நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்) கீவ் நகரத்து ஆராய்ச்சிப் பண்ணையில் எங்களுக்குப் பத்துப் புதுவகை ஆப்பிள்களைக் கொடுத்த அம்மாணவிகள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அம்மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், கட்டாயத்தால் ஆராய்ச்சியில் ஆழ்ந்தவர்கள் அல்லர் அவர்கள். கசப்போடு ஆராய்ச்சி செய்பவர்களும் அல்லர். …

>>

வல்லிக்கண்ணன்/புது விழிப்பு

அவன் உளம் சோர்ந்து, உணர்ச்சிகள் குன்றி, செய்வதற்கு எதுவுமற்று, செய்யும் வகை என்னவென்று புரியும் சக்தியற்று, எதிலுமே ஆர்வமும் அக்கறையும் இல்லாதவனாய் மாறி இருந்தான்.அவன் பெயர் – என்னவாக இருந்தால் என்ன! இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்தவன். “எதிர்காலம் என்னுடையது!” என்று …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அந்தத் தாய் அந்த ஐந்து வயது குழந்தையைக் கூட்டி வந்தாள்.மிகவும் ஆனந்தமான அமைதியான முகம். அதில் ஒரு புன்முறுவலும் இருந்தது. பார்வை எங்கோ இருந்தது. அது அவன் உள் முகமாக ஒடுங்கியிருந்ததை உறுதி செய்தது. அவனுடன் அச்சு அசலாக அவனைப் போல் …

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/திவ்யதர்சனம்

முன்னுரை எந்தக் கவிஞனும் இலக்கணத்தையொட்டிக் கவிதை புனைந்ததில்லை. இலக்கணம்தான் கவிதையை ஒட்டி உருவாகியிருக்கிறது. கவிதையை அறிய முயலுவது இலக்கணம். கவிதை கடவுன். இலக்கணம் பூசாரி.தன்னையே அர்ப்பணிக்கும் லயத்தில்தான் கவிதை பிறக்கிறது. அந்த லயம்தான் கவிதை. கவிஞனே ஒரு கவிதை. அர்ப்பணித்தல் என்றால் …

>>

லேவ் தல்ஸ்தோய்/எறும்பும் புறாவும்

குடியானவனும் நீர்த்தேவதையும் ஒரு குடியானவன் தனது கோடாரியை ஆற்றுக்குள் நழுவ விட்டு விட்டான். அவன் மிகவும் கவல யுற்று ஆற்றின் கரையிலமர்ந்து அழ ஆரம்பித்தான்.ஒரு நீர்த்தேவதை அவன் அழுவதைக் கேட்டு அவ னுக்காக மிகவும் வருத்தப்பட்டு ஒரு தங்கக் கோடாரியை எடுத்து …

>>

சீவ.தீனநாதன்/ஸ்ரீ ரமண விருந்து

(‘சுவாமி! நான் சீக்கிரம் புறப்படவேண்டும். அதற்கு முன்பாகத் தங்களிடம் பேச விரும்புகிறேன்’) 1930-இல் ஒருநாள்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் பகவானைக் காண திருவண்ணா மலைக்கு வந்தார்; பகவான் சன்னிதானத்தில் பகவானுக்கு முன்பாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். ‘பகவானே! நான் …

>>

நாட்டுக்கு உழைத்த நல்லவர்/சித்தரஞ்சன் தாஸ்

பொதுவாக, அரசாங்கத்துக்கு இரண்டு கடமைகள் உள்ளன. மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பதும் சமூகக் கட்டுக் கோப்பு குலையாமல் சட்டத்தையும் நீதியையும் பராமரிப்பதும் முதல் கடமை. மக்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி, அறம் முதலிய எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காண உதவி புரிவது …

>>

வாழை படம் பார்த்துவிட்டேன்/ஜெகந்நாதன் பெருமாள்சாமி

வாழை படம் பார்த்துவிட்டேன். இது உண்மை கதை என்று இயக்குனர் முதலிலே title கொடுத்துவிட்டார். 1999 இல் வாழைக்காய் ஏற்றிச் சென்ற லாரி திருவைகுண்டம் அருகில் உள்ள பேட்மா நகரத்தில் நடந்த விபத்தில் 27 பேர் இறந்து போகிறார்கள். அதில் இயக்குனர் …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன்

6. நீலவானம் எத்தனை தெளிவாக இருக்கிறது! விரிந்து, பரந்து, காலங்கடந்திருக்கும் அதன் அழகே அழகு! தூரமும் வெளியும் மனதின் அனுமானங்கள். இவ்விடம் மற்றும் தூரத்திலிருக்கும் அவ்விடம் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், ஆசையின் தூண்டுதலால், அவை உளவியல் விஷயங்களாகி விடுகின்றன.-மனம், ஒரு விசித்திரமான …

>>

க.நா.சு. /கல்யாணப் பெண்

1 ஜானகி வாய்த் துடுக்குக்காரிதான். யாரையுமே சகஜமாக உதறி எறிந்து பேசும் சுபாவம் உள்ளவள்தான். வெடுக் வெடுக் என்று யாரையும் வெட்டிப் பேசத் தயங்கவே மாட்டாள் அவள்வீட்டிலே ஒரே பெண். செல்லமாக வளர்த்து வந்தார்கள்; ”பாவம், அறியாதவள். வயசு வந்த பிறகு …

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

சிறுவயதில் சென்னையில் உல்லாஸமாகக் காலங்கழித்த ஞாபகம் வந்தவுடன் அங்கு சென்று வஸிக்க வேண்டுமென்ற ஆவல் பாரதியாருக்கு உண்டாயிற்று. தெய்வாதீனமாக அவர் நோக்கத்திற்கிணங்க சென்னையில் பிரபல தினசரி பத்திரிகையான ‘சுதேசமித்திர’னில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் பாரதியார் தமது அரிய பெரிய …

>>

பாவண்ணன் / சிவப்புக்கல் மோதிரம்

”இன்னைக்கு என்ன, பூமழையா? இப்பிடி ஏராளமா பூ உழுந்து கெடக்குது”இரண்டுசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவைத் திறக்கிறவரைக்கும் தமிழிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்னும் குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால் சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் சுவருக்கும் வீட்டு வாசலுக்கும் …

>>

வைதேகி/குறுகுறுப்பு

காலையில் கோலமிட்டுக்கொண்டிருக்கிறேன்அருகே வந்து உரசி நிற்கிறதுகன்றுக்குட்டியொன்று…மணிக்கண்களின் யாசிப்பில்இரங்கிவாழைப்பழங்கள் எடுத்து வந்துஅதனருகே வைத்து விட்டுகோலமிடக் குனிகிறேன்கோபித்துக் கொண்டாற்போல்விருட்டென்று திரும்பி நடக்கிறதுஅழைத்து அறியா தடுமாற்றத்துடன்டேய் ஏன் இப்படி செய்கிறாய்?என்கிறேன்நின்றபடி திரும்பிப் பார்க்கிறதுகையிலேந்தி நீட்டுகிறேன் பழங்களைநாவால் கையை ஈரப்படுத்தியபடிஉண்டு விட்டுநகர்ந்து செல்கிறதுஇப்பொழுது வரை..மனம் மட்டும் நகரவேயில்லை.கையோடு …

