திண்டுக்கல்சமையல்/பருப்பு வடை செய்வது எப்படி ….

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்� ��ூள் – ஒரு …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/நினைவில் நிற்கும் ஹோட்டல்கள்……

ஆசிரியர் கலைமகள்…………………… சென்னை வாரம் கொண்டாடுகிறார்களே? நீங்கள் தான் சாப்பாட்டுப் பிரியர் ஆச்சே? பழைய காலத்து ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவத்தைக் கொஞ்சம் சொல்ல முடியுமா? என்று ஒரு கேள்வியை வைத்தார் கலைமகள் பதிப்பாளர்பி. டி. டி.ராஜன் அவர்கள். சென்னையில் 1979 ஆம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/இது என்ன சுகமோ!

சுதா திருமணம் முடிந்து கணவனுடன் அம்பை கிளம்பி போனாள். ஆறு மாதங்கள் ஓடி விட்டன.சுதாவின் அப்பா சீனிவாசன் பெண் மீது அதிகம் பாசம் உள்ளவர். இரு தடவை பெண்ணையும் மாப்பிள்ளையும் போய் பார்த்து விட்டு வந்து விட்டார்.சுதாவின் தாயார் பாவம் கைபேசியில் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மகிழ்வுக்கு வானம் எல்லை

முழுநிலவென ஒளிர்கிறது,வாழையிலையில்: தும்பைப் பூ நிறம்,பஞ்சுப் பொதியன்ன ஒரு விள்ளல் கையில் எடுத்து செவ்வண்ணசாம்பாரிலும்,வெண்ணிற சட்னியிலும், மாறி மாறி தோய்த்து தின்ன; இடையே, சுள் என்ற மிளாகாய் பொடியில் ஒரு விள்ளல், எடுத்துப் புசிக்க; வயிறு மட்டுமல்ல,மனமும் நிறைய; மகிழ்வுக்கு வானம் …

>>

ப.மதியழகன்/சொர்க்கமே என்றாலும்

அரிசியையும் உளுந்தையும்சேர்த்து அரைத்துஆவியில் வேகவைத்தால்இட்லி தயார்எனக்கு இட்லி பிடிக்கும்மினி இட்லியின்ரசிகன் நான்காஞ்சிபுரம் இட்லியென்றால்நாவில் எச்சில் ஊறும்மதுரை இட்லிக்கென்றுதனி மகத்துவமே உண்டுஅதனுடன்சட்னியும், சாம்பாரும் சேர்ந்தால்அன்று விருந்துதான்என்னதான் பீட்ஸாவும்பர்கரும் வந்தாலும்இட்லி மீதுள்ளமோகம் குறையவில்லைஇட்லிமாவு புளித்துவிட்டால்தோசையாக மாறும் வித்தைநம்மவர்கன் கண்டுபிடிப்புதான்பல வீடுகளில்ஞாயிற்றுக்கிழமைகாலை நேரம்மல்லிகைப்பூ இட்லியுடன் தான்விடியும்சாப்பாட்டு …

>>

வே.கல்யாண்குமார்/இட்டலியே.. இட்டலியே

இட்டலியே.. இட்டலியேஎங்கள் வீட்டு இட்டலியேஉளுந்தமாவும் அரிசிமாவும்..சேர்ந்து வெந்த இட்டலியே! இட்டலியே இட்டலியேஅன்னை வார்த்த இட்டலியே! அன்றாடம் எங்கள்பசி தீர்க்க வந்த இட்டலியே! தொட்டுக்கொள்ள சுவையாக ஒட்டிப்பிறந்த சட்டினி! கட்டித்தங்கம் காரம் கம்மி வெங்காயம் சாம்பாரு! நல்லஎண்ணை மிளகாய்பொடி நாவுக்கேற்ற கூட்டணி! நடுநாயகமாகத் …

>>

மாலதி சுவாமிநாதன்/சொல்லும் செய்திஎன்னவோ?

சொல்லும் செய்திஎன்னவோ?மாலைப் பொழுதும்வந்து விட்டதே. பறவைகள்கூட்டம் கூட்டமாகஇரைந்து கொண்டுசெல்கின்றனவே! சொல்லும் செய்திஎன்னவோ? இதைத் தென்றல்சுமந்துஇலைகள் மீதுவைத்துச் செல்கின்றதே! இலை உதிரும்நேரம்செய்தியை அறிவோம்!பதில் கூறத்தேவையோ? கோலங்கள் தீட்டிபதில் கூறுவோமா?

>>

ராஜாமணி கவிதை

இட்லி..நீ ஒன்றா இரண்டா எடுத்த சொல்லஆத்து இட்லிகுஷ்பூ இட்லிரவா இட்லிஓட்ஸ் இட்லிவெஜ் இட்லிரோஜா இட்லிஎதைபற்றி எழுதஇட்லிக்கு பதி உளூந்துகாதலன் வெந்தியம்தீமையில்லா காலை உணவுகுழைந்தை முதல் முதியோர் வரை பயமின்றி உண்ணலாம்கூடப்பிறந்த சகோதர சகோதரிகள்…சட்னி. சாம்பார்கள்ள காதலிமொளகா பொடி

>>

திருப்பூர் கிருஷ்ணன்/பரமஹம்சரின் குட்டிக்கதைகள்!

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸித்தி தினம்: ஆகஸ்ட் 16…………………………….. ……………………………..*ராமகிருஷ்ண பரமஹம்சர் ஓதாது உணர்ந்த உத்தமர். அவர் பள்ளியில் சென்று அதிகம் படித்ததில்லை. அவர் அடைந்ததெல்லாம் கேள்வி ஞானமும் வாழ்க்கையில் பெற்ற அனுபவ ஞானமும் மட்டுமே. எண்ணற்ற ஆன்மிக சாதனைகள் செய்து கடவுளை …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

நாளை(17. 08.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 24வது கூட்டம் இது. நம்முடைய …

>>

பருப்பு சாதம் செய்வது எப்படி/திண்டுக்கல்சமையல்

தேவையான பொருட்கள் :::1 கப் அரிசி1/4 கப் பாசிப் பருப்பு1/2 கப் துவரம் பருப்பு1 பெரிய வெங்காயம்2 தக்காளி1 டீஸ்பூன் நெய்1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்1 பச்சைமிளகாய்1/2 நெய்1 உளுந்தம் பருப்பு1/2 டீஸ்பூன் கடுகு1/2 டீஸ்பூன் சீரகம்1 டீஸ்பூன் சாம்பார் தூள்1/2 …

>>

கல்யாண்ஜி கவிதை

இந்த மணல்மலையில் பிறந்தது.இந்தச் சிப்பிகடலில் பிறந்தது.இந்த மழைவானத்தில் பிறந்தது.இந்த மஞ்சட் கொன்றைப் பூஉச்சிக் கிளையில்.எல்லாம் பிறந்ததுபெரிய பெரிய இடங்களில்.இப்போது பறந்து போனஇந்த மூன்று குருவிக் குஞ்சுகள்பிறந்தது மட்டும்எங்கள் வீட்டுத்துருப்பிடித்த தபால் பெட்டியில்.

