிருகங்களல்லஏனெனில் அவைதம்மைவிட தாழ்ந்ததாய்எதைப் பற்றியும் கருதுவதில்லை. கடைசியாய்பன்றிகள் மனிதர்களின் அடிமைகளல்லஏனெனில்அவை மனிதனைச் சார்ந்திருக்கவில்லை. (நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது …

>>

கடற்கரய் மத்த விலாச அங்கதம்/ஆடி 2

என் சகல ஆட்டங்களையும்ஆடியில் இருந்தே கற்றேன்.எனக்குப் பல புதிர்முடிச்சுகளைக்கற்றுத் தந்தது இந்த ஆடிபல வித்தைகளை சொல்லித் தந்ததும் அதுதான்ஒரு கண்ணாடிச் சில்லுவைதெருவில் வைத்தபடிசூரிய ஒளிக்காக காத்திருந்த நாட்களில்என் கனவின் முதல் ஆட்டம் தொங்கியதுபல ரசாயன மாற்றங்களை அதைக் கொண்டு செய்தேன்அதுதான் என்னை …

>>