>>

நாகேந்திர பாரதி/எலெக்ட்ரிக் ட்ரெயின் அனுபவஸ்தை – நாகேந்திரபாரதி

இந்த வாரத் தலைப்பு சென்னை மாவட்டம் . அது தொடர்புடைய அந்தக் கால மீட்டர் கேஜ் எலக்ட்ரிக் ட்ரெயின் அனுபவ அவஸ்தைகளை பற்றியது இந்தக் கட்டுரை .முதல்ல குரோம்பேட்டை வாசம் . அப்புறம் கோடம்பாக்கம். அப்புறம் நங்கநல்லூர். இப்படிப் பல இடங்களில் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை – (வெள்ளிக்கிழமை)(30.08.2024) 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 95 பாவண்ணன் கதைகள் நயனக்கொள்ளை – பென்னேசன்புற்று – மதுமிதாசிவப்புக்கல் மோதிரம் – ராஜாமணிகலைமாமணி – டாக்டர் ராஜேஸ்வரிவெள்ளைக்காரன் …

>>

எஸ்ஸார்சி/அவரவர் கணக்கு

முதுகுன்றம் நகரில் எனக்குச்சொந்தமாய் ஒரு வீடு இருக்கிறது. அதனை வாடகைக்கு விட்டிருக்கிறேன். வாடகை எவ்வளவு என்று கேட்டுவிடாதீர்கள். வாடகையாய் வாங்கும் பணத்திற்கும் வீட்டுக்காக போட்ட முதலுக்கும் எப்பவுமே ஏகப்பொறுத்தம்தான்.நாற்பது லட்சத்திற்கு சற்று நகர்ப் புறமாய் வாங்கிய வீடு என்றால் மாதம் எட்டாயிரம் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/தயிர் வடை

ஆசிரியர் கலைமகள்…………… வட இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். தாஹி வாடா சாப்பிடலாமா? என்று கேட்டார். எனக்குத் தயிர் வடை என்றால் ரொம்பப் பிடிக்கும்! எனவே உடனே சரி என்று சொல்லி விட்டேன். சென்னையில் வெயில் இல்லை என்றாலும் கூட …

>>

பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படம்/ஜடாயு

சொற்ப இருக்கைகளே நிரம்பியிருந்த பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படத்தை நேற்று மாலை பார்த்தேன். இந்த சினிமா, இதன் அரசியல் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டு விட்டது. இருந்தாலும், எனது சில அவதானிப்புகளைப் பதிவு செய்யவேண்டியுள்ளது. 19ம் நூற்றாண்டின் பின்பாதியில் கோலார் தங்கச்சுரங்கம் …

>>

சிறகா/சும்மா

சும்மா இருப்பதால்சும்மா ஆகிவிடுமா இக்காலம் பல ஆண்டுகளாக சும்மா இருந்தமலைகளே இடம் பெயர்ந்துதடம் அற்று அமிழ்ந்து போக சும்மா காணாமல் தான்போயிற்றுபெரியதாக ஒன்றுமில்லை ஆயினும் சும்மா ஒரு பகிர்தல்சுற்றி சுற்றி வருகிறதுசும்மாவான சும்மாவாக.

>>

பாவண்ணன் / வெள்ளைக்காரன்

ஜன்னல் வழியாகத் தெரிந்த பெயர்ப்பலகையைக் காட்டி பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜிப்பாக்காரரிடம் “என்ன ஊர் இது?” என்பதுபோல சைகையால் கேட்டான் அவன். ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்த ஜிப்பாக்காரர் கையிலிருந்த சூடான தேநீரை அருந்தியபடி “ஜபல்பூர்… ஜபல்பூர்” என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக …

>>

ஸ்ரீதர் சாமா /வந்து போக வந்தவர் தாமே நாம் ?

போலந்து துறவி `ஹோபட்ஸ் கெய்ம் ‘ சிறந்த துறவி. ஒரு சமயம் அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார் . வந்தவர் ஞானியின் அறையை நோட்டமிட்டார். பொருட்கள் அதிகம் இல்லை . “என்ன இது இதனை புகழ் பெற்ற உங்களிடம் பொருட்கள் அதிகம் …

>>

சும்மா சும்மா/சசிகலா விஸ்வநாதன்

சும்மா சும்மா சும்மா சும்மா சுற்றாது, சும்மா இருந்தே சொல் அற, நில்!” என்றே சொன்னாலும்; அடங்குவது இல்லையே, மனது.🪷சும்மா சும்மா சும்மா சும்மா சுற்றும் மனது,நிலை பெற, சுகம் தரும்சொக்கேசன் மலர் பாதம் சூடுவாய்; நன்னெஞ்சே!🪷சும்மா சும்மா சும்மா சும்மா, …

>>

“கருணைப் பழம்”/மீ. விசுவநாதன்

ரஷ்யா உக்ரைன் போர்பங்களாதேஷ் கலவரம்பாலஸ்தீனப் படுகொலைகள்இலங்கை உள்நாட்டுக் கலவரம்மணிப்பூர் ரகளைகல்கத்தா மருத்துவர் கற்பழிப்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகள்வயநாடு நிலச்சரிவின் சோகம்இப்படியான துன்பங்களில்இருத்து உயிர்களைஇறைவா நீதான்கருணையுடன் காக்க வேண்டும்என்றுவேண்டிக் கொள்ளும் நான்,என் இடது கால் கட்டை விரலில்மெதுவாக ஊறி வந்தசிறு எறும்பைஎன்வலது பாதத்தால் தேய்த்துஏன்கொல்ல …

>>

சும்மா..சும்மா..ஹரணி

சும்மா சும்மா சும்மா சும்மாஎன்பது சும்மா இல்லை இல்லைசும்மா இருப்பது சுகமே இல்லைசும்மா காலம் கழிக்காதே. சும்மா சும்மா சும்மா சும்மாகத்திட எதுவுமில்லை சும்மா சும்மாவேஎன்றிட யாருக்கும் வாழ்வும் இல்லைசும்மா வாழ்வின் ஞானம். சும்மா சும்மா சும்மா சும்மாசும்மாவைச் சுமப்பது சும்மா …

>>

வானவில் கே.ரவி/யார் சிரித்தாலும் அது என்சிரிப்பு

(16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் டான் என்ற ஆங்கிலக் கவிஞரின் “For Whom The Bell Tolls” என்ற கவிதை விளைவித்த உள்ளூக்கத்தில் இன்று காலை உதித்தது இந்தக் கவிதை) யார்சிரித்தாலும் அது என்சிரிப்புயாரழுதாலும் அது என் அழுகையாரிறந்தாலும் என்னொரு பகுதியைநான் …