>>

இஞ்சி புளி சட்னி செய்வது எப்படி …

தேவையான பொருட்கள் :::: 100 கிராம் இஞ்சிசிறிதளவுபுளி25 மில்லி எண்ணெய்1/2 ஸ்பூன் கடுகு1 ஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்பு1/4ஸ்பூன் வெந்தயம்2 வரமிளகாய்1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்1/4 ஸ்பூன் மல்லித்தூள்1 ஸ்பூன் வரமிளகாய் தூள்1 ஸ்பூன் கல் உப்புசிறிதளவுகருவேப்பிலை செய்முறை :::: முதலில் …

>>

ஈசி கோதுமை ஹல்வா செய்வது எப்படி…

தேவையான பொருள்கள் கோதுமை மாவு – 1/2 கப்சீனி – 1 கப்ஏலப்பொடி — 1/4 ஸ்பூன்முந்திரி – 6குங்குமப்பூ – 1 சிட்டிகைநெய் – 1/4 கப்செய்முறைஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் சீனி சேர்த்து …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/அருளைப் பொழியும் திருமகள்!

வரலட்சுமி விரதம்: 16. 8. 2024:……………*……………*சரஸ்வதிக்கென்று சரஸ்வதி பூஜை என ஒரு பண்டிகை இருப்பது மாதிரி லட்சுமி தேவிக்கென்றும் ஒரு தனிப் பண்டிகை இருக்கிறது. அதுதான் வரலட்சுமி விரதம். லட்சுமியை வரலட்சுமி விரத நாளன்று வழிபடுபவர்கள் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது …

>>

மோகன் ஜி/அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்

லக்ஷ்மி ராவே மா இண்டிகிக்ஷீராப்தி புத்ரி- வரலக்ஷ்மி ராவே மா இண்டிகி.. 🌼☘️🌺🌸 செல்வத் திருமகளே! பூமகளே!திருப்பாற்கடலில் உதித்தவளே!வரங்கள் அள்ளித்தரும் திருவே!எங்கள் இல்லத்துக்கு வருகை தாராய்… எங்கள் ஊருக்குஎங்கள் தேசத்துக்குவந்து வாசம் செய்வாய்! எங்கும் சுபிட்சம்எங்கும் மலர்ச்சிஎங்கும் அமைதிநிலைக்க வரமருள்வாய்! கேட்டதைக் …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே…

(கதையின் தொடர்ச்சி) மினி கதை 5 அவன் காஞ்சிபுரம் 12.30க்குச் சென்றான். வரதராஜபுரம் கோயில் தெருவில்தான் வனிதா வசித்து வருகிறாள். அவளும், அவள் பெண்ணும் இருந்தார்கள். கணவனை விட்டு வந்த பிறகு, பிறந்த வீட்டில் தஞ்சமடையாமல் தனியாக வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/துளசி மாலை

ஆசிரியர் கலைமகள்……………. சைவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொள்வது போல் வைணவர்கள் துளசி மாலை அணிவதில் பிரியம் காட்டுவார்கள். துளசி பெருமாளுக்கு மிகவும் உகந்த ஒன்றாகும். துளசி செடியின் வேரில் உள்ள சிறிய மரப்பட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுவது துளசி மாலையாகும். துளசி …

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு/ஆனந்த சுதந்திரம்!

‌ சுதந்திரத் திருநாள் என்றால்சொல்லுக யாதென? இற்றை“புதியதோர் உலகம்” காணும்புதுமை இளைஞரைக் கேட்பீர்! “எதையும் செய்யலாம் இங்கே!எதையும் சொல்லலாம் இங்கே!எவர்க்குமே அடங்கிடா போக்கில்எவற்றையும் தூற்றலாம் இங்கே!” “வதைபட சுதந்திரம் தன்னைவாங்கிய காந்தியைக் கொன்றார்!மதங்களின் இணக்கம் தன்னைமதியாத போக்கில் சென்றார்” வாளுடன் இரத்தமும் …

>>

நாகேந்திர பாரதி/எது சுதந்திரம்

மற்றவர்க்காய் எழுதினாய்படித்தவர் பல பேர் மற்றவர்க்காய்ப் பேசினாய்கேட்டவர் பல பேர் உனக்காக எழுதுபடிப்பவர் படிக்கட்டும் உனக்காகப் பேசுகேட்பவர் கேட்கட்டும் இதுவே உன் இயற்கைஇதுவே உன் சுதந்திரம் ————

>>

ப.மதியழகன்/காந்தி பிறந்த மண்

காந்தியை மகாத்மா ஆக்கியதுஅகிம்சை எனும் மந்திரமேஅகிம்சையால் சுதந்திரம் பெற்றஒரேயொரு நாடுநம் பாரதத் திருநாடுஆயுதம் தாங்காமலேயேஆங்கிலேயர்களைகப்பலேறச் செய்தோம்காந்தி சொல்லேவேதவாக்கு என்று‘வெள்ளையனே வெளியேறு’என்ற கூக்குரலுடன்நாடே வீதிக்கு வந்துபோராடியதுகாந்தியைத் தவிரதலைவன் என்றசொல்லுக்கு தகுதியானவர்வேறு யாருமில்லைஅதனை இன்றையதலைமுறை உணரவேண்டும்அடக்குமுறைக்கு எதிராகவன்முறைகட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தால்நாட்டின் வரலாறேமாறியிருக்கும்நாளைய பொழுதுநமக்கான பொகுதுஎழுதட்டும் இந்தியாபுது வரலாறு!

>>

ஆர் வத்ஸலா/நாட்டுப்பற்று

நிறமிழந்த ‘பாலிஸ்டர்’சட்டை அணிந்த அவன்அந்த இடத்தைபெருக்கி சுத்தம் செய்தான்அடுக்கியிருந்தபிளாஸ்டிக் நாற்காலிகளைபிரித்துப் போட்டான்எல்லோரும் நல்லாடைகளில்கூடிய பின்சிறுகொடியும் குண்டூசியும்தந்துதானும் ஒன்றுகுத்திக் கொண்டான் பெருமையுடன் புதுக் கதர் சட்டை அணிந்திருந்தகுடியிருப்பு சங்கத்தின் காரியதரிசிக்குகடைசி நிமிடத்தில்தான் சாக்லெட் பாக்கெட் எடுத்து வர மறந்ததுநினைவுக்கு வரஓடினான் இவன்நிலவறையிலிருந்தசங்க அலுவலகத்திற்கு …

>>

சாய்ரேணு சங்கர் கவிதை

என் கால்கள் நடக்கும் பூமி நீஎனைக் காத்து நிற்கும் சாமி நீபொன்னாய் வளந்தரும் நாடு நீபுகலாம், சுகமாம் வீடு நீ அறம்காக்கும் போர் வீரன் நீஅகம் அடங்கிய தீரன் நீதிறனும் அறிவும் உன்சொத்துதேர்கல்வி ஞானம் உன்வித்து முகுந்தன் சொன்ன கீதைநீமுக்திநெறிக்கோர் பாதைநீஅகன்று …