>>

பாவண்ணன்/கலைமாமணி

ஒரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான்.எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு…’ …

>>

அழகியசிங்கர்/அங்கும் இங்கும் 5

போதையில் கார் ஓட்டி போலீஸ் வண்டி மீது மோதிய நடிகர் என்ற தலைப்பில் தினமலர் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. இதுதான் தினமலர். படிப்பவரை வசீகரப்படுத்தும் நடை. இதுமாதிரி ஒன்றை தமிழ் இந்துவோ தினமணியோ செய்தியைப் போட மாட்டார்கள். ஆனால் தமிழ் …

>>

முகநூலில் ஜெயதேவன் எழுதியது

தமிழ் திரைப்பட துறைக்கு என்று ஒரு சாபம் இருக்கிறது என்பது தெரியுமா? சில நல்ல படங்கள் வந்து இனி சினிமாத்துறை உண்மையில் கலைத்துறையாக மாறிவிடும் என்று நாம் கற்பனையில் மிதந்து‌ கொண்டிருக்கும் போதுஇந்த ஆட்டத்தை கலைப்பதற்காகவே பிறப்பெடுத்த நெல்சன்களும் லோகேஷ் கனகராஜ்களும் …

>>

முகநூலில் சோ.தர்மன் எழுதியது..

ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள்.உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன்.என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு /”அங்கும் இங்கும்”

(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்) நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் “புதிய ருஷியா” என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது. “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வுமேன்மையுறக் குடிமை நீதிகதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்றுலகறியக் கூறி விட்டார் ;அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போதடிமையில்லை அறிக …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே…

மினிகதை 6 அவன் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவனால் சற்றும் நம்ப முடியவில்லை.அந்த அறையிலிருந்து கிருத்திகா வரவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே அவளுக்கு இல்லையா?“ஏதோ கோபத்தில் அடித்து விட்டேன். அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்..இது மாதிரி நிகழ்ச்சி இனிமேல் நடக்காது.”“கிருத்திகா …

>>

சரோஜா ராமமூர்த்தி/பாவம், சங்கரன்!

கமலாவின் வீட்டுக்குக் காமு சென்றிருந்தபோது அவள் கவனம் கூடத்துச் சுவரில் மாட்டப்பட்ருந்த ஒரு படத்தின் மீது விழுந்தது. நீலாவும், சங்கரனும் மாலையும் கழுத்துமாக எடுத்துக் கொண்ட புகைப்படம்-பல பத்திரிகைகளில் முன்பு பிரகரமாகிக் காமுவைப் பார்த்து எள்ளி நகையாடிய அதே பகைப்படம் அங்கே …

>>

வல்லிக்கண்ணன்/ஊரும் ஒருத்தியும்

திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை.இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பயஊரு. இதுவும் ஒரு ஊரா” என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது.ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே பள்ளியில் படித்தவள். …

>>

புதுமைப்பித்தன்/நினைவுப் பாதை

1 மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள். தம்பதிகள் இருவரும், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேல், வாழ்க்கையின் மேடு பள்ளங்களையெல்லாம் ஒன்றாகவே கடந்து வந்திருக்கின்றனர். வள்ளியம்மையாச்சி இறந்து …

>>

ஜெ.பாஸ்கரன்./‘டீ’ யின்றி…

காலையில் எழுந்து, குளித்து, புடவை மாற்றி, நெற்றியில் ஒரு கீற்று விபூதியுடன் ஒரு கிளாஸ் ‘டீ’ குடித்தால்தான் அன்றைய நாள் நன்கு விடிந்தது என்று நினைப்பாள் ராமாயி! ஏதேனும் ஒன்று குறைந்தாலும் மனது ஏற்காது, அதுவும் முக்கியமாக அந்த ‘டீ’.சிறு வயதில் …

>>

ஆர் வத்ஸலா/வருவான்

விடியுமுன் நீராடிசெய்து முடித்தேன் பலகாரம் பல அவன் மேனி வண்ண பட்டு உடுத்திகடலலை ஒத்த நீள் முடியை சீவி முடிந்துசெஞ்சாந்துத் திலகமிட்டுஎரிதிரி சூட்டில் படர்ந்த கரு மை தீட்டிமாலை வான வண்ண வளையல் அடுக்கி காத்திருந்தேன் மாலை வரைவருவானென சோர்வு மயக்கத்தில்கண் …

>>

சாய்ரேணு சங்கர்/கண்ணன் என்றொரு கவிதை பிறந்தது

பல்லவி கண்ணன் என்றொரு கவிதை பிறந்ததுகாசினியெங்கும் கொண்டாட்டம்வண்ணமெடுத்து அழகாய்க் கருணைவழங்கும் நீல வரியோட்டம் சரணங்கள் கஷ்டமும் கலியும் தீர்ந்திடப் பிறந்ததுகண்ணன் என்ற கவிதைஅஷ்டமி ரோகிணி சேர்ந்திடத் தோன்றியஅச்சுதனெனும் கவிதை தேவகியும்வசு தேவரும் படித்ததெய்வமிந்தக் கவிதைஆவினம் காவினம் ஆயர்கள்தாமும்ஆழ்ந்து மகிழ்ந்த கவிதை திருடிய …

>>

வே.கல்யாண்குமார்./கண்ணன் என் காவலன்.!

காரிருளில் நான் வீழ்ந்து கிடந்தபோது..காவலுக்கு ஒருவனாகக் கண்ணன் வந்தான்!பாருளகில் ஔிவெள்ளம் மாக வந்தான்!பார்த்தனுக்கு சாரதிபோல் கண்ணன் வந்தான்!வேறுவேறு பாதையில் நான் நடந்தபோது..வேணுகானம் இசைத்தப்படி கண்ணன் வந்தான்!மாறுபாடு பாராது மனவாசல் நின்றே..மனிதனாக்க காவலுக்காய் கண்ணன் வந்தான்!ஐம்புலத்தின் சிறையிருந்த அறியாதவனை..ஓர் ஆபத்தாண்டவனாய் நின்று காவல் …

>>

விஞ்ஞானி/கண்ணனுக்காக

வட்ட வட்ட வெளிச்ச துளிகளாய்முகத்தில் மோதி வம்பிழுத்ததுசூரியனோ என சிணுங்கினாள் நான் இல்லை அந்த தாமரைஇலை மீதாடும் நீர்த்திவலையைபார் என்றான் சூரியன் என் மீது பட்ட கதிர் உன்னைதொட்டது உண்மைதான் ஆனால்என்னை முன்னும் பின்னும்ஓடவிடும் இலையே இதற்குகாரணம் என்றது நீர்த்திவலை. ஐயோ …

>>

இலத்தூர்கி.சங்கர நாராயணன்/எழு பாவாய்

வெண்ணெய் உண்ட வாய் திறக்கமண்ணை மென்று தாய் சினக்ககண்ணை மூடிக் கொண்டு கண்ணன்விண்ணை அங்கு பூட்டி வைப்பான் தண்ணிலவாய் உறங்கும் பெண்ணேதண்ணீரில் இறங்கும் நேரமிதுகண்ணிமைக்க நேரமில்லைபண்ணிசைக்க நீ எழு பாவாய்.