>>

வே.கல்யாண்குமார்/இன்று காந்தி வந்தால்

வந்தேன் நான் நமதுபாரதத்தைப் பார்ப்பதற்கே!அந்தோ! அதிசயமே..அகிம்சை உண்டோ காண்பதற்கே!ஹே… ராம்! ஹே..ராம்! சாலையில் போதையிலே..இளைஞர் உருளக் கண்டேனே!சகலரும் இலஞ்ச ஆற்றில்மூழ்கிக் குளிக்க கண்டேனே! ஓலைக் குடிசையிலே..ஒதுக்குப்புறத்தில் பலர் இருக்க..பாலோடு பழரசத்தைசிலர் சுவைக்கக் கண்டேனே.! வெள்ளையர்கள் சென்ற பின்னே.. கொள்ளையர்கள் வந்தனரே..நல்லவர்கள் மூலையிலே.. …

>>

அழகியசிங்கர்/சுதந்திரதினம்

சுதந்திரதினம் 1 கிடைத்து78 ஆண்டுகள் முடிந்து விட்டதுஇன்னும் வறுமைஒழியவில்லைஏழை ஏழையாகத்தான்இருக்கிறான்பணக்காரன் பணக்காரனாகத்தான்இருக்கிறான் உண்மையில்சுதந்திரம்என்பதுகொண்டாட்டமாதிண்டாட்டமாதெரியவில்லை சுதந்திர தினம் 2 எனக்குஉண்மையில்பாரதிதான்ஞாபகத்திற்குவருகிறார் போகின்ற பாரதமும்வருகின்ற பாரதமும்என்று கவிதை எழுதினார் திரும்பிப்பார்த்தால்பாரதம்போய்க் கொண்டேஇருக்கிறது

>>

ஜெயராமன் ரகுநாதன்/சிகப்பு கார்

100 வார்த்தைக்கதைசிகப்பு கார், இரு இளைஞர்கள். அழகான பெண் அந்தப்பெண் அழகாக இருந்தாள். இருவத்திரெண்டு வயதுதான் இருக்கும். கூட வந்த அம்மாவுக்கே வாளிப்பான உடல்வாகு. நல்ல நிறம். வசதியான மேல்தட்டுப்பெண்கள். இருவர் காலிலும் அடிடாஸ் ஷூ. வாக்கிங் போக மெயின் ரோடைத்தாண்டிய …

>>

மோகன் ஜி/லொட்டாங்கை

இன்று உலக இடதுகை பழக்கக்காரர்கள் தினம்.எல்லா இடங்கை இனியவர்களுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும் . நானும் ஒரு ‘பீச்சாங்கை பிளாட்டோ’ தான். இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு பால்யத்தில் விளையும் குழப்பங்கள் சற்றே அதிகம். இடதுகையால் எழுதுவது, சாப்பிடுவது என்று துவங்கிய என் …

>>

இலத்தூர் கி.சங்கர நாராயணன்/இதயமே இந்தியா

இந்திய மண்ணை நினைந்து விட்டால்இந்தியர் உள்ளம் இணைந்து விடும்சிந்திய ரத்தம் சிந்தனை வடிவாய்முந்தையர் நினைவை முடிக்கி விடும் கட்டப் பொம்மனை நினைந்து விட்டால்கட்டுடல் மீசை நினைத்து விட்டால்கட்டிளங் காளையர் நாட்டைக் காக்ககயத்தாறு நாடிக்கவனம் கொள்வர் போர்பந்தரிலே காலடி வைபுண்ணிய மண்ணை நெற்றியில் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மூவர்ண கொடி

தன்னிகர் அற்ற,தனிக் கொடி. பட்டொளி வீசி,பறக்கும் கொடி. பளிஞனும் இருளனும்,பணியும் கொடி செழுமை காட்டும்பச்சை வர்ணம்; உயர்வைச் சுட்டி,உயர்ந்த கொடி தூய்மை விளக்கும்வெண்மை நிறம்; அமைதி துலங்கும்,அருட் கொடி தியாகம் துளங்கும்காவி நிறம்; தீரம் செறிந்த,வீரக் கொடி தர்மம் விளையும்மண் இதுவென, …

>>

ஜெயதேவன் கவிதை

கடலிலிருந்து ஒரு சொம்புதண்ணீரைக் கொண்டுவந்துநடுஹாலில் வையுங்கள்வீடெங்கும் கேட்கும் அலையோசை காட்டுப்பூவை அதன்காம்பு நோகாமல் பறித்துவந்துபூஜை அறையில் வையுங்கள்காட்டின் பாடல் அதில் கேட்கும் ஒற்றை இறகுகூட ஒரு பறவையைஒற்றை சதங்கைகூடஒரு நாட்டியக்காரியின்மென்மயிர் பாதத்தையும் நினைவூட்டலாம் தனித்திருக்கும் ஒரே ஒரு நாற்காலி சொல்லிவிடுமேகுழந்தைகள் அற்ற …

>>

மீ. விசுவநாதன்/தவத்தால் பெற்ற விடுதலை

அம்மா அப்பா ஆசான் தெய்வம்நம்முயிர் நாடி நரம்பெலாம் கலந்தபண்பின் சாரம்; பாமரன் கூடக்கண்மணி போலக் கருதிடும் தேசம்;குருவி காக்கை கொடும்விடப் பாம்புதெருவில் திரியும் நாய்பூனை மாடுகள்ஒளிதரும் இரவி உறுமிடும் வானம்களிதரும் மழலை கனிதரும் மரங்கள்ஆலம் விதையாய் அமைந்த உறவுகள்காலத்தி(ல்) உதவும் கையாய் …

>>

அந்தக்கேள்வி/லஷ்மி ரமணன்

நிவேதிதாவின் அந்தக்கேள்வி நித்யாவின்மனதை உறுத்துவதாக இருந்தது.அவள் கணவன் சாரங்கனுக்கு சிகாகோவில்இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்து மகள் ஐஸ்வர்யா மற்றும்மனைவிநித்யாவுடன் வந்து செட்டிலாகிபுதிய நாடு,ஊர்,புதிய கலாச்சாரம், பழக்கம்இல்லாத வானிலை குளிர் காலத்தில் பிளந்துகட்டும் பனிமழை என்று அனைத்தையும்பழகிக்கொள்ள ஆரம்பித்தசமயத்தில்தான்நிவேதிதா குடும்பமும் வர்ஜீனியாவிலிருந்துஇடம்பெயர்ந்து …

>>

விஞ்ஞானி/வெள்ளி மூக்கு குதிரை

கழுதையை பார்த்துகுதிரை என்று சொல்லிகைதட்டி குதூகலித்ததுகுழந்தை . இல்லை அது கழுதைஎன்று சொன்ன அப்பாவைகழுதை முறைத்து பார்த்ததுநான் கழுதையாஇருந்தால் என்னகுதிரையாகஇருந்தால் என்னகுழந்தை சந்தோஷத்தைகெடுக்காமல் இருஎன்பது போல் ()

>>

சசிகலா விஸ்வநாதன்/எவரும் விரும்புவதில்லை

அழகிய சிங்கரின் என்பாவாகஎன் பா ஒன்று ; இன்று🪷நாளும் கேள்விகள் பலவுண்டு நாவில் அரும்புவது உண்டுஅரும்பும் அவைகளை கிள்ளி எறிவதே;என் வேலை. வினாவைஎவரும் விரும்புவதில்லை.