>>

ப.மதியழகன்/கண்ணன் பிறந்தான்…

கோபியர்களுக்குஅவன் கோபாலன்அர்ஜுனனுக்கு அவன்பரந்தாமன்பக்தர்களுக்கு அவன்பரமாத்மாதுவாரகைக்கு அவன்மன்னன்அவதாரங்களில் அவன்கிருஷ்ணன்அவனது லீலையேஇவ்வுலகம்அவனது உபதேசமேகீதைபாண்டவர்களுக்குவெற்றி தேடித் தந்தான்சத்தியத்தை நிலைநாட்டவேஅவன் பிறந்து வந்தான்வாழ்க்கையே திருவிழாஎன்றான்போபிகைகளுடன்ஆனந்த நடனம் புரிந்தான்இன்றும் புல்லாங்குழல்எங்கள் புருஷோத்தமன்புகழ் பாடிக் கொண்டிருக்கிறது!

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 84/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம் 26.08.2024 – திங்கட்கிழமை மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்மோகினி: வணக்கம்.அழகியசிங்கர் : வணக்கம்.ஜெகன் : வணக்கம்அழகியசிங்கர் : இரா முருகனுக்கு விஷ்ணு புரம் விருது இந்த ஆண்டு கிடைத்திருக்கிறதே?மோகினி : ஆமாம்.அழகியசிங்கர் …

>>

க.நா.சு. /காவேரி மடத்துக் கிழவர்

1எங்கிருந்தோ வந்தார்; வயது அறுபது அறுபத்தைந்திருக்கும். காவேரி மடத்தில் பத்திருபது நாள் தங்கப் போகிறேன் என்றார். ஊர் எங்கேயோ தெற்குச் சீமை என்றார். ஆனால் அவருடைய பேச்சு பாவனையெல்லாம தெற்குச் சீமையதைப் போலில்லை. மஹாதேவ அய்யரிடம் மடத்தின் சாவியை வாங்கிக்கொண்டு மடிசஞ்சியுந்தானுமாக …

>>

மா.பொ.சி/வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக்காடாக ளங்கியது. பிரிட்டிஷ் – பிரெஞ்சு – டச்சு – போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் …

>>

ப்ரியாராஜ்/கிருஷ்ணன்

அன்று அவன்மக்களுக்காக மண் உண்டான்!இன்று அவன் அருள்வேண்டி மக்கள்மண்சோறு உண்கிறார்கள்!!அன்றைய கண்ணன்மக்களைகாக்க மலையை தாங்கினான்!மக்கள் இன்று அவன்அருள் வேண்டி கிரிவலம் வருகின்றார்கள்!!அன்று அவன் பாரதப்போரில் நல்லவர் பக்கம்..!!இன்றும் உலக போர் தடுக்க முயலும் நம் பாரத பிரதமர்

>>

வாஸ்கோ போப்பா/எனது கந்தலை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடு

வாஸ்கோ போப்பா கவிதைகள்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி என் தலைக்குள் சும்மா எட்டிப்பார்எனது என்ணங்கள் உனது கன்னத்தைக் கீறுதலில் மேம்பட்டவைஎன் முன்னால் சும்மா வந்து நில்எனது கண்கள் உன்னை வெடுக்கென்று உடைப்பதில் மேம்பட்டவைசும்மா உன் பெரிய வாயைத் திறஎனது மௌனம் உனது தாடைகளை உடைப்பதில் …

>>

ப.மதியழகன்/குக்கூ

1வண்ணத்துப்பூச்சிவருகிறது போகிறதுமலர் அங்கேயேஇருக்கிறது 2தடாகத்தில்மிதந்து கொண்டிருக்கும்தாமரை இலையில்பளிங்குகளாகநீர்க்குமிழிகள் 3தீயின்முலை சப்பும்விட்டில் பூச்சிகள் 4எனக்கு முன்பாதை இருக்கிறதுநான் சேருமிடம்எது? 5பிரபஞ்சமேமெளனமாக இருக்கிறதுநான் ஊமைஆயினும் பேச்சுநின்றபாடில்லை 6வசந்தம்வருகிறது போகிறதுநீல மலர்கள்இருந்த இடத்தில்… 7நான்நிலாவைப் பார்க்கிறேன்நிலாஎன்னைப் பார்க்கிறது 8விழுந்தஒற்றை மழைத்துளியின்தலைமேல்மற்றொரு துளி விழுகிறது 9என் குரல்மலைமுகடுகளின் …

>>

ராம் ஜெத்மலானி/இதுவா வாழ்க்கை?

மறைந்த திரு. ராம் ஜெத்மலானியின் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அழகான கவிதை யின் தமிழாக்கம் இரா. மோகன் சில சமயம் இரவின் இருளில்,நான் என் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கிறேன்;இன்னும் மூச்சு விடுகிறதா என்று பார்க்க.ஏனென்றால், ஒவ்வொரு நாளும்அது இறந்துக் கொண்டே இருப்பதால்…. …

>>

தி.சோ. வேணுகோபாலன்/நாகரிகம்

விண்வெளிக் கப்பலில்வெகுதூரம் சென்றேன்காலை வலித்ததுஓய்வு எடுக்கவேண்டிகிராமத்தில்என் வீட்டுக்கு வரப்பார்த்தால்அடையாளம் தெரியவில்லை. ‘எழுத்து’ அக், 1969

>>

வி. வி. கலைச்செல்வி/எதிரிக்கு எதிரி எனக்கு நண்பனல்ல

ஒருவர்க்கு ஒரு எதிரிதானே எதிரியாக இருக்க முடியும்? ஆனால் பாருங்கள்என் கண்கள்எனக்கு எதிராக நான் பார்க்கக்கூடாதவற்றையெல்லாம் பார்க்கிறது என் கைகள்எனக்கு எதிரானதையே எப்போதும் எழுதுகிறது என் கால்கள்நான் போகக் கூடாத பக்கம் தான் போகிறது. என் வாய் எப்போதும் எனக்கு எதிராகவே …

>>

திண்டுக்கல்சமையல்/ரவை உருண்டை செய்வது எப்படி …

தேவையான பொருட்கள்: ரவா – 1 கப் பொடித்த சீனி – 3/4 கப் முந்திரி -12 ஏலக்காய் – 3 டால்டா – 100 கிராம் செய்முறை::::: வாணலியில் ரவாவை கொட்டி 2 நிமிடம் வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் …