>>

வேகல்யாண்குமார்/ஆட்டுக்கல்

பாட்டியின் காலத்தில்பக்கபலமாயிருந்தேன!அம்மாவின் அரவணைப்பில்அசைந்தபடி நானிருந்தேன்!மகளே.. உன் காலத்தில்மறைவிலே இருக்கிறேன்..பேத்திகள் என்னை..இணையத்தில் பார்க்கலாம்.. ஆட்டுக்கல் என்றால் என்ன? என்று கேட்கலாம்! கூகுளில் தேடலாம்.. அருங்காட்சியகத்தில் ஆட்டுக்கல்லை வைக்கலாம்! எனக்கொரு நடுக்கல் எதிர்காலம் வைக்கலாம்!இட்டலிக்கு சட்டினிக்குஎன்னிலே ஆட்டினார்!இப்போது என்நிலைமைஎல்லோர்க்கும் புரியலாம்!பழமையை மறக்காதே! புதுயுகம் பிறந்தாலும்ஆட்டுக்கல்லை …

>>

செ.புனிதஜோதி கவிதை

சந்தன முகத்தோனேசடுதியில் வாருமய்யா.சங்கடம் கரைந்திடவேமயிலேறி வாருமய்யா…சுடர்மிக்க ஒளியானேசுவைமிக்க கனியானேசுந்தர வடிவேலாசுகம் கொஞ்சம் தாருமய்யா …உன் வில்லானப் புருவத்திலேகரும வினைகளைக் களைபவனே..உன்கூர் செவித்திறத்தாலேபக்தர்களின் குறைக் கேட்பவனே..அருள் தரும் விழியாலேகருணைகள் பொழிபவனே….உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம்எங்கள் உள்ளமெல்லாம் உன்கீதம்…உன் நாசி விடும் மூச்சாலேஎங்கள் நாடியொலி நிலைக்குதய்யா…உன் …

>>

அதிரன்/சத்தம்

வெள்ளிக்கிழமைநள்ளிரவில்இயற்கையின் அழுத்தமானமுதல் அழைப்புக்கு பதில் சொல்லகழிவறை சென்றவனுக்குபலமாக கேட்டது எதிர் மாடித் தளத்துஇளைஞர்களின் மது விருந்து கொண்டாட்ட சத்தம்சாளரத்தை திறந்து பார்த்த போதுஎந்த சத்தமும் இல்லை….தெருமுழுக்க நிசப்தம் . மீண்டும் சத்தம்தெருவில் யாரோ ஒரு பெண்கைபேசியில் யாரோடோ சண்டை போடும்சத்தம்மறுமுறை சாளரம் …

>>

அஜய்குமார் பெரியசாமி/தாமஸ் எடிசன் மற்றும் ஹென்றி ஃபோர்டு

நீங்கள் மற்றவர்களை உயர்த்துவதை பொறுத்து, உங்கள் உயரம் நிர்ணயிக்கப்படுகிறது. 1896 ஆம் ஆண்டில், மின்சார விளக்கைக் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் தம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் …

>>

அழகியசிங்கர்/திருக்குறள் சிந்தனை 1

நேற்று (16.06.2018) – சனிக்கிழமை –  திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள்.  கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார்.  இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்க உள்ளேன்.  இதில் முக்கியமான விஷயம் கலந்துகொண்ட அனைவரும் …

>>

இசை புதிது மாதாந்திர நிகழ்வு

இசை புதிது மாதாந்திர நிகழ்வு (10/8/24 மாலை 6 30 மணிக்கு ஜூம் மில் சிறப்பாக நடைபெற்றது) அதன் நிகழ்ச்சியை திரும்பவும் காணொளியில் கண்டு ரசியுங்கள். Topic: Alagiyasingar’s Zoom Meeting Time: August 10, 2024 06:30 PM India

>>

செந்தில் பிரசாத்/நினைவுகள் சில

ஹேமா டீச்சர்ஆசிரியர் தினத்துக்குஅணிந்திருந்த புடவையின் நிறம்இன்னும் பசுமரத்தாணியாய்மனதில்…நேற்றுநான் அணிந்த உடையேநினைவில் நிற்காதஎன்எழுபது வயதில்.

>>

அழகியசிங்கர்/கருப்பு நாய்

வாட்டச்சாட்டமாகக்கருப்புநாய்அப்பாலோ மருந்தகத்தில்கட்டியிருந்ததுஅசந்து விட்டேன்அதனிடம் கேட்டேன்போட்டோவுக்குபோஸ் கொடு என்றுசரிசரி என்று தலை அசைத்ததுகம்பீரமானஅதன் தோற்றத்தைப்புகைப்படம்எடுத்துக்கொண்டேன்சிறிது நேரத்தில்அதன் எஜமானைப்பார்த்தவுடன்வாலசைத்தது இன்றுநான் சந்தித்தமுக்கியமானநபர்கருப்புநாய்

>>

புதுமைப்பித்தன்/ஆண்மை

மணிக்கொடி, 18-11-1934 ஸ்ரீனிவாசனுக்குக் கலியாணமானது நினைவில் இல்லை. ஏன் என்றால் அது பெப்பர்மின்ட் கல்யாணம். ஸ்ரீனிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம் நீங்காது பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப் பொம்மையை விட, தங்கள் நாலு வயதுக் குழந்தை சீமாச்சு …

>>

வல்லிக்கண்ணன்/வானத்தை வெல்பவன்

கண்ணாடி முன்நின்ற சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கிழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பைப் படரவிட்டான்.“தம்பி சிங்காரம்! நீ சாமானியன் இல்லை. அரும்பெரும் சாதனைகள் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

பொன்மணி கிராமத்தின் தெருக்கோடியில் தபால்காரனின் தலையைக் கண்டதும் காமு உள்ளம் பதைக்கச் கொல்லைக் கிணற்றங் கரையில் நின்று அவன் அவர்கள் வீட்டிற்கு ஏதாவது தபால் கொண்டு வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருப்பாள். அடுத்த வினாடி. அவள் மனக்கண் முன்பு முத்துப் போன்ற …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் /அழகியசிங்கர்

மாலை (09.08.2024) 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 93 சவீதா கதைகள் நெகிழிப்பூவில் – ரம்யா வாசுதேவன் கானுறு மலர் – முபீன் சாதிகா ஆழாக்கு – கோ.வைதேகி நெருங்கத் தொடுத்தது …

>>

வெர்னர் ஆஸ்பென்ஸ்ட்ரோம் / நீயும் நானும் இந்த உலகமும்

தமிழில் : க.மோகனரங்கன் நீ யார் அல்லதுநான் யார் என்று வினவாதே.அது ஏன், அவ்வாறிருக்கிறதுஅதை பேராசிரியர்கள்ஆராய்ந்து ஒழுங்குபடுத்தட்டும்,அது அவர்களின் வேலை.சமையலறை மேசையில்தராசை எடுத்து வை,யதார்த்தம் தன்னைத்தானே எடைபோட்டுக் கொள்ளட்டும்.உனது மேலங்கியை அணிந்துகொள்.நடைவழியில் எரியும் விளக்கை அணைத்துவிடு.கதவை இழுத்து மூடு.இறந்துபோனவர்கள்இறந்தவர்களை பதனம் செய்யட்டும்.இதோ …