>>

பிஸ்ரீ/வீரத் தமிழர் சிதம்பரம் பிள்ளை

இவர் கதை ஒரு காவியம்; உணர்ச்சி ஒரு தேசீய வெள்ளம். கீர்த்தியை மட்டுமா, மூர்த்தியையும் மறப்பதற்கு இத் நல்ல உடற்கட்டு; ஆள் குட்டை. உருண்டை முகம், திரண்ட புயம். நிமிர்ந்த நேரான நோக்கு. பணிவுடன் துணிவைப் புலப்படுத்தும் மீசை. திருநெல்வேலிக் கறுப்பு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – /அழகியசிங்கர்

வெள்ளிக்கிழமை -(23.08.2024)6.30 மணிக்குச் சிறப்பாக நடைப்பெற்றது. இதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள் நிகழ்ச்சி எண் – 94 கந்தர்வன் கதைகள் அறிமுக உரை : ராஜாமணி தன்னோடு – பானுமதியாரோ ஒருவர் – பிரசன்னாஒரு பொழுதாயினும் – எஸ்ஆர்சிதுண்டு – பென்னேசன்மங்கலநாதர் …

>>

லக்ஷ்மி ரமணன்/நோக்கம்

அபர்ணா மின்விசிறியை ஆன் செய்து விட்டு தன்னைப்பார்க்கவந்த சிநேகிதி மாலதியை உட்காரச்சொல்லியவளாய் தானும் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.தற்செயலாகத்திரும்பிப்பார்த்தமாலதி பின்னால் சற்றுதூரத்தில் நாற்காலியில்உட்கார்ந்து பத்திரிகைஒன்றைப்படிப்பதில் ஆழ்ந்த போயிருந்த அபர்ணாவின் மாமியார் கண்ணில்பட்டதும் ரகசியக்குரலில்”இது உன்னுடைய ரூம்தானே”என்றாள்.“ஆமாம் ஏன் கேட்கிறே?”“உன் மாமியார் இருக்காங்களேன்னு கேட்டேன்”“இருந்தால் …

>>

சரோஜா ராமமூர்த்தி/இடமாற்றம்

சங்கரன் பொன்மணி கிராமத்தை விட்டு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவனுடைய வாழ்க்கை யில் இந்த ஆறு மாதங்கள் பல மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டன. மாமனாரால் பரிசாக அளிக்கப்பட்ட நீல வர்ணக் காரில் அவன் மனைவியும், அவனும் உல்லாசமாக பவனி …

>>

க.நா.சு. /சாவித்திரி

ஆபீஸிலிருந்து அன்று வெகு சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன்:வாசலில், அவருக்கு வழக்கமான நாற்காலியில், அப்பாவைச் காணோம். உள்ளே பானையிலிருந்து தண்ணீர் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்காக நான் புஸ்தகசாலையிலிருந்து கொண்டு வந்த புஸ்தகத்தை அவர் நாற்காலியில் போட்டுவிட்டு, ‘அப்பா…. வ்.வ்!’ என்று குரல் …

>>

ஏர்வாடி ராதாகிருஷ்ணன் /காதல் கடிதம்

கசங்கிக் கிடந்ததுஒரு காதல் கடிதம்.எழுதியவன் பெயரும் இல்லைஎழுதியதுயாருக்கென்றும் தெரியவில்லை . அதில் காதல் மட்டும்யாசிக்கப்பட்டிருந்தது.அது அவளால் ஏற்கப்பட்டதாஎன்பதும் தெரியவில்லை. அவளுக்கு அந்தக் கடிதம் கிடைத்திருக்குமா ?அவள் மறுத்துக் கசக்கியதாஅல்லதுஅவளே பயந்து குப்பையில் எறிந்ததா ? எதுவும் தெரியவில்லைஎன்றாலும் காதல் இருக்கிறதுஅந்தக் கசங்கிய …

>>

அழகியசிங்கர்/என்ன செய்வது?

துளி 222 என் வீட்டில் கீழே பூனைகள் புழங்குகின்றன.  நாய்கள் எப்பாவாவது  எட்டிப் பார்க்கின்றன.   நான் விரும்பி பூனைகளை வளர்க்கவில்லை.  ஒருமுறை எழுத்தாளர் ஐராவதத்திடம் ‘எதாவது குழந்தையைத்  தத்து எடுத்து வளர்க்கலாமே’ என்றேன். அவருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்பதால் அப்படி  கூறினேன்.  அதற்கு அவர் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/சித்தர்களைப் பிடிக்குமா? ……

ஆசிரியர் கலைமகள்……………… ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு மேடையை விட்டு இறங்கியதும், பல மேடைகளில் பேசுகிறீர்கள் பல விஷயங்களைச் சுருங்கச் சொல்லி நிறைவாக விளக்குகிறீர்கள்.நீங்கள் ஏன் சித்தர்களைப் பற்றி பேசுவதே இல்லை! உங்களுக்கு சித்தர்களைக் கண்டால் பிடிக்காதா?என்று ஒரு கேள்வியை வைத்தார் …

>>

தி.சோ. வேணுகோபாலன்/மீட்சி விண்ணப்பம்

புராதனத்தின் கனம்தூக்கிகழுத்துச் சுளுக்குஎனக்குவிசையிழந்த இரும்பு இலைத்தகடுமுதுகெலும்புகண்சுழலும் வட்டத்தில்கிழட்டுக் கரும்பாசிகால்புதையுண்டிருக்கிறதுபழம் சேற்றில் வெளிவெளிச்சம் –இளகிய தாரின்கருத்த கம்பிகளாய்கண்ணுக்கு வலைபின்னிமறைத்துவிட்டது புதுமைக் குரல்கள்எரியும் மெழுகுவர்த்தியின்திவலைகளாய்ஒழுகி வழிந்துகாதில் குறும்பையாய்க் காய்ந்துஅடைத்துவிட்டதுமருத்துவரே !என்னை மீட்பீரா ?‘ ( 1972) தி.சோ. வேணுகோபாலன்/மழை – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

>>

வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)

2-வது அதிகாரம் எத்தன் கையில் சிக்கிய உத்தமி மரத்தடியில், களைப்பு மேலீட்டினால் கிடந்த கோமதியைக் கண்ட பாலாவென்ற 7 வயதுச்சிறுமி தன்னை யறியாது புலம்பிக்கொண்டே தாயாரின் பக்கலில் உட்கார்ந்திருந்தாள். கேசவன் சென்று வெகு நேரமாகியும் வராமையினால் பாலாவின் கலக்கம் அதிகரித்தது. “அவன் …