>>

ஷண்முக சுப்பையா/சுடுகாடு

சுடுகாடொன்றுசுற்றித்திரிந்தது.அதி அற்புதசடலந்தாங்கிஆண்டுக் கணக்காய்சுடுகாடொன்றுசுற்றித் திரிந்தது.சுடுகாடென்றால்அது மெய்ச் சுடுகாடுஅதில் கொள்ளிவைப்புகுத்தகையல்ல.இதுவரைக்கும்கொள்ளி வைத்தார்எண்ணிலாதார்என்றிருந்தும்சடலமட்டும்வெந்து வெண்ணீறுஆகவில்லை.நீறி நீறிஇருந்ததல்லால்வெந்து வெண்ணீறுஆகவில்லை.அதனால் தானோஎன ஐயுறுமாறுமெய்ச்சுடுகாடதுவும்நெட்டுயிர்த்துநெட்டுயிர்த்துசுற்றித் திரிந்தது.யாரோ இறுதியில்கருணை கூர்ந்துவைத்த கொள்ளிபற்றிப் பிடித்திடநீறி நீறிஇருந்த சடலமும்மாயமாய் மறைந்தது.மெய்ச்சுடுகாடதுவும்பொய்ச் சுடுகாடுபோய்ச் சேர்ந்தது.

>>

தி. சோ. வேணுகோபாலன்/பார்வை

குலம், கோத்திரம், ஜாதகம். ஜாதி;முப்பாட்டன், பாட்டி.. தாய், தந்தை, தலைமுறைபெயர் பட்டியல் ;பெயர் சூட்டும் பெருவிழா !அழகுப் போட்டி!எதுவும் இல்லைதெரு நாய் குழந்தை மறுத்த சோற்றுக்குசொந்தம் கொண்டாடிவாலாட்டி வலைவிரித்துகுழந்தையின் மூலம் குடியேறிவிட்டது: எனக்கு நாயிடம்பகையுமில்லை : உறவுமில்லைவிரட்டவுமில்லை ; வருடவுமில்லை குழந்தை …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருப்புன்கூர் ஆதனூர் யாத்திரையை முடித்துக்கொண்டு வரும் வழியிலே சிறிது காப்பி பலகாரம் சாப்பிட்டுவிட்டு வைத்தீஸ்வரன் கோயில் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே இரு பணியாளர்கள் காப்பி பலகாரங்களுடன் எங்களுக்காகவே காத்திருப்பதைப் பார்த்து வியந்து போனோம்! இவ்வளவு ஏற்பாடுகளையும் நண்பர் தம்பு செய்து …

>>

ராஜாஜி /வள்ளுவர் வாசகம்

2 பக்தியும் பூஜையும் எவ்வளவு நீடித்தாலும், அதற்கெல்லாம் வேண்டியது, தீய கருத்துகளுக்கு டங் கொடுக்காமல் உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது. அது செய்துவிட்டால் எல்லாம் நிறைவேறி விடும். உள்ளத்தைப் பரிசுத்தமாக வைப்பதில் தருமம் முழுதும் அடங்கும். இந்தச் சுத்த நிலை ஏற்பட்டு …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

இதுவரை சித்தரஞ்சன் தாஸ் அரசியலில் நேராகப் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. சிறுகச் சிறுக அவர் அரசியலில் நேர்முகமாய்க் கலந்துகொள்ளலானார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மக்கள் தேசியவுணர்ச்சி மிக்கவர்களானார்கள், முதல் உலகப்போரின் (1914-1918) போது இந்த உணர்ச்சி வலுப்பெற்றது. லோகாயதவாதத்தில் சிக்கியிருந்த இந்நாடு மீண்டும் ஆன்மிகச் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஆன்மிகத் தகவல்

JUST WAIT காஞ்சி மகா பெரியவரைப் பார்க்க இரு ஜெர்மனியப் பெண்கள் (வயது 25 இருக்கலாம்) வந்தனர் . ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரி (பெரியவர் மடத்து ஆட்கள் யாரும் அவரை வெறுமனே வேதபுரி என்று பெயரிட்டு அழைக்கக்கூடாது என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் …

>>

முபீன் சாதிகா/கானுறு மலர்: பாலியல் மீறலின் வீரிய கதையாடல்

சவீதா எழுதிய கதையை முன் வைத்து கானகத்தில் காட்டில் இருக்கக்கூடிய மலர், நாட்டில் இருப்பதல்ல .காட்டில் இருக்கும் மலர் தனிப்பட்டது. அதுவும் வீரியத் தன்மை கொண்டதாகவே இருக்கும். நாட்டின் மலர்கள் மேல் ஆர்வம் இழந்தவர்கள் காட்டின் மலர்களை நாடுவார்கள். இப்படி காட்டு …

>>

லக்ஷ்மி ரமணன்/நியாயம்

அன்றுமாலை மழை அந்த அளவுக்கு தீவிரமாகும் என்று சுமித்ரா நினைத்துக்கூடபார்க்காததால் பிரமித்துப்போனவளாக அந்தப்பக்கமாக வந்த ஆட்டோவை நிறுத்திக்கேட்டபோதுஆர்ஏபுரத்திலிருந்துஆள்வார்பேட்டைபோகஅந்த ஆட்டோஓட்டுனர் இருநூறுரூபாய் கட்டணம் கேட்டார்.“ஏம்பா ரொம்ப அநியாயமாய் இத்தனை ரூபாகேட்கறியே மழை இல்லாட்டி நான்நடந்தேபோயிடுவேன்”“நியாய அநியாயம் பார்த்தால்நாங்க எப்படிபிழைக்கிறது.?” என்று கோபத்துடன்”இதுவராது”என்று விட்டுபோய்விட்டார்.மழை …

>>

சிறகா/உறவுகள்

. இருளில் தேடினாலும்பகலில் தேடினாலும்ஒளியின் துணையின்றிகண்டறிய இயலாது . காற்றில் மிதக்கும்பஞ்சு வெடித்த விதை போல்புலம் பெயர்ந்தஉறவுகள். .21-7-2024.