>>

கந்தர்வன்/துண்டு

அவர் வாசலில் வந்து நின்று வீட்டைப் பார்த்து, “ஆத்தோவ்’ என்றார். ஆளடியிலும் பட்டக சாலையிலும் ஆள் நடமாட்டங்கள் தெரிந்தன. கூப்பிட்டதற்குப் பதில் வரவில்லை. இது வெகுகாலப் பழக்கம் அவருக்கு. குத்துக்கால் வைத்து உட்கார்ந்து ஒரு வைக்கோல் துரும்பைத் தூக்கி அந்தப்பக்கம் போட்டார். …

>>

கந்தர்வன்/ஒரு பொழுதாயினும்

புது சைக்கிள் என்றால் ரொம்ப விலையாகும். ஒரு பழைய சைக்கிளாவது வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது. இதற்கு முன் இவன் வேலை பார்த்த இடங்கள் கிராமமாகவும் இல்லாமல் பெரிய நகரமாகவும் இல்லாத இடங்களாக அமைந்து விட்டன.வீட்டிலிருந்து ஆபீஸுக்கு நடந்தே போய்விடுவான். பிள்ளைகளும் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/பண்ணை வீடு

கூட்டம், விளையாட்டு, குடில்எனப் பொருள்பலவாம் பண்ணைக்கு. கோழிப் பண்ணை, ஈமுப் பண்ணைஎதுவானாலும்முதலை வைக்க வேண்டும்.முதலையாய்வாரிச் சுருட்டி ஏமாற்ற,கையில்காப்பு நிச்சயம் ஏறும். பெரிய பண்ணை, சிறிய பண்ணைஎன்றுகொடி கட்டி சிற்றூர் ஆண்டவர்உண்டு.ஏழை,எளியவர் உழைப்பைஉறிஞ்சிஉல்லாசம் கண்டவருண்டு. விடுதலை வேள்வியில் மக்களாட்சிவரம் பெறஏகபோக உரிமை காலாவதிக்கணக்காகஇடுப்பில் …

>>

தங்கேஸ்/மொழி பெயர்ப்பு

ரூபி கெளர் என்ற பெண் கவிஞர் மற்றும் எழுத்தாளர் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார். ஆங்கிலத்தில் கவிதைகள் உரைநடைகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களின் …

>>

கந்தர்வன் /யாரோ ஒருவர்

மகளும் மாப்பிள்ளையும் இரட்டை இருக்கை சோபாவில் உட்கார்ந்திருந்தனர். சம்பந்தியும் இவரும் ஒற்றை சோபாக்களில் இருந்தனர். பெரியவர்களாயிருந்த ஆண்கள் நாற்காலிகளிலும், பெண்களும் குழந்தைகளும் ஜமக்காளத்தில் நெருக்கமாகவும் உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மின் விசிறிகளிலிருந்தும் காற்று ஹால் முழுவதும் வீசிக்கொண்டிருந்தது. சென்னையில் வேலையாயிருக்கும் மகன் டிவியின் …

>>

கந்தர்வன் /தன்னோடு

இந்த ஊரைப் பற்றிப் பத்து வருஷங்களுக்கு முன்னாலேயே பேராசிரியர் வகுப்பில் நிறையச் சொல்லியிருக்கிறார். வரலாறு இந்த ஊருக்கு ஒரு தனி இடத்தை ஒதுக்கித் தந்திருக்கிறது. இதை ஆண்ட அந்தக் கால ராஜாக்கள் ஆட்சி பரிபாலனம், நகரமைப்பு கட்டிடக் கலைகளில் சிறந்திருந்ததாய் நிறையப் …

>>

நாகேந்திர பாரதி/கண்மாய்க் காலம்

காலையிலும் மாலையிலும்கண்மாய்க்குப் போனதுண்டாமழைக்காலம் ஆனாலும்மறக்காமல் குடையுண்டா வழுக்கி விட்ட களிமண்ணால்வேட்டியிலே கறையுண்டாகரையோரக் கல் மேலேகாலோரம் தேய்த்ததுண்டா கண்மாயைக் கலக்கி விட்டதொபுக்கடீர்க் குதியல் உண்டாஇடுப்புத்துணி பிழிந்தெடுத்துதலை துவட்டி எழுந்ததுண்டா பரீட்சைக்குப் படிப்பதற்குக்கரையோரம் கோயில் உண்டாபால் பருவக் காதலுக்குப்படிக்கட்டும் அங்கு உண்டா தண்ணியிலே ஓட்டுச் …

>>

திண்டுக்கல்சமையல்/கொள்ளு சூப் செய்வது எப்படி …

தேவையான பொருட்கள் :::: கொள்ளு – 50 கிராம் பூண்டு – 8 பல் தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 5 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை …

>>

ஜெயதேவன்/அகாடமி விருதுகள் இப்படித்தான் வாங்கப்படுகின்றனவா?

ஜெயமோகன் அவர்கள் தனது வலை பக்கத்தில் எழுதிய கடிதம் ஒன்று முகநூலில் தட்டுப்பட்டது. அது பிரம்மா இலக்கிய விழா பெங்களூரில் நடைபெற்றது தொடர்பான கடிதம். அதில் கடலூர் சீனு என்ற ஜெயமோகனின் தீவிர வாசகர் கலந்து கொண்டது பற்றி முகநூலில் பல …

>>

நகுலன்/நானுமென்னெழுத்தும்

நின் கைவசம்என் கைப்பிரதி“இதனையெழுது”என்றாய்எழுதினேன்.“இதனையழி” என்றாய்“அழித்தேன்”“இதனையிவ் வண்ணமெழுது” என்றாய்சொன்னவண்ணமே செய்தேன்.இதுவென்னூல்இதுவென் பெயர்இது வென்னெழுத்துவிமர்சனமும் விரைவில் வந்தது“ஆ என்ன வெழுத்து,” என்றாரொருவர்“ஆ இதுவன்றோ வெழுத்து” என்றாரொருவர்.என்எனழுத்தில் நானில்லைஎன்றாலுமென் பெயருண்டுஎழுதியெழுதி அழித்தேன்அழித்து அழித்து ஆளானேன்.விமர்சகரும் சொல்லி விட்டார்இல்லா ததையெல்லாம்உண்டென்றுசொல்லி விட்டார்.மாமுனி பரமஹம்ஸன்அவன் மாபெரும் சீடன்சொன்னான்“மாயை யென்பதுமன்பதையனுபவம்”மாயையென்னெழுத்துமாமாயைஎன் …

>>

நாகேந்திர பாரதி/குடையும் கோட்டும்

சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய குடையையும் பக்கத்தில் ஆணியில் துவண்டு தொங்கும் அந்தக் கோட்டையும் பார்த்தபடி இருந்தார் சாம்பசிவம் . இப்போதெல்லாம் கைக்கு அடக்கமாய் பைக்குள் மடக்கி வைக்கத் தோதாய் சிறுகுடைகள் எத்தனையோ , இருந்தாலும் இந்த நீண்ட குடை …

>>

கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்/அபௌதிகம்

வானத்தில் கரு மேகங்கள் இருப்புக் கொள்ளத்துவங்கியிருந்ததில் வெளிச்சம் மங்கியிருந்தது. மெல்ல நகர்ந்த மேகங்கள் மேற்கில் நிலைகொண்டிருந்தன .அநேகமாக அடர் மழையாகப் பொழியலாம்.மழை வருவதைக் கவனித்தல் மனம் குதூகலிக்கிறது.மழையைப் போல் வாழ்வில் மகிழ்ச்சியைச் சேர்க்கும் மற்றொரு தருணமும் இன்றுதான் .கயல்விழிக்கக்கக்காத்திருந்தான் விமல்.சரியாக மணி …

>>

“மே மே என்று ஆடு போல் புலம்பாதீர்கள்” /தொகுப்பு ஸ்ரீதர் சாமா

ஸ்ரீனிவாச சாஸ்திரி என்று ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் மாணவனாக இருந்த பொழுது அழைக்கப் பட்டார் . அவரது ஆசிரியர் வைத்தியநாத சாஸ்திரி. அமர கோசம் போன்ற புத்தகங்களிலிருந்து பாடம் எடுப்பார். குரு அடிக்கடி காலபைரவர் கோயில் போவார். ஸ்ரீனிவாச …

>>

ப.மதியழகன்

இன்று சொல்புதிது கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1கும்மாளம் குழந்தைகளின் கண்கள்ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன்பார்க்கின்றதுஅவர்களுடைய பாடப்புத்தகத்தின்நடுவில் மயிலிறகு இருக்கிறதுஅவர்களுடைய பேச்சில்மழலை தெரிகிறதுஅவர்களுடைய உலகத்தில்சோட்டா பீமையும்,லிட்டில் கிருஷ்ணாவையும் தவிரவேறு யாரையும்அவர்கள் அனுமதிப்பதில்லைஅவர்களை தேவதைகள்தான்பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்அவர்கள் ‘அ’ ‘ஆ’வன்னாசொல்ல ஆரம்பித்தவுடன்உயிர் எழுத்துகளுக்கும்மெய் எழுத்துகளுக்கும்றெக்கை முளைத்துபரதேவதைகளாகவகுப்பறையிலே வலம்வருகிறார்கள்டீச்சர் …

>>

தங்கேஸ்

வாசற் கோலத்தைஇழுத்துச் செல்லும்சிற்றெறும்புகளைவேடிக்கை பார்க்கதொடங்கியதிலிருந்துஆரம்பித்து விட்டதுஇன்றைய பொழுது இன்னும் கட்டி முடிக்கப்படாதமதில் சுவரின் மீதுகுறுக்கும் நெடுக்குமாக நடந்தபடிசோம்பல் முறிக்கும்வெள்ளை பூனைக்குஎந்த எலி உணவாகப் போகிறதோஇன்று சற்று ஆசுவாசமாய்புரண்டு படுத்திருந்ததெருக்களெல்லாம்கயமையின் காலடிகளை சுமக்கதங்கள் முதுகுகளைதயார்படுத்திக் கொள்கின்றன சற்று முன் அவள்நின்ற பால்கனிகாலியாகி விட்டதுஇனி …

>>

வே.கல்யாண்குமார்

துண்டுப்பட்டு கிடந்தாலும்..தமிழன் தோளில்..துண்டுகளைப் பாருங்கள்!துண்டின் கதை கேளுங்கள்! உழவர்களின் மேனியிலே..கிழிசல் துண்டு! உள்ளவனின் மேனியிலே சரிகைத் துண்டு!காதிபவனில் விற்காத கதர்த் துண்டு!கடைத்தெருவில் கலர்கலராய் தொங்குது துண்டு!கடவுள் இல்லை என்பவனுக்கு கறுப்புத் துண்டாம்!சபரிமலை சாமிதோளில் காவித் துண்டாம்!அதிஷ்டத்தை தருவதுவோ மஞ்சள் துண்டாம்!ஆளுக்காளு போடுவது …

>>

எஸ்ஸார்சி

கானல் நீர் எழுதினால் என்னஎழுதாவிட்டால் என்னநீ எழுதியதை யாரும்படிக்கப் போவதில்லைபடித்தவர்கள் விமர்சிக்கப்போவதில்லைசும்மா இருக்கலாம் தான்சுழி விடமாட்டேன் என்கிறதுதனக்கு மட்டுமே ஏதோதெரிந்த மாதிரிக்குகானல் நீர்அடிக்கடி காட்சியாவது ஓய்ந்தால்நலமாக இருக்கும்அதுதான் நடக்கமாட்டேன்என்கிறதுஅடம்பிடிக்கிறது எப்போதும். பம்மாத்து நன்றாக எழுதுவதற்கும்மனம் நன்றாக இருப்பதற்கும் துளிக்கூடசம்பந்தமே கிடையாதாவக்கிரமாய்ச் சிந்திப்பவர்கள்வக்கணையாய் …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

17/8/24 அன்று சொல் புதிது கவியரங்கத்தில் வாசித்த கவிதை 1 அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லைஆனால்அவன் தோற்றம்எனக்குப் பிடித்திருந்தது அவனுடைய சில குணங்கள் எனக்குப் பிடிக்கவில்லைஆனால்அவற்றை வேறொருவர் விமர்சித்தால்எனக்கு கோபம் வரும் சுய மதிப்பு மிகுந்தவள் நான்ஆனால்சில சமயம் அவனுடைய …

>>

மதுவந்தி கவிதைகள்

17.08.24 விருட்சம் இணைய கவியரங்கில் வாசித்த எனது 3 கவிதைகள் கீழே. “என்ன ஆச்சு ?”எனக்கேள்வி அனுப்பினால்“காத்திருத்தல் இனிது” எனகுறுஞ்செய்தி அனுப்புகிறாய். இதமான கடற்காற்றுஇளசான மாலைவெயில்காத்திருக்க வசதியானபேருந்து நிறுத்தம்.ஆனால்,, பார்வைகளின் சூடுதாங்க முடியவில்லை,பார்வைகளின் பின்னால்கேள்விகளும் , திட்டங்களும்புரிந்து இன்னும்இறுக்கத்தைக் கூட்டுகிறது. மூச்சிறைக்க …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள் சாலைக்கொரு சோகம் கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களேகண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே மண்ரோடாய் நானிருந்த அந்தக் காலம்மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம் சேற்று மண்ணில் மீன்குஞ்சு நீந்தி ஆடும்சிறுகுருவி ஓரத்தில் பாடி ஓடும் காற்று …

>>

மா. காளிதாஸ் கவிதை

ஒரு பொம்மை உடைவதற்கு முன்னும்உடைந்த பின்னும்அதைப் பொம்மையெனஒப்புக்கொள்ள மறுக்கிறாள் அம்மு. மழைநாளில்பொம்மையின் நிறங்களைவானத்தின் மீது வீசியவளைக்கையும் களவுமாகப் பிடிப்பேன் எனச் சூளுரைக்கிறாள். பொம்மையுடன் விளையாடிய தெருவுக்குப்பொம்மைத் தெருவெனப் பெயர் சூட்டுகிறாள். பொம்மைக்கான உணவுபொம்மைக்கான உடைபொம்மைக்கான விளையாட்டுப் பொருள் இல்லாத.அவ்வளவு பெரிய கடையை …