>>

மாடல்/தங்கேஸ்

ஒரு ஊர்லஒரு காடு இருந்ததுஅதில் ஒரு சிங்கம்ராஜாவாக தன்னைமுடி சூட்டிக்கொண்டதுஅதற்குப் பிறகு அதன் குட்டிபிறகு அந்த குட்டியின் குட்டிஇப்படி குட்டி வாரிசுகளாகவேபரம்பரையாகஅந்த காட்டை ஆள ஆரம்பித்தனஅதற்கு சிங்கமாடல் ஆட்சியென்றுபெயர் சூட்டப்பட்டுவிழாவும் எடுக்கப்டுகிறதுஆனால் அதே காட்டில்மான்கள் என்னவோஅதே பயத்துடன் தான்குட்டையில் இறங்கிநீர் அருந்துகின்றனஇன்னமும்

>>

சசிகலா விஸ்வநாதன்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

அழகிய சிங்கரின் என்பா வயிற்றுப் பாடுஒன்று இருக்க; பயம் ஒன்றுஅற்றுப் போகும். நைந்த வலையானாலும்லாவகமாய் விரிக்க கண்ணீர் கடலில் மீனவர்கள். உப்புக் கடலோடிதப்பாமல் வலை வீசி, ஒப்புக் கொடுத்தேன் அத்தனையும் தூத்துக்குடி அங்காடியில் கங்காணியிடம் கடனுக்கு கண்ணீர் கடலில் மீனவர்கள் 🪷வலை …

>>

அழகியசிங்கர்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

என்பா 1 1. எப்போதும் மீனவர்கள்பற்றி செய்தி இலங்கை ராணுவத்தில்மாட்டிக் கொள்கிறார்கள் அவர்களை மீட்க அரசாங்கம் போராடுகிறது கண்ணீர் கடலில் மீனவர்கள் 2. இலங்கை ராணுவம்சொல்லிக் கொண்டிருக்கிறது எங்கள் கடலில்மீன் பிடிக்கிறார்கள் விடமாட்டோம் அவர்களை நாங்கள் எப்போதும் கண்ணீர் கடலில் மீனவர்கள் …

>>

எஸ்ஸார்சி/விடாது கருப்பு               

   அவன் அம்மாவும்  அவனும் தருமங்குடியிலிருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தஞ்சாவூர் விலாசமிட்ட   தந்தியொன்று சற்று முன் வந்திருந்தது. தஞ்சாவூர் மானம்பூச்சாவடியில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா இருந்தாள். அவள்தான் தவறிப்போயிருக்கிறாள்.  அவர்கள் இருவரும்  தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தருமங்குடி பேருந்து நிறுத்தத்திற்கு பொடி நடையாய்  வந்தார்கள். பேருந்து பிடிப்பதற்காய் நின்றார்கள். தருமங்குடியிலிருந்து  தஞ்சாவூருக்கு நேர் …

>>

ஹரணி/அவளும் அவளும்..

நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஆனால் நாள்கள் ஓடிவிட்டன. இன்று ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று அந்த கொடூரத்தின் நினைவுநாள்.ஆம்.. மண்தான் எல்லா வேர்களுக்கும் முகவரி என்றாலும் அதுவே பல உயிர்களின் கல்லறையாகவும் மாறிவிடுகிறது சமயங்களில்.ஒரு வக்ர மனம் படைத்தவனின் அல்லது உளவியல் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாடிக்கை மனிதர்

அழகிய சிங்கரின் என்பா கேளிக்கை விரும்பும்வாடிக்கை மனிதர் வேடிக்கையும் விளையாட்டும்விரும்பும் மனம் உளியெடுத்து செதுக்குவது கடினமென பள்ளுப் பாடும் மனம்

>>

அதிரன்/அம்மாவின் பூனை

பூரணம் என அதற்குபெயர் வைத்திருந்தாள் அம்மா.அவள் என்ன பேசினாலும்புரியும் அதற்குஅதுபோல்அம்மாவிற்க்குஅதன் “மியாவ்கள் “ ஒரு மியாவில் புரிந்து விடும்,அதற்கு என்ன வேண்டும் என. சில நேரம் பசிசில நேரம் ஸ்பரிசம். பூரணத்திற்க்கு நாங்கள் எல்லாம்ஒரு பொருட்டல்லஅம்மா வீட்டில் இல்லை என்றால்ஒவ்வொரு அறையாகபார்த்து …

>>

எஸ் வி வேணுகோபாலன்/இயங்கிக் கொண்டே இருக்கத் துடித்த இயக்கத் தோழன்  

அஞ்சலி  லெனின் சுந்தர்  (செப் 1, 1968 – ஜுலை 27, 2024) வீதியே கதி கலங்கிப் போகிற அளவு கதறியழுத மங்களாபுரம் பகுதியைச் சார்ந்த இருதயராணி அவர்களது துக்கம் நூற்றுக் கணக்கில் வந்துபோய்க் கொண்டிருந்த எல்லோரது தொண்டையையும் சேர்த்து அடைத்தது போலிருந்தது. அவர் கட்சி தோழர் அல்ல. ஆனால் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/பாம்படம்

……….. ஆசிரியர் கலைமகள்………..‌……….. பாம்படம் என்னும் அணிகலன் பெண்கள் காதில் அணியும் அணிகலன் ஆகும். குறிப்பாக தென் தமிழகத்தில் திருநெல்வேலி இராமநாதபுரம் மதுரை போன்ற மாவட்டங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக வயதான பெண்மணிகள் இந்த ஆபரணத்தை அணிந்திருப்பதைப் பார்த்திருக்க முடியும்! …

>>

அழகியசிங்கர்/சவிதாவின் திரள்கனி என்ற கதையைப் பற்றி..

ஒரு கதையைப் படிக்கும்போது நமக்கு அந்தக் கதை மூலம் என்ன கிடைக்கிறது என்பது முக்கியம். எதுவும் கிடைக்கவில்லை என்றால் வாசிக்கிற மகிழ்ச்சியைத் தரவேண்டும்.இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் ஒன்பதாவது படிக்கும் மாணவி. அவள் மூலமாக கதை நகர்கிறது. ஒன்பதாவது படிக்கும் மாணவியின் …

>>

புதுமைப்பித்தன் வரலாற்றில்/சுடர்விழி

“தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க எனக்கு உரிமை உண்டு “. உடம்பு …

>>

விஞ்ஞானி/துணை

அபூர்வமாய் வாங்கியஅரிசியை களைந்துஉலைவைக்ககுடிசைக்குள் நுழைந்தஅனாதைக் கிழவிகருப்பா கருப்பா எனகுரல் கொடுத்துவெளியே வரச்சொல்லஅந்த கருப்பு பூனையோஅடுப்புக்குள் இல்லை. எந்நேரமும் அடுப்புக்குள்சுகமாய் உறங்கும்பூனையை காணாதுதிகைத்த கிழவிஅரிசி பானையைஅப்படியே புடையில்வைத்துவிட்டுகருப்பா கருப்பா எனகுரல் கொடுத்தபடிஅதை தேடலானாள்‌ ()

>>

வே.கல்யாண்குமார்/கண்ணாடி

.!முன்னாடி நின்று பார்!முகத்தைக் காட்டும்!கண்ணாடி.. கதைகேளுகண்கள் திறக்கும்! என்னாடி சொல்வது?எல்லோரும் பார்க்கும்கண்ணாடி பேசினால்கணத்திலே வியர்க்கும்! சூடிக் கொடுத்தவள்மாலையை அணிந்தே..பாடிக் களிப்புற்றபழமைமிகு கண்ணாடி! ஆடிக் களித்தவர்..ஆண்களும் பெண்களும்அன்றாடம் பார்க்கின்றஆடியே.. கண்ணாடி! ரசம்போனக் கண்ணாடிவீசுவார் குப்பையில்..நிசம் காட்டி உடைந்தாலும்நினைக்கவும் மறுப்பாரே.! கண்ணாடி மனத்தில்கடவுள் வைத்திருந்தால்முன்னாடி …

>>

அழகியசிங்கர்/எங்கே..எங்கே..

மினி கதை 4 தொடர்ச்சி அவள் கோபித்துக் கொண்டு துணி மணிகளை எடுத்துக்கொண்டு வந்தாலும் எங்கே போவதென்று தெரியவில்லை. அம்மா வீட்டிற்கு போகக் கூடாதென்று முடிவு செய்தாள்.அவன் கண்டு பிடித்து விடுவான். ‘இவளுக்கு வேற வழியே இல்லை அம்மா வீட்டிற்குத்தான் போவாள்’ …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/கல்லாடம்

ஆசிரியர் கலைமகள்…………… இன்று செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன். நண்பர் பி என் பரசுராமன் அவர்களை அங்கு சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். இலக்கிய சம்பாஷனை நடைபெற்றது! கல்லாடம் என்று ஒரு நூலினை என்னிடத்தில் …

>>

ஜெ.பாஸ்கரன்/மாற்றான்!

ஒரு வெக்கையான இரவு. புழுக்கத்தில் நடந்துகொண்டிருந்தேன். பூமி வெப்பமயமாகி வருகிறது. நீரின் அளவு குறைந்து வருகின்றது. பூமி அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது – கல்கி அவதாரம் எடுத்து வருவாறா? பிரபஞ்சம் என்பது என்ன? வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? மனிதன் அங்கெல்லாம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ராதா

ராதாவும் மஹேஸ்வரியும் சமையலறையில் மும்முரமாக வேலையில் இருந்தார்கள்.சாமிநாதன் ஹாலில் கையில் செய்தி தாளுடன்.“அப்பா! மேல் அலமாரியில் இருந்து மஞ்சள் பொடி எடுத்துக் கொடுங்க” என்றதும் அவர் வந்து எடுத்துக் கொடுத்தார்.” அப்பா ! ஸ்டவ்வை கொஞ்சம் மீடியத்தில் வைங்களேன்” “இதோம்மா” என்று …

>>

ராம் மோகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்?/அழகியசிங்கர்

இந்தக் கேள்வி ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாள் போதும், நினைவு நாள் போதும் தோன்றி கொண்டே இருக்கும்.அவர்தான் ராம் மோஹன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஸ்டெல்லா புரூஸ்.காளி-தாஸ் என்ற இன்னொரு பெயரில் கவிதை எழுதுவார். அவர் தற்கொலை செய்துகொண்டு 15 …

>>

யூஜின் கில்லெவிக்/கவிதைக் கலை

தமிழில் : க மோகனரங்கன் நான்எனக்காக பேசுவதில்லை.என் பெயரில் பேசுவதில்லை. என்னைப் பற்றியதுமல்ல இது.நான் ஒன்றுமில்லைகொஞ்சம் வாழ்க்கை,நிறைய பெருமைஅவ்வளவுதான். எதற்கு வடிவம் உள்ளதோஎவற்றிற்கு வடிவம் இல்லையோஎல்லாவற்றிற்காகவும்நான் பேசுகிறேன்.நான் கனமானவற்றிற்காக மட்டுமல்லஎடையற்றவற்றிற்காகவும்பேசுகிறேன். என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறித்து அறிவேன்.தொடர்ந்து மேலே செல்லவும்இன்னும் முழுமையாக …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அது ஒரு அழகான சிறிய குன்று. அங்கு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார் அந்த சாது.அவ்வழியே, மாடுகளை மேய்த்து வந்த ஒருவன், அவர் மேல் பரிதாபப் பட்டு, தான் கட்டிக் கொண்டு வந்திருந்த உணவில் கொஞ்சம் கொடுத்தான்.இது தொடர்ந்தது. அவன் கொடுக்கும் …

>>

கவிஞர் கூடல் தாரிக் கவிதை

நீல நிறப் பறவையொன்றுபறப்பதைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறதுகடலுக்குஇறக்கை முளைத்தால்எவ்வளவு நன்றாக இருக்கும் ‘’ ? 2.எல்லாருக்கும்ஆறுதல் சொல்லியபடிமனதுக்குள் அழும்அப்பாவுக்குள்அமைதியாகஓடிக்கொண்டிருக்கிறதுதுயரமென்னும் பெருங்கடல் ‘’ 3.அப்படி என்னதான்சொல்ல நினைக்கிறதுஅலை ததும்ப ததும்பபேசத் துடிக்கும் கடல் 4.புன்னகைத்தபடியேகடந்து செல்லும்மழலையொன்றின்சின்னஞ்சிறு உதடுரோஜா மலரே தான் ‘’‘’ செடியில் மட்டும் …

>>

டி.எஸ் எலியட்டின் மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு – தங்கேஸ் முன்னுரை PRELUDESமூன்றாம் மற்றும் நான்காம் பாகம் ) ஓர் இரவு மெத்தையின் மீது ஒரு போர்வையை விரிக்கிறாள்அதன் மீது மல்லாந்து வீழ்ந்தபடி காத்திருக்கிறாள்ஒரு கொட்டாவிதோன்றும் இரவில்ஆயிரம் அடர்த்தியான காட்சிகள்அத்தனையும் மனதின் காட்சிகள் தானோ?அல்லது பிரமையோ?மேற் கூரையில் தொங்கிக் …

>>

சர்வதேச பூனைகள் தினம்/தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சிங்கள மொழிக் கவிதை பூனையாகிய நான்… உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் அழ இயலாது உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன …

>>

அழகியசிங்கர்/தூப்புக்காரி – நாவல் – மலர்விழி

தூப்புக்காரி – நாவல் – மலர்விழி – பக்கம் : 136 – வெளியீடு : அனலகம், தண்ணீர் பந்தல், கருங்கல் 629 157 குமரி மாவட்டம் – விலை ரூ.75/- கொஞ்ச நாட்களாய் நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி எனக்கு …

>>

ஆம் சுந்தர் சாரேதான்

முகநூலில் பதித்தது சுந்தர் Sundar Krishnan சாரா..? ஆம் சுந்தர் சாரேதான். அவரால்தான் இப்படியொரு காரியத்தை செய்ய முடியும். முழு பெயர் சுந்தர் கிருஷ்ணன். சரித்திர நாவல்களின் வெறியர்; வாசகர். ஊர் ஊராக, தெருத் தெருவாக அலைந்து திரிந்து தமிழில் இதுவரை …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன்

4. வாழும் சூழல், ஒருவரை எவ்வளவு எளிதாக தாக்கமடைய வைக்கிறது என்பது வியப்புக்குரியது! ஒருவருக்கு ஒருவிதமான சுகமான பதற்றம், வாழ்வில் தேவைப்படுகிறது. இயல்பாகவும் சுதந்திரமாகவும் அவர் விகசிப்பதற்கு இதமான கவனிப்பு வேண்டுமென விரும்புகிறார். மிகச் சிலருக்கே இத்தகைய சூழல் அமைகிறது; ஆக, …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/ஆடிப்பூரமும் வளையலும்……….