>>

சிதைந்த சிலை/ந.பானுமதி

கண்களை கசக்கிக் கொண்டேன்தலையற்ற சிலையைக் கண்ட நிமிடம்நெஞ்சு அதிர்ந்ததுகலையின் அழிவில்மானுடம் அல்லவோ வீழ்த்தப்பட்டது?எந்தத் தலையை அதில் பொருத்திப் பார்க்க?எதுவும் அந்த சிற்பியின் கனவாகுமா?தலைபோயும் உடல் வாடா சிலையில்தொண்டர்கள் தலைவர்கள் அரசர்கள் ஆண்டிகள்ஆண்கள் பெண்கள் என எவரும் தெளிவாகப் பொருந்தவில்லை இப்படியே இருக்கட்டும் …

>>

அதிரன்/மூன்று கவிதைகள்

17/08/24 இன்றைய கவிதை அரங்கில் வாசித்த கவிதை முதலாம் கவிதை நீள் இரவு பேசியவை யாவும் பேசியும்கேட்டவை யாவும் கேட்டபின்தொடர்ந்த நீள் மெளனத்தின்கடைப்பொழுதில்மெல்ல அவள் கரம் பற்றுகிறேன்இன்னும் அடங்காத நடுக்கம்அவள் உடல் எங்கும்.தாளாது ஆரத்தழுவுகிறேன்வந்து தவழ்கின்றன ஒரு ஜோடிகண்ணிர் துளிகளஎன் தோள்களில்…..தொடங்கியது …

>>

கல்யாண்ஜி கவிதை

எல்லோரின் திசை முடிவில் இருக்கிறதுஒரு கடல்,ஒரு மகா நதி,ஒரு உப்பாறு,ஒரு ஓடை.ஒரு கம்மாய்,ஒரு துலாக் கிணறு,ஒரு அடி குழாய் தவிரதொண்டைக்குழியில் ஒரு எச்சில் சுனை.%2018

>>

நாகேந்திர பாரதி/கத்தாழை முள்

———- காட்டுக் கத்தாழையைச்சாட்சியாய் வைத்துக் கீறிய பெயர் காட்டிக்காதல் என்றேன் நான் வடிந்த பால் காட்டிக்கண்ணீர் என்றாய் நீ செடிக்கும் வலிக்கும்சேதியும் புரிந்தது உனக்குள் இருக்கும்மென்மையும் புரிந்தது மனதிற்குள் கத்தாழைமுள்ளாய்க் குத்தியது ———

>>

கலீல் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்

தமிழில் : தஙகேஸ் கலீல் ஜிப்ரானின் உலகப் புகழ் பெற்றகாவியமான (முதல் பாகம் ) ஒரு நாள் பாரிஸ் எபாண்டி என்னைவீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார்.உடனே நான் ஒத்துக்கொண்டேன்.சொர்க்கமே செல்மாவின் கரங்களில் அளித்திடும்அந்த ஆன்மீக ரொட்டிக்காகவே அந்த ஆன்மீக உணவு எவ்வளவு உட்கொள்கிறமோஅவ்வளவு …

>>

கோ யுன் கவிதை/தமிழில் :எம்.டி.முத்துக்குமாரசாமி

நிலவொளி இரவு இது இன்றிரவு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தன் பாதையில் செல்லும் நிலவு.ஒடுங்கி வருத்தமாக ஒலிக்கிற.சில புல்லாங்குழல் சப்தங்களில் மயங்கி தனக்குக் கீழேயுள்ள உலகைஉற்றுக் கவனிக்கிறது தனது இதயம் திருப்தியுறும் வரை, பிறகு, நகர்ந்து செல்கிறது நிலவு தன் …

>>

வே.கல்யாண்குமார்/மண்பாண்டமே

கொண்டுவந்து போட்டாண்டி ஒருவன்!குதிகாலால் மிதித்தாண்டி ஒருவன்!மொண்டு மொண்டு நீர்ஊற்றி பிசைந்து…மண்பாண்டம் வனைந்தாண்டி குயவன்! மண்தரையில் விழுந்து எழுந்து ஆடி..மண்குவித்து மனம்களித்து மகிழ்ந்து விளையாடி.. பெண்கலந்து பேசி உடனாடி.. மண் உடைந்து கலந்து புதைந்தாண்டி! மண் பானை நெருப்பினிலே வெந்து..மண் பொம்மை யாகிகைத் …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

கூழாங்கற்களோடுபேசிக்கொண்டுபாறை இடுக்குகளில்ஓடிக்கொண்டுநாணற் தோப்ப்பில்சுற்றிக்கொண்டுஇதமான மணலில்கெண்டை மீனாகநீந்திக் கொள்ளவேவிருப்பமெனக்கு…இதைக் கேட்டுக்கொண்டநீங்கள்என்னை பலநிற பலநிறகண்கவர் மீனாக்கிவிட்டீர்கள்..ஒருசில கூழாங்கற்களோடும்..பூற்களோடும்..சில பொம்மைகளோடும்..இப்போது நானும்குறுக்கும் நெடுக்குமாய்..ஆக்சிஜன் நிரப்பப்பட்டுகுடுவைக்குள்அடைக்கப்பட்ட நதியில்!

>>

திண்டுக்கல்சமையல்/பூசணிக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி ….

தேவையான பொருட்கள்:::: 1 கப் வெள்ளை பூசணிக்காய் நறுக்கியது1 Tbsp எலுமிச்சை சாறு1 கப் தயிர்1 தக்காளி நறுக்கியது2 Tbsp துவரம் பருப்பு1 Tbsp பச்சரிசி1 Tbsp துவரம் Tsp மஞ்சள் தூள் 1/4 கப் தேங்காய் துருவல்2 பச்சை மிளகாய்2 …

>>

திண்டுக்கல்சமையல்/ஐயங்கார் சாம்பார் செய்வது எப்படி ….

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/4 கப்மைசூர் பருப்பு – 1/4 கப்பாசிப்பருப்பு – 1/4 கப்சின்ன வெங்காயம் – 6-7முருங்கைக்காய் – 1புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுசர்க்கரை – 1 டீஸ்பூன்சாம்பார் பொடி …

>>

ராஜு கருப்பன் செட்டி /பகவான் யோகி ராம் சுரத் குமார்

உன் பாதம் நான் சுமக்கஎன் பாவம் நீ விலக்க உன் நாமம் நான் ஏந்தஎன் சோகம் நீ நீக்க வரும் காலம் வளங்காலமாகவரம் தந்து வாழ்த்திடுவாயே

>>