ஆசிரியர் கலைமகள்..………………. ஆடி மாதம் என்பது தட்சிணாயன தொடக்க காலம்.சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலமாகும். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன், தற்போது தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் மாதம் இது என்பதால், சிவபெருமானின் இடப் பக்கமாக …

>>

ஷண்முக சுப்பையா/காலம்

இந்த உலகில்இருப்பவரில்இருப்போர்ஒரு சிலரேஇருப்பார் போல்நடிப்போரேபெரும்பாலோர்.இவருடனேஇறந்தோரும்இறந்தார் போல்இருப்பாரும்இல்லாமலில்லை.இவருள்ளேஇறந்த பின்னும்இருந்திடுவார்யாரென்றுகாலமென்னும்கள்வன்தான்கண்டறிவான். ஷண்முக சுப்பையா/பாதை விதிகள் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

>>

பூனை – சுஜாதா சிறுகதை (1983)/ராம் ஸ்ரீதர்

============ இதன் தொடர்ச்சியாக சுஜாதா எழுதிய “பூனையைக் கொல்வது பற்றி” எனும் பதிவைப் படித்துவிட்டு, அதில் குறிப்பிடும் முதல் பதிவு எங்கே என்று கேட்டிருந்தனர். அவர்களுக்கும், படிக்காத மற்றவர்களுக்கும்…. ============== வாஹினியில் படப்பிடிப்பின்போது அந்தக் கருப்புப் பூனையைப் பார்த்தேன். இந்திப் படத்தின் …

>>

மாலனின்பக்கத்தி லிருந்து ……

…. என்னுடைய ஐம்பதாண்டு கால நண்பன் ராஜாமணி. அலிடாலியா என்று அவர் வேலை பார்த்த நிறுவனத்தோடு சேர்த்து அறியப்படுபவர். நான் 70களின் தொடக்கத்தில் கல்வி முடித்து பணிக்காகச் சென்னை வந்ததும் அறிமுகமான முதல் இலக்கிய நண்பர் அவர் மூலம் அறிமுகமானவர்கள்தான் ராஜூ, …

>>

வசந்த பாலன் முகநூலில் பதிவு செய்தது

கேரளா வாழ்நிலையோடு தனித்தீவாக தவிக்கும் மனிதர்களையும் இடுகாடு கிடைக்காமல் தவிக்கும் ஒரு சடலத்தையும் வைத்துக்கொண்டு கண்ணிமைக்க முடியாத துயர் படம் நெடுக ஒரு பெருமழையை போல பெய்தவண்ணமிருக்கிறது.படம்

>>

காளி-தாஸ்/எனக்கோர் திமிங்கலம்

எனக்கோர் திமிங்கலம்கடற்புறத்தில் நட்பாகியதுகாதலிப்பதாக சொல்லிகண் கலங்கியதுசம்மதித்ததும் களிப்பில்புரண்டது கரையெல்லாம்வாலூன்றி ஆடிபுயல்மூண்டு கடல் பொங்கியஒருநாள்வேட்கையோடு வந்ததுகண்ணிமைக்காமல்என்துடையிடுக்கைக் கவனித்ததுபெரும் மழை உதிர்ந்ததும்முதுகிலேற்றி என்னைகடலுள் விரைந்ததுநீர்ப்பாதை நெடுகபிரளய இடிஇரண்டு மூன்று நான்கெனபல கடல் கடந்தது திமிங்கலம்நீர் உலகத்திலும்ஓயாத என் கீழ் அதுஓய்ந்து சோர்ந்ததுஇறுதியில்நன்றியுடன் வாலால் என்னைத் …

>>

அழகியசிங்கர்/தி.சோ. வேணுகோபாலன் எழுத்து காலத்து கவிஞர்

எழுத்து பத்திரிக்கையில் எழுதிய முக்கியமான கவிஞர் தி.சோ.வேணுகோபாலன். ‘கோடை வயல்’ என்ற பெயரில் இவரது கவிதைகள் எழுத்து வெளியீடாக ஆகஸ்ட் 1965 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. என் கவிதையின்புது குரலுக்குபிரசவம் பார்த்த மருத்துவர்திரு.ந. பிச்சமூர்த்தி அவர்களின்அடிக்கமலங்களுக்குஎன்று ந.பிச்சமூர்த்திக்குசமர்ப்பணம் செய்துள்ளார். தி. சோ. …

>>

தி.சோ.வேணுகோபாலன்/எங்கோ மழை ?

கருங்கடல்வெண்மலைகாலனின் கணக்கறும்மரணப் பொறிகளில்இருவிதம்…கருவியால் மூச்சுக்குகவசம் இட்டுகாலடிச் சுவடுமுடியிலும் அடியிலும்பதிக்கபுடைத்தெழும்சிலநெஞ்சம்மானுடப் பெருமை. இடைப்படும்தரை தவழ்ந்துஇயற்கையை எதிர்த்திடும்உரம்பெறா இதயங்கள்பலகோடி எதிர்ப்பிலாதுஎமன்கால் பட்டழியும்குறியின்றிஊறும்நினைப்பின்றிவாழும் (?)எறும்புகள் (மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுதியிலிருந்து)

>>

ராம் குமாரின் கறுப்பு ஆடு/மதுவந்தி

 ராம் குமாரின் கறுப்பு ஆடு – க. சீ. சிவகுமாரின் சிறுகதை –ஒரு பார்வை.குறைந்த வயதிலேயே இறந்து போய்விட்ட தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் குறிப்பிடத் தக்கவர் எழுத்தாளர் க. சீ . சிவகுமார். அவரது “என்றும் நன்மைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்.

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை மாலை(02.08.2024) 6.30 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தின் காணொளி. நிகழ்ச்சி எண் – 92 க.சீ.சிவகுமார் கதைகள் என்றும் நன்மைகள் – ரம்யா வாசுதேவன் பூட்ட முடியாத அறை – சாந்தி ரஸவாதி கரைதல் …

>>

அதிரன்/கழுத்தில் பட்டை கட்டிய

மதில் மேல் நின்று கொண்டுதெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுகழுத்தில் பட்டை கட்டியகருப்பு நாய் ஒன்று.வீடா? ….தெருவா? …தெருவா?… வீடா?…என்ற கேள்வி கேட்டபடிமனதுக்குள்வேடிக்கை காட்டி கொண்டிருந்தததுவெள்ள பூனை ஒன்று. –

>>

பழநிபாரதி கவிதை

நீரில்லாத நதியில்நிறைந்து தளும்புகிறது நினைவு நீயென் கண்களில்மூழ்கி எழுகிறாய் ஆடிப்பெருக்கில்உன்னை நனைத்தஅந்த மஞ்சள்இன்னும்உதிர்ந்துவிடாமல்ஊசலாடிக்கொண்டிருக்கிறதுஒரு பழுத்த இலையாக கவிதையை சொல் புதிது என்ற புலனத்தில் பகிர்ந்து கொண்டவர் : அனங்கன்)

>>